search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223427"

    • பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
    • பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் 10 தோழமை கட்சித் தலைவர்கள் பங்கேற்று பேச உள்ளனர்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் கடந்த 3-ந் தேதி சென்னையில் கொண்டாட பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    ஆனால் அன்றைய தினம் ஒடிசா மாநிலத்தில் நடந்த ரெயில் விபத்து காரணமாக துக்கம் அனுஷ்டிக்கும் வகையில் தி.மு.க.வின் பொதுக்கூட்டம் உள்பட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.

    இதைத் தொடர்ந்து கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் சென்னை பெரம்பூர் பின்னிமில் மைதானத்தில் இன்று மாலை 5 மணிக்கு பிரமாண்டமாக நடைபெறுகிறது.

    இந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

    சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு வரவேற்புரையுடன் தொடங்கும் இந்த பொதுக் கூட்டத்திற்கு பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார்.

    பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா, கனிமொழி எம்.பி., அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

    இந்த பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் 10 தோழமை கட்சித் தலைவர்கள் பங்கேற்று பேச உள்ளனர்.

    அதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல் முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

    கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் என்பதால் மிகப் பிரமாண்டமாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    பெரிய பெரிய வரவேற்பு வளைவுகள், வாழை மர தோரணங்கள், வழி நெடுக கட்சிக் கொடி என பெரம்பூர் பின்னிமில் பகுதியே விழா கோலம் பூண்டுள்ளது.

    மேடை அமைப்பும் மிகப் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

    கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழாவை குறிக்கும் வகையில் அவரது பிரமாண்ட கட்அவுட்களும் மேடை அருகே அமைக்கப்பட்டுள்ளது. மின்னொளி அலங்காரமும் பெரிய அளவில் செய்யப்பட்டு உள்ளது.

    பொதுக் கூட்டத்தை பொது மக்கள் அமர்ந்து பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான சேர்களும் மைதானத்தில் போடப்பட்டுள்ளது.

    இந்த பொதுக் கூட்டத்தை காண்பதற்கு சென்னை காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், மாவட்டங்களில் இருந்தும் கட்சி நிர்வாகிகள் வர இருப்பதையொட்டி விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக ஏராளமான போலீசாரும் அங்கு நிறுத்தப்பட்டு உள்ளனர்.

    • கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடக்கம் என்பதால், ஆண்டு முழுவதும் கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
    • தமிழக அரசு தரப்பிலும், தி.மு.க. சார்பிலும் ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    சென்னை:

    ஒடிசா ரெயில் விபத்துக் காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் சென்னையில் நாளை நடைபெற உள்ளது.

    கருணாநிதியின் நூற்றாண்டு விழா கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அன்றைய தினம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் வடசென்னை புளியந்தோப்பு பின்னி மில் மைதானத்தில் நடைபெற இருந்தது. ஒடிசா ரெயில் விபத்தைத் தொடர்ந்து இந்த பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், இப்பொதுக்கூட்டம் நாளை (ஜூன் 7-ந்தேதி) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடக்கம் என்பதால், ஆண்டு முழுவதும் கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

    தமிழக அரசு தரப்பிலும், தி.மு.க. சார்பிலும் ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் அவரது நூற்றாண்டு விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

    • சிவகங்கை அருகே தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
    • ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சக்தி தாசன் நன்றி கூறினார்.

    காளையார்கோவில்

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் கிழக்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி சார்பில் பஸ் நிலையம் அருகில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பா ளர் நாகனி செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

    ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் காட்டுப்புலி சவுந்தர்ராஜன் வரவேற்று பேசினார். முன்னாள் எம்.எல்.ஏ. தலைமை கழக பேச்சாளர் வி.பி. ராஜன் சிறப்புரை ஆற்றினார்.

    இந்த கூட்டத்தில் ஒன்றிய நிர்வாகிகள் வனிதா கண்ணதாசன், சாந்தா கருப்பசாமி, அஜித்குமார், இலக்கிய அணி அரசு, முத்து, தொண்டரணி பிரபு, முருகேசன் குழந்தைச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டார்கள். ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் தினேஷ்அரசு நன்றி கூறினார்.

    கொல்லங்குடி

    காளையார்கோயில் வடக்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி சார்பில் கொல்லங்குடியில் அவைத்தலைவர் சுப. தமிழரசன் தலைமையில் ஒன்றிய செயலாளர் ஆர்.எம். கென்னடி முன்னி லையில் அரசின் அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார், தலைமைக்கழக பேச்சாளர் வி.பி.ராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

    இதில் நிர்வாகிகள் முத்தூர் கருப்பையா, கண்ணாத்தாள், தென்னரசு, செல்லப் பாண்டி, சுப.கண்ணன், தகவல் தொழில்நுட்ப அணி சுசீந்திரன் சந்திரன், நேரு, சதீஷ்குமார், அசோக், ஜெயராஜ், மிலிட்டரி பிரபு, ஆகாஷ், சீனிவாசன், பாலமுருகன், முருகன், முக்கையா, முருகன், நைனா, நாட்டரசன்கோட்டை பேருர் செயலாளர் ஜெயரா மன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சக்தி தாசன் நன்றி கூறினார்.

    • சமத்துவ மக்கள் கட்சி தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நாளை நடக்கிறது.
    • கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் தலைமை தாங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    மதுரை

    சமத்துவ மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட செயலாளர்கள் புறா மோகன் (மத்தி), பாலமேடு கார்த்திக் (வடக்கு) ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 7-வது பொதுக்குழு கூட்டத்தில் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் மதுரையில் நாளை (28-ந்தேதி) மாலை 5 மணிக்கு பழங்காநத்தம் ரவுண்டானா அருகில் நடைபெறுகிறது.

    கூட்டத்திற்கு கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் சுந்தர் விளக்க வுரையாற்றுகிறார். மாநில துணை பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வரவேற்று பேசுகிறார். மாநில வர்த்தக அணி துணை செயலாளர் கதிரேசன், மாவட்ட செயலாளர்கள் பஞ்சு, சிவாஜி பூமிநாதன் ஆகியோர் தலைமை மற்றும் முன்னிலை வகிக்கிறார்கள். சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சரத் குமார் தலைமை தாங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    முதன்மை துணை பொதுச்செயலாளர் கணேசன், கொள்கை பரப்பு செயலாளர் விவேகானந்தன் உள்பட நிர்வாகிகள் விளக்கவுரையாற்றுகின்றனர். முடிவில் மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளர் ரவி நன்றி கூறுகிறார்.

    மதுரையில் நடைபெற உள்ள சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்கூட்டத் தில் கலந்து கொள்ள வருகை தரும் நிறுவ னத்தலைவர் சரத்குமாருக்கு கட்சி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. மேலும் பொதுக் கூட்டத்திற்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்து கார், வேன் மூலம் திரளான தொண்டர்கள் வருகை தர உள்ளனர்.

    இதையொட்டி கூட்ட ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டு வருகின்றன. எனவே சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்கூட்டத் திற்கு தலைமைக்கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • நீண்ட நேரம் மேடைக்கு அருகே நின்று கொண்டு நிர்வாகிகளுடன் சட்டமன்ற உறுப்பினர் விவாதித்துக் கொண்டிருந்தார்.
    • பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு மற்றொரு கூட்டத்திற்கு புறப்பட்டு சென்றார்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் திமுக அரசின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கி தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நேற்று இரவு பாகல்மேடு ஊராட்சி மற்றும் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஆகிய இடங்களில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளுக்கு,எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர்.சத்தியவேலு தலைமை தாங்கினார். அனைவரையும் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வீரமணிகண்டன் வரவேற்றார்.

    இதில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே.கோவிந்தராஜன், தலைமை கழகப் பேச்சாளர் ஆலந்தூர் ஒப்பிலாமணி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர். இதன் பின்னர்,பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்நிலையில், பாகல்மேடு ஊராட்சியில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் துவங்குவதற்கு முன்பாக மாநில அயலக அணி துணைச்செயலாளர் ஜி.ஸ்டாலின், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பி.ஜே.மூர்த்தி,ஒன்றிய அவைத்தலைவர் முனிவேல், மாவட்ட பிரதிநிதி கே.வி.வெங்கடாசலம், ஒன்றிய துணைச் செயலாளர் அன்பு உதயகுமார் ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்தனர். மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே.கோவிந்தராஜன் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளுடன் காரில் வந்து மேடை அருகே இறங்கினார்.

    அப்பொழுது அப்பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இதனால் நீண்ட நேரம் மேடைக்கு அருகே நின்று கொண்டு நிர்வாகிகளுடன் சட்டமன்ற உறுப்பினர் விவாதித்துக் கொண்டிருந்தார். நீண்ட நேரம் மின்சார சப்ளை செய்யாததால் பயனாளி ஒருவருக்கு நலத்திட்ட உதவியை வழங்கிவிட்டு மற்றொரு கூட்டத்திற்கு செல்லலாம் என்று கூறியவண்ணம் பரிதவித்துக் கொண்டிருந்தார். இதன் பின்னர், பயனாளி ஒருவருக்கு நலத்திட்ட உதவியை வழங்கிவிட்டு புறப்பட்டார். அப்பொழுது மின்சாரம் சப்ளை செய்யப்பட்டது. இதனால் பரிதவித்துக் கொண்டிருந்த சட்டமன்ற உறுப்பினர் மேடையில் ஏறி 2 ஆண்டு சாதனைகளை விளக்கி பேசிவிட்டு மீண்டும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு மற்றொரு கூட்டத்திற்கு புறப்பட்டு சென்றார். இப்பிரச்சினையால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனைகள் விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது.
    • பொன்னேரி சிவா கலந்து கொண்டு 2 ஆண்டுகளில் அரசு நிறைவேற்றிய பல்வேறு திட்டங்களை எடுத்துரைத்தார்.

    மாமல்லபுரம்:

    வடக்கு மாமல்லபுரத்தில் நகர தி.மு.க இளைஞர் அணி சார்பில், திராவிட மாடல் அரசின் 2ஆண்டு சாதனைகள் விளக்க, தெருமுனை பொதுக்கூட்டம் நகர அமைப்பாளரும் பேரூராட்சி மன்ற உறுப்பினருமான எம்.வி மோகன்குமார் தலைமையில் நடைபெற்றது. தலைமை கழக பேச்சாளர் பொன்னேரி சிவா கலந்து கொண்டு 2 ஆண்டுகளில் அரசு நிறைவேற்றிய பல்வேறு திட்டங்களை எடுத்துரைத்தார்.

    காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக பொருளாளரும் மாமல்லபுரம் நகர கழக செயலாளருமான வெ.விசுவநாதன் முன்னிலை வகித்தார். உள்ளூர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • தமிழகத்தில் 7 முனைகளில் இருந்து சி.ஐ.டி.யூ.வினர் நடை பயண பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
    • நாகை மாவட்ட செயலாளர் தங்கமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கடலூர்:

    விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். நிரந்தரத் தன்மை வாய்ந்த பணிகளில் ஒப்பந்த முறையை எதிர்த்தும், தொழிற்சாலை சட்டதிருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், தொழிலாளர் நலன் பாதுகாக்கும் வகையில் முத்தரப்பு குழுக்களை செயல்படுத்த வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் 7 முனைகளில் இருந்து சி.ஐ.டி.யூ.வினர் நடை பயண பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கடலூரில் தொடங்கிய நடைபயண பிரசாரத்திற்கு மாநில உதவி பொதுச்செயலாளர் திருச்செல்வம் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஜெயபால், கடலூர் மாவட்ட செயலாளர் பழனிவேல், தஞ்சாவூர் மாவட்ட தலைவர் கண்ணன், திருவாரூர் மாவட்ட செயலாளர் முருகையன், நாகை மாவட்ட செயலாளர் தங்கமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கடலூர் போக்குவரத்து கழக பணிமனை அருகில் இருந்து தொடங்கிய பிரசார நடை பயணம் பாரதி சாலை, செம்மண்டலம், சாவடி மற்றும் கோண்டூர் வழியாக நெல்லிக்குப்பம் வரை சென்றது. இதில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் மாரியப்பன், அரியலூர் மாவட்ட செயலாளர் துரைசாமி, மாவட்ட தலைவர் கருப்பையன், மாவட்ட துணை தலைவர் பாஸ்கரன், நிர்வாகிகள் சுப்பராயன், ராஜேஷ் கண்ணன், திருமுருகன் ஸ்டாலின், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் மாதவன், மாநகர செயலாளர் அமர்நாத் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த பிரசார பயணமானது மே 30-ம் தேதி சி.ஐ.டி.யூ. அமைப்பு தினத்தன்று திருச்சியில் மாபெரும் பொதுக்கூட்டத்துடன் நிறைவடைகிறது.

    • நத்தக்காடையூரில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
    • அரசாணை 276-ஐ ரத்து செய்ய வேண்டும்.

    காங்கயம் :

    ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட கீழ்பவானி பாசன விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து கடைமடை பகுதியான கரூர் மாவட்டம் அஞ்சூர் பகுதி வரை செல்லும் கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தின் அரசாணை 276-ஐ ரத்து செய்ய கோரியும், மண் அணை மற்றும் மண் கால்வாயாக பராமரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் பழைய கட்டுமானங்களை இடிக்க கூடாது என்றும், காவிரி தீர்ப்பின்படி நீர் நிர்வாகம் உரிய முறையில் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கான்கிரீட் எதிர்ப்பு இயக்கத்தின் கீழ்பவானி பெயரல்ல - எங்கள் உயிர் என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நத்தக்காடையூர், ஈஸ்வரன் கோவில் மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

    இந்த பொதுக்கூட்டத்தில் நத்தக்காடையூர், பழையகோட்டை, மருதுறை, பரஞ்சேர்வழி ஊராட்சி பகுதிகளை சேர்ந்த கீழ்பவானி பாசன விவசாயிகள், நகர, சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.

    • ஒரத்தநாட்டில் நாளை (திங்கட்கிழமை) மாலை அ.தி.மு.க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
    • பொதுக் கூட்ட பணிகளை முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் நாளை(திங்கட்கிழமை) மாலை அ.தி.மு.க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் முன்னாள் முதல்-அமை ச்சரும், தமிழ்நாடு சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார்.

    இதற்காக ஒரத்தநாடு பஸ் நிலையம் அருகே பிரமாண்ட மேடை அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    இந்த பணிகளை முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அமைப்புச் செயலாளருமான ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;-

    தமிழகத்தில் ஜெயலலிதா வழியில் மக்களுக்கான ஆட்சியை வழங்கிய எடப்பாடி கே.பழனிசாமி, கட்சியின் பொதுச் செயலாளராகி முதல் முறையாக தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வருகை தர உள்ளார்.

    அதன்படி எடப்பாடி பழனிச்சாமி நாளை(திங்கட்கி ழமை) மாலை 3 மணிக்கு கபிஸ்தலத்தில் முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணுவின் உருவ சிலையை திறந்து வைக்கிறார்.

    இதைத்தொ டர்ந்து மாலை 5 மணிக்கு ஒரத்தநாட்டில் ஆயிரக்கண க்கானோர் மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணையும் விழா பொதுக்கூட்டம் நடக்கிறது.

    கூட்டத்தில் பங்கேற்று முன்னாள் முதல்-அமை ச்சரும், தமிழ்நாடு சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

    தஞ்சை மாவட்டத்துக்கு வரும் எடப்பாடி பழனிசாமிக்கு செங்கிப்பட்டி, திருவையாறு, திருக்கருகாவூர், மேலஉளூர் உள்ளிட்ட இடங்களில் கட்சி பிரமுகர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. எனவே நிகழ்ச்சிகளில் கட்சி பிரமுகர்களும், பொதுமக்களும் பெருமளவு கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது பட்டுக்கோ ட்டை முன்னாள் எம்.எல்.ஏ. சி.வி.சேகர், ஒரத்தநாடு பேரூ ராட்சி தலைவர் மா.சேகர், மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஆர்.காந்தி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செ யலாளர் கு.ராஜமாணிக்கம், முன்னாள் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், தஞ்சை நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் என்.எஸ்.சரவணன், ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் கோவி.தனபால், தொண்டராம்பட்டு முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.ஆசைத்தம்பி, தெலுங்கன்குடிக்காடு முன்னாள் ஊராட்சி தலைவர் பஞ்சு ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.
    • முருகப்பெருமாள், சிவராமன், சோலை முருகன், ரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

    சாயல்குடி

    கடலாடி தி.மு.க. வடக்கு ஒன்றியம் சார்பில் ஏனாதி பூங்குளம் பகுதியில் தமிழக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கடலாடி வடக்கு ஒன்றிய செயலாளர் ஆப்பனூர் ஆறுமுகவேல் தலைமை தாங்கினார். கடலாடி ஒன்றிய முன்னாள் துணை சேர்மன் பத்மநாதன், ஒன்றிய கவுன்சிலர்கள் பானுமதி ராமமூர்த்தி, செய்யது அலி பாத்திமா, நிர்வாகிகள் போகத்துரை, சிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்.எஸ்.மங்கலம் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் வ.து.ந.ஆனந்த் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞரணி மாரிநாதன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பழனிவேல் பாண்டியன், மாணவர் அணி லட்சுமணன், நிர்வாகிகள் மணிமாறன், முருகப்பெருமாள், சிவராமன், சோலை முருகன், ரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
    • பேச்சாளர் வில்வ சக்திநாதன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்செல்விபோஸ் ஆகியோர் பேசினர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள புதுக்கோட்டையில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் சண்முகநாதன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் கிழவராஜன், துணைச் செயலாளர் தங்கப்பாண்டி, மாவட்ட பிரதிநிதி நாகமணி முன்னிலை வகித்தனர். பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் அகமது நம்பி, பேச்சாளர் வில்வ சக்திநாதன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்செல்விபோஸ் ஆகியோர் பேசினர். வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், தெற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன், துணை செயலாளர் அன்னமயில், நீதிராஜன், ஒன்றிய கவுன்சிலர் முத்துக்கிளி,பொருளாளர் செந்தூர்பாண்டி, மாவட்ட பிரதிநிதி முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சாயல்குடியில் தி.மு.க. சாதனை விளக்க கூட்டம் நடந்தது.
    • ஒன்றிய துணைச்செயலாளர்கள் லிங்கராஜ், ராணி ராஜ், பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே எஸ்.தரைக்குடி கிராமத்தில் சாயல்குடி தி.மு.க. தெற்கு ஒன்றியம் சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சாயல்குடி தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். சாயல்குடி தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் முகைதீன், கடலாடி தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் ஆப்பனூர் ஆறுமுகவேல், முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பூபதி மணி, முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் தமிழ் செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் இன்ப ரகு சிறப்புரையாற்றினார்.

    இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் ராஜாராம், செல்லபாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் பிச்சை, ஊராட்சி தலைவர்கள் மங்களசாமி, ஜெயலட்சுமி வடமலை, முனியசாமி, சாயல்குடி நகர் இளைஞரணி செயலாளர் விக்னேஷ்ராம், ஒன்றிய அவைத்தலைவர் தங்கபாண்டியன், ஒன்றிய துணைச்செயலாளர்கள் லிங்கராஜ், ராணி ராஜ், பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×