search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224657"

    • இரவு நேரங்களில் அந்நிய நபர்களின் நடமாட்டமும் , இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதும் அதிகரித்து வருகிறது.
    • மக்களுக்கும் அவர்களது உடைமைகளுக்கும் உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி தர வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடாவும் கவுன்சிலருமான கண்ணப்பன் திருப்பூர் தெற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பிச்சையாவிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- திருப்பூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட44 வது வார்டு பகுதியில் குருநாதர்வீதி , அர்த்தனாரிவீதி , செளண்டம்மன் கோவில் வீதி , கோவிந்தர்வீதி , எம்.என்.ஆர். லைன் , சின்னத்தோட்டம் ,செல்லப்பபுரம் , குப்புசாமிபுரம் , எல்.ஐ.சி.ரோடு ,காமாட்சி அம்மன் கோவில்வீதி பகுதிகளில் இரவு நேரங்களில் அந்நிய நபர்களின் நடமாட்டமும் , இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதும் அதிகரித்து வருகிறது.

    ஆகவே , மேற்கண்ட பகுதிகளில் இரவு நேரங்களில் பாதுகாப்பு பணியை தீவிரப் படுத்துவதோடு தீவிர ரோந்து பணியும் மேற்கொள்ள வேண்டும். 44-வது வார்டு பகுதி மக்களுக்கும் அவர்களது உடைமைகளுக்கும் உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி தர வேண்டும்.மேலும் காணாமல் போன இருசக்கர வாகனங்களை கண்டுபிடித்து தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார். 

    • சுசீந்திரத்திற்கு மீண்டும் ஜெயசந்திரன் நியமனம்
    • இன்ஸ்பெக்டர் இளவரசு மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு மாற்றம்

    நாகர்கோவில்:

    நெல்லை சரகத்துக்குட் பட்ட போலீஸ் நிலையங்க ளில் பணியாற்றும் 19 இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் பிறப்பித்துள்ளார்.

    திருவட்டார் இன்ஸ் பெக்டர் ஷேக் அப்துல் காதர் நெல்லை மாவட் டம் சேரன்மாதேவி போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். கருங்கல் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் சுசீந்திரம் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இவர், ஏற்கனவே சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் பணி புரிந்தவர். மீண்டும் இங்கு இன்ஸ்பெக்டராக ஜெயசந் திரன் பதவியேற்க உள்ளார்.

    சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சாய்லட்சுமி திருவட்டார் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். நெல்லை சிட்டி எஸ்.பி. சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் இசக்கிதுறை கருங்கல் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

    கொல்லங்கோடு இன்ஸ் பெக்டர் ராமா நெல்லை மாவட்ட சைபர் கிரைமுக்கு மாற்றப்பட்டுள்ளார். மார்த் தாண்டம் போலீஸ் நிலை யத்தில் கடந்த ஒரு மாத காலமாக இன்ஸ்பெக் டர்கள் இல்லாத நிலை இருந்தது. இதனால் வழக்கு விசாரணைகளில் தொய்வு ஏற்படுவதாக சமூக ஆர்வ லர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

    இந்த நிலையில் விளாத்திகுளம் இன்ஸ்பெக்டர் இளவரசு மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    • காயம் அடைந்த நபரை அண்ணாநகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.
    • உரிய நேரத்தில் உதவி செய்த இன்ஸ்பெக்டர் சிவஆனந்தை கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டினார்.

    சென்னை:

    சென்னை பாடி மேம்பாலத்துக்கு கீழே கோயம்பேடு நோக்கி செல்லும் சாலையில் நேற்று மாலை 5.30 மணி அளவில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் அடிபட்ட நிலையில் குப்புற படுத்தபடி அவர் மயங்கினார்.

    அப்போது அந்த வழியாக சென்றவர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர். யாரும் அருகில் கூட செல்லவில்லை. ஆனால் மயங்கி கிடந்தவரை சுற்றி கூட்டம் கூடியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இந்த நேரத்தில் அந்த வழியாக சென்னை மதுரவாயல் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சிவஆனந்த் தனது வாகனத்தில் வந்தார்.

    சாலையில் ஒருவர் மயங்கி கிடப்பதையும் சுற்றி நின்று ஆட்கள் வேடிக்கை பார்ப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கீழே இறங்கி சென்று பார்த்தார். கூட்டத்தை கலைய செய்துவிட்டு தலை குப்புற மயங்கி கிடந்த நபரை நேராக புரட்டினார்.

    அப்போது அவருக்கு மூச்சு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மின்னல் வேகத்தில் செயல்பட்ட இன்ஸ்பெக்டர் சிவஆனந்த், காயத்துடன் உயிருக்கு போராடிய நபரை காப்பாற்றும் முயற்சியில் வேகமாக இறங்கினார்.

    அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி தனது வாகனத்தில் இருந்த படுக்கை விரிப்பு ஒன்றை எடுத்து விரித்தார்.

    இதையடுத்து அங்கிருந்த சிலரது உதவியுடன் காயம் அடைந்த நபரை சரக்கு ஆட்டோவில் தூக்கிபடுக்க வைத்து தனது போலீஸ் வாகனத்தை சைரன் ஒலி எழுப்பியவாரே முன்னால் போகச் சொன்னார். டிரைவர் தீபன் சக்கரவர்த்தி போலீஸ் வாகனத்தை வேகமாக ஓட்டிச்சென்றார்.

    இன்ஸ்பெக்டர் சிவ ஆனந்த், சரக்கு வாகனத்தில் உயிருக்கு போராடிய நபருடன் அமர்ந்து பயணித்தார்.

    பின்னர் அண்ணாநகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் காயம் அடைந்த நபரை சேர்த்து சிகிச்சை அளித்தனர். இவர் வந்த மோட்டார் சைக்கிளில் பை ஒன்று இருந்தது. அதனையும் இன்ஸ்பெக்டர் சிவஆனந்த் பத்திரமாக எடுத்துச் சென்றார்.

    காயம் அடைந்த நபர் மயக்க நிலையிலேயே இருந்ததால் அவரை பற்றிய தகவல்கள் ஏதும் உள்ளதா? என்று பையை எடுத்து பார்த்தார்.

    அப்போது அவர் கண்ட காட்சி தூக்கிவாரிப் போட்டது. பையில் ரூ.1 கோடியே 41 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் பில்லுடன் இருந்தன. செல்போன் ஒன்றும் இருந்தது.

    காயம் அடைந்த நபர் அப்போதும் மயக்கம் தெளியாமலேயே இருந்தார். இதனால் அவர் யார்? என்பதை கண்டுபிடிப்பதற்காக செல்போனில் கடைசியாக யாரிடம் பேசியுள்ளார் என்று பார்த்து போன் செய்து விசாரித்தார். அப்போதுதான் 1½ கோடி மதிப்புள்ள 340 பவுன் நகையுடன் மயங்கி கிடந்தவரின் பெயர் அரிகரன் என்பது தெரியவந்தது. 54 வயதாகும் இவர் மேற்கு மாம்பலத்தில் வசித்து வருகிறார். தங்க நகைகளை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் 6 ஆண்டுகளாக பணியாற்றி வருவதும் தெரிய வந்தது.

    அங்கிருந்து பிரபல நகை கடை ஒன்றிற்கு நகைகளை கொண்டு சென்றதும், அப்போதுதான் விபத்தில் சிக்கி மயங்கி கிடந்ததும் தெரியவந்தது. சரியான நேரத்தில் இன்ஸ்பெக்டர் சிவஆனந்த் சம்பவ இடத்துக்கு சென்று அரிகரனின் உயிரை காப்பாற்றியதுடன் ரூ.1½ கோடி நகையையும் மீட்டுள்ளார்.

    இதுபற்றி உடனடியாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அண்ணாநகர் துணை கமிஷனர் விஜயகுமார் மேற்பார்வையில், உதவி கமிஷனர் ரவிச்சந்திரன் நகை குறித்து விசாரணை நடத்தி உரியவர்களிடம் நகையை ஒப்படைத்தார்.

    இதன்படி நகை கடையில் இருந்து கதிரவன் என்பவர் வந்து நகையை பெற்றுக் கொண்டார்.

    உரிய நேரத்தில் உதவி செய்து நகைகளையும் பத்திரமாக ஒப்படைத்த இன்ஸ்பெக்டர் சிவஆனந்த் மற்றும் டிரைவர் தீபன் சக்கரவர்த்தியை கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டினார். இருவருக்கும் வெகுமதி வழங்கப்பட உள்ளது.

    • வேலை கிடைக்காததால் வாலிபர் தற்கொலை செய்தார்.
    • இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் கன்னிதேவன்பட்டியை சேர்ந்தவர் பாண்டியராஜ் (வயது 39). இவர் கடந்த ஒரு ஆண்டாக வேலைக்கு செல்லவில்லை. வேலை கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்து வந்த அவரை குடும்பத்தினர் கண்டித்ததாக கூறப்படு கிறது.

    இதில் மனமுடைந்த அவர் விஷம்குடித்து மந்தையில் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக நெல்லை மாவட்டம் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி அவரது தம்பி முத்துப்பாண்டி கீழராஜ குலராமன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • காடாம்புலியூரில் கனமழை காரணமாக குண்டும் குழியுமான சாலையை இன்ஸ்பெக்டர் ராஜா தாமரை பாண்டியன் ஜே.சி.பி. எந்திரம் மூலம் சரி செய்தார்.
    • 10 ஆண்டுகளாக தொடங்கிய நிலையிலேயே இந்த பணி உள்ளது.

    கடலூர்:

    கடந்த 10ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை தரம் உயர்த்தப்பட்டு நாற்கர சாலை அமைக்கும் பணி நடை பெற்று வந்தது. இந்த நாற்கர சாலை பணிக்காக சாலை ஓரங்களில் இருந்த வீடு, நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு சாலை போடும் பணிதொடங்கியது. ஆனால் 10 ஆண்டுகளாக தொடங்கிய நிலையிலேயே இந்த பணி உள்ளதால் சாலையில் குண்டும் குழி–யும் ஏற்பட்டு உயிர் பலி வாங்கும் சாலையாக இந்த பண்ருட்டி சென்னை சாலை மாறி உள்ளது.

    கடந்த 2 நாட்களாக பண்ரு–ட்டியில் மழை பெய்து வருவதால் இந்த குண்டும் குழியுமான சாலை சேரும் சகதியுமாக மாறி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் உள்ள குழியில் விழுந்து செல்லும் காட்சி பரிதாபமாக  உள்ளது. எனவே கடலூர் கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து பேசி இந்த போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையை சீரமைத்து தரவேண்டும். பண்ருட்டி-கும்பகோணம் சாலையில் சேரும் சகதியு மாகிய தேசிய நெடுஞ்சா லையில் உள்ள பள்ளத்தை இன்ஸ்பெக்டர் ராஜா தாமரை பாண்டியன் ஜே.சி.பி. எந்திரம் மூலம் சரி செய்தார்.

    • பச்சைவா ழியம்மன் கோவில்அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.
    • இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

    விழுப்புரம்:

    உத்தரபிரதேசத்தில் ஐ.ஜி.,யாக உள்ளவரின் 18வயதுமகன்விழுப்புரம் மாவட்டம்கோட்டக்கு ப்பத்தில்இருந்து, பெரிய முதலியார் சாவடியை நோக்கி ஸ்கூட்டி யில் வந்தார். அப்போது, கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன், பச்சைவா ழியம்மன் கோவில்அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். உடனே அந்த சிறுவன் ஓட்டி வந்த ஸ்கூட்டியை நிறுத்தி ஏன் ஹெல்மெட் அணியவில்லை என கேட்டுள்ளார். அதற்கு அந்த சிறுவன் நான் எனது அப்பா ஐ.ஜி., என கூறியுள்ளார். அதற்கு இன்ஸ்பெக்டர் ராபின்சன்யாராக இரு ந்தால் என்ன எனக் கூறி மொபைல் போனில் பேசியதாகவும், ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டியை ஓட்டியதாகவும், 2 வழக்கு கள் பதிந்து 200 ரூபாய் அபராதம் விதித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இ ன்ஸ்பெக்டரிடம் இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் பாராட்டையும், வரவேற்பையும் பெற்று ள்ளது.

    • சோழவந்தான் இன்ஸ்பெக்டருக்கு விருது வழங்கப்பட்டது.
    • இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் மதுரை புறநகர் மாவட்ட கிளைஅலுவலகம் திறக்கப்பட்டது.

    சோழவந்தான்

    சோழவந்தான் காவல் நிலைய ஆய்வாளர் சிவபாலனின் சேவையை பாராட்டி சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளை மற்றும் முள்ளிபள்ளம் கிராம மக்கள் சார்பில் விருது வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் ஜெயராமன், முள்ளி பள்ளம் ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல், துணைத்தலைவர் ராஜா, பேரூர் தி.மு.க. செயலாளர் சத்திய பிரகாஷ், ஜெனகை மாரியம்மன் கோவில் தல வரலாறு புத்தக வெளியீட்டாளர் ஜனகராஜ், ஜவுளிக்கடை அதிபர் மணி, அறக்கட்டளை நிறுவன தலைவர் செந்தூர் பாண்டியன், மதுரை மாவட்ட தலைவர் செல்வி, பொதுச் செயலாளர் நாகுஆச்சாரி மற்றும் மன்னாடிமங்கலம், முள்ளி பள்ளம் அப்துல் கலாம் அறிவியல் மன்ற நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் மதுரை புறநகர் மாவட்ட கிளைஅலுவலகம் திறக்கப்பட்டது.

    • திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்றுள்ளார்.
    • காவலர்களை வைத்து ரோந்து பணிகள் ஈடுபட செய்வேன் அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி நடந்து கொள்வேன் என்றார்.

    கள்ளக்குறிச்சி:

    திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டர் அசோகன் பொறுப்பேற்றுக் கொண்டார் இவர் நிருபர்களிடம் கூறுகையில் திருநாவலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் இரவு நேரங்களில் காவலரை நியமனம் செய்து குற்றங்கள் நடக்காமல் இருக்க பணியாற்றுவேன் பொதுமக்களுக்கு உறுதுணையாக இருந்து அவர்கள் கொடுக்கும் புகாரை உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் கெடிலம் சேந்தநாடு களமருதூர் மடப்பட்டு ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் கூடும் இடங்களில் குற்றங்கள் நடக்காமல் இருக்க காவலர்களை வைத்து ரோந்து பணிகள் ஈடுபட செய்வேன் அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி நடந்து கொள்வேன் என்றார்.

    • இவர் இதற்கு முன்பு மயிலாடுதுறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார். தற்போது பதவி உயர்வு பெற்றுள்ளார்.
    • அரித்துவாரமங்கலம் வலங்கைமான் வட்டத்திற்கு உட்பட்டு வருவதால் இரு காவல் நிலையங்களுக்கும் இன்ஸ்பெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக ராஜா பொறுப்பேற்று ெகாண்டார்.

    இவர் இதற்கு முன்பு மயிலாடுதுறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார். தற்போது பதவி உயர்வு பெற்றுள்ளார்.

    அரித்துவாரமங்கலம் வலங்கைமான் வட்டத்திற்கு உட்பட்டு வருவதால் இரு காவல் நிலையங்களுக்கும் இன்ஸ்பெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கள்ளக்குறிச்சியில் இன்ஸ்பெக்டர் பொறுப்பு ஏற்றார்.
    • போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தனிப்பிரிவு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் சண்முகம். இவர் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றார்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி சைபர் கிரைம் பிரிவில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த தங்கமணி என்பவர் கரூர் மாவட்டத்திற்கு இடம் மாறுதல் செய்யப்பட்டார். இந்நிலையில்கள்ளக்குறிச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தனிப்பிரிவு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் சண்முகம். இவர் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து நேற்று கள்ளக்குறிச்சி சைபர் கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    • சாலையில் தவற விட்ட பணத்தை வாலிபர் ஒப்படைத்தார்.
    • இன்ஸ்பெக்டர் சரவணன் அதனை லலிதாவிடம் வழங்கினார்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனக்கன்குளத்தை சேர்ந்தவர் முருகேசன் மகன் செந்தில்குமார் (வயது30). இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து திருநகருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது தனக்கன்குளம் மெயின் ரோட்டில் ஒரு மணி பர்ஸ் கிடந்தது. அதை செந்தில்குமார் எடுத்து பார்த்தார். அதில் ரூ.67 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தது. அதை செந்தில்குமார் உடனடியாக திருநகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    இதனையடுத்து மணி பர்சை தவற விட்ட வேடர்புளியங்குளம் வி.பி.சிந்தன் நகரை சேர்ந்த லலிதா என்பவரை அழைத்து இன்ஸ்பெக்டர் சரவணன் அதனை லலிதாவிடம் வழங்கினார்.

    • தேவகோட்டையில் சாலையில் கிடந்த நகைகளை போலீசில் ஒப்படைத்தவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
    • 16 பவுன் நகைகளை பையில் வைத்து விட்டு வேலைக்கு சென்றார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை-திருப்பத்தூர் சாலையில் உள்ள நகைக்கடையில் பணியாற்றி வருபவர் போரிவயல் கிராமத்தை சேர்ந்த பிரபு மனைவி பிரியங்கா (வயது28). இவர் உறவினரின் புதுமனை புகுவிழாவிற்கு சென்றுவிட்டு தான் பணிபுரியும் கடைவாசலில் இருசக்கர வாகனத்தை நிறுத்தினார்.

    அந்த வாகனத்தில் 16 பவுன் நகைகளை பையில் வைத்து விட்டு வேலைக்கு சென்றார். வீட்டுக்கு செல்வதற்கு முன்பு இரு சக்கர வானத்தில் இருந்த நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து பிரியங்கா தேவகோட்டை டவுன் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சரவணன் இதுகுறித்து விசாரணை நடத்தினார். அப்போது பிரியங்கா பணிபுரிந்த நகைக்கடையின் மேலே காந்தி ரோட்டை சேர்ந்த நைனா முகம்மது மகன் முகமது இப்ராகிம் (35) கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார்.

    அவர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு செல்லும்போது கடைவாசலில் கிடந்த பையை பார்த்தார். அதில் தங்க நகைகள் இருந்ததை கண்டு காவல்நிலையத்திற்கு சென்று 16.5 பவுன் நகையை இன்ஸ்பெக்டரிடம் ஒப்ப டைத்தார். அதில் தாலி செயின், வளையல்கள், செயின், மோதிரம் இருந்தது.

    அந்த நகை பிரியங்கா விடம் ஒப்படைக்கப்பட்டது. கீழே கிடந்த ரூ.7 லட்சம் மதிப்பிலான 16.5 பவுன் நகைகளை காவல் நிலை யத்தில் ஒப்படைத்த முகமது இப்ராகிமின் நேர்மையை அனைவரும் பாராட்டினர்.

    ×