search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிறுத்தம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பச்சை நிற பால் பாக்கெட் வினியோகத்தை ஆவின் படிப்படியாக குறைத்து டிலைட் ஊதா வகைக்கு வாடிக்கையாளர்களை மாற்றி வருகிறது.
    • தற்போதைய பச்சை நிற பால் அட்டைதாரர்கள் டிசம்பர் 15-ந் தேதி வரை பெறுவார்கள்.

    சென்னை:

    தமிழக அரசின் நிறுவனமான ஆவின் பால் பொது மக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் 30 லட்சம் லிட்டர் பால் ஆவின் வினியோகம் செய்கிறது. சென்னையில் மட்டும் 14.75 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனையாகிறது.

    ஆவின் பால் 4 வகையான பால் பாக்கெட்டுகளை வினியோகம் செய்து வருகிறது. இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் (1.5 சதவீத கொழுப்புச் சத்து), சமன் படுத்தப்பட்ட பால் (3 சதவீத கொழுப்புச் சத்து), அதிகளவு விற்பனையாகக் கூடிய நிலைப்படுத்தப்பட்ட பால் (4.5 சதவீதம் கொழுப்புச் சத்து) பச்சை நிற பாக்கெட்டில் வினியோகிக்கப்படும் பொது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது.

    மொத்த விற்பனையில் ஆவின் பச்சை நிற பாக்கெட் 40 சதவீதம் இடம் பெற்று உள்ளது. 40 ஆண்டுகளுக்கு மேலாக இது மக்கள் விரும்பும் பால் பாக்கெட்டாக அமைந்துள்ளது. பச்சைநிற பால் பாக்கெட் லிட்டர் ரூ.44-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    டிலைட் ஊதா பாக்கெட் 3.5 சதவீத கொழுப்புச் சத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பாலின் விலையும் லிட்டர் ரூ.44 ஆகும். ஆனால் கிரீன் மேஜிக் பச்சைநிற பால் பாக்கெட்டுகளை விரும்பி வாங்கி வருகிறார்கள்.

    மற்ற தனியார் பால் பாக்கெட் விலை லிட்டருக்கு ரூ.54 முதல் ரூ.56 வரை உள்ள நிலையில் நிலைப்படுத்தப்பட்ட ஆவின் பால் ரூ.44-க்கு கிடைப்பதால் கடைகளில் உடனே விற்று தீர்ந்து விடுகிறது.

    4.5 கொழுப்பு சத்துள்ள பாலை லிட்டர் ரூ.44-க்கு விற்பதால் ஆவின் நிறுவனத்துக்கு நஷ்டம் அதிகரித்து வருகிறது. வெளிமாநிலங்களில் இருந்து வெண்ணை பால் பவுடர் ஆகியவற்றை அதிக விலைக்கு வாங்கி குறைந்த விலையில் பச்சை நிற பால் பாக்கெட் வினியோகம் செய்யப்படுவதால் அதிக வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனால் பச்சை நிற பால் பாக்கெட் வினியோகத்தை ஆவின் படிப்படியாக குறைத்து டிலைட் ஊதா வகைக்கு வாடிக்கையாளர்களை மாற்றி வருகிறது.

    சென்னை தவிர பெரும்பாலான மாவட்டங்களில் பச்சை நிற பால் பாக்கெட் நிறுத்தப்பட்டுவிட்டன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தான் இன்னும் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையாகிறது. அதுவும் மிக குறைந்த அளவிலேயே வினியோகிக்கப்படுகிறது.

    இதுகுறித்து ஆவின் பொது மேலாளர் (மார்க் கெட்டிங்) சுனேஜா கூறுகையில், பால் அட்டை கார்டுதாரர்களுக்கு டிசம்பர் 1-ந் தேதி முதல் அதே விலையில் டிலைட் பால் வினியோகிக்கப்படும். டிலைட் பால் கார்டு விற்பனையை செயல்படுத்தவும், டிசம்பர் 16-ந் தேதி முதல் வினியோகத்தை தொடங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    தரப்படுத்தப்பட்ட பால் கார்டு வைத்திருப்பவர்கள் (பச்சை நிறம்) இருமுறை சமன்படுத்தப்பட்ட மற்றும் புல் கிரீம் பால் ஆகிய 3 வகைகளில் ஏதாவது ஒன்றிற்கு மாற வேண்டும் என்றார்.

    செலவை குறைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை நிறுத்த ஆவின் முடிவு செய்துள்ளது. ஆவின் பால் அட்டைகள் ஒவ்வொரு மாதமும் 1 முதல் 15-ந் தேதி வரை பால் வினியோகத்தை செய்கிறது.

    வருகிற 25-ந் தேதி முதல் பச்சை நிற பால் பாக்கெட் சில்லரை விற்பனை நிறுத்தப்படும். தற்போதைய பச்சை நிற பால் அட்டைதாரர்கள் டிசம்பர் 15-ந் தேதி வரை பெறுவார்கள் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • மின் பாதையில் நெடுஞ்சாலை துறையின் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருவையாறு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    திருவையாறு துணை மின் நிலையத்திலிருந்து விளாங்குடி 11 கி.வோ மின்னோட்டம் செல்லும் மின் பாதையில் நெடுஞ்சாலை துறையின் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே சாலையின் அருகில் உள்ள விளாங்குடி 11 கி.வோ மின் பாதையில் உள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

    இதனால் நாளை ( 11-ந் தேதி) மற்றும் 15, 17-ந் தேதி என 3 நாட்களும் பெரும்புலியூர், புனவாசல், விளாங்குடி, திங்களூர், பெரமூர், ஓலத்தேவராயன் பேட்டை, சீனிவாச நகர் ஒக்கக்குடி, மடம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தேன்கனிக்கோட்டை அருகே 2 இளம்வயது திருமணங்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா, பெட்டமுகிலாளம் ஊராட்சிக்கு உட்பட்ட உட்பட்ட தட்டகரை பகுதியை சேர்ந்த, 24 வயது வாலிபருக்கும், 17 வயது 11 மாதம் மட்டும் பூர்த்தியான சிறுமிக்கும், திருமண ஏற்பாடுகள் நடந்தது. இது குறித்து, வருவாய்த்துறை அலுவலர்களுக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதையடுத்து, தாசில்தார் முத்துபாண்டி உத்தரவின் பேரில், பெட்டமுகிலாளம் கிராம நிர்வாக அலுவலர் ராமன் தலைமையிலான அதிகாரிகள், கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    இதில், திருமண ஏற்பாடுகள் நடந்த சிறுமிக்கு, 17 வயது, 11 மாதம் மட்டுமே பூர்த்தியானது தெரிய வந்தது. இதையடுத்து சிறுமிக்கு நடக்க இருந்த இளம்வயது திருமண ஏற்பாடுகளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி பெற்றோருக்கு அறிவுரை கூறினர். பின்னர் அதிகாரிகள், பெற்றோரை அழைத்து சிறுமிக்கு தற்போது திருமணம் செய்ய கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து சென்றனர்.

    இதேபோல தேன்கனிக்கோட்டையை அடுத்த இருதுகோட்டை திருமாநகரில் 12 வயது சிறுமிக்கு இளம்வயது திருமணம் இன்று (புதன் கிழமை) நடைபெற இருந்தது. தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து சென்று சிறுமிக்கு நடக்க இருந்த இளம்வயது திருமணத்தை தடுத்து நிறுத்தினார்கள். மேலும் இருவீட்டு பெற்றோர் மற்றும் மணமகனை அதிகாரிகள் எச்சரித்தனர்.
    பிரமாண்ட பெருமாள் சிலையை பெங்களூரு கொண்டு செல்வதில் சிக்கல் நீடித்து வருகிறது. இன்று 18-வது நாளாக சாம்பல்பள்ளம் பகுதியில் பெருமாள் சிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. #PerumalStatue
    சூளகிரி:

    திருவண்ணாமலை மாவட்டம் கொரக்கோட்டையில், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பிரமாண்ட பெருமாள் சிலை, பெங்களூரு ஈஜிபுரா எனுமிடத்தில் பீடத்துடன் இணைத்து 108 அடி அகலம் கொண்ட பெருமாள் சிலையை ராட்சத லாரியில் ஏற்றிக்கொண்டு கடந்த டிசம்பர் மாதம் 7-ந் தேதி புறப்பட்டனர்.

    வழியில் பல்வேறு தடைகளை தாண்டி, ஜனவரி மாதம் 16-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டையை வந்து அடைந்தது. அங்கிருந்து ஊத்தங் கரை, போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி வந்து கடந்த 9-ந் தேதி கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாம்பல்பள்ளம் என்னுமிடத்தை அடைந்தது.

    அங்குள்ள சிறு பாலத்தை கடப்பதில் சிக்கல் ஏற்பட்டடதால், பெருமாள் சிலையுடன் லாரி நிறுத்தப்பட்டது. அந்த பாலத்தை கடக்க தேசிய நெடுஞ்சாலைத்துறையின் அனுமதி கிடைக்கவில்லை.

    இதனால், பாலத்தின் அருகே, புதியதாக தற்காலிக மண்சாலை அமைக்கும் பணி நடந்தது. இன்று 18-வது நாளாக சாம்பல்பள்ளம் பகுதியில் பெருமாள் சிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த பகுதியை கடந்து விட்டால் சுமார் 2 கி.மீ. தொலைவில் சின்னாறு பாலம் உள்ளது. இதையடுத்து, சென்னப்பள்ளி மற்றும் கொல்லப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் சிறு பாலங்கள் உள்ளன.

    இதற்காக வனத்துறை அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் சாம்பல்பள்ளத்தில் இருந்து புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    தற்போது, தற்காலிக பாலம் 3 இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவை முழுமை அடைந்தவுடன், பெருமாள் சிலை சிக்கல் இன்றி பெங்களூரு கொண்டு செல்ல முடியும்.

    இதனால் தான் சாம்பல் பள்ளத்தை கடப்பதற்கு கூடுதல் நாட்கள் பிடித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே சாம்பல் பள்ளம் மற்றும் மேலும் 2 இடங்களில் தற்காலிக பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. #PerumalStatue 
    நெல் அறுவடை தொடங்கி இருப்பதால் 190 நாட்களுக்குப்பின் இன்று மாலை முதல் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது. #MetturDam

    மேட்டூர், ஜன. 28-

    மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் காவிரி டெல்டா பாச னத்திற்காக ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப் படுவது வழக்கம்.

    இதன்மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு உள்பட 12 மாவட்டங்களில் 16.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    இந்த ஆண்டு ஜூன் 12-ந் தேதி அணையில் குறைவான தண்ணீர் இருந்ததால் தாமதமாக ஜூலை மாதம் 23-ந் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதனால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதித்தாலும் சம்பா நெல் சாகுபடி முழுமையாக நடந்தது. ஆண்டுதோறும் பாசனத்திற் காக ஜனவரி 28-ந் தேதி வரை தண்ணீர் திறந்துவிடப்படும். தற்போது நெல் அறுவடை தொடங்கி இருப்பதால் 190 நாட்களுக்குப்பின் இன்று மாலை முதல் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்படுகிறது.

    இதுபற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாக வில்லை. இருந்தாலும் டெல்டா பாச னத்திற்கு தண்ணீர் தேவை என்றால் நீர் திறப்பு இன்னும் சில நாட்கள் நீட்டிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

    மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 70.81 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் வந்தது. இன்று அணைக்கு 150 கன அடி தண்ணீர் வந்து கொண் டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 70.81 அடியாக நீடிக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்கான 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

    அணையில் தற்போது நீர்மட்டம் 70 அடியாக உள்ளதால் அணையில் மூழ்கி இருந்த கிறிஸ்தவ ஆலய கோபுரம் மற்றும் நந்தி சிலைகள் படிப்படியாக வெளியே தெரிய தொடங்கி உள்ளது.

    மேட்டூர் அணை மூலம் 12 டெல்டா மாவட்டங்கள் மட்டுமல்லாது வேலூர் மாநகராட்சி பகுதிகளின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

    தற்போது போதுமான அளவு தண்ணீர் உள்ளதால் இந்த ஆண்டு கோடை காலத்தில் குடிநீர் தட்டுப் பாடு வராது என்று பொதுப் பணித்துறை அதிகாரி ஒருவர் கூறினார். * * * மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்து வருவதை படத்தில் காணலாம்.

    கன்னியாகுமரியில் சூறாவளி காற்றால் படகில் பயணம் செய்ய இன்று காலையில் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் மண்டபத்தை சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்காக தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகு போக்குவரத்து நடைபெறுகிறது.

    நேற்று காலை வழக்கம்போல 8 மணிக்கு சுற்றுலாபயணிகளை ஏற்றிக்கொண்டு படகு போக்குவரத்து நடந்தது. இந்தநிலையில் காலை 10 மணி அளவில் திடீரென கடலில் மாற்றங்கள் ஏற்றப்பட்டது. சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டது. இதனால் படகு போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது.

    அதன்பிறகு காலநிலையில் சகஜநிலை திரும்பியதை தொடர்ந்து பகல் 2.45 மணிக்கு மீண்டும் படகு போக்குவரத்து மாலை 4 மணி வரை நடந்தது.

    இந்தநிலையில் இன்று காலை முதலே கன்னியாகுமரியில் கடல் சீற்றமாக காணப்பட்டது. சூறாவளி காற்றும் வீசியதால் 10 அடி முதல் 15 அடி உயரம் வரை அலைகள் எழுந்தது. இதனால் காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

    படகு துறையின் நுழைவுவாயிலும் பூட்டப்பட்டிருந்தது. படகு இயங்காதது தொடர்பான அறிவிப்பு பலகையும் தொங்கவிடப்பட்டிருந்தது. படகில் பயணம் செய்ய இன்று காலையில் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    இன்று காலை சூரிய உதயத்தை காண அய்யப்ப பக்தர்கள் அதிகளவில் வந்திருந்தனர். அவர்கள் முக்கடலில் புனித நீராடி விட்டு பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    பயங்கரவாத ஒழிப்பில் இரட்டை வேடம் போட்டு வருவதால் பாகிஸ்தானுக்கு இந்த ஆண்டு வழங்க வேண்டிய சுமார் ரூ.21 ஆயிரம் கோடி ராணுவ நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியது. #America #Pakistan
    வாஷிங்டன்:

    பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின் தாயகமாக பாகிஸ்தான் விளங்கி வருகிறது. ஹக்கானி குழுக்கள், தலீபான், லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாதிகள் பாகிஸ்தானை தங்கள் புகலிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த பயங்கரவாத குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்காக கோடிக்கணக்கில் ராணுவ நிதியுதவியும் அந்த நாடு வழங்கி வருகிறது.

    ஆனால் இந்த நிதியை பெற்றுக்கொள்ளும் பாகிஸ்தான், பயங்கரவாத ஒழிப்பில் பாராமுகம் காட்டி வருகிறது. அந்த மண்ணில் இருந்து கட்டவிழ்த்து விடப்படும் பயங்கரவாத தாக்குதல்களில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.

    இது அமெரிக்காவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக அல்கொய்தா தலைவர் பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கி இருந்ததை தொடர்ந்து பாகிஸ்தான் மீது அமெரிக்கா கடும் கோபத்தை காட்டி வருகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ராணுவ நிதியுதவி வழங்குவதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

    இந்த சூழலில்தான் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் ஆப்கானிஸ்தானுக்கான தனது புதிய கொள்கையை வெளியிட்டார். இதில் பயங்கரவாத ஒழிப்பில் இரட்டை நிலையை எடுத்துவரும் பாகிஸ்தானுக்கு அவர் கடும் கண்டனங்களை தெரிவித்ததுடன், அந்த நாட்டுக்கு வழங்கி வரும் நிதியுதவியை ரத்து செய்யவும் முடிவு செய்தார்.

