search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாத யாத்திரை"

    • பாதயாத்திரை மூலம் காங்கிரஸ் தனது பலத்தை நிரூபிக்க திட்டமிட்டுள்ளது.
    • சோனியாகாந்தி, பிரியங்கா காந்தி பங்கேற்க உள்ளனர்.

    பெங்களூரு :

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 'பாரத்ஜோடோ' என்ற பெயரில் கடந்த 7-ந் தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரையை தொடங்கினார்.

    அவரது இந்த பாதயாத்திரை தமிழ்நாடு, கேரளாவை தொடர்ந்து கர்நாடகத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு வருகிறது. அதாவது சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுப்பேட்டை வழியாக வருகிறது. கேரளாவில் மட்டும் 19 நாட்கள் இந்த பாதயாத்திரை நடந்துள்ளது. ராகுல் காந்தியின் இந்த பாதயாத்திரை இன்று கர்நாடகத்தில் தொடங்குகிறது.

    அங்கு ராகுல் காந்திக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க கர்நாடக காங்கிரஸ் கட்சி ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த பாதயாத்திரை கர்நாடகத்தில் 21 நாட்கள் 511 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடக்கிறது. மைசூரு, மண்டியா, துமகூரு, சித்ரதுர்கா, பல்லாரி, ராய்ச்சூர் வழியாக தெலுங்கானாவுக்கு செல்கிறது. வருகிற 19-ந் தேதி பல்லாரியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பாதயாத்திரையின் நடுவே தசரா பண்டிகையையொட்டி 2 நாட்கள் விடுமுறை எடுக்க ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார். இந்த பாதயாத்திரை நடைபெறும் நாட்களில் ஏதாவது ஒரு நாள் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய 2 பேரும் கலந்து கொள்ள உள்ளனர்.

    கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு(2023) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ராகுல் காந்தியின் பாதயாத்திரை முக்கியத்துவம் பெறுவதாக உள்ளது. ராகுல் காந்தியை வரவேற்று குண்டலுபேட்டையில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை மர்ம நபர்கள் சிலர் கிழித்து எறிந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து அங்குள்ள போலீசில் காங்கிரசார் புகார் அளித்துள்ளனர்.

    இந்த பாதயாத்திரை மூலம் காங்கிரஸ் தனது பலத்தை நிரூபிக்க திட்டமிட்டுள்ளது. பாதயாத்திரை பயணிக்கும் தொகுதிகளில் உள்ளூர் கட்சி தொண்டர்களை அதிகளவில் கலந்து கொள்ள வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் மிகுந்த உற்சாகம் அடைவார்கள் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் கருதுகிறார்கள்.

    மேலும் பாதயாத்திரை செல்லும் வழியில் விவசாயிகள், மடாதிபதிகள், பெண்கள், பழங்குடியின மக்கள், மாணவர்கள், பொதுமக்களை சந்திக்க ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார். மேலும் பல்லாரி உள்பட பல்வேறு நகரங்களில் கட்சி பொதுக்கூட்டங்களை நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

    சித்தராமையாவின் 75-வது பிறந்த நாளையொட்டி தாவணகெரேயில் பிரமாண்டமான முறையில் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதன் மூலம் காங்கிரசில் சித்தராமையாவின் தனிப்பட்ட செல்வாக்கு அதிகரித்தது.

    இந்த நிலையில் ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்கு மிக சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்து, பெரும் கூட்டத்தை திரட்டி அதன் மூலம் தனது பலத்தை நிரூபிக்க டி.கே.சிவக்குமார் திட்டமிட்டுள்ளார். சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகிய இருவரும் முதல்-மந்திரி பதவி மீது கண் வைத்து காய் நகா்த்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.
    • நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் படுகர், தோடர் இன மக்களை சந்தித்து பேசுகிறார்.

    ஊட்டி:

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத ஒற்றுமை, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி கடந்த 7-ந் தேதி கன்னியாகுமரியில் பாத யாத்திரையை தொடங்கினார்.

