search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் டாக்டர் கொலை"

    • பெண் டாக்டர் கொலை சம்பவம் தொடர்பாக சிபிஐ அறிக்கை தாக்கல் செய்தது.
    • போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் ஏராளமான குளறுபடிகள் நடந்ததை அடுத்து வழக்கு விசாரணை சிபிஐ-இடம் வழங்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது.

    இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில், இன்றும் விசாரணை தொடர்ந்தது. இன்றைய விசாறணையின் போது வழக்கு தொடர்பாக கொல்கட்டா காவல் துறை மற்றும் சிபிஐ சார்பில் தனித்தனியாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையை துவங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட அறிவுறுத்தினர்.

    இதுதொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், "உச்சநீதிமன்றம் அமைத்துள்ள 10 பேர் கொண்ட தேசிய பணிக்குழு மருத்துவர்களின் கோரிக்கைகளைக் கண்டிப்பாகக் கேட்டறியும் என்றும் அவர் உறுதியளித்தார். நீங்கள் கிட்டத்தட்ட 48 மணி நேரம் பணியாற்றிய பிறகு யாராவது உங்களை கேலி செய்தால் அவர்களுக்கு பதில் அளிக்க உடல் அளவிலும், மன ரீதியிலும் நீங்கள் இருப்பதில்லை. நான் மிகமுக்கிய குற்றங்களை கூட குறிப்பிடவில்லை."

    "பொதுவான வேலை நிலைகளை பற்றியே நாங்கள் குறிப்பிடுகிறோம். நாங்கள் பொது மருத்துவமனைகளுக்கு சென்றிருக்கிறோம். என் குடும்ப உறுப்பினர் ஒருவர் உடல்நிலை நலிவுற்று இருந்த போது, நான் அரசு மருத்துவமனையின் தரையில் படுத்து உறங்கியிருக்கிறேன். மருத்துவர்கள் 36 மணி நேரத்திற்கும் அதிகமாக பணியாற்றுகிறார்கள் என்று எங்களுக்கு தெரியும்," என்று தெரிவித்தார்.

    • பெண் டாக்டர் கொலை சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் விசாரணை செய்தது.
    • போராட்டம் நடத்திய மருத்துவர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

    கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் மாநில காவல் துறையின் விசாரணையில் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, இந்த வழக்கை சிபஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் கொல்கத்தா விரைந்த சிபிஐ குழுவினர் கடந்த சில நாட்களாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விவகாரத்தில் சிபிஐ தரப்பில் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    அதனை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம் மருத்துவர்களை மீண்டும் பணிக்கு திரும்ப வலியுறுத்தியது. தலைமை நீதிபதி சந்திரசூட், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று அறிவுருத்தினார். மேலும் போராட்டம் காரணமாக ஏழை மக்கள் பாதிக்கப்படுவதகை கவனிக்காமல் இருக்க முடியாது, என்று தெரிவித்தார்.

    உச்சநீதிமன்றம் அமைத்துள்ள 10 பேர் கொண்ட தேசிய பணிக்குழு மருத்துவர்களின் கோரிக்கைகளைக் கண்டிப்பாகக் கேட்டறியும் என்றும் அவர் உறுதியளித்தார். நீங்கள் கிட்டத்தட்ட 48 மணி நேரம் பணியாற்றிய பிறகு யாராவது உங்களை கேலி செய்தால் அவர்களுக்கு பதில் அளிக்க உடல் அளவிலும், மன ரீதியிலும் நீங்கள் இருப்பதில்லை. நான் மிகமுக்கிய குற்றங்களை கூட குறிப்பிடவில்லை.

    பொதுவான வேலை நிலைகளை பற்றியே நாங்கள் குறிப்பிடுகிறோம். நாங்கள் பொது மருத்துவமனைகளுக்கு சென்றிருக்கிறோம். என் குடும்ப உறுப்பினர் ஒருவர் உடல்நிலை நலிவுற்று இருந்த போது, நான் அரசு மருத்துவமனையின் தரையில் படுத்து உறங்கியிருக்கிறேன். மருத்துவர்கள் 36 மணி நேரத்திற்கும் அதிகமாக பணியாற்றுகிறார்கள் என்று எங்களுக்கு தெரியும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.

