search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 234255"

    • யானைகளை தொந்தரவு செய்யாமல் இருந்தாலே யானை நாட்டறம்பள்ளி பகுதியில் இருந்து காட்டு பகுதிக்கு சென்று இருக்கும்.
    • ஊருக்குள் சுற்றி திரியும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

    ஜோலார்பேட்டை:

    கர்நாடக வனப்பகுதியில் இருந்து கடந்த 19 நாட்களுக்கு முன்பு வெளியேறிய 5 யானைகளில் 2 யானைகள் திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி, ஏலகிரி மலை பகுதியில் சுற்றி வருகிறது.

    யானைகளை வனப்பகுதிக்கு விரட்ட 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது அதில் இரண்டு குழுவினர் யானை எந்த பக்கம் செல்கிறது. என கண்காணித்து வருகின்றனர்.

    மற்றொரு 3 குழுவினர் யானை முகாமிட்டுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    யானைகளை தொந்தரவு செய்யாமல் இருந்தாலே யானை நாட்டறம்பள்ளி பகுதியில் இருந்து காட்டு பகுதிக்கு சென்று இருக்கும்.

    பொதுமக்கள் யானையை சுற்றி நின்று வேடிக்கை பார்த்து யானைக்கு தொந்தரவு செய்ததால் அது காட்டிற்குள் செல்ல முடியாமல் ஊருக்குள் நுழைந்த சுற்றி திரிந்து வருகிறது. இன்று காலை 2 யானைகளும், சவடிகுப்பம் பகுதியில் சுற்றி திரிந்தன.

    ஊருக்குள் சுற்றி திரியும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். இதற்காக முதுமலை சரணாலயத்தில் இருந்து உதயன், வில்சன் என்ற 2 கும்கி யானைகளும் பொள்ளாச்சி ஆனைமலையில் இருந்து சின்னத்தம்பி என்ற கும்கி யானை லாரி மூலம் இன்று காலை கொண்டுவரப்பட்டன.

    மேலும் யானை பாகன்கள் உடன் வந்துள்ளனர். கும்கி யானைகள் பயணம் செய்ததால் களைப்பாக உள்ளது. அந்த யானைகளை அதிகாலையிலேயே குளிக்க வைத்தனர்.

    மேலும் தேவையான உணவு வழங்கப்பட்டது. இன்று மாலை அல்லது நாளை காலையில் காட்டு யானைகள் கும்கி யானை மூலம் விரட்டப்படும் என தெரிவித்தனர்.

    • மசினக்குடி அருகில் உள்ள மாயாற்றுக்கு ஒரு காட்டு யானை தண்ணீர் குடிக்க வந்தது.
    • மசினகுடி மாயாறு பகுதியில் யானைகளின் பயங்கர சண்டை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு மசினகுடி, மாயாறு, சீகூர், மங்களப்பட்டி ஆகிய பகுதிகள் உள்ளன. இவை மிகவும் அடர்ந்த காட்டுப்பகுதிகள் ஆகும். முதுமலை புலிகள் சரணாலயத்தில் வளைந்து நெளிந்து ஓடும் மாயாறு, வனவிலங்குகளுக்கு நீர் ஆதாரமாக திகழ்ந்து வருகிறது. எனவே காட்டு விலங்குகள் தினமும் இங்கு வந்து தண்ணீர் குடித்து செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் மசினக்குடி அருகில் உள்ள மாயாற்றுக்கு ஒரு காட்டு யானை தண்ணீர் குடிக்க வந்தது. அப்போது அங்கு மற்றொரு யானையும் பிளிறியபடி வந்தது. அப்போது 2 யானைகளும் ஒன்றுக்கொன்று முறைத்து பார்த்தபடி இருந்தன. இந்த நிலையில் அவை திடீரென ஒன்றுக்கொன்று சண்டை போட தொடங்கின. எனவே அந்தப் பகுதியில் யானைகளின் பிளிறலும், தந்தங்கள் மோதிக் கொள்ளும் சப்தமும் பெரிதாக எதிரொலித்தது. இதனைக்கேட்ட பொதுமக்கள் அந்த பகுதிக்கு வந்து பார்த்தனர். அப்போது அவர்களில் ஒரு சிலர் காட்டு யானைகள் ஆக்ரோசத்துடன் மோதிக்கொண்ட காட்சிகளை வீடியோவாக பதிவு செய்தனர்.

    மசினகுடி மாயாறு பகுதியில் யானைகளின் பயங்கர சண்டை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. அதன் பிறகு 2 யானைகளும் அடர்ந்த காட்டுக்குள் சென்று மறைந்து விட்டன.

    மசினகுடியில் காட்டு யானைகளின் ஆக்ரோஷ சண்டையை வீடியோ எடுத்த ஒருவர், அந்த காட்சிகளை சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார். தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகுவும், மசினக்குடி காட்டு யானைகளின் ஆக்ரோஷ சண்டையை, டிவிட்டர் இணையதள பக்கத்தில் பதிவு செய்து உள்ளார்.

    2 காட்டு யானைகள் ஆக்ரோஷமாக மோதி கொண்ட சம்பவம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    • அதிகாலை புகுந்த 4 காட்டு யானைகள் தென்னங்குருத்துகளை தின்றும் கிளைகளை முறித்தும் சேதப்படுத்தின.
    • யானைகள் அணைப்பகுதியில் முகாமிட்டுள்ளது.

    உடுமலை :

    திருப்பூர் திருமூர்த்தி அணையின் பின்புறம் ஈசல் தட்டு கிழக்கு பகுதி விவசாயிகள் குமார், ஆறுமுகம் ஆகியோருக்கு சொந்தமான தென்னந்தோப்புகள் உள்ளன. இங்கு அதிகாலை புகுந்த 4 காட்டு யானைகள் தென்னங்குருத்துகளை தின்றும் கிளைகளை முறித்தும் சேதப்படுத்தின. இதனால் சுமார் 15 மரங்கள் சேதமாகின. தொடர்ந்து யானைகள் அணைப்பகுதியில் முகாமிட்டுள்ளது.இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இரவு நேரம் தோட்டத்தில் தங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே யானைகளை வனத்துக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மீண்டும் காட்டு யானைகள் பாலக்கோடு பகுதியில் சுற்றி வருவது விவசாயிகளிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
    • இந்த காட்டுயானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, மாரண்ட அள்ளி, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    சமீபத்தில் மூன்று காட்டு யானைகள் மின்சாரம் தாக்கி உயிர் இழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்நிகழ்வாக ஒரு காட்டு யானை கம்பைநல்லூர் அருகே ஏரிக்கரையில் ஏறும் பொழுது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது.

    கடந்த இரண்டு வாரங்களாக மீண்டும் காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி உணவு மற்றும் தண்ணீர் தேடி பாலக்கோடுஅடுத்த வன பகுதியை ஒட்டி உள்ள கும்மனூர், சூடனூர், பஞ்சபள்ளி பகுதியில் சுற்றி வருகிறது.

    சூடனூர் பகுதியில் முகாமிட்டுள்ள இரண்டு காட்டு யானைகளை பாலக்கோடு வனத்துறையினர் தொடர்ந்து நகர்வை கண்காணித்து வருகின்றனர்.

    கடந்த மாதம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒருவரை காட்டு யானை தாக்கியதில் அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை காட்டு யானை தாக்கியதில் பெண் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்பு வீடு திரும்பினார்.

    இந்நிலையில் மீண்டும் காட்டு யானைகள் பாலக்கோடு பகுதியில் சுற்றி வருவது விவசாயிகளிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது. எனவே இந்த காட்டுயானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

    • பழங்குடியின கிராமங்களில் தற்போது பலாப்பழ சீசன் தொடங்கி உள்ளது.
    • சாலையின் குறுக்கே யானைகளை கண்டால் ஒலிப்பான் ஒலிப்பதை தவிர்க்க வேண்டும்.

    கோத்தகிரி,

    கோத்தகிரி அருகே குஞ்சப்பனை, மாமரம், கீழ்கூப்பு, மேல்கூப்பு, தட்டப்பள்ளம், கோழிக்கரை, முள்ளூர், அறையூர், கரிக்கையூர், செம்மனாரை உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் பலா மரங்கள் உள்ளன.

    தற்போது சீசன் காரணமாக மரங்களில் பலா பிஞ்சுகள் காய்த்து குலுங்கி வருகின்றன. இந்த பழங்களை உண்பதற்காக சமவெளி பகுதியில் இருந்து காட்டு யானைகள் வந்து முள்ளூர் பகுதியில் தேயிலை தோட்டத்தில் முகாமிட்டு உள்ளன.

    அவை அவ்வப்போது சாலைகளில் நடமாடி வருவதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

    குஞ்சப்பனை சுற்றுவட்டார பழங்குடியின கிராமங்களில் தற்போது பலாப்பழ சீசன் தொடங்கி உள்ளது. இந்த பழங்களை உண்பதற்காக காட்டு யானைகள் சமவெளி பகுதியில் இருந்து வந்து முகாமிட்டு உள்ளன.

    எனவே கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் தங்களது வாகனங்களை இயக்க வேண்டும். சாலையின் குறுக்கே யானைகளை கண்டால் ஒலிப்பான் ஒலிப்பதை தவிர்ப்பதுடன், யானைகளுக்கு தொல்லை கொடுக்கவோ அல்லது செல்போனில் படம் பிடிக்கவோ முயற்சி செய்யக்கூடாது. இதேபோல பழங்குடியின மக்கள் அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் வீட்டை விட்டு தனியாக வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.

    பணிக்கு செல்லும்போது தொழிலாளர்கள் ஒன்றாக செல்ல வேண்டும். தனியாகச் செல்லக்கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர். கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையோர கிராமங்கள் மட்டுமின்றி காட்டு யானைகள் கடந்த சில வாரங்களாக பலா மரங்கள் இல்லாத கொணவக்கரை, பர்ன்சைடு, கூக்கல்தொரை உள்ளிட்ட பகுதிகளிலும் உலா வந்த வண்ணம் உள்ளது.

    • கூக்கல்தொரை பகுதியை சுற்றிலும் ஏராளமான குக்கிராமங்கள் உள்ளன.
    • காட்டு யானைகள் தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு உள்ளன.

    கோத்தகிரி,

    கோத்தகிரி அருகே கூக்கல்தொரை பகுதியை சுற்றிலும் ஏராளமான குக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இந்தநிலையில் தற்போது சமவெளி பகுதியில் இருந்து காட்டு யானைகள் குட்டிகளுடன் வந்து, இங்குள்ள தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு உள்ளன. இந்த யானைகள் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே உலா வருகின்றன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். மேலும் காட்டு யானைகள் தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு உள்ளதால், பச்சை தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் மற்றும் காய்கறி விவசாயிகளின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். விவசாய பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் சென்று வர வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    • விடிய விடிய பீதியில் உறைந்த கிராம மக்கள்
    • விளைநிலத்தில் புகுந்து பயிர்களை நாசப்படுத்தியது

    குடியாத்தம்:

    குடியாத்தம் வனப்பகுதி, ஆந்திர மாநில எல்லைப் பகுதியை ஒட்டியபடி உள்ளது.ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் கவுண்டன்யா யானைகள் சரணாலயம் உள்ளது. அந்த சரணாலயத்தில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளது.

    அந்த யானைகள் பல குழுக்களாகப் பிரிந்து தமிழக வனப்பகுதியில் உள்ள சைனகுண்டா, மோர்தானா, கொட்டமிட்டா, தனகொண்டபள்ளி, டி.பி. பாளையம், கொத்தூர், கதிர்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தன.

    வனத்துறையினர் கடும் சிரமத்திற்கு இடையே கிராம மக்கள் உதவியுடன் பட்டாசுகள் வெடித்தும் மேளங்கள் அடித்தும் ஆந்திர மாநில வனப்பகுதிக்கு பல கிலோ மீட்டர் தொலைவுக்கு விரட்டிவிட்டனர்.

    கடந்த சில மாதங்களாக யானைகள் தொல்லை சற்றே குறைந்திருந்தது, ஆங்காங்கே ஓரிரு யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களைசேதப்படுத்தி வந்தது. விவசாயிகள் யானைகள் கூட்டம் குறைந்ததையடுத்து நிம்மதிப் பெருமூச்சு விட்டு வந்தனர்.

