search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 238752"

    • அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது.
    • பாத்திமா கனி ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள சாகீர்உசேன் கல்லூரியில் ''நம் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம்'' சார்பில் தமிழக அரசின் ''நான் முதல்வன்'' திட்டத்தின் கீழ் "கல்லூரிக்கனவு-2023" என்னும் தலைப்பில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் திருப்புவனம், அல்லிநகரம், சாலைகிராமம், முனைவென்றி, அனுமந்தகுடி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி பயிலுவதின் முக்கியத்துவம் மற்றும் உயர்கல்வி பாடப்பிரிவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பீர் முகம்மது, அப்ரோஸ்சேக் அப்துல்லா, பாத்திமா கனி ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்

    • அனைவருக்கும் உயர் கல்வி திட்டத்தில் இதுவரை ரூ.8.5 கோடி அளவில் மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கியிருக்கிறது.
    • உயர் கல்வியில் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது நமது நாட்டில் நிதி ஒதுக்கீடு என்பது குறைவாக உள்ளது.

    வேலூர்:

    வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக தினவிழா மற்றும் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.

    விழாவிற்கு வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இங்கே விருது வாங்கியவர்களில் மாணவிகள் தான் அதிகமாக இருந்தனர். இது பாராட்டப்பட வேண்டியது. மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாது விளையாட்டிலும் பங்கெடுக்க வேண்டும். இது உங்கள் வாழ்விற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் உள்ள 4 வளாகங்களிலும் 80 ஆயிரம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு எண்ணிக்கை மட்டும் அல்ல கல்வியில் தரமும் இருக்கிறது. அதனால் தான் இந்திய அளவிலும், உலகளவிலும் சிறந்து விளங்குகிறோம்.

    உலக அளவில் உள்ள பல்கலைக்கழகங்களில் முதல் 200 இடத்தை பிடிக்க வி.ஐ.டி முயற்சி மேற்கொண்டுள்ளது. வி.ஐ.டி., பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க கடந்த ஆண்டு 970 கம்பெனிகள் வந்தது. இந்த ஆண்டு இதுவரை 820 கம்பெனிகள் மூலம் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அனைவருக்கும் உயர் கல்வி திட்டத்தில் இதுவரை ரூ.8.5 கோடி அளவில் மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கியிருக்கிறது. இதில் 50 சதவீதம் வி.ஐ.டி பல்கலைக்கழகம் வழங்கி உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக டெல்லி ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி முருகேசன் கலந்து கொண்டு பேசினார்.

    அவர் பேசியதாவது:-

    உயர் கல்வியில் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது நமது நாட்டில் நிதி ஒதுக்கீடு என்பது குறைவாக உள்ளது. உயர் கல்வியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

    புதிய கண்டுபிடிப்புகள் மாணவர்கள் புதிய, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும். வி.ஐ.டி பல்கலைக்கழகம் சிறந்த நிர்வாகம், கல்வியின் மூலம் சாதனை படைத்துள்ளது. இதற்கு ஆசிரியர்கள் முக்கிய காரணம். வி.ஐ.டி.யில் படிப்பது மாணவர்களுக்கு ஒரு பெருமையாகும். படிக்கும் போது மாணவர்கள் ஒழுக்கத்துடன் கல்வி கற்க வேண்டும்.

    ஆராய்ச்சி இல்லாமல் உயர் கல்வி சாத்தியம் இல்லை. நாம் எவ்வளவு ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்கிறோம் என்பது முக்கியம். இப்போது ஆராய்ச்சிக்கு என மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடு என்பது குறைவாக தான் உள்ளது.

    கல்வி நிறுவனங்கள் மாணவர்களை ஆராய்ச்சி செய்ய ஊக்கப்படுத்த வேண்டும். என்ஜினீயரிங் மாணவர்களால் தான் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கமுடியும்.

    இவ்வாறு அவர்பேசினார்.

    விழாவில் காக்னிசன்ட் நிறுவனத்தின் துணைத்தலைவர் மாயா ஸ்ரீகுமார் பல்கலைக்கழக துணை வேந்தர் ராம்பாபு கோடாலி, இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லீக். விளையாட்டு துறை இயக்குனர்தியாகசந்தன் உள்பட பலர் பேசினர். முன்னதாக பதிவாளர் ஜெயபாரதி வரவேற்றார். வைபஞ்சர்மா நன்றி கூறினார்.

    • எதிர்காலத்தில் அரசு துறையின் உயர்பதவிகளுக்கு நீங்கள் உயர வேண்டும்.
    • உயர்கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கலெக்டர் மகாபாரதி பார்வையிட்டார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோயிலில் உள்ள கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தமிழ் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியை கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்து பேசுகையில்:-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநிலம் முழுவதும் 100 இடங்களில் தலா 1000 மாணவ- மாணவிகள்

    கலந்து கொள்ளும் வகையில் இந்த நிகழ்ச்சியை நடத்த ஆணையிட்டார். அதன்படி, இங்கு நடந்த நிகழ்ச்சியில் 14 கல்லூரிகளை சேர்ந்த 1000 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் தமிழ் மரபும் - நாகரிகமும், சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூக பொருளாதார முன்னேற்றம், திசைதோறும் திராவிடம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, தொழில் முனை–வுக்கான முன்னெடுப்புகள் ஊடகங்களின் தோற்றமும் வளர்ச்சியும், கணித தமிழ்வளர்ச்சி சவால்களும், சுற்றுலா வாய்ப்புகள், நூற்றாண்டு கண்ட கல்வி புரட்சி மற்றும் அரசின் திட்டங்கள் மற்றும் செயல்படுத்தும் முறைகள் குறித்து சொற்பொழிவாளர்களை கொண்டு மாபெரும் தமிழ் கனவு சொற்பொழிவு நடைபெற்றது.

    மாணவ- மாணவிகள் இந்த நிகழ்ச்சியில் சொற்பொழிவாளர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார் மாபெரும் தமிழ் கனவு காணொளியை கண்டும் வரலாற்று சிறப்புகளை அறிந்து கொண்டு எதிர்காலத்தில் அரசு துறையின் உயர்பதவிகளுக்கு நீங்கள் உயர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக கல்லூரி வளாகத்தில் மாவட்ட நூலகத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த புத்தக கண்காட்சி, பள்ளி கல்வித்துறை சார்பில் நான் முதல்வன் திட்டம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் உயர்கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கலெக்டர் மகாபாரதி பார்வையிட்டார்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக சொற்பொழிவாளர்கள் அறிவுமதி, நந்தலாலா ஆகியோர் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினர்.

    அதனை தொடர்ந்து தமிழ் பெருமிதம் குறித்தும், கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளக்கம் தந்து மற்றும் வினாக்கள் கேட்ட 8 மாணவ- மாணவிகளுக்கு கலெக்டர் மகாபாரதி பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், வருவாய் கோட்டாட்சியர்கள் யுரேகா, அர்ச்சனா, கல்லூரி நிர்வாக இயக்குனர் குடியரசு, பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • நான் முதல்வன் திட்டத்தின் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மாணவர்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக "நான் முதல்வன்" என்ற திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆண்டுக்கு 10 லட்சம் மாணவர்களின் திறமைகளை மேம்படுத்தி, நாட்டின் செழுமைக்காக சிறந்த திறமையைக் கண்டறிய வேண்டும். மாணவர்களின் எதிர்கால நலனுக்காக மாணவர்களின் திறன், கல்வித்திறன் மற்றும் மறைந்திருக்கும் திறமை ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும் என்பதாகும்.

    இந்த திட்டம் ஆங்கிலம் பேசும் வகுப்புகள், குறியீட்டு முறை, ரோபாட்டிக்ஸ், வெளிநாட்டு மொழி வகுப்புகள், பாரம்பரிய தமிழ்நாடு கலாச்சார வகுப்புகள் மற்றும் பிற அத்தியாவசிய தலைப்புகளை வழங்குவது, தொழில் முறை ஆலோசனைகளை வழங்குவது, பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வெற்றிகரமான வாழ்க்கை மற்றும் வாழ்க்கைக்கான திறன் மேம்பாடு மற்றும் வழிகாட்டுதல் திட்டங்களை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

    இந்த திட்டத்தின் கீழ், மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கு சிறந்த கல்லூரியை தேர்வு செய்து கல்வி பயின்று வாழ்க்கையில் நல்ல நிலையை அடைய வேண்டுமென்ற நோக்கில் வழிகாட்டுதலும் வழங்கப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக அரசு மற்றும் அரசு உதவு பெறும் பள்ளிகளில் பிளஸ்-2 மாணவர்களுக்கு உயர் கல்வி பயில ஆர்வமூட்டும் வகையில், அருகாமையில் உள்ள கல்லூரிகளுக்கு மாணவர்களை அழைத்து செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில், இந்த திட்டத்தை செயல் படுத்தும் வகையில் 1500 மாணவர்களை கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சிவகாசி, வெம்பக்கோட்டை, ராஜபாளையம், வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 5 ஒன்றியங்களைச் சேர்ந்த 700 மாணவர்கள் மதுரையில் உள்ள தியாக ராஜர் பொறியியல் கல்லூரி, அமெரிக்கன் கல்லூரி மற்றும் வேளாண் கல்லூரிகளுக்கு இலவச பஸ் மற்றும் உணவு வசதி ஏற்பாடு செய்து அழைத்து செல்லப்பட்டனர்.

    இந்த மாணவர்களுக்கு கல்லூரியில் உள்ள உயர்கல்வியில் உள்ள வாய்ப்புக்கள், அதன் மூலம் கிடைக்கப்பெறும் வேலை வாய்ப்புக்கள், உயர்கல்வி யில் உள்ள துறைகள், ஆய்வகங்கள் உள்ளிட்ட வைகள் குறித்து நேரடியாக சென்று அவர்கள் அறிந்து, தெரிந்து கொள்ளும் வகையிலும், உயர்கல்வி பயில்வதற்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலும், அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் வழங்கும் வகையிலும், கல்லூரி நிர்வாகத்தால் எடுத்து ரைக்கப்பட்டு, விழிப்பு ணர்வு ஏற்ப டுத்தப்பட்டது.

    மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    • உயர்கல்வி உறுதி திட்டத்தின் மூலம் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க முடியும்.
    • மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை விருதுநகர் கலெக்டர் தொடங்கி வைத்தார்.

    விருதுநகர்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு 2-ம் கட்டமாக ஊக்கத்தொகை வழங்கும் புதுமைப்பெண் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    அதனை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில், விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி கலையரங்கத்தில் கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கி உயர்கல்வி உறுதி திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது 993 கல்லூரி மாணவிகளுக்கு தலா ரூ.1000 ஊக்கத்தொகையுடன், வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம், நிதிக்கல்வி புத்தகம் அடங்கிய "புதுமைப்பெண்" பெட்டகப்பை மற்றும் வங்கி ஏ.டி.எம்.களை வழங்கினார்.

    கலெக்டர் ஜெயசீலன் பேசுகையில், இந்தியா விலேயே தமிழகத்தில் தான் உயர்கல்விக்கு செல்லும் பெண்களின் மொத்த சேர்க்கை விகிதம் 51 சதவீதமாக உள்ளது. உயர்கல்வி உறுதி திட்டத்தின் மூலம் பெண்க ளுக்கான தொழில் வாய்ப்பு களை அதிகரித்தல், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தல், அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்தல் ஆகி யவை நோக்கமாகும் என்றார். இதில் எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், ரகுராமன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் இந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சவுதி அரேபியா, கத்தார், துருக்கி உள்ளிட்ட நாடுகள்கூட ஆப்கானிஸ்தான் அரசுக்கு கண்டனம் தெரிவித்தன.
    • ஜனவரி 13ம் தேதி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் பற்றி விவாதிக்கப்பட உள்ளது.

    காபூல்:

    தலிபான்கள் ஆட்சி செலுத்தி வரும் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் பெண்கள் உயர் கல்வி படிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், உலகம் முழுவதும் இருந்து தலிபான் அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. முஸ்லிம்கள் பெரும்பான்மை கொண்ட சவுதி அரேபியா, கத்தார், துருக்கி உள்ளிட்ட நாடுகள்கூட கண்டனம் தெரிவித்தன.

    இந்நிலையில், ஐ.நா. உயர் தூதர் மார்கஸ் போட்செல் இன்று தலிபான் அரசின் உயர் கல்வித்துறை மந்திரி நிதா முகமது நதீமை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பெண்களின் உயர்கல்வி தடை தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இந்த தடையை உடனடியாக நீக்கி, பெண்கள் உயர்கல்வி படிப்பதற்கான வாய்ப்புகளை வழங்கவேண்டும் என ஐநா தூதர் வலியுறுத்தி உள்ளார். இதற்கு மந்திரி நதீம் கூறிய பதில் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. பெண்களுக்கான உயர் கல்விக்கு கடந்த மாதம் தடை விதிக்கப்பட்ட பின்னர் உயர்கல்வி மந்திரியை சந்திக்கும் முதல் சர்வதேச அதிகாரி மார்கஸ் போட்செல் ஆவார்.

    என்ஜிஓ மீதான தடையை வெளியிட்ட பொருளாதாரத் துறை மந்திரி காரி தின் முகமது ஹனிப், துணைப் பிரதமர் அப்துல் சலாம் ஹனபி, உள்துறை மந்திரி சிராஜுதீன் ஹக்கானி மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் ஆகியோரையும் போட்செல் சமீபத்தில் சந்தித்து, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான அடக்குமுறைகள் குறித்து விவாதித்தார்.

    ஜனவரி 13ம் தேதி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் பற்றி விவாதிக்க உள்ள நிலையில், இந்த ஆலோசனைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    • 20 மாணவர்களுக்கு கீழுள்ள பள்ளிகள் மூடப்படும்.
    • இனி 15000 உயர்கல்வி நிறுவனங்களாக குறைக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டு விடும்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே கொள்ளிடம் பேருந்து நிலையத்தில் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

    தேசிய கல்விக் கொள்கை 2020 ஐ திரும்ப பெற வேண்டும், தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற பிரச்சார இயக்கத்திற்கு தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில துணைத்தலைவர் அசோக்குமார் தலைமை வகித்தார்.

    அப்போது அவர் பேசுகையில், தேசிய கல்விக் கொள்கை 2020ன் படி மும்மொழி கொள்கை என்பது குழந்தைகளின் கல்வி சுமையை அதிகரிப்பதோடு தாய்மொழிக் கல்வியை கேள்விக்குறியாக்கும், 20 மாணவர்களுக்கு கீழுள்ள பள்ளிகள் மூடப்படும் என்பதும், வளாகப் பள்ளிகள் அமைக்கப்படும் என்பதும் ஆரம்பக் கல்வியை முற்றிலும் பாதிக்கக் கூடியதாக அமையும்.

    இந்த கொள்கையின்படி தற்போதுள்ள 850 பல்கலைக்கழகங்கள் மற்றும் 48,000க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இனி 15000 உயர்கல்வி நிறுவனங்களாக குறைக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டு விடும். எனவே தேசிய கல்விக் கொள்கை 2020 உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றார்.

    தமிழக ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கமலநாதன், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் விஜயகுமார், வட்டாரத் தலைவர் ராஜேஷ் மற்றும் அனைத்து ஆசிரிய சங்க பிரதிநிதிகள், ஆசிரியர்கள் திரளாகக்கலந்து கொண்டனர்.

    இதேபோல் தேசியக் கல்விக்கொள்கை 2020 திரும்பப்பெறவேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தி வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சீர்காழி புதிய பேருந்துநிலையத்தில் மாநில துணைத்தலைவர் நா.அசோக்குமார் தலைமையில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

    • முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை இறுதி கட்ட கலந்தாய்வு வருகிற 18-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
    • மாணவ-மாணவிகள் நேரடியாக கல்லூரியில் சேர அரசு இறுதி வாய்ப்பு அளித்துள்ளது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் ரிஷிவந்தியம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022- 23-ம் கல்வி ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை இறுதி கட்ட கலந்தாய்வு வருகிற 18-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இளம் அறிவியல், புள்ளியியல், கணினி அறிவியல், வணிகவியல், பொருளியல் போன்ற பாடப்பிரிவுகளுக்கு சேர்க்கை நடைபெற உள்ளது.

    12-ம் வகுப்பில் கணிதம் படித்த மாணவர்கள் மட்டுமே கணினி அறிவியல், புள்ளியில் பாட பிரிவிலும், வணிகவியல் படித்தவர்கள் மட்டுமே இளம் வணிகவியல்(பி. காம்.) பாடப்பிரிவிலும், பொருளியல் படித்தவர்கள் மட்டுமே எக்கனாமிக்ஸ் பாடப்பிரிவிலும் சேர முடியும். ஆகையால் இதுவரை பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேர தவறவிட்ட மாணவ-மாணவிகள் நேரடியாக கல்லூரியில் சேர அரசு இறுதி வாய்ப்பு அளித்துள்ளது. இத்தகவலை ரிஷிவந்தியம் அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் ரேவதி தெரிவித்துள்ளார்.

    • கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடந்தது
    • இக்கல்வி ஆண்டில் உயர்கல்வி தொடராத மாணவர்கள் 14 பேர் கண்டறியப்பட்டனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை சார்பில் மாவட்டத்தில் 2021-2022-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக உயர்கல்வியை தொடர முடியாத மாணவர்களுக்கான வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார்.

    இக்கல்வி ஆண்டில் உயர்கல்வி தொடராத மாணவர்கள் 14 பேர் கண்டறியப்பட்டனர். மாணவர்கள் உயர்கல்வியை தொடரும் பொருட்டு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம்,தேசிய சுகாதார பணிகள், உயர்கல்வித்துறை முதலான துறையினர்கள் இணைந்து வழிகாட்டுதல் வழங்கினர்.

    முகாமில் உயர்கல்வி தொடராத 11 மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர். இணையதள பதிவேற்றத்தில் 9 மாணவர்களுடைய விபரம் பதிவேற்றம் செய்யப்பட்டது.

    5 மாணவர்களில் 2 மாணவர்கள் வேறு மாநிலத்திற்கு இடம் பெயர்ந்துள்ளனர். 2 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வை எழுதவில்லை. ஒருவர் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. ஆகையால் 5 மாணவர்களின் விபரம் பதிவேற்றம் செய்யப்படவில்லை. மேலும் புதிதாக 5 மாணவர்கள் முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    முகாமில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சுரேஷ் பாபு, உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பிராங்கிளின் ஜேக்கப், உதவி திட்ட அலுவலர்துரைராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உரிய ஜாதி சான்றிதழ் வழங்கப்படாததால் இவர்களின் பிள்ளைகள் பள்ளி கல்வியை முடித்து உயர்கல்வி பெறமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
    • எதிர்காலத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு அரசிடமிருந்து கிடைக்ககூடிய சலுகைகள் பெற முடியாத நிலை உள்ளது.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா நொச்சியூர் கிராமத்தில் "இந்து மலைக்குறவர்" இனத்தை சேர்ந்த 38 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்களுக்கு உரிய ஜாதி சான்றிதழ் வழங்கப்படாததால் இவர்களின் பிள்ளைகள் பள்ளி கல்வியை முடித்து உயர் கல்வி பெறமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    ஜாதி சான்றிதழ் கேட்டு அதிகாரிகளிடம் முறையிட்டால் நடவடிக்கை எடுக்கவில்லை எனகூறுகின்றனர்.

    கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் கடந்த 11 வருடங்களாக ஜாதி சான்றிதழ் கேட்டு போராடி வருகின்றனர்.

    தங்கள் ஜாதியை தவிர்த்து பொய்யாக பிற ஜாதி பெயரை தங்களின் அடையாளமாக சான்றிதழ் பெற்றால் எதிர்காலத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு அரசிடமிருந்து கிடைக்ககூடிய சலுகைகள் பெற முடியாத நிலை உள்ளது.

    அந்த காலத்தில் படிக்க வாய்ப்பு கிடைக்காததால் தங்களின் முன்னோர்களுக்கு ஜாதி சான்றிதழ் இல்லை.

    ஆனால் தற்போது எங்கள் பிள்ளைகளும் பள்ளிகளுக்கு செல்வதால் சாதி,மத, இருப்பிட சான்றிதழ்கள் தேவை கட்டயாமாக உள்ளது.

    எனவே நொச்சியூர் கிராமத்தில் வசிக்கும் இந்து மலைவாழ் மக்களுக்கு உரிய ஜாதி சான்றிதழை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • உயர்கல்வி கற்பது குறித்து வாரந்தோறும் சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளி ஆசிரியா்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்.
    • மாவட்ட கல்வி அலுவலர் பாலதிரிபுரசுந்தரி, உதவித்திட்ட அலுவலர் சீத்தாலட்சுமி, தலையாசிரியர் கலாநிதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார்.

    அங்குள்ள வகுப்பறை, சமையற்கூடம், தொழிற்பயிற்சி கூடம், ஆய்வகக்கூடம், பணியாளர்கள் அறை, பதிவறை போன்றவற்றை பார்வையிட்டு, மாணவர்களுக்கு தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிட்டு பரிசோதனை செய்தார். பின்னர் மாணவ-மாணவிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

    இந்த ஆய்வின்போது கலெக்டர் மதுசூதன்ரெட்டி கூறியதாவது:-

    பள்ளிப்படிப்பை முடித்து உயர்கல்வி பாடங்களில் சேரும் தருணத்தில் மதிப்பெண் அடிப்படையில் சிறந்த கல்வி நிலையங்களில் படிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது. ஆசிரியர்கள் நடத்தும் பாடங்கள் சரியாக புரியவில்லை என்றால் மீண்டும் அதற்குரிய விளக்கத்தை கேட்டு அறிந்து புரிந்து படிக்க வேண்டும். பாடங்களை மனப்பாடம் செய்வது நீண்ட நாட்களுக்கு பயன்படாது. சிவகங்கை மாவட்டத்தில் மருத்துவப் படிப்பில் சேருவதற்காக நீட் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. தேர்வு காலங்களில் மட்டுமே படிப்பது என்ற எண்ணத்தை தவிர்த்து தினந்தோறும் பாடங்களை படிக்க வேண்டும். மாணவர்கள் படிக்க விரும்பும் பட்டப்படிப்பினை திட்டமிட்டு விடாமுயற்சியுடன் கல்வி கற்கும் பட்சத்தில் வெற்றி எளிதாகும்.

    அரசுப்பள்ளிகளில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் சிறந்த முறையில் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார்கள். அவர்களது திறமையினை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    ஆசிரியர்கள் பிளஸ்-2 மாணவர்களுக்கு ஐ.ஐ.டி., என்.ஐ.டி., மருத்துவம், பொறியியல் மற்றும் பிற கல்லூரிகளில் உள்ள பாடத்திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். ஒரு பாடத்தில் உள்ள உயர்கல்வி என்ன என்பது குறித்தும், சிறந்த கல்வி நிலையங்கள் உள்ள இடங்கள் குறித்தும், மாணவர்கள் அறியும் வகையில் வாரத்திற்கு 20 நிமிடம் முதல் 30 நிமிடங்கள் வரை சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும்.

    ஒவ்வொரு மாணவர்களுக்கும் அவர்களது வீட்டுச்சூழ்நிலை வேறுபடும். ஆகையால் ஆசிரியர்கள் அனைவ ரையும் அர வணைத்து புரியும்படியான பாடத்திட்டங்களை தொகுத்து வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த நிகழ்வில் மாவட்ட கல்வி அலுவலர் பாலதிரிபுரசுந்தரி, உதவித்திட்ட அலுவலர் சீத்தாலட்சுமி, தலையாசிரியர் கலாநிதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தகவல் தொழில்நுட்ப வியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோதங்கராஜ் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
    • இந்நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், விஜயதரணி, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த்மோகன், பத்மநாப புரம் சப்-கலெக்டர் அலர்மேல் மங்கை, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் புகழேந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில்,

    ஜூன்.30-

    கன்னியாகுமரி மாவட்ட பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் தமிழ்நாடு முதல்- அமைச்சரின் நான் முதல்வன் என்னும் திட்டத்தின் கீழ் கல்லூரிக் கனவு என்ற தலைப்பினை மைய கருத்தாக கொண்டு பிளஸ்-2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நாகர்கோவில் பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரி கலையரங்கில் நடந்தது. மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கி னார். நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார்.

    தகவல் தொழில்நுட்ப வியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோதங்கராஜ் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    12-ம் வகுப்பு முடித்து மேற்படிப்பிற்கு செல்ல உள்ள மாணவ, மாணவி யர்களாகிய நீங்கள் உங்களு டைய தனித்திறமையை புரிந்து கொண்டு அதற்கேற்ற கல்வியினை பயின்றும் உங்களது உள்ளத் தில் புகைந்திருக்ககூடிய எண்ணங்களை வெளிப்ப டுத்தி அவற்றில் உங்களுடைய திறமையை வெளிப்படுத்தி உலகளவில் சாதிக்க முன்வர வேண்டும்.

    மாணவ, மாணவியர்களா கிய நீங்கள் உங்கள் பெற்றோர்களுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும் கல்வி பயில ேவண்டுமென்ற எண்ணத்தை மாற்றி, அரசுப்பள்ளிகளில் பயில்கின்ற மாணவ, மாணவியர்கள் உங்களுடைய உள்ள தாழ்வு மனப்பான்மையினை மாற்றி எங்களாலும் நல்ல சூழ்நிலையில் கல்வி பயின்று வாழ்வில் முன்னேற முடியும் என்ற இலட்சிய நோக்கத்து டனும், எளிதாக என்னாலும் கல்வி பயில முடியும் என்ற நம்பிக்கை யுடன் மேற்படிப்பை தொடர வேண்டும்.

    கல்வி என்பது மிக சக்தி வாய்ந்த ஆயுதம். எதிர்காலத் தில் நான் இந்த துறையில் தான் பணியாற்ற வேண்டு மென்ற எண்ணம் மாணவ, மாணவியர்களாகிய அனை வரிடமும் இருப்பது இயல்பு. அந்த எண்ணம் நிறைவேறா விடினும் நீங்கள் அனை வரும் மனம் தளராமல் விடா முயற்சியுடனும், தன் னம்பிக்கையுடனும் உங்கள் வாழ்வினை எதிர்கொண்டு ஏற்றம் பெற வேண்டும்.

    மாணவ, மாணவியர்களா கிய நீங்கள் உங்களுக்காகவும், உங்கள் எதிர்காலத்திற்காக வும் கல்வி பயில முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், விஜயதரணி, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த்மோகன், பத்மநாப புரம் சப்-கலெக்டர் அலர்மேல் மங்கை, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் புகழேந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×