search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 118868"

    • மர்மநபர் மூதாட்டி அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்து விட்டு தப்பி சென்றார்.
    • தனிப்படை போலீசார் மர்மநபரை கைது செய்து பறிமுதல் செய்தனர்.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் திருவள்ளுவர் நகர் அருகே கடந்த மாதம் 26-ந்தேதி காலை மூதாட்டி ஒருவர் நடை பயிற்சி மேற்கொண்டிருந்தார்.

    அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் மூதாட்டி அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்து விட்டு தப்பி சென்றார்.

    இந்த நகை பறிப்பில் ஈடுபட்டவரை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ் ராவத் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் ஆகியோர் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, செல்வகுமார், ஏட்டுகள் பாலசுப்பிரமணியம், நாடிமுத்து, செந்தில்குமார், ஜனார்த்தனன், ராஜ்குமார் ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் வழிப்பறி நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மூதாட்டியிடம் நகை பறிப்பில் ஈடுபட்டவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வெற்றிவேல் (வயது38) என்பதும், இவர் தற்போது கும்பகோணம் பெருமாண்டி பகுதியில் தங்கியிருப்பதும் போலீசாருக்கு தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் வெற்றிவேலை கைது செய்து அவரிடம் இருந்து 7 பவுன் நகை மற்றும் வழிப்பறி செய்ய பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    அவரிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.

    பொள்ளாச்சியில் வியாபாரியிடம் நகை-பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி திலகர் வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் .இவர் பொள்ளாச்சி அடுத்துள்ள கெடிமேடு பகுதியில் தர்பூசணி கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு இவர் பொள்ளாச்சி ரெயில்வே காலனி பகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த 3 பேர் செல்வராஜை தாக்கிவிட்டு அவரிடமிருந்த ரூ.620 பணம் கையில் போட்டிருந்த 5 கிராம் மோதிரம், செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றனர்.

    நகை, பணத்தை பறிகொடுத்து விட்டு வீட்டுக்கு சென்ற செல்வராஜ் தனது மகன் கண்ணனிடம் நடந்த சம்பவத்தை கூற கண்ணன் தனது நண்பர்கள் மற்றும் பொதுமக்களை அழைத்துக் கொண்டு ரெயில்வே காலனி பகுதிக்கு சென்றார். ஆனால் அங்கு வழிப்பறி கொள்ளையர்கள் இல்லை. இதையடுத்து நேதாஜி ரோடு மார்க்கெட் பகுதிக்கு சென்றபோது அங்கு 3 பேர் நின்று கொண்டு இருந்தனர். செல்வராஜ் அவர்களை அடையாளம் காட்டவே பொதுமக்கள் அவர்கள் 3 பேரையும் துரத்திப் பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது 2 பேர் மட்டும் சிக்கி கொண்டனர். அவர்களை பொள்ளாச்சி மேற்கு போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் கொள்ளையர்கள் பொள்ளாச்சி செரிப் காலனியை சேர்ந்த முகமது ஷேக் பரீத் (23), கண்ணப்பன் நகரை சேர்ந்த சுலைமான் ( 27 )என்பது தெரியவந்தது . அவர்களை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடியவர் பொள்ளாச்சி அழகாபுரி வீதியை சேர்ந்த ரபிக் என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.


    கோயம்பேட்டில் ஓடும் பஸ்சில் 2 பெண்களிடம் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    போரூர்:

    சாலிகிராமம் மதியழகன் நகர் கே.கே. சாலையை சேர்ந்தவர் ஜெயகுமாரி (வயது40). இவர் தனது மகள் பிருந்தாவின் திருமணத்திற்காக நகை வாங்க ரூ. 40 ஆயிரம் பணம் மற்றும் வீட்டில் இருந்த 6 பவுன் நகைகளை எடுத்து கொண்டு அண்ணா நகரில் உள்ள நகைக்கடைக்கு மாநகர பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.

    கோயம்பேடு 100 அடி சாலை வந்தபோது நகை மற்றும் பணம் இருந்த பையை காணாமல் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார்

    கூட்ட நெரிசலை பயன்படுத்தி பஸ்சில் வந்த மர்ம நபர்கள் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஜெயகுமாரி கோயம்பேடு பஸ் நிலைய போலீசில் புகார் அளித்தார்.

    மற்றொரு சம்பவம்...

    பெருங்குடி கல்லுக்குட்டை அன்னை தெரசா தெருவைச் சேர்ந்தவர் நாகலட்சுமி (48). இவர் நேற்று நெற்குன்றத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு செல்வதற்காக கோயம்பேடு பஸ் நிலையம் வந்தார்.

    பின்னர் நெற்குன்றம் செல்லும் மினி பஸ்சில் ஏறி அமர்ந்தார். பஸ் கிளம்பி சிறிது தூரம் சென்றதும் தனது கைப்பை கிழிந்து கிடந்ததை நாகலட்சுமி கண்டார்.

    மர்ம நபர்கள் பையை கிழித்து அதிலிருந்த 5 பவுன் நகைகளை திருடி சென்றது தெரிந்தது. இதுகுறித்து கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குஜராத்தில் முன்னாள் முதல்-மந்திரி சங்கர்சின் வகேலா வீட்டில் ரூ.3 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் ரூ.2 லட்சம் பணம் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். #GujaratCM #ShankersinhVaghela
    ஆமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் கடந்த 1996-97-ல் முதல்-மந்திரியாக இருந்தவர் சங்கர்சின் வகேலா. இவரது வீடு காந்திநகரின் புறநகர் பகுதியான பெதப்பூரில் உள்ளது. சொகுசு மாளிகை போல அமைந்திருக்கும் இந்த வீட்டில் ஏராளமான பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இதில் நேபாளத்தை சேர்ந்தவர்களும் அடங்குவர்.

    இந்த நிலையில் வகேலாவின் மனைவிக்கு சொந்தமான ரூ.3 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் ரூ.2 லட்சம் ஆகியவை மாயமானது கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர்கள் வீட்டு பணியாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது வகேலா வீட்டில் பணியாற்றி வந்த நேபாளத்தை சேர்ந்த ஒரு தம்பதிதான் இந்த நகை மற்றும் பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே அவர்கள் தாய்நாடு திரும்பிய நிலையில் அப்போதே இந்த பணம் மற்றும் நகையை திருடிச்சென்றதாக தெரிகிறது. இது தொடர்பாக பெதப்பூர் போலீசில் தற்போது புகார் செய்யப்பட்டு உள்ளது. அது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  
    ஒரத்தநாடு அருகே மகள் திருமணத்திற்காக வைத்திருந்த 15 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து தொழிலாளியின் மகன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
    ஒரத்தநாடு:

    ஒரத்தநாடு அருகே பாச்சூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பிச்சைமுத்து. கூலித் தொழிலாளி. இவரது மகன் பாலமுருகன்(வயது28). பி.இ. படித்துள்ளார். மகள் கனிமொழி.

    கனிமொழிக்கு திருமண ஏற்பாடுகளை பிச்சை முத்து செய்து வந்தார். அதற்காக 15 பவுன் நகைகள் மற்றும் ரூ. 10 ஆயிரம் ரொக்கத்தை வீட்டில் பீரோவில் வைத்திருந்தனர். பிச்சைமுத்து, அவரது மனைவி கூலி வேலைக்கு செல்லும்போது வீட்டை பூட்டி சாவியை வாசல் நிலைப் படியில் வைத்துவிட்டு செல்வது வழக்கமாம்.

    இந்நிலையில் கடந்த 14-ந்தேதி பாலமுருகன் வெளியூர் சென்றிருந்ததால் பிச்சைமுத்து வீட்டை பூட்டி வழக்கம்போல் சாவியை நிலைப் படியில் வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அனைவரும் மாலையில் வீடு திரும்பினர். நேற்று காலை பீரோவில் இருந்த நகைகளை சரிபார்க்க திறந்தபோது 15 பவுன் நகைகளையும், ரூ.10 ஆயிரத்தையும் காணாமல் அதிர்ச்சியடைந்தனர்.

    அப்போதுதான் வீட்டு நிலைப்படியில் வைத்திருந்த சாவியை யாரோ எடுத்து திறந்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பாலமுருகன் ஒரத்தநாடு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
    திருப்பரங்குன்றத்தை சேர்ந்த கல்லூரி மாணவி நகை-பணத்துடன் மாயமானதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள திருநகரில் உள்ள பாலாஜி நகரைச் சேர்ந்தவர் ஜோதி பாசு. இவரது மகள் சரிதா பாரதி (வயது 19). இவர், திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி., இறுதியாண்டு படித்து வந்தார்.

    நேற்று வீட்டில் இருந்த சரிதா பாரதி, திடீரென மாயமானார். இதனால் பதட்டமடைந்த அவரது பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் வீட்டின் பீரோவில் இருந்த 25 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கத்துடன் சரிதா பாரதி மாயமாகி இருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து ஜோதிபாசு திருநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்துடன் மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

    வியாசர்பாடி மார்க்கெட்டில் 2 பெண்களிடம் நகை-பணம் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பூர்:

    சென்னை வியாசர்பாடி 3-வது பள்ளத் தெருவை சேர்ந்தவர் டில்லி. இவரது மனைவி கெஜலட்சுமி (77). நேற்று மாலை மார்க்கெட்டிற்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றார். அப்போது 3 பெண்கள் கெஜலட்சுமியை அணுகி பூஜை பொருட்கள் வாங்கித் தருவதாக கூறினர்.