    மருத்துவர்களின் பணி நேரத்தை ஒழுங்குபடுத்துவது குறித்து தேசிய பணிக்குழு ஆய்வு செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அப்போது, பயிற்சி மருத்துவர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத், நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட தேசிய பணிக்குழுவில் பயிற்சி டாக்டர்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    அந்த கோரிக்கை ஏற்கப்படுவதாக தலைமை நீதிபதி அறிவித்தார். இந்நிலையில் பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு நாடு முழுவதும் டாக்டர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதில், "எங்களின் கோரிக்கைகள் தொடர்பாக முன்னேற்றங்கள் ஏற்படுவதோடு கவலைகள் உச்சநீதிமன்றத்தால் நிவர்த்தி செய்யப்படுவதை கருத்தில் கொண்டு, வேலைநிறுத்தத்தை நிறுத்துகிறோம் என்று அறிவிக்கிறோம்."

    "எங்களது அனைத்து கடமைகளையும் மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளோம். ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சமீபத்தில் நடந்த அசம்பாவிதம், நம் நாட்டில் டாக்டர்கள் பணிபுரியும் வருந்தத்தக்க நிலையை எடுத்துக்காட்டுகிறது. ஆகஸ்ட் 23 ம் தேதி காலை 8 மணி முதல் மீண்டும் அவரவர் பணிகளை மீண்டும் தொடங்க அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளோம்," என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • கொல்கத்தா காவல் துறை சிஆர்பிசி விதிகள் எதையும் முறையாக பின்பற்றவில்லை.
    • சிபிஐ விசாரணை துவங்குவதற்குள் சம்பவ இடத்தில் எல்லாமே மாற்றப்பட்டு இருந்தது.

    கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் மாநில காவல் துறையின் விசாரணையில் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, இந்த வழக்கை சிபஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் கொல்கத்தா விரைந்த சிபிஐ குழுவினர் கடந்த சில நாட்களாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விவகாரத்தில் சிபிஐ தரப்பில் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

     


    அதில் சிபிஐ தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "இந்த வழக்கில் சிபிஐ விசாரணை ஐந்தாம் நாளில் தான் துவங்கியது. சிபிஐ விசாரணை துவங்குவதற்குள் சம்பவ இடத்தில் எல்லாமே மாற்றப்பட்டு இருந்தது."

    "கொல்கத்தா காவல் துறை சார்பில் பயன்படுத்தப்பட்டு வரும் தினசரி டைரியில் இந்த சம்பவம் தொடர்பாக காலை 10.10 மணிக்கு பதிவிடப்பட்டு இருக்கிறது. எனினும், அன்று மாலையில் தான் போலீசார் சம்பவ இடத்தை தங்களது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளனர். இது மிகவும் கவலை அடையச் செய்துள்ளது."

    இதை கேட்ட சந்திரசூட் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு, மூத்த வழக்கறிஞர் கபில் சிபலிடம், இந்த வழக்கில் எப்போது உடற்கூராய்வு செய்யப்பட்டது என கேள்வி எழுப்பியது. அதற்கு பதில் அளித்த கபில் சிபல், மாலை 6.10 முதல் இரவு 7.10 வரையிலான காலக்கட்டத்தில் உடற்கூராய்வு செய்யப்பட்டது என்றார்.

    இயற்கைக்கு மாறான உயிரிழப்பு என்பதால், உடற்கூராய்வு செய்ய்பட்டது. இந்த வகையில், பஞ்சநாமா எப்போது தயாரிக்கப்பட்டது என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்த வழக்கில் கொல்கத்தா காவல் துறையினர் சிஆர்பிசி விதிகள் எதையும் முறையாக பின்பற்றவில்லை. இந்த சம்பவத்திற்கு பொருப்பேற்க வேண்டிய காவல் துறை அதிகாரியை நீதிமன்றத்திற்கு அழைத்துவர கபில் சிபலுக்கு நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

    இந்த வழக்கு விசாரணை அமர்வில் உள்ள மற்றொரு நீதிபதியான ஜெ.பி. பர்திவாலா, "எனது 30 ஆண்டுகால அனுபவத்தில் உங்கள் மாநிலம் பின்பற்றியதை போன்ற வழிமுறைகளை இதுவரை நான் பார்த்ததே இல்லை," என்றார்.

    குற்ற சம்பவம் இரவு நேரத்தில் அரங்கேறி இருக்கிறது, எனினும் காவல் துறையினர் 18 மணி நேரங்கள் கழித்து தான் சம்பவ இடத்தை தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். காவல் துறையினர் அங்கு வந்து சம்பவ இடத்தை கைப்பற்றும் முன்பே உடற்கூராய்வு நிறைவுபெற்றுவிட்டது. இதைத் தொடர்ந்து காவல் துறையினர் அங்கிருந்து மீண்டும் காவல் நிலையம் சென்ற பிறகு நள்ளிரவு 11.30 மணிக்கு தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என நீதிமன்றம் தெரிவித்தது.

    சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறும் போது, "உடற்கூராய்வு முடிந்த நிலையில் நள்ளிரவு 11.45 மணிக்கு தான் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது. மேலும் மூத்த மருத்துவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர் உடன் பணியாற்றியவர்கள் இந்த சம்பவத்தில் ஏதோ குளறுபடி நடப்பதை உணர்ந்து தான், வீடியோ பதிவு செய்ய வலியுறுத்தினர்," என்றார்.

    "பெண் டாக்டர் கொலை வழக்கில் கற்பழிப்பு-கொலை சம்பவம் குறித்து முதலில் பதிவு செய்த கொல்கத்தா காவல் துறை அதிகாரி அடுத்தக்கட்ட விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்," என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    • கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • பெண் டாக்டரின் மரணத்துக்கு நீதி கேட்டு டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கார் அரசு மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த முதுநிலை பெண் பயிற்சி டாக்டர் கடந்த 9-ந்தேதி ஆடிட்டோரியத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.

    அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

    இந்த கொலை தொடர் பாக போலீசில் தன்னார்வ தொண்டராக பணியாற்றிய சஞ்சய் ராய் (33) என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

    பெண் டாக்டரின் மரணத்துக்கு நீதி கேட்டு மேற்கு வங்காள மாநிலம் முழுவதும் டாக்டர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், மருத்துவர் கொலையை கண்டித்து நேற்று இரவு நடைபெற்ற போராட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தனது மனைவி மற்றும் மகளுடன் கலந்து கொண்டார். போராட்டத்தில் பெண் மருத்துவரின் கொலைக்கு நீதி கோரி கங்குலி மெழுகுவர்த்தி ஏற்றினார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கங்குலியின் மனைவி டோனா, "பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்துகிறோம். இது மேற்கு வங்கம் மட்டுமல்ல. எங்கிருந்தோ யாரோ ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக ஒவ்வொரு நாளும் செய்தி வருகிறது, அது நல்ல செய்தி அல்ல. ஒவ்வொரு தனிநபருக்கும் பாதுகாப்பான சமூகம் தேவை" என்று தெரிவித்தார்.

    பின்னர் பேசிய கங்குலியின் மகள் சனா, "போராட்டங்கள் தொடர வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    • உயிரிழந்த பெண் அந்த மருத்துவமனையில் சட்டவிரோத போதைப் பொருள் புழக்கத்தை எதிர்த்ததால் அவர் கொல்லப்பட்டார் என்று கூறப்படுகிறது
    • பணிநீக்கம் செய்யப்பட்ட அக்கல்லூரி முதல்வர் சந்தீப் கோஸ் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

    கொல்கத்தா பயங்கரம் 

    கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தினந்தோறும் வெளியாகும் தகவல்கள் இந்த சம்பவத்தில் உண்மையில் என்னதான் நடந்தது என்ற கேள்வியைப் பலமாக எழுப்புகிறது.

    கேள்விக்குறி? 

    இந்த குற்றத்தில் தொடர்புடைய மருத்துவமனை ஊழியர் சந்தீப் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். ஆனால் இந்த சம்பவத்தின் முதற்கட்ட போலீஸ் விசாரணைகளில் ஏகப்பட்ட குளறுபடிகள் அரங்கேறியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பயிற்சி பெண் மருத்துவர், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பெண் மருத்துவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டது.

     

     விடை கிடைக்காத மர்மங்கள் 

    இதோடு, இந்த சம்பவத்தில் உண்மை குற்றவாளிகள் பலர் உள்ளதாகவும், அவர்களை காப்பாற்ற அம்மாநிலத்தில் ஆளும் அரசு முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. உயிரிழந்த பெண்ணின் பெற்றோரும், இதில் ஒன்றிற்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டு இருக்கக் கூடும் என்றும் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    உயிரிழந்த பெண் அந்த மருத்துவமனையில் சட்டவிரோத போதைப் பொருள் புழக்கத்தை எதிர்த்ததாகவும் அதன்பொருட்டே திட்டமிட்டு அவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் சக மாணவர் ஒருவர் பரபரப்பைக் கிளப்பினார். பயிற்சி பெண் மருத்துவர், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பெண் மருத்துவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டது.

