search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உச்சநீதிமன்றம்"

    • பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.
    • பல வழக்குகளில் பாலியல் வன்கொடுமைகள் கொடூர கொலையில் முடிகின்றன.

    கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் ஏராளமான குளறுபடிகள் நடந்ததை அடுத்து வழக்கு விசாரணை சிபிஐ-இடம் வழங்கப்பட்டது.

    மேலும் இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. உச்சநீதிமன்ற விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவில் பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில், "மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே, நாடு முழுவதும் பாலியல் வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருவதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். மேலும் பல வழக்குகளில் பாலியல் வன்கொடுமைகள் கொடூர கொலையில் முடிகின்றன."

    "இது தொடர்பாக கிடைத்த தரவுகளின்படி, நாட்டில் தினந்தோறும் சுமார் 90 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகிறது என்ற தகவல் அச்சமடைய செய்கிறது. இது சமூகம், தேசத்தின் நம்பிக்கை, மனசாட்சியை உலுக்குகிறது."

    "பெண்கள் பாதுகாப்பாக உணரும் வகையில் இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது நம் அனைவரின் கடமையாகும். இத்தகைய கொடூரமான குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக முன்மாதிரியான தண்டனையை பரிந்துரைக்கும் கடுமையான சட்டங்களை இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்."

    "இத்தகைய வழக்குகளை விரைவாக விசாரிக்க விரைவு சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது குறித்தும் பரிசீலனை செய்ய வேண்டும். இதுபோன்ற வழக்குகளில் விசாரணையை 15 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • நிதி நெருக்கடி காரணமாக இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.
    • ஜனாதிபதி தேர்தல் ஏற்பாடுகளுக்கு இடையூறு இன்றி உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும்.

    இலங்கையில் நீண்ட காலம் ஒத்திவைக்கப்பட்டு வரும் உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்த அந்நாட்டு உச்சநீதிமன்றம் இலங்கையை ஆளும் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசுக்கு உத்தரவிட்டது.

    எதிர்கட்சிகள், சமூக குழுக்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது. ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை விசாரித்தது. விசாரணையை தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் 9 ஆம் தேதி நடைபெற இருந்த தேர்தல் பலமுறை ஒத்திவைக்கப்பட்டதற்காக இலங்கை அரசை நீதிமன்றம் கடுமையாக சாடியது.

    உள்ளாட்சி தேர்தலை ஒத்திவைப்பது, தாமதப்படுத்துவது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. முன்னதாக நிதி நெருக்கடி காரணமாக இலங்கையில் தேர்தலை நடத்த முடியாத சூழல் நிலவுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்து இருந்தது.

    எனினும், இந்த வாதங்களை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் இதனை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் எதுவும் சமர்பிக்கப்படவில்லை என்று தெரிவித்தது. ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதையை ஒதுக்க இலங்கை அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    இது தொடர்பாக உச்சநீதிமன்றம் சார்பில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அதில் மற்ற தேர்தல் ஏற்பாடுகளை பாதிக்காத அளவுக்கு, உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • பெண் டாக்டர் கொலை சம்பவம் தொடர்பாக சிபிஐ அறிக்கை தாக்கல் செய்தது.
    • போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் ஏராளமான குளறுபடிகள் நடந்ததை அடுத்து வழக்கு விசாரணை சிபிஐ-இடம் வழங்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது.

    இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில், இன்றும் விசாரணை தொடர்ந்தது. இன்றைய விசாறணையின் போது வழக்கு தொடர்பாக கொல்கட்டா காவல் துறை மற்றும் சிபிஐ சார்பில் தனித்தனியாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையை துவங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட அறிவுறுத்தினர்.

    இதுதொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், "உச்சநீதிமன்றம் அமைத்துள்ள 10 பேர் கொண்ட தேசிய பணிக்குழு மருத்துவர்களின் கோரிக்கைகளைக் கண்டிப்பாகக் கேட்டறியும் என்றும் அவர் உறுதியளித்தார். நீங்கள் கிட்டத்தட்ட 48 மணி நேரம் பணியாற்றிய பிறகு யாராவது உங்களை கேலி செய்தால் அவர்களுக்கு பதில் அளிக்க உடல் அளவிலும், மன ரீதியிலும் நீங்கள் இருப்பதில்லை. நான் மிகமுக்கிய குற்றங்களை கூட குறிப்பிடவில்லை."