    கடந்த 11-ந் தேதியில் இருந்து நேற்று வரை 21 நாட்கள் கேரள மாநிலம் முழுவதும் ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொண்டார். அப்போது அவர் பொதுமக்களுடன் கலந்துரையாடுவது, பழங்குடியின மக்களை சந்தித்து பேசி அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

    இன்று அவர் தமிழகத்தில் மீண்டும் பாதயாத்திரை மேற்கொள்கிறார். கேரள மாநிலம் நிலம்பூர், வழிக்கடவு வழியாக இன்று மாலை 3 மணியளவில் நீலகிரி மாவட்டம் கூடலூர் ஆமைகுளத்திற்கு ராகுல்காந்தி வருகிறார்.

    அவருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.

    பின்னர் ராகுல்காந்தி அங்கிருந்து கோழிப்பாலம், பள்ளிப்பாடி, நந்தட்டி, செம்பாலா, துப்புக்குட்டி, பேட்டை வழியாக கூடலூர் பழைய பஸ் நிலையம் வரை 6 கி.மீ. தூரத்திற்கு பாதயாத்திரையாக வருகிறார்.

    அங்கு அவர் நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் படுகர், தோடர் இன மக்களை சந்தித்து பேசுகிறார். பின்னர் மெயின்ரோடு வழியாக கூடலூர் புதிய பஸ் நிலையத்திற்கு செல்லும் அவர் அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

    தொடர்ந்து அவர் இரவில் கூடலூரில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் கேரவன் வேனிலேயே தங்கி ஓய்வெடுக்கிறார். நாளை காலை 8 மணிக்கு கூடலூரில் இருந்து புறப்பட்டு காரில் கர்நாடகாவுக்கு செல்கிறார்.

    ராகுல்காந்தி வருகையை முன்னிட்டு கூடலூரில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ராகுல்காந்தியின் பாதயாத்திரையையொட்டி கூடலூரில் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. மேலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என்பதால் அந்தந்த பகுதியில் உள்ள தோட்ட தொழிலாளர்கள் உள்பட அனைத்து தொழிலாளர்களையும் முன்கூட்டியே வீடுகளுக்கு செல்வதற்கு வசதி ஏற்படுத்த அந்தந்த நிறுவனங்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • கேரளாவில் நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல் தன்னை சந்தித்த சிறுமிகளுடன் வாஞ்சையோடு உரையாடினார்.
    • 10 வயது சிறுமி ஒருவர் யாத்திரையில் புகுந்து கோஷம் எழுப்பியபடியே சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்தார்.

    பாரத ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கடந்த 7-ந் தேதி முதல் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு நடைபயணம் மேற்கொண்டுள்ளார் ராகுல்காந்தி.

    இந்த நடைபயணத்தில் நாடு முழுவதும் மக்களை சந்திக்கும்போது பல்வேறு அனுபவங்கள் கிடைக்கும் என்று ராகுல் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

    அதை போலவே தனது பயணத்தில் சந்திக்கும் அனுபவங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் தினமும் ராகுல் பதிவிட்டு வருகிறார்.

    தற்போது கேரளாவில் நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல் தன்னை சந்தித்த சிறுமிகளுடன் வாஞ்சையோடு உரையாடினார்.

    சந்தோஷத்தில் ஒரு குழந்தையை தோள் மீது தூக்கி வைத்துக்கொண்டு சிறிது தூரம் நடந்தார். மற்றொரு சிறுமியையும் தூக்கி வைத்து கொஞ்சினார்.

    அப்போது அந்த சிறுமி சந்தோஷத்தில் வாயை பொத்திக்கொண்டே சிரித்தார். குழந்தைகளை கொஞ்ச தொடங்கியதும் ஆசையுடன் குழந்தைகளிடம் நான், ஆயிரம் மைல் நடக்க வேண்டும். அதனால் உங்களிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருக்க முடியாது என்று கூறினார்.

    அதை கேட்டதும், அங்கிள் ஆயிரம் மைல் நடக்க முடியுமா? என்று ஆச்சரியத்துடன் சிறுமி கேட்டாள். ம்ம்.. முடியும் என்று சிரித்தபடி சொல்லிக்கொண்டே நகர்ந்தார்.

    இதேபோல் பல இடங்களில் நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடந்ததாக அந்த மாநில பொறுப்பாளரும் அகில இந்திய செயலாளருமான முன்னாள் எம்.பி. விசுவநாதன் கூறினார்.

    ஒரு இடத்தில் மாற்று திறனாளி இளைஞர் ஒருவர் தனது இரு சக்கர வாகனத்தில் வந்து ராகுலை சந்திக்க தவித்து கொண்டிருந்தார். அதை கவனித்த ராகுல் அவர் அருகில் சென்று கையை பிடித்து தட்டி கொடுத்தார். அந்த இளைஞர் ராகுலை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து மகிழ்ந்ததை பார்த்து எல்லோரும் நெகிழ்ந்தனர்.

    இன்னொரு இடத்தில் சுமார் 10 வயது சிறுமி ஒருவர் யாத்திரையில் புகுந்து கோஷம் எழுப்பியபடியே சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்தார்.

    ஒரு சிறுமியின் கோஷம் கேட்டு கொண்டிருக்கிறதே என்று கவனித்த ராகுல் ஒரு கட்டத்தில் அந்த சிறுமியை தேடி கண்டுபிடித்து கையை பிடித்து முன்வரிசைக்கு அழைத்து வந்தார். அந்த சிறுமியும் உற்சாகத்துடன் ராகுலோடு நடந்தாள்.

    இப்படி மக்கள் பல இடங்களில் காட்டிய ஆர்வமும், அவர் மீது காட்டிய அன்பும் அவரை நெகிழ வைத்தது என்றார்.

    • ராகுல் காந்தி பாதயாத்திரை சென்ற பகுதி எங்கும் தொண்டர்கள் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர்.
    • ராகுல் காந்தியின் பாதயாத்திரை இன்று இரவு மலப்புரம் நிலம்பூரில் நிறைவு பெறுகிறது.

    திருவனந்தபுரம்:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்தியா முழுவதும் ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ளார்.

    கன்னியாகுமரியில் கடந்த 7-ந் தேதி தொடங்கிய பாதயாத்திரை 11-ந் தேதி முதல் கேரளாவில் நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தி அவரது சொந்த தொகுதியான வயநாட்டில் பாதயாத்திரை மேற்கொண்டார்.

    மலப்புரம் பாடி, பாண்டிக்காடு பள்ளியில் இருந்து காலை 6.30 மணிக்கு பாதயாத்திரை தொடங்கிய அவர் 10.30 மணிக்கு வண்டூர் சந்திப்பை சென்றடைந்தார்.

    ராகுல் காந்தி பாதயாத்திரை சென்ற பகுதி எங்கும் தொண்டர்கள் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர். இதுபோல மலையோர கிராமங்களை சேர்ந்த ஏராளமான பழங்குடி இன பெண்களும் திரண்டு நின்று அவரை வரவேற்றனர்.

    அப்போது ராகுல் காந்தி பழங்குடி இன பெண்களின் அருகில் சென்று அவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். இதுபோல பாதுகாப்பு அரணையும் மீறி சென்று குழந்தைகளையும், சிறுவர்களையும் சந்தித்து கைகுலுக்கினார்.

    ராகுல் காந்தியின் பாதயாத்திரை இன்று இரவு மலப்புரம் நிலம்பூரில் நிறைவு பெறுகிறது. நாளை அவர் தமிழகத்தின் மலையோர கிராமமான கூடலூர் செல்கிறார்.

    அங்கு பஸ் நிலைய பகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். அதன்பின்பு அவர் கர்நாடாக மாநிலத்தில் பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளார்.

    • நாளையுடன் ராகுல்காந்தி கேரளாவில் தனது பாதயாத்திரையை முடித்து கொண்டு மீண்டும் தமிழகத்திற்கு வருகிறார்.
    • கூடலூர் நகரில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீசார் அடிக்கடி சோதனை மேற்கொண்டனர்.

    ஊட்டி:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை பயண பாதயாத்திரை நடத்தி வருகிறார்.

    கடந்த 7-ந் தேதி கன்னியாகுமரியில் தனது பாதயாத்திரையை தொடங்கிய அவர், தற்போது கேரளாவில் தனது பாதயாத்திரையை நடத்தி வருகிறார்.

