search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொல்கத்தா"

    • பெண்ணாக அந்த பயிற்சி மருத்துவர் அனுபவித்த கொடூரத்தை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.
    • கொல்கத்தாவில் இம்மாதம் 14-ம் தேதி நடக்கவிருந்த எனது இசை நிகழ்ச்சியை அக்டோபர் மாதத்திற்கு தள்ளி வைக்கிறேன்.

    பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், "சமீபத்தில் கொல்கத்தாவில் நிகழ்ந்த கொடூரமான சம்பவத்தால் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். ஒரு பெண்ணாக அந்த பயிற்சி மருத்துவர் அனுபவித்த கொடூரத்தை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. இப்படியான சம்பவம் என்னுள் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது.

    கொல்கத்தாவில் இம்மாதம் 14-ம் தேதி நடக்கவிருந்த எனது இசை நிகழ்ச்சியை அக்டோபர் மாதத்திற்கு ஆழ்ந்த சோகத்துடன் தள்ளி வைக்கிறேன். இந்த நிகழ்ச்சி பலராலும் அதிகளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நான் அனைவரையும் ஒற்றுமையுடன் இணைக்க வேண்டும்.

    இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் உள்ள அனைத்து பெண்களின் பாதுகாப்பிற்காகவும், மரியாதைக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன் என்னுடைய இந்த முடிவை ரசிகர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். மனித இனத்தின் மிருகங்களுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம். தயவுசெய்து புதிய தேதியை அறிவிக்கும் வரை பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • குற்றம் நடந்த இடத்தில பலர் இருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலானது.
    • விசாரணை முடிந்த நிலையில், ஆகஸ்ட் 9ஆம் தேதி இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கார் அரசு மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த முதுநிலை பெண் பயிற்சி டாக்டர் கடந்த 9-ந்தேதி ஆடிட்டோரியத்தில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

    இந்த கொலை தொடர் பாக போலீசில் மருத்துவமனையில் தன்னார்வ ஊழியராக பணியாற்றிய சஞ்சய் ராய் (33) என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

    பெண் டாக்டர் கொலை வழக்கை உச்ச நீதிமன்றம் தாகவே முன்வந்து எடுத்து விசாரித்து வருகிறது. உச்ச நீதிமன்ற விசாரணையின் போது, "குற்றம் நடந்த இடம் மாற்றப்பட்டதாகவும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரிடம் உங்கள் மகள் தற்கொலை செய்து இறந்து விட்டார்" என்றும் பொய் கூறப்பட்டதாகவும் சிபிஐ தெரிவித்தது.

    சிபிஐ-ன் குற்றச்சாட்டுக்களை மறுத்த கொல்கத்தா போலீசார், குற்றம் நடந்த இடம் மாற்றப்படவில்லை என்று தெரிவித்தனர்.

    குற்றம் நடந்த இடத்தில பலர் இருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலானது குறித்தும் கொல்கத்தா போலீசார் விளக்கம் அளித்தனர்.

    விசாரணை முடிந்த நிலையில், ஆகஸ்ட் 9ஆம் தேதி இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்றும் சம்பவம் இடத்தில இருந்த அனைவரும் அந்த இடத்தில இருப்பதற்கான அதிகாரம் படைத்தவர்கள் என்றும் விசாரணைக் குழுவில் இடம்பெற்றுள்ள அனைவரின் பெயர்களையும் தெரிவிப்பதாக கொல்கத்தா போலீஸ் டி.ஜி.பி. இந்திரா முகர்ஜி கூறினார்

    • சுமார் ஒன்றை மணி நேரம் கழித்தே சஞ்சய் ராய் வீட்டின் கதவைத் திறந்தார் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • சந்தீப் கோஷ் வீடு உள்பட மொத்தம் 15 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. குற்றத்தில் ஈடுபட்டதாக சஞ்சய் ராய் என்ற ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவத்தில் நடந்த குளறுபடிகள் ஒவ்வொன்றாக வெளி வந்த வண்ணம் உள்ளன. பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்ட ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரியின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டது சிபிஐ விசாரணையின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது

    சஞ்சய் ராய் மீது நிதி முறைகேடுகள் தொடர்பாகவழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் விசாரணையைத் தொடங்கினர்.அதன்படி, மருத்துவ கண்காணிப்பாளர் மற்றும் துணை முதல்வரான சஞ்சய் வசிஸ்ட் ஆகியோர் வீடுகள் மற்றும் அவர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் நேற்றைய தினம் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    மேலும் சந்தீப் கோசின் வீட்டுக்குச் சென்ற அதிகாரிகள் சுமார் 90 நிமிடங்களாக வெளியில் காத்திருக்க வைக்கப்பட்டுள்ளனர். சுமார் ஒன்றை மணி நேரம் கழித்தே சஞ்சய் ராய் வீட்டின் கதவைத் திறந்தார் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அவரது வீட்டில் 11 மணிநேரமாக சோதனை நடத்திய அதிகாரிகள் அவரிடமும் பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.

