search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224333"

    • 18 பேர் மீது வழக்கு
    • படுகாயம் அடைந்த இருவரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    நாகர்கோவில் :

    கோட்டார் ஊட்டு வாழ்மடம் பகுதியை சேர்ந்த வர் ஹரிஹர செல்வம் (வயது 34).

    மேல காமரா ஜர்புரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (40). இவர்கள் இருவரும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆவார்கள். இவர்கள் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு கல்லூரி பகுதி யில் நின்று கொண்டிருந்த னர்.

    அப்போது அங்கு வந்த நாம் தமிழர் கட்சி நிர்வா கிகள் பெர்லின் ஜோ, விஜய ராகவன், ஜெயரின் மற்றும் கண்டால் தெரியும் 18 பேர் சேர்ந்து ஹரிஹர செல்வம், சதீஷ்குமார் இருவரையும் சரமாரியாக தாக்கினார்கள். இரும்பு கம்பியாலும் தாக்கப் பட்டனர். இதில் ஹரிஹர செல்வம், சதீஷ்குமார் இருவரும் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த இருவரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து ஹரிஹர செல்வம் வடசேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் பெர்லின் ஜோ, விஜயராகவன், ஜெயரின் மற்றும் கண்டால் தெரியும் 18 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 294பி, 323, 324, 506 2 ஐபிசி ஆகிய 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.

    • முஸ்லிம் நிர்வாக சபையில் புதிய நிர்வாகிகள் பதவியேற்றனர்.
    • முடிவில் செயலாளர் கரீம் கனி நன்றி கூறினார்.

    பனைக்குளம்

    மண்டபம் ஊராட்சி ஒன்றியம் பனைக்குளம் கிழக்கு பகுதி முஸ்லிம் நிர்வாக சபையின் நிர்வாகி கள் பதவிக்காலம் முடிவ டைந்ததை தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய் யப்பட்டு பதவி ஏற்பு விழா நேற்று மாலை மதரஸா கட்டிடத்தில் நடந்தது.

    முன்னதாக பனைக்குளம் ஜூம்மா பள்ளிவாசல் தலைமை இமாம் ஹாஜா முகைதீன் ஆலிம் கிராத் ஓதி தொடங்கி வைத்தார்.இதில் முஸ் லிம் நிர்வாக சபை முன்னாள் நிர்வாகிகள், வாலிப முஸ்லீம் சங்க

    தலைவர் சீனி அன்வர் அலி, செயலாளர் சீனி ரிசாஸ் கான் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

    பனைக்குளம் முஸ்லிம் பரிபாலன சபை தலைவரும், முன்னாள் ஊராட்சி தலைவருமான ஜெய்னுல் அஸ்ஸலாம், செயலாளர் ரோஸ்சுல்தான், பனைக் குளம் ஊராட்சி தலைவர் பவுசியா பானு, ஐக்கிய முஸ்லிம் சங்க தலைவர் காதர் முகைதீன், செயலாளர் தாகிர் உசேன், ஜமாத்-சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து பனைக்குளம் முஸ்லிம் நிர்வாகசபையின் தலைவராக பாரமபரியமிக்க சீ.கு.என்ற குடும்பத்தை சேர்ந்த ஹம்சத் அலி 7-வது முறையாக ஜமாத் தலைவராக தேர்ந் தெடுக்கப்பட்டார். உதவி தலைவராக ஏ.முகைதீன் அலி, செயலாளராக ஏ.கரீம் கனி, உதவி செயலாளராக நூருல் மன்னான், பொரு ளாளராக எம்.பி.எம்.சாகுல் ஹமீது உள்பட உறுப்பி னர்களாக 15 பேர் தேர்வு செய்யப்பட்டு, தலைமை இமாம் ஹாஜா முகைதீன் ஆலிம் முன்னிலையில் பதவி ஏற்ற னர். பின்னர் முஸ்லிம் பரிபாலன சபை தலை வர் ஜெய்னுல் அஸ்லலாம் பேசுகையில், புதிய நிர்வாகிகளுக்கு எனது பாராட்டுக்க ளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

    புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்ட அனைவரும் கிராமத்தின் வளர்ச்சிக்கும், ஒற் றுமைக்கும் உறுதுணையாக இருந்து நமது ஊருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார். முன்னதாக வாலிப முஸ்லிம் சங்கதலை வர் சீனி அன்வர்அலி புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்தார். முடிவில் செயலாளர் கரீம் கனி நன்றி கூறினார்.

