search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 150704"

    • கள்ளக்காதல் விவகாரத்தில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
    • சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி நாரணாபுரம் ரோடு பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 40), தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ஜான்சி ராணி.

    இந்த நிலையில் காளியப் பனுக்கு தன்னுடன் வேலை பார்க்கும் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக் காதலாக மாறியது. இதைத் ெதாடர்ந்து இருவரும் சென்னை சென்று குடித்தனம் நடத்தி வந்ததாக தெரிகிறது. ஒரு மாதம் கழித்து மீண்டும் ஊருக்கு வந்து காளியப்பன் பழைய வேலையில் சேர்ந்துள்ளார்.

    பின்னர் மீண்டும் அந்த பெண்ணை பார்ப்பதற்காக சென்னை சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணுடன் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இதனால் விரக்தி அடைந்த அவர் ஊருக்கு திரும்பி வந்து மனைவி மற்றும் குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அவர்கள் அவரை சமாதானப்படுத்தி உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து மாடி அறைக்கு சென்றவர் அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்தில் ஜான்சிராணி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சந்தேகம் அடைந்த சோனைமுத்துவின் மனைவி பாண்டியம்மாள், தனது கணவரை கண்டித்தார்.
    • சோனை முத்து, அவருடன் பணி புரிந்த அழகம்மாளுடன் மாயமானது தெரியவந்தது.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிபட்டியை சேர்ந்தவர் சோனைமுத்து (வயது35). இவர் ராஜபாளையம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.

    அதே ஓட்டலில் அழகம்மாள் (22) என்பவர் சப்ளையராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அவ்வப்போது இவர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தது தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த சோனைமுத்துவின் மனைவி பாண்டியம்மாள், தனது கணவரை கண்டித்தார்.

    இருப்பினும் அவர்களது பழக்கம் தொடர்ந்து வந்தது. சம்பவத்தன்று தனது மனைவி பாண்டியம்மாளிடம் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற சோனைமுத்து நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் தனது கணவர் மாயமானது குறித்து ராஜபாளையம் தெற்கு போலீசில் பாண்டியம்மாள் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    அப்போது சோனை முத்து, அவருடன் பணி புரிந்த அழகம்மாளுடன் மாயமானது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    • அரசு கல்லூரி எதிரே ரெயில்வே தண்டவாளத்தில் ரெயில் மோதி ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசார் மூவரையும் அழைத்து விசாரித்து, அறிவுரை கூறி, விக்னேைஷ முதல் மனைவியுடன் அனுப்பி வைத்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூரில் ரயிலில் அடிபட்டு இறந்த விவகாரத்தில், இறந்தவர் தற்கொலை செய்தாரா அல்லது விபத்தா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். திருப்பூர், காலேஜ் ரோடு, சிக்கண்ணா அரசு கல்லூரி எதிரே ரெயில்வே தண்டவாளத்தில் ரெயில் மோதி ஒருவர் இறந்து கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். பின்னர் ரெயிலில் அடிபட்டு இறந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் திருவண்ணாமலையை சேர்ந்த விக்னேஷ் (24) என்பது தெரிந்தது.

    தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இறந்த விக்னேஷ், கடந்த, நான்கு ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். 2 வயதில் ஒரு பெண் குழந்தையும், எட்டு மாத பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் திருப்பூர் காலேஜ் ரோட்டில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது விசாலாட்சி என்ற பெண்ணுடன், விக்னேஷ்க்கு தொடர்பு ஏற்பட்டு கணவன் மனைவி போல் வசித்து வந்துள்ளனர்.

    தகவல் முதல் மனைவிக்கு தெரிந்ததும் அவர் திருப்பூர் தெற்கு மகளிர் போலீசில் புகார் செய்துள்ளார்.

    போலீசார் மூவரையும் அழைத்து விசாரித்து, அறிவுரை கூறி, விக்னேைஷ முதல் மனைவியுடன் அனுப்பி வைத்தனர். இதனால், கள்ளக்காதலி விசாலாட்சி விக்னேசை பிரிந்து சென்றார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட விக்னேஷ் கள்ளக்காதலியை பிரிந்த சோகத்தில் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. கள்ளக்காதலிக்காக காதலித்து திருமணம் செய்த பெண் மற்றும் 2 பெண் குழந்தைகளை அனாதையாக விட்டு விட்டு வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • மாங்கனி சத்தம் போடவே 4பேரும் கொலை முயற்சியை கைவிட்டு விட்டு தப்பி சென்று விட்டனர்.
    • கொலை முயற்சி சம்பவத்திற்கு மூலக்காரணம் தனது கணவன் மணிமாறன் என்பது தெரியவரவே மாங்கனி ஊத்துக்குளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் முரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 38). இவர் சொந்தமாக பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது மனைவி மாங்கனி (35). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்தநிலையில் மணிமாறனுக்கும் அவரது கம்பெனியில் வேலை பார்த்து வந்த இளம்பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர். இந்தநிலையில் அந்த இளம்பெண்ணுக்கு அவரது பெற்றோர் வேறொரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

