search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜேபி நட்டா"

    • வெளியூரில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் அவசரம் அவசரமாக புறப்பட்டு சென்னைக்கு வந்திருந்தார்.
    • பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க.வை இணைப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது.

    சென்னை:

    பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் நட்டா நேற்று சென்னை வந்தார். தங்கசாலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    அதன் பிறகு அவர் டெல்லி புறப்படும் முன்பு தோழமைக்கட்சி தலைவர்களை சந்தித்து பேசுவார் என்று தகவல் வெளியாகி இருந்தது. குறிப்பாக அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வத்தை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இதற்காகவே வெளியூரில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் அவசரம் அவசரமாக புறப்பட்டு சென்னைக்கு வந்திருந்தார். நட்டாவை சந்திக்க அவர் தயார் நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவரை நட்டா அழைக்கவில்லை.

    பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க.வை இணைப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது. மேலும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முழுமை பெறவில்லை.

    இந்த நிலையில் ஓ.பி.எஸ்.சை சந்தித்து பேசினால் தொகுதி பங்கீடு உள்ளிட்ட அடுத்தடுத்த பேச்சுவார்த்தைக்கு இடையூறு ஏற்படலாம் என்று கருதப்பட்டது. இதனால்தான் ஓ.பன்னீர்செல்வத்தை நட்டா சந்திக்காமல் சென்றார் என்று கூறப்படுகிறது.

    • காட்டாங்குளத்தூரில் நடக்கும் கூட்டத்திற்கு தமிழகம் முழுவதும் இருந்தும் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
    • ஜே.பி.நட்டாவின் நிகழ்ச்சியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    பா.ஜனதாவின் சார்பில் பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் கூட்டம் சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை நடக்கிறது. இந்த கூட்டத்துக்கு தமிழகம் முழுவதும் இருந்தும் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    இதில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொள்வதாக இருந்தது. அதன் பின்னர் மாலையில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பேசுவதாக பயண நிகழ்ச்சி வகுக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் அவர் திடீரென பயண திட்டத்தை மாற்றியுள்ளார். காலை நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. மாலையில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். ஜே.பி.நட்டாவின் நிகழ்ச்சியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் ஜே.பி.நட்டாவிற்கு பதில் மாநில செயலாளர் அண்ணாமலையும், பொறுப்பாளர் தேசிய விநாயகமும் கலந்து கொள்கிறார்கள்.

    மாலை 5 மணிக்கு நட்டா டெல்லியில் இருந்து சென்னை வருகிறார். அதன் பிறகு அமைந்தகரையில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

    • தமிழக பா.ஜனதா நிர்வாகிகள் சந்திப்பு, பொது கூட்டம் என பல்வேறு நிகழ்ச்சியில் ஜே.பி.நட்டா பங்கேற்கிறார்.
    • தமிழகத்தில் பா.ஜனதா மேற்கொள்ளும் தேர்தல் பணிகள், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பாக மாநில நிர்வாகிகளிடம் ஜே.பி.நட்டா கேட்டறிய உள்ளார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு பணிகளை வேகப்படுத்தி உள்ளன. தமிழக பா.ஜனதா சார்பில், 'பூத்' கமிட்டி அமைக்கப்பட்டு, அவற்றை வலுப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் தீவிரம் காட்டுகிறது.

    இந்த நிலையில், பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, 11-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை வருகிறார். அவரின் இந்த பயணம், அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த பயணத்தின்போது, தமிழக பா.ஜனதா நிர்வாகிகள் சந்திப்பு, பொது கூட்டம் என பல்வேறு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.

    முதலாவதாக, சென்னை அடுத்த காட்டாங்குளத்தூர் அருகே பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தமிழக பா.ஜனதா மாநில நிர்வாகிகள், பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்கள், இணை பொறுப்பாளர்கள், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    மேலும் தமிழக பா.ஜனதா சார்பில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, சமூகவலைதள பிரசார பிரிவு, மகளிர் அணி, இளைஞரணி, சட்டம் பிரிவு உள்பட 38 குழுக்களையும் ஜே.பி.நட்டா சந்தித்து ஆலோசனைகளை வழங்க உள்ளார்.

    தமிழகத்தில் பா.ஜனதா மேற்கொள்ளும் தேர்தல் பணிகள், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பாக மாநில நிர்வாகிகளிடம், தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கேட்டறிய உள்ளார். மேலும், தேர்தல் வியூகங்கள் வகுப்பதற்கான வழிகாட்டுதல்களையும் மாநில நிர்வாகிகள் மற்றும் சிறப்பு குழுக்களுக்கு அவர் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த சந்திப்பின்போது, கூட்டணி குறித்தும் விவாதிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்பிறகு, சென்னை கீழ்ப்பாக்கம் அருகே உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், ஜே.பி.நட்டா பங்கேற்று பொதுமக்களிடையே உரையாற்ற உள்ளார்.

    • ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22-இல் நடைபெறுகிறது.
    • கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள பிரபலங்கள், தலைவர்களுக்கு அழைப்பு.

    அயோத்தியில் நடைபெற இருக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா நேரடியாக கலந்து கொள்ள மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அவர் கும்பாபிஷேக நிகழ்வை ஜந்தேவாலன் கோவிலில் இருந்து பார்க்க இருக்கிறார்.

    இது குறித்து, எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, "அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்காக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையிலிருந்து எனக்கு அழைப்பு வந்துள்ளது. அழைப்பிற்காக அறக்கட்டளைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்."

     


    "500 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு ராமர் கோவில் பிரம்மாண்டமாக கட்டப்படும் பாக்கியம் நமக்கு கிடைத்துள்ளது. பிரான் பிரதிஷ்டை நிகழ்ச்சி முடிந்ததும், எனது குடும்பத்தினருடன் தரிசனத்திற்காக விரைவில் அயோத்திக்குச் செல்வேன். ஜனவரி 22-ம் தேதி, ஜந்தேவாலன் கோவில் முற்றத்தில் இருந்து கும்பாபிஷேக விழாவைக் காண இருக்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • ஆளும் பா.ஜ.க.வின் பல நடவடிக்கைகளை ஆதரித்து வருபவர் கங்கனா
    • எந்த தொகுதி என்பது முடிவாகவில்லை என்றார் கங்கனாவின் தந்தை

    இந்தி திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கங்கனா ரனாவத் (36). இவர் 4 தேசிய விருதுகள், 5 பிலிம்ஃபேர் விருதுகள் வென்றவர்.

    நாட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகள் குறித்து சமூக வலைதளங்களில் தனது கருத்துக்களை பதிவு செய்து வரும் கங்கனா, ஆளும் பா.ஜ.க.வினரின் பல நடவடிக்கைகளையும், பிரதமர் நரேந்திர மோடியையும் ஆதரித்து வருபவர்.

    அடுத்த வருடம் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

    கங்கனாவிடம் தேர்தலில் போட்டியிடும் ஆர்வம் உள்ளதா என கேட்கப்பட்ட போது, "பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் ஆசி இருந்தால் போட்டியிடுவேன்" என தெரிவித்திருந்தார்.

    தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

    இந்நிலையில், "அடுத்த வருட பாராளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வின் சார்பில் கங்கனா ரனாவத் போட்டியிடுவார். அவர் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பது தற்போது உறுதியாகவில்லை" என கங்கனாவின் தந்தை அமர்தீப் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த சில தினங்களுக்கு முன் ஹிமாச்சல் பிரதேச மாநில பிலாஸ்பூர் நகரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிகழ்ச்சியில் கங்கனா கலந்து கொண்டார். தனது கருத்துக்கள் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்துடன் ஒத்து போவதாக அப்போது அவர் தெரிவித்தார்.

    கடந்த 2008ல் தமிழில் வெளியான "தாம் தூம்" எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்படுகிறது.
    • தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை வரவேற்ற பாஜக தலைவர் ஜே.பி.நட்டா.

    தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    சட்டசபை தேர்தல் தேதிகளுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.

    அதன்படி, மிசோரமில் வரும் நவம்பர் 7ம் தேதி அன்றும், சத்தீஸ்கர் (2 கட்டங்கள்) - நவம்பர் 7 மற்றும் நவம்பர் 17 அன்றும், மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17ம் தேதி அன்றும், ராஜஸ்தானில் நவம்பர் 23ம் தேதியும், தெலுங்கானாவில் நவம்பர் 30ம் தேதி அன்றும் தேர்தல் நடைபெறுகிறது.

    மேலும், அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்படுகிறது.

    இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை வரவேற்ற பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, 5 மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜே.பி.நட்டா அவரது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் பாஜக அனைத்து மாநிலங்களிலும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். அடுத்த 5 ஆண்டுகளில் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயல்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார்.
    • அங்கு அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோரையும் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார்.

    சென்னனை:

    பாராளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் வரும் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் என பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெறவும், இந்த ஆண்டு இறுதியில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெறவும் பா.ஜ.க. தீவிரமாக வேலை செய்து வருகின்றது.

    இதற்கிடையே, பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று டெல்லி செல்கிறார்.

    இந்த கூட்டத்துக்கு பிறகு ஜே.பி.நட்டா, அமித்ஷா ஆகியோரை எடப்பாடி பழனிசாமி தனித்தனியே சந்தித்து, பா.ஜ.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • தேர்தலை சந்திக்க ஆளும் பாரதியஜனதா கட்சி ஏற்கனவே தயாராகிவிட்டது.
    • தேர்தலுக்கு இன்னும் 3 மாதகாலம் இருக்கும் சூழ்நிலையில் பாரதியஜனதா தேர்தல் வேலைகளை தொடங்கி உள்ளது

    போபால்:

    230 உறுப்பினர்களை கொண்ட மத்தியபிரதேச மாநில சட்டசபையின் பதவி காலம் முடிவடைய இருப்பதையொட்டி இந்தாண்டு இறுதியில் அம்மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலை சந்திக்க ஆளும் பாரதியஜனதா கட்சி ஏற்கனவே தயாராகிவிட்டது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே கடந்த மாதம் 17-ந்தேதி 30 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாரதியஜனதா வெளியிட்டு அந்த தொகுதிகளில் தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கிவிட்டது.

    பாரதிய ஜனதாவை வீழ்த்த காங்கிரசும் தயாராகிவிட்டது. கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று கமல்நாத் முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். இந்த ஆட்சி 2 ஆண்டு காலமே நீடித்தது. 2020-ம் ஆண்டு காங்கிரசை சேர்ந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா 22 எம்.எல்.ஏக்களுடன் அக்கட்சியில் இருந்து வெளியேறினார். இதனால் மத்திய பிரதேச மாநிலத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.

    இதனால் காங்கிரஸ் ஆட்சியும் கவிழ்ந்தது.

    இதையடுத்து சிவராஜ் சிங் சவுதான் தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைந்தது. தொடர்ந்து அக்கட்சி ஆட்சியில் நீடித்து வருகிறது. இதனால் வருகிற சட்டசபை தேர்தலில் எப்படியும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் பாரதியஜனதா உள்ளது.

    அதே சமயம் இழந்த ஆட்சியை மீண்டும் மத்தியபிரதேச மாநிலத்தில் மலர வைப்பதில் அக்கட்சி தலைவர்கள் மும்முரமாக உள்ளனர். இதற்கு பலனாக சமீபத்தில் பல பாரதியஜனதா தலைவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி மறுபடியும் காங்கிரசில் இணைந்து வருகின்றனர். மத்திய மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் தீவிர ஆதரவாளரான ராஜேஷ் குப்தா ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் காங்கிரசில் சேர்ந்தார். இது காங்கிரஸ் கட்சிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.

    அதே சமயம் சில தலைவர்கள் விலகியதால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை மக்கள் ஆதரவுடன் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என அக்கட்சியினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.

    இந்த நிலையில் பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் அவரது இல்லத்தில் நேற்று பாரதியஜனதா ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். இதில் மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தேர்தல் வெற்றி வியூகம் குறித்தும், பாரதிய ஜனதா வெற்றிக்காக பாடுபடுவது குறித்தும் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். தேர்தலுக்கு இன்னும் 3 மாதகாலம் இருக்கும் சூழ்நிலையில் பாரதியஜனதா தேர்தல் வேலைகளை தொடங்கி உள்ளது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    • சனாதனம் பற்றிய பேச்சுகளுக்கு அவர்களுக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார்.
    • ராகுல், சோனியா மற்றும் காங்கிரசுக்கு சனாதனத்தின் மீது வெறுப்பு உள்ளது.

    புதுடெல்லி:

    தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி "சனாதனம்" பற்றி பேசிய பேச்சுக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, அமைச்சர் பொன்முடி ஆகியோரும் சனாதனம் குறித்து பேசி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளனர்.

    சனாதனம் பற்றிய பேச்சுகளுக்கு அவர்களுக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, சனாதனத்துக்கு எதிராக தி.மு.க. பேசி வருவதற்கு சோனியாவும், ராகுலும் தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ஜே.பி.நட்டா வெளியிட்டு உள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-

    ராகுல், சோனியா மற்றும் காங்கிரசுக்கு சனாதனத்தின் மீது வெறுப்பு உள்ளது. சனாதனத்தின் மீது இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு வெறுப்பு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பா.ஜனதாவின் தேசிய தலைமையானது பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
    • கடந்த தேர்தலில் பா.ஜனதா கூட்டணி அல்லாத கட்சிகள் ஜெயித்த தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு புதுவை பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவடே, தேசிய செயலாளர் சத்திய குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய். ஜெ.சரவணன்குமார் செல்வகணபதி எம்.பி. உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    சிறப்பு அழைப்பாளர்களான வினோத் தாவடே, சத்தியகுமார் ஆகியோர் பேசும்போது அனைத்து தொகுதிகளிலும் கிளைகளை வலிமைப்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கினார்கள்.

    வருகிற நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் உள்துறை மந்திரி அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் புதுச்சேரிக்கு வர உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    பா.ஜனதாவின் தேசிய தலைமையானது பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த தேர்தலில் பா.ஜனதா கூட்டணி அல்லாத கட்சிகள் ஜெயித்த தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அந்த தொகுதிகளை கைப்பற்ற குறிவைத்து காய்களை நகர்த்தி வருகிறது. புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி உள்ள நிலையில் புதுவை எம்.பி. தொகுதியை கைப்பற்றியே தீரவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.

    ஏற்கனவே, மத்திய மந்திரி எல்.முருகனை பொறுப்பாளராக நியமித்து பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. அவரும் அவ்வப்போது புதுச்சேரி வந்து கூட்டங்களை நடத்துவது, பொதுமக்களை சந்தித்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

    • வருகிற 28-ந் தேதி அண்ணாமலை ராமேஸ்வரத்தில் இருந்து நடைபயணத்தை தொடங்குகிறார்.
    • தமிழக அரசியல் நிலவரம் பற்றி இருவரும் கலந்தாலோசித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சென்னை:

    தழிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை இன்று திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு பா.ஜனதா தேசிய தலைவரான ஜே.பி. நட்டாவை அவர் சந்தித்து பேசினார்.

    அப்போது தமிழக அரசியல் நிலவரம் பற்றி இருவரும் கலந்தாலோசித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வருகிற 28-ந் தேதி அண்ணாமலை ராமேஸ்வரத்தில் இருந்து நடைபயணத்தை தொடங்குகிறார். இது தொடர்பாகவும் இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

    • பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மாநில தலைவர்களை சந்தித்து இது தொடர்பாக பேசி வருகிறார்.
    • ஐதராபாத்தில் நடந்த கூட்டத்தில் மிக முக்கியமான விசயம் பற்றியும் விவாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

    சென்னை:

    பாராளுமன்றத்திற்கு அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதில் பா.ஜனதா கட்சி தீவிரமாக உள்ளது.

    பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது தொடர்பாகவும் ஆலோசனை தொடங்கி நடந்து வருகிறது. பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மாநில தலைவர்களை சந்தித்து இது தொடர்பாக பேசி வருகிறார்.

    தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, கோவா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள் கொண்ட தென் பகுதிகளில் உள்ள பா.ஜ.க. மாநில தலைவர்களுடன் ஜே.பி.நட்டா நேற்று ஐதராபாத்தில் நடந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் தென் மாநிலங்களில் இருந்து இந்த தடவை அதிக அளவு பா.ஜ.க. எம்.பி.க்கள் பாராளுமன்றத்துக்கு வர வேண்டும் என்று மாநில தலைவர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தென் மாநிலங்களில் பா.ஜ.க.வின் செல்வாக்கு, கட்சி உள்கட்டமைப்பு மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்தும் அவர் மாநில தலைவர்களுடன் விவாதித்தார். விரைவில் பா.ஜனதா கட்சியின் தேர்தல் வியூகம் பற்றிய தகவல் வழங்கப்படும். அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்றும் மாநில தலைவர்களிடம் நட்டா தெரிவித்தார்.