    அதிர்ச்சியூட்டும் பின்புலம்  

    இதுபோன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளும் மர்மங்களும் பெண் மருத்துவர் கொலை வழக்கில் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளன. இந்த சம்பவத்துக்கு பிறகு பணிநீக்கம் செய்யப்பட்ட அக்கல்லூரி முதல்வர் சந்தீப் கோஸ் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. உரிமை கோரப்படாத உடல்களை உறுப்புகளுக்காக விற்று கமிஷன் பெற்றது, மருத்துவ கழிவுகளையும் சட்டவிரோதமான முறையில் விற்றது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவர் மீது சக ஊழியர் ஒருவர் முன்வைத்துள்ளார். இதற்கிடையில் சந்தீப் கோஸ் சிபிஐ விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.

     

    விசரணையும் போராட்டங்களும் 

    இதைத் தொடர்ந்து இந்த சம்பவத்தை சிபிஐ விசாரணை செய்ய கொல்கத்தா உயர்நதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சிபிஐ அதிகாரிகள் குழு இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைக் கண்டித்தும், பெண் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், நாடு முழுக்க பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடும் நடவடிக்கையை உறுதிப்படுத்த உடனடியாக மத்திய அரசு சட்டம் கொண்டுவர வலியுறுத்தியும் நாடு முழுக்க மருத்துவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விமான நிலையத்துக்கு நிகரான பாதுகாப்பை மருத்துவமனைகளுக்கு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை இந்திய மருத்துவ சங்கம் முன்வைத்தது.

     

    உச்சநீதிமன்றத்தின் தலையீடு 

    போராட்டங்களும் வேலை நிறுத்தங்களும் ஆங்காங்கே இன்னும் காலவரையின்றி நடந்து வரும் நிலையில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தது. இந்த  வழக்கின்  மீது நேற்று நடந்த விசாரணையில் மேற்கு வங்காள மாநில அரசு மற்றும் போலீசின் மெத்தனப் போக்கை நீதிபதிகள் கடுமையாக கண்டித்தனர்.

     

    வழக்கில் நடந்த குளறுபடிகள் குறித்து சரமாரியான கேள்விகளை முன்வைத்தனர். மேலும் நாடு இன்னொரு வன்கொடுமை நடக்கும் வரை காத்திருக்காது என்று கூறிய நீதிபதிகள் இந்த வழக்கில் விசாரணை நிலையை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும். வருகிற 22-ந் தேதிக்குள் (வியாழக் கிழமை) சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

    இதேபோல மேற்கு வங்காள அரசும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை வரும் 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். மேலும் பயிற்சி மருத்துவர்களின் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 10 பேர் கொண்ட குழுவை உருவாக்கி உத்தரவிட்டனர்.

     

    அடுத்தது என்ன?

    மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் கடும் சிரமங்களுக்கு உள்ளாகி வருவதால் அவர்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் நீதிபதிகள் கோரிக்கை வைத்தனர். ஒட்டுமொத்தமாகப் பதில் கிடைக்காத கேள்விகளும், மருத்துவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பும்  இந்த வழக்கின் போக்கை அடுத்து எந்த திசையில் கொண்டு செல்லும் என்ற எதிர்பார்ப்பு நாட்டு மக்களிடையே எழுந்துள்ளது திண்ணம்.

    • கொடூரமான சம்பவம் தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தினேன்.
    • நாங்கள் அனைவரும் உங்களோடு இருக்கிறோம். உங்களுக்கு நீதி கிடைக்கும்.

    கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது மேற்கு வங்காள அரசுக்கு எதிராக பல்வேறு கேள்விகளை எழுப்பியது. வழக்குப்பதிவு செய்ய காலதாமதம் ஏன்? தந்தையிடம் உடனடியாக தகவல் தெரிவிக்கவில்லை எனக் கேட்டது. மேலும், மாற்றத்திற்காக நாடு இன்னுமொரு கற்பழிப்பிற்காக காத்திருக்க முடியாது என காட்டமாக தெரிவித்தது.

    இந்த நிலையில் மேற்கு வங்காள மாநில ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் உயிரிழந்த பெண் டாக்டரின் பெற்றோரிடம் போன் மூலம் பேசியுள்ளார். வீடியோ காலில் பேசியதை கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ளது.

    ஆளுநர் கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் பெற்றோரிடம் "நாங்கள் அனைவரும் உங்களோடு இருக்கிறோம். உங்களுக்கு நீதி கிடைக்கும். இன்று (நேற்று) நான் டெல்லியில் இருக்கிறேன். இந்த விசயம் தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தினேன். உங்களுக்கு வசதியான நேரம் உங்கள் வீட்டிற்கு வருகிறேன்" என அதில் தெரிவித்துள்ளார்.

    "தேசம், ஒட்டுமொத்த தேசமும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மிகுந்த நிம்மதியுடன் கேட்கிறது. ஒவ்வொரு புனிதருக்கும் ஒரு கடந்த காலம் உண்டு. அதேபோல் ஒவ்வொரு பாவிகளுக்கும் ஒரு எதிர்காலம் உண்டு. இதை நினைவில் கொள்ளுங்கள். யாராவது கேட்கிறார்களா? மம்தா பானர்ஜி தயது செய்து கையை உயர்த்துவாரா?" எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    ஆளுநர் வீடியோ காலில் பேசியதை வெளியிட்டதை திரிணாமுல் காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அந்த கட்சியின் எம்.பி. தெரீக் ஓ'பிரைன் "இன்றைய உங்கள் வீடியோ நீங்கள் வகிக்கும் மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவியை அவமதிக்கிறது.

    பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையுடன் நீங்கள் தொடர்பு கொண்ட தொலைபேசி அழைப்பு உங்களால் பதிவு செய்யப்பட்டு பின்னர் பகிரங்கப்படுத்தப்பட்டது. இது நெறிமுறையற்றது. தயவு செய்து உங்களது உயர் பதவியை சுய விளம்பரத்திற்காக ஒரு பயங்கரமான சோகத்தை பயன்படுத்த வேண்டாம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • பெண் டாக்டர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
    • இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது.

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

    உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கேட்டு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து, இன்று உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

    வழக்கை தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் மீது மேற்கு வங்காள அரசு தனது பலத்தைக் காட்ட வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் கண்டித்தது.

    இந்த நிலையில், பெண் மருத்துவர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு டெல்லி உயர்நீதிமன்ற பார் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பார் கவுன்சில் சார்பில் நடத்தப்பட்ட அவசர கூட்டத்தில், அதன் செயற்குழு, இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுத்தது.

    மேலும், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கவும், பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் நடவடிக்கைகளை செயல்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகளை வலியுறுத்தியது. நீதியை உறுதி செய்வதற்காக பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு போனோ சார்பான சட்ட உதவிகளை வழங்கவும் முடிவு செய்தது.

    ஒற்றுமை மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் கவுரவிக்கும் வகையில், ஆகஸ்ட் 21, 2024 ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்ற பார் கவுன்சில் உறுப்பினர்கள் வெள்ளை நிற ரிப்பன் பேண்டுகளை அணிய வேண்டும் என்று முடிவு செய்துள்ளது.

    • முன்னாள் தலைவர் சந்தீப் கோஷ் மீது ஜூன் மாதம் புகார்.
    • பொலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மேற்கு வங்க மாநிலம் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வராக இருந்தவர் சந்தீப் கோஷ். பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் சந்தீப் கோஷ் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

    சிபிஐ இவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியது. சுமார் 53 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில் இந்த மருத்துவமனையில் நிதி முறைகேடு நடைபெறுவதாக கடந்த ஜூன் மாதம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. போலீசார் நிதி முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் போலீசார் சந்தீப் கோஷ் மீது ஊழல் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 2021-ல் இருந்து முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த ஐ.ஜி. பிரணாப் குமார் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைக்கப்பட்டது. இந்த குழு சந்தீப் கோஷ் முதல்வராக இருந்த காலத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தும்.

    பெண் மருத்துவர் கொலை தொடர்பாக பெற்றோர்களிடம் தாமதமாக தெரிவித்தது. கொலை நடைபெற்ற இடத்தில் புதுப்பித்தல் வேலை தொடர்பாக அவர் எடுத்த முடிவு ஆகியவை குறித்து சிபிஐ கேள்விகள் கேட்டது.

    சந்தீப் கோஷை சுற்றி சர்ச்சைகள் சுற்றி வரும் நிலையில் முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படாமல் உள்ளது. கொல்கத்தா உயர்நீதிமன்றம், அடுத்த உத்தரவு வரை சந்தீப் கோஷை மற்ற மருத்துவ கல்லூரியில் நியமனம் செய்யக் கூடாது உன உத்தரவிட்டுள்ளது.

    • பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக சந்திக்க விரும்புகிறார்.
    • மம்தா பானர்ஜி சாட்சிகளை வாங்க முயற்சிக்கிறார்.

    கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக இருந்து வந்த பெண் ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

    இந்த விவகாரத்தில் மம்தா அரசு மீது கடும் விமர்சனம் எழுப்பப்பட்டு வருகிறது. அரசியல் இயந்திரம் சரியாக செயல்படவில்லை. அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. குற்றவாளிக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட வேண்டும் என மம்தா வலியுறுத்தி வருகிறார்.

    இந்த நிலையில் கற்பழிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரேட் கார்டு நிர்ணயித்துள்ளார் என மம்மா பானர்ஜி மீது கொலை செய்யப்பட்ட பெண் குடும்பத்தின் வழக்கறிஞர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்காக வாதாடும் வழக்கறிஞர் பிகாஸ் ரஞ்சன் பட்டச்சார்யா கூறியதாவது:-

    மேற்கு வங்காள முதல்வரின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது. கற்பழிப்பு சம்பவம் நடக்கும்போதெல்லாம், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை உடனடியாக சந்திக்க மம்தா பானர்ஜி விரும்புகிறார். அவர்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறது. அதன்பின் எல்லாம் முடிந்தது எனச் சொல்கிறார்கள். கற்பழிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரேட் கார்டு நிர்ணயித்துள்ளார். இது துரதிருஷ்டவசமானது. சாட்சிகளை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.

    இவ்வாறு வழக்கறிஞர் தெரிவித்தார்.

    பாதிக்கப்பட்ட பெண் டாக்டரின் பெற்றோர் நேற்று முன்தினம் (ஞாயிறு) "முதல்வர் மம்தா பானர்ஜி மீது நம்பிக்கை இருந்தது. தற்போது இந்த நம்பிக்கை போய்விட்டது. உடலை பார்த்தால் யாரும் இது கொலை வழக்கு என்றுதான் சொல்வார்கள். ஆனால், மருத்துவத்துறையில இருந்து, எங்களது மகள் தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்ததாக மம்தா பானர்ஜி எங்களிடம் தெரிவித்தார். எங்களது மகள் உடல் அவசர அவசரமாக தகனம் செய்யப்பட்டது. மூன்று உடல்கள் இருந்தன. அதில் எங்களது மகள் உடன் முதலாவதாக தகனம் செய்யப்பட்டது" எனத் தெரிவித்தனர்.

    • மாணவர்கள் நீதி கேட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • அரசு இயந்திரம் செயல்படவில்லை எனக் கூறி மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தல்.

    மேற்குவங்கம் கொல்கத்தா மாநிலத்தில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் பயிற்சி டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவை உலுக்கியுள்ளது. டாக்டர்கள் நீதி கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வற்புறுத்தி வருகிறார்.

    இதற்கிடையே மம்தா பானர்ஜி அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மம்தா பானர்ஜி நோக்கி விரல் நீட்டி குற்றம்சாட்டுபவர்களின் விரல்கள் உடைக்கப்படும் என திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி உதயன் குஹா பேசியது தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது.

    அவர் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. ஆனால், அவர் பேசிய வீடியோதானா? என்பது அதிகாரப்பூர்வமாக நிரூபணம் ஆகியவில்லை.

    அந்த வீடியோவில் "மம்தாவை நோக்கி விரல்களை காட்டி குற்றம்சாட்டி வருகிறார்கள். அதேபோல் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இது ஒருபோதும் வெற்றியடையாது. மம்தா நோக்கி யார் விரல் நீட்டுகிறார்களோ? அவர்களுடைய விரல்கள் உடைக்கப்படும்" என பேசியுள்ளார்.

    டாக்டர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், ஆகஸ்ட் 15-ந்தேதி ஒரு கும்பல் திடீரென மருத்துவமனையின் எமர்ஜென்சி டிப்பார்ட்மென்ட், மெடிக்கல் ஸ்டோர் உள்ளிட்டவைகளை அடித்து நொறுக்கினர். அசாதாரண நிலை ஏற்பட்ட போதிலும் போலீசார் தடியடி நடத்திவில்லை.

    "வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தால் வன்முறை நடைபெற்றது. இன்னொரு வங்கதேசம் போன்று திரும்ப நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்" எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், இந்த போராட்டத்தை சாக்குபோக்காக வைத்து வீட்டிற்கு செல்ல அல்லது நண்பர்களுடன் நேரத்தை செலவிட பயன்படுத்தி அதனால் ஒரு நோயாளி இறந்தால், ஸ்டிரைக் காரணமாக மக்கள் உங்களுக்கு எதிராக திரும்புவார்கள். அப்போது நாங்கள் உதவமாட்டோம் என அவர் பேசிய வீடியோவும் வெளியாகியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
    • பெண் டாக்டரின் மரணத்துக்கு நீதி கேட்டு டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கார் அரசு மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த முதுநிலை பெண் பயிற்சி டாக்டர் கடந்த 9-ந்தேதி ஆடிட்டோரியத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.

    அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

    இந்த கொலை தொடர் பாக போலீசில் தன்னார்வ தொண்டராக பணியாற்றிய சஞ்சய் ராய் (33) என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

    கொலையுண்ட பெண் டாக்டரின் தந்தை கூறுகையில், "எனது மகள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள சஞ்சய் ராய் உண்மையான குற்ற வாளி கிடையாது. கொலைக்கு பின்னால் மிகப்பெரிய கும்பல் இருக்கிறது.

    கொல்கத்தா பெண் டாக்டரின் மரணத்துக்கு நீதி கேட்டு 11-வது நாளாக மேற்கு வங்க மாநிலம் முழுவதும் டாக்டர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில்,கிர்த்தி சர்மா என்ற இளைஞர் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண் மருத்துவர் கொலை தொடர்பாக பதிவிட்டிருந்தார்.

    அவரது பதிவில், இந்திரா காந்தியை சுட்டு கொலை செய்தது போலவே முதல்வர் மம்தா பானர்ஜியை கொலை செய்ய வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட மாணவரை கொல்கத்தா போலீசார் கைது செய்தனர்.

    • பெண் டாக்டர் உடலில் 14 இடங்களில் காயம்.
    • கொலையில் பலருக்கு தொடர்பு இருக்கிறது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கார் அரசு மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த முதுநிலை பெண் பயிற்சி டாக்டர் கடந்த 9-ந்தேதி ஆடிட்டோரியத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.

    அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

    இந்த கொலை தொடர் பாக போலீசில் தன்னார்வ தொண்டராக பணியாற்றிய சஞ்சய் ராய் (33) என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் நேற்று உளவியல் சோதனை நடத்தப்பட்டது. சி.பி.ஐ. குழுவை சேர்ந்த 5 டாக்டர்கள், சஞ்சய் ராயின் மனநிலையை பரிசோதித்தனர்.

    பெண் டாக்டர் கொலைக்கு பிறகு 2 பேரி டம் சஞ்சய் ராய் அடிக்கடி போனில் பேசியுள்ளார். இது தொடர்பான ஆவ ணங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் திரட்டி வருகிறார்கள்.

    ஆர்.ஜி.கார் மருத்துவமனை யின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ், கொலையை மறைக்க முயற்சி செய்திருக்கிறார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மருத்துவமனையின் மூத்த டாக்டர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்களில் சிலர் மீது கொலையுண்ட பெண் டாக்டரின் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது.

    இதையடுத்து சந்தேகத்துக்குரிய அவர்களிடமும் சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட டாக்டர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வக பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

    கொலை நடைபெற்ற மருத்துவமனையின் கருத்த ரங்க கூடத்தில் 3டி லேசர் ஸ்கேனர் மூலம் ஆய்வு நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் எத்தனை பேர் சம்பவ இடத்தில் இருந்தனர் என்பதை கண்டறிய முடியும்.

    பெண் டாக்டர் வேறு இடத்தில் கொலை செய்யப் பட்டு, கருத்தரங்க கூடத்தில் உடல் வைக்கப்பட்டதாக பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர். இதுதொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    கொலையுண்ட பெண் டாக்டரின் தந்தை கூறுகையில், "எனது மகள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள சஞ்சய் ராய் உண்மையான குற்ற வாளி கிடையாது. கொலைக்கு பின்னால் மிகப்பெரிய கும்பல் இருக்கிறது.

    ஆர்.ஜி. கார் மருத்துவமனையில் எனது மகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டார். பழிவாங்கும் நோக்கத்தோடு, 4 ஆண் டாக்டர்களோடு எனது மகளுக்கு பணி வழங்கப்பட்டது.

