என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அமித்ஷா"
- மாண்டியா தொகுதியில் போட்டியிட்ட குமாரசாமி வெற்றி பெற்றார்.
- புதிதாக பதவியேற்ற அமைச்சரவையில் குமாரசாமி மத்திய மந்திரியாக பொறுப்பேற்றார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் போட்டியிட்ட மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவரும், முன்னாள் முதல் மந்திரியுமான குமாரசாமி வெற்றி பெற்றார். பிரதமர் மோடி தலைமையில் பதவியேற்ற அமைச்சரவையில் குமாரசாமி மத்திய மந்திரியாக பொறுப்பேற்றார்.
கனரக தொழில்துறை மற்றும் எஃகு துறை அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய மந்திரியாக குமாரசாமி பதவியேற்று இருப்பது இதுவே முதல் முறை.
இதற்கிடையே, மத்திய மந்திரியாக பொறுப்பேற்ற குமாரசாமி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, பிரதமர் மோடி எனக்கு பெரிய பொறுப்பை அளித்துள்ளார் என தெரிவித்தார்.
இந்நிலையில், மத்திய மந்திரி குமாரசாமி இன்று மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். அப்போது, கர்நாடக அரசியல் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்தனர் என குமாரசாமியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
- பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவிற்காக, மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங் சென்றிருந்தபோது ஜரிபாம் மாவட்டமும் பற்றி எரிந்தது.
- கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய மோதல் இனக்கலவரமாக, 400 நாள்களுக்கும் மேல் கொளுந்துவிட்டு எரிகிறது.
மணிப்பூரில் பெரும்பான்மையாக இருக்கும் மெய்தி இன மக்கள், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி, போராட்டங்களில் ஈடுபட்டனர். இதை எதிர்த்து குக்கி பழங்குடியினர் பேரணி நடத்தினர். அமைதிப் பேரணியில் கலவரம் வெடிக்க, வன்முறைக் காடானது மணிப்பூர்.
மோதல்களும் கலவரங்களும் தீ வைப்பு சம்பவங்களும் தொடர்கின்றன. மணிப்பூர் முழுவதும் பற்றி எரிந்து வருகிறது. வீடுகள் தீக்கிரையானதால், பள்ளிகளும், அரசுக் கட்டிடங்களும், முகாம்களாகின. மணிப்பூரில் இதுவரை 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இனக்கலவரத்தில் இதுவரை பாதிக்கப்படாமல் இருந்தது ஜரிபாம் மாவட்டம்தான். பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவிற்காக, மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங் சென்றிருந்தபோது ஜரிபாம் மாவட்டமும் பற்றி எரிந்தது.
அங்கு புதாங்கல் என்ற இடத்தில் மெய்தி இனத்தவரின், 70-க்கும் அதிகமான வீடுகள் தீ வைக்கப்பட்டன. ஜூன் 6-ந்தேதி காணாமல் போன ஒருவரின் உடல், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. காவல்துறை, மத்திய பாதுகாப்புப்படை, துணை ராணுவம் என ஒட்டுமொத்தமாக குவிக்கப்பட்டன.
கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய மோதல் இனக்கலவரமாக, 400 நாள்களுக்கும் மேல் கொளுந்துவிட்டு எரிகிறது. இந்நிலையில், மணிப்பூரில் பாதுகாப்பு நிலைமையை உறுதிப்படுத்துவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
டெல்லியில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை சேர்ந்த உயர் அதிகாரிகள், ராணுவம் மற்றும் இதர பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.
- ருத்ரபிரயாக்கில் நடந்த சாலை விபத்து குறித்து சோகமான செய்தி கிடைத்தது.
- விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.
உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் என்ற இடத்தில் சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பத்ரிநாத் கோவிலுக்கு சென்ற சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானத்தில் 12 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த பலர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக்கில் நடந்த சாலை விபத்து குறித்து சோகமான செய்தி கிடைத்தது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். உள்ளூர் நிர்வாகம் மற்றும் SDRF குழுக்கள் நிவாரணம் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. மேலும் காயமடைந்தவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும்" என்று கூறியுள்ளார்.
