search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 231320"

    • இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்ட முயற்சிக்கு மத்திய மந்திரி பாராட்டு
    • கால்நடைகளுக்கான தோல் நோயை கட்டுப்படுத்த, தடுப்பூசியின் செயல்திறன் நிரூபிக்கப்பட்டுள்ளது

    கால்நடைகளை தாக்கும் ஆட்டு அம்மை எனப்படும் தோல் நோயை கட்டுப்படுத்த, அரியானா மாநிலம் ஹிசாரில் உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய குதிரைகள் ஆராய்ச்சி மையமும், உத்தர பிரதேச மாநிலம் இசட்நகரில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து, லும்பி ப்ரோவாக் என்ற தடுப்பூசியை உருவாக்கியது.

    இந்த தடுப் பூசியை வணிக ரீதியில் தயாரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய கால்நடை பராமரிப்புதுறை மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் ஆகியோர் முன்னிலையில் இது கையெழுத்தானது. 


    நிகழ்ச்சியில் பேசிய மத்திய மந்திரி ரூபாலா, உள்நாட்டு தடுப்பூசியான லும்பி ப்ரோவாக்கை உருவாக்குவதில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்ட முயற்சி பாராட்டுக்குரியது என்றார். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியாவின் கால்நடைத் துறையின் எதிர்காலத் தேவைகளை கருத்தில் கொண்டு, ஆட்டு அம்மை நோயை கட்டுப்படுத்தும் தடுப்பூசியை பெரிய அளவில் தயாரிப்பதை உறுதி செய்யும் என்றும் அவர் கூறினார்.

    மாடுகள் உள்பட வீட்டு விலங்குகளுக்கு தோல் நோயை கட்டுப்படுத்துவதில் இந்த தடுப்பூசியின் செயல்திறன் நிரூபிக்கப் பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். விவசாயிகளுக்கு உதவும் வகையில் தடுப்பூசியை காலதாமதமும் இல்லாமல் பெரிய அளவில் தயாரிக்கத் தொடங்க வேண்டும் என்று புனேயில் உள்ள கால்நடை மருத்துவ உயிரியல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தை அவர் கேட்டுக் கொண்டார்.

    • முகாமில் 650-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன்பெற்றன.
    • கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் தடுப்பூசி ஆகியவை போடப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் கோட்டூர் ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதாரம், தோல் கழலை நோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது. முகாமானது கால்நடை பராமரிப்பு துறையின் மண்டல இணை இயக்குனர் சஞ்சீவ்ராஜ் அறிவுரையின் பேரிலும், உதவி இயக்குனர்கள் விஜயகுமார் உத்தரவின் பேரிலும் நடைப்பெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத்தலைவர் முகம்மது சலாவுதீன் தலைமை தாங்கினார். கால்நடை உதவி மருத்துவர்கள் சிவப்பிரியா, முத்துக்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் கால்நடை நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, பசு மற்றும் எருமை இனங்களுக்கு செயற்கை முறை கருவூட்டல், கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசி ஆகியவை போடப்பட்டது.

    முகாமில் 650-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன்பெற்றன.

    இதில் சிறந்த கால்நடை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஊராட்சி செயலர் சசிக்குமார், கால்நடை பராமரிப்பு உதவியாளர் ஸ்ரீதர், செயற்கை முறை கருவூட்டாளர் தம்பிராஜா மற்றும் கால்நடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் வடகரை ஊராட்சி திருப்பனையூரில் நடைபெற்ற முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் மோகன் ஊராட்சி செயலாளர் பிரகாஷ் குமார் ஆகியோர் தலைமை வகித்து முகாமை நடத்தி வைத்தனர். அதே போல் ஆதலையூரில் நடைபெற்ற கால்நடை மருத்துவ முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் தென்மதி சந்திரசேகர் தலைமை வகித்துமருத்துவ முகாமை நடத்தி வைத்தார்.

    • வெறிநாய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் தொடர்பான தடுப்பூசி முகாம்.
    • கிராமமக்கள் தங்கள் வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா, அவரிக்காடு ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வெறிநாய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் தொடர்பான தடுப்பூசி முகாம் ஊராட்சி மன்ற வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் லலிதா கலைச்செல்வன் தலைமை தாங்கினார்.

    தலைஞாயிறு ஒன்றிய குழு தலைவர் தமிழரசி முகாமை தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ரேணுகா நேதாஜி, உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க இயக்குனர் மச்சழகன், கால்நடை மருத்துவர் முருகேசன், சண்முகநாதன், பாலசுந்தரம், செந்தில் உள்ளிட்ட கால்நடை துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

    முகாமில் 100-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு வெறிநாய்கடி தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    பின்பு ஊராட்சியில் உள்ள மக்களுக்கு கால்நடை மருத்துவர் முருகேசன் வெறிநாய் கடி மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து விளக்க உரையாற்றினார்.