    • விருதுநகர் மாவட்ட தி.மு.க. நெசவாளரணி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஆறுமுகம், கோவிந்தராஜ், ராஜபாளையம் ராஜேந்திரகுமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட தி.மு.க. நெசவாளரணி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வடக்கு மாவட்டத்திற்கு தலைவராக வீரசோழனை சேர்்ந்த சவரிமுத்து, துணைத்தலைவராக கீழஉப்பிலிக்குண்டு ராமர், அமைப்பாளராக கல்குறிச்சி கடம்பவனம் துணை அமைப்பாளர்களாக பூலாங்கால் மைதின் அப்துல்காதர், குலசேகரநல்லூர் முத்துராமலிங்கம், சிவகாசி அன்பு முருகன், பொட்டகாசியேந்தல் பிச்சைமணி, மல்லாங்கிணறு ரங்கசாமி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    தெற்கு மாவட்டத்திற்கு தலைவராக சுந்தரபாண்டியம் பகுதிைய சேர்ந்த சடையாண்டி, துணைத்தலைவராக சமுத்திராபுரம் ஆனந்தா முருகன், அமைப்பாளராக அருப்புக்கோட்டை திருநகரம் அண்ணாதுரை, துணை அமைப்பாளர்களாக சங்கரபாண்டியாபுரம் பாலசுப்பிர மணியன், குருநமசிவாயம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆறுமுகம், கோவிந்தராஜ், ராஜபாளையம் ராஜேந்திரகுமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    • இளம்பெண்கள் பாசறை, மகளிர் குழு அமைப்பது குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.
    • தமிழக எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார்.

    காங்கயம் :

    காங்கயம், சென்னிமலை சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் காங்கயம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், தமிழக எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார். திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். காங்கயம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான என்.எஸ்.என்.நடராஜ் வரவேற்றார். கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி, பூத் கமிட்டி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை, மகளிர் குழு அமைப்பது குறித்த ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

    கூட்டத்தில்எம்.எல்.ஏ.க்கள் எம்.எஸ்.எம்.ஆனந்தன், கே.என்.விஜயகுமார், முன்னாள் எம்.பி.சிவசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. சு.குணசேகரன், காங்கயம் நகர செயலாளர் வெங்கு ஜி.மணிமாறன், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் வெங்கடேச சுதர்ஷன், வெள்ளகோவில் நகர செயலாளர் டீலக்ஸ் ஆர்.மணி,காங்கயம் யூனியன் கவுன்சிலர் பாப்பினி மைனர் பழனிசாமி , காங்கயம் நகராட்சி கவுன்சிலர் அருண்குமார், அ.தி.மு.க. பிரமுகர்கள் பி.கே.பி. சண்முகசுந்தரம், என்.எஸ்.என். தனபால் உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர, வார்டு, கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • நடை பயண பிரசார இயக்கம் இந்திய கம்யூனிஸ்ட சார்பில் நடைபெற்றது.
    • இந்த நடை பயணமானது பி.எஸ். ஆர். மணிமண்டபம் வரை நடைபெற்றது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில், மத்திய பா.ஜ.க. ஆட்சியை அகற்றுவோம், நாட்டையும் மக்களையும் காப்போம் என்ற மாற்றத்தை நோக்கி நடை பயண பிரசார இயக்கம் இந்திய கம்யூனிஸ்ட சார்பில் நடைபெற்றது.

    திருத்துறைப்பூண்டி வேதை சாலையில் உள்ள அம்பேத்கார் சிலையிலிருந்து தொடங்கிய நடை பயண இயக்கத்தில் முன்னால் எம்.எல்.ஏ. பழனிச்சாமி தலைமையில் மாரிமுத்து எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், ஒன்றிய தலைவர் பாஸ்கர், நகரச் செயலாளர் சுந்தர், நிர்வாகிகள் சாமிநாதன், கோபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த நடை பயணமானது பி.எஸ். ஆர். மணிமண்டபம் வரை நடைபெற்றது.

    • அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார்.
    • அ.ம.மு.க. நிர்வாகிகள் யாரும் இவருடன் எந்தவித தொடர்பும் வைத்து கொள்ள கூடாது.

    தஞ்சாவூர்:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அ.ம.மு.க.வின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் நடந்து செயல்பட்டதாலும், கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தால் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அ.ம.மு.க. செயலாளராக இருந்த மா.சேகர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார்.

