search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி20 உலகக் கோப்பை"

    • டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுகள் நடைபெற்று வருகிறது.
    • நாளை அதிகாலை ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

    பார்படாஸ்:

    டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுகள் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடந்த போட்டியில் இந்தியா 47 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரின்போது பார்படாஸ் தலைநகர் பிரிட்ஜ்டவுன் ஓட்டலில் தங்கியிருந்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஹலால் மாட்டிறைச்சி கிடைக்கவில்லை. இதனால் மாட்டிறைச்சியை ஓட்டலுக்கு தருவித்து அவர்கள் சமைத்து சாப்பிட்டனர்.

    ஆப்கானிஸ்தான் அணி உணவுப் பட்டியலில் ஹலால் இறைச்சியும் இடம்பிடித்திருந்தது. எனவே ஹலால் மாட்டிறைச்சி ஒரு பிரச்சனையாக மாறியது.

    இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் வீரர் கூறுகையில், நாங்கள் தங்கியிருந்த ஓட்டலில் ஹலால் இறைச்சி கிடைக்கவில்லை. சில சமயம் நாங்களே சமைப்போம். அல்லது சில சமயங்களில் வெளியே செல்வோம். இந்தியாவில் கடந்த உலகக் கோப்பையில் எல்லாம் சரியாக இருந்தது. ஹலால் மாட்டிறைச்சி இங்கு ஒரு பிரச்சனையாக மாறியது. ஒரு நண்பர் ஹலால் மாட்டிறைச்சியை எங்களுக்கு ஏற்பாடு செய்தார். நாங்கள் சொந்தமாக சமைத்து சாப்பிட்டோம் என தெரிவித்தார்.

    • இந்திய அணிக்காக விராட் கோலி சாதித்தது நம்ப முடியாதவையாகும்.
    • அவருடைய நாட்டிற்கும் கிரிக்கெட்டிற்கும் விராட் கோலி போன்று மற்றொருவரால் செய்ய முடியும் என என்னால் நினைக்க முடியவில்லை.

    இந்தியா- வங்காளதேச அணிகள் டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்று போட்டியில் இந்திய நேரப்படி இன்று இரவு பலப்பரீட்சை நடத்துகின்றன. டி20 கிரிக்கெட் போட்டியை வரை இந்தியாவின் கையே ஓங்கியுள்ளது. மேலும் வங்காளதேச அணிக்கெதிராக விராட் கோலி சிறப்பாக விளையாடியுள்ளார். சராசரி 90-க்கு மேல் வைத்துள்ளார்.

    இந்த நிலையில் வங்காளதேச அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஷாகி் அல் ஹசன் விராட் கோலிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

    விராட் கோலி குறித்து ஷாகிப் அல் ஹசன் கூறியதாவது:-

    இந்திய அணிக்காக விராட் கோலி சாதித்தது நம்ப முடியாதவையாகும். தனி நபராக இந்திய அணிக்காக ஏராளமான வெற்றிகளை தேடிக்கொடுத்துள்ளா்ர. அவருடைய நாட்டிற்கும் கிரிக்கெட்டிற்கும் விராட் கோலி போன்று மற்றொருவரால் செய்ய முடியும் என என்னால் நினைக்க முடியவில்லை.

    இவ்வாறு ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.

    • டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா அணி 19.5 ஓவரில் 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அமெரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய அமெரிக்கா அணி 19.5 ஓவரில் 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஆண்ட்ரிஸ் கவுஸ் 29 ரன்களும் நிதிஷ் 20 ரன்களும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரசல், ராஸ்டன் சேஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 10.5 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஷாய் ஹோப் 82 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    • இங்கிலாந்து அணியில் புரூக் அரை சதம் விளாசினார்.
    • தென் ஆப்பிரிக்கா தரப்பில் மகாராஜ், ரபாடா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    செயிண்ட் லூசியா:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில்  சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களை எடுத்துள்ளது. அதிகபட்சமாக டி காக் 56 ரன்களும் மில்லர் 43 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதையடுத்து, 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக பட்லர்- சால்ட் களமிறங்குகினர். சால்ட் 11, பட்லர் 17, பேர்ஸ்டோவ் 16, மொயின் அலி 9 ரன்னிலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.

