search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 130486"

    • வாடிவாசல் வழியாக முதலில் கோவில் காளை அவிழ்த்துவிடப்பட்டது.
    • காளை ஒன்று அருகில் இருந்த மின் கம்பத்தில் இணைக்கப்பட்ட இழுவை கம்பியில் மோதியது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அரசு விதிகளின்படி நடைபெற்ற இப்போட்டியில் புதுக்கோட்டை மட்டுமின்றி தஞ்சை, திருச்சி மற்றும் சுற்றுவட்டாரங்களில் இருந்து 800 காளைகள் பங்கேற்றன. இதனை அடக்குவதற்கு 300 வீரர்கள் களத்தில் குதித்தனர்.

    வாடிவாசல் வழியாக முதலில் கோவில் காளை அவிழ்த்துவிடப்பட்டது.

    இதனை தொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்துவிடப்பட்டது. இதில் சில காளைகளை வீரர்கள் மடக்கி பிடித்தனர். சில காளைகள் வீரர்களுக்கு போக்குகாட்டிவிட்டு அங்கிருந்து வெளியே சென்றது.

    அப்படி சென்ற காளை ஒன்று அருகில் இருந்த மின் கம்பத்தில் இணைக்கப்பட்ட இழுவை கம்பியில் மோதியது. அப்போது மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பொறிகள் பறந்து பார்வையாளர்கள் மீது விழுந்தது. இதில் 14 பேர் காயங்களுடன் துடித்தனர். அவர்களை அங்கிருந்த டாக்டர்கள் முதல் உதவி செய்து, ஆம்புலன்ஸ் உதவியுடன் அருகில் உள்ள ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஜல்லிக்கட்டு போட்டியில் நடைபெற்ற சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இருப்பினும் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    • எம்.சத்திரப்பட்டி ஜல்லிக்கட்டில் 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் கேலரி வசதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மூர்த்தி கூறினார்.
    • கார் முதல் பரிசு, புல்லட் பைக் 2-ம் பரிசு, ஹீரோ பைக் 3-ம் பரிசு என முறையே வழங்கப்படும்.

    மதுரை

    எம்.சத்திரப்பட்டியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு தொடர்பாக அமைச்சர் மூர்த்தி கூறியதாவது:-



    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக எம்.சத்திரப்பட்டி கிராமத்தில் நாளை (30ந்தேதி) மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது.

    இந்த ஜல்லிக்கட்டில் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் 1000க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்க உள்ளன. காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான பரிசோதனை என அரசு வழங்கியுள்ள அனைத்து வழிகாட்டு நடைமுறைகளும் முறையே கடைபிடிக்கப் படுகிறது.

    போட்டியில் வெற்றி பெறும் சிறந்த காளை, சிறந்த மாடுபிடி வீரர் என இரு பிரிவாக கார் முதல் பரிசு, புல்லட் பைக் 2-ம் பரிசு, ஹீரோ பைக் 3-ம் பரிசு என முறையே வழங்கப்படும். அதேபோல, சிறப்பாக விளையாடும் காளை மற்றும் மாடுபிடி வீரருக்கு 1கிராம் தங்க நாணயம், வண்ணத் தொலைக்காட்சி பெட்டி, சைக்கிள் உள்ளிட்ட சிறப்பு பரிசுகளும் வழங்கப்படும்.

    திருவிழா போல நடை பெறும் ஜல்லிக்கட்டு போட்டியை பொதுமக்கள் கண்டு களிக்க ஏதுவாக 10ஆயிரம் பேர் அமரும் வகையில் கேலரி அமைக்கப் பட்டுள்ளது.

    இந்த ஜல்லிக்கட்டு போட்டி எம். சத்திரப்பட்டி கிராமத்தில் நாளை (30-ந்தேதி) காலை தொடங்கி மாலை வரை நடைபெறும். பொதுமக்கள் அதிகளவில் வருகை தந்து இந்த ஜல்லிக் கட்டு போட்டியை கண்டு களித்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சத்திரப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டிக்கு முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.
    • இதில் அமைச்சர் மூர்த்தி பங்கேற்றார்.

    மதுரை

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை வடக்கு மாவட்டம் தி.மு.க. சார்பில் கபடி, மாட்டு வண்டி பந்தயம் என பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகிறது. வருகிற 30-ந் தேதி சத்திரப்பட்டியில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.

    இந்த போட்டியை அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கி நடத்துகிறார். இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்க ளிலும் இருந்து 500-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் பங்கேற்கின்றன அதேபோல் பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகள் பெற்ற மாடுபிடி வீரர்கள் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.

    இந்த போட்டியில் வெற்றி பெறும் ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் கார், புல்லட் பைக் மற்றும் கட்டில், பீரோ, மின்விசிறி, குத்துவிளக்கு, பாத்திரங்கள், கடிகாரம் என பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகிறது.

    ஜல்லிக்கட்டு போட்டியை காண பாதுகாப்பு வசதி செய்யப்பட்டு உள்ளது. வெயிலின் தாக்கம் அதிகம் இருக்காத வகையில் ஜல்லிக்கட்டு காளைகள் வரும் பாதையில் தகரத்தினால் ஆன மேற்கூரை அமைக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு முத்தாய்ப்பான நிகழ்ச்சியாக இன்று வாடிவாசல் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    இதில் மாவட்ட பொரு ளாளர் சோமசுந்தர பாண்டியன், அழகு பாண்டி,இலக்கிய அணி மாவட்ட செயலாளர் நேரு பாண்டி, வக்கீல் கலாநிதி, மேற்கு ஊராட்சி ஒன்றிய தலைவர் வீர ராகவன், சிறைச்செல்வன், மதிவாணன், பூமிநாதன், பிரேம்குமார், கௌரிசங்கர், ராஜேஷ் கண்ணன், முத்தையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முதல்-அமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு எம்.சத்திரப்பட்டியில் 30-ந்தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும்.
    • அமைச்சர் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

    மதுரை

    அமைச்சர் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியாக பல்வேறு இடங்களில் மாட்டுவண்டி பந்தயம், விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் மதுரை கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட எம்.சத்திரப்பட்டியில் வருகிற 30-ந்தேதி மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.

    இந்த போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் நாளை (25-ந்தேதி) சத்திரப்பட்டி வாடிவாசல் முன்பு நடைபெறும் முன்பதிவில் பங்கேற்கலாம்.

    மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கின்றன. இதில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பெரும்பாலான பணிகள் முடிவுற்று ஜல்லிக்கட்டு போட்டிக்கு இடம் தயார் நிலையில் உள்ளது.
    • போட்டி நடைபெறும் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

      பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே அலகுமலையில் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச் சங்கத்தின் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.இந்த ஆண்டு போட்டிக்கான ஏற்பாடுகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டு நாளை (செவ்வாய்க்கிழமை) போட்டி நடைபெறுகிறது. இதற்காக பார்வையாளர்கள் அமரும் கேலரி, வாடிவாசல், போட்டியில் கலந்து கொண்ட பின் மாடுகளை பிடிப்பதற்கான இடம், கால்நடைகளை மருத்துவ பரிசோதனை செய்வதற்கான இடம், பார்வையாளர்கள் வந்தால் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் பகுதி உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான பணிகள் முடிவுற்று ஜல்லிக்கட்டு போட்டிக்கு இடம் தயார் நிலையில் உள்ளது.

    போட்டி நடைபெறும் இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் மற்றும் மாவட்ட சப் -கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள 600 காளைகளும், 500 மாடு பிடி வீரர்களும் முன்பதிவு செய்துள்ளனர்.தொடர்ந்து இன்று இறுதிக்கட்ட பணிகள் முடிவுற்று போட்டிக்கான அனைத்து பணிகளையும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். மேலும் போட்டி நடைபெறும் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • திருமங்கலம் அருகே உள்ள கரடிக்கல் கிராமத்தில் சுந்தராஜபெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு நடந்தது.
    • சுற்றுக்கு 50 மாடுபிடி வீரர்கள் வீதம் களம் கண்டனர். சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிபோட்டு அடக்கினர்.

    திருமங்கலம்:

    திருமங்கலம் அருகே உள்ள கரடிக்கல் கிராமத்தில் சுந்தராஜபெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் பங்கேற்க 750 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் அனுமதிக்கப்பட்டனர்.

    மாடுபிடி வீரர்களுக்காக கரடிக்கல் அரசு உயர்நிலைப் பள்ளியில் 5 மருத்துவர்கள், 25பேர் கொண்ட மருத்துவக் குழு மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது. மாடுபிடி வீரர்கள் போதை வஸ்து சாப்பிட்டுள்ளனரா? அவர்களது உடலில் காயம் உள்ளதா? என்பது குறித்து பரிசோதனை செய்த பின்னரே போட்டியில் பங்கேற்றனர்.

    ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். தொடக்கவிழா நிகழ்ச்சியில் தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    போட்டிகள் மொத்தம் 10 சுற்றுகளாக நடைபெற்றது. சுற்றுக்கு 50 மாடுபிடி வீரர்கள் வீதம் களம் கண்டனர். சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிபோட்டு அடக்கினர்.

    போட்டியில் பங்கேற்ற அனைத்து காளைகளுக்கும் கட்டில், பீரோ, அண்டா, குத்துவிளக்கு, சைக்கிள், தங்க காசு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

    ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் காயமடைந்தால், அவர்களை மருத்துவ மனைக்கு கொண்டுசெல்ல 5 ஆம்புலன்சுகள் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டி ருந்தது. 2 கால்நடை அவசர ஊர்திகளும் தயாராக இருந்தன.

    ஜல்லிக்கட்டு நடந்த பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவ பிரசாத் மேற்பார்வையில் 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு முடிவு செய்ய வேண்டும்.
    • 450 மாடுபிடி வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்திருந்தனர்.

    வீரபாண்டி :

    பொங்கலூர் அருகே அலகுமலையில் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச் சங்கத்தின் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏற்பாடுகள் நடைபெற்றது. ஆனால் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தக் கூடாது என அலகுமலை ஊராட்சி மன்ற தலைவர் தூயமணி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தது.

    அதன்படி கலெக்டர் மற்றும் சப்- கலெக்டர் ஆகியோர் ஆய்வின் முடிவில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஏப்ரல் மாதம் 23-ந் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து ஜல்லிக்கட்டி போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. பார்வையாளர்கள் அமர்வதற்கான கேலரி, வாடிவாசல் மற்றும் போட்டியில் கலந்து கொண்டபின் செல்லும் மாடுகளை பிடிப்பதற்கான இடம் உள்பட பல்வேறு பணிகள் நடைபெற்று வந்தது. நாளை 23-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதையொட்டி மாடு பிடி வீரர்கள் முன்பதிவு தீவிரமாக நடைபெற்றது. இதில் சுமார் 450 மாடுபிடி வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்திருந்தனர்.இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகை வருவதையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிக்கு பாதுகாப்புக்கான போலீசார் பற்றாக்குறை ஏற்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வைத்த கோரிக்கையை ஏற்று மாவட்ட கலெக்டர் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச் சங்கத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில் பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களினால் 23-ந் தேதி நடத்தப்படவிருந்த ஜல்லிக்கட்டு போட்டியை வேறு ஒரு தேதியில் நடத்துவதற்கு ஏதுவாக மாற்று தேதி மற்றும் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு அதில் தெரிவித்திருந்தார்.

    இதனைத் தொடர்ந்து 23-ந் தேதி நடைபெறுவதாக இருந்த ஜல்லிக்கட்டு போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 25-ந் தேதி காலை 7 மணிக்கு நடைபெறும் என அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கத்தின் தலைவர் லீடர் டேப் பழனிசாமி தெரிவித்தார். போட்டியினை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மற்றும் ஆதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள். நிகழ்ச்சிக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்குகிறார். போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் அல–கு–மலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச் சங்கத்தின் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.

    • குமாரபாளையத்தில் நாளை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற உள்ளது.
    • இதற்காக, போட்டி நடை பெறும் மைதானத்தில் வாடிவாசல் அமைக்கப்பட்டு இருப்பதை நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், எஸ்.பி. கலைச்செல்வன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற உள்ளது. இதற்காக, போட்டி நடை பெறும் மைதானத்தில் வாடிவாசல் அமைக்கப் பட்டு இருப்பதை நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், எஸ்.பி. கலைச்செல்வன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ஜல்லிக்கட்டு வீரர்கள் மைதானத்துக்குள் வருவதற்கு தனியாக பாதை அமைக்கப்பட்டு உள்ளதை யும், ஜல்லிக்கட்டு மைதா னத்தில் பார்வையாளர்கள் நுழையாமல் தடுக்கும் வகையில் பெரிய அளவில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளதை யும், காளைகள் வெளி யேறும் இடத்தில் மைதா னத்தை சுற்றிலும் இரண்ட டுக்கு தடுப்புகள் அமைக்கப் பட்டு, காளைகளை உரிமை யாளர்கள் எளிதில் பிடிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதையும் ஆய்வு செய்தனர்.