    இந்த விவகாரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பாகிஸ்தானை கடுமையாக தாக்கிய அவர், ‘பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கோடிக்கணக்கில் நிதியுதவி செய்து வருகிறது, ஆனால் அந்த நாடு பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் அமெரிக்காவுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. எனவே அவர்களுக்கு வழங்கப்படும் 1.3 பில்லியன் டாலர் (சுமார் ரூ.9 ஆயிரத்து 100 கோடி) நிதியுதவி நிறுத்தப்படும்’ என்று ஆவேசமாக கூறினார்.

    இதனால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்தார். அவர் கூறுகையில், ‘பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கியுள்ள 20 பில்லியன் டாலர் அற்பமானது. ஆனால் அந்த நாட்டுடன் இணைந்து நாங்கள் மேற்கொண்ட பயங்கரவாத ஒழிப்பு போரில் 75 ஆயிரம் பாகிஸ்தானியர்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர். 123 பில்லியன் டாலரை நாங்கள் செலவழித்து இருக்கிறோம். இது தொடர்பான வரலாற்று உண்மைகளை டிரம்ப் அறிந்து கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தார்.

    இவ்வாறு இரு தலைவர்களுக்கு இடையே வார்த்தை மோதல் நடந்து வரும் நிலையில், பாகிஸ்தானுக்கு இந்த ஆண்டு வழங்க வேண்டிய 3 பில்லியன் டாலர் (சுமார் ரூ.21 ஆயிரம் கோடி) நிதியை அமெரிக்கா நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த தொகை பல்வேறு நிதியாண்டுகளில் பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டிய மொத்த தொகை என தெரிகிறது.

    அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இரு நாட்டு உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தும் என தெரிகிறது. முன்னதாக, பாகிஸ்தானுக்கான நிதியுதவியை நிறுத்தினாலும் அந்த நாட்டுடன் நல்ல உறவை நீடிக்கவே அமெரிக்கா விரும்புவதாக டிரம்ப் கூறியிருந்ததது குறிப்பிடத்தக்கது. 
    அவதூறான செய்திகள் மற்றும் வீடியோக்களை பரவுவதை தடுக்கும் வகையில் மணிப்பூர் மாநிலத்தில் இன்று முதல் அடுத்த 5 தினங்களுக்கு இண்டர்நெட்சேவை நிறுத்தப்பட்டுள்ளது. #Internet
    இம்பால்:

    மணிப்பூர் மாநிலத்தின் உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு செயலாளர் ரகுமணி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

    மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவியதன் மூலம் அடிதடி மற்றும் வன்முறைகள் ஏற்பட்டன. இதனால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டது.

    எனவே, இதுபோன்ற அவதூறான தகவல்கள் மற்றும் வீடியோக்கள் பரவுவதை தடுக்கும் வகையில் இன்று முதல் அடுத்த ஐந்து தினங்களுக்கு மொபைல் இண்டர்நெட்சேவை தடை செய்யப்பட்டு உள்ளது. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்ப்டுகிறது என தெரிவித்துள்ளது. #Internet 
    மருத்துவ படிப்புகளுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #NeetCounselling
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்காக ஒரே நுழைவுத்தேர்வாக நீட் அறிவிக்கப்பட்டது. இதற்கு இன்றளவும் எதிர்ப்பு நிலவி வருகிறது. மேலும், நீட் தேர்வில் ஏற்படும் குளறுபடிகளால் மாணவர்கள் இந்த தேர்வில் தேர்ச்சி பெற மிகவும் சிரமம் அடைகின்றனர்.

    இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் வினாத்தாளில் குளறுபடி ஏற்பட்டதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் மீதான தீர்ப்பு சமீபத்தில் வெளியானது. அதில் தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    இந்த உத்தரவு குறித்து முறையீடு செய்ய இருப்பதாக சி.பி.எஸ்.சி தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நாடு முழுவதும் நடைபெற்று வந்த எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

    மேலும், தமிழகத்தில் வரும் 16-ம் தேதி தனியார் கல்லூரிகளில் நடைபெற இருந்த நிர்வாக ஒதுக்கீட்டுகான கலந்தாய்வும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை 2-ம் கட்ட கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #NeetCounselling
    அமெரிக்காவினுள் குழந்தைகளுடன் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக நுழைவோர் மீது குற்ற வழக்குப்பதிவு செய்வது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. #IllegalMigrants #Children
    வாஷிங்டன்:

    அண்டை நாடான மெக்சிகோ தொடங்கி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவினுள் சட்டவிரோதமாக குடும்பம், குடும்பமாக நுழைவோர் எண்ணிக்கை அதிகரித்து வந்தது.

    இதைத் தடுக்கிற விதத்தில் அவர்கள் மீது கடுமையான கொள்கையை ஜனாதிபதி டிரம்பின் நிர்வாகம் பின்பற்றியது. இப்படி நுழைவோரை கைது செய்து, அவர்களையும், குழந்தைகளையும் தனித்தனியாக பிரித்து காவலில் வைத்தது.

    இது அங்கு பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

    பல்வேறு தரப்பினருடன், மனைவி மெலனியா டிரம்ப், மகள் இவான்கா டிரம்ப் ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த கொள்கையை டிரம்ப் நிர்வாகம் கடந்த வாரம் திரும்பப்பெற்றது. இதற்கான நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்து போட்டார்.

    இப்போது அமெரிக்காவினுள் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல், சட்டவிரோதமாக குழந்தைகளுடன் நுழைகிறவர்கள் மீது குற்ற வழக்கு போடுவதையும் டிரம்ப் நிர்வாகம் நிறுத்தி விட்டது.

    இதுபற்றி அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு ஆணையர் கெவின் மெக் அலீனன், டெக்சாஸ்சில் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறும்போது, “அமெரிக்காவினுள் சட்ட விரோதமாக குடியேறுகிறவர்கள் மீது குற்ற வழக்குப்பதிவு செய்வது கடந்த வாரம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இப்படி குடும்பத்துடன் அமெரிக்காவினுள் நுழைகிறபோது, பெற்றோர்களையும், குழந்தைகளையும் தனியாக பிரிக்கக்கூடாது என டிரம்ப் நிர்வாகம் பிறப்பித்த உத்தரவு பின்பற்றப்படுகிறது” என்று கூறினார்.

    அதே நேரத்தில், அமெரிக்காவினுள் சட்ட விரோதமாக நுழைகிறவர்களை சகித்துக்கொள்ளக்கூடாது என்ற கொள்கை இன்னும் அமலில் இருக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

    பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கக்கூடாது என்று கூறுகிற நிலையில், இரு தரப்பினரையும் சேர்த்து ஒரே இடத்தில் காவல் மையங்களில் வைக்க அமெரிக்க சட்டம் இடம் தரவில்லை என்றும் அவர் கூறினார்.

    பெற்றோரிடம் இருந்து குழந்தைகளை தனியாகப் பிரித்தெடுக்காமல், எப்படி பெற்றோர்கள் மீது மட்டும் வழக்கு போடுவது என்பது பற்றி நீதித்துறையும், சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு ஆணையமும் வழிவகை காண வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    தற்போதைய நிலவரப்படி, அமெரிக்காவினுள் குடும்பமாக சட்டவிரோதமாக நுழைகிறபோது, அவர்களை பிரிக்காமல் கோர்ட்டு சம்மன் வழங்கி, அவர்கள் வழியில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

