search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கற்பழிப்பு"

    வீட்டு வேலைக்கு அழைத்து சென்று 16 வயது சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    காஞ்சிபுரம்:

    உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த தம்பதி காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானியிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17-ந் தேதி எங்கள் பகுதியைச் சேர்ந்த வேளாங்கண்ணி மற்றும் அவரது நண்பரான அற்புதராஜ் ஆகியோர் எங்கள் வீட்டிற்கு வந்து எங்களின் 16 வயது மகளை சென்னையில் உள்ள தங்களது வீட்டுக்கு வேலை செய்ய அனுப்பி வைக்குமாறு கேட்டனர்.

    ஆனால் நாங்கள் வீட்டு வேலைக்கு அனுப்ப முடியாது எனக் கூறி விட்டோம். மீண்டும் சில நாட்கள் கழித்து வந்த அவர்கள் வீட்டு வேலைக்கு மகளை அனுப்புமாறும் வேலை பிடிக்கவில்லை என்றால் அவளை திருப்பி அனுப்பி விடுவதாகவும் கூறினர்.

    இதனை நம்பி நாங்கள் எங்களது மகளை அவர்களுடன் அனுப்பி வைத்தோம்.

    இந்நிலையில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட எங்கள் மகளை ஊருக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டோம். அப்போது வேண்டும் என்றால் நீயே வந்து அழைத்துச் செல் என்று வேளாங்கண்ணியும், அற்புத ராஜூம் அலட்சியமாகக் கூறினர்.

    தொடர்ந்து வற்புறுத்தியதால் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி எங்களது மகளை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டனர். பின்னர் 2 நாட்கள் கழித்து மீண்டும் மகளை அழைத்துச் செல்ல அவர்கள் வந்தனர். ஆனால் எங்கள் மகள் அவர்களுடன் செல்ல மாட்டேன் என்று அழுதபடி கூறினார்.

    இதுபற்றி மகளிடம் கேட்ட போது, வேளாங்கண்ணி மற்றும் அற்புதராஜ் ஆகியோர் தன்னை சென்னை, செங்கல்பட்டு, வடபழனி உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று மிரட்டி பலர் மூலம் பாலியல் வன்கொடுமை செய்தனர். அதனை செல்போனிலும் படம் பிடித்து மிரட்டினர்.

    இதுபற்றி பெற்றோரிடம் கூறினால் ஆபாச வீடியோவை வெளியிடுவதோடு பெற்றோரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டினர் என்று தெரிவித்தாள்.

    மகளுக்கு அற்புதராஜ் போதை மருந்து கொடுத்து சுய நினைவு இழக்கச் செய்து இரவு பகல் பாராமல் பலரால் பாலியல் பலாத்காரம் செய்ய வைத்துள்ளார். மகளுக்கு நடந்த கொடுமைக்கு காரணமாக இருந்த அற்புதராஜ் மற்றும் வேளாங்கண்ணி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    சிறுமியை அற்புதராஜும், வேளாங்கண்ணியும் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்று பலருக்கு பாலியல் விருந்து படைத்துள்ளனர்.

    அடுக்குமாடி குடியிருப்புகளில் பல நாட்கள் தங்க வைத்து சிறுமிக்கு பாலியல் கொடுமை நடந்துள்ளது.

    சுமார் 100-க்கும் மேற்பட்டோருடன் அவர்கள் சிறுமியை நெருக்கமாக இருக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த காட்சிகள் அனைத்தையும் அவர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து உள்ளனர்.

    இதில் அற்புதராஜ், வேளாங்கண்ணியுடன் சேர்ந்து ஒரு கும்பலே சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி உள்ளது.


    சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்திருப்பதை அறிந்ததும், ஒரு கும்பல் அவர்களை மிரட்டி உள்ளனர். ரூ.20 லட்சம் வரை பேரம் பேசி இருக்கிறார்கள். தற்போது இந்த வழக்கை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    எந்தெந்த இடங்களுக்கு அழைத்து சென்றனர் என்பது குறித்து சிறுமியிடம் கேட்டறிந்து வருகின்றனர். இதில் வடபழனியை சேர்ந்த 65 வயது முதியவர் உள்பட பலர் உள்ளனர்.

    சிறுமியின் புகார் பற்றி அறிந்ததும், அற்புதராஜும், வேளாங்கண்ணியும் தலைமறைவாகி விட்டனர். வேளாங்கண்ணிக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. அவரது கணவர் தற்போது அவருடன் இல்லை. இதையடுத்து வேளாங்கண்ணி காதலனான அற்புதராஜுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.

    தப்பிஓடிய அவர்கள் 2 பேரும் சிக்கினால்தான் அவர்களுடன் தொடர்புடையவர்கள் யார் என்ற விவரம் தெரிய வரும்.

    காஞ்சிபுரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமி ஒருவர் ஆட்டோ டிரைவர்களால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு 8 வயது சிறுமி ஓட்டல் தொழிலாளியால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.

    தற்போது காஞ்சிபுரம் அருகே 16 வயது சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கோத்ரா கலவரத்தின்போது ஒரு கும்பலால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு, வேலை, வீடு வழங்க குஜராத் அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. #SupremeCourt #GujaratRiotsVictim #BilkisBano
    புதுடெல்லி:

    குஜராத் மாநிலம் கோத்ராவில் 2002-ம் ஆண்டு கலவரம் ஏற்பட்டது. அப்போது ஒரு கும்பல் ஒரு பெண்ணின் குடும்பத்தை சேர்ந்த 7 பேரை கொலை செய்துவிட்டு, அந்த பெண்ணையும் கற்பழித்தது. இந்த வழக்கில் தனிக்கோர்ட்டு 2008-ம் ஆண்டு ஜனவரி 21-ந் தேதி தீர்ப்பு வெளியிட்டது.

    அதில், 11 பேருக்கு ஆயுள் தண்டனையும், சில போலீசார், டாக்டர்கள் உள்பட 7 பேரை விடுதலை செய்தும் தீர்ப்பு வழங்கப்பட்டது. பின்னர் பாம்பே ஐகோர்ட்டிலும் இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கு நடைபெற்றது.

    பாம்பே ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. முன்னதாக இந்த வழக்கில் தவறு இழைத்த ஐ.பி.எஸ். அதிகாரி உள்பட போலீஸ் அதிகாரிகள் மீது 2 வாரத்துக்குள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

    மனுதாரர் தரப்பில், குஜராத் மாநில அரசு தனக்கு வழங்குவதாக அறிவித்த ரூ.5 லட்சம் இழப்பீட்டை ஏற்க முடியாது. தனக்கு கூடுதல் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கைவிடப்பட்டது.

    இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

    பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குஜராத் மாநில அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு, வேலை மற்றும் வீடு வழங்க வேண்டும். குஜராத் மாநில அரசு தவறு இழைத்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்கக்கூடாது. பாம்பே ஐகோர்ட்டால் தண்டனை விதிக்கப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரியை 2 தகுதிகள் பதவி இறக்கம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.   #SupremeCourt #GujaratRiotsVictim  #BilkisBano
    திருக்கனூர் அருகே ஆசை வார்த்தை கூறி 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய தனியார் பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    பாகூர்:

    திருக்கனூர் அருகே காட்டேரிகுப்பம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி லாஸ்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் தினமும் காலையில் தனியார் பஸ்சில் வேலைக்கு வருவது வழக்கம். மேலும் வேலை முடிந்து அதே பஸ்சில் ஊர் திரும்புவார். அப்போது அந்த பஸ்சின் டிரைவரான கிளியனூரை சேர்த சூரியா (20)-க்கும், அந்த சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    சூர்யா அவ்வப்போது ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை விராம்பட்டினம் பீச் மற்றும்வெளியூர்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்து வந்தார். இதில் அந்த சிறுமி 7 மாத கர்ப்பிணியானாள். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் புதுவை குழந்தை நல குழு அதிகாரி ராஜேந்திரனிடம் முறையிட்டனர்.

    இதையடுத்து நலக்குழு அதிகாரி ராஜேந்திரன் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சூரியாவை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் சூரியாவை ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியில் பதுங்கி இருப்பதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் ஆந்திர மாநிலத்துக்கு சென்று சூரியாவை கைது செய்தனர். பின்னர் புதுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். #tamilnews
    திருமண ஆசைகாட்டி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக வாலிபர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.

    பேரையூர்:

    திருமங்கலம் மறவன்குளம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் மச்சக் காளை. இவரது மகள் மகாலட்சுமி (வயது 19). இவர் வயிற்று வாலியால் அவதிப்பட்டார். இதனால் ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதனை செய்தபோது மகாலட்சுமி வயிற்றில் 8 மாத குழந்தை இறந்த நிலையில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், மகளிடம் விசாரித்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த குருசாமி மகன் குமரேசன் (25) தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக மகாலட்சுமி தெரிவித்தார்.

    இது குறித்து திருமங்கலம் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2 பேரும் காதலித்து வந்ததாகவும் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி குமரேசன் பலமுறை உல்லாசம் அனுபவித்ததாகவும் மகாலட்சுமி குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் தற்போது திருமணத்திற்கு மறுப்பதாகவும் தெரிவித்திருந்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருப்பூரில் வேலை பார்த்து வரும் குமரேசனை தேடி வருகின்றனர்.

    ஊத்தங்கரை அருகே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கல்லூரி மாணவி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி அருகே புதூர்பூகுனை பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் ஊத்தங்கரை பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    அந்த மாணவியின் தாயார் கணவரை பிரிந்து கோவையில் உள்ள ஒரு தனியார் நூல் மில்லில் பணியாற்றி வருகிறார்.

    இதனால் மாணவி தனது தாத்தா- பாட்டியுடன் புதூர் பூகுனை பகுதியில் வசித்து வந்தார். இங்கிருந்து தான் தினமும் கல்லூரிக்கு சென்று வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வயிறு பகுதி வீக்கம் அடைந்து வலியால் அவதியடைந்தார்.

    இதுகுறித்து அவரது தாத்தா கோவையில் உள்ள மாணவியின் தாயாருக்கு தகவல் கொடுத்தார். அவர் தனது மகளை ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அங்கு கல்லூரி மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாகவும், மாணவியின் வயிற்றில் 7 மாத குழந்தை இறந்து கிடப்பதாகவும் தெரிவித்தனர்.

    பின்னர் மாணவியை மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு ஆபரேசன் மூலம் இறந்த குழந்தையை வெளியே எடுத்தனர்.

    கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து அந்த மாணவியை தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவரது உடல்நிலை கவலைக்கிடமானது.

    இதனால் அவரை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இன்று காலை சிகிச்சை பலனின்றி மாணவி இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து மாணவியின் தாயார் ஏற்கனவே ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்து இருந்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த தமிழரசன், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததும், அதில் மாணவி கர்ப்பம் அடைந்ததும் அந்த தகவலை மாணவியும், தமிழரசனும் மறைத்தது தெரியவந்தது.


    இதைத்தொடர்ந்து தமிழரசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    தற்போது மாணவி இறந்துவிட்டதால் தமிழரசன் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட உள்ளது. 

