search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவமனை"

    • உச்சநீதிமன்றம் மதானிக்கு ஜாமீன் நிபந்தனைகளில் தளர்வு வழங்கியது.
    • உடல்நிலை மோசமடைந்ததால் மீயன்னூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார்.

    திருவனந்தபுரம்:

    பெங்களூருவில் 2008-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளி கேரள மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானி. இவர் தனது உடல்நலம் பாதித்த தந்தையை பார்ப்பதற்காகவும், கேரளாவில் தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    அதனை விசாரித்த உச்சநீதிமன்றம் மதானிக்கு ஜாமீன் நிபந்தனைகளில் தளர்வு வழங்கி, அவர் கேரளாவில் தங்கியிருந்து சிகிச்சை பெற அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து அவர் கடந்த 20-ந்தேதி கேரளாவுக்கு வந்தார். இந்நிலையில் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவரது உடல்நிலை மோசமடைந்ததால் மீயன்னூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    • வலியினை போக்க உயர்ந்த ஹைப்போ காஸ்ட்ரிக் பிளக்ஸஸ் பிளாக் போட்டால் வலியினை போக்கலாம்
    • மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்க வேண்டிய அவசியம் இல்லை.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் பொன் ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் 74 வயது நோயாளி ஒருவர் ப்ராஸ்டேட் புற்றுநோயுடன் கடுமையான முதுகுவலி மற்றும் வயிறு வலியோடு அனுமதிக்கப்பட்டார்.

    அவரை மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். ராஜேஷ் பரிசோதனை செய்தார். அதில் புற்றுநோய் தண்டு வடத்தில் பரவி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    கடுமையான முதுகுவலி மற்றும் இடுப்பு வலியினை போக்க உயர்ந்த ஹைப்போ காஸ்ட்ரிக் பிளக்ஸஸ் பிளாக் போட்டால் வலியினை போக்கலாம் என்று எடுத்துரைக்கப்பட்டது.

    நோயாளிக்கு சி.டி. ஸ்கேன் உதவியுடன் (சுப்பீரியர் ஹைப்போ காஸ்ட்ரிக் பிளக்ஸஸ் பிளாக்) எளிதாக செய்யப்பட் டது. ஹைப்போ காஸ்ட்ரிக் பிளக்ஸ் என்ற சிகிச்சை செய்வதன் மூலம் நாள் பட்ட இடுப்பு வலியினை குறைக்கலாம். இந்த சிகிச்சைக்கு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்க வேண்டிய அவசியம் இல்லை.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் முதன் முறையாக சி.டி.ஸ்கேன் வழிகாட்டுதலின் உதவியுடன் மூளை மற்றும் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜேஷ் தலைமையில் பொன் ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் வெற்றிகரமாக இந்த சிகிச்சை அளிக்கப்பட்டது.

    • உள் நோயாளியாகவும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    • அவசர சிகிச்சைக்காக வரும் ஆம்புலன்ஸ் மற்றும் இதர வாகனங்களும் இதனால் பாதிக்கப்பட்டு வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் தாராபுரம் ரோட்டில் திருப்பூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு திருப்பூர் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும் ஏராளமானோர் உள் நோயாளியாகவும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் மற்றும் பரிசோதனைக்கு வரும் நோயாளிகளும் வாகனங்களை மருத்துவமனை வளாகத்தில் தாறுமாறாக நிறுத்தி செல்வதால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் அவசர சிகிச்சைக்காக வரும் ஆம்புலன்ஸ் மற்றும் இதர வாகனங்களும் இதனால் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் இதனை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • யாராவது சாப்பிட வாங்கி கொடுத்தால் சாப்பிடுவார்.
    • 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்

    கன்னியாகுமரி :

    மண்டைக்காடு ஏ.வி.எம். கால்வாய் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 48 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சுற்றித்திரிந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. யாராவது சாப்பிட வாங்கி கொடுத்தால் சாப்பிடுவார்.

    இந்நிலையில் கடந்த 21-ந்தேதி அவர் ஏ.வி.எம். கால்வாய் பகுதியில் மயங்கி கிடந்தார். இதை பார்த்த அப்பகுதி ஆட்டோ டிரைவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மண்டைக்காடு கிராம நிர்வாக அலுவலர் திவ்யா மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது உடலை உறவினர்கள் அடையாளம் காண ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைத்துள்ளனர்.

    • நத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • போதுமான மருத்துவ வசதியில்லை.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் அபிராமம் அருகே உள்ள நத்தம் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வரு கிறது. இந்த பகுதியில் ஏராளமான கிராமங்களும் அபிராமம் நகரில் குடியி ருந்து வருபவர்களும் உடல் நலம் பாதிக்கப்பட்டால் இங்கு உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை நாடி வருகின்றனர்.

    அபிராமம், அகத்தாரிருப்பு நத்தம், அச்சங்குளம், அ.பச்சேரி, பாப்பனம் தீர்த்தாண்டதானம் உள்பட 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இங்கு போதுமான மருத்துவ வசதியில்லை.

    அவசர தேவைக்கு அபி ராமத்திலிருந்து கமுதி அல்லது 50 கிலோமீட்டர் தூரம் உள்ள பரமக்குடிக்கு செல்லவேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே நத்தம் ஆரம்ப சுகாதார நிலை யத்தை அரசு மருத்துவமனை யாக தரம் உயர்த்த வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

    இந்த பகுதி மிகவும் பின்தங்கிய பகுதியாகவும், விவசாயிகள், கூலி தொழி லாளர்கள் நிறைந்த பகுதி யாகவும் உள்ளது. உடல் நிலை பாதிக்கப்பட்டால் அரசு ஆஸ்பத்திரியை நம்பி செல்லும் நிலை உள்ளது.

    பாம்பு கடி மற்றும் சாலை விபத்து போன்ற அவசர சிகிச்சைக்கு வரும் நோயா ளிகளுக்கு போதுமான மருத்துவ வசதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இல்லை.

    அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு நத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தை போதுமான மருத்துவ வசதிகளுடன் அரசு மருத்துவமனையாக செயல்படுத்திட சுகாதார துறையும், மாவட்ட நிர்வாக மும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கீழக்கரை அரசு தாலுகா மருத்துவமனையில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.
    • மருத்துவர் டாக்டர் ஜவாஹிர் ஹுசைன் தலைமையில் சமூகக் கூட்டம் நடந்தது.

    கீழக்கரை

    கீழக்கரை அரசு தாலுகா மருத்துவமனையில் தலைமை மருத்துவர் டாக்டர் ஜவாஹிர் ஹுசைன் தலைமையில் மாவட்ட சுகாதார சமூகக் கூட்டம் நடந்தது. இதில் முகமது சதக் கல்விக் குழுமம், கீழக்கரை அனைத்து சமுதாய கூட்ட மைப்பு ஆகியவற்றிற்கு கீழக்கரை தாலுகா அரசு மருத்துவமனை உள் வளா கத்தில் தூய்மைப்பணியை மேற்கொண்டதற்காக பாராட்டு தெரிவித்து நன்றி தெரிவித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

    கீழக்கரை தாலுகா புதிய மருத்துவமனைக்கு பட்ஜெட்டில் ஒதுக்கிய தொகை ரூ.5.45 கோடி போதுமானதாக இருக்காது என்பதால் நிதியை அதிகப் படுத்தி கோருதல், பகல் மற்றும் இரவு பணிகளில் செவிலியர் மற்றும் பணியா ளர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும்.

    பிணவறைக்கு சடலங்களை பாதுகாப்பாக வைக்க குளிரூட்டப்பட்ட வசதிகள் செய்து நவீனப் படுத்துதல், ஆய்வக உபக ரணங்கள் பழமையடைந்து விட்டதால் புதிய உப கரணங்கள், உபரி பொருட்கள் அதிகப்படுத்தி வாங்க கோருதல், ஆர்.ஓ.பி ளாண்ட் குடிநீர் வசதியை மருத்துவ மனையின் உபயோகத்திற்கு அமைத்து தர கோருதல், மருத்துவ மனை முன்பகுதியில் இருள் நீக்க நகராட்சி மூலம் உயர் மின் கோபுர விளக்கு அமைக்க வேண்டும்.