    "பொதுவான வேலை நிலைகளை பற்றியே நாங்கள் குறிப்பிடுகிறோம். நாங்கள் பொது மருத்துவமனைகளுக்கு சென்றிருக்கிறோம். என் குடும்ப உறுப்பினர் ஒருவர் உடல்நிலை நலிவுற்று இருந்த போது, நான் அரசு மருத்துவமனையின் தரையில் படுத்து உறங்கியிருக்கிறேன். மருத்துவர்கள் 36 மணி நேரத்திற்கும் அதிகமாக பணியாற்றுகிறார்கள் என்று எங்களுக்கு தெரியும்," என்று தெரிவித்தார்.

    • பெண் டாக்டர் கொலை சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் விசாரணை செய்தது.
    • போராட்டம் நடத்திய மருத்துவர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

    கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் மாநில காவல் துறையின் விசாரணையில் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, இந்த வழக்கை சிபஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் கொல்கத்தா விரைந்த சிபிஐ குழுவினர் கடந்த சில நாட்களாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விவகாரத்தில் சிபிஐ தரப்பில் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    அதனை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம் மருத்துவர்களை மீண்டும் பணிக்கு திரும்ப வலியுறுத்தியது. தலைமை நீதிபதி சந்திரசூட், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று அறிவுருத்தினார். மேலும் போராட்டம் காரணமாக ஏழை மக்கள் பாதிக்கப்படுவதகை கவனிக்காமல் இருக்க முடியாது, என்று தெரிவித்தார்.

    உச்சநீதிமன்றம் அமைத்துள்ள 10 பேர் கொண்ட தேசிய பணிக்குழு மருத்துவர்களின் கோரிக்கைகளைக் கண்டிப்பாகக் கேட்டறியும் என்றும் அவர் உறுதியளித்தார். நீங்கள் கிட்டத்தட்ட 48 மணி நேரம் பணியாற்றிய பிறகு யாராவது உங்களை கேலி செய்தால் அவர்களுக்கு பதில் அளிக்க உடல் அளவிலும், மன ரீதியிலும் நீங்கள் இருப்பதில்லை. நான் மிகமுக்கிய குற்றங்களை கூட குறிப்பிடவில்லை.

    பொதுவான வேலை நிலைகளை பற்றியே நாங்கள் குறிப்பிடுகிறோம். நாங்கள் பொது மருத்துவமனைகளுக்கு சென்றிருக்கிறோம். என் குடும்ப உறுப்பினர் ஒருவர் உடல்நிலை நலிவுற்று இருந்த போது, நான் அரசு மருத்துவமனையின் தரையில் படுத்து உறங்கியிருக்கிறேன். மருத்துவர்கள் 36 மணி நேரத்திற்கும் அதிகமாக பணியாற்றுகிறார்கள் என்று எங்களுக்கு தெரியும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.

    மருத்துவர்களின் பணி நேரத்தை ஒழுங்குபடுத்துவது குறித்து தேசிய பணிக்குழு ஆய்வு செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அப்போது, பயிற்சி மருத்துவர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத், நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட தேசிய பணிக்குழுவில் பயிற்சி டாக்டர்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    அந்த கோரிக்கை ஏற்கப்படுவதாக தலைமை நீதிபதி அறிவித்தார். இந்நிலையில் பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு நாடு முழுவதும் டாக்டர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதில், "எங்களின் கோரிக்கைகள் தொடர்பாக முன்னேற்றங்கள் ஏற்படுவதோடு கவலைகள் உச்சநீதிமன்றத்தால் நிவர்த்தி செய்யப்படுவதை கருத்தில் கொண்டு, வேலைநிறுத்தத்தை நிறுத்துகிறோம் என்று அறிவிக்கிறோம்."

    "எங்களது அனைத்து கடமைகளையும் மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளோம். ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சமீபத்தில் நடந்த அசம்பாவிதம், நம் நாட்டில் டாக்டர்கள் பணிபுரியும் வருந்தத்தக்க நிலையை எடுத்துக்காட்டுகிறது. ஆகஸ்ட் 23 ம் தேதி காலை 8 மணி முதல் மீண்டும் அவரவர் பணிகளை மீண்டும் தொடங்க அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளோம்," என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • கொல்கத்தா காவல் துறை சிஆர்பிசி விதிகள் எதையும் முறையாக பின்பற்றவில்லை.
    • சிபிஐ விசாரணை துவங்குவதற்குள் சம்பவ இடத்தில் எல்லாமே மாற்றப்பட்டு இருந்தது.

    கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் மாநில காவல் துறையின் விசாரணையில் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, இந்த வழக்கை சிபஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் கொல்கத்தா விரைந்த சிபிஐ குழுவினர் கடந்த சில நாட்களாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விவகாரத்தில் சிபிஐ தரப்பில் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

     


    அதில் சிபிஐ தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "இந்த வழக்கில் சிபிஐ விசாரணை ஐந்தாம் நாளில் தான் துவங்கியது. சிபிஐ விசாரணை துவங்குவதற்குள் சம்பவ இடத்தில் எல்லாமே மாற்றப்பட்டு இருந்தது."

    "கொல்கத்தா காவல் துறை சார்பில் பயன்படுத்தப்பட்டு வரும் தினசரி டைரியில் இந்த சம்பவம் தொடர்பாக காலை 10.10 மணிக்கு பதிவிடப்பட்டு இருக்கிறது. எனினும், அன்று மாலையில் தான் போலீசார் சம்பவ இடத்தை தங்களது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளனர். இது மிகவும் கவலை அடையச் செய்துள்ளது."

    இதை கேட்ட சந்திரசூட் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு, மூத்த வழக்கறிஞர் கபில் சிபலிடம், இந்த வழக்கில் எப்போது உடற்கூராய்வு செய்யப்பட்டது என கேள்வி எழுப்பியது. அதற்கு பதில் அளித்த கபில் சிபல், மாலை 6.10 முதல் இரவு 7.10 வரையிலான காலக்கட்டத்தில் உடற்கூராய்வு செய்யப்பட்டது என்றார்.

    இயற்கைக்கு மாறான உயிரிழப்பு என்பதால், உடற்கூராய்வு செய்ய்பட்டது. இந்த வகையில், பஞ்சநாமா எப்போது தயாரிக்கப்பட்டது என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்த வழக்கில் கொல்கத்தா காவல் துறையினர் சிஆர்பிசி விதிகள் எதையும் முறையாக பின்பற்றவில்லை. இந்த சம்பவத்திற்கு பொருப்பேற்க வேண்டிய காவல் துறை அதிகாரியை நீதிமன்றத்திற்கு அழைத்துவர கபில் சிபலுக்கு நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

    இந்த வழக்கு விசாரணை அமர்வில் உள்ள மற்றொரு நீதிபதியான ஜெ.பி. பர்திவாலா, "எனது 30 ஆண்டுகால அனுபவத்தில் உங்கள் மாநிலம் பின்பற்றியதை போன்ற வழிமுறைகளை இதுவரை நான் பார்த்ததே இல்லை," என்றார்.

    குற்ற சம்பவம் இரவு நேரத்தில் அரங்கேறி இருக்கிறது, எனினும் காவல் துறையினர் 18 மணி நேரங்கள் கழித்து தான் சம்பவ இடத்தை தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். காவல் துறையினர் அங்கு வந்து சம்பவ இடத்தை கைப்பற்றும் முன்பே உடற்கூராய்வு நிறைவுபெற்றுவிட்டது. இதைத் தொடர்ந்து காவல் துறையினர் அங்கிருந்து மீண்டும் காவல் நிலையம் சென்ற பிறகு நள்ளிரவு 11.30 மணிக்கு தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என நீதிமன்றம் தெரிவித்தது.

    சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறும் போது, "உடற்கூராய்வு முடிந்த நிலையில் நள்ளிரவு 11.45 மணிக்கு தான் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது. மேலும் மூத்த மருத்துவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர் உடன் பணியாற்றியவர்கள் இந்த சம்பவத்தில் ஏதோ குளறுபடி நடப்பதை உணர்ந்து தான், வீடியோ பதிவு செய்ய வலியுறுத்தினர்," என்றார்.

    "பெண் டாக்டர் கொலை வழக்கில் கற்பழிப்பு-கொலை சம்பவம் குறித்து முதலில் பதிவு செய்த கொல்கத்தா காவல் துறை அதிகாரி அடுத்தக்கட்ட விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்," என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட் அமர்வில் இந்த வழக்கானது மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.
    • உச்சநீதிமன்றம் அமைத்துள்ள 10 பேர் கொண்ட தேசிய பணிக்குழு மருத்துவர்களின் கோரிக்கைகளைக் கண்டிப்பாகக் கேட்டறியும்

    கொல்கத்தாவில் R G கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பூதாகரமாக மாறியுள்ள நிலையில் மருத்துவர்கள் போராட்டம், சிபிஐ விசாரணை என தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறது. முதல் நாள் விசாரணையில் மேற்கு வங்காள அரசையும், போலீசையும் உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியது. தாமதமாக வழக்குப் பதிந்தது ஏன்? மருத்துவமனைக்குள் கலவரக்காரர்கள் எப்படி நுழைந்தனர்? என்று சரமாரியாக கேள்வி எழுப்பியது.

    மேலும் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வரும் மருத்துவர்களிடம் அரசு தங்களின் பலத்தைக் காட்ட வேண்டாம் என்று கூறியிருந்தது. ஆனால் மக்களின் நலன் கருதி மருத்துவர்கள் தங்களின் போராட்டத்தைக் கைவிட்டு வேலைக்குத் திரும்ப வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கோரிக்கை வைத்திருந்தது. இந்நிலையில் தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கானது மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.

    மருத்துவர்களும், மருத்துவ ஊழியர்களும் வேலைக்குத் திரும்ப வேண்டும். போராட்டம் நடத்திய ரெசிடெண்ட் மருத்துவர்கள் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாது என்பதை இந்த நீதிமன்றம் உறுதி செய்யும் என்று தலைமை நீதிபதி டி,ஒய்.சந்திரசூட் வாக்குறுதி அளித்தார். மேலும், உச்சநீதிமன்றம் அமைத்துள்ள 10 பேர் கொண்ட தேசிய பணிக்குழு மருத்துவர்களின் கோரிக்கைகளைக் கண்டிப்பாகக் கேட்டறியும் என்றும் அவர் உறுதியளித்தார். 

     

    • அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் மீது மேற்கு வங்காள அரசு தனது பலத்தைக் காட்ட வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் கண்டித்தது.
    • இது கொல்கத்தா மருத்துவமனை பிரச்சினை மட்டுமல்ல. ஒட்டுெமாத்த டாக்டர்கள் பிரச்சினையாகும்.

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள R.G கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

    உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கேட்டு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்த்து வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கானது இன்று உச்சநீதிமன்றத்தில் டவழக்கு தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் மீது மேற்கு வங்காள அரசு தனது பலத்தைக் காட்ட வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் கண்டித்தது.

    டாக்டர்களின் பாதுகாப்பைக் கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும். இந்தியா முழுவதிலும் மருத்துவரின் பாதுகாப்பு குறித்து முறையான பிரச்சினை எழுப்புவதால் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பெண்கள் வேலைக்கு செல்ல முடியாவிட்டால், வேலை நிலைமைகளில் பாதுகாப்பு இல்லை என்றால் அவர்களுக்கு சமத்துவத்தை மறுக்கிறோம் என்று அர்த்தமாகிவிடும்.

    பணிபுரியும் இடங்களில் டாக்டர்களின் பாதுகாப்பு பிரச்சினைக்கு உரியதாகவே இருக்கிறது. இது கொல்கத்தா மருத்துவமனை பிரச்சினை மட்டுமல்ல. ஒட்டுெமாத்த டாக்டர்கள் பிரச்சினையாகும். பயிற்சி மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேசிய அளவில் குழு அமைக்க வேண்டும்.

    பெரும்பாலான இளம் டாக்டர்கள் 36 மணி நேரம் வேலை செய்கிறார்கள். பாதுகாப்பான வேலை நிலைமைகளை உறுதிப் படுத்த தேசிய நெறி முறையை உருவாக்க வேண்டும்.

    இதற்காக 10 பேர் கொண்ட தேசிய பணிக்குழுவை நாங்கள் அமைக்கிறோம். இக்குழுவினர் நாடு முழுவதும் டாக்டர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் பின்பற்றப் பட வேண்டிய வழிமுறைகள் குறித்து பரிந்துரைப்பார்கள். இந்த குழு 3 வாரத்துக்குள் தனது இடைக்கால அறிக் கையை சமர்பிக்க வேண்டும். இறுதி அறிக்கையை 2 மாதத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

    தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள் பணியை தொடருமாறு கேட்டுக்கொள்கிறோம். மருத்துவர்களின் போராட்டத்தால் நோயாளிகள் உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டி இருக்கிறது. 