     

    அதேபோல் ஆர்.ஜி.கர். மருத்துவமனையில் உள்ள முன்னாள் முதல்வர் அலுவலகத்திலும், கல்லூரி வளாகத்தில் உள்ள உணவகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. சந்தீப் கோஷ் வீடு உள்பட மொத்தம் 15 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கேட்பாரற்ற சடலங்களை சட்ட விரோதமாகப் பயன்படுத்தியது, பயோமெடிக்கல் கழிவுகளைச் சட்டவிரோதமாக விற்பனை செய்தது, மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை விநியோகிக்கும் நிறுவனங்களிடம் கமிஷன் பெற்றது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் சந்தீப் கோஷ் மீது சுமத்தப்பட்டுள்ள நிலையில் அதன் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிபிஐ திறப்பு விளக்கிக் கொண்டிருந்தபோது மேற்கு வங்காள போலீஸ் தரப்பில் ஆஜரான கபில் சிபில் சிரித்ததாகத் தெரிகிறது.
    • இதனால் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா எரிச்சலடைந்தார்

    கொல்கத்தா R.G கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் மாநில காவல் துறையின் விசாரணையில் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, இந்த வழக்கை சிபஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் கொல்கத்தா விரைந்த சிபிஐ குழுவினர் கடந்த சில நாட்களாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், மேற்கு வங்காள போலீஸ் தரப்பில் வாதாட மூத்த வழக்கறிஞர் கபில் சிபிலும் வாதாடுகின்றனர்.

    இந்த விவகாரத்தில் சிபிஐ தரப்பில் நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை முன்வைத்து சிபிஐ தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பேசுகையில், 'கொல்கத்தா காவல் துறை சார்பில் பயன்படுத்தப்பட்டு வரும் தினசரி டைரியில் இந்த சம்பவம் தொடர்பாகக் காலை 10.10 மணிக்கு பதிவிடப்பட்டு இருக்கிறது. எனினும், அன்று மாலையில் தான் போலீசார் சம்பவ இடத்தை தங்களது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளனர்' என்று விளக்கிக்கொண்டிருந்தபோது மேற்கு வங்காள போலீஸ் தரப்பில் ஆஜரான கபில் சிபில் சிரித்ததாகத் தெரிகிறது.

    இதனால் எரிச்சலடைந்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கபில் சிபிலை நோக்கி, 'ஒரு பெண் குரூரமான முறையிலும் கண்ணியக்குறைவான வகையிலும் உயிரிழந்துள்ளாள். அதற்காக குறைந்தபட்சம் சிரிக்காமலாவது இருங்கள்' என்று காட்டமாக பேசியுள்ளார்.

    • பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.
    • பல வழக்குகளில் பாலியல் வன்கொடுமைகள் கொடூர கொலையில் முடிகின்றன.

    கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் ஏராளமான குளறுபடிகள் நடந்ததை அடுத்து வழக்கு விசாரணை சிபிஐ-இடம் வழங்கப்பட்டது.

    மேலும் இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. உச்சநீதிமன்ற விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவில் பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில், "மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே, நாடு முழுவதும் பாலியல் வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருவதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். மேலும் பல வழக்குகளில் பாலியல் வன்கொடுமைகள் கொடூர கொலையில் முடிகின்றன."

    "இது தொடர்பாக கிடைத்த தரவுகளின்படி, நாட்டில் தினந்தோறும் சுமார் 90 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகிறது என்ற தகவல் அச்சமடைய செய்கிறது. இது சமூகம், தேசத்தின் நம்பிக்கை, மனசாட்சியை உலுக்குகிறது."

    "பெண்கள் பாதுகாப்பாக உணரும் வகையில் இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது நம் அனைவரின் கடமையாகும். இத்தகைய கொடூரமான குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக முன்மாதிரியான தண்டனையை பரிந்துரைக்கும் கடுமையான சட்டங்களை இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்."

    "இத்தகைய வழக்குகளை விரைவாக விசாரிக்க விரைவு சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது குறித்தும் பரிசீலனை செய்ய வேண்டும். இதுபோன்ற வழக்குகளில் விசாரணையை 15 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • பெண் டாக்டர் கொலை சம்பவம் தொடர்பாக சிபிஐ அறிக்கை தாக்கல் செய்தது.
    • போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் ஏராளமான குளறுபடிகள் நடந்ததை அடுத்து வழக்கு விசாரணை சிபிஐ-இடம் வழங்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது.

    இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில், இன்றும் விசாரணை தொடர்ந்தது. இன்றைய விசாறணையின் போது வழக்கு தொடர்பாக கொல்கட்டா காவல் துறை மற்றும் சிபிஐ சார்பில் தனித்தனியாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையை துவங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட அறிவுறுத்தினர்.

    இதுதொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், "உச்சநீதிமன்றம் அமைத்துள்ள 10 பேர் கொண்ட தேசிய பணிக்குழு மருத்துவர்களின் கோரிக்கைகளைக் கண்டிப்பாகக் கேட்டறியும் என்றும் அவர் உறுதியளித்தார். நீங்கள் கிட்டத்தட்ட 48 மணி நேரம் பணியாற்றிய பிறகு யாராவது உங்களை கேலி செய்தால் அவர்களுக்கு பதில் அளிக்க உடல் அளவிலும், மன ரீதியிலும் நீங்கள் இருப்பதில்லை. நான் மிகமுக்கிய குற்றங்களை கூட குறிப்பிடவில்லை."

    "பொதுவான வேலை நிலைகளை பற்றியே நாங்கள் குறிப்பிடுகிறோம். நாங்கள் பொது மருத்துவமனைகளுக்கு சென்றிருக்கிறோம். என் குடும்ப உறுப்பினர் ஒருவர் உடல்நிலை நலிவுற்று இருந்த போது, நான் அரசு மருத்துவமனையின் தரையில் படுத்து உறங்கியிருக்கிறேன். மருத்துவர்கள் 36 மணி நேரத்திற்கும் அதிகமாக பணியாற்றுகிறார்கள் என்று எங்களுக்கு தெரியும்," என்று தெரிவித்தார்.

    • பெண் டாக்டர் கொலை சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் விசாரணை செய்தது.
    • போராட்டம் நடத்திய மருத்துவர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

    கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் மாநில காவல் துறையின் விசாரணையில் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, இந்த வழக்கை சிபஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் கொல்கத்தா விரைந்த சிபிஐ குழுவினர் கடந்த சில நாட்களாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விவகாரத்தில் சிபிஐ தரப்பில் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    அதனை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம் மருத்துவர்களை மீண்டும் பணிக்கு திரும்ப வலியுறுத்தியது. தலைமை நீதிபதி சந்திரசூட், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று அறிவுருத்தினார். மேலும் போராட்டம் காரணமாக ஏழை மக்கள் பாதிக்கப்படுவதகை கவனிக்காமல் இருக்க முடியாது, என்று தெரிவித்தார்.

    உச்சநீதிமன்றம் அமைத்துள்ள 10 பேர் கொண்ட தேசிய பணிக்குழு மருத்துவர்களின் கோரிக்கைகளைக் கண்டிப்பாகக் கேட்டறியும் என்றும் அவர் உறுதியளித்தார். நீங்கள் கிட்டத்தட்ட 48 மணி நேரம் பணியாற்றிய பிறகு யாராவது உங்களை கேலி செய்தால் அவர்களுக்கு பதில் அளிக்க உடல் அளவிலும், மன ரீதியிலும் நீங்கள் இருப்பதில்லை. நான் மிகமுக்கிய குற்றங்களை கூட குறிப்பிடவில்லை.

    பொதுவான வேலை நிலைகளை பற்றியே நாங்கள் குறிப்பிடுகிறோம். நாங்கள் பொது மருத்துவமனைகளுக்கு சென்றிருக்கிறோம். என் குடும்ப உறுப்பினர் ஒருவர் உடல்நிலை நலிவுற்று இருந்த போது, நான் அரசு மருத்துவமனையின் தரையில் படுத்து உறங்கியிருக்கிறேன். மருத்துவர்கள் 36 மணி நேரத்திற்கும் அதிகமாக பணியாற்றுகிறார்கள் என்று எங்களுக்கு தெரியும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.