    இதில் ஏராளமான கிராமமக்கள் தங்கள் வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

    • மாட்டம்மை நோய் பரவலை தடுக்க இலவச தடுப்பூசி போடப்பட்டது.
    • கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் மாட்டம்மை நோய் பரவலை தடுக்க 1 லட்சம் மாடுகளுக்கு இலவச தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு முகாம் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள 37 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 5 கிளை மருந்தகங்கள் மூலம் மாட்டம்மை நோய் தடுப்பூசி இலவசமாக மாடுகளுக்கு செலுத்தப்படவுள்ளது. எனவே கால்நடை வளர்ப்போர் அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களை அணுகி தங்களது மாடுகளுக்கு மாட்டம்மை நோய் தடுப்பு இலவச தடுப்பூசியை செலுத்தி பாதுகாத்து கொள்ளலாம் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்

    • தஞ்சை மண்டலத்தில் 12 இடங்களில் வெறிநோய் தடுப்பூசி முகாம் மற்றும் விழிப்புணர்வு பிரசாரம்.
    • அதிராம்பட்டினத்தில் ஜனவரி 24-ந் தேதியும் முகாம் நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம், ராஷ்டிரிய கிருஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வெறிநோயினை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பாக தஞ்சை மண்டலத்தில் 12 இடங்களில் வெறிநோய் தடுப்பூசி முகாம் மற்றும் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெறுகிறது.

    அதன்படி தஞ்சையை அடுத்த மாதாக்கோட்டையில் உள்ள கபிரியேல் மக்கள் மன்றத்தில் நாளை (புதன்கிழமை) நடைபெறும் முகாமை நான் தலைமை தாங்கி தொடங்கி வைக்கிறேன்.

    மேலும் தஞ்சை கோட்டத்தில் உள்ள ஒரத்தநாடு புதூரில் இந்த முகாம் அடுத்த மாதம் (ஜனவரி) 4-ந்தேதியும், திருவையாறு அடுத்த கண்டியூரில் 12-ந்தேதியும், மேலத்திருப்பந்துருத்தியில் ஜனவரி 20-ந்தேதியும் நடைபெறுகிறது.

    கும்பகோணம் கோட்டத்தில் கும்பகோணத்தை அடுத்த கீழக்கோட்டையூரில் வருகிற 26-ந்தேதியும், திருவிடைமருதூர் அருகே உள்ள ஆடுதுறை கீழ மருத்துவக்குடியில் ஜனவரி 6-ந்தேதியும், பாபநாசம் ஒன்றியம் ராஜகிரியில் 10-ந் தேதியும், திருப்பனந்தாள் ஒன்றியம் பட்டம் பகுதியில் ஜனவரி 5-ந் தேதியும் முகாம் நடைபெறுகிறது.

    பட்டுக்கோட்டை கோட்டத்தில் மதுக்கூர் ஒன்றியத்தில் திருச்சிற்றம்பலத்தில் வருகிற 28-ந் தேதியும், பேராவூரணி ஒன்றியம் ஆலத்தூரில் 31-ந் தேதியும், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் குருவிக்கரம்பையில் ஜனவரி 4-ந் தேதியும், பட்டுக்கோட்டை ஒன்றியம் அதிராம்பட்டினத்தில் ஜனவரி 24-ந் தேதியும் முகாம் நடைபெறுகிறது.

    எனவே பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் செல்ல பிராணிகளுக்கு முகாம் நடைபெறும் இடங்களை அணுகி இலவசமாக வெறிநோய் தடுப்பூசி செலுத்தி கொடியநோயில் இருந்து பாதுகாத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பேரணி மற்றும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
    • சுகாதார செவிலியர் காந்திமதி மற்றும் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மதுக்கூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட மதுக்கூர் வடக்கு மதுக்கூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கொரோனா விழிப்புணர்வு தடுப்பு பேரணி நடைபெற்றது.

