search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "8 பேர் மீது வழக்கு"

    • அனில்குமார் (27). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகன் (50) என்பவருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
    • 8 பேர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள ஆரூர்பட்டி கிராமம் கணக்குப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அனில்குமார் (27). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகன் (50) என்பவருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த தகராறு தொடர்பாக இரு தரப்பிலும் கொடுத்த புகாரின் பேரில் முருகன் (50), சிவன் (26), ரஞ்சித்குமார் (25), அனில்குமார் (27), சிவா (26), அன்பு (30), அரவிந்தன் (25), ராஜமுத்து (55) உட்பட 8 பேர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • 46 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பதாக ஈரோடு டவுண், கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அரசு அனுமதியின்றி மது விற்று கொண்டிருந்த பெருந்துறை மேட்டுப்புதுரை சேர்ந்த சுரேஷ் (வயது 38), நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த பைரவன் (49), மதுரை மாவட்டம் ஆண்டி ப்பட்டி சேர்ந்த சுரேஷ்பவன் (42),

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் பகுதியை சேர்ந்த ஹரி கிரு ஷ்ணன் (32), கோவை மாவ ட்டம் ராஜீவ் நகரை சேர்ந்த ஸ்ரீதர் (45), சென்னிமலை ரோடு பகுதியை சேர்ந்த குப்புசாமி (48), சூலூர் பகுதியை சேர்ந்த பரமசிவன் ஆகியோரை போலீசார் பிடித்தனர்.

    பின்னர் அவர்களிடம் இருந்த 46 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செல்வம் (வயது 60). இவருக்கும் விஷ்வநாதன் (45) ஆகியோருக்கும் இடையே நிலத்தகராறு தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.
    • குடிநீர் பைப் லைன் போடும் போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகி லுள்ள மல்லியக்குட்டை கிராமம், மன்னாதன் காட்டுவளவு பகுதியை சேர்ந்த செல்வம் (வயது 60). இவருக்கும் விஷ்வநாதன் (45) ஆகியோருக்கும் இடையே நிலத்தகராறு தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த 8-ந்தேதி மல்லிகுட்டை ஊராட்சி சார்பில் குடிநீர் பைப் லைன் போடும் போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கை கலப்பாக மாறியது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    இதுபற்றி இரு தரப்பும் கொடுத்த புகாரின் பேரில் விஸ்வநாதன். சந்தோஷ். பிரபாகரன், செல்வம், சரவணன், குமார், மூர்த்தி உள்ளிட்ட 8 பேர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கருமாரியம்மன் கோவில் பகுதியில் கிருஷ்ணகிரி சிப்காட் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • அவர்கள் விட்டு சென்ற 4 இரு சக்கர வாகனங்கள், 7 செல்போன்கள், ரூ.8,010 பணம் ஆகிய வற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடி அருகே உள்ள கருமாரியம்மன் கோவில் பகுதியில் கிருஷ்ணகிரி சிப்காட் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அப்பகுதியில் சூதாடிய முனி வெங்கடப்பா (52), கோவிந்தராஜ் (52), சூரிய நாராயணன் (53), சீதைய்யன் (54), அரியப்பா (40), ஷங்கர் (36), பாபு (42), விஜய் (53)ஆகிய 8 பேர் போலீசை கண்டதும் தப்பி ஓடினர்.

    அப்போது அவர்கள் விட்டு சென்ற 4 இரு சக்கர வாகனங்கள், 7 செல்போன்கள், ரூ.8,010 பணம் ஆகிய வற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து கிருஷ்ணகிரி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து 8 பேரை தேடி வருகின்றனர்.

    • மோகன்ராஜ் திடீரென்று குடிப்போதையில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார்.
    • நந்தினியை மானபங்கம் படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் அருேக தூக்கணாம்பாக்கம் பகுதி சின்ன குட்டியாங்குப்பம் ஊரைச் சேர்ந்தவர் ரஞ்சித். இவரது மனைவி நந்தினி (வயது 27). சம்பவத்தன்று இவரது உறவினர் மோகன்ராஜ் என்பவர் திடீரென்று குடிப்போதையில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார். வீட்டிலிருந்த டிவி, கதவு உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நந்தினி தரப்பினருக்கும், மோகன்ராஜ் தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் நந்தினியை மானபங்கம் படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் நந்தினி மற்றும் விஜயகுமார் ஆகியோர் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்‌. 

    இது குறித்து தூக்கணாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் நந்தினி கொடுத்த புகாரின் பேரில் மோகன்ராஜ், கலைவாணி, விஜயகுமார், கலையூரை சேர்ந்த சிவரஞ்சனி ஆகியோர் மீதும், விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் மகேஸ்வரி, நந்தினி, காரைக்காட்டை சேர்ந்த ரமணி, ரம்யா உட்பட 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் அருகே டி. புதுப்பாளையம் சேர்ந்தவர் நேதாஜி. இவரது தம்பி அபிஷேக்.
    • நேதாஜி, கோபிநாத் ஆகிய 2 பேரும் அதே பகுதியில் பெட்ரோல் போடுவதற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே டி. புதுப்பாளையம் சேர்ந்தவர் நேதாஜி. இவரது தம்பி அபிஷேக். அதே பகுதியை சேர்ந்த நண்பர் கோபிநாத் தம்பி கோகுல் என்பவரும் பஸ்சில் சென்று புதுப்பாளை யம் பகுதியில் இறங்கினர். அப்போது பஸ்சில் வந்த 2 பேருக்கும், அதே பகுதி யை சேர்ந்த தமிழ்ச்செல்வன், அருள் ஆகியோருக்கும் திடீரென்று வாய் தகராறு ஏற்பட்டு தாக்கி கொண்டனர். உடனே அந்த வழியாக வந்தவர்கள் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

    சம்பவத்தன்று நேதாஜி, கோபிநாத் ஆகிய 2 பேரும் அதே பகுதியில் பெட்ரோல் போடுவதற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட4 பேர் திடீ ரென்று 2 பேரை வழி மறித்து தகராறில் ஈடுபட்டு கத்தியால் தாக்கி அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர். அதோடு வீட்டின் எதிரில் தமிழ்ச்செல்வன் மற்றும் அருளை, நேதாஜி தரப்பினர் தாக்கி நாற்காலியை உடைத்த தாக கூறப்படுகிறது. இந்த கோஷ்டி தகராறில் நேதாஜி, கோபிநாதன், தமிழ்ச்செல்வன், அருள் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.

    இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் நேதாஜி கொடுத்த புகாரின் பேரில் தமிழ்ச்செல்வன் மற்றும் 4 பேரும், தமிழ்ச்செல்வன் கொடுத்த புகாரின் பேரில் நேதாஜி உள்ளிட்ட 4 பேர் என 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • தி.மு.க. ஒன்றிய செயலரை வீடு புகுந்து தாக்கியதாக பேரூராட்சி துணைத் தலைவர், பெண் காவலர் உள்ளிட்டோரை கும்பல் தாக்குதல் நடத்தியது.
    • இது மோதல் தொடர்பாக 8 பேர் மீது வீரபாண்டி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்டம், வீரபாண்டியில் உள்கட்சி தேர்தல் பிரச்சினையில் இரவு தி.மு.க. ஒன்றிய செயலரை வீடு புகுந்து தாக்கியதாக பேரூராட்சி துணைத் தலைவர், பெண் காவலர் உள்ளிட்ட 8 பேர் மீது போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வீரபாண்டியைச் சேர்ந்தவர் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலர் ரத்தின சபாபதி, இவர் வீரபாண்டி யில் உள்ள தனது வீட்டில் நேற்று முன்தினம் இரவு தி.மு.க.வைச் சேர்ந்த சிலருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது உள்கட்சி தேர்தலில் வீரபாண்டி பேரூர் நிர்வாகிகள் குறித்து வெளியான அறிவிப்பினால் அதிருப்தி அடைந்திருந்த அதே கட்சியைச் சேர்ந்த சிலர் ரத்தினசபாபதி வீடு புகுந்து அவரையும், அவரு டன் இருந்த உப்பார்பட்டி யைச் சேர்ந்த முத்து க்குமாரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் காயமடைந்த ரத்தினசபாபதி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் அனுமதிக்க ப்பட்டார். இச்சம்பவம் குறித்து ரத்தினசபாபதி அளித்த புகாரின் பேரில், வீரபாண்டியை சேர்ந்த மகேந்திரன், ராஜேஷ், தாமரைக்கண்ணன், பிரபாகரன், வினோத், தீனா, வீரபாண்டி பேரூ ராட்சி துணைத்தலைவர் சாந்தகுமார், பெண் காவலர் கவிதா ஆகிய 8 பேர் மீது வீரபாண்டி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.

    ×