    திண்டுக்கல் அருகே குடி போதையில் மாமியாரை கற்பழித்துக் கொன்ற மருமகனை போலீசார் கைது செய்தனர்.
    எரியோடு:

    திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே உள்ள புங்கம்பாடி பிரிவைச் சேர்நதவர் வெங்கிடுசாமி. இவரது மனைவி ராமுத்தாய் (வயது 65). கணவர் இறந்து விட்டதால் ராமுத்தாய் மகள் தனலெட்சுமி வீட்டில் வசித்து வந்தார். கடந்த 10-ந் தேதி இரவு வீட்டில் படுகாயங்களுடன் கிடந்த அவரை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விசாரணையில் ராமுத்தாய் அணிந்திருந்த ஒரு பவுன் நகைக்காக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். 

    போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கொலை செய்யப்பட்ட ராமுத்தாய்க்கு சென்ராயன், மாரிமுத்து என்ற மகன்களும் தனலெட்சுமி என்ற மகளும் உள்ளனர். தனலெட்சுமிக்கும் முத்தையா (52) என்பவருக்கும் திருமணமாகி அவர்களுக்கு கலைச்செல்வி என்ற மகள் உள்ளார். ராமுத்தாய் தனது மகள் வழி பேத்தி கலைச்செல்வியை மகன் மாரிமுத்துவுக்கு திருமணம் செய்து கொடுத்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு மாரிமுத்து இறந்து விட்டார். 

    கணவர் வெங்கிடுசாமி, மகள் தனலெட்சுமி, மகன் மாரிமுத்து ஆகியோர் இறந்ததால் ராமுத்தாய் மிகுந்த மனவேதனையில் இருந்தார். இதனால் பேத்தி கலைச்செல்வியுடன் புங்கம்பாடியில் தனியாக வசித்து வந்தார். மகள் கலைச்செல்வியை பார்ப்பதற்காக முத்தையா அடிக்கடி ராமுத்தாய் வீட்டுக்கு வருவது வழக்கம். அதன்படி கடந்த 10-ந் தேதி மகளை பார்க்க முத்தையா வந்துள்ளார். அவர் வேலைக்கு சென்று விட்டதால் ராமுத்தாயிடம் குடிக்க பணம் தருமாறு கேட்டார். அவர் ஏற்கனவே போதையில் இருந்ததால் பணம் தர மறுத்ததுடன் சத்தம் போட்டு தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினார். இதனால் ஆத்திரமடைந்த முத்தையா மாமியார் ராமுத்தாயை பலவந்தப் படுத்தி கற்பழித்தார்.

    மேலும் அருகில் இருந்த இரும்பு கம்பியால் தலையில் ஓங்கி அடித்து அவர் காதில் அணிந்திருந்த ஒரு பவுன் தோடை அபகரித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார். வேலைக்கு சென்று இரவு வீடு திரும்பிய கலைச்செல்வி தனது பாட்டி மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். ஆஸ்பத்திரியில் சேர்த்து பின் அவர் உயிரிழந்தார். அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது தனது தந்தைதான் வீட்டுக்கு வந்து சென்றதாக கூறினர்.

    அவர் அளித்த தகவலின் பேரில் பதுங்கி இருந்த முத்தையாவை விசாரித்த போது தான் கற்பழித்து கொலை செய்ததை ஒத்துக் கொண்டார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். குடிபோதையில் மாமியாரையே கற்பழித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    திண்டுக்கல் அருகே பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே உள்ள அஞ்சுக்குழிபட்டியை சேர்ந்த 16 வயது மாணவி கொசவபட்டியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவருக்கும் ஆவிளிப்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவர் பெருமாள் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் 2 பேரும் நெருங்கி பழகி வந்தனர். பெருமாள் மாணவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதனால் மாணவியின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. உடனே அவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சுஜிந்தா ஜீவி சாணார்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் அபுதல்கா, செல்வராஜ் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். இதில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டதால் குழந்தைகள் நல தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரபா கல்லூரி மாணவர் பெருமாளை போக்சோ சட்டத்தில் கைது செய்தார்.