    இருப்பினும் குழந்தைகள் இன்றி தனியாக அமெரிக்காவில் உரிய ஆவணம் இன்றி நுழைந்தால் அவர்கள் கைது செய்யப்படுவது தொடரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    உரிய ஆவணங்கள் இன்றி அமெரிக்கா வருவோரை வைத்து பராமரிக்க இடம் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் தெளிவுபடுத்தி உள்ளார்.  #IllegalMigrants #Children #Tamilnews 
    கட்டுமான பொருட்களை கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதால் வீடுகள் கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளதாக ஆதிவாசி மக்கள் ஜமாபந்தியில் குற்றம்சாட்டினர்.
    குன்னூர்:

    குன்னூர் அருகே கொலக்கொம்பை செங்குட்ராயன் மலை ஆதிவாசி குடியிருப்பு உள்ளது. இங்கு 8 ஆதிவாசி குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மேலூர் ஊராட்சியின் 14-வது வார்டுக்குட்பட்டதாகும். இங்கு வசிக்கும் மக்களுக்கு குன்னூர் ஊராட்சி ஒன்றியம் மூலம் பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டம் மூலம் வீடுகள் கட்டி கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

    முதல்கட்டமாக 4 வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பணி தொடங்கப்பட்டது. ஆனால் வீடுகள் கட்டும் பணி தற்போது பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது. இதற்கு தனியார் எஸ்டேட் நிர்வாகம் அப்பகுதி இரும்பு கதவு அமைத்து உள்ளதால் வாகனம் மூலம் கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல முடியவில்லை என்று ஆதிவாசி மக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து குன்னூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் செங்குட்ராயன் மலை ஆதிவாசி மக்கள் மனு கொடுத்து உள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் செங்குட்ராயன் மலை பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் 4 வீடுகள் கட்டுவதற்கான பணி தொடங்கப்பட்டது. இதற்கு தேவையான கட்டுமான பொருட்கள் வாகனம் மூலம் கொண்டு வரப்பட்டது. ஆனால் தனியார் எஸ்டேட் நிர்வாகம் அப்பகுதியில் இரும்பு கதவு அமைத்து உள்ளதால் கட்டுமான பொருட்கள்கொண்டு செல்ல முடியவில்லை.

    இதனால் கடந்த 3 மாதங்களாக பணி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் கடிதம் அனுப்பியும் தனியார் எஸ்டேட் நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து எங்களுக்கு வீடுகள் கட்டி தர ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 
    ராமநாதபுரத்தில் 17 வயது சிறுமிக்கு நாளை நடைபெற இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
    ராமநாதபுரம்:

    குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவதில் அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஆங்காங்கே குழந்தை திருமணம் நடைபெறுகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 21-ந்தேதி ஒரே நாளில் 7 குழந்தைகள் திருமணம் நடத்து நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் ராமநாதபுரம் அருகே உள்ள முதுனாள் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், அவரது உறவினர் கணேஷ்பாபு (வயது28) என்பவருக்கும் ராமநாதபுரம் குண்டு கரையில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் நடைபெற இருப்பது தெரிய வந்தது

    அந்த திருமணத்தை சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று தடுத்து நிறுத்தினர்.

    இந்த நிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ராமநாதபுரம் துறைமுகம் வீதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும். கடலாடி நரசிங்ககூட்டத்தை சேர்ந்த கருப்பசாமி (27) என்பவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் கிடைத்தது.

    உடனடியாக ராமேசுவரம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, சைல்டு லைன் தலைவர் ஜார்ஜ் ஆகியோர் விரைந்து சென்று சிறுமியின் பெற்றோரை சந்தித்து திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

    மேலும் அபிராமம் அருகே உள்ள பளூரைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், அவரது உறவினர் அருண்குமார் (29) என்பவருக்கும் நடைபெற இருந்த திருமணத்தை மாவட்ட சமூக நல அதிகாரி குணசேகரி தடுத்து நிறுத்தினார். #Tamilnews
    ×