search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுபாட்டில்கள்"

    கூடலூரில் மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம், கூடலூர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரந்தாமன் தலைமையில் போலீசார் புது பஸ்நிலையம் பகுதியில் ரோந்து சுற்றிவந்தனர். அப்போது பஸ்நிலையம் பின்புறம் ஒரு சாக்கு பையில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.

    போலீசார் நடத்திய விசாரணையில் 4-வது வார்டு சுக்காங்கல்பட்டி பகுதியைச் சேர்ந்த சந்திரன் (வயது 38) எனத் தெரியவந்தது. அவரிடமிருந்து 23 குவாட்டர் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போல் குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சேர்ந்த உலகமாயன் (வயது 50) என்பவரிடம் இருந்து 39 மது பாட்டில்களையும், கருநாக்கமுத்தன்பட்டியைச் சேர்ந்த பேச்சி (வயது 52) என்பவரிடமிருந்து 11 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை படத்தில் காணலாம்.

    ஆந்திராவில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த பழவேற்காட்டில் தேர்தல் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது, ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரி மணிமேகலை தலைமையில் திருப்பாலைவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார்கள்.ஆனால் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் நிற்கவில்லை. அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அவர்களை பறக்கும் படையினர் விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்தனர்.

    மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்களிடம் 2 பைகளில் மதுபாட்டில்கள் இருந்தன. விசாரணையில் அவை ஆந்திராவில் இருந்து படகு மூலம் கடத்தி வரப்பட்டவை என்பது தெரிய வந்தது.

    அவர்களிடம் 10 மதுப்பாட்டில்கள் இருந்தன. அவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில் மது பாட்டில்களுடன் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அருண் (31), சுந்தர்ராஜன் (32) என்பது தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அருண் எண்ணூர் காட்டாங்குப்பத்தையும், சுந்தர்ராஜன் எர்ணாவூரையும் சேர்ந்தவர்.

    கைதானவர்களுக்கு மதுகடத்தும் கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து திருப்பாலைவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர் கலால் வட்டாட்சியர் சாந்தி தலைமையிலான பறக்கும் படையினர் சின்னநாகபூண்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனை செய்தனர்.

    காரின் உள்ளே 240 மதுபான பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதில் வந்த திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த மகேஸ்வரன் கைது செய்யப்பட்டான். ஆர்.கே. பேட்டை கலால் போலீசிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.

    பாராளுமன்ற தேர்தலையொட்டி இந்தவாரம் முதல் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் வாங்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. #LSPolls
    சென்னை:

    பண்டிகை, திருவிழா காலங்களில் மதுவிற்பனை அதிக அளவில் இருக்கும்.

    தேர்தல் காலங்களிலும் மதுவிற்பனை சூடுபிடிக்கும். மது குடிப்பவர்களால் அடிதடி, தகராறுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

    எனவே இந்தவாரம் முதல் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் வாங்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வீட்டில் மதுபாட்டில்களை ஸ்டாக் வைப்பதற்கும் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    புதிய கட்டுப்பாட்டின்படி ஒருவர் விஸ்கி, பிராந்தி, ஜின், ரம் போன்ற மது பாட்டில்களை வாங்க சென்றால் அவர் 750 மில்லி லிட்டர் அளவுகொண்ட 2 பாட்டில்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும். இதுபோல் 650 மில்லிலிட்டர் அளவுகொண்ட 4 பீர் பாட்டில்கள் மட்டுமே வாங்கமுடியும்.

    தற்போது 750 மில்லி லிட்டர் அளவுகொண்ட 12 மதுபாட்டில்களை வீட்டில் வைத்துக்கொள்ளலாம். இனி இதுபோன்ற 4 மதுபாட்டில்களை மட்டுமே வைத்துக் கொள்ளமுடியும். குறைந்த அளவு ஆல்கஹால் கொண்ட 12 ஒயின் பாட்டில்களை வீட்டில் வைக்கலாம்.