    மதுக்கூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தஞ்சாவூர் சுகாதாரத் துணை இயக்குனர் அலுவலகம் மற்றும் சாத்தி தொண்டு நிறுவனம் யுஎஸ்எய்ட் மொமன்டம் சார்பில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பேரணி மற்றும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

    இந்நிகழ்வில் தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி தலைமையேற்று நடத்தினார். ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன், உதவி தலைமை ஆசிரியர் மாணிக்கம், வட்டார மருத்துவ அலுவலர் மகேஷ் குமார், மருத்துவர் புவனி, பகுதி சுகாதார செவிலியர் காந்திமதி மற்றும் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சாத்தி தொண்டு நிறுவன மாவட்ட திட்ட அலுவலர் ரமேஷ் ஒருங்கிணைப்பாளர்கள் பிரபாகரன், நித்தேஷ், ரேவதி அன்னலட்சுமி, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    பேரணியானது மதுக்கூர் வடக்கு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் துவங்கி மெயின் ரோடு வழியாக முக்கிய வீதிகள் வழியாக பெரமையா கோயில் வரை சென்று திரும்ப பள்ளியை வந்து அடைந்தது.

    • உலக அளவில் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களில் நான்கில் ஒரு பங்கு பேர் இந்திய பெண்கள் ஆவர்.
    • 9 வயது முதல் 14 வயது வரையிலான சிறுமிகளுக்கு தடுப்பூசி, தேசிய தடுப்பூசி திட்டத்தின்கீழ் போடப்படும்.

    புதுடெல்லி:

    உலக அளவில் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களில் நான்கில் ஒரு பங்கு பேர் இந்திய பெண்கள் ஆவர். இந்நோயால் ஏற்படும் மரணங்களில் மூன்றில் ஒரு பங்கு மரணங்கள், இந்தியாவில் நடக்கின்றன. இருப்பினும், இதை தடுப்பதற்கான தடுப்பூசியை வெளிநாட்டு நிறுவனங்கள்தான் தயாரித்து வருகின்றன. அதன் விலை ஒரு டோசுக்கு ரூ.4 ஆயிரம் ஆகும்.

    இந்தநிலையில், முற்றிலும் உள்நாட்டிலேயே 'செர்வாவேக்' என்ற தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம், சீரம் நிறுவனம் இத்தடுப்பூசியை அறிமுகப்படுத்துகிறது. மிகவும் மலிவான விலையில் இது கிடைக்கும். 9 வயது முதல் 14 வயது வரையிலான சிறுமிகளுக்கு இந்த தடுப்பூசி, தேசிய தடுப்பூசி திட்டத்தின்கீழ் போடப்படும் என்று தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு தலைவர் அரோரா தெரிவித்தார்.

    • கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் தடுப்பூசி ஆகியவை போடப்பட்டது.
    • சிறந்த கால்நடைகளின் உரிமையளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் போலகம் ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் கால்நடை பராமரிப்பு துறையின் மண்டல இணை இயக்குனர் சஞ்சீவ்ராஜ் அறிவுரையின் பேரிலும், உதவி இயக்குனர் விஜயகுமார் உத்தரவின் பேரிலும் நடைப்பெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் பவுஜியாபேகம் அபுசாலி தலைமை தாங்கினார். கால்நடை உதவி டாக்டர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார்.இந்த முகாமில் கால்நடை நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, பசு மற்றும் எருமை இனங்களுக்கு செயற்கை முறை கருவூட்டல், சினைப் பரிசோதனை, மலடு நீக்கம், கன்றுகள், ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசி ஆகியவை போடப்பட்டது.

    இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன் பெற்றன. இதில் சிறந்த கால்நடை உரிமையளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.மேலும் விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் கால்நடை ஆய்வாளர் தனசேகரன், கால்நடை பராமரிப்பு உதவியாளர் சிவராஜவள்ளி, செயற்கை முறை கருவூட்டாளர் ஸ்ரீகுமார், தம்பிராஜா மற்றும் கால் நடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    • முகாமில் ஆடு, மாடு, கோழிகள் என 760 கால்நடைகளுக்கு தடுப்பூசி, சிகிச்சை அளிக்கப்பட்டன.
    • சிறந்த 10 கால்நடைகளின் கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    மன்னார்குடி:

    மன்னார்குடி பேங்க் ஆப் பரோடா, மிட்டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை இணைந்து மன்னார்குடி அருகே உள்ள காரிக்கோட்டை கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாமை நடத்தியது.

    இந்த முகாமுக்கு மிட்டவுன் ரோட்டரி சங்கம் தலைவர் டி.ரெங்கையன் தலைமை தாங்கினார். காரிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பி.பன்னீர்செல்வம் வரவேற்றார்.

    திருவாரூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை ( பொறுப்பு ) டாக்டர் டி.ராமலிங்கம் விளக்க உரையாற்றினார்.