    மேலும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு வரும் காளைகளை ஆய்வு செய்ய கால்நடை பராமரிப்பு துறையினருக்கு தனியாக பந்தல் அமைத்து இடம் ஒதுக்கப்பட்டு இருப்பதை யும், மருத்துவ குழுவினர் அவசர சிகிச்சை அளிக்க தனியாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதை யும், ஜல்லிக்கட்டு காளைகள் வரும் பாதையில், பாதை முழுவதும் பந்தல் அமைக்கப்பட்டுவரும் பணி யினையும், ஆம்புலன்ஸ் வருவதற்காக தனியாக வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தையும், பார்வையாளர்கள் அமருவதற்கும், தனியாக இடம் ஒதுக்கி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதையும் அவர்கள் பார்வை யிட்டார்கள்.

    ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் வீரர்களுக்கு பாது காப்பாக, மைதானத்தில் தேங்காய் நார் சரியான முறையில் பரப்பப்பட வேண்டும் என்றும், தேவையான ஒலிபெருக்கி அமைப்புகள் ஏற்பாடு செய்யவும், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அரசு அறி வுறுத்தியுள்ள விதிமுறை களின்படி தேவையான ஏற்பாடுகளை செய்து, மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாட்டாளர்களிடம் அவர்கள் அறிவுறுத்தி னார்கள்.

    நிகழ்ச்சியில், திருச்செங் கோடு கோட்டாட்சியர் கவுசல்யா, கால்நடை பராம ரிப்புத்துறை இணை இயக்கு நர் பாஸ்கர் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலு வலர்கள் கலந்து கொண்டனர்.

    • விராலிமலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தகால் நடும் விழா நடைபெற்றது
    • முன்னாள் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் பங்கேற்பு

    விராலிமலை,

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வெளியம்பூர் குளம் திடலில் வரும் 25-ந் தேதி காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. அதனைமுன்னிட்டு விழாவிற்கான முகூர்த்தகால் நடப்பட்டு போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.விராலிமலை மெய்க்கண்ணுடையால் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி வருகிற 25-ந் தேதி நடத்துவதற்கு ஊர் முக்கியஸ்தர்கள், விழா கமிட்டியினர் சார்பில் முடிவு செய்யப்பட்டு போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்குவதற்கு விழா குழு சார்பில் நேற்று முகூர்த்த கால் நடப்பட்டது.

    முகூர்த்த கால் நடும் விழாவில் விராலிமலை சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான டாக்டர் சி. விஜயபாஸ்கர், ஆவின் சேர்மன் பழனியாண்டி, விராலிமலை தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் விராலூர் அய்யப்பன், மேற்கு மாவட்ட கவுன்சிலர் சிவசாமி, ஊர் நாட்டாமை மணி, ஜல்லிக்கட்டு தலைவர் கார்த்திகேயன், கூட்டுறவு சங்கத்தலைவர் அய்யப்பன், ஊராட்சி மன்ற தலைவர் ரவி, துணை தலைவர் தீபன் சக்கரவர்த்தி, வெல்கம் மோகன், தி.மு.க. நகரச் செயலாளர் சண்முகசுந்தரம், அ.தி.மு.க. நகர செயலாளர் செந்தில், முரளிதரன், ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன், மாமுண்டி, கௌதமன், உள்ளிட்ட விழா கமிட்டியினர் பங்கேற்று விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    இதில் கலந்து கொள்ளும் காளைகள் மற்றும் வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது மேலும் சிறந்த காளைகள், மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

    • வாடிவாசலில் இருந்து துள்ளி குதித்து வந்த காளைகளை வீரர்கள் போட்டிப்போட்டுக் கொண்டு திமிலை பிடித்து அடக்க முயன்றனர்.
    • சில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்கியது. பல காளைகள் வீரர்களுக்கு போக்குகாட்டி சென்றன.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் எழுமலை அருகே உள்ள எஸ்.பாப்பிநாயக்கன்பட்டியில் காளியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. விழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதற்காக கோவில் முன்பு திடல் அமைக்கப்பட்டது.

    இன்று காலை 8 மணி அளவில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இதில் 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டி தொடங்குவதற்கு முன்பு அதிகாரிகள் முன்னிலையில் வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    அதனை தொடர்ந்து வாடிவாசலில் இருந்து கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை யாரும் பிடிக்கவில்லை.

    அதன்பின் காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து துள்ளி குதித்து வந்த காளைகளை வீரர்கள் போட்டிப்போட்டுக் கொண்டு திமிலை பிடித்து அடக்க முயன்றனர். சில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்கியது. பல காளைகள் வீரர்களுக்கு போக்குகாட்டி சென்றன.

    ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் பீரோ, சைக்கிள், மிக்சி, மின்விசிறி, பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

    ஜல்லிக்கட்டில் 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் உசிலம்பட்டி டி.எஸ்.பி. நல்லு தலைமையில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

    • அலகுமலை ஊராட்சியில் கடந்த சில வருடங்களாக ஜல்லிகட்டு விழாவானது நடைபெற்றது.
    • ஜல்லிக்கட்டுவிழா நடைபெற வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    அலகுமலை ஊராட்சி பகுதி பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட எஸ்.பி.யிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் தெற்கு வட்டம், அலகுமலை ஊராட்சியில் கடந்த சில வருடங்களாக ஜல்லிகட்டு விழாவானது நடைபெற்றது. இதனால் நாங்கள் பட்ட கஷ்டங்களை மனுவாகஎழுதி மாவட்ட கலெக்டரிடம் கொடுத்து இருந்தோம்.

    ஆனால்25.3.2023 அன்று அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடக்கும் என்றுதமிழ்நாடு செய்திதுறைஅமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியுள்ளார். 22.3.2023 அன்றுநடைபெற்ற கிராமசபா கூட்டத்தில் அலகுமலை ஊராட்சியிலும் அலகுமலையை சுற்றிலும் குறிப்பிட்டதூரம் ஜல்லிக்கட்டுவிழா நடைபெற வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றப்ப ட்டுள்ளது. ஆனால் ஜல்லிக்கட்டு போட்டி நடத்திட வேலை செய்து வருகிறார்கள். இதனால் அலகுமலைமக்கள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலைஉருவாகி உள்ளது. வரும் நாட்களில் மேலும் மக்களிடம் பதட்ட சூழ்நிலைஉருவாகும் சூழல் உள்ளது. எனவே தாங்கள் உடனடியாக தலையிட்டு ஜல்லிகட்டு விழா தொடர்பான நடவடிக்கை யை நிறுத்தி ஜல்லிக்கட்டு போட்டிக்கு உண்டான பொருட்களை அப்புறப்ப டுத்த வேண்டும். மேலும் அலகுமலை ஊராட்சி கிராமசபா கூட்டத்தில் நிறைவேற்ற ப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும் என தெரிவித்து ள்ளனர். மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூரில்இன்று நடைபெற்ற விவசாய குறைதீர்க்கும் கூட்டத்திலும் மனு அளிக்கப்பட்டது. 

    • ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி பந்தயம் உள்ளிட்ட போட்டிகளை அங்கீகரிக்கவில்லை.
    • மாட்டுவண்டி பந்தயம், ஜல்லிக்கட்டு போட்டியை ஊக்குவிக்கும் திட்டமும் இல்லை.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் எம்.பி. ரவ்னீத் சிங், மாட்டு வண்டி பந்தயம் மற்றும் ஜல்லிக்கட்டு பற்றி கேள்வி எழுப்பி இருந்தார்.

    பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் மாட்டு வண்டி பந்தயம் பிரபலம் என்று தெரிவித்து, நாட்டில் மாட்டு வண்டி பந்தயம் தடை செய்யப்பட்டுள்ளதா, ஜல்லிக்கட்டு போன்ற காளைகளை உள்ளடக்கிய விளையாட்டுகளை நடத்த அரசு அனுமதித்துள்ளதா என்பன போன்ற கேள்விகளைக் கேட்டிருந்தார்.

    இதற்கு மத்திய தகவல், ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அந்த பதிலில் அவர் கூறியுள்ளதாவது:

    ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி பந்தயம் உள்ளிட்ட போட்டிகளை அங்கீகரிக்கவில்லை. மாட்டு வண்டி பந்தயம், ஜல்லிக்கட்டு போட்டியை ஊக்குவிக்கும் திட்டமும் இல்லை.

    கேலோ இந்தியா உள்பட எந்தத் திட்டத்தின் கீழும் அங்கீகரிக்கவில்லை. கிராமப்புற வீரர்களை ஊக்குவிக்கும் கேலோ இந்தியா உள்ளிட்ட எந்தத் திட்டத்தின் கீழும் ஜல்லிக்கட்டு இல்லை என தெரிவித்தார்.

    ×