    நீங்கள் அலைய வேண்டாம். நாங்கள் வாங்கி தருகிறோம் என்று கூறி பொருட்கள் வாங்கி கொடுத்துள்ளனர். பின்னர் அவரை ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர். வீட்டிற்கு சென்று பார்த்த போது கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை காணவில்லை.

    கெஜலட்சுமியிடம் இருந்து எப்படி நகையை அபேஸ் செய்தார்கள் என்று தெரியவில்லை. நைசாக பேசி கழற்றினார்களா? மாந்திரீகம் ஏதும் செய்து நகையை பறித்தார்களா என்பதை கெஜலட்சுமியால் சொல்ல முடியவில்லை.

    இதேபோல வியாசர்பாடி மெகன்சிபுரத்தை சேர்ந்த செல்லம்மாள் என்பவர் பிளாட்பாரத்தில் பூண்டு வியாபாரம் செய்து வருகிறார். அவர் வியாபாரம் செய்து வைத்திருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் அரை பவுன் நகையை காணவில்லை என்று கூறியுள்ளார். 3 பெண்கள் தன்னிடம் வந்து நைசாக பேசியதாக அவர் கூறியுள்ளார்.

    வியாசர்படி போலீசில் 2 பெண்களும் புகார் கொடுத்துள்ளனர். போலீசார் மார்க்கெட் பகுதயில் ரகசியமாக கண்காணிக்கின்றனர். ஆட்டோவில் வந்து கைவரிசை காட்டி செல்லும் 3 பெண்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாமக்கல்லில் லாரி அதிபர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நாமக்கல்:

    நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள அன்புநகரை சேர்ந்தவர் சிவக்குமார் (35). லாரி அதிபரான இவர் குடும்பத்துடன் கடந்த 24 ந் தேதி திருச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.

    நேற்றிரவு சிவக்குமார் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் பீரோவில் இருந்த நகை, பணம் மற்றும் எல்.டி.டிவியை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

    மேலும் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்சர் மோட்டார் சைக்கிளும் திருட்டு போனது தெரியவந்தது.

    இந்த சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பது தெரியவில்லை. சிவக்குமார் ஊரில் இல்லாத சமயம் பார்த்த மர்மநபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். இதனால் உள்ளூரை சேர்ந்த கொள்ளையர்கள்தான் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது.

    இதுகுறித்து சிவக்குமார் நாமக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சத்திரப்பட்டி அருகே தொழிலாளி வீட்டை உடைத்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சத்திரப்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி அருகே உள்ள தேவத்தூர் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் நாட்ராயன். கூலி தொழிலாளி. அவரது மனைவி குப்பாத்தாள் . இவர்கள் வீட்டை பூட்டிவிட்டு கூலி வேலைக்காக வெளியில் சென்றுவிட்டனர்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் வீட்டின் காம்பவுண்ட் சுவற்றில் ஏறி குதித்தனர். பூட்டியிருந்த பூட்டை உடைத்து, வீட்டிற்குள் நுழைந்தனர். பின்னர் பீரோவில் வைத்திருந்த 4 பவுன் தங்க நகை, ரூ.70 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

    மாலை வீட்டிற்கு வந்த குப்பாத்தாள் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது நகை- பணம் மாயமானது கண்டு பதறினார்.

    இதுகுறித்து உடனே அம்பிளிக்கை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அம்பிளிக்கை சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பாபநாசம் அருகே சமரச மையம் மூலம் கணவரை இழந்த பெண்ணுக்கு 10 பவுன் நகை மற்றும் ரூ.15½ லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.
    பாபநாசம்:

    பாபநாசம் அருகே சரபோஜி ராஜபுரம் கிராமத்தில் வசித்து வந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு கோகுல் என்ற மகன் உள்ளார்.

    கிருஷ்ணசாமி உடல் நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். கணவரை இழந்த செல்வி மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் வாழ்ந்து வந்தார். பின்னர் செல்வி பாபநாசம் நீதிமன்றத்தில் இயங்கி வருகின்ற சமரச மையத்தில் மனு கொடுத்துள்ளார்.

    இம்மனுவினை விசாரித்த பாபநாசம் வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவரும், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவருமான ராஜசேகர் செல்வியின் மாமியார் கண்ணம்மாளை அழைத்து பேசி விசாரணை மூலம் உடனடி தீர்வு காணப்பட்டு சமரசம் செய்து வைத்தார்.

    இந்நிலையில் கண்ணம்மாளிடம் இருந்து 10 பவுன் நகையும், ரூ.15 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கமும் பெற்று செல்வியிடம் நீதிபதி வழங்கினார். இதில் அரசு வழக்கறிஞர் சரவணன், பாபநாசம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பாஸ்கரன், பாபநாசம் வட்ட, சட்ட பணிகள் குழுவின் தன்னார்வ சட்ட பணியாளர்கள் ராஜேந்திரன், தனசேகரன் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர். #tamilnews
    நத்தம் அருகே அரசு பஸ் டிரைவர் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    நத்தம்:

    நத்தம் அண்ணாநகரை சேந்தவர் வேலவன் (வயது45). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். தைப்பொங்கலை முன்னிட்டு தனது குடும்பத்துடன் குலதெய்வ சாமி கும்பிட சென்று விட்டார். இதனை நோட்டமிட்டு மர்மநபர்கள் இவரது வீட்டிற்குள் புகுந்தனர்.

    வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைக்க முயன்றனர். ஆனால் அது முடியாமல் போகவே மாடியில் உள்ள அறைக்கு சென்றனர். அங்குள்ள பீரோவை உடைத்து அதில் இருந்து 17½ பவுன் தங்க நகை மற்றும் ரூ.1½ லட்சம் ரொக்க பணத்தை கொள்ளையடித்தனர்.

    மேலும் அதே பகுதியில் உள்ள புகழேந்தி என்பவரது வீட்டிற்குள்ளும் நுழைந்து கொள்ளையடிக்க முயன்றனர். பீரோ லாக்கரை தூக்கி சென்று வெளியில் வைத்து உடைத்து பார்த்ததில் அதில் எதுவும் சிக்காததால் ஏமாற்றம் அடைந்தனர்.

    ஊருக்கு சென்று திரும்பிய வேலவன் தனது மாடி வீட்டின் பீரோ உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் நகை, பணம் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். டி.எஸ்.பி. வினோத் தலைமையில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மோப்பநாய் லிண்டா வரவழைக்கப்பட்டது. மேலும் தடையவியல் நிபுணர்கள் வந்து முக்கிய தடயங்களை சேகரித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ராசிபுரத்தில் தலைமை ஆசிரியர் வீட்டில் 6 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் திருட்டு போனது தொடர்பாக ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு நேரில் விசாரணை நடத்தினார்.
    ராசிபுரம்:

    ராசிபுரம் டவுன் வி.நகர்-7 பகுதியைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம். இவரது மகன் ஸ்ரீதரன் (வயது 56). இவர் புதுச்சத்திரம் அருகேயுள்ள காரைக் குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி சாந்தி. இவர் வெண்ணந்தூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகள் கோகிலஸ்ரீ. இவர் எம்.பி.பி.எஸ். முடித்துள்ளார். இவர் தற்போது தேர்வுக்காக சென்னையில் தங்கி படித்து வருகிறார்.

    தலைமை ஆசிரியர் ஸ்ரீதரன் மற்றும் அவரது மனைவி இருவரும் மகளை பார்த்து வர கடந்த 5-ந் தேதி சென்னைக்கு சென்றனர். நேற்று காலையில் அவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்தனர். அவர்கள் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றனர். அப்போது பீரோ திறந்த நிலையில் கிடந்ததை கண்டனர். பொருட்கள் சிதறிக்கிடந்தன. சுற்றுச்சுவர் வழியாக வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் செயின், 1 பவுன் பிரேஸ்லெட், 2 பவுன் 2 மோதிரங்கள், ரொக்கம் ரூ.30 ஆயிரம் ஆகியவற்றை திருடிச்சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். திருடர்கள் கவரிங் நகைகளை அப்படியே போட்டுவிட்டுச் சென்றுள்ளனர். மர்ம நபர்கள் நகைகள் திருடிய பீரோவின் அருகில் திறந்த நிலையில் இருந்த இன்னொரு பீரோவில் வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது.

    இது பற்றி தகவல் அறிந்த ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன், சப்-இன்ஸ்பெக்டர் பூபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். தலைமை ஆசிரியர் வீட்டில் திருடிய மர்ம நபர்களை ராசிபுரம் போலீசார் தேடி வருகின்றனர்.

    தலைமை ஆசிரியரின் வீடு குடியிருப்பு பகுதிகள் நிறைந்துள்ள இடம். ஆனாலும் திருடர்கள் சாமர்த்தியமாக உள்ளே புகுந்து நகைகளை திருடிச்சென்று உள்ளனர். வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படாததால் திருடர்களை அடையாளம் காண முடியவில்லை. இது போன்ற திருட்டு சம்பவங்களை தடுக்க பொதுமக்களிடம் போலீசார் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி வருகின்றனர். வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும், வெளியூர் செல்லும்போது போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் போன்ற கருத்துக்களை போலீசார் தெரிவித்தும் பொதுமக்களின் அஜாக்கிரதையால் இது போன்ற திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த திருட்டு சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    ×