என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் கடத்தல்"

    • கடந்த 26-ந் தேதி அனுராதா மற்றும் கடை ஊழியர்கள் பிரபு, ரவிச்சந்திரன் ஆகியோர் கர்நாடகாவில் இருந்து கிருஷ்ணகிரிக்கு காரில் வந்து கொண்டு இருந்தனர்.
    • ரூ.5 கோடி கேட்டு பெண் உள்பட 3 பேரையும் காரில் கடத்திய 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி இந்திரா நகரை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி அனுராதா (வயது 36). இவர் கர்நாடக மாநிலம் ஒசகோட்டாவில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த 26-ந் தேதி அனுராதா மற்றும் கடை ஊழியர்கள் பிரபு, ரவிச்சந்திரன் ஆகியோர் கர்நாடகாவில் இருந்து கிருஷ்ணகிரிக்கு காரில் வந்து கொண்டு இருந்தனர்.

    அவர்களை பின்தொடர்ந்து மற்றொரு கார் வந்து கொண்டு இருந்தது. அந்த கார் ஓசூர் அருகே ஏ.செட்டிப்பள்ளி-சூளகிரி சாலையில் ஜாகீர்பாளையம் பகுதியில் வந்தது. அப்போது பின்னால் காரில் வந்த நபர்கள் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அனுராதா சென்ற காரை முந்தி சென்று வழிமறித்து நிறுத்தினர்.

    பின்னர் காரில் இருந்து இறங்கிய 7 பேர் அனுராதா, பிரபு, ரவிச்சந்திரன் ஆகிய 3 பேரையும் வலுகட்டாயமாக இழுத்து தாங்கள் வந்த காரில் கடத்தி சென்றனர். அங்கிருந்து சேலம் சென்ற அந்த நபர்கள் ரூ.5 கோடி கொடுத்தால் ஊழியர்கள் 2 பேரையும் விட்டு விடுவதாக அனுராதாவிடம் கூறினர். அவ்வளவு தொகை என்னால் கொடுக்க முடியாது என அனுராதா கூறி உள்ளார்.

    பின்னர் ரூ.1 லட்சம் தருவதாக அவர் கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் அனுராதா தன்னிடம் இருந்த ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி ரூ.1 லட்சத்தை எடுத்து அந்த நபர்களிடம் கொடுத்துள்ளார். பின்னர் அனுராதா, பிரபு, ரவிச்சந்திரன் ஆகிய 3 பேரையும் அந்த நபர்கள் சேலம் மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி அருகில் இறக்கி விட்டு சென்று விட்டனர்.

    பின்னர் அங்கிருந்து சூளகிரி சென்ற அனுராதா நடந்த சம்பவம் குறித்து சூளகிரி போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரூ.5 கோடி கேட்டு பெண் உள்பட 3 பேரையும் காரில் கடத்திய 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    • முன்பணம் வாங்கிக்கொண்டு வேலை செய்த பெண், உடல்நிலை சரியில்லாததால் வேலைக்கு செல்லவில்லையாம்.
    • உடனே வேலைக்கு வராவிட்டால் வாங்கிய முன்பணத்தை தரவேண்டும் என்று உரிமையாளர்கள் கூறி உள்ளனர்.

    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் பெரியாம்பட்டி அருகே, கடனை திருப்பி தராததால், லட்சுமி என்ற பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கிருஷ்ணகிரியை சேர்ந்த நபர்கள் கடத்தி சென்றதாக லட்சுமியின் மகன் போலீசில் புகார் செய்துள்ளார்.

    ரமணன்கொட்டாயைச் சேர்ந்த லட்சுமி (வயது 50), கிருஷ்ணகிரி மாவட்டம் திருவண்ணாமலை சாலையில் உள்ள ஒரு செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வந்தார். முன்பணம் வாங்கிக்கொண்டு அங்கேயே தங்கி வேலை செய்துவந்தார். கடந்த ஆண்டு ரூ.2.80 லட்சம் பணம் வாங்கி வேலை செய்து வந்த இவர், பொங்கல் அன்று ஊருக்கு வந்துள்ளார். பின்னர் உடல்நிலை சரியில்லாததால் அவர் பணிக்கு திரும்பவில்லையாம்.