    மார்த்தாண்டம் அருகே பட்டதாரி பெண்ணை ஏமாற்றி கற்பழித்த வாலிபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள எஸ்.டி. மங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுஜித் (வயது 30). எம்.டெக். பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

    இவர் மீது திருவட்டார் ஆற்றூரைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் கற்பழிப்பு புகார் கூறி உள்ளார். மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் எம்.இ. படித்து விட்டு சென்னையில் பணியாற்றி வருகிறேன். அப்போது அங்கு வேலை பார்த்து வரும் சுஜித்துடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. என்னை அவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறினார். நானும் அவரை நம்பி என்னையே கொடுத்தேன். ஒருமுறை வீட்டில் நான் தனியாக இருந்தபோது சுஜித் என்னுடன் உல்லாசமாக இருந்தார்.

    சென்னை, வேளாங்கண்ணி, பெங்களூர் என பல இடங்களுக்கும் என்னை அழைத்துச் சென்று அவர் கற்பழித்தார். இப்போது என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியபோது அவர் மறுப்பு தெரிவிக்கிறார்.

    அப்படியே உன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் ரூ.15 லட்சம் ரொக்கம், 150 பவுன் நகை, ஒரு கார், பாங்கியில் ரூ.25 லட்சம் பணம் டெபாசிட் செய்ய வேண்டும் என வரதட்சணை கேட்கிறார். மேலும் இந்த பிரச்சினையை பெரிதாக்கினால் நாம் இருவரும் உல்லாசமாக இருந்தபோது எடுத்த புகைப்படங்களை இன்டர்நெட்டில் வெளியிடுவேன் எனவும் மிரட்டுகிறார்.

    எனவே என்னை கற்பழித்து ஏமாற்றிய சுஜித் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார்.

    இதையடுத்து சுஜித் மீது கற்பழிப்பு, பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    சுஜித் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். சுஜித் மீது கற்பழிப்பு புகார் கூறிய பெண்ணை போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். #tamilnews
    மேற்கு வங்காளத்தில் நிலத்தகராறு காரணமாக பெண்ணை கற்பழித்து, கொடூரமாக தாக்கிய உறவினரை போலீசார் கைது செய்துள்ளனர். #WestBengal
    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் பெண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடப்பதை கண்ட ரிக்‌ஷா ஓட்டுனர் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தார். இதையடுத்து சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

    பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவரது உறவினருக்கும் இடையே நிலம் தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது. சம்பவம் நடந்த அன்று நிலத்தகராறு குறித்து சமாதான பேச்சுவார்த்தைக்கு என உறவினர் அழைத்ததாக அந்த பெண் சென்றுள்ளார். அப்போது உறவினர் அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அதுமட்டுமின்றி, அவரது பெண் உறுப்பில் இரும்பு கம்பியை நுழைத்து கொடுமையான சித்திரவதைகளை செய்துள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்ணை கற்பழித்த அந்த உறவினரையும், அவருக்கு உதவியாக இருந்த நபரையும் கைது செய்துள்ளனர். டெல்லியில் இளம்பெண் நிர்பயாவுக்கு நடந்ததுபோல அரங்கேற்றப்பட்ட இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #WestBengal
    ஆந்திரப்பிரதேசத்தில் தனது 4 வயது மகளை கற்பழித்த தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.
    ஐதராபாத் :

    ஆந்திரப்பிரதேச மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் மணி குமார், இவர் அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 2002-ம் ஆண்டு திருமணமான இவருக்கு 4-வயதில் மகள் உள்ளார். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மணி குமாரும் அவரது மனைவியும் தனித்தனியாக வசித்து வந்துள்ளனர்.

    மகள் தாயுடன் வசித்து வரும் நிலையில் நேற்று மணி குமார் தனது மகளை சந்திக்க மனைவி வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் சிறுமியை தனது காரில் ஏற்றிக்கொண்டு பள்ளியில் விட்டுவிட்டு சென்றுள்ளார்.