    இந்நிலையில் புரூக் மற்றும் லிவிங்ஸ்டன் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை உயர்த்தினர். புரூக் நிதானமாக விளையாட லிவிங்ஸ்டன் அதிரடியாக விளையாடினார். அவர் 33 ரன்னில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து புரூக் அரை சதம் விளாசினார். கடைசி ஓவரில் இங்கிலாந்துக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது.

    அந்த ஓவரை நோர்க்யா சிறப்பாக விசி 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் மகாராஜ், ரபாடா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    • சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 53 ரன்களை குவித்தார்.
    • ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆல் அவுட்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

    இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி முறையே 8 மற்றும் 24 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரிஷப் பண்ட் 20 ரன்களை அடித்த நிலையில், சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 53 ரன்களை குவித்தார்.

    அடுத்து வந்த ஷிவம் துபே 10 ரன்களையும், ஹர்திக் பாண்ட்யா 32 ரன்களை அடித்தனர். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை சேர்த்தது.

    182 ரன்களை துரத்திய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 47 ரன்களில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில், 28 பந்துகளில் 53 ரன்களை எடுத்து சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    இதன்மூலம், சூர்யகுமார் யாதவ் விராட் கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார்.

    விராட் கோலி இதுவரை 113 இன்னிங்ஸில் 15 முறை ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார்.

    இதனை சமன் செய்யும் வகையில், சூர்யகுமார் யாதவ் 61 இன்னிங்ஸில் 15 முறை ஆட்டநாயகன் விருதை பெற்று சாதனை படைத்துள்ளார்.

    • முதலில் ஆடிய இந்தியா 181 ரன்களைக் குவித்தது.
    • சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 53 ரன்களை எடுத்தார்.

    பார்படாஸ்:

    டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்று நடந்த போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 181 ரன்களை எடுத்தது. பொறுப்புடன் ஆடி அரை சதமடித்த சூர்யகுமார் யாதவ் 53 ரன்கள் எடுத்தார். பாண்ட்யா 32 ரன்கள் எடுத்தார்.

    ஆப்கானிஸ்தான் சார்பில் பரூக்கி மற்றும் ரஷித் கான் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்தியா 47 ரன் வித்தியாசத்தில் வென்றது. அசமதுல்லா ஒமர்சாய் 26 ரன்கள் எடுத்தார்.

    இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங், பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், ஜடேஜா, அக்சர் பட்டேல் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணியின் 10 விக்கெட்டுகளையும் கேட்ச் பிடித்து ஆட்டமிழக்கச் செய்து இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

    அதன்படி, சர்வதேச டி20 கிரிக்கெட்டிலும், டி20 உலகக் கோப்பை வரலாற்றிலும் எதிரணியின் 10 விக்கெட்டுகளையும் கேட்ச்களாக எடுத்த முதல் ஆசிய அணி என்ற அரிதான சாதனையை இந்தியா படைத்துள்ளது.

    கடந்த 2022 டி20 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகளையும் கேட்ச்களாக எடுத்திருந்த சாதனையை இந்தியா தற்போது சமன்செய்துள்ளது.

    • ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர் 53 ரன்களை குவித்தார்.
    • வங்காளதேசம் சார்பில் ரிஷத் ஹொசைன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் அமெரிக்கா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை தொடங்கிய வங்காளதேசம் அணிக்கு துவக்க வீரர் டன்சித் ஹாசன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய லிட்டன் தாஸ் 16 ரன்களில் அவுட் ஆனார்.

    அடுத்து வந்த கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷண்டோ 36 பந்துகளில் 41 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய தவ்ஹித் ரிடோய் 40 ரன்களை எடுத்தார். இவரைத் தொடர்ந்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இதன் மூலம் வங்காளதேசம் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளுக்கு 140 ரன்களை சேர்த்தது. ஆஸ்திரேலியா சார்பில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஆடம் ஜாம்பா 2 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாயினிஸ் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. அந்த அணிக்கு டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். இதனிடையே 11.2 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்களை எடுத்திருந்த போது, மழை குறுக்கிட்டது.

    தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் ஆஸ்திரேலியா அணி டக்வெர்த் லீவிஸ் முறைப்படி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலியா சார்பில் டேவிட் வார்னர் 53 ரன்களுடனும், கிளென் மேக்ஸ்வெல் 14 ரன்களுடன் களத்தில் இருந்தனர். வங்காளதேசம் சார்பில் ரிஷத் ஹொசைன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
    • கேப்டன் நஜ்முல் 36 பந்துகளில் 41 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் அமெரிக்கா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை தொடங்கிய வங்காளதேசம் அணிக்கு துவக்க வீரர் டன்சித் ஹாசன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய லிட்டன் தாஸ் 16 ரன்களில் அவுட் ஆனார்.

    அடுத்து வந்த கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷண்டோ 36 பந்துகளில் 41 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய தவ்ஹித் ரிடோய் 40 ரன்களை எடுத்தார். இவரைத் தொடர்ந்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இதன் மூலம் வங்காளதேசம் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளுக்கு 140 ரன்களை சேர்த்தது. ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய பேட் கம்மின்ஸ் ஹாட் ட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார். இது நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் ஹாட் ட்ரிக் ஆக அமைந்தது.

    இந்த போட்டியில் மஹ்மதுல்லா, மஹெதி ஹாசன் மற்றும் தவ்ஹித் ரிடோய் ஆகியோரின் விக்கெட்டுகளை பேட் கம்மின்ஸ் எடுத்து அசத்தினார். 4 ஓவர்களை வீசிய பேட் கம்மின்ஸ் 29 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதன் டி20 உலகக் கோப்பை தொடரில் ஹாட் ட்ரிக் விக்கெட் எடுத்த இரண்டாவது ஆஸ்திரேலிய வீரர் மற்றும் ஏழாவது சர்வதேச வீரர் என்ற பெருமையை பேட் கம்மின்ஸ் பெற்று இருக்கிறார்.

    • சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 53 ரன்களை குவித்தார்.
    • பசல்ஹாக் பரூக்கி, ரஷித் கான் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

    இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி முறையே 8 மற்றும் 24 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரிஷப் பண்ட் 20 ரன்களை அடித்த நிலையில், சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 53 ரன்களை குவித்தார்.

    அடுத்து வந்த ஷிவம் துபே 10 ரன்களையும், ஹர்திக் பாண்ட்யா 32 ரன்களை அடித்தனர். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை சேர்த்தது. ஆப்கானிஸ்தான் சார்பில் பசல்ஹாக் பரூக்கி மற்றும் ரஷித் கான் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். நவீன் உல் ஹக் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    182 ரன்களை துரத்திய ஆப்கானிஸ்தான் அணிக்கு சரியான துவக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் ஹசரதுல்லா சசாய் மற்றும் இப்ராகிம் சத்ரான் 2 மற்றும் 8 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த குல்பதின் நயிப் 17 ரன்களை சேர்த்தார்.

    அசமதுல்லா ஒமர்சாய் 26 ரன்களை சேர்த்தார். நஜிபுல்லா சத்ரான் 19 ரன்களை சேர்க்க அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 47 ரன்களில் வெற்றி பெற்றது.

    இந்திய சார்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா தலா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    • அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் அரை சதம் விளாசினார்.
    • ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான், பருக்கி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    பிரிஜ்டவுன்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கள் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் இன்று ஆப்கானிஸ்தான்- இந்தியா மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் சிராஜ்-க்கு பதிலாக குல்தீப் யாதவ் அணியில் இடம் பிடித்துள்ளார்.

    அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் - விராட் கோலி களமிறங்கினர். இருவரும் தொடக்க முதலே தடுமாறினர். இதனால் ரோகித் வழக்கம் போல இடதுகை வேகப்பந்து வீச்சாளரான பரூக்கி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பண்ட் வந்த வேகத்தில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.

    11 பந்தில் 20 ரன்கள் விளாசிய பண்ட், ரஷித் கான் ஓவரில் எல்பிடபிள்யூ ஆனார். உடனே எதிர்முனையில் இருந்த விராட் கோலி அவுட் என கூற அதற்கு பண்ட் பேட்டில் பட்டது என கூறிய ரிவ்யூ கேட்டார். ஆனால் பேட்டில் படாமல் சென்றது. இதனால் இந்தியாவுக்கு ஒரு ரிவ்யூ வீணானது.

    அதனை தொடர்ந்து மிகவும் மந்தமாக விளையாடிய விராட் கோலி 24 பந்தில் 24 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த துபே 10 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து சூர்யகுமார் மற்றும் பாண்ட்யா ஜோடி ஆப்கானிஸ்தான் பந்து சிறப்பாக எதிர் கொண்டு ரன்களை குவித்தனர்.

    குறிப்பாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் அரை சதம் விளாசினார். அடுத்த பந்தே அவரும் வெளியேறினார். 32 ரன்னில் இருந்த நிலையில் பாண்ட்யாவும் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து 7 ரன்னில் ஜடேஜாவும் நடையை கட்டினார்.

    இறுதி ஓவரில் அக்சர் படேல் ஏதாவது செய்து அணியின் ஸ்கோரை உயர்த்துவாரா என எதிர்பார்த்த நிலையில் 2 பவுண்டரி விளாசி ரசிகர்களின் கனவை நிறைவேற்றினார். கடைசி ஓவரில் மட்டும் 14 ரன்கள் எடுக்கப்பட்டது.

    இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் சேர்த்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான், பருக்கி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • 20 ஓவர் போட்டியில் இவ்விரு அணிகள் 8 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன.
    • இதில் 7-ல் இந்தியா வெற்றி கண்டது. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

    பிரிஜ்டவுன்:

    9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் 8 அணிகள் சூப்பர்8 சுற்றுக்கு முன்னேறின. அதன்படி குரூப்1-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

    இந்த குரூப் இன்று ஆப்கானிஸ்தான்- இந்தியா மோதுகிறது. இந்த போட்டி பிரிட்ஜ்டவுனில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் சிராஜ்-க்கு பதிலாக குல்தீப் யாதவ் அணியில் இடம் பிடித்துள்ளார்.

    20 ஓவர் போட்டியில் இவ்விரு அணிகள் 8 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 7-ல் இந்தியா வெற்றி கண்டது. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

    போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல் வருமாறு:-

    இந்தியா:

    ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல், அர்ஷ்தீப்சிங், பும்ரா, குல்தீப் யாதவ்.

    ஆப்கானிஸ்தான்:

    ரமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன், நஜிபுல்லா ஜட்ரன், ஹஜ்ரத்துல்லாஹ் ஜஸாய், குல்படின் நைப், அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், முகமது நபி, ரஷித் கான் (கேப்டன்), நூர் அகமது, நவீன் உல்-ஹக், பசல்ஹக் பரூக்கி.

    • ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டி கைவிடப்பட்டதால் சிக்க
    • ஸ்காட்லாந்திடம் ஆஸ்திரேலியா தோல்வியடைந்தால் இங்கிலாந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.

    வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பைக்கான தொடக்க சுற்று ஆட்டம் நடைபெற்றது. "பி" பிரிவில் ஆஸ்திரேலியா- ஸ்காட்லாந்து இடையிலான போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் மட்டுமே இங்கிலாந்து அணியால் சூப்பர் 8 சுற்று முன்னேறும் என்ற நிலை இருந்தது.

    இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஸ்காட்லாந்து 180 ரன்கள் குவித்தது. பின்னர் ஆஸ்திரேலியா 19.4 ஓவரில்தான் இலக்கை எட்டியது. கடைசி ஓவர் வரை போட்டி சென்றது. இதனால் பரப்பான நிலை ஏற்பட்டது.

    இதனால் இங்கிலாந்து வீரர்கள் தங்கள் நாட்டிற்கு செல்ல விமானங்களில் டிக்கெட் புக் செய்வதும், கேன்சல் செய்வதுமாக இருந்தனர். அவர்களிடம் பீதி தொற்றியிருந்தது.

    கடைசி ஓவரின் 3-வது பந்தில் டிம் டேவிட் கேட்ச் தவற விட்டபோது இங்கிலாந்து வீரர்கள் அறையில் ஒருவிதமான பதட்டம் இருந்துள்ளது. கேட்ச் விட்டபின்னர் 2 பந்து மீதமுள்ள நிலையில் வெற்றி பெற்றோம். அதை பார்க்க வேடிக்கயைாக இருந்திருக்கும் என மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

    போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து வீரர்களிடம் இருந்து எனக்க சில தகவல் கிடைத்தது. அப்போது போட்டியில் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?. உண்மையிலேயே இங்கிலாந்து லீக் சுற்றோடு திருப்பி அனுப்பப் போகிறீர்களா? இது மிகவும் சுவாரஸ்யமான போட்டியாக இருக்கும் எனத் தெரிவித்தனர் என்றும் தெரிவித்துள்ளார்.

    ×