search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 122727"

    • லோடுடன் வருகை தந்த லாரிகள் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தன.
    • 3 லாரிகளில் இருந்து 6 பேட்டரிகள் திருடப்பட்டு இருந்தது.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டையை அடுத்த பொன்னவராயன் கோட்டை பகுதியில் நெல் அரவை மில் உள்ளது.

    இந்த மில்லில் அரைப்பதற்காக லோடுடன் வருகை தந்த லாரிகள் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தன.

    அவ்வாறு நிறுத்தப்பட்டி ருந்த மூன்று லாரிகளில் இருந்து தலா இரண்டு பேட்டரிகள் வீதம் ஆறு பேட்டரிகள் திருடப்பட்டு இருந்தது.

    இது குறித்து பட்டுக்கோட்டை பகுதியின் லாரி உரிமையாளர் சங்க தலைவர் போஜராஜன், நகர போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பேட்டரிகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    ஓசூர் டோல்கேட் அருகே எரிசாராயம் கடத்தி வந்த 2 பேரை கைது செய்த போலீசார் ரூ.12 லட்சம் மதிப்புள்ள எரிசாராயத்தையும், ரூ.10 லட்சம் மதிப்புள்ள லாரியையும் பறிமுதல் செய்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டோல்கேட் அருகே உள்ள பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக லாரி ஒன்று வேகமாக வந்தது. அந்த லாரியை மதுவிலக்கு பிரிவு போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது லாரியில் 530 கேனில் எரிசாராயம் கடத்தப்பட்டது தெரியவந்தது.

    அந்த லாரியை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் குட்டறைப்பட்டு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (வயது 41) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் திண்டிவனம் வேலகம்பட்டி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரும் உடன் வந்திருந்தார்.

    2 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் டெல்லியில் இருந்து வேலூருக்கு 530 கேன்களில் எரிசாராயம் கடத்தி வந்ததை ஒப்பு கொண்டனர். ஒரு கேனில் 35 லிட்டர் வீதம் 530 கேன்களில் 18 ஆயிரத்து 150 லிட்டர் கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதன் மதிப்பு ரூ.12 லட்சம் இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

    அவர்களிடம் இருந்து ரூ.12 லட்சம் மதிப்புள்ள எரிசாராயத்தையும், ரூ.10 லட்சம் மதிப்புள்ள லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். #tamilnews
    நாமக்கல்லில் காலை நேரத்தில் நகருக்குள் இயக்கிய சரக்கு லாரியை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    நாமக்கல்:

    நாமக்கல் ரெயில் நிலையத்திற்கு சரக்கு ரெயில்களில் வரும் பொருட்கள் லாரிகள் மூலம் ராமாபுரம்புதூர் வழியாக முதலைப்பட்டி புறவழிச்சாலையை அடைந்து, அங்கிருந்து தேவையான இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

    இந்த லாரிகள் காலை, மாலை நேரத்தில் செல்வதால் பள்ளி, கல்லூரி வாகனங்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றன. மேலும் விபத்து அபாயமும் ஏற்படுகிறது. அவற்றை கருத்தில் கொண்டு காலை 10 மணிக்கு மேல் மாலை 4 மணிக்குள் மட்டுமே ராமாபுரம்புதூர் வழியாக லாரிகளை இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்து உள்ளனர். அதற்கு லாரி உரிமையாளர்களும் ஒப்பு கொண்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று காலை 9.30 மணிக்கு சரக்கு ஏற்றிய லாரிகள் ராமாபுரம்புதூர் வழியாக சென்றன. அதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் ஒரு லாரியை சிறைபிடித்தனர். ஒப்புகொண்டபடி இல்லாமல் தொடர்ந்து லாரிகளை இயக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த சிறைபிடிப்பு போராட்டம் நடந்தது.

    இதைத்தொடர்ந்து லாரி டிரைவர் காலை, மாலை வேளையில் குறிப்பிட்ட நேரத்தில் இயக்குவது இல்லை என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து சரக்கு லாரி அங்கிருந்து புறப்பட்டு சென்றது. சரக்கு ஏற்றிச்சென்ற லாரியை பொதுமக்கள் சிறைபிடித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    திம்பம் மலைப்பாதையில் கடும் பனிமூட்டத்தால் விபத்துக்குள்ளான லாரி அந்தரத்தில் தொங்கியபடி நின்றது. இதனால் 12 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ஈரோடு :

    கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள ஒரு தொழிற்சாலைக்கு கிரானைட் கற்கள் ஏற்றிய லாரி ஒன்று வந்துகொண்டு இருந்தது. இந்த லாரியை பெரியசாமி (வயது 40) என்பவர் ஓட்டினார். இந்த லாரி நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் உள்ள 9-வது கொண்டை ஊசி வளைவில் வந்துகொண்டு இருந்தது.

    அப்போது திம்பம் மலைப்பாதையில் கடும் பனிமூட்டம் நிலவியதால் லாரி வளைவில் திரும்பும் போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு பள்ளத்தில் பாய்ந்தது.

    பள்ளத்தில் பாய்ந்த லாரி அங்கிருந்த ஒரு மரத்தில் மோதி அந்தரத்தில் தொங்கியபடி நின்றது. விபத்து நடந்தபோது டிரைவர் வெளியே குதித்ததால் உயிர் தப்பினார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். மரத்தில் மோதாமல் லாரி பாய்ந்திருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும். விபத்து ஏற்பட்டதும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், படுகாயம் அடைந்த பெரியசாமியை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    லாரியின் பின்பகுதி நடுரோடு வரை தூக்கியபடி இருந்ததால், தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த வாகனங்கள் அனைத்தும் மேற்கொண்டு செல்ல முடியாமல் வரிசையாக அணிவகுத்தபடி விடிய-விடிய நின்றன. மேற்கொண்டு எந்த வாகனமும் திம்பம் மலைப்பாதைக்கு வராமல் ஆசனூர் மற்றும் பண்ணாரி சோதனைச்சாவடியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டன.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் சத்தியமங்கலத்தில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு பள்ளத்தில் பாய்ந்து நின்ற லாரி மீட்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் 12 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதன்பின்னரே போக்குவரத்து நிலமை சீராகி வாகனங்கள் புறப்பட்டு சென்றன.

    இதுகுறித்து அந்த வழியாக கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் சென்ற பயணிகள் கூறும்போது, ‘27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட திம்பம் மலைப்பாதையில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கனரக வாகனங்களால் தான் விபத்து ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், உணவு கிடைக்காமல் இரவு முழுவதும் கடும் பனிப்பொழிவில் மிகவும் அவதிப்பட்டோம். எனவே அதிகாரிகள் கனரக வாகனங்களை திம்பம் மலைப்பாதை வழியாக செல்ல அனுமதிக்கக்கூடாது’ என்றார்கள்.
    சேத்துப்பட்டில் லாரி மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 15 பயணிகள் படுகாயமடைந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேத்துப்பட்டு:

    பெங்களூருவில் இருந்து செய்யாறுக்கு இன்று காலை பயணிகளுடன் அரசு பஸ் வந்துக் கொண்டிருந்தது. செஞ்சி சாலையில் சேத்துப்பட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அருகே வந்தபோது சாலையோரமாக நின்றிருந்த லாரியின் பின்னால் அரசு பஸ் பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் பஸ்சின் முகப்பு கண்ணாடி உடைந்து சுக்கு நூறாக சிதறியது. டிரைவர் ராமு, கண்டக்டர் சிவலிங்கம் மற்றும் பயணிகள் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சேத்துப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
    மெக்சிகோவில் பிணவறைகளில் உடல்களை பாதுகாக்க போதிய இடவசதி இல்லாதா காரணத்தால் லாரியில் 273 பிணங்கள் வைக்கப்பட்டுள்ளன.
    மெக்சிகன் சிட்டி:

    மெக்சிகோவில் போதை பொருள் கடத்தல் தொழில் பெருமளவில் நடக்கிறது. அதனால் ஏற்படும் தொழில் போட்டியில் போதை பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே அடிக்கடி மோதல் நடைபெறுகிறது. அதில் பலர் கொல்லப்படுகின்றனர்.