    ஆனால், பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமி வயிறு வலிப்பதாக தனது தாயிடம் கூறியுள்ளார். அதன் பின் பள்ளிக்கு செல்லும் வழியில் மணி குமார் செய்த செயலை சிறுமி கூறியதும் தாய் அதிர்ச்சியடைந்தார்.

    இதைத்தொடர்ந்து, சிறுமியின் தாய் மணி குமார் மீது போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். ஆசிரியரான தந்தையே தனது மகளை சீரழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
    சிதம்பரம் அருகே வீட்டுக்குள் அழுகிய நிலையில் பெண் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பி.முட்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அருணாச்சலம். இவரது மனைவி பிரேமா (வயது 50). இவர் பி.முட்லூரில் உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தார். 

    பிரேமாவின் வீடு கடந்த சில நாட்களாக பூட்டிகிடந்தது. இந்த நிலையில் இன்று மதியம் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அந்த வீட்டுமுன்பு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.

    இதுகுறித்து அவர்கள் பரங்கிபேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கதவை உடைத்து வீட்டுக்குள் சென்றனர். அங்கு நிர்வாண நிலையில் பிரேமா பிணமாக கிடந்தார். மேலும் உடல் அழுகிய நிலையில் இருந்தது. அவரது தலை மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் ரத்தக்காயங் களும் இருந்தன.

    இதையடுத்து போலீசார் பிரேமாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேமா பிணமாக கிடந்தது பற்றி அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரித்தனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர். பிரேமாவை யாராவது கற்பழித்து கொலை செய்தார்களா? அல்லது எப்படி இறந்தார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்திய மாடல் அழகியும், எழுத்தாளருமான பத்மாலட்சுமி நான் 16-வது வயதில் கற்பழிக்கப்பட்டேன் என நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் கூறியுள்ளார். #PadmaLakshmi
    நியூயார்க்:

    அமெரிக்க வாழ் இந்தியர் பத்மாலட்சுமி (48). சென்னையை பூர்வீகமாக கொண்ட இவர் அமெரிக்க குடியுரிமை பெற்றார். மாடல் அழகியான இவர் எழுத்தாளர் மற்றும் நடிகையும் ஆவார். இவர் சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான்ருஷ்டியை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

    இவர் அமெரிக்காவின் பிரபலமான நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் தன்னைப் பற்றி எழுதியுள்ளார். அதில் “நான் எனது 16-வது வயதில் கற்பழிக்கப்பட்டேன். அப்போது 23 வயது வாலிபருடன் ‘டேட்டிங்’ல் இருந்தேன்.


    அந்த நபரும் என்னுடன் ஒரு வர்த்தக நிறுவனத்தில் பணிபுரிந்தார். புத்தாண்டு கொண்டாட்டத்தில் அவருடன் கலந்து கொண்டேன். மிகவும் சோர்வாகவும், களைப்பாகவும் இருந்ததால் படுக்கையில் படுத்து அயர்ந்து தூங்கிவிட்டேன்.

    அப்போது அந்த நபர் என்னை கற்பழித்து விட்டார். இத்தகைய நடவடிக்கையில் ஒரு ஆண் எந்தவித பாதிப்புக்கும் ஆளாவதில்லை. ஆனால் பெண்ணின் வாழ்க்கை சீரழிகிறது. அவளை யாரும் அன்புடன் நடத்துவதில்லை.

    எனக்கு நடந்த இந்த துயர சம்பவத்தை அப்போது நான் வெளியில் சொல்லவில்லை. தற்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக அதிபர் டொனால்டு டிரம்பால் பரிந்துரைக்கப்பட்ட பிரட் கவான்னா மீது செக்ஸ் குற்றச்சாட்டு எழுந்தது. அதை தொடர்ந்து எனக்கு நேர்ந்த துயர சம்பவம் குறித்தும் எழுத முடிவு செய்தேன்” என கூறியுள்ளார். #PadmaLakshmi
    ×