    ஐதராபாத்தில் நடந்த கூட்டத்தில் மிக முக்கியமான விசயம் பற்றியும் விவாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. தென் மாநிலங்களில் ஏதாவது ஒரு தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட விருப்பம் தெரிவித்து இருப்பதாகவும், அந்த தொகுதியை தேர்வு செய்ய ஆய்வு பணி நடந்து வருவதாகவும் மாநில தலைவர்களிடம் ஜே.பி. நட்டா தெரிவித்து உள்ளார்.

    பிரதமர் மோடி முதலில் குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா மற்றும் உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். பிறகு அவர் வதோதரா தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

    அதேபோன்று இந்த தடவையும் 2 தொகுதிகளில் போட்டியிட மோடி திட்டமிட்டுள்ளார். வாரணாசியிலும், தென் மாநிலங்களில் ஒரு தொகுதியிலும் களம் இறங்க அவர் விருப்பம் தெரிவித்து உள்ளார். தென் மாநிலத்தில் போட்டியிடுவதன் மூலம் பா.ஜ.க. செல்வாக்கை மேம்படுத்த முடியும் என்று பிரதமர் மோடி கருதுவதாக தெரிகிறது.

    பிரதமர் மோடியின் விருப்பம் பற்றி நேற்று நடந்த கூட்டத்தில் ஜே.பி. நட்டா தெரிவித்ததும் தென் மாநில தலைவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். தென் மாநிலங்களில் எந்த தொகுதியில் போட்டியிட்டால் மோடி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற முடியும் என்பது பற்றியும் கருத்துக்கள் தெரிவித்தனர். பெரும்பாலான தென் மாநில தலைவர்கள் பிரதமர் மோடி தமிழகத்தில் களம் இறங்கினால் நன்றாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தனர்.

    இதையடுத்து தமிழகத்தில் பிரதமர் மோடி எந்த தொகுதியில் போட்டியிடலாம் என்பது பற்றி ஆய்வு நடந்து வருகிறது. ஏற்கனவே இதுபற்றி ஒரு ரகசிய சர்வே நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கன்னியாகுமரி, கோவை, ராமநாதபுரம் ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் பிரதமர் மோடியை போட்டியிட வைக்கலாம் என்று மாநில தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

    இந்தநிலையில் பிரதமர் மோடி ராமநாதபுரம் தொகுதியில் களம் இறங்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பா.ஜனதா கட்சியின் மத்திய குழுவும் இதற்கு ஆதரவு தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. ராமநாதபுரம் தொகுதியில் ராமேஸ்வரம் புனித தலமும் அடங்கி உள்ளது.

    இதை கருத்தில் கொண்டு தான் பிரதமர் மோடி அந்த தொகுதியை விரும்புவதாக கூறப்படுகிறது. வட இந்தியாவில் காசியிலும், தென் இந்தியாவில் ராமேஸ்வரத்திலும் போட்டியிடுவதன் மூலம் புதிய எழுச்சியை உண்டாக்க முடியும் என்று அவர் கருதுவதாக கூறப்படுகிறது.

    ராமநாதபுரம் தொகுதியில் தற்போது நவாஸ் கனி எம்.பி.யாக உள்ளார். அந்த தொகுதியில் கணிசமான அளவுக்கு இஸ்லாமியர்களின் வாக்குகள் உள்ளன. எனவே பிரதமர் மோடி அந்த தொகுதியில் போட்டியிடு வாரா? என்பது பற்றி தொடர்ந்து ஆய்வு பணிகள் நடந்து வருகின்றன.

    தென் மாநிலங்களில் இருந்து இந்த தடவை குறைந்த பட்சம் 50 தொகுதி களில் வெற்றி பெற வேண்டும் என்று பா.ஜனதா இலக்கு நிர்ணயித்து உள்ளது. பிரதமர் மோடி தென் மாநிலங்களுக்கு வரும் பட்சத்தில் இதற்கான வாய்ப்புகளையும், சூழ்நிலைகளையும் உருவாக்க முடியும் என்று பா.ஜனதா மூத்த தலைவர்கள் கருதுகிறார்கள்.

    பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிட்டால் அதற்காக முழு மூச்சுடன் உழைக்க தயாராக இருப்பதாக தமிழக பா.ஜ.க. தலைவர்கள் ஏற்கனவே தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ×