search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமித்ஷா"

    • அத்வானி தனது இடைவிடாத முயற்சியால் நாடு முழுவதும் கட்சி அமைப்பை பலப்படுத்தினார் என மத்திய உள்துறை மத்திரி அமித்ஷா கூறினார்.
    • தேசம் மற்றும் அமைப்புக்காக அர்ப்பணித்த உங்கள் வாழ்க்கை எங்களுக்கு உத்வேகம் அளிக்கிறது என்று பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.

    புதுடெல்லி:

    பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு இன்று 95-வது பிறந்தநாள் ஆகும். இதையடுத்து டெல்லியில் உள்ள அத்வானி வீட்டுக்கு பிரதமர் மோடி நேரில் சென்றார். அவருடன் மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் உடன் சென்றார்.

    பிரதமர் மோடியை அத்வானியின் மகள் பிரதிபா வரவேற்றார். அத்வானியை சந்தித்து மோடி அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அவர்கள் சிரித்து பேசியபடி உரையாற்றினார்கள்.

    அத்வானிக்கு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துக்கொண்டார். பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா டுவிட்டரில் கூறும் போது, 'தேசம் மற்றும் அமைப்புக்காக அர்ப்பணித்த உங்கள் வாழ்க்கை எங்களுக்கு உத்வேகம் அளிக்கிறது' என்று கூறினார்.

    மத்திய உள்துறை மத்திரி அமித்ஷா கூறும் போது, 'அத்வானி தனது இடைவிடாத முயற்சியால் நாடு முழுவதும் கட்சி அமைப்பை பலப்படுத்தினார். மேலும் அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருந்த போது நாட்டின் வளர்ச்சிக்கு விலை மதிப்பற்ற பங்களிப்பை வழங்கினார்' என்றார்.

    • பிரதமர் மோடியின் தலைமையில், இந்தியா உலகின் வலிமையான நாடாக உருவெடுத்துள்ளது.
    • வான்வழித் தாக்குதல் நடத்தி பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்தார்.

    காங்கரா: 

    வரும் 12ந் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. ஆளும் பாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் நிலைவும் நிலையில் காங்கரா மாவட்டத்தில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளதாவது:

    அவர்கள் (காங்கிரஸ்) கடந்த 10 ஆண்டுகள் ஆடசி செய்தார்கள். ஆனால் அவர்கள் பெரிய ஊழல்களில் ஈடுபட்டனர். இப்போது அவர்கள் இமாச்சல பிரதேச அப்பாவி மக்கள் ஏமாற்றுவதற்காக தேர்தல் வாக்குறுதியில் 10 உத்தரவாதங்களை அளிக்கிறார்கள். அதை யார் நம்புவார்கள்?. பிரதமர் மோடியின் தலைமையில், இந்தியா தற்போது உலகின் வலிமையான நாடாக உருவெடுத்துள்ளது.  

    உரி மற்றும் புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் மீது சர்ஜிக்கல் மற்றும் வான்வழித் தாக்குதல் நடத்தி பிரதமர் மோடி பதிலடி கொடுத்தார். இந்தியாவின் எல்லைகளில் குழப்பம் விளைவிப்பவர் அதற்கு உரிய விலையை கொடுக்க வேண்டும் என்ற செய்தியை இதன் மூலம் உலகிற்கு அவர் அறிவித்தார்.

    ரஷியா நடத்திய வரும் போர் காரணமாக உக்ரைனில் இந்திய மாணவர்கள் சிக்கித் தவித்த போது, இரு நாட்டு அதிபர்களிடமும் பேசி இந்தியர்கள் வெளியேற இரண்டு நாட்கள் போரை நிறுத்துமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். அதன் மூலம் இந்திய மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த முறை இமாச்சல பிரதேச மாநிலத்தில் சட்டசபை மட்டுமல்ல பாராளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • எதிர்க்கட்சிகளின் தீய நோக்கங்களுக்கு மக்கள் இரையாக வேண்டாம்.
    • காங்கிரஸ் கட்சி முற்றிலும் பொய்யர்களை கொண்டது.

    சிம்லா :

    இமாசலபிரதேச சட்டசபை தேர்தலையொட்டி, அங்குள்ள ஹமிர்பூர் மாவட்டம் நடான் கஸ்வா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளருக்கு ஆதரவாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பிரசாரம் செய்தார்.

    தேர்தல் பிரசார கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:-

    லட்சக்கணக்கானோரை கொரோனாவில் இருந்து காப்பாற்றியது, நாடு முழுவதும் உள்ள பா.ஜனதா அரசுகள்தான். பிரதமர் மோடியின் முயற்சியால், இந்தியாவிலேயே தடுப்பூசி தயாரித்து, நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.

    வேறு எந்த நாட்டிலும், எந்த தலைவரும் இத்தகைய சாதனையை செய்தது இல்லை. அதனால், உலக மக்கள் மோடியை பாராட்டுகிறார்கள். முன்பு அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்த பொருட்களை எல்லாம், இப்போது நாமே தயாரிக்கிறோம்.

    மோடி, களைப்பின்றி நீண்ட நேரம் பணியாற்றக்கூடிய ஆற்றல் பெற்றவர். இத்தகையவர்தான் நாட்டையும், மாநிலங்களையும் ஆள தேவைப்படுகிறார். 370-வது சட்டப்பிரிவை நீக்கி, காஷ்மீர் மக்களுக்கு அனைத்து வசதிகளையும் கொண்டு சேர்த்தோம்.

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுகிறது. 2024-ம் ஆண்டு அக்கோவில் திறக்கப்படும். பிரதமர் மோடி பக்திமான் என்பதால், வாரணாசி, கேதார்நாத், பத்ரிநாத், அயோத்தி ஆகியவற்றில் உள்ள இந்து கோவில்களை மறுசீரமைத்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சி முற்றிலும் பொய்யர்களை கொண்டது. பொய்யான முழக்கங்களை எழுப்பி, மக்களை முட்டாளாக்க பார்க்கும். தேர்தல் முடிந்தவுடன் தனது வாக்குறுதிகளை மறந்து விடும். பா.ஜனதா மட்டும்தான் தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றும்.

    காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கும் கப்பல். அதற்கு எதிர்காலம் இல்லை. 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் முடிந்தவுடன், இந்திய அரசியல் அரங்கில் இருந்தே காங்கிரஸ் வெளியேறி விடும். ராகுல்காந்தி, தனது பாதயாத்திரையை காரணமாக வைத்து, இங்கு வருவதை தவிர்த்து வருகிறார்.

    எதிர்க்கட்சிகளின் தீய நோக்கங்களுக்கு மக்கள் இரையாக வேண்டாம். உங்கள் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டுமானால், அவர்களை நிராகரியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நள்ளிரவிலும் நீதி விழிப்புடன் இருந்தால்தான் மக்களும், சமுதாயமும் அச்சமின்றி இருக்க முடியும்.
    • நமது காவல்துறை எந்த சவாலையும் சந்திக்கும் ஆற்றலுடன் உள்ளது.

    டெல்லியில் நேற்று நடைபெற்ற இன்டர்போல் அமைப்பின் 90-வது பொதுச் சபை நிறைவு அமர்வில் உரையாற்றிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளதாவது:

    195 நாடுகளை உறுப்பினராகக் கொண்ட இன்டர்போல் அமைப்பு உலக அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு பெரும் பங்காற்றி வருகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ராமாயணத்திலும், திருக்குறள் போன்ற அறநூல்களிலும் நீதி குறித்து கூறப்பட்டுள்ளது. மகாபாரதத்தில் குற்றங்களை கட்டுப்படுத்துதல், நீதி வழங்குதல், வெற்றிகரமான நிர்வாகம் ஆகியவை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நள்ளிரவிலும் நீதி விழிப்புடன் இருந்தால்தான் மக்களும், சமுதாயமும் அச்சமின்றி இருக்க முடியும். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் நமது காவல்துறை எந்த சவாலையும் சந்திக்கும் ஆற்றலுடன் உள்ளது. எதிர்கால சவால்களை எதிர்கொள்ள பல முன் முயற்சிகளை இந்திய அரசு எடுத்துள்ளது.

    பயங்கரவாதம், போதைப் பொருள் கடத்தல், பொருளாதார குற்றங்களை முறியடிக்க தேசிய அளவில் தரவுதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா இன்டர்போலுடன் இணைந்து செயல்பட உறுதி பூண்டுள்ளது. பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களை முறியடிக்கவும், சட்டவிரோத பணபரிவர்த்தனையை தடுக்கவும், திட்டமிடப்பட்ட சதிச்செயல்களை முறியடிக்கவும் இந்தியா இன்டர்போலுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இந்தியில் மருத்துவ படிப்பை தொடங்கும் நாட்டின் முதல் மாநிலமாக மத்திய பிரதேசம் மாறியுள்ளது.
    • கிராமப் புற மாணவர்களுக்கு ஆங்கில மொழி தெரியவில்லை என்ற தாழ்வு மனப்பான்மையும் இருக்காது

    போபால்:

    நாட்டிலேயே முதன்முறையாக மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தி மொழியில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.  தலைநகர் போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தி மொழியில் இடம் பெற்ற மருத்துவ உயிர் வேதியியல், மருத்துவ உடற் கூறியல் மற்றும் மருத்துவ உடலியல் ஆகிய பாடங்களை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டார். 

    அப்போது பேசிய அவர், இந்தியில் மருத்துவ படிப்பை தொடங்கும் நாட்டின் முதல் மாநிலமாக மத்திய பிரதேசம் மாறியுள்ளது என்றார். இந்த நாள் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் எழுதப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இனி, கிராமப் புற மாணவர்களுக்கு ஆங்கில மொழி தெரியவில்லை என்ற எந்த ஒரு தாழ்வு மனப்பான்மையும் இருக்காது, அவர்கள் தங்கள் சொந்த மொழியில் பெருமையுடன் படிக்கலாம் என்றும் அவர் கூறினார்.

    தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக இந்தியில் எம்.பி.பி.எஸ். படிப்பு தொடங்கப்பட்டது, விரைவில் பிற மொழிகளிலும் அது தொடங்கப்படும் என்றார். மேலும் எட்டு மொழிகளில் தொழில்நுட்ப மற்றும் மருத்துவக் கல்வியைத் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமித்ஷா குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியில், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மருத்துவக் கல்வி அமைச்சர் விஸ்வாஸ் சாரங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பல ஆண்டுகளாக மூன்று பெரிய தடைகள் இருந்தன.
    • முந்தைய அரசுகள் வடகிழக்கு பகுதி வளர்ச்சியில் ஆர்வம் காட்டவில்லை.

    கவுகாத்தி:

    வடகிழக்கு கவுன்சிலின் 70வது கூட்டம் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்றது. வடகிழக்கு பிராந்தியத்தின் கலாச்சாரம், சுற்றுலா மற்றும் மேம்பாட்டுக்கான மத்திய மந்திரி ஜி. கிஷன் ரெட்டி மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சக இணை மந்திரி பி.எல்.வர்மா, வடகிழக்கு மாநிலங்களின் ஆளுநர்கள் மற்றும் முதலமைச்சர்கள், மத்திய மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச்சேர்ந்த பல்வேறு துறைகளின் மூத்த அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்த மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பேசியதாவது:

    வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிப் பாதையில் பல ஆண்டுகளாக மூன்று பெரிய தடைகள் இருந்தன. வன்முறை, தீவிரவாத குழுக்களால் அமைதியின்மை, ரயில், சாலை மற்றும் விமான போக்குவரத்து இணைப்பு இல்லாதது ஆகியவையே அந்த தடைகள். 


    முந்தைய அரசுகள் வடகிழக்கு பகுதி வளர்ச்சியில் ஆர்வம் காட்டவில்லை. வடகிழக்கு வளர்ச்சிக்கு அவை ஒருபோதும் முன்னுரிமை வழங்கவில்லை ஆனால், பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு கடந்த 8 ஆண்டுகளில் வடகிழக்கில் அமைதியை ஏற்படுத்தவும், அனைத்து போக்குவரத்து இணைப்புகளையும் அதிகரிக்கவும், வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கவும் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

    வெள்ளக் கட்டுப்பாடு, நீர்ப்பாசனம், சுற்றுலா, காடு வளர்ப்பு, விவசாயம் ஆகியவற்றில் வடகிழக்கு நிலப்பயன்பாட்டுக் கவுன்சிலின் தரவுகளை வடகிழக்கு மாநிலங்களின் முதலமைச்சர்கள் முழுமையாகப் பயன்படுத்தி பயனடைய வேண்டும். இதற்காக தங்களது மாநிலங்களில் ஒரு தொடர்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பா.ஜ.க தேசிய தலைவர் மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் இன்று அசாம் சென்றனர்.
    • அவர்கள் கவுகாத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜ.க. மாநில அலுவலகத்தை திறந்து வைத்தனர்.

    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்திற்கு 3 நாள் பயணமாக பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் இன்று சென்றனர்.

    அவர்கள் கவுகாத்தியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பாஜ.க. மாநில அலுவலகத்தை திறந்து வைத்தனர். அப்போது உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது:

    70 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் வடகிழக்கு பகுதிகளை வன்முறை மற்றும் அராஜகத்தை நோக்கி தள்ளியுள்ளது.

    இரண்டு முறை வெற்றி பெற்று பா.ஜ.க. தனித்து ஆட்சி அமைக்கும் என அப்போது நினைக்கவில்லை.

    கடந்த 8 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் கீழ் வடகிழக்குப் பகுதிகள் வளர்ச்சி அடைந்து வருகின்றன என தெரிவித்தார்.

    • நாட்டின் அமைதியான இடமாக ஜம்மு காஷ்மீரை மோடி அரசு மாற்றும்.
    • காஷ்மீரில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

    பாரமுல்லா:

    ஜம்முகாஷ்மீர் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பாரமுல்லா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    1990 ஆம் ஆண்டில் இருந்து ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்திற்கு 42,000 பேர் உயிரிழந்துள்ளனர். மோடி தலைமையிலான அரசு பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ளாது. பயங்கரவாதத்தை ஒழித்து, நாட்டின் அமைதியான இடமாக ஜம்மு காஷ்மீரை மாற்றுவோம்.

    நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஆட்சி செய்த வரும் அப்துல்லாக்கள், முஃப்திகள் மற்றும் நேரு, காந்தி குடும்பத்தினரால் ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சியடையவில்லை. சிலர் பாகிஸ்தானைப் பற்றி அடிக்கடி பேசுகிறார்கள், ஆனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் எத்தனை கிராமங்களுக்கு மின்சார இணைப்புகள் உள்ளன என்பதை அறிய விரும்புகிறேன்.

    கடந்த மூன்று ஆண்டுகளில், காஷ்மீரில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதை நாங்கள் உறுதி செய்துள்ளோம். பாகிஸ்தானுடன் பேச வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். நாம் ஏன் பாகிஸ்தானுடன் பேச வேண்டும்? நாங்கள் பாரமுல்லா மக்களுடன் பேசுவோம், காஷ்மீர் மக்களுடன் பேசுவோம். பாகிஸ்தானுடன் பேச மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பயிற்சியை முடித்துக் கொண்டு முகாமிற்கு வீரர்கள் திரும்பும் வழியில் பனிச்சரிவு.
    • பனிச்சரிவில் சிக்கியுள்ள 28 பேர்களை மீட்கும் நடவடிக்கை தீவிரம்.

    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் மலையேறுதல் பயிற்சிக்கான அரசு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை சேர்ந்த 34 பயிற்சி மலையேறு வீரர்கள், 7 பயிற்சியாளர்கள் என மொத்தம் 41 பேர் இமயமலையின் திரவுபதி கா தண்டா-2 சிகரத்தில் இருந்து பயிற்சியை முடித்துக் கொண்டு முகாமிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

    அப்போது, திடீரென அந்த பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் அவர்கள் அனைவரும் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்த இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பு படையினர், தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் பனிச்சரிவில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர்கள் உதவியுடன் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 


    இந்த பனிச்சரிவில் சிக்கிய சிலர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 28 பேர் இன்னும் பனிச்சரிவில் சிக்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


    இந்த துயர நிகழ்விற்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருத்தம் தெரிவித்துள்ளார். உத்தர்காசியில் ஏற்பட்ட பனிச்சரிவு சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது, இது தொடர்பாக அதிகாரிகளிடம் பேசினேன். உள்ளூர் நிர்வாகம், தேசிய பேரீடர் மீட்புக்குழு, இந்தோ-தீபெத் எல்லைப்பாதுகாப்பு படை மற்றும் ராணுவக் குழுக்கள் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் உடனடியாக ஈடுபட்டு வருகின்றன, இவ்வாறு அமித்ஷா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல் உத்தரகாண்ட் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிச்சரிவு ஏற்பட்டு பல உயிர்களை பலி வாங்கியுள்ளது என்ற செய்தி வருத்தமளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு இதயப்பூர்வமான இரங்கல், காணாமல் போனவர்கள் பாதுகாப்பாக திரும்பவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு ராகுல் தெரிவித்துள்ளார்.

    • உள்துறை மந்திரி அமித்ஷா 3 நாள் பயணமாக நேற்று காஷ்மீருக்குச் சென்றார்.
    • அமித்ஷா வருகையையொட்டி, ஸ்ரீநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    ஸ்ரீநகர்:

    உள்துறை மந்திரி அமித்ஷா 3 நாள் பயணமாக நேற்று காஷ்மீருக்குச் சென்றார். அவரை குஜ்ஜார், பேகர்வால் ஆகிய சமூகங்களின் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினர். பா.ஜ.க. நிர்வாகிகளும் சந்தித்தனர்.

    நவராத்திரியின் இறுதி நாள் என்பதால் இன்று மாதா வைஷ்ணவ தேவி கோவிலுக்குச் சென்று அமித்ஷா சாமி தரிசனம் செய்கிறார்.