    கீழக்கரை நகராட்சியிடம் மருத்துவமனை சுற்றுப் புறத்தை தூய்மைப்படுத்து வதற்கு வெளியாட்கள் அனுப்பக் கோருதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஜூன் மாதத்தில் இருந்து முகமது சதக் கல்விக்குழுமம், மற்றும் கீழக்கரை அனைத்து சமுதாய கூட்டமைப்பின் மூலம் 2 தூய்மைப் பணியாளர்களை மருத்துவமனை உட்பகுதியை சுத்தம் செய்ய அனுப்பியதற்கு கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் நன்றியை தெரிவித்தனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரிடம் வழங்க வுள்ளதாக தலைமை மருத்துவர் தெரிவித்தார். இதில் அனைத்து சமுதாய கூட்டமைப்பு செயலாளர் சேக் உசேன், தி.மு.க. நகர் செயலாளர் பஷீர் அகமது, அ.தி.மு.க.நகர் செயலாளர் ஜகுபர் உசேன், கம்யூனிஸ்டு நகர் செயலாளர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தகவல்
    • அமைச்சர் மா.சுப்பிர மணியன், ஆறுதேசம் ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு நேரடியாக வந்து ஆய்வு மேற்கொண்டார்.

    கன்னியாகுமாரி:

    தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார் வெளி யிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது :-

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ஆறுதேசம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 1958-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு தினமும் சுமார் 200-க்கும் மேற்பட்ட வெளிநோயாளி கள் சிகிச்சைக்கு வருகின்றனர். மாதந்தோறும் 5 முதல் 10 பிரசவம் நடைபெற்று வருகிறது. பிரசவித்த தாய்மார்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் நடைபெற்று வருகிறது.

    இங்குள்ள ஆய்வக பிரிவு, புற நோயாளிகள் பிரிவு மற்றும் குடும்ப நலப்பிரிவு கட்டிடம் போன்றவை பழுதடைந்து உள்ளதால் அவற்றை மாற்றி, புதிய மருத்துவமனை கட்டிடங்கள் கட்டி மருத்துவ மனையை மேம்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை-குடும்ப நலத்துறை அமைச்சர் ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்கள் வழங்கினேன். தொடர்ந்து சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து குரல் கொடுத்தேன்.

    இதன் அடிப்படையில் அமைச்சர் மா.சுப்பிர மணியன், ஆறுதேசம் ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு நேரடியாக வந்து ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ், தேசிய சுகாதார திட்டம் சார்பில் 15 -வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, ஆறுதேசம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவமனை கட்டிடங்கள் அமைக் கப்படும் என்று அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதற்காக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகி யோருக்கும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் எனது சார்பிலும், தொகுதி மக்கள் சார்பாகவும் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

    மேலும் இந்த கட்டிட பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்பதனையும் தொகுதி மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    • மருத்துவமனை திறப்பு விழாவை ஒத்திவைக்குமாறு ஏற்கெனவே எங்களிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.
    • நாடாளுமன்ற திறப்பு விழா சர்ச்சைகளுக்கும், இதற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை

    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் ஆய்வக நிலைய வளாகத்தில் ரூ. 230 கோடியில் 1,000 படுக்கை வசதியுடன் கூடிய பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

    4.89 ஏக்கர் நிலத்தில் தரைத்தளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட 3 கட்டிடங்கள் 51,429 சதுர மீட்டரில் இந்த மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது.

    முதல் கட்டிட மான 'ஏ' பிளாக்கில் ரூ.78 கோடியில் 16,736 சதுர மீட்டர் பரப்ப ளவில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மற்றும் நிர்வாகக் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.

    'பி' பிளாக் ரூ.78 கோடி மதிப்பீட்டில் 18,725 சதுர மீட்ட ரில் அறுவை சிகிச்சை வளாகம், தீவிர சிகிச்சை பிரிவுடன் கட்டப்பட்டுள்ளது.

    மூன்றாவது கட்டிடமான 'சி' பிளாக்கில் ரூ.74 கோடியில் 15,968 சதுர மீட்டரில் கதிரியக்க நோய் கண்டறிதல் பிரிவு மற்றும் வார்டுகளுடன் கட்டப்பட்டுள்ளது. மருத்துவக் கருவிகள் நிறுவும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் ஜூன் 5-ந் தேதி அந்த மருத்துவமனையை ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைப்பதாக இருந்தது. இதற்கான அழைப்பிதழ்களும் அரசு சார்பில் அச்சிடப்பட்டு, விழா ஏற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

    இந்நிலையில், திட்டமிட்ட தேதியில் ஜனாதிபதியின் சென்னை வருகை ரத்தாகி உள்ளது. நாடாளுமன்ற புதிய கட்டிடத் திறப்பு விழாவை தி.மு.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்ததையடுத்து ஜனாதிபதியின் பயணம் ரத்து செய்யப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகின. ஆனால், அதை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மறுத்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஜூன் முதல் வாரத்தில் வெளிநாட்டுப் பயணம் மேற் கொள்கிறார். எனவே, மருத்துவமனை திறப்பு விழாவை ஒத்திவைக்குமாறு ஏற்கெனவே எங்களிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.

    அதன் அடிப்படையில் அந்த விழா ஒத்திவைக்கப் பட்டு, ஜூலை முதல் வாரத்துக்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற திறப்பு விழா சர்ச்சைகளுக்கும், இதற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 13-ந் தேதி மெத்தனால் கலந்த சாராயம் குடித்த 60 பேர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
    • நேற்று முன்தினம் வரை 22 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

    விக்கிரவாண்டி:

    கள்ளச்சாராயம் குடித்த மேலும் 9 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பம் கிராமத்தில் கடந்த 13-ந் தேதி மெத்தனால் கலந்த சாராயம் குடித்த 60 பேர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    இதில்ஒரு பெண் உள்பட 14 பேர் பலியானார்கள். 12 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும், 34 பேர் பொது வார்டுகளிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.

    இவர்களில் நேற்று முன்தினம் வரை 22 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்நிலையில் எக்கியார் குப்பம் பாலு, மரியதாஸ், விநாயகம், ராமு, மணிமாறன், தேசிங்கு, ராஜ துரை, சிவா, ஆறுமுகம் ஆகிய 9 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

    இவர்களை தாசில்தார் ஆதிசக்தி சிவக்குமரி மன்னன், தனி தாசில்தார் இளங்கோவன், மருத்துவக் கல்லூரி டீன் கீதாஞ்சலி, கண்காணிப்பாளர் அறிவழகன், உண்டு உறைவிட டாக்டர் ரவிக்குமார், துணை முதல்வர் யோகாம்பாள், துணை உண்டு உறைவிட டாக்டர் வெங்கடேசன் மற்றும் டாக்டர்கள் மருத்துவ ஆலோசனை வழங்கினார்கள்.

    தற்போது முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் 2 பேரும், பொது வார்டில் 13 பேர் என 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர் மருத்துவ கட்டிடங்கள் கட்டுவதற்கு உத்தரவு பிறப்பித்தனர்.
    • ஆய்வின்போது, பொதுப்பணித்துறை அலுவலர்கள், மருத்துவர்கள் உடன் இருந்தனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் தொகுதியில் தி.மு.க. அரசு அமைந்த உடன் பல எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சங்கரன்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. ராஜா சட்டமன்றத்தில் சங்கரன்கோவில் மருத்துவமனைக்கு புதிய வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். கோரிக்கையை ஏற்ற முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர் ஆகியோர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் முன்னோக்கு மருத்துவ கட்டிடங்கள் கட்டுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இதற்காக தமிழ்நாடு அரசு ரூ. 9 கோடி நிதி ஒதுக்கியது. இந்நிலையில் புதிய மருத்துவ கட்டிடங்கள் கட்டுவதற்கான இடங்களை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ராஜா எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். ஆய்வின்போது, பொதுப்பணித்துறை கோட்ட பொறியாளர் ராஜசேகரன், உதவி கோட்ட பொறியாளர் உலகம்மாள், செயற்பொறியாளர் அழகர்சாமி, உதவி செயற்பொறியாளர் ஜான் ஆசீர், உதவி பொறியாளர்கள் சுரேந்தர், பாக்கியநாதன் மற்றும் மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • கடலூர் கேப்பர்மலையில் உள்ள அரசு நெஞ்சக காசநோய் புதியதாக கட்டப்பட்ட கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது,
    • விழாவில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    கடலூர்:

    கடலூர் கேப்பர்மலையில் உள்ள அரசு நெஞ்சக காசநோய் மருத்துவமனையில் நோயாளிகளின் வசதிக்காக என்.எல்.சி. சமூக பொறுப்புணர்வு நிதியின் மூலம் ரூ.83 இலட்சம் மதிப்பீட்டில் சுமார் 40 படுக்கைகளுடன் புதியதாக கட்டப்பட்டுள்ள கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். என்.எல்.சி. தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளி முன்னிலை வகித்தார். விழாவில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து, மேலாண்மை குழந்தை வளர்ப்பு கையேட்டினை வெளியிட்டார். மேலும் கர்ப்பினி தாய்மார்களுக்கு கையேட்டினை வழங்கி பேசினார்.