    நாளையுடன் ராகுல்காந்தி கேரளாவில் தனது பாதயாத்திரையை முடித்து கொண்டு மீண்டும் தமிழகத்திற்கு வருகிறார். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் வழியாக நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு நாளை மாலை 3 மணிக்கு வருகிறார். அங்கு தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    பின்னர் ஆமைகுளம் என்ற இடத்தில் இருந்து பாத யாத்திரையை தொடங்குகிறார். தொடர்ந்து கோழிபாலம், பள்ளிப்பாடி, நந்தட்டி, செம்பாலா வழியாக கூடலூர் நகர் பகுதிக்குள் ராகுல்காந்தி பாதயாத்திரையாக வருகிறார். அவருடன் கோவை, நீலகிரி மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்களும் வருகின்றனர்.

    பின்னர் பொதுக்கூட்டம் நடைபெறும் கூடலூர் புதிய பஸ் நிலைய பகுதிக்கு செல்லும் அவர் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். தொடர்ந்து அவர் அங்குள்ள தனியார் பள்ளி மைதானத்தில் கேரவன் வேனிலேயே தங்கி ஓய்வெடுக்கிறார்.

    பின்னர் மறுநாள் 30-ந் தேதி கர்நாடகாவுக்கு புறப்பட்டு செல்கிறார். ராகுல்காந்தி வருகையை முன்னிட்டு அவர் பாதயாத்திரை மேற்கொள்ளும் சாலைகளில் இருபுறமும் உள்ள கட்டிடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்திலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    மேலும் கூடலூர் நகரில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீசார் அடிக்கடி சோதனை மேற்கொண்டனர்.அங்கு சந்தேகப்படும்படியாக ஆட்கள் வந்து இருக்கிறார்களா என விடுதி ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

    முன்னதாக ராகுல்காந்தி பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடம், இரவில் தங்கும் மைதானம் ஆகியவற்றில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், ஆர்.டி.ஓ.சரவண கண்ணன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ராகுல் காந்தி, இன்று காலை 6.30 மணிக்கு மலப்புரம் புலமந்தோல் பகுதியில் இருந்து பாதயாத்திரையை தொடங்கினார்.
    • ராகுல் காந்தி பழங்குடி இன மக்களை சந்தித்து பேசினார்.

    திருவனந்தபுரம்:

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ளார்.

    கன்னியாகுமரியில் கடந்த 7-ந் தேதி பாத யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி 11-ந் தேதி முதல் கேரள மாநிலத்தில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார்.

    பாலக்காடு மாவட்டத்தில் நேற்று பாதயாத்திரை சென்ற ராகுல் காந்தி வழியில் தொழிலாளிகள் மற்றும் விவசாயிகளை சந்தித்து பேசினார்.

    மேலும் சாலையின் ஓரம் தன்னை பார்க்க காத்திருந்த பள்ளி மாணவர்களையும் அழைத்து பேசினார். அப்போது சில மாணவர்கள் கால்பந்து விளையாடி கொண்டிருந்தனர். அவர்களையும் அழைத்து பேசிய ராகுல் காந்தி, அந்த மாணவர்களுடன் சிறிது நேரம் கால்பந்து ஆடினார்.

    இதுபோல பழங்குடி இன மக்களையும் சந்தித்து பேசினார். பின்னர் அவர்களின் குறைகளை கேட்டறிந்த ராகுல் காந்தி, அவர்களின் குறைகளை போக்க முயற்சி மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

    ராகுல் காந்தி, இன்று காலை 6.30 மணிக்கு மலப்புரம் புலமந்தோல் பகுதியில் இருந்து பாதயாத்திரையை தொடங்கினார். பகல் 11 மணிக்கு எம்.எஸ்.டி.எம். கல்லூரியில் நிறைவு செய்தார்.

    பிற்பகல் அங்கு ஓய்வு எடுத்த பாதயாத்திரை குழுவினர் இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் அங்கிருந்து புறப்படுகிறார்கள். இரவு 7 மணிக்கு மலப்புரம் தச்சினகாடம் பகுதியில் உள்ள பள்ளியில் நிறைவு செய்கிறார்.

    • தொண்டர்கள் ராகுல் காந்திக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
    • பாதயாத்திரையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் கலந்துகொண்டனர்.

    திருவனந்தபுரம் :

    பாரத ஒற்றுமையை வலியுறுத்தி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரத ஒற்றுமை பாதயாத்திரையை தொடங்கினார். இந்த பாதயாத்திரை திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழை எர்ணாகுளம் மாவட்டங்கள் வழியாக 300 கி.மீ தூரத்தை கடந்து 15-வது நாளில் (22-ந்தேதி) திருச்சூர் மாவட்டம் சாலைக்குடியில் நிறைவடைந்தது. நேற்று முன்தினம் 16-வது நாளாக தனது பாதயாத்திரையை தொடர்ந்தார்.

    காலை 6.30 மணிக்கு திருச்சூர் பேராம்பிரா சந்திப்பில் இருந்து பாதயாத்திரை தொடங்கியது. அங்கு தொண்டர்கள் அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து இரவு 7 மணிக்கு பாத யாத்திரை திருச்சூர் சுவராஜ் ரவுண்ட் ரோடு வடக்கும்நாதன் கோவில் தெற்கு வாயிலில் நிறைவடைந்தது. நேற்று 17-வது நாள் பாதயாத்திரை திருச்சூர் தோப்பு மைதானத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு தொடங்கியது.

    இந்த பாதயாத்திரையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் கலந்துகொண்டனர். அவர்களுடன் ராகுல் காந்தி உற்சாகமாக தனது பயணத்தை தொடர்ந்து காலை 10 மணி அளவில் பட்யாட்ரா பகுதியில் முடிந்தது. பின்னர் மாலை 4.30 மணி அளிவில் மீண்டும் வடக்கஞ்சேரி பகுதியில் இருந்து பாதயாத்திரை தொடங்கியது. இதில் பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். அப்போது அவர்கள் கியாஸ் விலை உயர்வு குறித்த பதாகைகளை கையில் வைத்துக்கொண்டு சென்றனர். பாதயாத்திரையில் பங்கேற்ற சிறுமிகள் மற்றும் பெண்களிடம் நலம் விசாரித்தப்படி ராகுல் காந்தி நடந்து சென்றார்.

    அப்போது சிறுமி ஒருவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வேடமணிந்து பாதயாத்திரையில் கலந்துகொண்டு உற்சாகப்படுத்தினார். அப்போது ராகுல்காந்தி, 'இந்தியாவின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்கு அதிகம் உள்ளது' என தெரிவித்தார். மாலை 7 மணி அளவில் செருத்துருத்தி பகுதியில் பாதயாத்திரையை நிறைவு செய்தார். மேலும் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் அங்கிருந்து பாதயாத்திரையை ராகுல்காந்தி மேற்கொள்வார் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

      திருவனந்தபுரம்:

      காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான தேச ஒற்றுமை பாதயாத்திரையை கடந்த 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார்.

      குமரி மாவட்டத்தில் 4 நாட்கள் பாதயாத்திரை சென்ற அவர், கடந்த 11-ந் தேதி கேரள மாநிலம் சென்றார். அங்கு தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் ராகுல் காந்தி பாதயாத்திரை சென்று வருகிறார். அவருக்கு கட்சியினரும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

      பாதயாத்திரையின்போது 2 முறை ஒவ்வொரு நாள் ஓய்வு எடுத்த ராகுல் காந்தி, 17-வது நாளாக இன்று காலை தனது பாதயாத்திரையை தொடர்ந்தார். திருச்சூர் மாவட்டம் திரூர் பகுதியில் இருந்து காலை 6.30 மணிக்கு அவர் பாதயாத்திரையை தொடங்கினார்.

      பல்வேறு தரப்பு மக்களும் ராகுல் காந்தியை பூக்கள் தூவி வரவேற்றனர். பகல் 10 மணிக்கு வடக்கஞ்சேரி தூய சவேரியார் ஆலயத்தில் அவர் பாதயாத்திரையை முடித்தார். பின்னர் கட்சி நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசினார்.

      மாலை 4.45 மணிக்கு அங்கிருந்து அவர் பாதயாத்திரை தொடங்குகிறார். இரவு 7 மணிக்கு வெட்டிக்கட்டிரி பகுதியில் பாதயாத்திரையை முடிக்கும் அவர் செருத்துருத்தி தனியார் பொறியியல் கல்லூரியில் தங்குகிறார்.

      இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
      • தமிழக பயணத்தை தொடர்ந்து கடந்த 11-ந் தேதி முதல் கேரள மாநிலத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
      • பெரும்பாரா சந்திப்பில் இருந்து ராகுல் காந்தி கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் பாதயாத்திரையை மீண்டும் தொடங்கினார்.

      திருவனந்தபுரம்:

      காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தேசிய ஒற்றுமை பயணமாக கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு பாதயாத்திரை தொடங்கி உள்ளார்.

      கடந்த 7-ந் தேதி கன்னியாகுமரியில் அவர் தனது பாதயாத்திரையை தொடங்கினார். தொடர்ந்து 4 நாட்கள் தமிழகத்தின் குமரி மாவட்டத்தில் பாதயாத்திரை சென்ற ராகுல்காந்திக்கு, கட்சியினரும் பொதுமக்களும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

      தமிழக பயணத்தை தொடர்ந்து கடந்த 11-ந் தேதி முதல் கேரள மாநிலத்தில் அவர் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். அவருடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் கேரள மாநில காங்கிரஸ் முக்கிய பிரமுகர்களும் பங்கேற்று உள்ளனர்.

      கடந்த 15-ந் தேதி ஒரு நாள் ஓய்வு எடுத்த ராகுல்காந்தி அதன்பிறகு பாதயாத்திரையை தொடர்ந்தார். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் வழியாக சென்ற அவர், நேற்று முன்தினம் சாலக்குடியில் பிரசாரத்தை நிறைவு செய்தார்.

      அங்கு ராகுல்காந்தி 2-வது முறையாக ஒரு நாள் ஓய்வு எடுத்துக்கொண்டார். ஓய்வின்போது அவர், கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் கலந்துரையாடினார்.

      ஒரு நாள் ஓய்வுக்குப் பிறகு ராகுல்காந்தி இன்று காலை தனது பாதயாத்திரையை மீண்டும் தொடங்கினார். பெரும்பாரா சந்திப்பில் இருந்து அவர் கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் பாதயாத்திரையை மீண்டும் தொடங்கினார். அவருக்கு வழிநெடுக பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

      ராகுல்காந்தியின் பாதயாத்திரை பகல் 10 மணிக்கு தோபே ஸ்டேடியம் சென்றடைந்தது. அங்கு கட்சியினர் மற்றும் பொதுமக்களை சந்தித்துப் பேசினார்.

      மாலையில் தொடர்ந்து அவர் பாதயாத்திரை மேற்கொள்கிறார். கேரளாவில் ராகுல் காந்தியின் பாத யாத்திரை வருகிற 29-ந் தேதி வரை நடக்கிறது.

      • சாலக்குடியில் தொண்டர்களுடன் தங்கிய ராகுல் காந்தி. 2-வது முறையாக பாத யாத்திரைக்கு இன்று ஓய்வு கொடுத்துள்ளார்.
      • ஓய்வின்போது ராகுல் காந்தி டெல்லி சென்று சோனியாவை சந்திப்பார் என்று கூறப்பட்டது.

      திருவனந்தபுரம்:

      காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்தியா முழுவதும் ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ளார்.

      கன்னியாகுமரியில் கடந்த 7-ந் தேதி தொடங்கிய பாத யாத்திரை இப்போது கேரளா மாநிலத்தில் நடக்கிறது.

      நேற்று எர்ணாகுளத்தில் இருந்து பாதயாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி இரவு சாலக்குடியில் நிறைவு செய்தார்.

      சாலக்குடியில் தொண்டர்களுடன் தங்கிய ராகுல் காந்தி. 2-வது முறையாக பாத யாத்திரைக்கு இன்று ஓய்வு கொடுத்துள்ளார். ஏற்கனவே கடந்த 15-ந்தேதியும் அவர் பாத யாத்திரைக்கு ஓய்வு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

      கடந்த முறை அவர் ஓய்வெடுத்தபோது பாதயாத்திரையால் அவரது கால்களில் கொப்புளம் ஏற்பட்டதால் அவர் ஓய்வெடுத்தார் என்று கூறப்பட்டது.

