search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குட்கா"

    • மூட்டை, மூட்டையாக குட்கா, புகையிலை பதுக்கல்.
    • முகமது அலிஜின்னாவை போலீசார் கைது செய்தனர்.

    வேளச்சேரி:

    வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளி சந்திப்பு அருகே இன்ஸ்பெக்டர் விமல் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் பெரிய பையுடன் வந்தார்.

    அவரிடம் சோதனை செய்தபோது பையில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை கடத்தி வந்திருப்பது தெரிந்தது. விசாரணையில் அவர் அதே பகுதி பெரியார் நகரை சேர்ந்த முகமது அலிஜின்னா (38) என்பது தெரிந்தது.

    இதையடுத்து அவரது வீட்டிற்கு சென்று போலீசார் சோதனையிட்டனர். அங்கு மூட்டை, மூட்டையாக குட்கா, புகையிலை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அவர், வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வெளி மாநிலங்களில் இருந்து தடைசெய்யப்பட்ட, புகை யிலை, குட்கா, பான்மசாலா, உள்ளிட்ட பொருட்களை வாங்கி வந்து பதுக்கி வைத்து வேளச்சேரி, ஆதம்பாக்கம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு கடந்த ஒரு ஆண்டுக் கும் மேலாக விற்பனை செய்து வந்தது தெரிந்தது.

    இதையடுத்து முகமது அலிஜின்னாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 230 கிலோ குட்கா, புகையிலை பொருட் கள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • குட்கா, பான் மசாலாவில் நிகோடின் இருப்பது மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
    • புகையிலை அடிப்படையிலான பொருட்களுக்கு குஜராத் அரசு மேலும் ஓராண்டுக்கு தடை விதித்தது.

    அகமதாபாத்:

    குட்கா, பான் மசாலா, மெல்லும் புகையிலைப் பொருட்கள் உள்ளிட்டவற்றிற்கு தடை விதித்து கடந்த ஆண்டு செப்டம்பரில் குஜராத் அரசு உத்தரவிட்டிருந்தது.

    இந்நிலையில், குஜராத்தில் நிகோடின் மற்றும் புகையிலை அடிப்படையிலான குட்கா, பான் மசாலா, மெல்லும் புகையிலைப் பொருட்களை தயாரிக்க, விற்பனை செய்ய ஓராண்டுக்கு தடை விதித்து அம்மாநில அரசு அரசாணை பிறப்பித்தது.

    குட்கா, பான் மசாலாவில் நிகோடின் இருப்பது மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே குடிமக்கள் மற்றும் வருங்கால சந்ததியினரின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு குட்காவுக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை செப்டம்பர் 13-ம் தேதி முதல் அடுத்த ஓராண்டுக்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
    • உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சட்டசபைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா கொண்டு வந்தது தொடர்பாக அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ-க்களுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

    இந்த நோட்டீஸை உயர் நீதிமன்றம் தொடர்ச்சியாக இருமுறை ரத்து செய்திருந்த நிலையில், அதைஎதிர்த்து அ.தி.மு.க. ஆட்சியில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு நிலுவையில் இருந்துவந்தது.

    இந்நிலையில் இந்த மேல்முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை நாளை (இன்று) வழங்குவதாக கூறினார்.

    அதன்படி, இன்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், தமிழ சட்டசபைக்குள் குட்கா எடுத்துச் சென்றதற்காக தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

    உரிமை மீறல் நோட்டீஸ் குறித்து மீண்டும் சபாநாயகர் விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

    • எதிர்மனுதாரராக உள்ள 18 எம்.எல்.ஏக்களில், நான்கு பேருக்கு மட்டுமே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
    • அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பி அவர்கள் கருத்தை கேட்ட பின்னர் இந்த வழக்கின் தீர்ப்பை பிறப்பிக்க வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சட்டப்பேரவைக்குள் தடை செய்யப்பட்ட குட்காவை கொண்டு சென்றதாக தற்போது முதலமைச்சராக பதவி வகிக்கும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்எல்ஏ-க்களுக்கு எதிராக சட்டசபை உரிமைக்குழு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியது.

    இந்த நோட்டீசில் அடிப்படைத் தவறுகள் உள்ளதாகக் கூறி, அதை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டு, இந்த விவகாரத்தில் உரிமை மீறல் இருப்பதாகக் கருதினால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டது.

    இதையடுத்து உரிமைக்குழு, தி.மு.க. எம்எல்ஏ-க்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு 2-வது நோட்டீசையும் ரத்து செய்தது.

    இதை எதிர்த்து முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில், சட்டசபைச் செயலாளர் மற்றும் உரிமைக்குழு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த வழக்குகள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி. குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது.


    அப்போது ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், இந்த நோட்டீஸ் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தற்போதைய சட்டசபை தலைவர் தான் முடிவெடுக்க முடியும் என்பதால் அதனை அவருடைய முடிவுக்கே விட்டுவிட வேண்டுமெனக் கூறினார்.

    அதையேற்றுக் கொண்ட நீதிபதிகள், சட்டசபை மற்றும் நீதிமன்றத்தின் அதிகாரங்கள் என்ன என்பது தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. எனவே ஒன்றோடு ஒன்று தலையீடு செய்யக்கூடாது. உரிமை மீறல் நோட்டீஸ் மீது இறுதி முடிவெடுக்கப்படாத நிலையில், அதில் தலையிட விரும்பவி்ல்லை. அவ்வாறு தலையீடு செய்தால் அது தவறான முன்னுதாரணமாகி விடும். மேலும் அது மிகவும் ஆபத்தானது. இதுதொடர்பாக புதிதாக அமைந்துள்ள சட்டசபை முடிவுக்கே விட்டுவிடலாம், என கருத்து தெரிவித்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள இன்று பிறப்பித்தனர். அதில் நீதிபதிகள் தீர்ப்பை பிறப்பிக்க தயாரான போது, அட்வகேட் ஜெனரல் பி.எஸ். ராமன் ஆஜராகி, இந்த வழக்கில் எதிர்மனுதாரராக உள்ள 18 எம்.எல்.ஏக்களில், நான்கு பேருக்கு மட்டுமே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    மீதமுள்ள 14 பேருக்கு இதுவரை நோட்டீஸ் அனுப்பவில்லை. இந்த வழக்கில் தற்போது நீங்கள் தீர்ப்பளித்தால், இவர்கள் மேல்முறையீடு செல்லும் பொழுது எங்களுடைய கருத்தை கேட்காமலேயே ஐகோர்ட்டு தீர்ப்பளித்து விட்டது என்று ஒரு நிலைப்பாட்டை எடுப்பார்கள். அதனால் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பி அவர்கள் கருத்தை கேட்ட பின்னர் இந்த வழக்கின் தீர்ப்பை பிறப்பிக்க வேண்டும். அதிமுக ஆட்சிக்காலத்தில் இந்த மேல் முறையீட்டு வழக்கை தாக்கல் செய்யும்போது அவர்கள் நோட்டீஸ் அனுப்பாமல் வழக்கு நடத்தியுள்ளனர் .

    இதை நான் கூட கவனிக்கவில்லை. அதற்காக மன்னிக்கவும் என்று கோரிக்கை விடுத்தார்.

    உடனே நீதிபதிகள் ஆவணங்களை எடுத்து பார்த்தனர். பின்னர் இந்த வழக்கில் எதிர்மனுதாரராக உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப வில்லை. நோட்டீஸ் அனுப்பாததற்கு காரணம் அவர் கிடைக்க வில்லை என்று அச்சிடப்பட்டுள்ளது. எதிர்மனுதாரர்கள் அனைவரும் பிரபல மானவர்கள் என்று கூறினர். பின்னர், எதிர்மனு தாரர்களாக உள்ள மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 14 பேருக்கும் எலக்ட்ரானிக் முறையிலோ அல்லது நேரிலோ நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அவர்கள் நோட்டீசை பெற்றுக் கொண்டு வருகிற வியாழக்கிழமை தங்கள் தரப்பு வாதத்தை முன் வைக்கலாம். இந்த வழக்கு விசாரணையை வியாழக்கிழமைக்கு தள்ளி வைக்கிறோம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்

    • விசாரணையில் ஆந்திராவில் இந்து குட்காவை கடத்தி வந்ததாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
    • குட்கா கடத்தல் கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    ஆந்திராவில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள் திருவள்ளூர் வழியாக காரில் கடத்தப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்தது.

    அவரது உத்தரவுப்படி திருவள்ளூர் தாலுகா போலீசார் பட்டரை பெரும்புதுார் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் மொத்தம் 102 கிலோ இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் ஆகும்.

    இது தொடர்பாக காரில் இருந்த திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த சட்டாராம், தயாராம் ஆகிய 2 பேரை கைது செய்தனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் ஆந்திராவில் இந்து குட்காவை கடத்தி வந்ததாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து குட்கா, புகையிலை எங்கு கடத்தி செல்லப்பட்டது? அவர்களுடன் தொடர்பில் உள்ள குட்கா கடத்தல் கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதான 2 பேரையும் போலீசார் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • குட்கா-புகையிலைப் பொருட்கள் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
    • வீரப்பன்சத்திரம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

    ஈரோடு:

    தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதனடிப்படையில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேப்போல் கடைகளிலும் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சமீப காலமாக ஈரோடு மாநகராட்சி பகுதியில் குட்கா-புகையிலைப் பொருட்கள் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க போலீசார் தீவிர சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு சத்தி ரோட்டில், சி.என்.சி. கல்லூரி எதிரில் வீரப்பன்சத்திரம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்குள்ள பேக்கரி ஒன்றில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களான பான் மசாலா, குட்கா, புகையிலை ஆகியவை விற்பனைக்கு வைத்திருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அங்கு மேற்கொண்ட சோதனையில் ரூ.3 லட்சத்து 3 ஆயிரத்து 480 மதிப்பிலான பான்மசாலா, குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட 305 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து பவானி மெயின்ரோடு, அசோகபுரம், லட்சுமி நகரை சேர்ந்த பாலச்சந்தர் (37) மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    • குட்கா, போதை பாக்குகள் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
    • போதை புகையிலை பொருட்கள் கடத்தி வந்த புனாமா ராம் சவுத்ரியை போலீசார் கைது செய்தனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் டோல்கேட் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் எஸ்.எஸ்.ஐ. கருப்புசாமி உள்ளிட்ட பெருந்துறை போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்பொழுது அந்த வழியாக திருப்பூர் நோக்கி வந்த ஒரு சொகுசு காரை போலீ சார் மடக்கி நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, போதை பாக்குகள் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து காரை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இதில் அவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த புனாமா ராம் சவுத்ரி (வயது 39) என்பதும், தற்போது இவர் திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் தங்கி இருப்பதும் தெரிய வந்தது. மேலும் அவர் அவினாசி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், பெட்டி கடைகளுக்கு நேரடியாக போதை புகையிலை மற்றும் போதை பாக்கு பொட்டலங்களை விநியோகம் செய்து வருவதை தொழிலாக வைத்திருப்பதும் தெரிய வந்தது.

    இதையடுத்து அவர் கொண்டு வந்த 400 கிலோ எடையுள்ள ரூ.3.22 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் போதை புகையிலை பொருட்களையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் போதை புகையிலை பொருட்கள் கடத்தி வந்த புனாமா ராம் சவுத்ரியை போலீசார் கைது செய்தனர்.

    இதை தொடர்ந்து பெருந்துறை போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • 8, சிங்காரப்பேட்டையில் 9, மத்தூரில் 2, சாமல்பட்டியில் 1 கடைகள் என மொத்தம், 26 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
    • குட்கா விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

    சிங்காரப்பேட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை போலீஸ் உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை விற்ற 26 கடைகளுக்கு நேற்று சீல் வைக்கப்பட்டது.

    ஊத்தங்கரை போலீஸ் டி.எஸ்.பி., பார்த்திபன் தலைமையில், போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் இணைந்து, ஊத்தங்கரையில் 6 கடைகளும், கல்லாவியில் 8, சிங்காரப்பேட்டையில் 9, மத்தூரில் 2, சாமல்பட்டியில் 1 கடைகள் என மொத்தம், 26 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

    இதில், உணவு பாதுகாப்பு துறை ஆய்வாளர்கள் முத்துக்குமார், முத்து மாரியப்பன், ராஜசேகர், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஊத்தங்கரை கந்தவேல், சிங்காரப்பேட்டை சந்திரகுமார், மத்தூர் பாலமுருகன், கல்லாவி எஸ்.ஐ., அன்பழகன், ஊத்தங்கரை எஸ்.ஐ., கணேஷ்பாபு, மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டு சீல் வைத்தனர்.

    மேலும் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

    • கர்நாடகாவில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி சென்றது தெரியவந்தது.
    • போலீசார் டெம்போவில் இருந்த 760 கிலோ எடையுள்ள 68 மூட்டையில் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    காரிமங்கலம்:

    தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி பகுதியில் காரிமங்கலம் போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூரில் இருந்து சேலம் நோக்கி வேகமாக சென்ற டெம்போவை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    அப்போது அதிலிருந்து டிரைவர் உட்பட இரண்டு பேர் வண்டியை நிறுத்திவிட்டு தப்பி ஓடினர். போலீசார் துரத்திச் சென்று ஒருவரை பிடித்து விசாரித்ததில் கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் கேத்மாரனஅள்ளி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (வயது 33) என தெரிய வந்தது.

    மேலும் கர்நாடகாவில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி சென்றது தெரியவந்தது. இதை அடுத்து போலீசார் டெம்போவில் இருந்த 760 கிலோ எடையுள்ள 68 மூட்டையில் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.5 லட்சமாகும்.

    இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து டெம்போ மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து தப்பி ஓடிய கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் கே என் புரா பகுதியைச் சேர்ந்த சஷாங் என்பவரை தேடி வருகின்றனர்.

    • காரில் இருந்து 500 கிலோ புகையிலை பொருட்களுடன் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மீது மோதியது.

    காங்கயம்:

    திருப்பூரில் இருந்து ஒரு காரில் 500 கிலோ புகையிலை பொருட்களை கடத்தி செல்லப்படுவதாகவும், எனவே அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் உஷாராக இருக்கும் படியும், சோதனை சாவடியை கடந்து செல்லும் வாகனங்களை முழுமையாக சோதனை செய்யுறுமாறும் அறிவுறுத்தப்பட்டது.

    இதையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து போலீஸ் நிலைய போலீசாரும், சோதனை சாவடிகளில் பணியில் இருந்த போலீசாரும் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தினர்.

    இந்தநிலையில் திருப்பூர்-காங்கயம் சாலையில் காங்கயத்தை அடுத்துள்ள ஊதியூர் போலீஸ் நிலைய பகுதி சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த வெளிமாநில பதிவு எண் கொண்ட காரை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினர். ஆனால் அந்த கார் நிற்காமல் தாராபுரம் நோக்கி அதிவேகமாக சென்றது.

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் ஆகியோர் அந்த காரை பின்னால் விரட்டி சென்றனர். போலீசார் பின் தொடர்ந்து வருவதை கவனித்த கார் டிரைவர், காரின் வேகத்தை அதிகப்படுத்தினார். இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ கவிழ்ந்தது.

    இதையடுத்து கார் டிரைவரை போலீசார் பிடித்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அருள் (வயது 24) என்பதும், அவர் ஓட்டி வந்த காரில் 500 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பதும், பெங்களூரில் இருந்து பழனிக்கு புகையிலை பொருட்களை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் அருளை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காரில் இருந்து 500 கிலோ புகையிலை பொருட்களுடன் கார் பறிமுதல் செய்யப்பட்டது. சினிமா பாணியில் காரில் புகையிலை பொருட்களை கடத்திய வாலிபரை போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்த சம்பவம் காங்கயம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பூந்தமல்லி:

    புகையிலை அடிப்படையிலான பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதால் கடந்த 2013ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டது. 2013ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை, விநியோகத்திற்கான தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 2025ம் ஆண்டு மே 23ம் தேதி வரை இந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் போலீசாரும் , அதிகாரிகளும் வாகன சோதனையில் ஈடுபட்டு குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று பூந்தமல்லி அருகே போலீசார் வாகன சோதனையின் போது வாகனம் ஒன்று நிற்காமல் சென்றது.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் நிற்காமல் சென்ற வானகத்தை சினிமா பாணியில் விரட்டி சென்றனர். ஆனால் நசரத்பேட்டை சிக்னலில் அந்த வாகனம் விபத்தில் சிக்கியது.

    போலீசார் பார்த்ததும் விபத்தை ஏற்படுத்திய டிரைவர் தப்பியோடிவிட்டார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வாகனத்தை சோதனை செய்ததில், ஒரு டன் குட்கா பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    குட்கா பொருட்களுடன் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 230 மூட்டைகளில் 1658 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • குட்கா கடத்தல் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகா பெருமாநல்லூர் அருகே வளசப்பாளையத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 2 கார்கள் விபத்துக்குள்ளானது. கார்களை ஓட்டி வந்த டிரைவர் உள்பட கார்களில் வந்தவர்கள் காரை நிறுத்திவிட்டு தப்பியோடி விட்டனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்த போது 2 காருக்குள்ளும் 158 மூட்டைகளில் 1,024 கிலோ குட்கா இருந்தது. பெங்களுருவில் இருந்து கோவைக்கு 2 காரில் அந்த கும்பல் குட்காவை கடத்தி வந்ததும், விபத்து ஏற்பட்டதும் அங்கிருந்து தப்பி சென்றதும் தெரியவந்தது.

    குட்கா மற்றும் கார்களை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தப்பியோடியவர்களை கார் எண்கள் மூலம் விசாரணை நடத்தி தேடி வந்தனர். மேலும் அந்த கும்பலை பிடிக்க பெருமாநல்லூர் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாரதிராஜா, போலீஸ்காரர்கள் கார்த்திக்கேயன், சதீஷ், மயில்சாமி, பாலகுமாரன் ஆகியோர் அடங்கிய தனிப்படையும் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பெருமாநல்லூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது குஜராத் பதிவெண் கொண்ட கார் ஒன்று வந்தது. அந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்த போது காரில் 230 மூட்டைகளில் 1658 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார் காரில் வந்த ராஜஸ்தானை சேர்ந்த ஓபராம் (வயது 30) என்பவரை கைது செய்தனர்.

    அவரிடம் விசாரணை நடத்திய போது ராஜஸ்தானை சேர்ந்த தினேஷ்குமார்(21), மற்றொரு தினேஷ்குமார் (21), கேவல்ராம் (26) ஆகிய 3பேர் பெங்களூரில் இருந்து குட்கா பொருட்களை கோவை, அவினாசி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைத்ததும், கடந்த 2 நாட்களுக்கு முன் குட்கா பொருட்களை ஏற்றி வந்து விபத்துக்குள்ளான கார்கள் அவர்களுடையதும் தெரிய வந்தது.

    பெங்களூரில் புகையிலை பொருட்களுக்கு தடை இல்லாததால் அவர்கள் அங்கிருந்து திருப்பூர், கோவைக்கு புகையிலை பொருட்களை அனுப்பி வைத்துள்ளனர். போலீசில் பிடிபடாமல் இருக்க சொகுசு கார்களில் அனுப்பி வந்துள்ளனர். திருப்பூர், கோவைக்கு அனுப்பி வைக்கப்படும் புகையிலை பொருட்களை மதாராம்(26), துதாராம்(24), கோபரம்(35) ஆகிய 3பேரும் திருப்பூரில் தங்கியிருந்து விற்பனை செய்து வந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    இதனிடையே பெங்களூருக்கு விரைந்த தனிப்படையினர் தினேஷ்குமார், மற்றொரு தினேஷ்குமார் , கேவல்ராம் ஆகிய 3பேரை கைது செய்து திருப்பூர் அழைத்து வந்தனர். இந்த சம்பவத்தில் மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் குட்கா கடத்தல் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×