    உயர் ரக மதுபானங்கள் வாங்குவோருக்கு ஒரே நேரத்தில் 5 முழுபாட்டில்கள் மட்டுமே வாங்கமுடியும். இவர்களுடைய விவரங்கள் அட்டை எண் ஆகியவை பதிவு செய்தபிறகே இதை வாங்கலாம். வழக்குப்பதிவு நெருங்கும்போது இந்த கட்டுப்பாடுகள் இன்னும் அதிகமாகும். வழக்குப்பதிவு நாளில் மதுக்கடைகள் மூடப்படும்.

    தமிழ்நாட்டில் உள்ள 500 டாஸ்மாக் கடைகள் பதட்டமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன. மதுவிற்பனை கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுவதை கண்காணிக்க 90 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் மதுபான விற்பனை, இருப்பு, உள்நாட்டு, வெளிநாட்டு மதுபானங்கள் கடத்தல் போன்றவற்றை கண்காணிப்பார்கள். இந்த தகவல்களை டாஸ்மாக் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #LSPolls
    கும்பகோணத்தில் பதுக்கி வைத்திருந்த 3888 மதுபாட்டில்கள் மற்றும் 55 கேன்களில் இருந்த 1925 லிட்டர் எரிசாராயம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே மணஞ்சேரி பகுதியில் எரிசாராயம்- மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு ரகசியமாக விற்கப்படுவதாக கும்பகோணம் மதுவிலக்கு தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் மதுவிலக்கு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சரசுவதி, சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் மணஞ்சேரி பகுதிக்கு சென்று கணகாணித்தனர்.

    அப்போது பாதிகட்டப்பட்ட நிலையில் இருந்த ஒரு வீட்டில் சிலர் செல்வதும், வருவதுமாக இருந்தனர் இதனால் சந்தேகமடைந்த போலீசார் உடனடியாக அங்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசார் வருவதை கண்ட ஒரு கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் போலீசார் அங்கிருந்த பொருட்களை சோதனை செய்தனர். இதில் அட்டை பெட்டிகளில் இருந்த 3888 மதுபாட்டில்கள், 55 கேன்களில் இருந்த 1925 லிட்டர் எரிசாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும். மேலும் அருகே நிறுத்தியிருந்த ஒரு டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.

     


    இதுகுறித்து மதுவிலக்கு தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும் இது தொடர்பாக அதேபகுதியை சேர்ந்த சாராய வியாபாரியான பெரியவன் என்கிற முருகன், அருண்பாண்டியன், ஆனந்த், மணிகண்டன், பாரதி, மற்றொரு முருகன் ஆகிய 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கோட்டக்குப்பம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 744 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
    விழுப்புரம்:

    கோட்டக்குப்பத்தை அடுத்த கூனிமேடு பஸ் நிறுத்தம் அருகில் நேற்று முன்தினம் இரவு போலீஸ் ஏட்டு பாஸ்கரன் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை சந்தேகத்தின்பேரில் போலீசார் வழிமறித்தனர். போலீசாரை பார்த்ததும் காரை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு அதில் வந்த 2 பேர் தப்பி ஓடினர். உடனே போலீசார் விரட்டிச்சென்று ஒருவரை பிடித்தனர். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார்.

    இதையடுத்து அந்த காரை போலீசார் சோதனை செய்தனர். அதில், 16 அட்டைப்பெட்டிகளில் 744 மதுபாட்டில்கள் இருந்தன. தொடர்ந்து, பிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கார் டிரைவர் என்பதும், புதுச்சேரி மாநிலம் முத்திரையர்பாளையத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 34) என்பதும், தப்பி ஓடியவர் புதுச்சேரி காந்தி நகரை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பதும், புதுச்சேரியில் இருந்து மரக்காணம் பகுதிக்கு மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து ராமச்சந்திரனை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள காரையும் பறிமுதல் செய்து கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பன்னீர்செல்வத்தை தேடி வருகின்றனர். 
    மயிலாடுதுறை அருகே கார்களில் கடத்தி வரப்பட்ட 3,984 மதுபாட்டில்கள்-1,600 சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர்.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்பேரில் மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் அல்லிவிளாகம் பாலக்கரை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் காரில் 83 அட்டை பெட்டிகளில் 3 ஆயிரத்து 984 மதுபாட்டில்களை புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து கார் டிரைவர் நன்னிலம் தாலுகா கூத்தனூரை சேர்ந்த வெற்றிவேந்தன் (வயது 38) என்பவரை கைது செய்தனர்.