      ஆனால் இப்போது அவர் ஓய்வு எடுப்பதற்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிக்கான தேர்தல் குறித்து ஆலோசிக்கவே என்று கூறப்படுகிறது.

      இன்றைய ஓய்வின்போது அவர் டெல்லி சென்று சோனியாவை சந்திப்பார் என்று கூறப்பட்டது.

      ஆனால் இன்று காலை வரை அவர் கேரளாவின் சாலக்குடியிலேயே தங்கி இருந்தார். அவருடன் மாநில மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் பலரும் உடன் இருந்தனர். அவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

      இதில் கட்சி தலைமை பதவி குறித்த ஆலோசனையே நடந்தது என்று கூறப்படுகிறது.

      • நாளை (சனிக்கிழமை) முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.
      • 19-ந்தேதி தேர்தல் முடிவு அறிவிக்கப்படும்.

      எர்ணாகுளம் :

      காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி நீடித்து வரும் நிலையில், கட்சியின் தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

      அதன்படி தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பாணை நேற்று முறைப்படி வெளியிடப்பட்டது. அதன்படி, நாளை (சனிக்கிழமை) முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.

      இதில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிட்டால் அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி தேர்தல் நடத்தப்பட்டு, 19-ந்தேதி முடிவு அறிவிக்கப்படும்.

      இந்த தேர்தலில் ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், திருவனந்தபுரம் எம்.பி. சசிதரூர் ஆகியோர் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

      அதேநேரம் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்கக்கோரி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கட்சி பிரிவுகள் சார்பில் தீர்மானம் நிைறவேற்றப்பட்டன. எனினும் அவர் தலைவர் பதவியை ஏற்க மறுத்து வருகிறார்.

      இந்த நிலையில் கேரளாவில் இந்திய ஒற்றுமைப்பயணத்தில் ஈடுபட்டிருக்கும் ராகுல் காந்தி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காங்கிரஸ் தலைவர் தேர்தல் குறித்தும், தலைவர் தேர்தலில் போட்டியிடுவீர்களா? என்றும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

      அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

      காங்கிரஸ் தலைவர் தேர்தலில் நான் போட்டியிடுவேனா, இல்லையா என்பது, நான் செய்து கொண்டிருக்கும் பணியை திசை திருப்பும் முயற்சி ஆகும்.

      காங்கிரஸ் தலைவர் தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். தேர்தலில் போட்டியிட விரும்பும் எந்த காங்கிரஸ் தலைவருக்கும் அதற்கான உரிமை உள்ளது. இது மோசான விஷயம் என நான் நினைக்கவில்லை. இது நல்ல விஷயம்தான்.

      தனக்கான தலைவரை தேர்தல் மூலம் தேர்வு செய்யும் ஒரே கட்சி, காங்கிரஸ்தான். இதற்காக நான் பெருமைப்படுகிறேன். இது என்னை உற்சாகப்படுத்துகிறது.

      காங்கிரஸ் தலைவர் தேர்தல் எப்போது நடக்கும்? என எல்லாரும் கேட்கிறார்கள். ஆனால் இதே கேள்வியை பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ்., இடதுசாரிகள், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகளிடம் கேட்கமாட்டீர்கள்.

      காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவோருக்கு நான் கூறுவது, நீங்கள் ஒரு முடிவை எடுத்திருக்கிறீர்கள், ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு. இது இந்தியாவின் ஒரு குறிப்பிட்ட பார்வையை வரையறுக்கும் ஒரு நிலைப்பாடு.

      காங்கிரஸ் தலைவர் பதவி என்பது வெறும் ஒரு அமைப்பு பதவி அல்ல, மாறாக இது ஒரு சித்தாந்த பதவி. இது ஒரு நம்பிக்கை அமைப்பு.

      காங்கிரஸ் தலைவராக யார் வந்தாலும் அவர் ஒரு நம்பிக்கை அமைப்பையும், இந்தியாவின் பார்வையையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

      இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

      காங்கிரசில் 'ஒருவருக்கு ஒரு பதவி' என்ற முடிவை ஆதரிக்கிறீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி, 'உதய்ப்பூர் சிந்தனையாளர் முகாமில் எடுக்கப்பட்ட அந்த உறுதிப்பாடு (ஒருவருக்கு ஒரு பதவி) கடைப்பிடிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்' என்று தெரிவித்தார்.