    இந்நிலையில், செங்கல் சூளை நடத்தி வரும் நபர்கள் இன்று லட்சுமியின் வீட்டுக்கு வந்து அவரை உடனடியாக வேலைக்கு வரவேண்டும், இல்லாவிட்டால் வாங்கிய முன்பணத்தை தரவேண்டும் என்று கூறி உள்ளனர். ஆனால் உடனடியாக வர இயலாது, உடல்நிலை சரியானபின்னர் வருவதாக லட்சுமி கூறி உள்ளார். ஆனாலும், அதை கேட்காத சூளை நிர்வாகிகள், லட்சுமியை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கொண்டு சென்றனர். சினிமாவில் வரும் காட்சி போன்று பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது

    இது தொடர்பாக அவரது மகன் அளித்த புகாரில் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தப்பட்ட பெண்ணை மீட்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

    • கடந்த மாதம் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்த லட்சுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
    • செங்கல் சூளை உரிமையாளர் ரூ.5 லட்சம் தர வேண்டும் என்று மிரட்டி தனது தாயை கடத்தி சென்றிருப்பதாக தெரிவித்துள்ளார்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், பெரியாம்பட்டி அருகே ராமண்ணன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி (வயது50). இவரது மகன் முத்து. இவர்கள் 2 பேரும் கிருஷ்ணகிரி அருகே ஒரு செங்கல் சூளை உரிமையாளரிடம் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு ரூ.2 லட்சத்து 68 ஆயிரம் பெற்றதாக கூறப்படுகிறது.

    பின்னர் தாயும், மகனும் செங்கல் சூளையில் வேலை செய்து அந்த கடனை அடைத்து வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் கடந்த மாதம் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்த லட்சுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    இதையடுத்து உடல் நிலை சீரானதும் மீண்டும் வேலைக்கு வருவதாக தொலைபேசி மூலம் கூறியுள்ளனர்.

    அதை ஏற்றுக்கொள்ளாத செங்கல் சூளை உரிமையாளர் நேற்று மாலை அடியாட்களுடன் பெரியாம்பட்டிக்கு வந்து உடனடியாக வேலைக்கு வர வேண்டும் என்று மிரட்டி காரில் லட்சுமியை வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்தி சென்றுள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய மகன் முத்து நேற்று இரவு தருமபுரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார்.

    அதில் செங்கல் சூளை உரிமையாளர் ரூ.5 லட்சம் தர வேண்டும் என்று மிரட்டி தனது தாயை கடத்தி சென்றிருப்பதாக தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து மாவட்ட எஸ்.பி. உத்தரவின் காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் தலைமையில் தனிப்படையினர் விரைந்து சென்றனர்.

    அப்போது புகார் கொடுத்த ஒரு மணி நேரத்தில் காரில் பெண்ணை கடத்தி சென்றவர்களை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். பின்னர் பெண்ணை மீட்டு அவரது மகனிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து பெண்ணை கடத்திய செங்கல் சூளை அதிபர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

    பெண்ணை தாக்கி காரில் தூக்கிபோட்டு சென்ற சம்பவத்தால் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெண்ணை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டனர்.
    • நிலாபாரதி மீட்கப்பட்டு அவரிடம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

    விருதுநகர்

    மதுரை மாவட்டம் பேரையூர் அருகே கீழபட்டியை சேர்ந்தவர் தர்மர். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நிலா பாரதி (22). இவர் கிருஷ்ணன் கோவிலில் உள்ள ஒரு கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் வேலைக்கு சென்ற நிலா பாரதியை குன்னூர் பகுதியை சேர்ந்த முத்துபாண்டி (33) என்பவர் கடத்தி சென்று விட்டார். அவர் நிலாபாரதியை துன்புறுத்தி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி அறிந்த தர்மர் கிருஷ்ணன் கோவில் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முத்துபாண்டியை பிடித்து கைது செய்தனர். நிலாபாரதி மீட்கப்பட்டு அவரிடம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

    • அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிபார்த்தும் கிடைக்காததால் வடமதுரை போலீசில் புகார் அளித்தார்.
    • புதூர் பகுதியை சேர்ந்த வியாபாரி தனது மனைவியை கடத்திச்சென்றிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே பஞ்சம்தா ங்கி காக்காயம்பட்டியை சேர்ந்தவர் செவத்த முத்து(25). கூலித்தொழி லாளி. இவர் தனது உறவி னரான முத்துவிஜயா(19) என்பவரை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் வீட்டில் இருந்த முத்துவிஜயா திடீரென மாயமானார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிபார்த்தும் கிடைக்காததால் வடமதுரை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர். செவத்தமுத்து அளித்தபுகாரில் புதூர் பகுதியை சேர்ந்த வியாபாரி பாண்டி என்பவர் தனது மனைவியை கடத்திச்சென்றிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

    அவரிடம் விசாரிக்க சென்றபோது போலீஸ்நிலையத்திற்கு வருவதாக கூறியுள்ளார். ஆனால் வரவில்லை. எனவே மனைவியை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் எனக்கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார் மனு அனுப்பி உள்ளார்.

    • அம்மு தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக வேலை செய்த வருகிறார்.
    • பஸ் ஊழியர் ஒருவர் ஆசை வார்த்தை கூறி அம்முவை கடத்தியதாக கூறியுள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த ஓறையூர் கிராமத்தை சேர்ந்தவர் மன்னாதன் இவரதுமகள் அம்மு (22) இவர் பண்ருட்டி பஸ் நிலையத்தின் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக வேலை செய்த வருகிறார்.

    இவர்,நேற்று காலை வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடுதிரும்பவில்லை பல இடங்களில்தே டி எங்கும்கிடைக்காதால்.இவரது தந்தை மன்னாதன் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் புகாரில் பண்ருட்டி அடுத்த கனிசபாக்கத்தை சேர்ந்தபஸ் ஊழியர் ஒருவர் ஆசை வார்த்தை கூறி அம்முவை கடத்தியதாக கூறியுள்ளார். புகார் குறித்துபுதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார்வழக்கு பதிவு செய்து காணாமல் போன தனியார் மருத்துவமனை பெண் ஊழியரை வலை வீசி தேடி வருகிறார்.

    • காரில் வீடு திரும்பி சென்றபோது வழியில் பெண்வீட்டாரின் உறவினர்கள் திடீரென்று வண்டியை வழிமறித்து விக்ணேஷை சரமாரியாக தாக்கிவிட்டு மதுஸ்ரீயை கடத்தி சென்றுவிட்டனர்.
    • சினிமாவில் நடப்பதுபோல் காதல் திருமணம் செய்த தம்பதியினரை தாக்கிவிட்டு பெண்ணை தாய் மற்றும் உறவினர்கள் கடத்தி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி மூக்கானஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சிவானந்தம். இவரது மகன் விக்னேஷ் (வயது29). இவர் சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் விக்னேசுக்கும் பாலக்கோடு மண்டுகொட்டாய் பகுதியைச் சேர்ந்த மதுஸ்ரீ (21) என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில் மதுஸ்ரீக்கு அவரது வீட்டில் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். இதன்காரணமாக விக்னேசும், மதுஸ்ரீயும் வீட்டைவிட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர்.

    அவர்கள் இருவரும் பெங்களூருவில் தனியாக வசித்து வந்தனர்.

    இதன்காரணமாக தனது மகள் காணவில்லை என்று அவரது தாய் கலைவாணி (45) பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கலைவாணி போலீசில் புகார் கொடுத்ததை அறிந்த மதுஸ்ரீ தனது காதல் கணவருடன் பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

    அப்போது போலீசார் காதல்ஜோடியின் இருவீட்டாரையும் அழைத்து சமாதானம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் பெண் வீட்டார் இந்த காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது கலைவாணி தன்னுடன் வருமாறு மதுஸ்ரீயை அழைத்தார். ஆனால், அவர் பெற்றோருடன் செல்லாமல் தனது காதல் கணவருடன் காரில் ஏறி வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.