    இதையறிந்த மணிமாறன் தனது கள்ளக்காதலியின் திருமணத்தை நிறுத்த முடிவு செய்தார். இதற்காக அந்த இளம்பெண்ணுக்கு பார்த்திருந்த மாப்பிள்ளைக்கு, கள்ளக்காதலி குறித்து தவறான தகவல் எழுதி மொட்டை கடிதம் ஒன்றை அனுப்பினார்.

    அந்த கடிதத்தை மணிமாறன் வீட்டில் வைத்து எழுதினார். அப்போது கடிதத்தில் தவறு ஏற்பட்ட போது அந்த கடிதத்தை கசக்கி வீட்டிலேயே போட்டுள்ளார். அதனை மணிமாறனின் மனைவி மாங்கனி எடுத்து பார்த்த போது அதிர்ச்சியடைந்தார்.

    உடனே இதுகுறித்து தனது கணவரிடம் கேட்டதுடன், இளம்பெண்ணுடனான கள்ளக்காதலை கைவிடுமாறும் எச்சரித்தார். இருப்பினும் மணிமாறன் தனது கள்ளக்காதலியை திருமணம் செய்து கொள்ள முயற்சிகள் மேற்கொண்டார்.

    மேலும் தனது கள்ளக்காதல் விவகாரம் மனைவிக்கு தெரிந்து விட்டதால் அவரை கொலை செய்யவும் திட்டமிட்டார். இதற்காக தனது நண்பர்கள் 4 பேரிடம் தெரிவித்துள்ளார். அவர்களும் மணிமாறனின் மனைவியை கொலை செய்ய ஒப்புக்கொண்டனர்.

    அதன்படி சம்பவத்தன்று இரவு மாங்கனி வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தார். அப்போது மணிமாறனின் நண்பர்கள் 4பேரும் வீட்டிற்கு வந்தனர். வீட்டின் கதவை திறந்து 4 பேரையும் மணிமாறன் உள்ளே வரவழைத்தார். பின்னர் மாங்கனி தூங்கி கொண்டிருந்த அறைக்குள் சென்ற 4 பேரும் தலையணையால் அமுக்கி கொலை செய்ய முயன்றனர்.

    மாங்கனி சத்தம் போடவே 4பேரும் கொலை முயற்சியை கைவிட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவத்திற்கு மூலக்காரணம் தனது கணவன் மணிமாறன் என்பது தெரியவரவே இது குறித்து மாங்கனி ஊத்துக்குளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீசார் விசாரணை நடத்தி மணிமாறன் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேரை கைது செய்தனர். கள்ளக்காதலியை திருமணம் செய்து கொள்வதற்காக மனைவியை நண்பர்களுடன் சேர்ந்து கணவன் கொலை செய்ய முயன்ற சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பால் கறக்கச் செல்லும் தொழிலாளர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்து வருசநாடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
    • வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் அதே பகுதுயைச் சேர்ந்த சொக்கர் என்பவரை தேடி வருகின்றனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கண்டமனூர் அருகே உள்ள பொன்னம்மாள்பட்டியைச் சேர்ந்த பெருமாள் மனைவி சமுத்திரக்கனி (வயது 48). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.

    பெருமாள் கடந்த 14 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மகனும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு விபத்தில் இறந்தார். இதனையடுத்து தனது மூத்த மகளை பொன்னம்மாள் பட்டியிலும், 2-வது மகளை வருசநாடு அருகே உள்ள காந்திபுரம் பகுதியிலும் திருமணம் செய்து கொடுத்தார்.

    2-வது மகளை திருமணம் செய்து கொடுத்த காந்திபுரம் பகுதியிலேயே வீடு எடுத்து சமுத்திரக்கனி தங்கி இருந்தார். பெட்டிக்கடை வைத்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார். இன்று அதிகாலை அவரது வீட்டு முன்பு சமுத்திரக்கனி ரத்தக்காயங்களுடன் கிடந்துள்ளார்.

    அந்த பகுதிக்கு பால் கறக்கச் செல்லும் தொழிலாளர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்து வருசநாடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்த போது கை, கால், மார்பு என பல இடங்களில் அரிவாளால் வெட்டி கொடூரமான நிலையில் சமுத்திரக்கனி கிடந்தார்.

    அவரை சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் அதே பகுதுயைச் சேர்ந்த சொக்கர் என்பவரை தேடி வருகின்றனர். கள்ளக்காதல் பிரச்சினையில் இந்தக் கொலை நடந்ததா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இசம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சில வாரங்களுக்கு முன்பு முத்துப்பாண்டி கேரளாவிற்கு வேலைக்கு சென்று விட்டார்.
    • கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவான பரமசிவத்தை தேடி வருகின்றனர்.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஊத்துப்பட்டியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது45). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி (41). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    ராஜேஸ்வரிக்கும், சங்கர நத்தத்தை சேர்ந்த விறகு வெட்டும் தொழிலாளி பரமசிவம் (50) என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக பரமசிவத்துடன் பேசுவதை ராஜேஸ்வரி தவிர்த்துள்ளார். மேலும் தன்னுடன் பழகுவதை கைவிடுமாறும் கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது.

    சில வாரங்களுக்கு முன்பு முத்துப்பாண்டி கேரளாவிற்கு வேலைக்கு சென்று விட்டார். நேற்று இரவு ராஜேஸ்வரி வீட்டின் திண்ணையில் தூங்கினார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த பரமசிவம் தூங்கியிருந்த ராஜேஸ்வரியின் கழுத்தை அரிவாளால் அறுத்து கொலை செய்துவிட்டு தப்பினார்.

    இன்று அதிகாலை ஊர் திரும்பிய முத்துப்பாண்டி வீட்டின் திண்ணையில் மனைவி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள், ஏழாயிரம் பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லபாண்டி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவான பரமசிவத்தை தேடி வருகின்றனர்.

    • ராஜேஸ்வரியின் மூத்த மகன் திட்டி வெளியே செல்லுமாறு கூறினார்.
    • மகன் என்றும் பாராமல் அவரை இரும்பு கம்பியால் தாக்கினார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவருக்கு திருமணமாகி மகன்கள் உள்ளனர். மூத்த மகனுக்கு 17 வயது ஆகிறது.

    இந்நிலையில் ராஜேஸ்வரிக்கும் வயநாட்டை சேர்ந்த சுனீஸ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இதனால் சுனீஸ், அடிக்கடி ராஜேஸ்வரி வீட்டுக்கு வந்து சென்றார்.

    இதுபற்றி அக்கம்பக்கத்தினர், ராஜேஸ்வரியின் மூத்த மகனிடம் கூறினர். அவர் தாயாரிடம் இதுபற்றி கேட்டார். இதில் தாய்க்கும், மகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    சம்பவதன்றும் சுனீஸ் ராஜேஸ்வரி வீட்டிற்கு வந்தார். அவரை ராஜேஸ்வரியின் மூத்த மகன் திட்டி வெளியே செல்லுமாறு கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராஜேஸ்வரி, மகன் என்றும் பாராமல் அவரை இரும்பு கம்பியால் தாக்கினார். அவருடன் சேர்ந்து சுனீசும், தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த சிறுவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து சிறுவன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை தாக்கியதாக அவரது தாயார் ராஜேஸ்வரி, கள்ளக்காதலன் சுனீஸ் உள்பட 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கவிதா, பிரகாஷிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார்.
    • புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து கள்ளக்காதலியை கத்தியால் குத்திய பிரகாசை தேடி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் காமநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் கவிதா (வயது 35). சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்தபோது அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த ஒரு வாலிபருடன் காதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதில் அவர்களுக்கு குழந்தை ஒன்றும் பிறந்தது.

    இந்தநிலையில் கவிதாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அவரது கணவர் குழந்தையை அழைத்து சென்று விட்டார். கவிதா திருப்பூரில் தனிமையில் வசித்து வந்துள்ளார்.

    அப்போது நாகப்பட்டினத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் கவிதா, பிரகாஷிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். அதற்கு பிரகாஷ் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

    நேற்று இரவு வழக்கம் போல் கவிதாவும் பிரகாசும் சந்தித்து உல்லாசம் அனுபவித்து உள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த பிரகாஷ், வீட்டின் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து கவிதாவின் கழுத்தில் குத்தி விட்டு தப்பியோடி விட்டார். இதில் பலத்த காயம் அடைந்த கவிதா சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் கவிதாவை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து கள்ளக்காதலியை கத்தியால் குத்திய பிரகாசை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • திருமணமாகி 2 குழந்தைகளுடன் வசித்து வந்த தேவிகா, சதீசுடன் பல இடங்களுக்கு சென்றுள்ளார்.
    • சம்பவத்தன்று கன்ஹாங்காடு பகுதியில் நடந்த கேரள மாநில முடிதிருத்தும் பியூட்டிசியன் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட மாநாட்டுக்கு தேவிகா சென்றுள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணங்காடு அருகே உள்ள முள்ளியார் கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட போலிகாணம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 36). இவர் கண்ணங்காட்டில் தனியார் செக்யூரிட்டி ஏஜென்சி நடத்தி வருகிறார்.

    சதீசுக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். இவர் கடந்த 2 மாதங்களாக விடுதியில் வசித்து வந்தார். அப்போது உத்மா கிராம பஞ்சாயத்து மாங்காடு பகுதியைச் சேர்ந்த ஒப்பனை கலைஞர் தேவிகா (34) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது.

    திருமணமாகி 2 குழந்தைகளுடன் வசித்து வந்த தேவிகா, சதீசுடன் பல இடங்களுக்கு சென்றுள்ளார். சம்பவத்தன்று கன்ஹாங்காடு பகுதியில் நடந்த கேரள மாநில முடிதிருத்தும் பியூட்டிசியன் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட மாநாட்டுக்கு தேவிகா சென்றுள்ளார்.

    அங்கு சென்ற சதீஷ், தேவிகாவை சந்தித்து பேசி உள்ளார். அதன்பிறகு அவரை விடுதிக்கு அழைத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை விடுதி அறையில் வைத்து 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    அதன்பிறகு மதியம் சதீஷ் மட்டும் விடுதி அறையை பூட்டி விட்டு வெளியே சென்றார். அங்கிருந்து ஓஸ்துர்க் போலீஸ் நிலையம் சென்ற அவர், தேவிகாவை கழுத்தை அறுத்துக்கொலை செய்து விட்டதாக கூறி சரண் அடைந்தார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், விடுதி அறைக்குச் சென்று பார்த்தபோது, அங்கு தேவிகா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதணைக்காக அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து காஞ்சங்கோடு போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் நாயர் சம்பவ இடம் வந்து சதீசிடம் விசாரணை நடத்தினார். அப்போது, விவாகரத்து பெற்று விட்டு தன்னுடன் வாழுமாறு கடந்த சில நாட்களாக தேவிகா வற்புறுத்தினார். இது எனக்கு பிடிக்கவில்லை. இது தொடர்பாக நேற்றும் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த நான் தேவிகாவின் கழுத்தை அறுத்து தற்கொலை செய்தேன் என போலீசாரிடம் சதீஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 3 நாட்களாக கணவன்- மனைவி இடையே மீண்டும் சண்டை நடந்து வந்தது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது ஷோபா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், சூர்யா பேட்டை மாவட்டம் முனகலுவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 41). இவர் வனஸ்தலிபுரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி ஷோபா (38). இவர்களுக்கு சாத்விக் (14), நித்தின் (9) என 2 மகன்கள் உள்ளனர். ஷோபா வீட்டிலேயே தையல் தொழில் செய்து வந்தார்.

    ராஜ்குமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புவனகிரி போலீஸ் நிலையத்தில் வேலை செய்த போது அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இதுகுறித்து ஷோபா தனது பெற்றோருக்கு தெரிவித்தார் அவரது பெற்றோர் ராஜ்குமார் குறித்து போலீஸ் டி.ஜி.பி.யிடம் புகார் செய்தனர். அவர் ராஜ்குமாரை அழைத்து அறிவுரைகளை வழங்கி அனுப்பி வைத்தார். இருப்பினும் அவரது நடத்தையில் மாற்றம் ஏற்படவில்லை.

    கடந்த 3 நாட்களாக கணவன்- மனைவி இடையே மீண்டும் சண்டை நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடித்துவிட்டு ராஜ்குமார் வீட்டிற்கு வந்தார்.

    அப்போது ஷோபா முதல் மாடியில் இருந்து படிக்கட்டில் கீழே இறங்கி வந்தார். இதனை கண்ட ராஜ்குமார் ஆத்திரத்தில் மனைவியை பிடித்து கீழே தள்ளினார். கத்தியை எடுத்து ஷோபாவின் கழுத்தை அறுத்தார்.