    ரோட்டரி மாவட்ட கால்நடை மருத்துவ முகாம்கள் தலைவர் டாக்டர் வி‌.பாலகிருஷ்ணன், மன்னார்குடி பேங்க் ஆப் பரோடா மேலாளர் சுவேந்து சாட்டர்ஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினர்களாக கால்நடை பராமரிப்பு துறை கூடுதல் இயக்குனர் ( ஓய்வு ) டாக்டர் டி. தமிழ்ச்செல்வன், பேங்க் ஆப் பரோடா விவசாயி அலுவலர் ஆர். மோனிகா, மிட்டவுன் ரோட்டரி சங்கம் செயலாளர் வி. கோபாலகிருஷ்ணன், மிட்டவுன் ரோட்டரி சங்கம் உடனடி முன்னாள் தலைவர் டாக்டர் சி.குருசாமி, மிட்டவுன் ரோட்டரி சங்கம் பொருளாளர் டி.அன்பழகன், முன்னாள் தலைவர் சாந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த முகாமில் ஆடு, மாடு, கோழிகள் என 760 கால்நடைகளுக்கு தடுப்பூசி, சிகிச்சை அளிக்கப்பட்டன.

    அம்மை நோய் தடுப்பூசி, குடற்புழு நீக்க மருந்து, சினை ஊசிகள், சினை பார்த்தல், காளைகளுக்கு ஆண்மை நீக்கம் உள்ளிட்ட பல்வேறு வகையான சிகிச்சைகள், தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

    இதையடுத்து சிறந்த 10 கால்நடைகளின் கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து பான் செக்கர்ஸ் கல்லூரி ரோட்ராக்ட் சங்கத்தின் உறுப்பினர்கள் ஒருங்கிணைப்பாளர் லலிதா தேவி, ஜோஸ்லின், சோபியா மற்றும் ஆகியோருக்கு கால்நடை பராமரிப்பு குறித்து ரோட்டரி மாவட்ட கால்நடை மருத்துவ முகாம் தலைவர் டாக்டர் வி‌. பாலகிருஷ்ணன் விளக்கி கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மருத்துவக் குழு டாக்டர்கள் கார்த்திக், வெற்றிவேல், ராகவி, கால்நடை ஆய்வாளர்கள் குருநாதன், ராணி எலிசபெத், செங்குட்டுவன், கால்நடை பராமரிப்புத்துறை உதவியாளர்கள் பாரதி, நடராஜன், அமுதா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பேங்க் ஆப் பரோடா அலுவலர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

    • அப்போது தான் எதிர்கால சமுதாயம் நோயற்ற ஆரோக்கியமாக அமையும் என்றார்.
    • பள்ளி செல்லும் குழந்தைகளை வேலைக்கு அமர்த்தினால் குழந்தை தொழிலாளர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருத்துறைப்பூண்டி, அக்.13-

    திருத்துறைப்பூண்டி நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டு அதன் முதல் கூட்டம், குழுவின் தலைவரும் நகர்மன்ற தலைவருமான கவிதாபாண்டியன் தலைமையிலும், ஆணையர் அப்துல்ஹரிஸ் முன்னிலையிலும் நடை்பெற்றது.

    கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையிலிருந்து குழந்தை பாதுகாப்பு அலுவலர் முத்தமிழ்செல்வி கலந்துக்கொண்டு பேசும்போது, பிறந்தது முதல் 18 வயதுடைய அனைவரும் குழந்தைகள் தான். இவர்களுக்கு அனைத்து உரிமைகளும் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக கல்வி கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும், அவ்வாறு செய்யாத பெற்றோர்களிடம் விழிப்புணர்வு செய்யப்படும். குழந்தை திருமணம், பாலியல் சீண்டல்கள் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சட்டம் உள்ளது.

    பிறந்தது முதல் குழந்தைகளுக்கு தடுப்பூசி, சத்தான உணவுகள், மருத்துவ கண்காணிப்பு அவசியம், குழந்தைகளை தத்து எடுக்க சட்டப்பூர்வ வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

    பள்ளி செல்லும் குழந்தைகளை வேலைக்கு அமர்த்தினால் குழந்தை தொழிலாளர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வீடுகளிலும், பள்ளிகள், குழந்தை பாதுகாப்பு இல்லங்களிலும் தவறுகள் நடப்பதை நாம் அனைவரும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கட்டணம் இல்லா 1098 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம், குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதை தடுக்க வேண்டும், பெற்றோர்கள் தினமும் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசி அவர்கள் தேவையை கண்டறிய வேண்டும், பேரிடர் காலங்களில் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம்.

    படிக்கும் பள்ளிகளில் தவறான நண்பர்களுடன் சேர்ந்து தீய பழக்கங்களுக்கு செல்லாமல் கண்காணிக்க வேண்டும். அப்போது தான் எதிர்கால சமுதாயம் நோயற்ற ஆரோக்கியமாக அமையும் என்றார்.