    இந்நிலையில் குடியாத்தம் அடுத்த கொட்டமிட்டா கிராமத்தில் நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் இரண்டு குழுக்களாக தலா மூன்று என ஆறு யானைகள் கொண்ட கூட்டம் குடியிருப்பு பகுதியில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் உள்ள நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது அமாவாசை இருட்டு என்பதால் கிராம மக்கள் அருகே செல்ல அச்சமடைந்தனர் உடனடியாக இது குறித்து வனத்துறை ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர்.

    இரவு 10 மணி வரை வனத்துறையினர் யாருமே கொட்டமிட்டா பகுதிக்கு வரவில்லை செல்போன் மூலம் தொடர்பு கொண்டாலும் போன் எடுப்பதில்லை எடுக்கும் ஓரிரு வனத்துறையினர் வருகிறேன் வருகிறேன் என்று கூறுவதாக கூறி விட்டு வரவில்லை என கூறப்படுகிறது.

    இதனையடுத்து அச்சமடைந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு மேளங்கள் அடித்து பட்டாசு வெடித்து குடியிருப்பு பகுதிக்கு நுழையா வண்ணம் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வனத்துறையினர் உரிய நேரத்திற்கு வந்து யானைகள் கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டி விடாததால் விவசாய நிலங்களுக்குள் புகுந்த யானைகளால் விவசாயிகளுக்கு பெருத்த சேதாரம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

    யானைகள் வீடு அருகே நின்றதால் அச்சத்துடன் பொதுமக்கள் இரவை கழித்தனர்.

    வேலூர் கலெக்டர் யானைகள் பிரச்சனையில் தனி கவனம் செலுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

    யானைகளை விளைநிலங்களுக்குள் தடுக்க நடவடிக்கை எடுக்காத வனத்து றையினரை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இரவு 10 மணிக்கு மேல் வனத்துறையினர் கொட்டமிட்டா பகுதிக்கு வந்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர்

    அப்போதும் அந்த யானைகள் கூட்டம் கிராம மக்கள், வனத்துறை யினருக்கு போக்குக்காக காட்டி விட்டு பக்கத்தில் உள்ள மேல்கொல்லப்பல்லி கிராமத்திற்கு நுழைந்து ஏராளமான பயிர்களை நாசம் செய்ததாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

    • மலை ரெயிலை மறித்து நின்ற காட்டு யானைகளால் ½ மணி நேர தாமதத்திற்கு பின் புறப்பட்டு சென்றது.
    • வறட்சியின் காரணமாக வன விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி இடம் பெயர்ந்து வருகின்றன.

    ஊட்டி,

    நீலகிரி குன்னூர் குன்னூர் -மேட்டுப்பாளையம் ரெயில் பாதையில் மலை ரெயிலை மறித்து நின்ற காட்டு யானைகளால் ½ மணி நேர தாமதத்திற்கு பின் புறப்பட்டு சென்றது. ரெயில் பாதையில் காட்டு யானைகள் சமவெளிப் பகுதியில் தற்போது மழையில்லாமல் கடும் வறட்சி நிலவி வருகிறது. இந்த வறட்சி வனப்பகுதியிலும் நிலவி வருகிறது. மேட்டுப்பாளையம் வனசரகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளிலிருந்து வறட்சியின் காரணமாக வன விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி இடம் பெயர்ந்து வருகின்றன.

    இந்த நிலையில் 8-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் குன்னூர் வனப்பகுதியை நோக்கி படையெடுத்து வருகின்றன. குன்னூர் -மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள பள்ளத்தாக்கு பகுதியில் அவற்றிற்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் உள்ளதால் அவை குட்டிகளுடன் மலைப்பாதையில் உலா வருகின்றன. மேலும் இவைகள் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் முகாமிட்டு விவசாய தோட்டங்களையும் சேதப்படுத்தி வருகின்றன. மலை ரெயிைல வழிமறித்தது தற்போது குன்னூர் -மேட்டுப்பாளையம் மலை ரெயில் பாதையில் இந்த யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று காலை 3 யானைகள் மலைரெயில் பாதையில் ரன்னிமேடு ரெயில் நிலையம் அருகே நடமாடின. அப்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் நோக்கி வந்த மலை ரெயிலை இந்த யானைகள் மறித்தப்படி நின்றன. யானைகள் தண்டவாளத்தில் நின்றதால் மலை ரெயில் சற்று தொலைவில் நிறுத்தப்பட்டது. தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். அதன் பின்னர் சுமார் அரை மணி நேரம் தாமத்திற்குப்பின் மலை ரெயில் அங்கிருந்து புறப்பட்டு குன்னூரை நோக்கி சென்றது.

    • மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் நெல், தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளனர்.
    • காட்டு யானைகள் மீண்டும் நெல் வயல்களை சேதப்படுத்தி சென்றுள்ளன.

    தென்காசி:

    தென்காசி அருகே திரவியநகர், மத்தளம்பாறை உள்ளிட்ட கிராமங்களை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் நெல், தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளனர்.

    ஒவ்வொரு ஆண்டும் அந்த பகுதிகளில் நெல் நடவு செய்யப்பட்டு நெற்கதிரில் பால் பிடிக்கும் நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து காட்டு யானைகள் கீழே இறங்கி வந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.

    தற்போது மீண்டும் காட்டு யானைகள் நெல் வயல்களில் இறங்கி சேதப்படுத்தி சென்றுள்ளன. மேலும் அருகில் இருந்த வயல்களில் உள்ள வாழை மற்றும் தென்னை மரங்களையும் பிடுங்கி எரிந்து சேதப்படுத்தி உள்ளன.

    இதனால் விவசாயி கள் இரவில் விவசாய நிலங்களுக்கு காவலுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். காட்டு யானைகளை வெடி களை வெடிக்க செய்து விவசாயிகள் விரட்டினாலும் அவை தொடர்ந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவதால் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர். எனவே வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காட்டு யானைகளை ஓசூர் வனச்சரகர் ரவி தலைமையிலான வனத்துறையினர் தொடர்ந்து இரண்டு நாட்களாக கண்காணித்து வந்தனர்.
    • ஆகாயத்தாமரை செடிகள் உள்ளிட்ட அடர்ந்த செடி கொடிகள் இருப்பதால் தண்ணீரில் நீந்த முடியாமல் 3 யானைகளும் தத்தளித்தது.

    ஓசூர்,

    கர்நாடக மாநிலத்தில் ஒகேனக்கல் பகுதியில் இருந்து வெளியேறிய 5 காட்டு யானைகள் தமிழக கிராம பகுதிகள் வழியாக இடம் பெயர்ந்து ஓசூர் அருகே உள்ள மத்திகிரி கால்நடை பண்ணைக்குள் புகுந்தது.

    இந்த காட்டு யானைகளை ஓசூர் வனச்சரகர் ரவி தலைமையிலான வனத்துறையினர் தொடர்ந்து இரண்டு நாட்களாக கண்காணித்து வந்தனர்.

    மூங்கில் காடுகளை கொண்ட அடர்ந்த கால்நடை பண்ணைக்குள் தஞ்சமடைந்த இந்த காட்டு யானைகளை மீண்டும் கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டும் பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் காட்டு யானைகளை வேறு பகுதிக்கு விரட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை கால்நடை பண்ணையில் இருந்து வெளியேறிய 3 காட்டு யானைகளும் கர்னூர் பெரிய ஏரியில் நுழைந்துள்ளது.

    இந்த ஏரியில் அதிக அளவில் ஆகாயத்தாமரை செடிகள் உள்ளிட்ட அடர்ந்த செடி கொடிகள் இருப்பதால் தண்ணீரில் நீந்த முடியாமல் 3 யானைகளும் தத்தளித்தது. ஆனாலும் தொடர்ந்து மறுகரைக்குச் செல்ல நீந்தி வருகிறது. பல மணி நேரமாக காட்டு யானைகள் நீந்தி வருகிறது.

    இந்த காட்டு யானைகள் ஏரி நீரில் நீந்தி மறுகரையில் உள்ள கால்நடை பண்ணைக்குள் செல்லும், இதனை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    கால்நடை பண்ணைக்குள் செல்லும் காட்டு யானைகளை வனத்துறையினர் இன்று மாலை கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்ட திட்டமிட்டுள்ளனர்.

