search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 188514"

    • நடப்பு ஆண்டு 604 மாணவ-மாணவிகள் இடைநின்ற மாணவர்களாக உள்ளனர்.
    • முகவரி மற்றும் செல்போன் எண் விவர பட்டியல் அந்தந்த வார்டு கவுன்சிலர்களுக்கு தெரிவிக்கப்படும்.

    திருப்பூர் :

    சமீபகாலமாக தொழில் நிலை சீராக இல்லாததால் திருப்பூரில் இருந்து வெளிமாவட்ட தொழிலாளர்கள் சொந்த ஊர் நோக்கி பயணப்பட்டுள்ளனர். இதுதவிர மாநகரில் ஓரிடத்தில் இருந்து வேறு இடத்துக்கு வீட்டை மாற்றிச்சென்றது உள்ளிட்ட காரணங்களால் நடப்பு ஆண்டு 604 மாணவ-மாணவிகள் இடைநின்ற மாணவர்களாக உள்ளனர். இவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில் கல்வி தொடராமல் இருக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து மாமன்ற கூட்டத்தில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் பேசும்போது, மாநகராட்சி பள்ளிகளில் இடைநின்ற மாணவர்கள் 604 பேர் உள்ளனர். அவர்களின் முகவரி மற்றும் செல்போன் எண் விவர பட்டியல் அந்தந்த வார்டு கவுன்சிலர்களுக்கு தெரிவிக்கப்படும். கவுன்சிலர்கள் தங்கள் வார்டுக்கு உட்பட்ட பள்ளிகளில் இடைநின்ற மாணவர்களை தொடர்பு கொண்டு மீண்டும் அவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சி பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் தேவை உள்ளது. நமக்கு நாமே திட்டத்தின் மூலமாக நடப்பு ஆண்டில் 75 வகுப்பறைகள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் கவுன்சிலர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

    • 352 கிலோமீட்டர் தூரத்திற்கு குடிநீர் இணைப்பு விடுபட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.
    • ரூ.99 கோடியே 80 லட்சம் மதிப்பில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி அவசர கூட்டம் இன்று காலை மேயர் தினேஷ் குமார் தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு கமிஷனர் பவன் குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மேயர் தினேஷ்குமார் பேசியதாவது:- திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பல ஆண்டுகளாக இருந்து வந்த தெரு விளக்கு பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக முதல் கட்டமாக 3 மற்றும் 4 வது மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் 4755 தெரு விளக்குகளுக்கு டெண்டர் விடப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.அதேபோல் 1 மற்றும் 2-வது மண்டலம் உட்பட்ட பகுதிகளில் 4,238 தெரு விளக்குகளுக்கும் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

    அதேபோல் மின் சிக்கனத்தை கடைபிடிக்கும் வகையில் சோடியம் விளக்குகளுக்கு பதிலாக எல்இடி., விளக்குகள் பொருத்தும் பணிக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது.இந்தப் பணிகள் அனைத்தும் நாளை தொடங்கப்பட உள்ளது.மாநகர் முழுவதும் சுமார் 14,000 தெரு விளக்குகள் பொருத்தப்பட உள்ளது.

    இதே போல் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் நான்காவது கூட்டு குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் எடுக்கப்பட்ட பிரத்யேக ஆய்வில் 352 கிலோமீட்டர் தூரத்திற்கு வீடுகள்இ வணிக வளங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு குழாய்கள் பதிப்பது மற்றும் குடிநீர் இணைப்பு வழங்குவது விடுபட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து ரூ.56 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஜூன் இறுதிக்கு முன்பாக இந்த பணிகள் தொடங்கப்படும்.மாநகர் முழுவதும் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.99 கோடியே 80 லட்சம் மதிப்பில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட உள்ளது.

    மாநகர் பகுதிகளில் பாதாள திட்டப்பணிகள் 89 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினை இல்லாத வகையில் நான்கு நாட்களுக்கு ஒரு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்திலேயே நமக்கு நாமே திட்டத்தில் அதிக நிதியை திருப்பூர் மாநகராட்சி பெற்றுள்ளது தற்போது ரூ.1கோடியே 80 லட்சம் மதிப்பில் பணிகள் நடந்து வருகிறது. மழைநீர் பிரச்சனைக்கு தீர்வாக தண்ணீர் தேங்கும் இடங்களில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டது என்றார்.

    • உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.26 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
    • விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் கோவில்வழியில் செயல்பட்டு வரும் தற்காலிக பஸ் நிலையத்தை நிரந்தர பஸ் நிலையமாக மாற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி கோவில்வழி பஸ் நிலையத்தை நிரந்தர பஸ் நிலையமாக மாற்றி, உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.26 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதைத்தொடர்ந்து கோவில்வழி பஸ் நிலைய கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

    கட்டுமான பணிகள் தொடங்கும்போது, பஸ்களை வேறு இடத்தில் இயங்கும் வகையில் மாற்று இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் ஆகியோர் கோவில்வழி பஸ் நிலையம் அருகே ஆய்வு மேற்கொண்டனர். 2 இடங்கள், தற்காலிகமாக பஸ்களை இயக்குவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு இடத்தை முடிவு செய்து அங்கிருந்து பஸ்கள் இயக்கப்படும். விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வின் போது உதவி ஆணையாளர் வினோத், தி.மு.க. பகுதி செயலாளர் குமார் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

    • பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
    • தோண்டப்பட்ட குழிகளை உடனடியாக நிரப்பி சாலை அமைக்கவும் ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருகிறது. ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் பணியை முடிக்காமல் கிடப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்/ இதனை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    இந்தநிலையில் திருப்பூர் மும்மூர்த்தி நகர் பாறை குழி மற்றும் வார்டு -32 தங்க மாரியம்மன் கோவில் 2-வது வீதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகள் குறித்து மேயர் தினேஷ்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்கவும். முடிக்கப்பட்ட இடங்களில் தோண்டப்பட்ட குழிகளை உடனடியாக நிரப்பி சாலை அமைக்கவும் ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

    இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி. கிரியப்பனவர், துணை மேயர் ஆர்.பாலசுப்ரமணியம் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

    • ரூ.57½ லட்சம் மதிப்பில் தார் தளம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
    • தென்றல் நகர் முதல் அபிராமி கார்டன் வரை தார் தளம் அமைக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 47-வது வார்டு தென்றல் நகர் முதல் அபிராமி கார்டன் வரை மெயின் ரோட்டில் ரூ.57½ லட்சம் மதிப்பில் தார் தளம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. பூமி பூஜையில் திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், தி.மு.க. தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், கவுன்சிலர்கள் ராதாகிருஷ்ணன், ஜெயசுதா பூபதி, உதவி ஆணையாளர் வாசுகுமார், வட்ட செயலாளர்கள் வெங்கட்ராஜா, பத்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • அனவரத சுந்தர விநாயகர் கோவில் தெருவில் கிழக்கு பகுதியில் அகலமான கழிவு நீரோடை உள்ளது.
    • எல்.ஐ.சி காலனியில் அமைந்துள்ள பூங்காவில் வேலைகள் முடிந்தும் மக்களின் பயன்பாட்டுக்கு வரவில்லை.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் ராஜூ முன்னிலை வகித்தார். தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் மனு அளித்தனர்.

    கழிவுநீரோடை

    நெல்லை மாநகராட்சி 16-வது வார்டுக்கு உட்பட்டது பேட்டை அனவரத சுந்தர விநாயகர் கோவில் தெரு. இந்த தெருவில் கிழக்கு பகுதியில் அகலமான கழிவு நீரோடை உள்ளது. ஆனால் அதனை மூடி போட்டு மூடாமல் திறந்த நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் அந்த பகுதியில் கழிவு நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் நிலை உருவாகியுள்ளது.

    எனவே அந்த பகுதியில் காங்கிரீட் மூடி அமைத்து சுகாதார சீர்கேடு இல்லாமல் பாதுகாத்து தர வேண்டும் என்று மக்கள் நீதி மையம் கட்சியின் நெல்லை மத்திய மாவட்ட துணைச் செயலாளர் மாரிராஜா தலைமையில் வட்ட செயலாளர்கள் வீரராகவன், தங்கவேல் மற்றும் நிர்வாகிகள் கந்தசாமி, இசக்கியப்பன், சுப்புராஜ் ஆகியோர் மனு அளித்தனர்.