Union Home Minister Amit Shah tweets, "Received the sad news of the road accident in Rudraprayag, Uttarakhand. My condolences are with the families of those who lost their lives in this accident. The local administration and SDRF teams are engaged in relief and rescue work and… https://t.co/zYNMQN9ESn pic.twitter.com/L22B2OYJtF
— ANI (@ANI) June 15, 2024
இதனிடையே, உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, ருத்ரபிரயாக் சாலை விபத்தில் பலத்த காயம் அடைந்த பயணிகள் விமானம் மூலம் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.
Uttarakhand CM Pushkar Singh Dhami tweets, "The seriously injured passengers in the Rudraprayag road accident are being airlifted to AIIMS Rishikesh. Instructions have been given to the concerned officials for better treatment of the injured..." https://t.co/zYNMQN9ESn pic.twitter.com/XxKni98FUA
— ANI (@ANI) June 15, 2024
- அமித்ஷா கண்டித்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் விளக்கம்.
- தேர்தலுக்கு பிந்தைய பணிகள், சவால்கள் குறித்து அமித்ஷா விவாதம்.
ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவின்போது, மத்திய அமைச்சர் அமித்ஷா தன்னிடம் பேசியது குறித்து தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
மேடையில் அமித்ஷா கண்டித்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், தமிழிசை சவுந்தரராஜன் புதிய விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து தமிழிசை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், " தேர்தலுக்கு பிந்தைய பணிகள், சவால்கள் குறித்து அமித்ஷா விவாதித்ததாக அவர் தெரிவித்தார்.
நேரப் பற்றாக்குறை காரணமாக அரசியல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ளவும் அவர் அறிவுறுத்தினார்.
விரிவாக பேச முற்பட்டதால், நேரப் பற்றாக்குறை காரணமாக பணிகளை மேற்கொள்ள அறிவுரை வழங்கினார்" என்றார்.
- தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி தொடர்பாக மாநில தலைவர் அண்ணாமலைக்கும், தமிழிசை சவுந்தரராஜனுக்கும் பனிப்போர் ஏற்பட்டுள்ளது.
- தமிழிசை சவுந்தரராஜன் தலைவர்களுக்கு வணக்கம் தெரிவித்தவாறு சென்றார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா நடைபெறுகிறது. விழா மேடையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவரும், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சருமான ஜே.பி.நட்டா, முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு ஆகியோர் அமர்ந்திருந்தனர்.
விழா மேடைக்கு வந்த முன்னாள் தெலுங்கானா கவர்னரும், தென்சென்னை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன் தலைவர்களுக்கு வணக்கம் தெரிவித்தவாறு சென்றார்.
வணக்கம் தெரிவித்துவிட்டு சென்ற தமிழிசை சவுந்தரராஜனை அழைத்து அமித்ஷா பேசும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அதில் தமிழிசை சவுந்தரராஜன் கூறுவதை ஏற்க மறுத்து தான் சொல்வதை கேட்குமாறு மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுவது போன்று உள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி தொடர்பாக மாநில தலைவர் அண்ணாமலைக்கும், தமிழிசை சவுந்தரராஜனுக்கும் பனிப்போர் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க. தேசிய குழு சார்பில் விசாரணை செய்யப்படுவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், மத்திய மந்திரி அமித் ஷா மேடையில் வைத்தே தமிழிசை சவுந்தரராஜனிடம் கடுமையாக பேசிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
திருமதி.தமிழிசை சவுந்தரராஜனை கண்டித்தாரா திரு.அமித்ஷா????
— Prakash Narasimman (@Prakash_2803) June 12, 2024
காட்சி சொல்லும் செய்தி என்ன???? pic.twitter.com/PlGUufGtem
- பிரதமர் மோடி 3-வது முறையாக பதவியேற்று ‘ஹாட்ரிக்’ சாதனை.
- மூத்தவர்கள் மந்திரிகளாகி இருப்பதால் தேசிய தலைவர் பதவி யாருக்கு?
புதுடெல்லி:
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.
பிரதமர் மோடி தொடர்ந்து 3-வது முறையாக பதவியேற்று 'ஹாட்ரிக்' சாதனை படைத்துள்ளார். அவரோடு 71 மந்திரிகளும் பதவியேற்று உள்ளனர்.