    இதனைக் கண்ட அவர்களது மூத்த மகன் சாத்வித் தந்தையை தடுத்து நிறுத்தினான். ராஜ்குமார் மகனையும் கத்தியால் வெட்டினார்.

    இதில் காயம் அடைந்த சாத்விக் ரத்த காயங்களுடன் வனஸ்தலிபுரம் போலீஸ் நிலையத்திற்கு சென்று தகவல் தெரிவித்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது ஷோபா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். போலீஸ்காரர் ராஜ்குமார் அங்கிருந்து தப்பி ஓடினார்.

    போலீசார் ஷோபாவை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஷோபா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள ராஜ்குமாரை தேடி வருகின்றனர்.

    • திருமணமான 33 வயது பெண்ணிடம் ரவிச்சந்திரன் (வயது 42) நட்பாக பழகி வந்தார்
    • இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே உள்ள கிராமத்தில் திருமணமான 33 வயது பெண் வசித்து வந்தார். இவரிடம் அரியலூர் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் மகன் ரவிச்சந்திரன் (வயது 42) நட்பாக பழகி வந்தார். இது நாளடைவில் கள்ளக்கா தலாக மாறி அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர். அந்த நேரத்தில் ரவிச்சந்திரன், தான் மறைத்து வைத்திருந்த செல்போனில் இதனை வீடியோக எடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் தான் செய்வது தவறு என்பதை உணர்ந்த இளம்பெண் ரவிச்சந்திரனுடன் பழகுவதை நிறுத்தினார். அவரது செல்போன் அழைப்புகளையும் ஏற்கவில்லை. இது தொடர்பாக தனது கணவரிடம் கூறி மன்னிப்பு கேட்டு, அவருடன் திருந்தி வாழ்ந்து வந்தார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பாக அந்த இளம்பெண்ணை தொடர்பு கொண்ட ரவிச்சந்திரன், நீயும், நானும் உல்லாசமாக இருந்த வீடியோ என்னிடத்தில் உள்ளது. நீ என்னுடன் உல்லாசமாக இருக்க வரவில்லை எனில் இந்த வீடியோவை சமூக வளைதளங்களில் வெளியிடுவேன். இதனை வெளியில் சொன்னாலோ, போலீசில் புகார் கூறினாலோ உன்னையும், உனது கணவரையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன இளம்பெண், நடந்ததை தனது கணவரிடம் கூறியுள்ளார். அவர் அளித்த தைரியத்தில் இது குறித்து திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்தார். இந்த புகாரினை போலீசார் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றி விசாரிக்க பரிந்துரைத்தனர். அதன் பேரில் இன்ஸ்பெ க்டர் ராதிகா இது தொட ர்பாக விசாரணை நடத்தி னார். இதில் இளம்பெ ண்ணுக்கு தொல்லை கொடுத்து, கொலை மிரட்டல் விடுத்த ரவிச்சந்திரன் மீது வழக்கு பதிவு செய்தனர். உடனடியாக அரியலூர் கிராமத்திற்கு விரைந்த மகளிர் போலீசார் ரவிச்சந்திரனை கைது செய்து, நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் திருக்கோவிலூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி யுள்ளது.

    • சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த மனைவி எர்ரம்மாவை வெட்டி சாய்த்தார்.
    • தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், ஸ்ரீகாக்குளம் மாவட்டம், சரவகோடா பகுதியை சேர்ந்தவர் ராமராவ். இவரது மனைவி எர்ரம்மா (வயது 40).

    இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் (26) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.

    கள்ளக்காதலை கைவிடுமாறு ராமாராவ் அவரது மனைவியிடம் பலமுறை எச்சரித்தார். கணவரின் எச்சரிக்கையை மீறி எர்ரம்மா, சந்தோஷ் குமாருடன் கள்ளத்தொடர்பில் ஈடுபட்டு வந்தார்.

    நேற்று காலை சந்தோஷ்குமார் அங்குள்ள பம்பு செட்டில் குளித்துக் கொண்டு இருந்தார். இந்த தகவல் அறிந்த ராமராவ் பைக்கில்அங்கு சென்றார்.

    அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குளித்து கொண்டிருந்த சந்தோஷ் குமாரை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த சந்தோஷ்குமார் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இருப்பினும் ஆத்திரம் தீராத ராமாராவ் ரத்த கரையுடன் அதே கத்தியை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.

    சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த அவரது மனைவி எர்ரம்மாவை வெட்டி சாய்த்தார். இதில் அவர் துடிதுடித்து இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய ராமராவை தேடி வருகின்றனர்.

    ×