    அவர்களின் உடல்கள் பிணவறையில் வைத்து பாதுகாக்கப்படுகின்றன. ஆனால் மேற்கு ஜாலிஸ்கோ மாகாணத்தில் உள்ள பிணவறைகளில் உடல்களை பாதுகாக்க போதிய இடவசதி இல்லை. இதனால் அவை குளிரூட்டப்பட்ட கண்டெய்னருடன் கூடிய ஒரு லாரியில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    மேற்கு ஜாலிஸ்கோ மாகாண தலைநகர் குயாடா லஜராவிலொரு லாரியில் ஒரு கண்டெய்னரில் 273 பிணங்கள் வைக்கப்பட்டுள்ளன. அந்த லாரி அங்குள்ள பட்டறை அருகே 2 வாரங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்து துர்நாற்றத்துடன் பிணவாடை வீசியதால் குடியிருப்பு வாசி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த லாரி வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது.

    அங்கும் குடியிருப்பு வாசிகள் எதிர்த்ததுடன் போராட்டமும் நடத்தினார்கள். அதன் காரணமாக பிணங்களுடன் லாரிகள் சுற்றி சுற்றி வருகிறது. மெக்சிகோ சட்டப்படி குற்ற வழக்குகளில் கொல்லப்பட்டவர்களின் உடல்களை உடனே எரிக்க முடியாது. ஆகவே வழக்கு முடியும் வரை உடல்கள் பாதுகாப்புடன் வைக்கப்படுகின்றன. #tamilnews
    மகாராஷ்டிரா மாநிலம் நாஷிக் மாவட்டத்தில் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பெண்கள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Accident #Maharashtra
    மும்பை:

    மகாராஷ்டிராவின் நந்துர்பார் எனும் பகுதியில் இருந்து நாஷிக் பகுதிக்கு பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து, எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. மிகவும் கோரமான இந்த விபத்தில் பேருந்தின் ஒரு பகுதி முழுவதும் தகர்த்து எறியப்பட்டது.

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், படுகாயம் அடைந்த 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். #Accident #Maharashtra
    பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாக கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. #Petrol #Diesel

    நாமக்கல்:

    பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாக கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக நாமக்கல்லில் மாநில மணல் லாரி உரிமையாளர் சங்கத்தலைவர் செல்ல ராசாமணி கூறியதாவது:-

    டீசல் விலை உயர்வு வரலாறு காணாத வகையில் உள்ளது. டீசல் விலை தொடர்ந்து விலை உயர்ந்து வருவதால் விலைவாசி விலை கடுமையாக உயரும். லாரி உதிரி பாகங்கள் விலை உயர்வு, டயர் விலை உயர்வு, காப்பீட்டு பிரீமியம் உயர்வால் லாரி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் விலைவாசி விலை கடுமையாக உயரும் நிலை உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ந் தேதியில் இருந்து 2018 ஆகஸ்ட் 31-ந் தேதி வரை ஒரு வருடத்தில் டீசல் லிட்டருக்கு ரூ.13.90 உயர்ந்துள்ளது. கடந்த 5 நாட்களில் 89 பைசா உயர்ந்துள்ளது. ஒரு மாதத்தில் ரூ 2.82 உயர்ந்துள்ளது.

