search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரியாதை"

    • காமராஜர் திருஉருவ சிலைக்கு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
    • காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி :

    கர்மவீரர் பெருந்த லைவர் காமராஜர் அவர்களின் 121 - வது பிறந்தநாளை முன்னிட்டு கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் கருங்கலில் உள்ள காமராஜர் திருஉருவ சிலைக்கு தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலை வரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார்.எம்.எல்.ஏ. தலைமை யில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன், கருங்கல் பேரூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பினுலால் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் ஆஸ்கார் பிரடி, ஊராட்சி, பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • சிம்மக்கல் நாடார் உறவின்முறை சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
    • பொதுமக்கள் திரண்டு வருமாறு சிம்மக்கல் நாடார் உறவின்முறை சங்கத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    மதுரை

    கல்விக்கண் திறந்த கர்ம வீரர் காமராஜரின் 121-வது பிறந்த நாள் விழா மதுரை சிம்மக்கல் நாடார் உறவின் முறை சார்பில் வருகிற 15ந் தேதி காமராஜர் பிறந்தநாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. அதன்படி அன்று காலை மதுரை காமராஜர் சாலை விளக்குத்தூணில் உள்ள காமராஜர் சிலைக்கு காலை 10 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

    முன்னதாக சிம்மக்கல் தமிழ் சங்கம் ரோட்டில் இருந்து நாடார் உறவின் முறை நிர்வாகிகள் பெண்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் முளைப்பாரி, பால்குடம் எடுத்து ஊர்வலமாக வருகின்றனர்.

    இந்த நிகழ்ச்சிக்கு சிம்மக்கல் நாடார் உறவின்முறை தலைவர் திலகர், பொருளாளர் வள்ளிராஜன் முன்னிலை வகிக்கின்றனர். துணை செயலாளர் செல்வராஜன், துணை தலைவர்கள் தங்கையா, செல்வ மோகன் மற்றும் ஓம்.சேர்ம பிரபு, ஜோசப் வாசுதேவன், பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஆத்திகுளம் கார்த்திக், ச.ம.க. கிழக்கு மாவட்ட செயலாளர் புறா மோகன், ராஜசேகர்.

    மதன், பாண்டியன், பசுமலை பள்ளி தலைமையாசிரியர் ஜான் கிறிஸ்டோபர், காமராஜ், பாலமேடு கார்த்திக், தாழை கண்ணன் ஆகியோர் வரவேற்கி றார்கள்.

    சிம்மக்கல் நாடார் உறவின்முறை செயலாளர் ஆர்.வி.டி.ஆர்.வினோத் பிரகாஷ் தலைமை தாங்குகிறார்.

    பெனிட் கரன், பி.டி.ஆர்.குழும சேர்மன் தானியல் தங்கராஜ், அதிமுக மாவட்ட துணை செயலாளர் ஜெ.ராஜா, அப்பாசுவாமி, ராணி, வஞ்சிகோ, டாக்டர் அருண் மார்டின், அகஸ்டின், பாலமுருகன், பால்பாண்டி, விஞ்ஞானி சிவசுப்பி ரமணியம், செல்வராஜ், ராஜவேல், பெரியசாமி, கந்தசாமி, மணிகண்டன், வையாபுரி, மாயாண்டி, வெற்றி ராஜன் ஆகியோர் நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார்கள்.

    காமராஜர் சிலைக்கு பால், பன்னீர் அபிஷேகத்தை முன்னாள் நாடார் மகாஜன சங்க தலைவர் முத்துச்சாமி, நாடார் முன்னேற்ற சங்க செயலாளர் பெரிஷ் மகேந்திரவேல், தெட்சண மாற நாடார் சங்க செயலாளர் ராஜகுமார் ஆகியோர் செய்கிறார்கள். துணை செயலாளர் மாரிக்கனி நன்றி கூறுகிறார். இதில் சங்க செயற்குழு உறுப்பினர்கள் அசோக் குமார், மனோகர பாண்டி யன், சண்முகக்கனி, காமாட்சி பாண்டியன், நாகராஜன், ஜெயக்குமார், பாண்டி, அண்ணாதுரை, பிரான்சிஸ், தனபாண்டி, ரமேஷ், பாஸ்கர், மீனாட்சி சுந்தரம், திருச்செந்தில், சபரி செல்வம், பாலகிருஷ்ணன், பாஸ்கர் உள்பட ஆயிரக் கணக்கானோர் கலந்து கொள்கின்றனர்.

    காமராஜர் பிறந்த நாள் விழாவுக்கு நாடார் உறவின் முறை நிர்வாகிகள், பொதுமக்கள் திரண்டு வருமாறு சிம்மக்கல் நாடார் உறவின்முறை சங்கத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் குருபூஜை நடந்தது.
    • அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப் பட்டது.

    மதுரை

    மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத் துக்கோன் குருபூஜையை முன்னிட்டு அவரது திருவுரு–வப்படத்திற்கு அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப் பட்டது. இந்த நிகழ்ச்சியில் சோழ–வந்தான் சட்டமன்ற உறுப்பி–னர்கள் வெங்கடேசன், அவைத் தலைவர் பாலசுப்பி–ரமணியம், பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், அழகுபாண்டி, பகுதி செய–லாளர்கள் சசிகுமார், ராம–மூர்த்தி, செயற்குழு பூமிநா–தன், மேற்கு ஒன்றிய சேர்மன் வீரராகவன்,

    பேரூர் தலைவர் ரேணுகா ஈஸ்வரி, கவுன்சி லர்கள் ரோகினி பொம்மை தேவன், செல்வகணபதி, பாபு, இளைஞரணி அழகு பாண்டி, வைகை மருது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தற்போது 10 வயதை எட்டியதால் பணி ஓய்வு வழங்கப்பட்டது.
    • ஜெனியை இடுக்கி மோப்பநாய் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சாபு தனது வீட்டுக்கு அழைத்து செல்ல கோரிக்கை விடுத்தார்.

    திருச்சூர் கேரள போலீஸ் அகாடமியில் சிறப்பு பயிற்சி பெற்ற ஜெனி கடந்த 2015-ம் ஆண்டு முதல் இடுக்கி மோப்பநாய் படையில் பணியாற்றியது.

    கடந்த 8 ஆண்டுகளாக பல்வேறு வழக்குகளில் துப்புதுலங்கவும், குற்றவாளிகளை பிடிக்கவும் முக்கிய பங்கு வகித்தது. தற்போது 10 வயதை எட்டியதால் பணி ஓய்வு வழங்கப்பட்டது.

    அதன்படி பணி ஓய்வு பெற்ற நாய் ஜெனிக்கு போலீசார் போல் மாலை அணிவித்து மரியாதை செய்து அனுப்பி வைத்தனர். இடுக்கி மோப்பநாய் படை பிரிவில் நடந்த நிகழ்ச்சியில் ஜெனி மோப்பநாய் சீருடையில் வந்தது. அதனை இடுக்கி மாவட்ட எஸ்.பி. குரியகோஸ் மாலையிட்டு வரவேற்றார். அதன்பிறகு போலீஸ் நடைமுறைப்படி மரியாதை செலுத்தப்பட்டது. உயர் போலீஸ் அதிகாரிகள் இந்த விழாவில் பங்கேற்றனர்.

    வழக்கமாக பணி ஓய்வு பெறும் மோப்ப நாய்கள் திருச்சூர் போலீஸ் அகாடமி ஓய்வு முகாமிற்கு அனுப்பப்படும் ஆனால் ஜெனியை இடுக்கி மோப்பநாய் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சாபு தனது வீட்டுக்கு அழைத்து செல்ல கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்று எஸ்.பி. அவரிடம் ஜெனியை ஒப்படைத்தார். பல ஆண்டுகளாக பழகிய சாபுவுடன் ஜெனி உற்சாகமாக சென்றது.

    • ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளி மாணவர்கள் மாமன்னர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்
    • புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்துக்கு அவர்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ஒன்பதாவது மன்னரான மாமன்னர் ராஜகோபால தொண்டைமான் 1922-ம் ஆண்டு ஜூன் மாதம் 23-ம் நாள் புதுக்கோட்டையில் பிறந்தார். அவரது நூற்றியோராவது பிறந்தநாள் விழா புதுக்கோட்டை மக்களால் சிறப்பாக கொண்டாடப் படுகிறது. மாமன்னர் இராஜகோபல தொண்டைமான் ஆட்சிகாலத்தில் புதுக்கோட்டை சமஸ்தான மக்கள் வளமுடன் நலமுடன் வாழ்ந்தனர். இந்திய அளவில் சமஸ்தானத்துக்கென்று தனியாக அம்மன்காசு என்ற நாணயத்தை வெளியிட்ட பெருமை தொண்டைமான் மன்னர்பரம்பரையைச் சேரும்.இந்திய அரசாங்கம் சமஸ்தானங்களை இணைக்கவேண்டும் என்று அறிவித்தவுடன் முதன்முதலில் தமது சமஸ்தானத்தை இந்திய அரசாங்கத்துடன் இணைத்து வரலாற்றில் இடம்பிடித்த மன்னர் ராஜா இரா ஜகோபாலதொண்டைமான் ஆவார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்துக்கு அவர்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை சமஸ்தான மன்னரின் பெருமைகளை விளக்கி புதுக்கோட்டை நம் புகழ்க்கோட்டை எனும்பாடல் எழுதியதன் மூலம் உலகத்தமிழர்களால் பாராட்டப்பட்ட கவிஞர், பள்ளியின் முதல்வர் தமிழ்ச்செம்மல் தங்கம்மூர்த்தி வழிகாட்டுதலின் படி ஸ்ரீ வெங்கடே ஸ்வராமெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் ராஜாராஜகோபாலதொண்டைமானின் நூற்றி்யோராவது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடும் வகையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாமன்னர் ராஜாராஜகோபாலதொண்டைமான் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும் மாணவ மாணவிகள் மன்னர் அரண்மனையை சுற்றிப்பார்த்தனர். நிகழ்வில் பள்ளியின் துணை முதல்வர் குமாரவேல், மேலாளர்ராஜா, ஒருங்கிணைப்பாளர் அபிராமசுந்தரி, ஆசிரியர்கள் துர்காதேவி, சின்னையா, ரவிக்குமார், பாலமுருகன், காசாவயல் கண்ணன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கோவில் திருவிழாவில் தனிப்பட்ட நபர்களுக்கு முதல் மரியாதை வழங்கக்கூடாது.
    • ஐகோர்ட்டு தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளது.

    மதுரை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா மலைக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ஜெயந்தி மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா மலைக்கோட்டை கிராமத் தில் பல்வேறு சமூகத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சாந்தி வீரன் சாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆனி மாதம் 8 நாட்கள் திருவிழா கொண்டாடுவது வழக்கம்.

    இந்த கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது. கோவிலுக்கு தக்கார் நியமிக்கப் பட்டுள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு இந்து அறநிலையத்துறை கோவில்களில் யாருக்கும் முதல் மரியாதை வழங்க கூடாது என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    அதனை எதிர்த்து கடந்த ஆண்டு சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா மலக்கோட்டை கிராமத்திலுள்ள சசி பாண்டிதுரை, பாலசுந்தரம், ஜெயபாலன் மற்றும் நவநீதன் ஆகியோர் நீதிமன்றத்தில் தலைப்பாகை அணியவும், குடை பிடிக்கவும், முதல் மரியாதை கோரியும் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் இந்த வருடம் திருவிழாவில் இவர்களால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் ஆனி மாத திருவிழா காலங்களில் இக்கிராமத்தில் வசிக்கும் பழங்குடியினர் மற்றும் அட்டவணைப் படுத்தப்பட்ட சமூகத்தினர் ஆகியோர் கோவில் உள்ளே அனுமதி வழங்கப்படுவது இல்லை. எனவே சிவகங்கை சாந்தி வீரன் சாமி கோவில் ஆனி மாத திருவிழாவில் யாருக்கு தலைப்பாகை அணியவும், குடை பிடிக்கவும், முதல் மரியாதை வழங்கவும் கூடாது என வும், அட்டவணைப்படுத்தப் பட்ட சமூகத்தினர் மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்களை கோவிலுக்குள் அனுமதிக்க வும், திருவிழாவில் கலந்து கொள்ளவும் அனுமதி வழங்க வேண்டும.

    இவ்வாறு தனது மனுவில் கூறியிருந்தார்.

    அந்த மனு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்கா பூர்வாலா, மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதி சுப்பிரமணியன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள், தனிப்பட்ட நபர்களுக்கு கோவில் திருவிழாவில் முதல் மரியாதை வழங்கக் கூடாது, அனைத்து சமூகத்தை சேர்ந்த மக்களும் கோவில் திருவிழாவிற்கு சென்று வழிபடுவதையும் இந்து அறநிலையத்துறை உறுதி செய்ய வேண்டும். இதனை சாந்தி வீரன் சாமி கோயில் தக்கார் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

    • மேலூர் அருகே கக்கன் சிலைக்கு ஓ.பி.எஸ். அணியினர் மரியாதை செலுத்தினர்.
    • நிர்வாகிகள் முகமது ஷெரிப், தமிழ்ச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தும்பைபட்டியில் கக்கனின் 115-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆணைக்கிணங்க மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன் வழிகாட்டுதலின்படி கொட்டாம்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் ஜீவ சன்மார்க்கம், மதுரை புறநகர் வடக்கு மாவட்ட பேரவை செயலாளர் அட்டப்பட்டி பாலமுருகன், மேலூர் நகர் செயலாளர் தங்கசாமி ஆகியோர் கக்கன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மேலூர் தொகுதி இணைச் செயலாளர் சின்னக்கருப்பன் நிர்வாகிகள் முகமது ஷெரிப், தமிழ்ச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மேலூர் அருகே கக்கன் சிலைக்கு அ.தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர்.
    • அமைப்புச் செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமையில் ஊர்வலமாக சென்றனர்.

    மேலூர்

    மேலூர் அருகே உள்ள தும்பைபட்டியில் கக்கன் மணிமண்டபத்தில் 115-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைப்புச் செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமையில் ஊர்வலமாக சென்று அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இந்நிகழ்ச்சியில் மேலூர் தொகுதி எம்.எல்.ஏ. பெரிய புள்ளான் என்ற செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், கொட்டாம்பட்டி முன்னாள் ஒன்றிய தலைவர் வெற்றிச் செழியன், மேலூர் ஒன்றிய தலைவர் பொன்னுச்சாமி, மேலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் பொன் ராஜேந்திரன்.

    மாவட்ட பொருளாளர் அம்பலம், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், மேலூர் நகர் துணைச்செயலாளர் சரவணகுமார், மேலூர் நகர் அம்மா பேரவை செயலாளர் சாகுல் ஹமீது, பூதமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி சின்னகருப்பன், தலைமை பேச்சாளர் மலைச்சாமி, கொட்டாம்பட்டி தெற்கு ஒன்றிய துணைச்செயலாளர் அட்டப்பட்டி முத்தலிபு.

    தும்பைபட்டி ஊராட்சி மன்ற தலைவர் அயூப்கான், துணை தலைவர் புனிதா மகாதேவன், திருவாதவூர் ஊராட்சி மன்ற தலைவர் இளவரசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கிடாரிப்பட்டி சுரேஷ் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • குத்தாலத்திலிருந்து பாத யாத்திரையாக கஞ்சனூர் சுக்கிரன் கோவிலுக்கு வருகை தந்தார்.
    • பூரண கும்பமரியாதை கொடுத்தும், மாலைகள், பொன்னாடைகள் அணிவித்தும் வரவேற்பு அளித்தனர்.

    கும்பகோணம்:

    தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் மாசிலா மணி தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் ஆன்மீக தலங்க ளுக்கு பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார்.

    அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு குத்தாலத்திலிருந்து பாதயாத்திரையாக கஞ்சனூர் சுக்கிரன் கோவிலுக்கு வருகை தந்தார்.

    அவருடன் அலங்கரிக்கப்பட்ட குதிரைகள், ஒட்டகங்கள் முன்னே செல்ல மங்கள வாத்தியங்கள், வேத மந்திரங்கள் ஒலிக்க தருமபுரம், சூரியனார் கோவில் ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனங்களின் கட்டளை தம்பிரான்கள், வேத, சிவாகம மற்றும் திருமுறை பாடசாலை மாணவர்கள், பக்தர்கள் வருகை தந்தனர்

    குருமகா சன்னிதானத்திற்கு கஞ்சனூர், கோட்டூர், துகிலி, மணலூர் ஆகிய 4 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்தும், பூரணகும்ப மரியாதை கொடுத்தும், மாலைகள், பொன்னாடைகள் அணிவித்தும் வரவேற்பு அளித்தனர்.

    அங்கிருந்து கோவிலுக்கு நடந்து சென்ற அவருக்கு மதுரை ஆதீனம் சார்பிலும், கோவில் நிர்வாகம் சார்பிலும் வரவேற்பு கொடுத்தனர்.

    இதையடுத்து கஞ்சனூரில் உள்ள மதுரை ஆதீனம் கிளை மடத்தில் தருமை ஆதீனம் சிவஞான கொலு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

    இதையடுத்து நேற்று காலை கோவில் தர்பார் மண்டபத்தில் சொக்கநாதர் வழிபாடு செய்த பின்னர் கற்பக விநாயகர், கற்பகாம்பாள், அக்னீஸ்வரர், சுக்கிரன் சுவாமி சன்னதிகளில்  தரிசனம் செய்தார்.

    இதை தொடர்ந்து நேற்று மாலை 5 மணிக்கு கஞ்சனூரில் இருந்து பாதயாத்திரை தொடங்கி சூரியனார் கோவில் ஆதீனம் சென்றார். அங்கு கிராம மக்கள் சார்பிலும், ஆதீனம் சார்பிலும் வரவேற்பு அளித்தனர்.

    • முதியவரை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
    • போலீசார் முதியவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மதுக்கூர்:

    மதுக்கூர் அருகே உள்ள கன்னியாக்குறிச்சியில் ஆதவற்ற நிலையில் மாரிமுத்து (வயது 70) என்பவர் சுற்றி திரிந்தார். இந்நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்ப ட்டது, இதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவகல்லூரியில்சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரிமுத்து இறந்தார்.

    இவருடைய உடலை யாரும் வாங்க முன்வரவில்லை. இதனால் அவருடைய உடலை உரிய இறுதி மரியாதைகளுடன் அடக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது

    இதை அறிந்த போலீசார் முதியவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து முதியவரின் உடலை மனிதநேயத்துடன் அடக்கம் செய்ய முடிவு செய்தனர்.

    மதுக்கூர் போலீசார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஜய்ஆனந்த், தலைமை காவலர் சுரேஷ் மற்றும் திருவாரூர் ஈர உள்ளம் அமைப்பின் சார்பில் அதன் நிறுவனரும் திருவாரூர் விஜயபுரம் வர்த்தகர் சங்க துணைத் தலைவருமாகிய அண்ணாதுரை, ராஜேஷ் ஆகியோர் முதியோர் உடலை நல்லடக்கம் செய்தனர்.

    • தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்பு
    • இன்று 100-வது பிறந்த நாள்

    நாகர்கோவில் :

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமையில் ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தின் முன்புள்ள கருணாநிதியின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கருணாநிதி படத்திற்கு மலர் தூவி நிர்வாகிகள் மரியாதை செலுத்தினார்கள்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் கேட்சன், துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் தில்லை செல்வம், ஒன்றிய செயலாளர்கள் சுரேந்திர குமார், பிராங்கிளின், லிவிங்ஸ்டன், மாவட்ட துணை செயலாளர் பூதலிங்கம், மாநகராட்சி மண்டல தலைவர் ஜவகர், தொழிலாளர் அணி அமைப்பாளர் இ.என்.சங்கர் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    இதைத்தொடர்ந்து தி.மு.க. அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஒடிசாவில் ெரயில் விபத்தில் பலியான ெரயில் பயணிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. மேயர் மகேஷ் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

    கருணாநிதி பிறந்தநாளையொட்டி நாகர்கோவில் நகர பகுதியில் உள்ள 52 வார்டுகளிலும் கருணாநிதி படம் அலங்கரித்து வைக்கப்பட்டு நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். அகஸ்தீஸ்வரம், தோவாளை, ராஜாக்கமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளிலும் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் கருணாநிதி படம் அலங்கரித்து வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

    • குமரி தந்தை மார்சல் நேசமணியின் 55-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
    • ஆவின் என்பது பொதுத்துறை நிறுவனம் ஆகும்.

    கன்னியாகுமரி:

    குமரி தந்தை மார்சல் நேசமணியின் நினைவு தினம் இன்று அனு சரிக்கப்பட்டது. இதையடுத்து நாகர்கோவில் வேப்பமூடு மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    கலெக்டர் ஸ்ரீதர், பிரின்ஸ் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், மாநகராட்சி துணை மேயர் மேரிபிரின்சி லதா, நேச மணியின் பேரன் ரஞ்சித் அப்பல்லோஸ், தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து அமைச்சர் மனோதங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குமரி தந்தை மார்சல் நேசமணியின் 55-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைய வரலாற்று சிறப்புமிக்க போராட்டம் நடத்தி அதில் வெற்றி பெற்றவர் மார்சல் நேசமணி. அவருடன் பயணித்த பல்வேறு தலைவர்கள், துப்பாக்கி சூட்டில் பலியான தியாகங்கள், தியாக செம்மல்களை வணங்குகிறேன்.

    தமிழகத்தில் பால் உற்பத்தியை பெருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டந்தோறும் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஆவின் என்பது பொதுத்துறை நிறுவனம் ஆகும்.

    இந்த நிறுவனத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியை பெருக்குவதுடன் பொதுமக்களுக்கு தரமான பால் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தமிழக முதல்- அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் ஆவின் விலை ரூ.30 குறைத்ததுடன் உற்பத்தியாளர்களுக்கு ரூ.3 அதிகமாக வழங்கினார். தற்பொழுது ஆவினில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    தமிழகம் முழுவதும் தட்டுப்பாடு இன்றி பால் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். ஆவின் நிர்வாகம் தற்போது நஷ்டத்தில் இயங்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிரதமர் மோடி குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு இருந்தார். அது குறித்து நிருபர்கள் கேட்டபோது கருத்து கூறுவது அவரவர் அடிப்படை உரிமை என்று கூறினார்.

    ×