    அதன்பின், ரஜவுரிக்குச் செல்லும் அவர் அங்கு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

    இதையடுத்து, காஷ்மீருக்குச் செல்லும் அவர் நாளை ஸ்ரீநகரில் நடக்கும் நிகழ்ச்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அமித்ஷா அடிக்கல் நாட்டுகிறார். முடிவடைந்த திட்டங்களை திறந்து வைக்கிறார். அத்துடன், கவர்னர் மனோஜ் சின்காவுடன் உயர்மட்ட பாதுகாப்பு ஆய்வு கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கிறார். அதில், காஷ்மீரில் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. அதன்பிறகு, பாரமுல்லாவில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசுகிறார்.

    உள்துறை மந்திரி அமித்ஷாவின் வருகையையொட்டி காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    • எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணிக்கையை 89,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
    • ஏழை மக்களின் சுகாதார உரிமையை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்.

     கலோல்:

    குஜராத் மாநிலம் கலோலில் 150 படுக்கைகளுடன் கட்டப்பட்ட இஎஸ்ஐசி மருத்துவமனையை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்ற திறந்து வைத்தார். மேலும் 750 படுக்கைகளுடன் கூடிய பன்னோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு அவர் அடிக்கல் நாட்டினார் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: 


    ஏழை மக்களின் சுகாதார உரிமையை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார். பிரமரின் ஆயுஷ்மான் திட்டத்தின் மூலம், 60 கோடி ஏழை மக்களுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான இலவச மருத்துவ சுகாதார வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆயுஷ்மான் சுகாதார கட்டமைப்பு திட்டத்தின் கீழ், ரூ. 64,000 கோடி முதலீட்டில் 600க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 35,000 புதிய அவசர கால சிகிச்சைக்கான படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    கடந்த 2013- 14ம் ஆண்டு 387 மருத்துவக் கல்லூரிகள் இருந்த நிலையில், 2021 -22ம் ஆண்டில் அதன் எண்ணிக்கையை 596 -ஆக பிரதமர் மோடி உயர்த்தியுள்ளார். எம்.பி.பி.எஸ். படிப்புக்கான இடங்களின் எண்ணிக்கையை 51,000-ல் இருந்து 89,000-மாகவும், முதுநிலை மருத்துவப்படிப்புக்கான இடங்களின் எண்ணிக்கை 31,000-ல் இருந்து 60,000-ம் ஆகவும் மத்திய அரசு அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஒரே நாடு, ஒரே எல்லைப் பாதுகாப்புப் படை என்ற கொள்கையை அரசு ஏற்றுக்கொண்டது.
    • ஆயுதப் படை வீரர்களின் தியாகத்தை நாடு என்றும் மறக்காது.

    ஃபதேபூர்:

    பீகார் மாநிலம் ஃபதேபூர் சென்ற மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இந்திய-நேபாள எல்லை பகுதிகளை ஆய்வு செய்தார். பெக்டோலா, பெரியா, அம்காச்சி மற்றும் ராணிகஞ்ச் ஆகிய இடங்களின் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களுக்கான புதிய குடியிருப்பு கட்டிடங்களை திறந்து வைத்து, பணியாளர்களுடன் சிற்றுண்டி அருந்திய அவர், அவர்களுடன் கலந்துரையாடினார். 


    பின்னர் நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது:

    நாட்டின் பாதுகாப்பிற்காக எல்லையில் கடினமான சூழ்நிலைகளில் பணிபுரியும் நமது துணிச்சலான பாதுகாப்பு வீரர்களின் வசதிகள் மற்றும் நலன்களை கவனித்துக்கொள்வது நமது பொறுப்பு என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    கடந்த எட்டு ஆண்டுகளில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, எல்லையில் பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தித் தந்துள்ளது. ரூ.25 கோடி செலவில் கட்டப்பட்ட அத்தகைய கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. 


    நாட்டில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதிலும், பேரிடர்களின் போது நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளிலும், நியாயமான தேர்தலை நடத்துவதிலும் நமது பாதுகாப்புப் படைகளுக்கு மிக முக்கியப் பங்கு உள்ளது. ஆயுதப் படை வீரர்களின் தியாகம், அர்ப்பணிப்பை நமது நாடு என்றும் மறக்காது.

    எல்லைகளின் பாதுகாப்பிற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியமானது, எல்லைப் பாதுகாப்பு படை மற்றும் பிற பாதுகாப்புப் படைகள் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை நோக்கி நகர வேண்டும். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்திலிருந்தே ஒரே நாடு,ஒரே எல்லைப் பாதுகாப்புப் படை என்ற கொள்கையை அரசு ஏற்றுக்கொண்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×