    மேலும் டீசலை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வர வேண்டும். அப்படி கொண்டு வந்தால் லிட்டருக்கு 24 ரூபாய் குறையும். மாநில அரசு இதற்கு ஏற்க மறுப்பதாக மத்திய அரசு கூறுகிறது. நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மாநில அரசு எதிர்த்தும் அதனை கொண்டு வந்த மத்திய அரசு டீசல் விலையை குறைக்க மாநில அரசை குற்றம்சாட்டி மக்களை ஏமாற்றப்பார்க்கிறது. இந்த டீசல் விலை உயர்வை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நேபாள நாட்டில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Nepal #BusAccident
    காத்மாண்டு:

    நேபாள நாட்டின் சித்வான் மாவட்டத்தில் இன்று மதியம் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்தும், எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை விரைந்து செய்தனர்.

    பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களில் 2 பேர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    மேலும் இந்த விபத்தில் இந்தியர் உட்பட 17 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

    இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Nepal #BusAccident
    வேலை நிறுத்த போராட்டம் கார ணமாக குமரி மாவட் டத்தில் நேற்று 3-வது நாளாக லாரிகள் ஓட வில்லை. இதனால் ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன. #LorryStrick
    நாகர்கோவில்:

    அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் கடந்த 20-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் சுங்கச் சாவ டிகளை அகற்ற வேண்டும். அதற்கு பதிலாக ஆண்டுக்கு ஒருமுறை சுங்க கட்டணம் வசூலிக்கும் முறையை அமல் படுத்த வேண்டும், பெட் ரோல்-டீசல் விலை உயர்வை கண்டிப்பதோடு, அதை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வந்து விலையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டம் நடை பெற்று வருகிறது.

    இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் மற்றும் பல்வேறு மாவட் டங்களை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் சரக்கு புக்கிங் அலுவலக ஏஜெண்டுகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் லாரிகள் ஓடவில்லை.

    குமரி மாவட்ட லாரி உரி மையாளர்கள் சங்கமும் ஆத ரவு தெரிவித்து போராட் டத்தில் கலந்து கொண்டுள்ளது. இதனால் குமரி மாவட்டத்தில் லாரிகள் ஓடவில்லை. இந்த வேலை நிறுத்த போராட்டம் நேற்று 3-வது நாளாக தொடர்ந்தது. வெளி மாநி லங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து லாரிகளும் நாகர் கோவில் அனாதை மடம் மைதானம், கோட்டார் உள் ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள லாரி நிறுத்தங்களிலும், லாரி உரிமையாளர்களின் சொந்த இடங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

    குமரி மாவட்டத்தில் இருந்து தேங்காய், ரப்பர் ஷீட்கள், ரப்பர் பால், ரப்பர் மர தடிகள், தும்பு, உப்பு போன்ற பொருட்கள் அதிகளவில் வெளி மாநிலங் களுக்கு ஏற்றுமதியாகின்றன. ஆனால் தற்போது வேலை நிறுத்த போராட்டம் காரண மாக இந்த பொருட்களை உரிய இடத்துக்கு கொண்டு போய் சேர்க்க முடியவில்லை. இதனால் பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன. லாரி புக்கிங் ஏஜெண்டுகளும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால் புக்கிங் அலுவலகத்தில் சரக்கு களுக்கான புக்கிங் எதுவும் நடைபெறவில்லை.

    அதே சமயத்தில் வேலை நிறுத்தத்தால் மக்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்கும் விதமாக உள் மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங் களுக்கு அத்தியாவசிய பொ ருட்களான பால், காய்கறி, பழ வகைகள், மளிகை பொருட்கள், பெட்ரோல்-டீசல் உள்ளிட் டவற்றை ஏற்றிச் செல்லும் லாரிகள் வழக்கம் போல இயங்குகின்றன.

    இதுதொடர்பாக குமரி மாவட்ட லாரி உரிமையா ளர்கள் சங்க செயலாளர் மனோகரனிடம் கேட்ட போது, ‘குமரி மாவட்டத்தில் எங்களது சங்கத்தை சேர்ந்த 1,500 லாரிகள் 3-வது நாளாக ஓடவில்லை. இதனால் குமரி மாவட்டத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லும் பொருட்கள் தேக்கம் அடைந்திருக்கின்றன. அந்த வகையில் ரூ.2 கோடி மதிப் பிலான பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன‘ என்றார்.  #LorryStrick
    திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலை நிறுத்தம் காரணமாக 5 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை. இதனால் ரூ.5 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
    திருவண்ணாமலை:

    18 சதவீத வரிவிதிப்புடன் பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர வேண்டும். நாடு முழுவதும் பெட்ரோல், டீசலுக்கு ஒரே சீரான விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் 20-ந் தேதி முதல் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.