    பூங்கா

    நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட 54- வது வார்டு தியாகராஜ நகர் எல்.ஐ.சி காலனியில் அமைந்துள்ள பூங்காவில் வேலைகள் முடிந்து இன்னும் மக்களின் பயன்பாட்டுக்கு வரவில்லை. இந்த பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் சிறுவர்கள், வயதானவர்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும், விளையாடவும் பயன்படுத்திக் கொள்ள விரைவில் அதனை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கத்தினர் மனு அளித்தனர்.

    இந்த கூட்டத்தின் போது கவுன்சிலர்கள் நித்திய பாலையா, சுந்தர், மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா, உதவி கமிஷனர் காளிமுத்து, உதவி செயற்பொறியாளர்கள், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பொது மக்கள் துணிப்பைகளை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் "மீண்டும் மஞ்சப்பை" திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
    • ரூ.10 விலையில் பொது மக்கள் மஞ்சள் பைகளை பெற்றனர்.

    திருப்பூர் :

    பொது மக்கள் துணிப்பை களை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் "மீண்டும் மஞ்சப்பை" திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து நெகிழி இல்லா திருப்பூர், மாநகராட்சியாக மாற்றிட திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் மஞ்சப்பை இயந்திரம் அமைக்கப்பட்டது. இதனை இன்று திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் பவன் குமார் ஜி கிரியப்பனவர், துணை மேயர் ஆர்.பாலசுப்ரமணியம், தெற்கு மாநகர செயலாளர் டி கே டி மு.நாகராசன், 22வது வார்டு கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், வாலிபாளையம் பகுதி செயலாளர் மு.க. உசேன் மற்றும் நிர்வாகிகள் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும், திறந்து வைத்த மஞ்சள் பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தின்

    மூலம் ரூ.10 விலையில் பொது மக்கள் மஞ்சள் பைகளை பெற்றனர்.இவ்வியந்திரத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 300 பைகள் நிரப்பப்படும். பைகள் தீரும் பட்சத்தில் உடனடியாக இயந்திரத்தில் பைகள் நிரப்பப்படும். ரூ.10 காசு அல்லது நோட்டுகளாக இந்த இயந்திரத்தில் செலுத்தி பொதுமக்கள் மஞ்சள் பைகளை பெறலாம்.

    • பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் வருகிற 25-ந்தேதி நடக்கிறது.
    • மேயர் இந்திராணி தலைமை தாங்குகிறார்.

    மதுரை

    மதுரை மாநகராட்சியின் மக்கள் தொடர்பு அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு செவ்வாய்கிழமை தோறும் வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்ட லங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.

    அதன்படி வருகிற 25-ந் தேதி (செவ்வாய்கிழமை) சி.எம்.ஆர். ரோட்டில் உள்ள மதுரை மாநகராட்சியின் தெற்கு மண்டல அலுவல கத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது. மேயர் இந்திராணி தலைமை தாங்குகிறார்.

    தெற்கு மண்டலத்தி ற்குட்பட்ட செல்லூர், ஆழ்வார்புரம், ஐராவத நல்லூர், காமராஜர் சாலை, பங்கஜம் காலனி, சேர்மன் முத்துராமய்யர் ரோடு, காமராஜபுரம், பழைய குயவர்பாளையம், சின்னக்கடை தெரு, லட்சுமிபுரம், காயிதேமில்லத் நகர், செட்டியூரணி, கீழ வெளிவீதி.

    கீரைத்துறை, வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, அனுப்பானடி, சிந்தாமணி, கதிர்வேல் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகாரிகளுடன் மேயர் மகேஷ் ஆலோசனை
    • நாகர்கோவில் மாநகரின் பிரதான இரு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.251 கோடி மதிப்பீட்டில் புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. புத்தன் அணையில் இருந்து நாகர்கோவில் வரை குழாய்கள் அமைத்த நிலையில் நாகர்கோவில் மாநகரில் புதிதாக வீட்டுக்குள்ள இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றது. இதே போல் பாதாள சாக்கடை திட்ட பணிகளும் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த பணிகள் மக்கள் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டு வரும் வகையில் மேயர் மகேஷ் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

    இந்த பணிகளை விரைந்து முடிப்பது குறித்து நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் மகேஷ் தலைமையில் குடிநீர் திட்ட அதிகாரிகள் மற்றும் பாதாள சாக்கடை திட்ட பொறியாளர்கள் உடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் ரகுபதி, கண்காணிப்பு பொறியளார் மைக்கேல் சேவியர், செந்தூர் பாண்டியன் மற்றும் செயற்பொறியாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்ட னர்.

    கூட்டத்திற்கு பின்னர் மேயர் மகேஷ் கூறியதாவது:-

    புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் 95 சதவீதம் முடிவடைந்துள்ளது. ஏற்கனவே நான் அந்த பணிகளை நேரில் சென்று பார்வையிட்டேன். வருகிற மே 31-ந்தேதிக்குள் புத்தன் அணை தண்ணீரை நாகர்கோவில் கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது. ஜூன் மாதம் முதல் புத்தன் அணை தண்ணீர் நாகர்கோவில் மாநகரில் ஏற்கனவே பொருத்தப் பட்டுள்ள இணைப்புகள் மூலம் வழங்கப்படும். தொடர்ந்து அனைத்து வீடுகளுக்கும் புதிய இணைப்புகள் மூலம் குடிநீரை வழங்கு வதற்காக தலா ரூ.8.30 கோடி மதிப்பீட்டில் இரண்டு பகுதிகளாக மொத்தம் ரூ.16.60 கோடியில் ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. ஒரு சில மாதங்களுக்குள் தற்போது வீட்டு வாசல் அருகே இருக்கும் இணைப்பில் இருந்து முறைப்படி வீட்டுக்குள் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    பாதள சாக்கடை திட்ட பணிகளை பொறுத்தவரை வலம்புரிவிளை கிடங்கில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை வெளியேற்றுவதற்கான பணிகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் இந்த பணிகள் தொடங்கி ஒரு சில மாதங்களுக்குள் சுத்திகரிக்கப்பட்ட நீர் வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதன் மூலம் நாகர்கோவில் மாநகரின் பிரதான இரு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். இதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் சம்பந்தப்பட்ட துறை பொறியாளர்கள் மூலம் மேற்கொள்ளப் பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சேதமடைந்த சாலையை சரி செய்து தரும்படி மேயரிடம் இஸ்லாமிய பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
    • சாலை அமைக்க அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.

    திருப்பூர் :

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, திருப்பூர் மாநகராட்சி 45 வது வார்டு சி.டி.சி கார்னர் கபஸ்தான் சாலையில் மக்கள் பயன்பாடு அதிக அளவில் உள்ளதால் சேதமடைந்த அந்த சாலையை சரி செய்து தரும்படி மேயர் தினேஷ்குமாரிடம் இஸ்லாமிய பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்று புதிய தார் சாலை அமைக்க அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார். அதன்படி அங்கு புதிய தார் சாலை அமைக்கப்பட்டு அதனை இன்று மக்கள் பயன்பாட்டிற்கு மேயர் அர்ப்பணித்தார்.மேலும் முடிவுற்ற தார் சாலை பணிகளை இன்று ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது தி.மு.க. பகுதி செயலாளர் உசேன், வட்ட கழக செயலாளர்கள் ரபீக், முகமது அலி, பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் ஏராளமானோர் உடன் இருந்தனர்.

    • வளர்ச்சி திட்ட பணிகளை குறித்து மேயர் நேரில் ஆய்வு செய்தார்.
    • பிறந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழை மேயர் இந்திராணி வழங்கினார்.

    மதுரை

    மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டு பகுதி களில் வளர்ச்சி திட்ட பணி களான சாலை வசதிகள், மழைநீர் வடிகால்கள் தூர் வாருதல், அங்கன்வாடி மையம் கட்டுதல், பள்ளிகள் சீரமைப்பு, தெருவிளக்குகள் பராமரிப்பு, நலவாழ்வு மையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங் கள் புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

    மதுரை மாநகராட்சி மண்டலம்-3, வார்டு எண்.55 அண்ணாத்தோப்பு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மருத்துவ மனையில் பிரசவித்த தாய்க்கு தமிழக அரசின் தாய்சேய் நலபெட்டகம் மற்றும் பிறந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழை மேயர் இந்திராணி வழங்கினார்.

    மண்டலம்-3 வார்டு எண்.57 ஆரப்பாளையம் தண்ணீர் தொட்டி அருகில் புதியதாக அமைக்கப்பட உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு வரும் பணியினையும், வார்டு எண்.70 துரைச்சாமி நகர் பகுதியில் புதிய உப கழிவு நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு வரும் பணியையும், நேருநகர் பகுதியில் செல்லும் வாய்க்காலை தூர்வாரும் பணியையும் மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் மண்டலம்-2 வார்டு எண்.34 அண்ணாநகர் மெயின் ரோட்டில் ( டுரிப் நிதி கட்டம் 1 கீழ் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கப் பட்டு வரும் பணியையும் மேயர் பார்ர்வையிட்டார்.

    அப்நபோது நகர பொறியாளர் அரசு, துணை ஆணையாளர் தயாநிதி. மண்டல தலைவர்கள் பாண்டிச்செல்வி, சரவணபுவனேஸ்வரி, நகர்நல அலுவலர் வினோத்குமார், உதவி ஆணையாளர்கள் மனோகரன், வரலெட்சுமி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உள்பட பலர் உடனிருந்தனர்.

    • வடக்கு பகுதியில் குடிநீர் வினியோக பிரச்சினை தலைதூக்கவில்லை.
    • 6 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 2-வது மற்றும் 3-வது குடிநீர் திட்டம் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் புதிதாக 4-வது குடிநீர் திட்டம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் எடுக்கப்பட்டு குழாய் மூலமாக திருப்பூர் கொண்டு வரப்பட்டது. திருப்பூர் வடக்கு மாநகர பகுதிகளில் கடந்த மாதம் 4-வது திட்ட குடிநீர் மேல்நிலைத்தொட்டிகளில் ஏற்றப்பட்டு சோதனை அடிப்படையில் வினியோகம் செய்யப்பட்டது. இதனால் வடக்கு பகுதியில் குடிநீர் வினியோக பிரச்சினை தலைதூக்கவில்லை.

    ஆனால் தெற்கு மாநகர பகுதியில் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக மக்கள் புகார் தெரிவித்தனர். கடந்த மாமன்ற கூட்டத்திலும் கவுன்சிலர்கள் முறையிட்டனர். இந்த மாத இறுதிக்குள் தெற்கு பகுதியில் 4-வது திட்ட குடிநீர் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு 6 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படும் என்று மேயர் தினேஷ்குமார் உறுதியளித்தார்.

    இந்தநிலையில் நேற்று 4-வது திட்ட குடிநீர் திருப்பூர் தெற்கு மாநகர பகுதிக்கு வந்து சேர்ந்தது. சோதனை ஓட்டமாக ஆலங்காடு மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு குடிநீர் வந்து சேர்ந்தது. மேயர் தினேஷ்குமார் மலர் தூவி குடிநீரை வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், கவுன்சிலர் சாந்தாமணி மற்றும் தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    குடிநீர் பரிசோதனைக்கு உட்பட்டு வெள்ளோட்டம் விடப்படுகிறது. பகிர்மான குழாய்களில் தண்ணீர் விடப்பட்டு சோதனை நடத்தப்பட உள்ளது. இந்த மாத இறுதிக்குள் தெற்கு மாநகர பகுதியில் உள்ள 16 மேல்நிலைத்தொட்டிகளில் தண்ணீர் ஏற்றி பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் என்று மேயர் தினேஷ்குமார் தெரிவித்தார்.

    ×