      22 ஆண்டுகளுக்கு பிறகு தலைவர் பதவிக்கு போட்டி நடக்கிறது.

      2000-ம் ஆண்டு, தலைவர் பதவிக்கு சோனியாகாந்தியும், ஜிதேந்திர பிரசாதாவும் போட்டியிட்டனர். அதில் சோனியாகாந்தி வெற்றி பெற்றார்.

      அதற்கு முன்பு, 1997-ம் ஆண்டும், காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடந்தது. அப்போது, சரத்பவார், ராஜேஷ் பைலட் ஆகியோரை தோற்கடித்து சீதாராம் கேசரி தலைவர் ஆனார்.

      ராகுல்காந்தி தலைவராக இருந்த 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளை தவிர, 1999-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து சோனியாகாந்தி தலைவராக இருக்கிறார். காங்கிரசில் நீண்ட காலம் தலைவராக இருப்பவர் அவரே ஆவார்.

      இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
      • ராகுல் காந்தியின் பாதயாத்திரை இன்று காலை 10 மணிக்கு காருக்குட்டி கப்பிலா சந்திப்பில் நிறைவடைகிறது.
      • ராகுல் காந்தி நாளை ஒரு நாள் பாதயாத்திரைக்கு ஓய்வு கொடுத்துவிட்டு சோனியா காந்தியை பார்க்க டெல்லி செல்வார்.

      திருவனந்தபுரம்:

      அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ளார்.

      கன்னியாகுமரியில் கடந்த 7-ந் தேதி தொடங்கிய இந்த பாதயாத்திரை 11-ந் தேதி முதல் கேரளாவில் நடந்து வருகிறது. இதில் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று வருகிறார்கள்.

      எர்ணாகுளம் மாவட்டத்தில் நேற்று பாதயாத்திரை மேற்கொண்ட ராகுல் காந்தி நேற்றிரவு தேசம் பகுதியில் நிறைவு செய்தார். இன்று அவரது 15-வது நாள் பாதயாத்திரை தேசம் பகுதியில் இருந்து அதிகாலை 6.30 மணிக்கு தொடங்கியது.

      தேசிய கொடி ஏற்றிவிட்டு பாதயாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தியுடன் மாற்று திறனாளிகள், பெண்கள், கல்லூரி மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதுபோல வழிநெடுகிலும் பொதுமக்கள் திரண்டு நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

      ராகுல் காந்தியின் பாதயாத்திரை இன்று காலை 10 மணிக்கு காருக்குட்டி கப்பிலா சந்திப்பில் நிறைவடைகிறது. பின்னர் அங்கிருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் பாதயாத்திரை இரவு 7 மணிக்கு சாலக்குடி பகுதியில் நிறைவடைகிறது.

      முன்னதாக ராகுல் காந்தி இன்று பகல் 1 மணிக்கு நிருபர்களை சந்திக்கிறார். அப்போது பாதயாத்திரை குறித்தும், காங்கிரஸ் தலைவர் தேர்தல் குறித்தும் கருத்து தெரிவிப்பார் என தெரிகிறது.

      இதற்கிடையே ராகுல் காந்தி நாளை ஒரு நாள் பாதயாத்திரைக்கு ஓய்வு கொடுத்துவிட்டு சோனியா காந்தியை பார்க்க டெல்லி செல்வார் எனக்கூறப்படுகிறது.

      அப்போது டெல்லியில் காங்கிரஸ் தலைவர் தேர்தல் குறித்தும் அவர் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவார் எனக்கூறப்படுகிறது.

      கேரளாவில் ராகுல் காந்தியின் பாதயாத்திரை வருகிற 30-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஒருநாள் பிரியங்கா காந்தியும் பங்கேற்பார் எனக்கூறப்படுகிறது.

      தற்போது ராகுல் காந்தியுடன் தினமும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும், அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகிகளும் பங்கேற்று வருகிறார்கள்.

      ×