    கருத்தரங்கு கூடத்தில் கொலை நடைபெற்றதாக போலீசார் கூறுகின்றனர். இதை நம்ப முடியவில்லை. மருத்துவமனையின் வேறு பகுதியில் எனது மகளை சித்ரவதை செய்து கொலை செய்துள்ளனர்.

    பின்னர் கருத்தரங்கு கூடத்தில் உடலை வைத்துள்ளனர். கொலையில் பலருக்கு தொடர்பு இருக்கிறது.

    இவ்வாறு அவர் தெரி வித்தார்.

     கொல்கத்தா பெண் டாக்டரின் மரணத்துக்கு நீதி கேட்டு இன்று (திங்கட் கிழமை) 11-வது நாளாக மேற்கு வங்காள மாநிலம் முழுவதும் டாக்டர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். அது போல நாடு முழு வதும் பல மாநிலங்களில் இன்று போராட்டம் தீவிரப் படுத்தப்பட்டது.

    இதனால் அவசர சிகிச்சை பணிகளில் மட்டுமே டாக்டர்கள் ஈடுபடு கின்றனர். இதர மருத்துவ பணிகளை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர்.

    இதன்காரணமாக நாடு முழுவதும் கடந்த சில நாட்க ளில் மட்டும் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். சுமார் 2,500-க்கும் மேற் பட்ட அறுவைச் சிகிச்சைகள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பெண் டாக்டரின் பிரேத பரிசோ தனை அறிக்கை நேற்று வெளியானது. அதில் பெண் டாக்டர் உடலில் 14 இடங்க ளில் கடுமையான ரத்த காயங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. அவரது உறுப்பில் வெள்ளை நிற அடர்த்தியான திரவம் வீசப்பட்டுள்ளது.

    பாலியல் குற்றத்தை மறைக்க சிலர் திட்டமிட்டு அப்படி செய்திருப்பதாக பிரேத பரிசோதனை அறிக் கையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. பெண் டாக்டரின் உடலில் 14 இடங்களில் கொடூர காயங்கள் இருப்ப தால் கொல்லப்படுவதற்கு முன்பு அவர் கடுமையாக பலரால் சித்ரவதை செய்யப் பட்டு இருப்பதாகவும் பிரேத பரிசோதனை அறிக் கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    பிரேத பரிசோதனை அறிக்கையின் இந்த புதிய தகவல் கொல்கத்தா டாக்டர்கள் மத்தியில் மேலும் கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நேற்று அவர்கள் இரவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விடிய விடிய அவர்கள் போராட்டம் நடைபெற்றது.

    அதுபோல கொல்கத்தா வில் உள்ள விளையாட்டு மைதானத்திலும் முற்றுகை யிட்டு விடிய விடிய போராட்டம் நடைபெற்றது. இதனால் கொல்கத்தாவில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.

    டாக்டர்கள் மற்றும் பொது மக்களின் போராட் டத்தை ஒடுக்க மேற்கு வங்காள அரசு சில அறி விப்புகளை வெளியிட்டு உள்ளது. இன்று முதல் கொல்கத்தாவில் பேரணி நடத்தவும், போராட்டம் நடத்தவும் தடை விதிக்கப் பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி போராட்டம் நடந்து வருகிறது.

    இன்று மேற்கு வங்கா ளத்தில் பாரதிய ஜனதா சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திரிணாமுல் காங்கிரசாரும் பதில் போ ராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மேற்கு வங்கா ளத்தில் பல இடங்களில் இன்று பாரதீய ஜனதாவும், திரிணாமுல் காங்கிரசும் நேருக்கு நேர் தர்ணா செய்யும் நிலை ஏற்பட்டது.

    இதற்கிடையே மேற்கு வங்காள கவர்னர் ஆனந்த போஸ் இன்று அவசர கூட்டம் நடத்தினார். அதில் அவர் பெண் டாக்டர் கொலை தொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.

    இந்த நிலையில் கொல் கத்தாவில் இன்று ஆயி ரக்கணக்கான பெண்கள் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட னர். எங்களுக்கு நீதி வேண்டும் என்று பெண் அமைப்புகள் பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டன.

    பெண் டாக்டர் கொலை தொடர்பான வழக்கு விசாரணை நாளை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற உள்ளது. அப்போது சுப்ரீம் கோர்ட்டு புதிய உத்தரவுகள் பிறப்பிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    ×