    இதைப்போல மயிலாடுதுறை அருகே கருவி முக்கூட்டில் போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 1,600 சாராய பாக்கெட்டுகளை புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் காரைக்கால் மாவட்டம் திருவேட்டக்குடியை சேர்ந்த சண்முகவேல் (37) என்பவரை கைது செய்து சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் மதுபாட்டில்கள் மற்றும் சாராய பாக்கெட்டுகளை கடத்தி வர பயன்படுத்திய 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 
    திருத்துறைப்பூண்டி அருகே கணவர் வாங்கி குடித்த காலி மதுபாட்டில்களை உடைத்து பெண்கள் திடீரென போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கொருக்கை ஊராட்சியில் டாஸ்மாக் கடை இல்லை. இதனால் இந்த பகுதியை சேர்ந்த குடிமகன்கள் திருத்துறைப்பூண்டிக்கு சென்று மதுபாட்டில்களை வாங்கி வந்து குடிக்கின்றனர்.

    இதற்கிடையே கொருக்கை பகுதியில் சிலர் தங்களது வீடுகளில் திருட்டுத்தனமாக மதுபாட்டில் களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதை தடுத்து நிறுத்த கோரி அப்பகுதி பெண்கள், மற்றும் ஆண்கள் திருத்துறைப்பூண்டி போலீசில் புகார் செய்தனர். ஆனால் இதுகுறித்து போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் கொருக்கை பகுதியை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டனர். அவர்கள் தங்களது வீடுகளில் கணவர்கள் வாங்கி குடித்த காலி மதுபாட்டில்களை சேகரித்து கொண்டு பொது இடத்தில் வைத்து உடைத்தனர். ஒரே நேரத்தில் பெண்கள் அனைவரும் மதுபாட்டில்களை ரோட்டில் போட்டு உடைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யும் கும்பலை கைது செய்ய வேண்டும் என்று கோரி பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் திருத்துறைப்பூண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுபற்றி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதை ஏற்று பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதனையடுத்து வீடுகளில் வைத்து திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை விற்ற அதே பகுதியை ஜெயலலிதா (38), கலா(48), ராணி (47), மற்றும் திவாகரன் (22) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ராசிபுரம் அருகே மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையில் புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட 3,072 மதுபாட்டில்கள் ஜீப்புடன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செந்தில் தலைமையில் ராசிபுரம் கோனேரிப்பட்டி அருகில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷ், சப்-இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று காலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆத்தூரில் இருந்து ராசிபுரம் நோக்கி வந்த ஜீப் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது அதில் 3,072 மதுபாட்டில்கள் இருப்பதும், இவை அனைத்தும் புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்படுவதும் தெரிய வந்தது.

    இதையடுத்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஜீப்பையும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மதுபானம் கடத்தலில் ஈடுபட்ட விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ரகுராமன் (வயது27), ஷேக்காதர் (37) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஜீப் உரிமையாளரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    தர்மபுரியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 420 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி குப்பாண்டி தெருவை சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது 61). இவர் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு காந்தி, இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் கோபி, சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் பச்சையப்பன் வீட்டிற்கு சென்று திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது அவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. வீட்டில் பதுக்கி வைத்திருந்த 420 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் ரூ.50 ஆயிரம் ஆகும். இதுதொடர்பாக பச்சையப்பனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×