search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜே.பி.நட்டா"

    • தென் இந்தியாவிலும் பா.ஜ.க. வலுவாகி வருகிறது.
    • கேரள சட்டசபை தேர்தலில் அமோக வெற்றிக்காக காத்திருக்கிறோம்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் நடந்துமுடிந்த மக்களவை தேர்தலில் திருச்சூர் தொகுதியில் மட்டும் பா.ஜ.க. வெற்றி பெற்றது. இதன்மூலம் கேரளாவில் கால்பதித்த பெருமையை அக்கட்சி பெற்றது.

    அது மட்டுமின்றி கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலை விட, தற்போது நடந்த தேர்தலில் பா.ஜ.க.வின் வாக்கு சதவீத மும் அதிகரித்தது. இதனால் கேரள மாநி லத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    வருகிற உள்ளாட்சி மற்றும் சட்டசபை தேர்தல்களில் பெரும்பான்மையான வெற்றியை பெற்றுவிட வேண்டும் என்ற இலக்குடன் பா.ஜ.க. செயல்படத் தொடங்கியிருக்கிறது.

    இந்நிலையில் பா.ஜ.க. புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட மாநில செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது.

    அதில் பா.ஜ.க. தேசிய தலைவரும், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை மந்திரியுமான ஜெ.பி.நட்டா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஊழல் மற்றம் குடும்ப அரசியல் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட காங்கிரஸ்-கம்யூனிஸ்டு கட்சிகள் அதிகாரத்தை பெற பொய் தகவல்களை பரப்புகின்றன. அந்த கட்சிகள் பா.ஜ.க.வை வடமாநில கட்சி போல் சித்தரிக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டன.

    ஆனால் அவை அனைத்தும் சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் உடைத்தெறியப்பட்டது. இந்த தேர்தலில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் முன்பைவிட அதிக வாக்குகளை பா.ஜ.க. பெற்றது. தென் இந்தியாவிலும் பா.ஜ.க. வலுவாகி வருகிறது.

    கேரள மாநிலத்தில் நடந்த மக்களவை தேர்தலில் திருச்சூர் தொகுதியில் மட்டும் பா.ஜ.க. வெற்றி பெற்றது. இந்த தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் 75 ஆயிரம் வாக்குகள் பெரும்பான்மையை பெற்றார்.

    திருவனந்தபுரம் மற்றும் அட்டிங்கல் தொகுதியில் தோல்வியடைந்தாலும் பா.ஜ.க.வுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. 6 மாநகராட்சிகளில் பா.ஜ.க. முன்னிலை வகிக்கிறது. திருவனந்தபுரம் மாநகராட்சியில் 36 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இது வெற்றிக்கு சமம்.

    கேரளாவில் எதிர் அணியாகவும், அகில இந்திய அளவில் ஒரே அணியாகவும் பயணிக்கும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளின் காலாவதியான கொள்கைகளை மக்கள் நிராகரித்துள்ளனர். இங்கு பா.ஜ.க.வினர் உயிரை பணயம் வைத்து போராடி வருகின்றனர்.

    2016-ம் ஆண்டு நடைபெற உள்ள கேரள சட்டசபை தேர்தலில் அமோக வெற்றிக்காக காத்திருக்கிறோம். அதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும். தமிழ்நாட்டிலும் பிரதான கட்சியாக பா.ஜ.க. உருவெடுக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.

    இவ்வாறு ஜே.பி.நட்டா பேசினார்.

    • வியூகங்களை தற்போதே பா.ஜ.க. வகுக்க தொடங்கிவிட்டது.
    • மாநிலம் தழுவிய கூட்டம் திருவனந்தபுரத்தில் நாளை நடைபெற உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் நடந்துமுடிந்த மக்களவை தேர்தலில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் 18 தொகுதிகளை காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது.

    பா.ஜ.க. மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் தலா ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. மாநிலத்தின் ஆளுங்கட்சியாக இருக்கும் கம்யூனிஸ்டு கட்சிக்கு இந்த முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அதே நேரத்தில் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றிருந்தாலும், அந்த வெற்றியின் மூலம் கேரளாவில் கால் பதித்துவிட்டது மற்றும் வாக்கு சதவீதம் அதிகரித்தது உள்ளிட்ட காரணங்களால் பா.ஜ.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். அவர்கள் தங்களின் வெற்றிக் கொண்டாட்டத்தை தொடர்ந்தபடி இருக்கின்றனர்.

    கேரளாவில் அவர்களது அடுத்த இலக்கு நடைபெற உள்ள பாலக்காடு மற்றும் செலக்கரா சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலாக இருக்கிறது.

    மேலும் அடுத்தடுத்து நடைபெற உள்ள உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சட்டசபை தேர்தலும் பா.ஜ.க.வின் இலக்காக உள்ளது.

    இந்த தேர்தல்களில் அதிகமான இடங்களில் வெற்றியை பெற்றாக வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. அதற்கான வியூகங்களை தற்போதே பா.ஜ.க. வகுக்கத் தொடங்கிவிட்டது. அதன் ஒரு பகுதியாக அமைப்பு நிர்வாகிகள் 3 ஆயிரம் பேருடனான மாநிலம் தழுவிய கூட்டம் திருவனந்தபுரத்தில் நாளை நடைபெற உள்ளது.

    நாளை காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் கூட்டத்தில் பஞ்சாயத்து கமிட்டி அளவிலான தலைவர்கள் பங்கேற்கிறார்கள். மாலையில் நடக்கும் நிகழ்ச்சியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்துகொள்கிறார்.

    நட்டா வருகையால் கேரள மாநில பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்திருக்கின்றனர்.

    • இன்று முதல் 2 நாட்கள் டெல்லியிலேயே முகாமிட்டு சந்திப்புகளை நடத்த முடிவு.
    • மாநிலத்திற்கு தேவையான நிதி குறித்தும் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளன.

    திருப்பதி:

    பாராளுமன்ற தேர்தலில் தனி பெரும்பான்மை பெறாத நிலையில் பா.ஜ.க. சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் கட்சி எம்.பி.க்கள் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.

    இதனால் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் இருவரும் எதையும் பெற்றுக் கொள்ளும் சக்தி வாய்ந்த தலைவர்களாக மாறி உள்ளனர்.

    சந்திரபாபு நாயுடு கட்சி எம்பிக்கள் 3 பேருக்கு மத்திய மந்திரி பதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில் ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று டெல்லி சென்றார். அவர் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.

    இதனை தொடர்ந்து உள்துறை மந்திரி அமித்ஷா, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி. நட்டா விவசாய மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மந்திரி சிவராஜ் சவுகான், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை மந்திரி மனோகர் ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.

    இதற்காக அவர் இன்று முதல் 2 நாட்கள் டெல்லியிலேயே முகாமிட்டு சந்திப்புகளை நடத்த முடிவு செய்துள்ளார்.

    ஆந்திர மாநிலத்தில் நிலுவையில் உள்ள போலவரம் உள்ளிட்ட நீர்ப்பாசன திட்டங்கள், அமராவதி தலைநகர் திட்டம், மாநில நெடுஞ்சாலைகள், சாலைகள் உள்ளிட்ட உள் கட்டமைப்புகளின் நிலை குறித்து டெல்லி செல்வதற்கு முன்பாக அதிகாரியுடன் கலந்து ஆலோசித்து அறிக்கை ஒன்றை சந்திரபாபு நாயுடு தயார் செய்தார்.

    மேலும் ஆந்திர மாநிலத்திற்கு தேவையான நிதி குறித்தும் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த நீண்ட பட்டியலுடன் டெல்லியில் சந்திரபாபு நாயுடு முகாமிட்டுள்ளார்.

    பிரதமர் மோடி மற்றும் மத்திய மத்திரிகளுடன் சந்திப்பின்போது ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து, ஆந்திர மாநிலத்திற்கு கூடுதல் நிதி சலுகைகள் மற்றும் வரி சலுகைகளை சந்திரபாபு நாயுடு கேட்க முடிவு செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

    அரசியல் அனுபவம் வாய்ந்த சந்திரபாபு நாயுடு தற்போது பா.ஜ.க கூட்டணியில் சக்தி வாய்ந்த தலைவராக உள்ளார். இந்த சந்தர்ப்பத்தை அவர் ஒருபோதும் நழுவ விட மாட்டார். ஆந்திராவிற்கான அனைத்து திட்டங்களையும் கேட்டு பெறுவதில் தனி கவனம் செலுத்தி வருகிறார்.

    மேலும் பல தொழில் நிறுவனங்களையும் ஆந்திராவுக்கு கொண்டு செல்வதில் கில்லாடியாக செயல்படுவார். அவருடைய கோரிக்கைகளை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். சந்திரபாபு நாயுடு முகாமிட்டிருப்பது டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பிரதமர் மோடி 3-வது முறையாக பதவியேற்று ‘ஹாட்ரிக்’ சாதனை.
    • மூத்தவர்கள் மந்திரிகளாகி இருப்பதால் தேசிய தலைவர் பதவி யாருக்கு?

    புதுடெல்லி:

    நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.

    பிரதமர் மோடி தொடர்ந்து 3-வது முறையாக பதவியேற்று 'ஹாட்ரிக்' சாதனை படைத்துள்ளார். அவரோடு 71 மந்திரிகளும் பதவியேற்று உள்ளனர்.

    பதவியேற்ற மந்திரிகளில் பா.ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் இடம் பெற்று உள்ளனர். ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்காரி, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் மட்டுமல்லாது கட்சியின் தேசிய தலைவராக உள்ள ஜே.பி.நட்டாவும் மந்திரியாகி உள்ளார். அது மட்டுமல்ல, கட்சியின் அடுத்த தலைமை முகமாக பார்க்கப்பட்ட மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான், பூபேந்திர யாதவ், சி.ஆர்.பாட்டீல் ஆகிய முன்னணி தலைவர்களும் மந்திரிகளாகி விட்டனர்.

    பா,ஜனதாவைப் பொறுத்தவரை ஒருவருக்கு ஒரு பதவி என்கிற சூத்திரமே பொதுவாக இருந்து வருகிறது. இதன் அடிப்படையில் ஜே.பி.நட்டாவிடம் இருந்து கட்சியின் தேசிய தலைவர் பதவி மாற்றப்படும் என தெரிகிறது. ஏற்கனவே அவரது தலைவர் பதவிக்காலம் முடிவடைந்துதான் இருந்தது. தேர்தலுக்காக நீட்டித்துக் கொடுத்திருந்தனர்.

    இதனால் கட்சிக்கு புதிய தலைவரை நியமிக்க வேண்டியது அவசியமாகி இருக்கிறது. புதிதாக யாரை நியமிப்பார்கள்? என கேள்வி எழுந்திருக்கிறது. இருக்கிற மூத்தவர்கள் அனைவரும் மந்திரிகளாகி இருப்பதால் தேசிய தலைவர் பதவி யாருக்கு போகும்? என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தற்போதுள்ள நிலையில் முக்கியமான சிலரை கட்சியின் டெல்லி வட்டாரங்கள் குறிப்பிட்டன. அதில் சுனில் பன்சால், வினோத் தாவ்டே, அனுராக்சிங் தாக்குர் மற்றும் ஓம் பிர்லா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

     சுனில் பன்சால்

    சுனில் பன்சால் கட்சியின் வேகமான செயல்வீரராக பார்க்கப்படுகிறார். ராஜஸ்தானைச் சேர்ந்த இவருக்கு 54 வயது ஆகிறது. உத்தரபிரதேச மாநிலத்தின் அமைப்பு பொதுச்செயலாளராக இருந்த இவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய பொதுச்செயலாளர் ஆக்கியதுடன் மேற்கு வங்காளம், தெலுங்கானா மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு பொறுப்பாளராகவும் ஆக்கினர். இவருக்கு தலைவர் பதவி கொடுக்க வாய்ப்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.


    வினோத் தாவ்டே

    இவருக்கு ஈடாக தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டேயும் பார்க்கப்படுகிறார். வினோத் தாவ்டே மராட்டியத்தைச் சேர்ந்தவர். 60 வயது ஆகிறது.

    பொதுத்தேர்தல்களில் மக்களை கவரும் யுக்திகளை அமைப்பதில் வல்லவர் என கூறுகிறார்கள். அதுமட்டுமின்றி இந்த ஆண்டின் இறுதியில் மராட்டியத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. மராட்டியத்தை பா.ஜனதா தீவிரமாக பார்ப்பதால் இவருக்கு தலைவர் பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


    அனுராக்சிங் தாக்குர்

    இதற்கு அடுத்தபடியாக அனுராக்சிங் தாக்குர் பேசப்படுகிறார். இமாசலபிரதேச முன்னாள் முதல்-மந்திரியின் மகனான இவர் அங்குள்ள ஹமிர்புர் தொகுதியில் தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்று எம்.பி. ஆனவர். ஏற்கனவே மத்திய மந்திரி ஆனவர். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவராகவும் இருந்துள்ளார்.

    இமாசலபிரதேசத்தைச் சேர்ந்த ஜே.பி.நட்டாவுக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டு உள்ளதால் இவருக்கு வழங்கப்படவில்லை. இதனால் தேசிய தலைவர் பதவி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.


    ஓம் பிர்லா

    தலைவர் போட்டியில் இருக்கும் மற்றொருவர் ஓம் பிர்லா. 17-வது மக்களவையை நடத்திய சபாநாயகர். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் மந்திரிசபையில் பொறுப்பேற்கவில்லை. எனவே தேசிய தலைவராக வாய்ப்பு கிடைக்கலாம் என கூறப்படுகிறது.

    இந்த 4 பேரில் யாராவது ஒருவருக்கு தேசிய தலைவர் பதவி வழங்கப்படலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தாலும், பா.ஜனதாவைப் பொறுத்தவரை யாருமே யூகிக்காத ஒருவரை பிரகடனப்படுத்தி ஆச்சரியப்பட வைப்பதையும் ஒரு பாணியாக வைத்துள்ளது என்பதையும் மறக்க வேண்டாம் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
    • அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

    இந்திய திருநாட்டின் பாராளுமன்ற 18-வது மக்களவைக்கான தேர்தல் அட்டவணை கடந்த மார்ச் மாதம் 16-ந்தேதி அறிவிக்கப்பட்டது. அப்போது இந்த தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.

    அதன்படி முதல் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ந்தேதி 102 தொகுதிகளுக்கு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 40 தொகுதிகளும் அடங்கும்.

    இதையடுத்து ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20 மற்றும் 25-ந்தேதிகளில் தொடர்ச்சியாக 6 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்தன. மேற்குவங்காளம், ஆந்திர மாநிலங்களை தவிர மற்ற இடங்களில் அமைதியாக தேர்தல் நடந்து முடிந்தன.

    இந்த நிலையில் 7-வது மற்றும் இறுதிக்கட்டமாக 8 மாநிலங்களை சேர்ந்த 57 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

    அந்த வகையில், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இமாச்சல பிரதேச மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அவரது மனைவி மல்லிகா நட்டாவும் தனது வாக்கினை செலுத்தினார்.


    உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் உள்ள கோரக்நாத்தில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.


    சமாஜ்வாதி கட்சியின் காஜிபூர் மக்களவை வேட்பாளர் அப்சல் அன்சாரியின் சகோதரரும், முன்னாள் எம்எல்ஏவுமான சிப்கதுல்லா அன்சாரி உத்தரபிரதேச மாநிலம் காஜிபூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

    பஞ்சாப்பில் ஆனந்த்பூர் சாஹிப் தொகுதிக்கு உட்பட்ட லக்னூரில் உள்ள வாக்குச்சாவடியில் ஆம் ஆத்மி எம்பி ராகவ் சதா பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

    எஸ்பிஎஸ்பி தலைவரும், உ.பி., அமைச்சருமான ஓம் பிரகாஷ் ராஜ்பர் பல்லியாவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

    • எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஒரு கூடையில் "முட்டை" போல் சித்தரிக்கப்பட்டுள்ளது
    • இந்த இட ஒதுக்கீட்டுக் கூடையில் முஸ்லிம் சமூகத்தின் மற்றொரு "முட்டையை" ராகுல் காந்தி போடுகிறார்.

    கர்நாடகா பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் ஒரு அனிமேஷன் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

    அந்த அனிமேஷன் வீடியோவில், எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஒரு கூடையில் "முட்டை" போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது இட ஒதுக்கீட்டைக் குறிக்கிறது. இந்த இட ஒதுக்கீட்டுக் கூடையில் முஸ்லிம் சமூகத்தின் மற்றொரு "முட்டையை" ராகுல் காந்தி போடுகிறார். காங்கிரஸ் தலைவர்கள் எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசிக்களை விட முஸ்லிம் சமூகத்திற்கு ஆதரவாக அதிக நிதியை கொடுத்து, அவர்களின் இட ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு கொடுத்து விடுவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடகா பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் எஸ்சி/எஸ்டி மக்களுக்கு எதிராக பகை, வெறுப்பு மற்றும் மத மோதல்களை உருவாக்கும் நோக்கில் அனிமேஷன் வீடியோ வெளியிட்டதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக சமூக ஊடகப் பொறுப்பாளர் அமித் மாளவியா, பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா ஆகியோருக்கு எதிராக, தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்தது.

    இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக சமூக ஊடகப் பொறுப்பாளர் அமித் மாளவியா, பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா ஆகியோர் மீது இரு பிரிவினர் இடையே மோதல், வெறுப்பை தூண்டுதல் போன்ற பிரிவுகளில் பெங்களூரு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இந்நிலையில், எஸ்சி/எஸ்டி சமூகத்திற்கு எதிராக கர்நாடக பாஜக வெளியிட்ட வீடியோ தொடர்பாக பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா மற்றும் பாஜக சமூக ஊடகப் பொறுப்பாளர் அமித் மாளவியா ஆகியோரை 7 நாட்களுக்குள் பெங்களூரு ஹைகிரவுண்ட்ஸ் காவல்நிலையத்தில் ஆஜராகுமாறு கர்நாடக காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

    கர்நாடக பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் முஸ்லிம்கள் குறித்து வெளியான அனிமேஷன் வீடியோவை உடனடியாக நீக்குமாறு எக்ஸ் நிறுவனத்திடம் தேர்தல் ஆணையம் கேட்டு கொண்டது. இதனையடுத்து எக்ஸ் நிறுவனம் அந்த வீடியோவை நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஒரு கூடையில் "முட்டை" போல் சித்தரிக்கப்பட்டுள்ளது
    • இந்த இட ஒதுக்கீட்டுக் கூடையில் முஸ்லிம் சமூகத்தின் மற்றொரு "முட்டையை" ராகுல் காந்தி போடுகிறார்

    கர்நாடகா பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் ஒரு அனிமேஷன் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த அனிமேஷன் வீடியோவில், எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஒரு கூடையில் "முட்டை" போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது இட ஒதுக்கீட்டைக் குறிக்கிறது. இந்த இட ஒதுக்கீட்டுக் கூடையில் முஸ்லிம் சமூகத்தின் மற்றொரு "முட்டையை" ராகுல் காந்தி போடுகிறார். காங்கிரஸ் தலைவர்கள் எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசிக்களை விட முஸ்லிம் சமூகத்திற்கு ஆதரவாக அதிக நிதியை கொடுத்து, அவர்களின் இட ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு கொடுத்து விடுவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடகா பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பகை, வெறுப்பு மற்றும் மத மோதல்களை உருவாக்கும் நோக்கில் அனிமேஷன் வீடியோ வெளியிட்டதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக சமூக ஊடகப் பொறுப்பாளர் அமித் மாளவியா, பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா ஆகியோருக்கு எதிராக, தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்தது.

    இந்த வீடியோ தேர்தல் நடத்தை விதிகளை மீறுவது மட்டுமின்றி, 1989 ஆம் ஆண்டின் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்தது.

    இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக சமூக ஊடகப் பொறுப்பாளர் அமித் மாளவியா, பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா ஆகியோர் மீது இரு பிரிவினர் இடையே மோதல், வெறுப்பை தூண்டுதல் போன்ற பிரிவுகளில் பெங்களூரு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இந்நிலையில், கர்நாடக பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் முஸ்லிம்கள் குறித்து வெளியான அனிமேஷன் வீடியோவை உடனடியாக நீக்குமாறு எக்ஸ் நிறுவனத்திடம் தேர்தல் ஆணையம் கேட்டு கொண்டுள்ளது.

    • எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஒரு கூடையில் "முட்டை" போல் சித்தரிக்கப்பட்டுள்ளது
    • இந்த இட ஒதுக்கீட்டுக் கூடையில் முஸ்லிம் சமூகத்தின் மற்றொரு "முட்டையை" ராகுல் காந்தி போடுகிறார்

    கர்நாடகா பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பகை, வெறுப்பு மற்றும் மத மோதல்களை உருவாக்கும் நோக்கில் அனிமேஷன் வீடியோ வெளியிட்டதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக சமூக ஊடகப் பொறுப்பாளர் அமித் மாளவியா, பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா ஆகியோருக்கு எதிராக, தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

    அந்த அனிமேஷன் வீடியோவில், எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஒரு கூடையில் "முட்டை" போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது இட ஒதுக்கீட்டைக் குறிக்கிறது. இந்த இட ஒதுக்கீட்டுக் கூடையில் முஸ்லிம் சமூகத்தின் மற்றொரு "முட்டையை" ராகுல் காந்தி போடுகிறார். காங்கிரஸ் தலைவர்கள் எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசிக்களை விட முஸ்லிம் சமூகத்திற்கு ஆதரவாக அதிக நிதியை கொடுத்து, அவர்களின் இட ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு கொடுத்து விடுவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

    இந்த வீடியோ தேர்தல் நடத்தை விதிகளை மீறுவது மட்டுமின்றி, 1989 ஆம் ஆண்டின் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

    குறிப்பாக கர்நாடகாவின் மீதமுள்ள 14 தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இதுபோன்ற செயல்கள் சமூகங்களிடையே வெறுப்பை தூண்டும் என்று காங்கிரஸ் கவலை தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக சமூக ஊடகப் பொறுப்பாளர் அமித் மாளவியா, பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா ஆகியோர் மீது இரு பிரிவினர் இடையே மோதல், வெறுப்பை தூண்டுதல் போன்ற பிரிவுகளில் பெங்களூரு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

    • எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஒரு கூடையில் "முட்டை" போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது இட ஒதுக்கீட்டைக் குறிக்கிறது
    • இந்த இட ஒதுக்கீட்டுக் கூடையில் முஸ்லிம் சமூகத்தின் மற்றொரு "முட்டையை" ராகுல் காந்தி போடுகிறார்

    கர்நாடகா பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பகை, வெறுப்பு மற்றும் மத மோதல்களை உருவாக்கும் நோக்கில் அனிமேஷன் வீடியோ வெளியிட்டதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக சமூக ஊடகப் பொறுப்பாளர் அமித் மாளவியா, பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா ஆகியோருக்கு எதிராக, தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

    அந்த அனிமேஷன் வீடியோவில், எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஒரு கூடையில் "முட்டை" போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது இட ஒதுக்கீட்டைக் குறிக்கிறது. இந்த இட ஒதுக்கீட்டுக் கூடையில் முஸ்லிம் சமூகத்தின் மற்றொரு "முட்டையை" ராகுல் காந்தி போடுகிறார். காங்கிரஸ் தலைவர்கள் எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசிக்களை விட முஸ்லிம் சமூகத்திற்கு ஆதரவாக அதிக நிதியை கொடுத்து, அவர்களின் இட ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு கொடுத்து விடுவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

    இந்த வீடியோ தேர்தல் நடத்தை விதிகளை மீறுவது மட்டுமின்றி, 1989 ஆம் ஆண்டின் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

    குறிப்பாக கர்நாடகாவின் மீதமுள்ள 14 தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இதுபோன்ற செயல்கள் சமூகங்களிடையே வெறுப்பை தூண்டும் என்று காங்கிரஸ் கவலை தெரிவித்துள்ளது.

    • ‘ரோடு ஷோ ’வில் புதுவை முதலமைச்சர் ரங்கசாமியும் பங்கேற்கிறார்.
    • தேசிய தலைவர்கள் வருகையை முன்னிட்டு புதுச்சேரி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா வேட்பாளராக அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார்.

    இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் வைத்தி லிங்கம் எம்.பி.யும், அ.தி.மு.க. சார்பில் தமிழ் வேந்தனும் போட்டியிடுகின்றனர். இதனால் புதுச்சேரியில் மும்முனை போட்டி நிலவுகிறது.

    வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் பிரசாரம் செய்து வருகின்றனர். பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமி தொகுதி வாரியாக வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்து வருகிறார்.

    அதுபோல் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து அக்கட்சியின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரித்து வருகிறார்கள். தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த 7-ந் தேதி பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    அதுபோல் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தமிழக முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கடந்த 30-ந் தேதி பிரசாரம் செய்தார்.

    இந்த நிலையில் பா.ஜனதா வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து பிரசாரம் செய்ய அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று மாலை 4 மணி அளவில் விமானம் மூலமாக புதுச்சேரிக்கு வருகிறார்.

    மாலை 6 மணி அளவில் அண்ணாசிலையில் இருந்து அஜந்தா சிக்னல் வரை 'ரோடு-ஷோ' செல்கிறார். இந்த 'ரோடு ஷோ 'வில் புதுவை முதலமைச்சர் ரங்கசாமியும் பங்கேற்கிறார்.

    தேசிய தலைவர்கள் வருகையை முன்னிட்டு புதுச்சேரி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    • பாஜகவின் 10 ஆண்டு ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது.
    • ராதிகா சரத்குமாரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

    மதுரை திருமங்கலத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பிரசாரம் மேற்கொண்டார். விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பாஜகவின் 10 ஆண்டு ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது.

    ராதிகா சரத்குமாரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். நாடு அனைத்து துறைகளில் மிகப் பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது.

    பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு நாடு வந்ததற்கு பிரதமரின் தலைமை பண்பே காரணம்.

    ராதிகா சரத்குமாரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

    பிரதமர் மோடி தமிழராகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார். தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். புதிய பாராளுமன்ற திறப்பு விழாவில், கையில் செங்கோலுடன் பிரதமர் மோடி சென்றார்.

    திமுகவும், காங்கிரஸூம் தமிழ்க் கலாச்சாரத்தை கலங்கடிக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அகில இந்திய அளவில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
    • முதன் முறையாக இன்று கோவை, நீலகிரியில் இருந்து பயணத்தை தொடங்குகிறார்.

    கோவை:

    பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இன்று கோவை வந்தார். காலையில் அவர் கோட்டை மேடு ஈஸ்வரன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதாக திட்டமிடப்பட்டு இருந்தது. அவர் கோவை வருகையில் தாமதம் ஏற்பட்டதால் ஈஸ்வரன் கோவிலில் தரிசனம் செய்யும் நிகழ்ச்சி மட்டும் ரத்து செய்யப்பட்டது.

    அதேசமயம் மத்திய மந்திரி எல்.முருகன், மாநில தலைவர் அண்ணாமலை, எம்.எல்.ஏ.க்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் வந்து ஈஸ்வரன் கோவிலுக்கு தரிசனம் செய்தனர். அவர்களுக்கு செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    அகில இந்திய அளவில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    அந்த வகையில் முதன் முறையாக இன்று கோவை, நீலகிரியில் இருந்து பயணத்தை தொடங்குகிறார். தமிழகத்தில் இருந்து இந்த பயணத்தை தொடங்க வேண்டும் என்பதற்காக தான் கோவை, நீலகிரியில் இருந்து தேசிய தலைவர் தனது பாராளுமன்ற பயணத்தை தொடங்கியுள்ளார்.

    இந்த பகுதி மக்கள் தேச பக்தி உடையவர்கள். பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வருகை தமிழகத்தில் மிகப்பெரியை எழுச்சியை ஏற்படுத்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×