    அ.ம.மு.க. நிர்வாகிகள் யாரும் இவருடன் எந்தவித தொடர்பும் வைத்து கொள்ள கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சோழவந்தான் கோவில் மண்டல அபிஷேகம் நடந்தது.
    • விழா ஏற்பாடுகளை பன்னிமுட்டி முனியாண்டி சுவாமி கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் பன்னி முட்டி முனியாண்டி கோவில் மண்டல அபிஷேகம் நடைபெற்றது. இந்த கோவிலில் மகா கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடைபெற்றது. இதையொட்டி மண்டல பூஜை தினசரி நடைபெற்று வந்தது. சிறப்பு மண்டல அபிஷேகம் ஆனந்த் என்ற கற்பூரபட்டர் தலைமையில் யாகபூஜை இன்று காலை நடந்தது இதைத் தொடர்ந்து பன்னி முட்டி முனியாண்டி சுவாமி மற்றும் பரிகார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், மண்டல அபிஷேகம் நடைபெற்றது. சண்முகபூசாரி பூஜை செய்து பிரசாதம் வழங்கினார். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை பன்னிமுட்டி முனியாண்டி சுவாமி கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். முன்னாள் சேர்மன் எம்.கே. முருகேசன், காடுபட்டி திரவுபதி அம்மன் கோவில் பூசாரி பாலு, முதலியார் கோட்டை கிராமத்தலைவர் ஜெயக்கொடி உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • ரூ.80 லட்சம் கூட்டுறவு கடன் வழங்கப்பட்டது.
    • சங்கத்தின் தலைவர் சேகர் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக தொடங்கப்பட்ட வி.ஏ.30 விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்கங்கள், நகர வங்கிகள் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் மூலம் தொடக்க நிகழ்வாக 8 பேருக்கு ரூ.80 லட்சத்து 30 ஆயிரம் முதல் கடன் வழங்கும் நிகழ்ச்சி விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் நடந்தது.

    விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர்-மேலாண்மை இயக்குநர் ராஜலட்சுமி, அருப்புக்கோட்டை சரக துணைப்பதிவாளர் ரவிச்சந்திரன், விருதுநகர் நகர கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் மாரியப்பன் ஆகியோர் உறுப்பினர்களுக்கு கடனுதவி காசோலைகளை வழங்கினர்.

    அப்போது சங்கத்தின் தலைவர் சேகர் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • 6 பேரும் தினமும் காலை, மாலை கோட்டார் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும்
    • போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    கன்னியாகுமரி :

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து செட்டிகுளம் நோக்கி இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் பேரணி நடத்தினர்.

    அப்போது பாரதிய ஜனதா அலுவலகம் முன்பு அமர்ந்து மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர்.அப்போது பிரதமர் மோடியை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் பாரதிய ஜனதா அலுவலகத்தில் இருந்து வந்த பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கி கொண்டனர். இந்த தாக்குதலில் இரு தரப்பினரும் காயமடைந்த னர். இந்த மோதல் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் தர்மராஜ் உள்பட 22 பேர் மீதும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் டைசன், லாரன்ஸ் உட்பட 31 மீதும் கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதைத் தொடர்ந்து பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ், நெல்லை மாவட்ட முன்னாள் தலைவர் மகாராஜன் மாவட்ட துணை தலைவர் சொக்கலிங்கம் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதே போல் காங்கிரஸ் நிர்வாகிகள் டைசன், லாரன்ஸ், ஜோஸ்லின் ஜெலின் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 6 பேரும் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப் பட்டனர். கைது செய்யப்பட்ட 6 பேரையும் ஜாமீனில் விடுவிக்க கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனுக்களை விசாரித்த கோர்ட் 6 பேருக்கும் ஜாமீன் வழங்கியது. 6 பேரும் தினமும் காலை, மாலை கோட்டார் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் கூறியிருந்தது. இதையடுத்து இன்று காலை பாளையங் கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ் மற்றும் நிர்வாகிகள், காங்கிரஸ் நிர்வாகிகள் லாரன்ஸ், டைசன், ஜோஸ்லின் ஜெலின் ஆகிய6 பேரும் விடுவிக்கப்பட்டனர்.விடு விக்கப்பட்ட நிர்வாகிகள் பாளையங்கோட்டையில் இருந்து புறப்பட்டு நாகர்கோவிலுக்கு வந்தனர். இைதயடுத்து ஆரல்வாய்மொழியில் கூடுதல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன், டி.எஸ்.பி.க்கள் நவீன்குமார், கிருஷ்ணமூர்த்தி, ராஜா, இன்ஸ்பெக்டர்கள் ராமர், கோபி அகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜுக்கு கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். அப்போது போலீசார் நிர்வாகிகளை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் போலீசாருக்கும் நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பாரதிய ஜனதா நிர்வாகிகளின் வாகனங் களையும் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

    வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்ட கார்களில் வந்திருந்தனர். 5 கார்களை மட்டுமே அனுமதிப்போம் என்று போலீசார் தெரி வித்தனர். மற்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். முதலில் 5 கார்கள் சென்ற பிறகு மற்ற கார்களை போலீசார் விடுவித்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. பிரச்சினைகள் எதுவும் நடை பெறாமல் இருக்கும் வகையில் போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    • மதுரை கிழக்கு மாவட்ட பா.ஜ.க. ஊடக பிரிவு நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
    • தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மதுரை

    மதுரை கிழக்கு மாவட்ட பா.ஜ.க. ஊடக பிரிவு நிர்வாகிகள் கூட்டம் மாட்டுதாவணியில் நடந்தது. மாவட்ட தலைவர் செல்வ மாணிக்கம் தலைமை தாங்கினார். மாநில செய லாளர் நாகராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில், ஊடகங்கள் வாயிலாக பா.ஜ.க. கட்சியின் செயல்பாடுகள், பிரதமர் மோடி தென் தமிழகத்திற்கு செய்த திட்டங்கள் ஆகியவற்றை மக்களிடம் காட்சி ஊடகங்கள், அச்சு ஊடகங்கள் மற்றும் யூடிப் மூலம் செய்திகள் கடை கோடி மக்களுக்கும் சென்றடைய பணி புரிய வேண்டும் என்றார்.

    இதில் தென் தமிழகம் வளர்ச்சி பெற மதுரை நத்தம் சாலையில் ரூ.612 கோடியில் பறக்கும் பாலம் தந்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மதுரை கிழக்கு சட்ட மன்ற தொகுதியில் அரசு கலை கல்லூரி அமைக்க வேண்டும், மதுரை 9-வது வார்டு உத்தங்குடியில் நிழற்குடை அமைக்க வேண்டும் என்றும் தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • 40 பேரை பிடிக்க தனிப்படை தீவிரம்
    • ஆர்ப்பாட்டம், மறியல், தீப்பந்தம் ஏந்தி போராட்டம் என பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.

    கன்னியாகுமரி:

    பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை பறித்து நாடாளுமன்ற செயலாக்கம் உத்தரவிட்டது.

    இதற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குமரி மாவட்டத்திலும் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டம், மறியல், தீப்பந்தம் ஏந்தி போராட்டம் என பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து இளைஞர் காங்கிரசார் செட்டிக்குளம் நோக்கி கையில் காங்கிரஸ் கொடியை ஏந்தியவாறு பேரணியாக வந்தனர். அப்போது பாரதிய ஜனதா அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமரை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். பாரதிய ஜனதா அலுவலகத்திற்குள் நுழைய முயன்றதாகவும் கூறப்படுகிறது.

    அப்போது பாரதிய ஜனதா அலுவலகத்தில் இருந்த நிர்வாகிகள் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தனர். பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறினார். அப்போது பாரதிய ஜனதா, காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர். இதனால் அந்த பகுதியே போர்க்களமாக மாறியது. கற்கள் மற்றும் கம்பியால் சரமாரியாக தாக்கியதில் காங்கிரஸ் நிர்வாகிகள் லாரன்ஸ், டைசன் ஆகியோர் காயமடைந்தனர். பாரதிய ஜனதா நிர்வாகிகள் ஜெகநாதன், ஆறுமுகம், கிருஷ்ணன், மாதவன் ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது.

    இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் பாரதிய ஜனதா நிர்வாகிகள் அலுவலகத்திற்கு முன்பு குவிந்தனர். இதனால் பதட்டமான சூழல் நிலவியது. இதையடுத்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் பாரதிய ஜனதா அலுவலகம் முன்பு நிர்வாகிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாரதிய ஜனதா நிர்வாகிகளுடன் ஏ.டி.எஸ்.பி. ஈஸ்வரன் மற்றும் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் நடந்த போராட்டத்தால் பரபரப்பு நிலவியது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். காயமடைந்தவர்கள் அரசு ஆஸ்பத்திரியிலும், தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் கொடுத்த புகாரின் பேரில் பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ், பொதுச்செயலாளர் ஜெகநாதன் மற்றும் மகாதேவன் பிள்ளை, மகாராஜன், மாதவன், கிருஷ்ணன், ஆறுமுகம் உள்பட 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 147, 148, 294பி, 323, 324, 435, 506(2) ஐ.பி.சி. ஆகிய பிரிவுகள் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பாரதிய ஜனதா பொதுச்செயலாளர் ஜெகநாதன் கொடுத்த புகாரின் பேரிலும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் டைசன், மாநகர் மாவட்ட தலைவர் நவீன் குமார் மற்றும் டைட்டஸ், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ், விமல், ஜோண் உள்பட 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இளைஞர் காங்கிரஸ் தலைவர் டைசன், ஜெஸ்லின் உள்பட 11 பேரையும் பாரதிய ஜனதா நிர்வாகிகள் மகாராஜன், சொக்கலிங்கம் ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மகாராஜன் நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா முன்னாள் தலைவர் ஆவார். தற்போது தென்காசி மாவட்ட பார்வையாளராக உள்ளார். தலைமறைவான மற்றவர்களை கைது செய்ய தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை வைத்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காங்கிரஸ்-பாரதிய ஜனதா நிர்வாகிகள் மோதலை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 1000 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • மேலூர் தொகுதி தே.மு.தி.க. நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
    • நகர செயலாளராக சரவணன் மீண்டும் நியமனம் செய்யப்பட்டார்.

    மேலூர்

    மேலூர் தொகுதி தே.மு.தி.க. புதிய நிர்வாகிகளை மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன் பரிந்துரையின் பேரில் கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். மேலூர் நகர செயலாளராக எஸ். சரவணன் 2-வது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார். அவைத் தலைவராக ஜெயம் மனோகர், பொருளாளராக அபுதாகிர், துணைச் செயலாளராக பாண்டி முருகன், லட்சுமி காந்தன், பத்ரி நாராயணன், கற்பகம் மாவட்ட பிரதிநிதிகளாக ரவி, சதீஷ்குமார், முரளி கிருஷ்ணன், திவாகர்ராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலூர் கிழக்கு ஒன்றிய செயலாளராக விட்டி கண்ணன், அவை தலைவராக சிவானந்தம், பொருளாராக வெள்ளையன், துணைச் செயலாளர்களாக புகழேந்தி, சிவக்குமார், ராஜன், முத்துலட்சுமி, மாவட்ட பிரதிநிதிகளாக பாஸ்கரன், கோவிந்தராஜன், கலையரசன், ஜானகிராமன் ஆகியோரும், மேலூர் மேற்கு ஒன்றிய செயலாளராக காளீஸ்வரன், அவைத்தலைவராக பாலசுப்பிரமணியம், ஒன்றிய பொருளாளராக முருகேசன், துணைச்செயலாளர்களாக தியாகராஜன், கண்ணப்பன், ஆண்டிச்சாமி, சின்னம்மாள், மாவட்ட பிரதிநிதிகளாக முனிச்சாமி, பாண்டிபிரபு, முத்துச்சாமி, கருப்பையா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அ.வல்லாளப்பட்டி பேரூர் செயலாளராக ஆறுமுகம், அவை தலைவராக மணிகண்டன், பொருளாளராக விஜயகுமார், துணைச்செயலாளர்களாக பாண்டித்துரை, பிரபு, முத்துமணி, கார்த்தி, மாவட்ட பிரதிநிதிகளாக கார்த்திக், பாண்டிசாமி, பழனிச்சாமி, பாண்டி ஆகியோரும், கொட்டாம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளராக பரசுராமன், அவைத் தலைவராக சின்னையா, பொருளாளராக அருணகிரி, துணைச் செயலாளராக கண்ணன், சசிகுமார், முருகன், புவனேசுவரி, மாவட்ட பிரதிநிதிகளாக ராஜமாணிக்கம், ஜபுர் அலி, சங்கர், கனகராஜ் ஆகியோரும் கொட்டாம்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளராக பட்டூர் சந்தன பீர் ஒலியுல்லா, அவைத்தலைவராக ரவி, பொருளாளராக சின்னையா, துணைச் செயலாளராக நிறை செல்வம், முருகேசன், அய்யனார், முத்துலட்சுமி, மாவட்ட பிரதிநிதியாக சேமராஜ், குமார், செல்லையா, ஆண்டி எட் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ×