search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவர்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சி.பி.ஐ.யிடம் நான், மகளின் டைரியிலுள்ள பக்கம் ஒன்றை கொடுத்திருக்கிறேன் என்றார்.
    • உயிரிழந்த பெண் அந்த மருத்துவமனையில் சட்டவிரோத போதைப் பொருள் புழக்கத்தை எதிர்த்ததாக தெரிவித்தார்

    கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. மருத்துவ ஊழியர் சஞ்சய் சிங் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டு மேற்கு வங்காள போலீசால் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து வழக்கு சிபிஐ க்கு மாற்றப்பட்டது.

    உயிரிழந்த பெண் அந்த மருத்துவமனையில் சட்டவிரோத போதைப் பொருள் புழக்கத்தை எதிர்த்ததாகவும் அதன்பொருட்டே திட்டமிட்டு அவர் கொல்லப்பட்டுள்ளதாவும் சக மாணவர் ஒருவர் பரபரப்பைக் கிளப்பியுள்ளார். இதுபோன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளும் மர்மங்களும் பெண் மருத்துவர் கொலை வழக்கில் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளன. உயிரிழந்த பெண்ணின் பெற்றோர், இதில் ஒன்றிற்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டு இருக்கக் கூடும் என்றும் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    மேலும் அவர்கள் தங்கள் மகளின் கொலை தொடர்பாக பல்வேறு சந்தேகங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளனர். படுகொலையான பெண் டாக்டரின் தந்தை செய்தியாளர்களிடம் இன்று அளித்த பேட்டியின்போது, வழக்கை போலீசார் கையாண்ட முறையைப் பார்த்ததும், முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் மீதிருந்த நம்பிக்கையை நாங்கள் இழந்து விட்டோம். தற்போது சி.பி.ஐ. முயற்சி எடுத்து வழக்கை விசாரிக்கிறது. சி.பி.ஐ.யிடம் நான், மகளின் டைரியிலுள்ள பக்கம் ஒன்றை கொடுத்திருக்கிறேன் என்றார். [ஆனால், அதில் இடம் பெற்றுள்ள விவரங்களை பற்றி கூற மறுத்து விட்டார்]

    தொடர்ந்து இந்த விவகாரத்தில் மாநில அரசின் நடவடிக்கைகளைக் குறித்து விமர்சித்த அவர், தொடக்கத்தில் மம்தா மீது முழு நம்பிக்கை இருந்தது. ஆனால் இப்போது இல்லை. அவர்கள், எங்களுக்கு நீதி வேண்டும் என கூறுகிறார்கள். ஆனால், இதே விசயங்களைக் கூறும் பொதுமக்களை அவர்கள் கட்டிப்போட முயல்கின்றனர் என்று தெரிவித்தார்.

    படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் தாய் பேசுகையில், நாட்டில் உள்ள மக்களுக்கு நாங்கள் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். எங்களது மகளுக்கு நீதி வேண்டிப் போராடி வரும் அனைவருக்கும் நாங்கள் நன்றியுடன் இருக்கிறோம். குற்றவாளிகள் முழுமையாகப் பிடிபட்டு நீதி கிடைக்கும் வரை எங்களுடன் நீங்கள் நிற்க வேண்டும். இனி இப்படி ஒரு நிலைமை வேறு எந்த தாய்க்கும் வர கூடாது என்பதே எங்களின் விருப்பம் என்று தெரிவித்துள்ளார். 

    • AIIMS RDA மருத்துவர்கள் மத்திய சுகாதார அமைச்சகம் அமைந்துள்ள நிர்மான் பவன் வளாகத்துக்கு வெளியே இன்று போராட்டத்தில் ஈடுபடுகிறனர்.
    • பிரதமர் மோடிக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு சட்டம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

    கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. மருத்துவ ஊழியர் சஞ்சய் சிங் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டு மேற்கு வங்காள போலீசால் கைது செய்யப்பட்டார். இதனைதொடர்ந்து வழக்கு சிபிஐ க்கு மாற்றப்பட்டது.

    இந்த விவாகரத்தின் விரைவான நீதி வழங்க வேண்டியும் வருங்காலங்களில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் மருத்துவர்கள் நடத்தி வரும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. அந்த வகையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த ரெசிடெண்ட் டாக்டர்ஸ் அசோசியேசன் [AIIMS RDA] மருத்துவர்கள் மத்திய சுகாதார அமைச்சகம்  அமைந்துள்ள நிர்மான் பவன் வளாகத்துக்கு வெளியே இன்று போராட்டத்தில் ஈடுபடுகிறனர். நிர்மான் பவனுக்கு வெளியே வீதியில் வெளி நோயாளிகளுக்கு [OPD] இலவச சிகிச்சை வழங்கி நூதன முறையில் மருத்துவர்கள் போரட்டம் நடந்த உள்ளனர்.

     

    ரெசிடெண்ட் டாக்டர்ஸ் அசோசியேசன்[RDA] மருத்துவர்கள் கடந்த ஆகஸ்ட் 12 முதலே காலவரையின்றி போராட்டம் நடத்தி வரும் நிலையில் மருத்துவ சேவைகள் பாதிப்புக்களாகியிருந்தது. எனவே தற்போது தங்களின் போராட்ட முறையை மருத்துவர்கள் மாற்றியுள்ளனர். மேலும் AIIMS RDA சங்கம் சார்பில், பிரதமர் மோடிக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு சட்டம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். 

    • மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி இந்த போராட்டங்கள் நடந்து வருகின்றன.
    • பத்ம விருதுகள் பெற்ற 71 மருத்துவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்

    கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. மருத்துவ ஊழியர் சஞ்சய் சிங் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டு மேற்கு வங்காள போலீசால் கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.

    இதற்கிடையில் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி நாடு முழுக்க மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இன்றைய தினமும் நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளில் காலவரையற்ற வேலை நிறுத்தமும் போராட்டமும் நடந்து வருகிறது. உயிரிழந்த மருத்துவர் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கவும், குற்றவாளியை விரைந்து தண்டிக்க வேண்டியும், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியும் இந்த போராட்டங்கள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில் பத்ம விருதுகள் பெற்ற 71 மருத்துவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில், 'கொல்கத்தா பாலியல் வன்கொடுமை, கொலை சம்பவம் நாட்டில் பெண்கள் மற்றும் மருத்துவர்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க உடனடி நடவடிக்கை தேவை என்பதையே காட்டுகிறது.

    நமது நாட்டின் தலைவர் என்ற அடிப்படையில், தனிப்பட்ட முறையில் இந்த விவகாரத்தில் தலையிட்டு துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒன்றிய, மாநில அரசுகளால் தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர். 

    • அதிகாலை 3.30 மணியளவில் முகத்தில் காயங்களுடன் வந்த நபர் ஒருவருக்கு பணியிலிருந்த பெண் மருத்துவர் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார்.
    • அவர்களிடம் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ளும் முயற்சியில் பெண் மருத்துவருக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளது.

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள மருத்துவமனையில் பெண் மருத்துவரிடம் 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள சியான் [Sion Hospital] மருத்துவமனையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் முகத்தில் காயங்களுடன் வந்த நபர் ஒருவருக்கு பணியிலிருந்த பெண் மருத்துவர் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார்.

    காயங்களுடன் வந்த நபரும் அவருடன் வந்த மற்ற உறவினர்கள் 5 பேறும் குடிபோதையில் இருந்துள்ளனர். சிகிச்சையளித்துக் கொண்டிருந்த மருத்துவரிடம் அவர்கள் 6 பேறும் பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றுள்ளனர். அவர்களிடம் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ளும் முயற்சியில் பெண் மருத்துவருக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளது. உடனே அந்த இடத்திலிருந்து அவர்கள் 6 பேரும் தப்பிச் சென்று விட்டனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

    கல்கத்தாவில் RG கர் மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திவரும் விலையில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசை வலியுறுத்தி போராட்டங்கள் நடந்து வருகிறது. மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தால் நேற்று முழு தினமும் மருத்துவ சேவைகள் ஸ்தாபித்தன. இந்நிலையில் மும்பையில் பெண் மருத்துவர் இரவு டியூட்டியின்போது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் மருத்துவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    • மருத்துவம் படிக்கும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
    • மருத்துவம் படிக்கும் மாணவிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடந்த சில தினங்களுக்கு முன்பு கொல்கத்தாவில் பெண் பயிற்சி டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது மிகவும் வேதனைக்குரியது. இச்சம்பவம் மருத்துவம் படிக்கும் மாணவிகள் மத்தியில் ஒரு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதால் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

    பெண்கள் படிக்கும் கல்லூரிகளில் பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும். மத்திய-மாநில அரசுகள் இது போன்ற ஒரு சம்பவம் இனி நடைபெறாமல் இருக்க உறுதியான நடவடிக்கைகளில் ஈடுபட்டு, மருத்துவம் படிக்கும் மாணவிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அரசு மருத்துவமனை பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு போராட்டம் நடத்தினார்கள்.
    • மருத்துவமனையில் பாதுகாப்பு வேண்டும் என கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவள்ளூர்:

    மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் மருத்துவக் கல்லூரியில் இரவு பணியில் இருந்த முதுகலை 2ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்த பெண்பயிற்சி டாக்டர் ஒருவர் கல்லூரி வளாகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

    பெண் பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து அகில இந்திய மருத்துவ சங்கங்களுடன் இணைந்து நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்க தலைவர் பிரபு சங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. டாக்டர்கள் ஜெகதீசன், விஜயராஜ், ராஜ்குமார் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் கோபாலகிருஷ்ணன், பிரேம்குமார், மற்றும் மருத்துவ பேராசிரியர்கள், மருத்துவ கல்லூரி மாணவ - மாணவிகள், செவிலியர்கள் மற்றும் அரசு மருத்துவமனை பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு போராட்டம் நடத்தினார்கள். பெண் பயிற்சி மருத்துவர் கொலைக்கு நியாயம் வேண்டியும், மருத்துவர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், மருத்துவமனையில் பாதுகாப்பு வேண்டும் என கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • அகில இந்திய மருத்துவ சங்கம் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
    • நீண்ட வரிசையில் வெகு நேரம் நோயாளிகள் காத்து நின்று சிகிச்சை பெற்று சென்றனர்.

    சேலம்:

    மேற்கு வங்காள தலைநகர் கோல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் பணியில் இருந்த 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் கடந்த வாரம் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய கேட்டு நாடு முழுவதும் டாக்டர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் அகில இந்திய மருத்துவ சங்கம் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. அதன் படி நாடு முழுவதும் டாக்டர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் செயல்படும் 200-க்கும் மேற்பட்ட தனியார் ஆஸ்பத்திரிகளில் இன்று காலை 6 மணி முதல் வெளி நோயாளிகள் பிரிவு மூடப்பட்டது.

    அவசர சிகிச்சைகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டன. இதனால் பெரும்பாலான ஆஸ்பத்திரிகள் வெளி நோயாளிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. வெளி நோயாளிகள் பிரிவு மூடப்பட்டதால் காய்ச்சல் தலைவலி, வயிற்று வலி உள்பட சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் கடும் அவதிப்பட்டனர். இதையடுத்து அவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றனர். இதனால் அரசு ஆஸ்பத்திரியில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

    இந்த நிலையில் இன்று சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை டாக்டர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வெளி நோயாளிகள் பிரிவில் அதிக நேரம் பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. நீண்ட வரிசையில் வெகு நேரம் நோயாளிகள் காத்து நின்று சிகிச்சை பெற்று சென்றனர்.

    இதேபோல் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு இந்திய மருத்துவ சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கொல்கத்தா மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், சம்பவத்தில் தொடர்புடையவர்களை தூக்கிலிட வேண்டும். பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.தொடர்ந்து மருத்துவமனை யில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் 60 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு மூடப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை மட்டும் நடைபெறுகிறது.

    • இந்திய மருத்துவ சங்கம் சார்பில் இன்று நாடு தழுவிய ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • அரசு மருத்துவமனைகளில் வழக்கத்தை விட நோயாளிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.

    ஈரோடு:

    மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் டாக்டர்கள், மாணவர்கள் பல்வேறு அமைப்பினர் மருத்துவர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் இன்று நாடு தழுவிய ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

    இதன்படி ஈரோடு மாவட்டத்தில் கொல்கத்தா பயிற்சி பெண் டாக்டர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நீதி வேண்டியும், மருத்துவர்களுக்கு பணியிடங்களில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் இன்று காலை 6 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 400 மருத்துவமனைகள், 2 ஆயிரம் மருத்துவர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்.

    இது தொடர்பாக தனியார் மருத்துவமனை முன்பு போர்டும் வைக்கப்பட்டுள்ளது. அதில் இன்று தீவிர சிகிச்சை பிரிவு தவிர மற்ற அனைத்து வகையான மருத்துவ சேவைகளும் நடைபெறவில்லை.

    இதனால் இன்று அரசு மருத்துவமனைகளில் வழக்கத்தை விட நோயாளிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. அரசு மருத்துவ மனையில் பணிபுரியும் மருத்துவர்கள் பெண் பயிற்சி டாக்டர் படுகொலை சம்பவத்தை கண்டித்து இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பணி புரிந்து வருகின்றனர்.

    • பயிற்சி டாக்டர்கள் மற்றும் மாணவர்கள் பந்தல் அமைத்து தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மற்ற உள் பிரிவு நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கவில்லை.

    வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இளங்கலை, முதுகலை பயிற்சி டாக்டர்கள் இன்று 2-வது நாளாக டாக்டர்கள் , பயிற்சி டாக்டர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்தபடி பணிக்கு வந்தனர்.

    பேராசிரியர்கள், துறை தலைவர்கள் மற்றும் டாக்டர்கள் புற நோயாளிகள் பிரிவு கட்டிடம் முன்பு கண்டன கோஷங்களை எழுப்பி சுமார் 1 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பயிற்சி டாக்டர்கள் மற்றும் மாணவர்கள் பந்தல் அமைத்து தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். புறநோயாளிகள் பிரிவு முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதோடு, கையில் பதாகைகளை ஏந்தி கோஷமிட்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

    விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு உள்ளிட்ட அவசர சிகிச்சை பிரிவுகள் மற்றும் வழக்கம்போல் செயல்பட்டது.

    புறநோயாளிகள் பிரிவு, நோயாளிகள் சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதிபட்டனர்.

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் , அனைத்து அரசு மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில இணை செயலாளர் டாக்டர். கீர்த்தி தலைமையில் இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து கோஷமிட்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

    தொடர்ந்து பணியில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.

    திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்கள் இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை ஒரு மணி நேரம் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் .

    அவசர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு மட்டும் மருத்துவம் பார்த்தனர். மற்ற உள் பிரிவு நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கவில்லை. இதனால் நோயாளிகள் அவதி அடைந்தனர்.

    • டெல்லியில் இருந்து கேரளா வரை உள்ள மருத்துவமனைகள் மற்றும் கல்லூரிகளில் போராட்டம் நடந்து வருகிறது
    • ஆர்.ஜி மருத்துவமனை வளாகத்தை சேதப்படுத்தியவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    பெண் டாக்டர் கொலை வழக்கில் இந்திய மருத்துவ சங்கம் 5 நிபந்தனைகள்

    மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குற்றத்தில் ஈடுபட்ட மருத்துவமனை ஊழியர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்கு சிபிஐ வசம் சென்றுள்ளது. உயிரிழந்த சக மருத்துவருக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.

    இன்றைய தினம் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை இந்திய மருத்தவ சங்கம் [IMA]அறிவித்துள்ளது. இதன்படி எமெர்ஜென்சி சேவைகள் தவிர்த்து வெளி நோயாளுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படாது. டெல்லியில் இருந்து கேரளா வரை உள்ள மருத்துவமனைகள் மற்றும் கல்லூரிகளில் இந்த போராட்டமானது நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த போராட்டத்தின் நோக்கம் குறித்தும், மருத்துவர்களின் பாதுகாப்பை வருங்காலங்களில் உறுதி செய்யவும் ஐந்து நிபந்தனைகளை இந்திய மருத்துவ சங்கம் முன்மொழிந்துள்ளது

    இந்திய மருத்துவ சங்கத்தின் 5 நிபந்தனைகள் 

    ◆தற்போது நடந்துபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, 'மத்திய சுகாதாரத்துறை பாதுகாப்பு சட்டத்தில்' விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்