பதவியேற்ற மந்திரிகளில் பா.ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் இடம் பெற்று உள்ளனர். ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்காரி, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் மட்டுமல்லாது கட்சியின் தேசிய தலைவராக உள்ள ஜே.பி.நட்டாவும் மந்திரியாகி உள்ளார். அது மட்டுமல்ல, கட்சியின் அடுத்த தலைமை முகமாக பார்க்கப்பட்ட மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான், பூபேந்திர யாதவ், சி.ஆர்.பாட்டீல் ஆகிய முன்னணி தலைவர்களும் மந்திரிகளாகி விட்டனர்.
பா,ஜனதாவைப் பொறுத்தவரை ஒருவருக்கு ஒரு பதவி என்கிற சூத்திரமே பொதுவாக இருந்து வருகிறது. இதன் அடிப்படையில் ஜே.பி.நட்டாவிடம் இருந்து கட்சியின் தேசிய தலைவர் பதவி மாற்றப்படும் என தெரிகிறது. ஏற்கனவே அவரது தலைவர் பதவிக்காலம் முடிவடைந்துதான் இருந்தது. தேர்தலுக்காக நீட்டித்துக் கொடுத்திருந்தனர்.
இதனால் கட்சிக்கு புதிய தலைவரை நியமிக்க வேண்டியது அவசியமாகி இருக்கிறது. புதிதாக யாரை நியமிப்பார்கள்? என கேள்வி எழுந்திருக்கிறது. இருக்கிற மூத்தவர்கள் அனைவரும் மந்திரிகளாகி இருப்பதால் தேசிய தலைவர் பதவி யாருக்கு போகும்? என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போதுள்ள நிலையில் முக்கியமான சிலரை கட்சியின் டெல்லி வட்டாரங்கள் குறிப்பிட்டன. அதில் சுனில் பன்சால், வினோத் தாவ்டே, அனுராக்சிங் தாக்குர் மற்றும் ஓம் பிர்லா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
சுனில் பன்சால்
சுனில் பன்சால் கட்சியின் வேகமான செயல்வீரராக பார்க்கப்படுகிறார். ராஜஸ்தானைச் சேர்ந்த இவருக்கு 54 வயது ஆகிறது. உத்தரபிரதேச மாநிலத்தின் அமைப்பு பொதுச்செயலாளராக இருந்த இவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய பொதுச்செயலாளர் ஆக்கியதுடன் மேற்கு வங்காளம், தெலுங்கானா மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு பொறுப்பாளராகவும் ஆக்கினர். இவருக்கு தலைவர் பதவி கொடுக்க வாய்ப்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.
வினோத் தாவ்டே
இவருக்கு ஈடாக தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டேயும் பார்க்கப்படுகிறார். வினோத் தாவ்டே மராட்டியத்தைச் சேர்ந்தவர். 60 வயது ஆகிறது.
பொதுத்தேர்தல்களில் மக்களை கவரும் யுக்திகளை அமைப்பதில் வல்லவர் என கூறுகிறார்கள். அதுமட்டுமின்றி இந்த ஆண்டின் இறுதியில் மராட்டியத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. மராட்டியத்தை பா.ஜனதா தீவிரமாக பார்ப்பதால் இவருக்கு தலைவர் பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனுராக்சிங் தாக்குர்
இதற்கு அடுத்தபடியாக அனுராக்சிங் தாக்குர் பேசப்படுகிறார். இமாசலபிரதேச முன்னாள் முதல்-மந்திரியின் மகனான இவர் அங்குள்ள ஹமிர்புர் தொகுதியில் தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்று எம்.பி. ஆனவர். ஏற்கனவே மத்திய மந்திரி ஆனவர். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவராகவும் இருந்துள்ளார்.
இமாசலபிரதேசத்தைச் சேர்ந்த ஜே.பி.நட்டாவுக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டு உள்ளதால் இவருக்கு வழங்கப்படவில்லை. இதனால் தேசிய தலைவர் பதவி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
ஓம் பிர்லா
தலைவர் போட்டியில் இருக்கும் மற்றொருவர் ஓம் பிர்லா. 17-வது மக்களவையை நடத்திய சபாநாயகர். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் மந்திரிசபையில் பொறுப்பேற்கவில்லை. எனவே தேசிய தலைவராக வாய்ப்பு கிடைக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த 4 பேரில் யாராவது ஒருவருக்கு தேசிய தலைவர் பதவி வழங்கப்படலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தாலும், பா.ஜனதாவைப் பொறுத்தவரை யாருமே யூகிக்காத ஒருவரை பிரகடனப்படுத்தி ஆச்சரியப்பட வைப்பதையும் ஒரு பாணியாக வைத்துள்ளது என்பதையும் மறக்க வேண்டாம் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- ஆலோசனைக் கூட்டம் ஜெ.பி.நட்டாவின் இல்லத்தில் நேற்று காலை நடைபெற்றது.
- சுமார் 11 மணி நேரம் தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட்டது.
புதுடெல்லி:
பா.ஜ.க. கூட்டணியில் யார், யாருக்கு மந்திரி பதவி, என்னென்ன இலாகா என்பது தொடர்பாக முதல்கட்ட ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள ஜெ.பி.நட்டாவின் இல்லத்தில் நேற்று காலை நடைபெற்றது.
இதில், அமித்ஷா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகளை தொடர்ந்து பிரதமர் மோடி வீட்டில் ஆலோசனை நடத்தப்பட்டது. நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை சுமார் 11 மணி நேரம் தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட்டது.
அதில் புதிய மத்திய மந்திரிகள் தேர்வு செய்யப் பட்டனர். அதன் பிறகு இன்று காலை அமித்ஷா வீட்டில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் மத்திய மந்திரி சபையில் இடம் பெறுபவர்களை பற்றிய முடிவுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து அமைச்சரவையில் இணைய உள்ளவர்களுக்கு போன் மூலம் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. அவர்கள் அனை வரும் டெல்லி லோக் கல்யாண்மார்க்கில் உள்ள பிரதமர் மோடி இல்லத்துக்கு உடனடியாக புறப்பட்டு வருமாறு தகவல் தெரிவிக்கப்பட்டது.
புதிய மந்திரிகளுக்கு பிரதமர் மோடி விருந்து கொடுக்க இருக்கிறார் என் றும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து புதிய மந்திரிகளாக தேர்வானவர்கள் ஒவ்வொருவராக பிரதமர் வீட்டுக்கு வரத் தொடங்கினார்கள்.
அப்படி வந்தவர்கள் அனைவரும் இன்று இரவு புதிய மந்திரிகளாக பதவி ஏற்பார்கள் என்று உறுதிப் படுத்தப்பட்டது. அந்த வகையில் பிரதமர் இல்லத்துக்கு வந்தவர்கள் விவரம் வருமாறு:-
அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின்கட்காரி, ஜே.பி.நட்டா, பியூஸ்கோயல், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், எல்.முருகன், சிவராஜ் சிங் சவுகான், ஜோதிர்ஆதித்ய சிந்தியா, கட்டார், ஹர்ஸ் மல்கோத்ரா, சாவித்திரி தாகூர், ரன்வீத் சிங் பிட்டு, சர்பானந்த் சோனாவால், ஜெயந்த் சவுத்ரி, பி.எல்.வர்மா, பங்கஜ்சவுத்ரி, அன்னப்பூர்ணதேவி, அர்ஜுன்ராம் மேக்வல், தர்மேந்திரபிரதான், ஜிதேந் திரசிங், ராம்தாஸ் அத்வாலே, கஜேந்திர செகாவாத் ஆகியோர் பிரத மர் இல்லத்துக்கு வந்தனர்.
இவர்களில் புதிய மந்திரிகள் ஆவது யார்-யார் என்று பிரதமர் மோடி இறுதி முடிவெடுப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பான கூட்டம் இன்று ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் நடந்தது. அதன் பிறகு பிரதமர் மோடி வீட்டில் இருந்து அனைவரும் புறப்பட்டு சென்றனர். இதையடுத்து பரபரப்பு தகவல்கள் வெளி யாக தொடங்கியது.
முந்தைய மந்திரிசபையில் இடம் பெற்றிருந்த மூத்த மந்திரிகளான அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான், நித்தியானந்த் ராய், ஜோதிர்ஆதித்ய சிந்தியா, எஸ். ஜெய்சங்கர், அஸ்வினி வைஷ்ணவ், ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் புதிய மந்திரி சபையிலும் இடம்பெறுவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே, தென் மாநிலங்களில் யார், யாருக்கு மந்திரி பதவிகள் வழங்கப்பட உள்ளன என்கிற விவரத்தை தேசிய ஜனநாயக கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் ஏற்கெனவே மத்திய இணை மந்திரியாக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த எல். முருகனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுவது உறுதி என்று தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடக மாநிலத்தைப் பொருத்தவரை பா.ஜ.க. வுக்கு பெரும் பலத்தைக் கொடுத்த ஒக்கலிகர் சமூ கத்தின் வாக்கு வங்கியாக இருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலை வர் குமாரசாமிக்கு வேளாண் துறை ஒதுக்கப்பட லாம் என்று கூறப்படுகிறது. அதே மாநிலத்தைச் சேர்ந்தவரும் ஏற்கெனவே மத்திய மந்திரியாக இருந்த வருமான பிரகலாத் ஜோஷி மீண்டும் மந்திரி ஆகிறார்.
தேசிய ஜனநாயக கூட் டணியின் முக்கியக் கட்சி யான தெலுங்கு தேசம் கட்சிக்கு ஒரு கேபினட் மந்திரி பதவியும், ஒரு இணை மந்திரி பதவியும் வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
கேபினட் மந்திரியாக மோகன் நாயுடுக்கு ஊரக வளர்ச்சித் துறையும், அக் கட்சியின் பி. சந்திரசேகருக்கு நிதித் துறையின் இணை மந்திரி பதவியும் வழங்கப் படும் எனத் தெரிய வந்துள்ளது. ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவர் புரந்தேஸ்வரிக்கு இணை மந்திரி தனிப் பொறுப்புடன் வர்த்தக தொழில் துறையும், சி.எம். ரமேசுக்கு சுற்றுலாத் துறை இணை மந்திரி பதவி யும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
தெலுங்கானாவிலும் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலை யில், ஏற்கனவே மத்திய மந்திரியாக இருந்த ஜி.கிஷன் ரெட்டிக்கு கேபினட் பதவி மீண்டும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும், இந்த மாநி லத்தைச் சேர்ந்த பண்டி. சஞ்சய், டிகே அருணாவுக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
பீகாரை சேர்ந்த ஜிதன்ராம் மன்ஜிகி, சிராக் பஸ்வான் ஆகியோரும் மந்தரி சபையில் இடம் பெறுகிறார்கள். அப்னா தளம் கட்சியைச் சேர்ந்த அனுபிரியா பட்டேலும் மந்திரியாவது உறுதியாகி இருக்கிறது.
- அமித்ஷா தனது மனைவியுடன் மகா துவாரகம் வழியாக விஐபி பிரேக் தரிசனத்தில் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
- அமித்ஷா வருகையை ஒட்டி திருப்பதி மற்றும் திருப்பதி மலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
திருப்பதி:
மத்திய மந்திரி அமித்ஷா நேற்று மாலை விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு தனது மனைவி சோனல் ஷாவுடன் வந்தார்.
பின்னர் சாலை மார்க்கமாக திருப்பதி மலைக்கு வந்தார். அமித்ஷாவிற்கு தேவஸ்தான அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். திருப்பதி மலையில் உள்ள வகுள மாதா விருந்தினர் மாளிகையில் நேற்று இரவு அமித்ஷா தங்கினார்.
இன்று காலை அமித்ஷா தனது மனைவியுடன் மகா துவாரகம் வழியாக விஐபி பிரேக் தரிசனத்தில் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். அமித்ஷாவிற்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் பட்டு வஸ்திரம் மற்றும் தீர்த்த பிரசாதங்களை வழங்கி கவுரவித்தனர்.
இதையடுத்து இன்று மதியம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வருகின்றனர்.
பின்னர் விமான மூலம் டெல்லி புறப்பட்டு செல்கின்றனர். அமித்ஷா வருகையை ஒட்டி திருப்பதி மற்றும் திருப்பதி மலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இலவச தரிசனத்தில் 24 மணி நேரத்துக்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
#WATCH | Andhra Pradesh: Union Home Minister Amit Shah along with his wife Sonal Shah, offers prayers at the Tirupati Balaji Temple.
— ANI (@ANI) May 31, 2024
(Source: Tirumala Tirupati Devasthanams Board) pic.twitter.com/h3ij9Vhlbo
- தமிழக கோயில்களில் மத்திய அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம்
- அமித்ஷாவுடன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் சாமி தரிசனம் செய்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உ.பி., மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் இன்று வழிபாடு செய்தார்.
அங்கிருந்து வாரணாசியில் இருந்து திருச்சி வந்த அமித்ஷா, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் வந்தடைந்தார்.
மத்திய அமைச்சர் அமித்ஷாவை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா உள்ளிட்ட பா.ஜ., நிர்வாகிகள் வரவேற்றனர்.
அங்கிருந்து சாலை மார்க்கமாக திருமயம் கோட்டை பைரவர் கோயிலில் அமித்ஷா சாமி தரிசனம் செய்தார்.
அமித்ஷாவுடன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் சாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக ராஜராஜேஸ்வரி சத்யகிரீஸ்வரர் கோயிலில் அமித்ஷா சாமி தரிசனம் செய்தார்.
இதைதொடர்ந்து, அமித்ஷா நாளை காலை ஏழுமலையானை வழிபடுவதற்காக திருப்பதி செல்கிறார்.
அமித்ஷா வருகையை முன்னிட்டு, அவர் செல்லும் வழித்தடங்கள் மற்றும் கோயில்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
- ஒரு அறையில் பிரதமர் அலுவலகமும், மற்றொரு அறையில் சமையல் அறையும், மற்றொரு அறையில் பிரதமர் தங்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
- பிரதமர் தங்குவதற்காக தயார் செய்யப்பட்டுள்ள அறையில் முழுவதும் குளிர் சாதன வசதி செய்யப்பட்டிருக்கிறது.
கன்னியாகுமரி:
பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் போது பிரசாரம் முடிவடைந்ததும் பிரதமர் மோடி ஆன்மீக தலங்களுக்கு சென்று தியானம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். கடந்த 2014, 2019-ம் ஆண்டுகளில் தேர்தல் முடிவடைந்த போது அவர் தியானம் மேற்கொண்டார்.
அதேபோல் தற்போதும் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவடையும் நிலையில் அவர் கன்னியாகுமரியில் கடல் நடுவே இருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் இன்று முதல் வருகிற 1-ந்தேதி வரை 3 நாட்கள் தியானம் செய்கிறார்.
இதற்காக அவர் இன்று வாரணாசியில் இருந்து சிறப்பு விமானம் மூலமாக திருவனந்தபுரத்திற்கு வருகிறார். அங்கிருந்து பிற்பகல் 3:55 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு கன்னியாகுமரி வருகிறார். இங்கு அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்குகிறார்.
பின்னர் அங்கிருந்து கார் மூலமாக மாலை 5:15 மணிக்கு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு சாமி தரிசனம் செய்கிறார். அதன் பிறகு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு தளத்தில் இருந்து தனி படகு மூலமாக கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு செல்கிறார்.
அங்கு முதலில் விவேகானந்தர் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்துகிறார். பின்பு அங்குள்ள தியான மண்டபத்திற்கு சென்று மாலை 6 மணி அளவில் தியானத்தை தொடங்குகிறார்.
வருகிற 1-ந்தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் அங்கே தங்கியிருந்து பிரதமர் மோடி தியானம் செய்ய உள்ளார். இதற்காக விவேகானந்தர் மண்டபத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விவேகானந்தர் மண்டபத்தில் மோடி தங்குவதால் அங்கு மூன்று அறைகள் தயாராக வைக்கப்பட்டிருக்கிறது.
ஒரு அறையில் பிரதமர் அலுவலகமும், மற்றொரு அறையில் சமையல் அறையும், மற்றொரு அறையில் பிரதமர் தங்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் தங்குவதற்காக தயார் செய்யப்பட்டுள்ள அறையில் முழுவதும் குளிர் சாதன வசதி செய்யப்பட்டிருக்கிறது.
ஜூன் 1-ந்தேதி மதியம் 3 மணிக்கு திருவள்ளுவர் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்துகிறார். பின்பு விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து தனி படகு மூலமாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு தளத்திற்கு வருகிறார்.
அங்கிருந்து கார் மூலமாக ஹெலிகாப்டர் தளத்திற்கு மாலை 3:25 மணிக்கு வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டு செல்கிறார். மாலை 4:05 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, சிவகாசி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களை சேர்ந்த போலீஸ் சூப்பிரண்டுகள், 4 டி.ஐ.ஜி.கள் மற்றும் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
களியக்காவிளை, அஞ்சு கிராமம் பகுதியில் உள்ள சோதனை சாவடிகளில் வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் முழுமையாக சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை நடந்து வருகிறது.
கடலோர பகுதிகளிலும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கடற்கரை பகுதியில் உள்ள சோதனை சாவடிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆரோக்கியபுரம் முதல் நீடோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் போலீசார் மற்றும் கடலோர காவல்படையினர் ரோந்து சுற்றி வருகிறார்கள்.
விவேகானந்தர் மண்டபத்தை சுற்றியுள்ள 5 கிலோ மீட்டர் கடல் பரப்பளவு பகுதிக்கு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடல் பகுதியில் கடலோர காவல் படையினர் மற்றும் கப்பற் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயத்தில் சத்தியகிரீசுவரர் சிவாலயமும், சத்தியமூர்த்திப் பெருமாள் கோவிலும் மிகவும் புகழ்பெற்ற தலங்களாகும்.
இந்த கோவிலின் அருகே கோட்டையின் கீழ்ப்பகுதியில் காவல் தெய்வமான கால பைரவர் அருள்பாலிக்கிறார். தமிழகத்திலே வடக்கு பார்த்தபடி தனி கோவில் கொண்ட பைரவர் தலம் இது ஒன்றே ஆகும்.
இந்த கோட்டை பைரவரிடம் வேண்டினால் நினைத்தது நடக்கும். அஷ்டமச்சனி, ஏழரைச்சனி மற்றும் சகல சனி சம்பந்தப்பட்ட தோஷங்களும் இப்பைரவருக்கு அபிஷேகம், வடமாலை, சந்தனகாப்பு செய்து நெய்தீபம், மிளகுதீபம் ஏற்றி வழிபட்டால் சனி தோஷம் விலகும்.
பிதூர் தோஷங்களுக்கு பைரவருக்கு புனுகு சாற்றி, எலுமிச்சம் பழமாலை சூட்டி எள் சாத அபிஷேகம் செய்து வழிபட்டால் பிதூர் தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.
இன்று (வியாழக்கிழமை) தேய்பிறை அஷ்டமி நாளில் இங்கு மத்திய மந்திரி அமித்ஷா சாமி தரிசனம் செய்ய வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று (வியாழக்கிழமை) வாரணாசியில் இருந்து மாலை 3.20 மணி அளவில் தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வருகிறார்.
பின்னர் அவர் மாலை 3.25 மணி அளவில் ஹெலிகாப்டர் மூலம் திருமயம் காலபைரவர் கோவிலுக்கு செல்கிறார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு, மீண்டும் மாலை 5.20 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடைகிறார். பின்னர் மாலை 5.25 மணி அளவில் தனி விமானம் மூலம் திருப்பதிக்கு செல்கிறார்.
அமித்ஷா வருகையை முன்னிட்டு திருமயத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். கோட்டை கால பைரவர் கோவில் மற்றும் சத்தியகிரீசுவரர் கோவிலில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
- கிழக்கு மண்டலத்தில் ஜார்க்கண்ட், பீகார் மாநிலங்களில் பா.ஜ.க. மிகப்பெரிய எழுச்சியாக உருவெடுக்கும். இது நிச்சயம் நடக்கும்.
- தென் மாநிலங்களில் கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு ஆகியவற்றில் அதிக இடங்களை பா.ஜ.க. தான் பிடிக்கும்.
மத்திய மந்திரி அமித்ஷா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-
பாரதிய ஜனதா கட்சிக்கு இந்த தடவை தெற்கிலும், கிழக்கு பிராந்தியத்திலும் கணிசமான வெற்றி கிடைக்கும். மேற்கு வங்காளத்தில் பாரதிய ஜனதாதான் அதிக இடங்களில் வெற்றி பெறும். மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 24 முதல் 30 இடங்கள் வரை எங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ஒடிசாவில் 21 தொகுதிகள் இருக்கின்றன. அதில் 17 தொகுதிகளுக்கு நாங்கள் குறி வைத்து இருக்கிறோம். ஒடிசாவில் 147 சட்டசபை தொகுதிகளில் 75 இடங்கள் எங்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
அது போல தெலுங்கானாவில் மொத்தம் உள்ள 17 தொகுதிகளில் 10 இடங்கள் வரை எங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆந்திராவில் எங்களது கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் ஆட்சி அமைக்கும்.
கிழக்கு மண்டலத்தில் ஜார்க்கண்ட், பீகார் மாநிலங்களில் பா.ஜ.க. மிகப்பெரிய எழுச்சியாக உருவெடுக்கும். இது நிச்சயம் நடக்கும்.
தென் மாநிலங்களில் கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு ஆகியவற்றில் அதிக இடங்களை பாரதிய ஜனதா தான் பிடிக்கும். இதன் மூலம் 400 இடங்கள் என்ற எங்கள் இலக்கு நிச்சயம் நிறைவேறும்.
2014-ம் ஆண்டில் பா.ஜ.க. தனித்து ஆட்சி அமைக்கும் என்று நாங்கள் கூறினோம். யாரும் நம்பவில்லை. ஆனால் எங்களுக்கு தனி மெஜாரிட்டி கிடைத்தது.
2019-ம் ஆண்டு தேர்தலில் 300-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றுவோம் என்று கோஷம் எழுப்பினோம். ஆனால் அரசியல் நிபுணர்கள் அதை ஏற்கவில்லை. கடைசியில் நாங்கள் சொன்னது நடந்தது.
அதுபோலதான் இந்த தடவையும் நாங்கள் சொல்வதை யாரும் நம்ப மறுக்கிறார்கள். 400 இடங்கள் என்ற இலக்கு நிச்சயம் நிறைவேறும்.
இவ்வாறு அமித்ஷா கூறினார்.
- லூதியானாவில் நடந்த கூட்டத்தில் டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் பங்கேற்றார்.
- அப்போது பேசிய அவர், ஆம் ஆத்மிக்கு 13 மக்களவை தொகுதிகளைக் கொடுங்கள் என்றார்.
சண்டிகர்:
டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரத்துக்காக இன்று பஞ்சாப் மாநிலம் வந்தார். லூதியானாவில் நடந்த கூட்டத்தில் கெஜ்ரிவால் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
இன்று, நான் உங்களிடம் வாக்கு கேட்க வந்துள்ளேன். இது மத்திய அரசுக்கான தேர்தல். மத்தியில் நாம் பலவீனமாக இருக்கிறோம்.
மத்தியில் ஆட்சி அமைந்தால் நமது கைகள் வலுவடையும். எனவே ஆம் ஆத்மி கட்சிக்கு 13 மக்களவை தொகுதிகளைக் கொடுங்கள். அதனால் உங்கள் உரிமைகளை மையத்தில் இருந்து கொண்டு வரலாம்.
நாட்டில் சர்வாதிகாரம் நடந்து கொண்டிருக்கிறது. இரு நாட்களுக்கு முன் லூதியானாவுக்கு வந்த உள்துறை மந்திரி அமித் ஷா, ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு பஞ்சாப் அரசு ஒழிக்கப்படும். பகவந்த் மான் பதவி விலகுவார். அவரை முதல் மந்திரி பதவியில் இருந்து நீக்குவோம் என மிரட்டியுள்ளார். அவர்கள் இலவச மின்சாரத்தை நிறுத்த முடிவு செய்துள்ளார்கள். எனவே, ஒரு வாக்கு கூட பா.ஜ.க.வுக்கு ஆதரவாக விழக்கூடாது.
அனைத்து வாக்குகளும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக போடப்பட வேண்டும். பஞ்சாப்புக்கு கிடைக்க வேண்டிய ரூ.9,000 கோடி அவர்களால் தடுக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.
#WATCH | Addressing a town hall meeting in Ludhiana, Delhi CM Arvind Kejriwal says," Today, I have come to ask for your votes…These are elections for the Centre, we are weak at the centre...If we will have power in the centre, our hands will get stronger…Give 13 Lok Sabha seats… pic.twitter.com/RXgt77PfqG
— ANI (@ANI) May 28, 2024
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்