    குழந்தை பாதுகாப்பு துண்டு பிரசுரம் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் அருண்குமார், பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார், குழந்தை வளர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜவேந்தன்.

    கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம், கவுன்சிலர்கள் எழிலரசன், ரவி, முருகவேல், சமூக பணியாளர் பாரதி, விஜய் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

    • தெருநாய் விஷயத்தில் மட்டுமின்றி செல்லப்பிராணிகளிடம் நாம் கவனமுடன் இருக்க வேண்டும் என்கிறார் திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி பொதுமருத்துவத்துறை பேராசிரியர்
    • நாய்கடித்த நாளே தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம்

     திருப்பூர் :

    பெரும்பாலும் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களை விட, சாலையில் சுற்றித்திரியும் நாய்களே பிறரை கடிப்பவையாக இருப்பது குறித்து குற்றச்சாட்டு எழுகிறது.தெருநாய் விஷயத்தில் மட்டுமின்றி வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளிடம் நாம் கவனமுடன் இருக்க வேண்டும். தக்க நேரத்தில் தடுப்பூசிகளை செலுத்த வேண்டும் என்கிறார் திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி பொதுமருத்துவத்துறை இணை பேராசிரியர் செண்பகஸ்ரீ.இது குறித்து அவர் கூறியதாவது:-

    நாய்களிடம் குழந்தைகள், கர்ப்பிணிகள் மிக கவனமாக இருக்க வேண்டும். நாய் அருகில் குழந்தைகளை தனியே விளையாட விடக் கூடாது. முன்னெச்சரிக்கை முக்கியம்.நாய் கடித்தால் மறைக்காமல், சொல்ல வேண்டுமென பெற்றோர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.நாய் கடித்தது ஆனால் ரத்தம் வரவில்லை. பற்கள் பதியவில்லை, லேசாக நகத்தில் பிராண்டியது என்றாலும், டாக்டரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

    நாய்க்கடிக்கு பொதுவாக முதல்நாள், 3-வது, 7-வது, 14 மற்றும் 28வது நாள் என 5 தடுப்பூசி செலுத்தப்படுகிறது.நாய்கடித்தவர் ஒருமுறை தடுப்பூசி செலுத்துமிடத்தில் பதிவு செய்து விட்டால் மறுமுறை அங்கு தான் வர வேண்டும் என்பதில்லை. பதிவு செய்து பதிவுஅட்டை பெற்று எந்த மருத்துவமனையிலும் வேண்டுமானாலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். ஆனால் கட்டாயம் 5 தடுப்பூசியும் செலுத்திக் கொள்ள வேண்டும்.நாய்க்கடித்து சரியான நேரத்துக்கு தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல், அலட்சியமாக இருந்து விட்டால் 6மாதம் கழித்து கூட தொந்தரவு வர வாய்ப்புள்ளது. எந்த நாயிடம் ரேபிஸ் கிருமி இருப்பது என்பது நமக்கு தெரியாது.

    நாய்க்கடி வேறு, வெறிநாய்க்கடி வேறு. கடித்த நாய்க்கு ரேபிஸ் கிருமி இருந்தால் நமக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.தடுப்பூசி போடவில்லையென்றால், ரேபிஸ் வைரஸ் நரம்புகளில் குடியேறும். வீரியத்தை காட்டும். தண்ணீர் குடிக்க, சாப்பிட பிரச்னை ஏற்படும். நரம்புகள் பாதிப்பதால் உணவு எடுக்க முடியாமல் இறப்பை தழுவ நேரிடலாம்.நாய் கடித்த இடத்தை தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் சோப்பு போட்டு சுத்தமாக கழுவ வேண்டும். ரத்த போக்கு குறைந்தவுடன், நாய்கடித்த நாளே தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம்.இவ்வாறு டாக்டர் செண்பகஸ்ரீ கூறினார்.

    • திருப்பத்தூரில் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
    • முகாமில் 50-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    நெற்குப்பை

    உலக வெறி நோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் கால்நடை மருத்துவமனையில் கால்நடை பராமரிப்புத்துறை சிவகங்கை மண்டலம் சார்பில் நாய்களுக்கு தடுப்பூசி முகாம் நடந்தது.

    முகாமில் திருப்பத்தூர் கால்நடை மருத்துவர் ராமச்சந்திரன் நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி செலுத்தினார். முகாமில் கால்நடை மருத்துவமனை முதுநிலை கால்நடை மேற்பார்வையாளர் கருப்பையா, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் முருகானந்தம், அக்பர் அலி, முகமது யாசின் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் 50-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    ×