    மருத்துவர்களின் பணி நேரத்தை ஒழுங்குபடுத்துவது குறித்து தேசிய பணிக்குழு ஆய்வு செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அப்போது, பயிற்சி மருத்துவர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத், நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட தேசிய பணிக்குழுவில் பயிற்சி டாக்டர்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    அந்த கோரிக்கை ஏற்கப்படுவதாக தலைமை நீதிபதி அறிவித்தார். இந்நிலையில் பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு நாடு முழுவதும் டாக்டர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதில், "எங்களின் கோரிக்கைகள் தொடர்பாக முன்னேற்றங்கள் ஏற்படுவதோடு கவலைகள் உச்சநீதிமன்றத்தால் நிவர்த்தி செய்யப்படுவதை கருத்தில் கொண்டு, வேலைநிறுத்தத்தை நிறுத்துகிறோம் என்று அறிவிக்கிறோம்."

    "எங்களது அனைத்து கடமைகளையும் மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளோம். ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சமீபத்தில் நடந்த அசம்பாவிதம், நம் நாட்டில் டாக்டர்கள் பணிபுரியும் வருந்தத்தக்க நிலையை எடுத்துக்காட்டுகிறது. ஆகஸ்ட் 23 ம் தேதி காலை 8 மணி முதல் மீண்டும் அவரவர் பணிகளை மீண்டும் தொடங்க அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளோம்," என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • கொல்கத்தா காவல் துறை சிஆர்பிசி விதிகள் எதையும் முறையாக பின்பற்றவில்லை.
    • சிபிஐ விசாரணை துவங்குவதற்குள் சம்பவ இடத்தில் எல்லாமே மாற்றப்பட்டு இருந்தது.

    கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் மாநில காவல் துறையின் விசாரணையில் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, இந்த வழக்கை சிபஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் கொல்கத்தா விரைந்த சிபிஐ குழுவினர் கடந்த சில நாட்களாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விவகாரத்தில் சிபிஐ தரப்பில் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

     


    அதில் சிபிஐ தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "இந்த வழக்கில் சிபிஐ விசாரணை ஐந்தாம் நாளில் தான் துவங்கியது. சிபிஐ விசாரணை துவங்குவதற்குள் சம்பவ இடத்தில் எல்லாமே மாற்றப்பட்டு இருந்தது."

    "கொல்கத்தா காவல் துறை சார்பில் பயன்படுத்தப்பட்டு வரும் தினசரி டைரியில் இந்த சம்பவம் தொடர்பாக காலை 10.10 மணிக்கு பதிவிடப்பட்டு இருக்கிறது. எனினும், அன்று மாலையில் தான் போலீசார் சம்பவ இடத்தை தங்களது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளனர். இது மிகவும் கவலை அடையச் செய்துள்ளது."

    இதை கேட்ட சந்திரசூட் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு, மூத்த வழக்கறிஞர் கபில் சிபலிடம், இந்த வழக்கில் எப்போது உடற்கூராய்வு செய்யப்பட்டது என கேள்வி எழுப்பியது. அதற்கு பதில் அளித்த கபில் சிபல், மாலை 6.10 முதல் இரவு 7.10 வரையிலான காலக்கட்டத்தில் உடற்கூராய்வு செய்யப்பட்டது என்றார்.

    இயற்கைக்கு மாறான உயிரிழப்பு என்பதால், உடற்கூராய்வு செய்ய்பட்டது. இந்த வகையில், பஞ்சநாமா எப்போது தயாரிக்கப்பட்டது என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்த வழக்கில் கொல்கத்தா காவல் துறையினர் சிஆர்பிசி விதிகள் எதையும் முறையாக பின்பற்றவில்லை. இந்த சம்பவத்திற்கு பொருப்பேற்க வேண்டிய காவல் துறை அதிகாரியை நீதிமன்றத்திற்கு அழைத்துவர கபில் சிபலுக்கு நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

    இந்த வழக்கு விசாரணை அமர்வில் உள்ள மற்றொரு நீதிபதியான ஜெ.பி. பர்திவாலா, "எனது 30 ஆண்டுகால அனுபவத்தில் உங்கள் மாநிலம் பின்பற்றியதை போன்ற வழிமுறைகளை இதுவரை நான் பார்த்ததே இல்லை," என்றார்.

    குற்ற சம்பவம் இரவு நேரத்தில் அரங்கேறி இருக்கிறது, எனினும் காவல் துறையினர் 18 மணி நேரங்கள் கழித்து தான் சம்பவ இடத்தை தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். காவல் துறையினர் அங்கு வந்து சம்பவ இடத்தை கைப்பற்றும் முன்பே உடற்கூராய்வு நிறைவுபெற்றுவிட்டது. இதைத் தொடர்ந்து காவல் துறையினர் அங்கிருந்து மீண்டும் காவல் நிலையம் சென்ற பிறகு நள்ளிரவு 11.30 மணிக்கு தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என நீதிமன்றம் தெரிவித்தது.

    சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறும் போது, "உடற்கூராய்வு முடிந்த நிலையில் நள்ளிரவு 11.45 மணிக்கு தான் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது. மேலும் மூத்த மருத்துவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர் உடன் பணியாற்றியவர்கள் இந்த சம்பவத்தில் ஏதோ குளறுபடி நடப்பதை உணர்ந்து தான், வீடியோ பதிவு செய்ய வலியுறுத்தினர்," என்றார்.

    "பெண் டாக்டர் கொலை வழக்கில் கற்பழிப்பு-கொலை சம்பவம் குறித்து முதலில் பதிவு செய்த கொல்கத்தா காவல் துறை அதிகாரி அடுத்தக்கட்ட விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்," என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சஞ்சய் ராயை உளவியல் ரீதியான சோதனைக்கு சிபிஐ உட்படுத்தி உள்ளது.
    • சஞ்சய் ராய் தான் செய்த வெறிச்செயலை எந்த வித உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் சர்வ சாதாரணமாக அவர்களிடம் விளக்கியுள்ளான்.

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கார் அரசு மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த முதுநிலை பெண் பயிற்சி டாக்டர் கடந்த 9-ந்தேதி ஆடிட்டோரியத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

    இந்த கொலை தொடர் பாக போலீசில் மருத்துவமனையில் தன்னார்வ ஊழியராக பணியாற்றிய சஞ்சய் ராய் (33) என்பவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து சஞ்சய் ராயை சிபிஐ பல கட்டங்களாக விசாரித்து வருகிறது. இந்நிலையில் சஞ்சய் ராயை உளவியல் ரீதியான சோதனைக்கு சிபிஐ உட்படுத்தி உள்ளது. டெல்லி ஃபாரன்சிக் சைன்ஸ் ஆய்வகத்தில்[CFSL] இருந்து வந்த உளவியல் நிபுணர்கள் சஞ்சய் ராயை பரிசோதனைகளுக்கு உட்படுத்தினர்.

    சஞ்சய் ராய் தான் செய்த வெறிச்செயலை எந்த வித உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் சர்வ சாதாரணமாக அவர்களிடம் விளக்கியுள்ளான். சஞ்சய் ராயின் உளவியல் பரிசோதனையின் மூலமும் உயிரிழந்த பெண் மருத்துவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை மூலமும் சஞ்சய் ராய் மிருகத்தை ஒத்த பாலியல் வக்கிரம் கொண்ட ஆசாமி என்ற முடிவுக்கு சிபிஐ வந்துள்ளது.

     

    முன்னதாக சம்பவ நடந்த அன்றைய இரவு தான் நண்பர்களுடன் கொல்கத்தாவின் சிவப்பு விளக்கு பகுதியில் இரண்டு இடங்களுக்குச் சென்றதாகவும் அதன் பின்னர் தனது நண்பர்கள் தன்னை மருத்துவமனையில் இறக்கி விட்டுச் சென்றதாகவும் கூறினான். பின்னர் தூங்கலாம் என்று தான் ஆடிட்டோரியத்திற்கு சென்றபோது அங்கு பெண் மருத்துவர் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவரை பலாத்காரம் செய்தேன் என்று ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது. அதிகாலையில் சஞ்சய் ராய் ஆடிட்டோரியத்துக்குள் செல்லும் சிசிடிவி காட்சிகளும் தற்போது கைப்பற்றப்பட்டுள்ளது இந்த வாக்குமூலத்துக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட் அமர்வில் இந்த வழக்கானது மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.
    • உச்சநீதிமன்றம் அமைத்துள்ள 10 பேர் கொண்ட தேசிய பணிக்குழு மருத்துவர்களின் கோரிக்கைகளைக் கண்டிப்பாகக் கேட்டறியும்

    கொல்கத்தாவில் R G கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பூதாகரமாக மாறியுள்ள நிலையில் மருத்துவர்கள் போராட்டம், சிபிஐ விசாரணை என தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறது. முதல் நாள் விசாரணையில் மேற்கு வங்காள அரசையும், போலீசையும் உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியது. தாமதமாக வழக்குப் பதிந்தது ஏன்? மருத்துவமனைக்குள் கலவரக்காரர்கள் எப்படி நுழைந்தனர்? என்று சரமாரியாக கேள்வி எழுப்பியது.

    மேலும் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வரும் மருத்துவர்களிடம் அரசு தங்களின் பலத்தைக் காட்ட வேண்டாம் என்று கூறியிருந்தது. ஆனால் மக்களின் நலன் கருதி மருத்துவர்கள் தங்களின் போராட்டத்தைக் கைவிட்டு வேலைக்குத் திரும்ப வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கோரிக்கை வைத்திருந்தது. இந்நிலையில் தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கானது மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.

    மருத்துவர்களும், மருத்துவ ஊழியர்களும் வேலைக்குத் திரும்ப வேண்டும். போராட்டம் நடத்திய ரெசிடெண்ட் மருத்துவர்கள் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாது என்பதை இந்த நீதிமன்றம் உறுதி செய்யும் என்று தலைமை நீதிபதி டி,ஒய்.சந்திரசூட் வாக்குறுதி அளித்தார். மேலும், உச்சநீதிமன்றம் அமைத்துள்ள 10 பேர் கொண்ட தேசிய பணிக்குழு மருத்துவர்களின் கோரிக்கைகளைக் கண்டிப்பாகக் கேட்டறியும் என்றும் அவர் உறுதியளித்தார். 

     

    • குற்றவாளி சஞ்சய் ராய் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்களுடன் இருப்பதாக புகைப்படம் ஒன்றை பகிர்ந்த மத்திய அமைச்சர்
    • மம்தா உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்

    கொல்கத்தாவில் R G கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பூதாகரமாக மாறியுள்ள நிலையில் மருத்துவர்கள் போராட்டம், உச்சநீதிமன்றத்தின் தலையீடு, சிபிஐ விசாரணை என தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் மம்தா தலைமையிலான மேற்கு வங்காள திரிணாமுல் காங்கிரஸ் அரசு மெத்தனப் போக்கில் செய்யப்பட்டதாகக் கண்டனங்கள் எழுந்தன.

    குறிப்பாக பாஜக இந்த விவகாரத்தை முன்வைத்து மம்தா அரசை கடுமையாக சாடி வருகிறது. இந்நிலையில் பெண் மருத்துவர் பலாத்காரம் மற்றும் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றவாளி சஞ்சய் ராய் , கொல்கத்தா துணை காவல் ஆய்வாளர் அனூப் குப்தா மற்றும் தென் தின்ஜாபூர் [Dinajpur] மாவட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்களுடன் உள்ளதாக  புகைப்படம் ஒன்றை மத்திய அமைச்சரும் மேற்கு வங்காள பாஜக தலைவருமான சுகந்தா மஜூம்தார் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் முதல்வர் மம்தா பானர்ஜியைக் கடுமையாக சாடிய அவர், மம்தா உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

    • கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • பெண் டாக்டரின் மரணத்துக்கு நீதி கேட்டு டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கார் அரசு மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த முதுநிலை பெண் பயிற்சி டாக்டர் கடந்த 9-ந்தேதி ஆடிட்டோரியத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.

    அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

    இந்த கொலை தொடர் பாக போலீசில் தன்னார்வ தொண்டராக பணியாற்றிய சஞ்சய் ராய் (33) என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

    பெண் டாக்டரின் மரணத்துக்கு நீதி கேட்டு மேற்கு வங்காள மாநிலம் முழுவதும் டாக்டர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், மருத்துவர் கொலையை கண்டித்து நேற்று இரவு நடைபெற்ற போராட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தனது மனைவி மற்றும் மகளுடன் கலந்து கொண்டார். போராட்டத்தில் பெண் மருத்துவரின் கொலைக்கு நீதி கோரி கங்குலி மெழுகுவர்த்தி ஏற்றினார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கங்குலியின் மனைவி டோனா, "பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்துகிறோம். இது மேற்கு வங்கம் மட்டுமல்ல. எங்கிருந்தோ யாரோ ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக ஒவ்வொரு நாளும் செய்தி வருகிறது, அது நல்ல செய்தி அல்ல. ஒவ்வொரு தனிநபருக்கும் பாதுகாப்பான சமூகம் தேவை" என்று தெரிவித்தார்.

    பின்னர் பேசிய கங்குலியின் மகள் சனா, "போராட்டங்கள் தொடர வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    ×