    திருவண்ணாமலை மாவட்டத்திலும் இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதனால் மணலூர்பேட்டை சாலை, அவலூர்பேட்டை சாலை போன்ற இடங்களில் ஏராளமான லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

    இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட மண்பாடி லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஞானமூர்த்தி கூறுகையில், நாடு முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருகிறது.

    எங்கள் சங்கம் சார்பில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 500 மண்பாடி லாரிகள் ஓடவில்லை. மற்ற லாரிகள் என எடுத்து கொண்டால் திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் சுமார் 5 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை.

    லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தினால் மாவட்டம் முழுவதும் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.3 கோடி முதல் ரூ.5 கோடிக்கு மேல் வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.’ என்றார். 
    பெரம்பலூரில் லாரி, டிராக்டர்களில் ரூ.1¼ லட்சம் மதிப்பிலான 12 பேட்டரிகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மினி லாரி ஓட்டுனர் உரிமையாளர்கள் சங்கத்தின் மினி லாரிகள் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பாலக்கரை ஸ்டாண்டில் நிறுத்தப்படுவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் டிரைவர்கள் தங்களது லாரிகளை பாலக்கரை ஸ்டாண்டில் நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றனர். பின்னர் அவர்கள் நேற்று காலையில் வந்து பார்த்த போது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த 7 லாரிகளில் பேட்டரிகள் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மர்ம நபர்கள் ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டிருந்த லாரிகளின் பேட்டரிகளை கழற்றி திருடி சென்றது தெரியவந்தது. இதில் ரஞ்சித்குமார் என்பவரின் லாரியில் பேட்டரியை திருடிய மர்ம நபர்கள் டீசல் டேங்கை திறந்து, அதில் இருந்த 200 லிட்டர் டீசலையும் திருடி சென்றுள்ளனர்.

    இதேபோல் பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள ஆவின் பால்பண்ணையில் ஒப்பந்த முறையில் இயக்கப்படும் 2 லாரிகளில் பேட்டரி மற்றும் டீசலையும், ஒரு லாரியில் பேட்டரியையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர். பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் பாஸ்கர் என்பவர் நடத்தி வரும் டிராக்டர் பழுது பார்க்கும் பட்டறையில் நின்று கொண்டிருந்த 2 டிராக்டர்களின் பேட்டரி களையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

    இது சம்பந்தமாக டிராக்டர், லாரிகளின் உரிமையாளர்கள் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும், பெரம்பலூர் போலீஸ் நிலையத்திலும் புகார் மனு கொடுத்தனர். அதில், லாரிகளில் பேட்டரி, டீசலையும், டிராக்டர்களில் பேட்டரியையும் திருடிய மர்ம நபர்களை உடனடியாக கண்டுபிடித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. ஒரே நாளில் 10 லாரிகள், 2 டிராக்டர்களின் பேட்டரிகள் திருடப்பட்டுள்ளதால், அதில் ஈடுபட்ட மர்ம நபர்கள் ஒரே கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும், அவர்கள் திட்டமிட்டு இந்த திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி அந்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். திருடப்பட்ட 12 பேட்டரிகளின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் இருக்கும் என்று டிராக்டர், லாரிகளின் உரிமையாளர்கள் தெரிவித்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரம்பலூர் நான்கு ரோடு அருகே நிறுத்தப்பட்டிருந்த லாரிகளில் பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடி சென்றது குறிப்பிடத்தக்கது. 
    ×