    • காட்டு யானைகளை ஓசூர் வனச்சரகர் ரவி தலைமையிலான வனத்துறையினர் தொடர்ந்து இரண்டு நாட்களாக கண்காணித்து வந்தனர்.
    • கால்நடை பண்ணையில் இருந்து வெளியேறிய 3 காட்டு யானைகளும் கர்னூர் பெரிய ஏரியில் நுழைந்துள்ளது.

    ஓசூர்:

    கர்நாடக மாநிலத்தில் ஆனேக்கல் பகுதியில் இருந்து வெளியேறிய 5 காட்டு யானைகள் தமிழக கிராம பகுதிகள் வழியாக இடம் பெயர்ந்து ஓசூர் அருகே உள்ள மத்திகிரி கால்நடை பண்ணைக்குள் புகுந்தது.

    இந்த காட்டு யானைகளை ஓசூர் வனச்சரகர் ரவி தலைமையிலான வனத்துறையினர் தொடர்ந்து இரண்டு நாட்களாக கண்காணித்து வந்தனர்.

    மூங்கில் காடுகளை கொண்ட அடர்ந்த கால்நடை பண்ணைக்குள் தஞ்சமடைந்த இந்த காட்டு யானைகளை மீண்டும் கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டும் பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் காட்டு யானைகளை வேறு பகுதிக்கு விரட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை கால்நடை பண்ணையில் இருந்து வெளியேறிய 3 காட்டு யானைகளும் கர்னூர் பெரிய ஏரியில் நுழைந்துள்ளது.

    இந்த ஏரியில் அதிக அளவில் ஆகாயத்தாமரை செடிகள் உள்ளிட்ட அடர்ந்த செடி கொடிகள் இருப்பதால் தண்ணீரில் நீந்த முடியாமல் 3 யானைகளும் தத்தளித்தது. ஆனாலும் தொடர்ந்து மறுகரைக்குச் செல்ல நீந்தி வருகிறது. பல மணி நேரமாக காட்டு யானைகள் நீந்தி வருகிறது.

    இந்த காட்டு யானைகள் ஏரி நீரில் நீந்தி மறுகரையில் உள்ள கால்நடை பண்ணைக்குள் செல்லும், இதனை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    கால்நடை பண்ணைக்குள் செல்லும் காட்டு யானைகளை வனத்துறையினர் இன்று மாலை கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்ட திட்டமிட்டுள்ளனர்.

    • நீரில் யானைகள் குளியல் போட்டு கும்மாளம் போடுவதை அந்த வழியாக சென்றவர்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
    • வனத்துறையினர் பட்டாசு வெடித்தும், தாரதப்பட்டை அடித்தும் காட்டுக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    பாலக்கோடு, 

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே மணியகாரன் கொட்டாய் கிராமத்தில் உள்ள ஜெர்த்தலாவ் பெரியஏரியில் தேன்கனிக்கோட்டை, சானமாவு உள்ளிட்ட பகுதியில் இருந்து உணவு தேடி வந்த 3 காட்டு யானைகள், 2 குட்டி யானையுடன் ஏரியில் தஞ்சம் அடைந்துள்ளது.

    நேற்று பெரிய காட்டு யானைகளுடன், குட்டி யானைகள் ஏரியில் உள்ள நீரில் குளியல் போட்டு கும்மாளம் போடுவதை அந்த வழியாக சென்றவர்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து பாலக்கோடு வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஏரியில் குளியல் போட்ட காட்டு யானைகளை வனத்துறையினர் பட்டாசு வெடித்தும், தாரதப்பட்டை அடித்தும் காட்டுக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சமீப காலமாக பாலக்கோடு சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராமங்களுக்கு காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வருவதால் விவசாய நிலங்களில் உள்ள பயிர்கள் சேதமடைந்து வருவதுடன், கிராம மக்கள் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர்.

    ஈச்சம்பள்ளம் அருகே சுற்றி திரிந்த 20 வயது மக்னா யானையை பிடித்து ஆணைமலை முகாமிற்கு அனுப்பி வைத்த நிலையில் தற்போது மணியகாரன்கொட்டாய் கிராமத்தில் உள்ள ஜெர்த்தலாவ் பெரியஏரியில் குட்டி யானைகள் உட்பட 5 யானைகள் முகாமிட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த 5 யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி விட வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×