    விழாவில் மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ரமேஷ்பாபு, பொது சுகாதாரம் துணை இயக்குனர் டாக்டர் மீரா, என்.எல்.சி. இயக்குனர் (மனிதவளம்) சமீர் ஸ்வரூப், துணை இயக்குநர் (காசநோய் பணிகள்) டாக்டர் கருணாகரன் , டாக்டர் சிவபிரகாசம், ஒன்றிய செயலாளர்கள் காசிராஜன், காசிராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் ரூ.6.89 கோடியில் கட்டப்பட்டு வரும் மகப்பேறு பிரிவு 6 மாதத்தில் பணிகள் நிறைவடையும்.
    • வருகிற ஜனவரி மாதத்தில் புதிய கட்டிடம் பயன்பாட்டிற்கு வரும்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் 135 படுக்கை வசதிகள் உள்ளன. தினமும் சராசரியாக 1,500 பேர் புற நோயாளிகளாக சிகிச்சைக்கு வருகின்றனர்.

    இங்கு 18 மருத்துவர்கள், 30 செவிலியர்கள் பணிபுரி கின்றனர். இந்த மருத்துவ மனையில் மாதம்

    300-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெறு கிறது.

    வத்திராயிருப்பு அரசு மருத்துவமனை, குன்னூர், எம்.புதுப்பட்டி, மம்சாபுரம் உள்ளிட்ட சுற்றுப்புற கிரா மங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து நோயாளிகள் மேல் சிகிச்சைக்காக ஸ்ரீவில்லி புத்தூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் அதிக பிரசவங்கள் நடை பெறும் மருத்துவ மனைகளில் ஒன்றாக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு புதிய மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவுக்க புதிய கட்டிடம் கட்டுவதற்காக கடந்த அக்டோபர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.

    ரூ.6.89 கோடி மதிப்பீட்டில் புதிய மகப்பேறு மற்றும் குழந்தை கள் சிகிச்சை பிரிவு கட்டிடம் 27 ஆயிரத்து 750 சதுர அடி பரப்பளவில் 3 தளங்களுடன் கட்டப்பட்டு வருகிறது. இதில் லிப்ட், பிரத்யேக அவசரகால வெளியேற்று சாய்தளம், ஜெனரேட்டர் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

    அறுவை சிகிச்சை மையம், உயர் சார்பு அலகு (ஹெச்.டி.யு), பச்சிளம் குழந்தைகளுக்கான இன்கு பேட்டர் வசதியுடன் சேர்த்து 100 படுக்கைகள் கொண்ட தாக மப்பேறு மற்றும் குழந்தைகள் சிகிச்சை பிரிவு அமைக்கப்படுகிறது. இந்த மகப்பேறு பிரிவு கட்டிடம் பயன்பாட்டுக்கு வரும் போது ஏற்கனவே உள்ள 135 படுக்கைகளுடன் சேர்த்து 235 படுக்கை கொண்ட பிரமாண்ட மருத்துவமனையாக இருக்கும்.

    இதுகுறித்து மருத்து வர்கள் கூறுகையில், மருத்துவமனை விரிவாக்கம் செய்யப்படும் போது, அதற்குரிய நவீன மருத்துவ கருவிகள், கூடுதல் மருத்து வர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். தற்போது தரைத்தளம் மற்றும் முதல் தளம் கட்டு மான பணிகள் நிறைவ டைந்துள்ளது. 6 மாதங்களில் இந்த கட்டுமான பணிகள் நிறைவடைந்து வருகிற ஜனவரி மாதத்தில் புதிய கட்டிடம் பயன்பாட்டிற்கு வரும் என்றனர்.

    ×