    ◆இந்த வழக்கை குறுகிய காலத்தில் விசாரித்து முடிக்க வேண்டும். கடந்த ஆகஸ்ட் 14 அன்று அத்துமீறி நுழைந்து ஆர்.ஜி மருத்துவமனை வளாகத்தை சேதப்படுத்தியவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    ◆மருத்துவமனை வளாகங்களைப் பாதுகாக்கப்பட மண்டலங்களாக அறிவிக்க வேண்டும். நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் விமான நிலையங்களில் இருக்கும் அளவுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். அதற்குக் குறைவான பாதுகாப்பை ஏற்க முடியாது. சிசிடிவி கண்கணிப்பை அதிகரித்து, பாதுகாப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.

    ◆உயிரிழந்த பெண் மருத்துவர் வேலை செய்து வந்த 36 மணி நேர பணி ஷிப்ட் உட்பட, ரெசிடெண்ட் மருத்துவர்களின் பணி மற்றும் பாதுகாப்பு சூழலை மேம்படுத்தும் வகையில் முழுமையான மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் 

    ◆பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழக்கப்பட்ட கொடுமைக்குக்கு அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட 5 நிபந்தனைகளை முன்மொழிந்துள்ளது.

    • அவருக்கு தலை பகுதியில் சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது.
    • முதற்கட்டமாக எட்டு ஊசிகள் எடுக்கப்பட்டன.

    ஒடிசா மாநிலத்தின் போலாங்கிர் பகுதியை சேர்ந்தவர் ரெஷ்மா பெஹரா. 19 வயதான இவர் அடிக்கடி உடல்நல பாதிப்புகளால் அவதியுற்று வந்தார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் இவரது தாயார் உயிரிழந்துள்ளார். அதன்பிறகு தான் இவருக்கு அடிக்கடி உடல்நல பாதிப்புகள் ஏற்பட துவங்கியுள்ளது.

    இதையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு வாக்கில் இவர் மந்திரவாதி ஒருவரை சந்தித்துள்ளார். அதன்பிறகு சில காலம் எந்த பிரச்சினையும் இல்லாமல் ரெஷ்மா வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், திடீரென தலையில் தாங்க முடியாத வலி ஏற்பட்டு பீமா போய் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரெஷ்மா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தலை பகுதியில் சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது.

    அதில் ரெஷ்மா தலையில் ஊசிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட ரெஷ்மா தலையில் இருந்து முதற்கட்டமாக எட்டு ஊசிகள் எடுக்கப்பட்டன. எனினும், அவரது உடல்நிலையில், மாற்றம் இல்லாததால் வீர் சுரேந்திர சாய் மருத்துவமனைக்கு (விம்சார்) பரிந்துரைக்கப்பட்டார்.

    விம்சார் மருத்துவமனையில் இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில் ரெஷ்மா தலையில் இருந்து மொத்தம் 77 ஊசிகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது நலமுடன் இருக்கும் ரெஷ்மா அறுவை சிகிச்சைக்கு பிந்தைய பரிசோதனைகளை எடுத்துக் கொண்டு வருகிறார்.

    "இதுவரை இரண்டு அறுவை சிகிச்சைகளின் மூலம் 77 ஊசிகள் பெண்ணின் தலையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக ஊசிகள் எதுவும் எலும்பு பகுதியில் சேதம் ஏற்படுத்தவில்லை. மாறாக தசை பகுதியில் லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது," என்று விம்சார் மருத்துவமனை இயக்குநர் பாப்ராஹி ரத் தெரிவித்தார்.

    இந்த சம்பவத்தில் தொடர்புடைய மந்திரவாதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ரெஷ்மா போன்று வேறு யார்யார் இத்தகைய பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் என்பது குறித்து காந்தபாஞ்சி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உடலில் உள்ள ஆக்ஸிஜன் திறன் குறைய ஆரம்பித்து, இது உடலின் செயல்திறனை பாதிக்கிறது.
    • ஜிம்மிற்குச் செல்வதை நிறுத்தும்போது உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

    உடல் ஆரோக்கியமாக இருக்க, ஒருவர் தவறாமல் உடற்பயிற்சி அல்லது யோகா பயிற்சி செய்ய வேண்டும். இன்றைய காலக்கட்டத்தில், இளைஞர்கள் உடலைக் கட்டமைக்க மற்றும் சரியான உருவத்திற்காக ஜிம்மில் உடற்பயிற்சி செய்ய விரும்புகிறார்கள்.