    டாக்டர்களை பாதுகாக்க மாநிலத்தில் சட்டங்கள் உள்ளன. ஆனால் அவை முறையாக பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை. டாக்டர்களுக்கு கழிவறை வசதி இல்லை. டாக்டர்கள் நீண்ட நேரம் பணி முடித்து வீடு திரும்புவதற்கு போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. ஆஸ்பத்திரிகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் முறையாக இல்லை.

    ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளைக் கண்டறியும் ஸ்கிரீனிங் எந்திரமும் இல்லை. பெண் டாக்டர் கொலை வழக்கு தொடர்பாக மேற்கு வங்காளத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லாமல் போய்விட்டது. இதற்காக பொறுப்பேற்று அந்த மாநில போலீஸ் டி.ஜி.பி.யை பதவி நீக்கம் செய்ய வேண்டும். போராட்டம் நடத்து மருத்துவர்கள் மீது அடக்குமுறையை ஏவி விடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. வன்முறை நிகழ்ந்தபோது விமானம் நிலையம், மருத்துவமனைகள நொறுக்கப்பட்டுள்ளன. இனியும் இப்படி நடக்கக் கூடாது.

    இந்த வழக்கில் விசாரணை நிலையை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும். வருகிற 22-ந் தேதிக்குள் (வியாழக் கிழமை) சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதேபோல மேற்கு வங்காள அரசும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த நிலையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்து வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டு 23-ந் தேதிக்கு ஒத்திவைத்தது. 

    • இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து நேற்று முன் தினம் வழக்குப் பதிவு செய்தது.
    • இந்த சம்பவத்தைத் தற்கொலையாக மாற்ற கல்லூரி முதல்வர் முயன்றுள்ளார்.

    மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள R.G கர் மருத்துவக்கால்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கேட்டு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து நேற்று முன் தினம் வழக்குப் பதிவு செய்தது.

    இந்த வழக்கானது இன்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் நீதிபதிகள் காவல்துறை மீது அரசு மீதும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

    'பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுப் பெற்றோர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்ட 3 மணி நேரம் கழித்தே போலீசாரால் எப்.ஐஆர் பதியப்பட்டுள்ளது. இந்த தாமதத்துக்கு காரணம் என்ன?

    இந்த சம்பவத்தைத் தற்கொலையாக மாற்ற கல்லூரி முதல்வர் முயன்றுள்ளார். தற்கொலை நாடகமாட ஏற்பாடு செய்து ஜோடித்துள்ளனர். இது கண்டனத்துக்குரியது. டாக்டரின் உடலை பார்க்க அவரது பெற்றோருக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன்?

    கல்லூரி முதல்வர் என்ன செய்து கொண்டு இருந்தார். முதல் தகவல் அறிக்கையில் கல்லூரி முதல்வர் பெயர் இடம் பெறாதது ஏன்?

    ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரிக்குள் ஆயிரக்கணக்கான கும்பல் எப்படி நுழைந்தது? போலீஸ் என்ன செய்து கொண்டு இருந்தது. போலீசாருக்கு தெரியாமல் 7 ஆயிரம் பேர் கொண்ட கும்பல் மருத்துவமனைக்குள் எப்படி நுழைய முடியும்?

    டாக்டர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க மேற்கு வங்காள அரசு தவறிவிட்டது. பெண் டாக்டரின் பெயர் ஊடகங்கள் முழுவதும் வெளியிடப்படுவது ஆழ்ந்த கவலை அளிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடுவதை சட்டம் தடை செய்கிறது. உயிரை இழந்த மருத்துவருக்கு இப்படித்தான் கவுரவம் வழங்குகிறோமா?

    பெண்ணின் அடையாளம் வெளியே தெரிந்தது எப்படி? பெண் டாக்டர் வழக்கில் குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடு இன்னொரு கற்பழிப்பு சம்பவத்துக்காகக் காத்திருக்க முடியாது.

    இந்த வழக்கில் விசாரணை நிலையை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும். வருகிற 22-ந் தேதிக்குள் (வியாழக் கிழமை) சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதேபோல மேற்கு வங்காள அரசும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை வரும் 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். மேலும் பெண் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 10 பேர் கொண்ட குழுவை உருவாக்கி உத்தரவிட்டனர்.

    • தங்களின் உடல் கண்ணியத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு பெண்ணின் கடமை
    • இது வன்கொடுமை ஆகாது என்றும் இதனால் இளைஞனை வழக்கில் இருந்து விடுவித்தும் நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

    தங்களைக் காப்பாற்றிக் கொள்ளப் பெண்கள் பாலியல் இச்சைகளை அடக்கிக் கொள்ள வேண்டும் என்ற கல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கடந்த ஆண்டு கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மைனர் பெண் ஒருவரை இளைஞர் ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்த வழக்கு ஒன்றின் விசாரணையின்போது, மைனர் பெண்ணுக்கும், அந்த இளைஞனுக்கும் காதல் உறவு இருதுவந்ததால் இது வன்கொடுமை ஆகாது என்றும் இதனால் இளைஞனை வழக்கில் இருந்து விடுவித்தும் நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

    மேலும், 'தங்களின் உடல் கண்ணியத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு பெண்ணின் கடமை. சுய கண்ணியத்திற்கு ஊறு விளைவித்து வளர்ச்சியைத் தடுக்கும், பாலியல் இச்சைகளையும் கட்டுப்படுத்த வேண்டும். 2 நிமிட பாலியல் திருப்திக்காக தன்னிலை இழக்கும் பெண்கள் சமுதாயத்தின் பார்வையில் தோல்வியடைந்தவர்களாகவே தெரிவார்கள்' என்றும் நீதிபதி அறிவுரை வழங்கியிருந்தார்.

    இந்நிலையில் இந்த வழக்கிலிருந்து குற்றவாளி விடுவிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதன்படி நேற்று இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.ஓஹா, உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து அந்த இளைஞனைக் குற்றவாளி என்று அறிவித்து உத்தரவிட்டார். மேலும் இதுபோன்ற சிக்கலான வழக்குகளை எப்படி கையாள வேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்துக்கு அறிவுரை வழங்கினார். 

    • ஆங்கிலேயர்கள் 10 கோடி மக்களை அலோபதி மருந்துகள் மூலம் கொலை செய்துள்ளனர்.
    • இஸ்லாம் மதத்தின் பெயரில் கோடிக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர் . அதுமட்டுமல்ல, லெனின், கார்ல் மார்க்ஸ், மாவோ ஆகியோர் ஏற்படுத்திய புரட்சியால் பலர் கொலை செய்யப்பட்டனர்

    அலோபதி மருந்துகள் குறித்து தவறான தகவல்களை பரப்பும் வகையில் விளம்பரங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கய பதஞ்சலி ஆயுர்வேத பொருட்கள் தயாரிப்பு நிறுவனதின் மீது கடந்த 2 வருடங்களாக மேலாக வழக்கு நடந்துவந்தது. உச்சநீதிமன்றத்தில் இந்திய மருத்துவ சங்கம் தொடர்ந்த இந்த வழக்கில் பதஞ்சலி இணை நிறுவனரும் யோகா குருவுமான பாபா ராம்தேவ் 3 முறை ஆஜராகி மன்னிப்பு கேட்டுள்ளார்.

    மேலும் பதஞ்சலி நிறுவனம் செய்தித்தாள்களில் விளம்பரங்களை வெளியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து சிறிய அளவிலான விளம்பரங்கள் மூலம் மன்னிப்பு கோரியிருந்த பதஞ்சலி நிறுவனத்தின் மீது நீதிபதிகள் அதிருப்தியில் இருந்தனர். எனினும் இனி தவறு செய்ய மாட்டோம் என்று பதஞ்சலி நிறுவனம் மன்றாடிய நிலையில் அந்த உத்தரவாதத்தை ஏற்று கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி உச்சநீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்தது.

    இந்த நிலையில்தான் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாக அலோபதி மருந்துகள் குறித்து சர்ச்சையான முறையில் பேசியுள்ளார் யோகா குரு பாபா ராம்தேவ். நேற்று நடந்த சுதந்திர தினவிழாவில் பேசிய பாபா, பிணிநீக்கும் ஆயுர்வேத மருந்துகள் மீது யாரும் கவனம் செலுத்துவதில்லை. எனவே அலோபதி மருந்துகளால்  கோடிக்கணக்கான மக்கள் வருடந்தோறும் இறந்து கொண்டிருக்கின்றனர்.

    நமக்குத் தெரிந்த வரலாற்றின்படி உலகை அடக்கி ஆள்வதற்காக ஆங்கிலேயர்கள் 10 கோடி மக்களை அலோபதி மருந்துகள் மூலம் கொலை செய்துள்ளனர். அதே சமயம், இஸ்லாம் மதத்தின் பெயரில் மில்லியன் கணக்கானவர்கள் கொன்று  குவிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்ல, லெனின், கார்ல் மார்க்ஸ், மாவோ ஆகியோர் ஏற்படுத்திய புரட்சியால் பலர் கொலை செய்யப்பட்டனர் என்று தெரிவித்துள்ளார்.

    • பதஞ்சலி இணை நிறுவனர் பாபா ராம்தேவ் மூன்று முறை நீதிமன்றத்துக்கு வந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
    • இனி எந்த விதமான தவறான விளம்பரங்களையும் வெளியிடமாட்டோம் என்று பதஞ்சலி நிறுவனம் தரப்பு மன்றாடியது

    ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைப் பதஞ்சலி நிறுவனம் தயாரித்து விற்பனை செய்கிறது. நவீன மருந்துகளுக்கு எதிராகப் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் விளம்பரம் செய்து வந்தது.

    இதற்கிடையே, பதஞ்சலி நிறுவனத்தின் தவறான விளம்பரங்கள் குறித்து இந்திய மருத்துவ சங்கம், உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்தது. அந்த மனு மீதான விசாரணைகளில் அலோபதி மருந்துகளை குறிவைத்து தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

    இந்த வழக்கில் பதஞ்சலி இணை நிறுவனர் பாபா ராம்தேவ் மூன்று முறை நீதிமன்றத்துக்கு வந்து மன்னிப்பு கேட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி இந்த  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின்போது, பதஞ்சலி நிறுவனம் தனது தவறான விளம்பரங்களுக்காகப் பிரதான பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதன்படி பத்திரிகைகளில் மன்னிப்பு கேட்டிருந்தாலும் அந்த மன்னிப்பு விளம்பரங்கள் சிறிய அளவில் மட்டுமே இருந்ததாக இன்றைய விசாரணையின்போது நீதிமன்றத்தில் அதிருப்தி எழுந்தது. இருப்பினும், இனி எந்த விதமான தவறான விளம்பரங்களையும் வெளியிடமாட்டோம் என்று பதஞ்சலி நிறுவனம் தரப்பு மன்றாடியதைஅடுத்து, அந்த உத்தரவாதத்தை ஏற்று உச்சநீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்துள்ளது. 

    • செந்தில் பாலாஜிக்கு எதிரான ஊழல் வழக்கில் எத்தனை சாட்சிகள் உள்ளன என கேள்வி.
    • செந்தில் பாலாஜிக்கு எதிரான ஊழல் வழக்கு விசாரணை எப்போது நிறைவடையும்? என கேள்வி.

    செந்தில் பாலாஜி ஜாமின் மீதான மேல்முறையீடு வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அமலாக்கத் துறையிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

    ஊழல் வழக்கில் விசாரணை முடியாமல், அமலாக்கத் துறை வழக்கை விசாரித்து தண்டிக்க சட்டம் அனுமதிக்கிறதா ? என உச்சநீதிமன்றம் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது.

    மேலும், ஊழல் வழக்கு விசாரணையிலிருந்து செந்தில் பாலாஜி விடுவிக்கப்பட்டுவிட்டால் பண மோசடி வழக்கு என்னவாகும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    செந்தில் பாலாஜிக்கு எதிரான ஊழல் வழக்கில் எத்தனை சாட்சிகள் உள்ளன எனவும் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு, முதல் வழக்கில்21 சாட்சிகளும் 2வது வழக்கில் 100 சாட்சிகளும், 2வது வழககில் 100 சாட்சிகளும் 3வது வழக்கில் 200 சாட்சிகளும் உள்ளதாக அமலாக்கத்துறை பதில் அளித்துள்ளது.

    செந்தில் பாலாஜிக்கு எதிரான ஊழல் வழக்கு விசாரணை எப்போது நிறைவடையும்? எனவும் நீதிபதிகள் கேள்வி கேட்டுள்ளனர்.

    இதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை வாய்தா கேட்காவிட்டால் 3 மாதங்களுக்குள் நிறைவடையும் என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    இறுதியில், இந்த வழக்கு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டது.

    ×