    விக்னேசும், மதுஸ்ரீயும் காரில் வீடு திரும்பி சென்றபோது வழியில் பெண்வீட்டாரின் உறவினர்கள் திடீரென்று வண்டியை வழிமறித்து விக்ணேஷை சரமாரியாக தாக்கிவிட்டு மதுஸ்ரீயை கடத்தி சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து விக்னேஷ் பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் காதல் திருமணம் செய்ததால் மதுஸ்ரீயை கடத்தி சென்றதாக அவரது தாய் கலைவாணி, உறவினர்கள் சீனிவாசன் (48), கோபாலகிருஷ்ணன் (45), கீதா (47) ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சினிமாவில் நடப்பதுபோல் காதல் திருமணம் செய்த தம்பதியினரை தாக்கிவிட்டு பெண்ணை தாய் மற்றும் உறவினர்கள் கடத்தி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • உமா மகேஸ்வரியின் தாய் தனலட்சுமியுடன் பழகிய மாரிமுத்து அதன் பிறகே உமா மகேஸ்வரியுடன் காதல் கொண்டதாக கூறப்படுகிறது.
    • மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திருச்சி:

    புதுக்கோட்டை தெற்கு சந்தைபேட்டையை சேர்ந்தவர் மாரிமுத்து. தூய்மை பணியாளரான இவர் கடந்த 2019-ம் ஆண்டு இறந்தார். இதை தொடர்ந்து அவரது இளைய மகள் உமா மகேஸ்வரிக்கு கருணை அடிப்படையில் மயிலாடுதுறை நகராட்சி அலுவகத்தில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டது.

    இதையடுத்து உமா மகேஸ்வரி தனது தாய் தனலட்சுமியுடன் மயிலாடுதுறை பண்டார தெருவுக்கு குடிபெயர்ந்தார். இந்நிலையில் புதுக்கோட்டை கறம்பக்குடி பல்லவராயன்புரத்தை சேர்ந்த மாரி முத்துவுடன் உமாமகேஸ்வரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. முதலில் உமா மகேஸ்வரியின் தாய் தனலட்சுமியுடன் பழகிய மாரிமுத்து அதன் பிறகே உமா மகேஸ்வரியுடன் காதல் கொண்டதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து இருவரும் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வந்தனர்.

    திருமணத்துக்கு பிறகு மாரிமுத்து உமா மகேஸ்வரியை துன்புறுத்தியுள்ளார். வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்த மாரிமுத்து, மனைவியை கண்காணிப்பதையே வேலையாக கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் உமா மகேஸ்வரி வேலை செய்யும் இடத்துக்கே நேரில் சென்று அவரை பற்றி தவறாக பேசுவதையும் மாரிமுத்து வழக்கமாக வைத்திருந்தார்.

    இதனால் மனம் வேதனையடைந்த உமாமகேஸ்வரி தனது தாய் தனலட்சுமியை போனில் தொடர்பு கொண்டு கணவர் மாரிமுத்துவின் தொல்லைகள் குறித்து கூறி கதறி அழுதார்.

    இதன் காரணமாக உமா மகேஸ்வரியின் உறவினர்கள் மாரிமுத்துவின் வீட்டுக்கு சென்று உமா மகேஸ்வரியை பிரித்து அழைத்து வந்துவிட்டனர். இதன்பின்னர் உமா மகேஸ்வரி தாயுடன் வசித்து வந்தார். இந்நிலையில் உமா மகேஸ்வரி மயிலாடுதுறையில் தனது தாயுடன் கடந்த மாதம் 20-ந் தேதி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் சிலருடன் காரில் வந்த கணவர் மாரிமுத்து, மனைவி உமாமகேஸ்வரியை வலுக்கட்டாயமாக காரில் தூக்கிப்போட்டு க்கொண்டு கடத்தி சென்றுவிட்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் தனலட்சுமி மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் உடனே கண்டுபிடித்து தருமாறும் கூறி இருந்தார். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் உமா மகேஸ்வரியை கண்டு பிடிக்க முடியவில்லை.

    இந்நிலையில் உமா மகேஸ்வரி மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புதிய புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது மகள் உமா மகேஸ்வரி கடத்தப்பட்டு ஒரு மாதமாகியும் போலீசார் இன்னும் கண்டுபிடிக்க வில்லை. எனவே இது பற்றி தீவிர விசாரணை நடத்தி மகளை கண்டுபிடித்து தர வேண்டும் என்று கூறியுள்ளார். அதே நேரத்தில் கணவர் மாரிமுத்து மகளை கொலை செய்திருக்கலாம் என்று சந்தேதிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மாரிமுத்து செல்போனில் பேசி அனுப்பிய மிரட்டல் ஆடியோவையும் தனலட்சுமி போலீஸ் சூப்பிரண்டிடம் அளித்துள்ளார். அதில் 'உன்னை உயிரோடு விடமாட்டேன். எனக்கு துரோகம் செய்த உன் உயிர் ஊஞ்சலாடி க்கொண்டிருக்கிறது' என்று மிரட்டல் விடுத்து பேசி உள்ளார். இது போலீசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    உமா மகேஸ்வரி கடத்தப்பட்டு ஒரு மாதமாகியும் அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியாததால் அவரது நிலை என்ன என்பது மர்மமாகவே உள்ளது. அவரை கணவர் மாரிமுத்து கொலை செய்ருதிக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். மாரிமுத்து இருக்கும் இடம் தெரியவில்லை. இதனால் போலீசார் அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கணவர் மாரிமுத்து சிக்கினால் மட்டுமே உமா மகேஸ்வரியின் நிலை என்ன என்பது தெரிய வரும் என்பதால் அவரை கண்டுபிடிக்கும் பணியில் தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    மாரிமுத்துவின் செல்போன் சிக்னலை வைத்து, அவரை கண்டுபிடிக்கும் பணியில் நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு போலீசார் விரைந்துள்ளனர்.

    • இளம்பெண்ணுக்கும் பிரசாத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
    • காரில் வந்த பிரசாத் காதலியை கடத்த முயன்றார்.

    திருவான்மியூர்:

    முட்டுக்காடு கரிக்காட்டு குப்பம் பகுதியை சேர்ந்தவர் பிரசாத். 25 வயது வாலிபரான இவர் திருவான்மியூரில் செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் பெசண்ட் நகரை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் காதல் இருந்து வந்தது.

    இந்த நிலையில் இளம்பெண்ணுக்கும் பிரசாத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரசாத்தை இளம்பெண் தவிர்த்து வந்துள்ளார். இது பிரசாத்துக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. நேற்று இரவு 9.30 மணி அளவில் பிரசாத்தின் காதலி தனது தாயுடன் திருவான்மியூரில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த பிரசாத் காதலியை கடத்த முயன்றார். இதனை தடுத்த தாயை கத்தியால் வெட்டினார். இதில் காயம் அடைந்த தாய் அலறி துடித்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் திரண்டதால் பயந்து போன பிரசாத் தான் வந்த காரிலேயே தப்பி ஓடி விட்டான். இது தொடர்பாக திருவான்மியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் வீட்டு அருகே பதுங்கி இருந்த பிரசாத்தை போலீசார் கைது செய்தனர்.

    • மாலதியின் தாயார் புதுமண தம்பதிகள் தங்கியிருந்த வீட்டை கண்டுபிடித்து அங்கு சென்றுள்ளார்.
    • கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள தென்னிமலை கிராமத்தை சேர்ந்தவர் சுடலைக்கண்ணு. இவரது மகன் கண்ணன் (வயது 21). இவர் மூன்றடைப்பு அருகே உள்ள தனியார் நூற்பாலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    களக்காட்டை அடுத்த திருக்குறுங்குடி அருகே உள்ள மலையடி புதூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகள் மாலதி (20). இவரும் கண்ணன் வேலை பார்த்த அதே நூற்பாலையில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் இவர்கள் 2 பேருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியது. சில மாதங்களாக 2 பேரும் காதலித்து வந்த நிலையில் 2 பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

    இதற்காக சமீபத்தில் மாலதியின் பெற்றோரிடம் கண்ணன் பெண் கேட்டு சென்றுள்ளார். அப்போது அவரது பெற்றோர் கண்ணனுக்கு தனது மகளை திருமணம் செய்து கொடுக்க மறுத்து விட்டனர்.

    இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு கண்ணனும், மாலதியும் வீட்டை விட்டு வெளியேறி ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள் நெல்லையில் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று மாலதியின் தாயார் புதுமண தம்பதிகள் தங்கியிருந்த வீட்டை கண்டுபிடித்து அங்கு சென்றுள்ளார்.

    அங்கிருந்த மகள் மற்றும் மருமகனிடம் திருமணத்திற்கு அவர் சம்மதம் தெரிவித்தார். மேலும் வீட்டில் அனைவரையும் சம்மதிக்க வைத்து விட்டதாக கூறி சொந்த ஊருக்கு 2 பேரையும் அவர் அழைத்துள்ளார்.

    அதை நம்பிய கண்ணன் தனது மனைவியுடன் புறப்பட்டார். தொடர்ந்து 3 பேரும் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஊருக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பொன்னாக்குடி விலக்கு பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் பஸ் நிறுத்தத்தில் அவர்கள் 3 பேரும் இறங்கி உள்ளனர்.

    அவர்களை பின் தொடர்ந்து காரில் வந்த ஒரு கும்பல் கண்ணனை தாக்கி விட்டு மாலதியை காரில் கடத்தி சென்றது. அப்போது மாலதியின் தாயாரும் அந்த காரில் புறப்பட்டு சென்று விட்டார்.

    உடனடியாக கண்ணன் முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்திற்கு சென்று தனது மனைவியை கடத்தி சென்ற கும்பல் குறித்து புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்னோஸ் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    அதில் மாலதியின் குடும்பத்தினர் அவரை திட்டமிட்டு கடத்தியது தெரியவந்தது. இதற்காக மாலதியை நைசாக பேசி நம்ப வைத்து அவரது தாயாரை வைத்து அழைத்து வந்ததும், பஸ்சை பின் தொடர்ந்து காரில் மாலதியின் தாய்மாமன்கள் வந்து மாலதியை கடத்தி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

    தொடர்ந்து அந்த கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

    • தாலி கட்டிய பிறகு மணப்பெண் அறையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.
    • போலீசார் சினேகாவின் தாய் மற்றும் சகோதரரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் கடயம் பகுதியைச் சேர்ந்தவர் சினேகா. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடானந்து என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி சினேகா திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி நேற்று அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் சினேகா திருமணம் நடந்தது.

    தாலி கட்டிய பிறகு சினேகா மணப்பெண் அறையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். வழக்கம்போல திருமண மண்டபத்தில் ஒரு புறம் விருந்து நடந்து கொண்டிருந்தது.

    மாப்பிள்ளை வீட்டார் கும்பலாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் சினேகாவின் தாய் மற்றும் அவருடைய சகோதரர் திடீரென திருமண மண்டபத்திற்கு வந்தனர்.

    மணப்பெண் அறையில் காதல் கணவருடன் இருந்த சினேகாவை அவருடைய சகோதரர் கையை பிடித்து வெளியே இழுத்து வந்தார். அதனை பார்த்து திடுக்கிட்ட அவருடைய நண்பர்கள் தடுக்க முயன்றனர். அவர்களை சினேகாவின் சகோதரர் கடுமையாக தாக்கினார்.

    சினேகாவை அவரது சகோதரர், தாயார் இருவரும் சேர்ந்து மண்டபத்திற்கு வெளியே இழுத்து செல்ல முயன்றனர். அப்போது மாப்பிள்ளை வீட்டார் அவர்களை சூழ்ந்து கொண்டு விடாமல் தடுத்தனர்.

    அவர்கள் மீது மிளகாய் பொடிகளை தூவினர். மேலும் நாற்காலிகளை தூக்கி வீசி அடித்தனர். இதனால் திருமண மண்டபத்தில் கூச்சல் குழப்பம் அலறல் சத்தம் என களேபரம் ஏற்பட்டது.

    சினேகாவை அவருடைய சகோதரர் கையை பிடித்து இழுத்துச் சென்றார். கணவர் அவரைவிடாமல் பிடித்துக் கொண்டார். இருவரையும் சேர்த்து தரதரவென இழுத்து சென்றனர்.

    இதை தடுக்க முயன்ற மாப்பிள்ளையின் நண்பர் ஒருவரை சினேகாவின் சகோதரர் கடுமையாக தாக்கினார். இதில் அவர் பலத்த காயமடைந்தார்.

    திருமண மண்டபத்தில் இருந்தவர்கள் இதனை தடுத்து நிறுத்தினர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    கடயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் துளசிதர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் இது குறித்து மணப்பெண்ணிடம் முதலில் விசாரித்தனர்.

    அப்போது அவர் தன்னை கட்டாயப்படுத்தி தாய் மற்றும் சகோதரர் இங்கிருந்து கடத்த முயற்சிப்பதாக தெரிவித்தார். போலீசார் சினேகாவின் தாய் மற்றும் சகோதரரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

    அவர்கள் மீது தாக்குதல், கடத்தல் முயற்சி, மணப்பெண்ணின் நகை திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    மிளகாய் பொடி தூவி தாக்கி மணப்பெண்ணை கடத்த முயன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சினிமாவை மிஞ்சும் இந்த காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தனுஷ்கண்டன் அளித்த புகாரின் பேரில் எடப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
    • போலீசாரின் முழு விசாரணைக்கு பின்னரே இக்கடத்தலில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து விபரம் தெரியவரும்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி செட்டிமாங்குறிச்சி கிராமம், சின்னதாண்டவனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் தனுஷ் கண்டன் (25). இவர் ஓசூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது அவருடன் வேலை பார்த்த தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள சின்னம்பள்ளி கிராமம் தோழுரை சேர்ந்த குமாரசெல்வம் என்பவரது மகள் ரோஷினி (22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் நாளடைவில் நட்பு காதலாகி அவர்கள் இருவரும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 4-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

    இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்திற்கு பிறகு காதல் ஜோடி எடப்பாடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அவர்கள் இருவரும் திருமண வயதினை எட்டியிருந்ததால், இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் ரோஷினியை அவரது காதல் கணவர் தனுஷ்கண்டனுடன் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து புதுமண தம்பதியினர் எடப்பாடி அடுத்த சின்னதாண்டவனூர் பகுதியில் உள்ள தனுஷ் கண்டன் வீட்டில் வசித்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று மாலை தனுஷ்கண்டன் வீட்டிற்கு சொகுசு காரில் வந்த இறங்கிய கும்பல் கையில் பட்டா கத்தியுடன் அதிரடியாக தனுஷ் கண்டன் வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த ரோஷினியை வலுக்கட்டாயமாக கதற கதற காருக்குள் ஏற்றி கடத்திச் சென்றனர். மேலும் அதனை தடுக்க வந்த அப்பகுதி மக்கள் மற்றும் தனுஷ்கண்டன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பட்டாக்கத்தியை காட்டி மிரட்டிய கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் ரோஷினியை காரில் கடத்தி சென்றது.

    இதுகுறித்து தனுஷ்கண்டன் அளித்த புகாரின் பேரில் எடப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    போலீசாரின் விசாரணையில் ரோஷினியை கடத்திச் சென்ற கும்பல் ஈரோடு மாவட்டத்தில் பதுங்கி இருப்பது குறித்து தகவல் கிடைத்தது. இதையடுத்து ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள டி.எஸ். பாளையத்தில் பதுங்கி இருந்த கும்பலை நேற்று நள்ளிரவில் போலீசார் சுற்றி வளைத்தனர். மேலும் அப்பகுதியில் வெங்கடாஜலம் என்பவர் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ரோஷினியை மீட்டனர்.

    மேலும் இந்த கடத்தல் தொடர்பாக ரோஷினியின் தந்தை குமாரசெல்வம், தாய் சித்தரா மற்றும் அவரது சகோதரி சவுமியா, உறவினர் லட்சுமணன், ஜோதிடர் கருப்பண்ணன், வெங்கடாசலம் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து எடப்பாடி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடத்தல் வழக்கில் மேச்சேரி பகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் அது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடத்தப்பட்ட ரோஷினி தற்போது கர்ப்பமாக இருப்பதாக கூறப்படும் நிலையில் அவருக்கு தேவையான மருத்துவ உதவிகளை எடப்பாடி போலீஸ் நிலைய பெண் போலீசார் செய்து வருகின்றனர். போலீசாரின் முழு விசாரணைக்கு பின்னரே இக்கடத்தலில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து விபரம் தெரியவரும்.

    ×