    ஆனால் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதை நிறுத்திவிட்டால் பல தீமைகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? பல நேரங்களில் இளைஞர்கள் திடீரென ஜிம்மிற்கு செல்வதை நிறுத்திவிடுவார்கள். திடீரென ஜிம்மிற்கு செல்வதை நிறுத்துவது அல்லது உடற்பயிற்சியை நிறுத்துவது உடலுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். இது குறித்து நிபுணர்கள் கருத்து இதோ....

    உடற்பயிற்சி செய்வதை நிறுத்தினால்...

    • திடீரென ஜிம்மிற்கு செல்வதை நிறுத்துவதால் தசைகள் சுருங்கும். இதன் காரணமாக, உடலில் வலிமை மற்றும் ஆற்றல் பற்றாக்குறை உணரப்படுகிறது. எனவே, ஒருவர் திடீரென உடற்பயிற்சி செய்வதையோ, ஜிம்மிற்கு செல்வதையோ நிறுத்தக்கூடாது.

    • உடலில் உள்ள ஆக்ஸிஜன் திறன் குறைய ஆரம்பித்து, இது உடலின் செயல்திறனை பாதிக்கிறது.

    • தசை வலிமை குறையத் தொடங்குகிறது. இதன் காரணமாக, உடலின் சமநிலை மோசமடையத் தொடங்குகிறது மற்றும் மெலிந்த உடல் நிறை அல்லது தசை வெகுஜனத்தில் சரிவு காணப்படலாம்.

    • உடற்பயிற்சி அல்லது வொர்க்அவுட்டை திடீரென நிறுத்துவதால் வளர்சிதை மாற்றமும் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக, உடல் கொழுப்பு, இரத்த சர்க்கரை, குளுக்கோஸ் அளவு மற்றும் இரத்த அழுத்தம் பாதிக்கப்படலாம்.

    • திடீரென்று ஜிம்மிற்குச் செல்வதை நிறுத்தினாலோ அல்லது உடற்பயிற்சி செய்தாலோ உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி பலவீனமடையும் அபாயம் உள்ளது. இதனால், மனநலமும் பாதிக்கப்படுகிறது.


    உடற்பயிற்சியை நிறுத்துவதற்கு முன்பு இதை செய்யுங்கள்...

    நீங்கள் நீண்ட நேரம் ஜிம்மிற்குச் சென்றாலோ அல்லது வழக்கமான உடற்பயிற்சி செய்தாலோ, திடீரென்று அதை நிறுத்துவதைத் தவிர்க்க வேண்டும். உடலை கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள நீண்ட நேரம் தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும். எந்த காரணத்திற்காகவும் நீங்கள் ஜிம்மிற்கு செல்வதையோ அல்லது உடற்பயிற்சி செய்வதையோ நிறுத்த வேண்டும் என்றால், முதலில் திடீரென அவ்வாறு செய்வதை தவிர்க்கவும்.

    உடற்பயிற்சி அல்லது வொர்க்அவுட்டை படிப்படியாகக் குறைத்து, உணவில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். நீங்கள் உடற்பயிற்சி செய்வதை அல்லது ஜிம்மிற்குச் செல்வதை நிறுத்தும்போது உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க முயற்சி செய்யுங்கள். இது தவிர, தினமும் சிறிது நேரம் தியானம் செய்யுங்கள்.

    உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒருவர் வாரத்திற்கு 150 நிமிடங்கள் உடல் உழைப்பை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஜிம்மைத் தவிர்ப்பது அல்லது உடற்பயிற்சியை நிறுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகளைத் தவிர்க்க தினமும் நடக்கவும், ஜாக் செய்யவும். இது பக்க விளைவுகளை குறைக்க உதவும். உடற்பயிற்சியை நிறுத்திய பிறகு அல்லது ஜிம்மிற்குச் சென்ற பிறகு உங்களுக்கு கடுமையான பிரச்னைகள் இருந்தால், நிச்சயமாக மருத்துவரை அணுகவும்.

    ×