search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளிகள்"

    பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதையொட்டி இன்று கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
    கன்னியாகுமரி:

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் வெளிநாடு, வெளியூர் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். ஏப்ரல், மே மாதங்களில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுவதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும்.

    நேற்றுடன் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். கோடை விடுமுறை விடப்பட்டதையொட்டி இன்று கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

    வழக்கமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். இன்று காலை சூரிய உதயத்தை பார்ப்பதற்கு அதிக அளவு சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். பின்னர் அவர்கள் முக்கடல் சங்கமத்தில் நீராடி மகிழ்ந்தனர்.

    காலை 6 மணி முதல் பூம்புகார் படகுத்துறை முன்பு சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். படகு போக்குவரத்து காலை 8 மணிக்கு தொடங்கியது. 2 மணி நேரம் காத்து நின்று சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்தனர்.

    கூட்டம் அதிகமாக இருந்ததால் விவேகானந்தர் பாறைக்கு 3 படகுகள் இயக்கப்பட்டது. கடலில் நீர்மட்டம் குறைவு காரணமாக திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    ஓட்டல், விடுதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க குடை பிடித்தவாறு சென்றனர். இளநீர், தர்பூசணி, நுங்கு ஆகியவை கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.


    மாணவர்களின் நலன்கருதி கோடை விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #SummerHoliday
    சென்னை:

    பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    மாணவர்களின் நலன்கருதி கோடை விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது என்று கடந்தாண்டு அறிவுறுத்தப்பட்டது. தற்போது கோடை விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை பள்ளிகளில் நடத்துவதாக புகார்கள் வருகின்றன.

    கோடையில் வெயில் அளவு அதிகரித்துள்ளதால், மாணவர்களுக்கு வெப்பம் சார்ந்த நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அவர்களுக்கு கட்டாயம் ஓய்வளிக்க வேண்டும். கோடை விடுமுறை என்பது மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று தங்கள் உறவினர்களோடு பழகவும், உறவுகளின் அவசியத்தை தெரிந்துகொள்ளவும், உறவுகளை மேம்படுத்தவும் ஒரு நல்ல வாய்ப்பு ஆகும். இதனால் மாணவர்களின் வாழ்வியலில் விழுமியம் ஏற்படும்.

    எனவே மாணவர்களின் நலன்கருதி கோடை விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளிகளுக்கு திட்டவட்டமாக தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இதுதொடர்பாக பெற்றோரிடம் இருந்து பள்ளிகள் மீது புகார் வந்தால், அதன்மீது எவ்வித காலதாமதமின்றி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  #SummerHoliday
    நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் எட்டாம் வகுப்பு வரை இந்தி மொழியை கட்டாயப் பாடமாக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக வெளியான தகவலுக்கு மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் விளக்கம் அளித்துள்ளார். #PrakashJavadekar #Hindi #School
    புதுடெல்லி:

    நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் எட்டாம் வகுப்பு வரை இந்தி மொழியை கட்டாயப் பாடமாக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக சமீபத்தில் சில ஊடகங்களில் செய்தி வெளியானது. இதற்கு பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்பும் கிளம்பியது.



    இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் இன்று விளக்கம் அளித்துள்ளார்.

    தேசிய கல்விக் கொள்கையின்படி எந்த மொழியையும் கட்டாயப் பாடமாக்குவதற்கு இடமில்லை. ஊடகங்களில் வெளியான தகவல் தவறானது என அவர் குறிப்பிட்டுள்ளார். #PrakashJavadekar #Hindi #School
    தொடர்மழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. #HeavyRain
    காரைக்கால்:

    தென்மேற்கு வங்ககடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக மழை பெய்து வந்தது.

    இன்று அதிகாலை காரைக்காலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இடை விடாது கனமழை கொட்டி வருகிறது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது. வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இதேப்போல் திருநள்ளாறு, திருப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

    தொடர்மழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. #HeavyRain
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் நாளை பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். #MinisterSengottaiyan #DeltaDistricts
    தஞ்சாவூர்:

    கஜா புயல் தாக்கியதில் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. இந்த புயலினால் பலர் உயிரிழந்தனர். வீடுகள், பயிர்கள் சேதமடைந்தன.

    வாழை, தென்னை உள்ளிட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தற்போது நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன. புயல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டன.



    இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் நாளை பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நாளை மாலைக்குள் புதிய புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    பள்ளிகளுக்கு விரைவில் மின்சாரம் வழங்கப்படும் என்றும், பள்ளிகளில் விழுந்த மரங்களில் 70% அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளில் 45 குழுக்கள் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #MinisterSengottaiyan #DeltaDistricts

    மாணவர்களின் வருகை பதிவு தொடர்பான பயோ மெட்ரிக் முறை டிசம்பருக்குள் 1000 பள்ளிகளில் தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #Sengottaiyan #BiometricAttendance
    ஈரோடு:

    தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு நம்பியூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    மாணவர்களின் வருகை பதிவு தொடர்பான பயோ மெட்ரிக் முறை டிசம்பருக்குள் 1000 பள்ளிகளில் தொடங்கப்படும். விரைவில் 1.50 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் நடத்தப்படும்.



    சென்னை, காஞ்சிபுரம் கோவை போன்ற இடங்களில் கேபிள் மூலம் 300 பள்ளிகளுக்கு இலவச இன்டர்நெட் வசதி செய்து கொடுக்கப்படும். கேபிள் மூலம் ஸ்மார்ட் வகுப்புகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #Sengottaiyan #BiometricAttendance
     
    மத்திய அரசின் நிதி உதவி கிடைக்காது என்பதால் 3 ஆயிரம் பள்ளிகளை மூட தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #TNGovernment #school
    சென்னை:

    தமிழ்நாட்டில் பள்ளி கல்வித்துறை மூலம் 31 ஆயிரத்து 200 பள்ளிக் கூடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    தற்போது ஆங்கில பள்ளிகள் மோகத்தால் பல பெற்றோர் தனியார் ஆங்கில பள்ளிகளிலேயே மாணவர்களை சேர்க்கிறார்கள்.

    எனவே, அரசு பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது. பல இடங்களில் 15-க்கும் குறைவான மாணவர்களை கொண்டு பள்ளிகளை இயக்கி வருகிறார்கள்.

    ஏற்கனவே அரசு இவ்வாறு குறைவான மாணவர்களை கொண்டு செயல்படும் 800 பள்ளிகளை மற்ற பள்ளிகளுடன் இணைக்கவும், 33 பள்ளிகளை நிரந்தரமாக மூடவும் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், அரசு இதை மறுத்தது.

    இபபோது 3 ஆயிரம் பள்ளிகளை மூட அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மாநில அரசுகள் நடத்தக்கூடிய பள்ளிகளுக்கு மத்திய அரசு பல்வேறு நிதி உதவிகளை செய்கிறது. சர்வ சிக்ஷா அபியான், ராஷ்டீரிய மத்திய மிக் அபியான் ஆகிய திட்டங்களின் கீழ் ஏற்கவே பள்ளிகளுக்கு உதவிகளை செய்து வந்தது.

    இப்போது இந்த 2 திட்டங்களையும் இணைத்து சமக்ரா சிக்ஷா அபியான் என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

    இந்த திட்டத்தின்படி மத்திய அரசு ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ. 1 லட்சம் வரை மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நிதி உதவிகளை செய்கிறது.

    ஆனால், 15 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளுக்கு இந்த உதவிகள் வழங்கப்படாது என்று விதிகள் வகுக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கடந்த ஜூலை மாதம் 31-ந் தேதி டெல்லியில் நடைபெற்றது.

    அதில், தமிழக பள்ளி கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் கலந்து கொண்டார். அப்போது அவர் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தமிழ்நாட்டில் குறைவாக மாணவர்கள் கொண்ட பல பள்ளிகளை இணைக்க போவதாக தெரிவித்துள்ளார்.

    தற்போது 15 மாணவர்களுக்கு கீழ் உள்ள பள்ளிகளை மூடுவது அல்லது மற்ற பள்ளிகளுடன் இணைப்பது என்று மாவட்ட அதிகாரிகளுக்கு மாநில அரசிடம் இருந்து தகவல் சென்றுள்ளது. அந்த பள்ளிகளுக்கு நிதி உதவிகள் நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    இதன்படி மிகவும் குறைவான மாணவர்களை கொண்ட 1053 பள்ளிகளை அருகில் உள்ள மற்ற பள்ளிகளோடு இணைக்க முடிவு செய்துள்ளனர். 1950 பள்ளிகளை மூடவும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

    மத்திய அரசின் நிதி கிடைக்காது என்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. மத்திய அரசு மாநில பள்ளிகளுக்கு கழிவறை, மேலாண்மை, புத்தகம், நூலகம் போன்றவற்றுக்கும் திட்டங்கள் மூலம் உதவி வருகிறது.

    இவற்றையும் மாணவர்கள் குறைவாக உள்ள மாநில அரசு பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 3 ஆயிரம் பள்ளிகளை மூடினால் மற்ற 28 ஆயிரத்து 200 பள்ளிகளுக்கு ரூ.97 கோடி வரை மத்திய அரசின் நிதி கிடைக்கும்.



    இது சம்பந்தமாக கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறும்போது, பள்ளிகளுக்கு ஒதுக்க வேண்டிய நிதிகளை மத்திய அரசு மறுக்கும் போது, மாநில அரசுகள் பள்ளிகளை மூட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

    அரசு பள்ளிகளில் வசதியும், போதிய ஆசிரியர்களும் இல்லாத நிலையில் பெற்றோர்கள் எப்படி அரசு பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க முன்வருவார்கள் என்று கூறினார்.

    வருங்காலத்தில் 15-ல் இருந்து 100 மாணவர்கள் வரை படிக்கும் 25 ஆயிரம் பள்ளிகளுக்கு கூட மத்திய அரசு நிதி உதவிகளை நிறுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் நிதி உதவி கிடைக்காது என்பதால் 3 ஆயிரம் பள்ளிகளை மூட தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #TNGovernment #school
    நெல்லை, குமரி மாவட்டங்களில் பலத்த மழை காரணமாக தண்டவாளத்தில் மண்சரிந்தது. இதனால் பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. மழை காரணமாக குமரி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. #HeavyRain
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய பலத்த மழை பெய்தது. நேற்று காலையிலும் தொடர்ந்து மழை பெய்தது. தொடர் மழையின் காரணமாக பாபநாசம், சேர்வலாறு, ராமநதி, கடனாநதி ஆகிய அணைகளுக்கு தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 124 அடியாக இருந்த பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 137 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் 13 அடி உயர்ந்தது.



    அணையில் இருந்து 15 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டதால் தாமிர பரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றங்கரையோர பகுதியில் உள்ள பல மரங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.

    நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் கருப்பந்துறை ஆற்றுப்பாலத்தை தொடும் அளவுக்கு தண்ணீர் ஓடுகிறது. குறுக்குத்துறை தாம்போதி பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.



    தொடர் மழை காரணமாக, குண்டாறு, அடவிநயினார், கொடுமுடியாறு ஆகிய அணைகள் நிரம்பி உள்ளன. கருப்பாநதி, கடனாநதி ஆகிய அணைகள் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளன.

    குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளிக்க நேற்று 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் அனைத்து அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு அதிகரித்தது.

    இந்த நிலையில் புலியருவியில் குளித்தபோது வெள்ளத்தில் சிக்கி சிவகாசியை சேர்ந்த பிரபு (வயது 39) என்ற சுற்றுலா பயணி இறந்தார்.

    செங்கோட்டை அருகே கேரள மாநிலம் தென்மலையில் பலத்த மழை பெய்தது. நேற்று அதிகாலையில் திடீரென தென்மலை ரெயில் குகை நுழைவுவாயிலில் ராட்சத பாறை விழுந்து குகை பாதையை மூடிவிட்டது. மேலும் அப்பகுதியில் இருபுறமும் மண்சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் விழுந்தது.

    தண்டவாளத்தில் விழுந்து கிடக்கும் பாறை மற்றும் மண்சரிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் நேற்று காலை நெல்லையில் இருந்து செங்கோட்டை வழியாக கொல்லம் செல்லும் ரெயில் ரத்து செய்யப்பட்டது. மேலும் நெல்லையில் இருந்து செங்கோட்டை வழியாக இரவு 12.30 மணிக்கு பாலக்காடு செல்லும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலும் ரத்தானது.

    இதேபோல் குமரி மாவட்டத்திலும் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் இரணியல் ரெயில் நிலையம் அருகில் நேற்று அதிகாலையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக குருவாயூரில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் நிறுத்தப்பட்டது.

    பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு தண்டவாளத்தில் கிடந்த மண்ணை அப்புறப்படுத்தும் பணி நடந்தது. தொடர்ந்து மழை பெய்து வந்ததாலும், அதிக அளவில் மண் மூடி இருந்ததாலும் சீரமைப்பு பணியில் சிரமம் ஏற்பட்டது. மண் சரிவு காரணமாக பல ரெயில்கள் நடு வழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

    நாகர்கோவிலில் இருந்து புறப்படவேண்டிய 9 ரெயில் கள் ரத்து செய்யப்பட்டன. சென்னை-கொல்லம் செல்ல வேண்டிய அனந்தபுரி எக்ஸ்பிரஸ், திருச்சி- திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நாகர்கோவில் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டன.

    நெடுந்தூர பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்கும் பொருட்டு மாற்று ஏற்பாடாக, கொல்லம்- சென்னை இடையேயான அனந்தபுரி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம்- திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ஆகியவை நேற்று மாலை நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு சென்றன. கன்னியாகுமரி-மும்பை எக்ஸ்பிரஸ் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது.

    தொடர்மழை காரணமாக குமரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் நெல்லை மாவட்டத்தில் தென்காசி வட்டார பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
    குழந்தைகள் போதிய ஊட்டச்சத்து பெற மதிய உணவுத் திட்டம் மூலம் பள்ளிகள், அங்கன்வாடிகளில் பால் மற்றும் பால் பொருட்களை அளிப்பதற்கு அரசு ஏற்பாடு செய்து வருகிறது. #Milk #Anganwadi
    புதுடெல்லி:

    இந்தியாவில் கடந்த நிதியாண்டில் பால் உற்பத்தி 176.35 மில்லியன் டன்னாக அதிகரித்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. வரும் 2021-22-ம் ஆண்டில் இந்தியாவில் பால் உற்பத்தி 254.5 மில்லியன் டன்னாக உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பாலுக்கு போதிய விலை கிடைக்காததால் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண மகாராஷ்டிராவில் பால் உற்பத்தியாளர்கள் சமீபத்தில் தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    பால் உற்பத்தியாளர்களால் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் பாலை பயன்படுத்தும் நோக்கிலும் பாலுக்கு போதிய விலை கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும் மத்திய அரசு புதிய திட்டத்தை தீட்டியது. அதாவது பள்ளிகள், அங்கன்வாடிகளில் மதிய உணவு திட்டத்தின் கீழ் வாரத்துக்கு 2 நாட்கள் பால் வழங்கலாம் என்று திட்டம் வகுத்தது.

    இந்த திட்டத்துக்கு மாநில அரசுகளின் கருத்துக்களை மத்திய அரசு கேட்டிருந்தது. இது தொடர்பாக மத்திய கால்நடை மற்றும் பால் உற்பத்தித்துறை செயலாளர் தருண் ஸ்ரீதர் கூறியதாவது:-


    மதிய உணவுத் திட்டம் மூலம் பள்ளிகள், அங்கன் வாடிகளில் பால் மற்றும் பால் பொருட்களை அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டிருந்தது. இதற்கு பெரும்பாலான மாநிலங்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளன.

    ராஜஸ்தான் மாநிலம் ஏற்கெனவே இதை செயல்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் எதிர்கால சந்ததியினர் போதிய ஊட்டச்சத்து பெறுவதை உறுதி செய்ய முடியும் என்று அரசு கருதுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Milk #Anganwadi
    கூடுதல் கட்டணம் பெறும் அரசு நிதியுதவி பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் எச்சரித்துள்ளார்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிதியுதவி பெறும் பள்ளிகளிலும் அரசு நிர்ணயித்துள்ள கட்டணங்களை தவிர கூடுதலாக வசூல் செய்யப்படுவதாக பொது மக்களிடமிருந்து புகார் பெறப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் மட்டுமே வசூல் செய்திட வேண்டும் என அனைத்து நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. கூடுதலாக வசூல் செய்யும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    கூடுதல் தொகை வசூல் செய்யும் பள்ளிகள் பற்றி எழுத்துப் பூர்வமாக மனுவினை திண்டுக்கல், பழனி, வத்தலக்குண்டு, வேடசந்தூர் மாவட்டக்கல்வி அலுவலகங்களிலும், திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திலும் புகார் தெரிவிக்கலாம் என்று திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வினய் தெரிவித்து உள்ளார்.
    புதிய பாடத்திட்டத்தின்படி இந்த ஆண்டு முதல் பள்ளிகளில் கூடுதலாக 15 நாட்கள் வகுப்பு நடத்தப்படும் என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

    கோபி:

    தமிழக கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கோபி அருகே உள்ள கொடிவேரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    தமிழக அரசு அறிவித்தபடி ஜூன் 1-ந்தேதி முதல் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும். இந்த கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் சிறந்த முறையில் படைக்கப்பட்டு பல வண்ணங்களில் அச்சிடப்பட்டுள்ளது. இந்த புத்தகங்களை பார்க்கும் போதே மாணவர்களுக்கு படிக்கும் ஆர்வத்தை தூண்டும். அடுத்த மாதம் அரசு அறிவித்தபடி அரசு பள்ளி மாணவர்களுக்கு 4 சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

    பிளஸ்-2 தேர்வு முடிந்து முடிவுகளும் நல்ல முறையில் அறிவிக்கப்பட்டுள்ளன. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட கல்வித்துறை தயார் நிலையில் உள்ளது. வருகிற 23-ந்தேதி காலை 9 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு வெளியிடப்படும்.

    புதிய பாடத்திட்டம் ஆண்டுக்கு 185 நாட்கள் நடத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 170 நாட்கள்தான் பாடம் நடத்தப்பட்டது. தற்போது கூடுதலாக 15 நாள் வகுப்புகள் நடத்தப்படும்.

    அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க செப்டம்பர் மாதம் வரை சேர்க்கை நீடிக்கப்பட்டுள்ளது.

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் வெற்றிபெறும் மாணவ- மாணவிகளுக்கு இப்போதே எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். கல்விதுறை மூலம் மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளையும், புதிய பாடத்திட்டங்களையும் அரசு அறிவித்துள்ளது.

    எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழக கல்விதுறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

    இதுவரை பிளஸ்-2 பாடத்தில் 6 பாடங்களுக்கு தலா 200 மதிப்பெண்கள் மூலம் 1200 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வந்தது. இந்த மதிப்பெண்கள் முறை இந்த ஆண்டுடன் முடிவடைய உள்ளதாக கல்விதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அதன்படி இனி வரும் கல்வி ஆண்டு முதல் ஒவ்வொரு பாடத்துக்கும் தலா 100 மதிப்பெண்கள் வீதம் 600 மதிப்பெண்கள் மட்டும் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என கல்விதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த முறையை செயல்படுத்த கல்விதுறை முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறினர்.

    ஜூன் 1-ந் தேதிக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படும் என கல்வி கட்டண நிர்ணயக்குழு தலைவர் நீதிபதி டி.வி.மாசிலாமணி கூறினார்.
    சென்னை:

    தனியார் பள்ளிகளில் மாணவர்களிடம் கல்வி கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக தமிழக அரசுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் நிர்ணயம் செய்ய கமிட்டி அமைக்கப்பட்டது.

    அந்த கமிட்டி சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ளது. இதன் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி டி.வி.மாசிலாமணி உள்ளார். கல்வி கட்டணம் நிர்ணயம் குறித்து டி.வி.மாசிலாமணி கூறியதாவது:-

    தமிழகத்தில் சுமார் 10 ஆயிரம் தனியார் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு 5 ஆயிரத்து 500 பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயம் செய்து இணையதளத்தில் (www.tamilnadufeecomittee.com) வெளியிட்டு உள்ளோம்.

    மீதம் உள்ள 4 ஆயிரத்து 500 பள்ளிகளுக்கு ஜூன் 1-ந் தேதிக்குள் கல்வி கட்டணம் நிர்ணயம் செய்துவிடுவோம். பள்ளிக்கூடங்கள் திறப்பதற்கு முன்பாக 2018-2019-ம் ஆண்டுக்கான அனைத்து பள்ளிகளுக்கும் கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்படும்.

    கட்டணம் நிர்ணயிக்கப்படாத 4 ஆயிரத்து 500 பள்ளிகளில், ஆயிரத்து 844 பள்ளிகள் கருத்துருவை அனுப்பியதால் 1000 பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் 850 பள்ளிகள் கருத்துருவை அனுப்பின. அந்த பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அனுப்பாத பள்ளிகள் உடனடியாக கருத்துருவை கமிட்டி இணையதளத்துக்கு அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×