search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி20 உலகக் கோப்பை"

    • ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா சென்ற பக்தர்கள்மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
    • பயங்கரவாதிகளின் தொடர் தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

    மும்பை:

    பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் பயங்கரவாதிகள் கடந்த சில தினங்களாக ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா சென்ற பக்தர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

    இரு தினங்களுக்கு முன் கதுவா மற்றும் தோடா மாவட்டங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் ஒரு சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழந்தார். 6 வீரர்கள் காயமடைந்தனர்.

    பயங்கரவாதிகளின் தொடர் தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், பயங்கரவாத தாக்குதல் நடத்தியதன் எதிரொலியாக, டி 20 உலகக் கோப்பை தொடரில் அரையிறுதியில் பாகிஸ்தானுடன் ஆட நேர்ந்தால் இந்தியா அந்தப் போட்டியை ரத்து செய்ய வேண்டும் என உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆனந்த் துபே பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து உள்துறை மந்திரி அமித்ஷா, விளையாட்டுத்துறை மற்றும் பிசிசிஐ ஆகியோருக்கும் இதன் நகலை இணைத்துள்ளார்.

    • விராட் முதல் போட்டியில் 1 ரன்னிலும் 2-வது மற்றும் 3-வது போட்டிகள் முறையே 4 மற்றும் 0 ரன்னில் ஆட்டமிழந்துள்ளார்.
    • ரசிகர்கள் உள்பட பல முன்னாள் வீரர்களும் அவரை 3-வது இடத்தில் விளையாடுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற லீக் போட்டிகள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் ஒரு அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்டீஸ் அணிகள் அடுத்து சுற்றுக்கு முன்னேறி அசத்தி உள்ளது.

    இந்திய அணி சூப்பர் சுற்றுக்கு முன்னேறினாலும் தொடக்க வீரரான விராட் கோலியின் ஆட்டம் சற்று தடுமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஐபிஎல் தொடரில் மற்றும் தொடக்க வீரராக களமிறங்கிய வரும் அவர் இந்திய அணிக்காக முதல் முறையாக தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வருகிறார்.

    முதல் போட்டியில் 1 ரன்னிலும் 2-வது மற்றும் 3-வது போட்டிகள் முறையே 4 மற்றும் 0 ரன்னில் ஆட்டமிழந்துள்ளார். இதனால் ரசிகர்கள் உள்பட பல முன்னாள் வீரர்களும் அவரை 3-வது இடத்தில் விளையாடுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் கோலி தொடக்க வீரராக விளையாடுவதை விட 3-வது விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கைப் கூறியுள்ளார். 

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஐபிஎல் போல ஃபிளாட்டான பிட்ச்கள் இல்லையெனில் அங்கே நீங்கள் பேட்டிங் செய்வது மிகவும் கடினம். ஐபிஎல் தொடரில் அங்கே விராட் கோலி ஆக்ரோஷமாக விளையாடினார். ஆனால் இங்கே அவர் ஆக்ரோஷமாக விளையாடாமல் தன்னுடைய விக்கெட்டை பாதுகாத்து விளையாட வேண்டும். எனவே விராட் கோலி மூன்றாவது இடத்தில் தனது இயல்பான ஆட்டத்தை ஆட வேண்டும். கடந்த உலகக் கோப்பைகளில் அவருடைய புள்ளிவிவரங்கள் அற்புதமாக இருக்கிறது.

    மேலும் 5-வது இடத்திலிருந்து ரிஷப் பண்ட் 3-வது இடத்தில் விளையாட முடியுமானால் அவரால் ஓப்பனிங்கிலும் களமிறங்க முடியும்.

    இவ்வாறு பண்ட் கூறினார்.

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 149 ரன்கள் எடுத்தது.
    • தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்தது

    டிரினிடாட்:

    9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்துவருகிறது.

    வெஸ்ட் இண்டீசில் இன்று நடைபெற்ற 26-வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீசுவதாக அறிவித்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ரூதர்போர்ட் 39 பந்தில் 68 ரன்கள் குவித்தார்.

    தொடர்ந்து, 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. கிளென் பிலிப்ஸ் 40 ரன்னும், பின் ஆலன் 26 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றது. ஆட்ட நாயகனாக ரூதர்போர்டு தேர்வு செய்யப்பட்டார்.

    • இந்தியா - பாகிஸ்தான் போட்டி உள்பட மொத்தம் 8 போட்டிகள் நடைபெற்றன.
    • ரூ. 250 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்காக அமெரிக்காவின் எய்சென்ஹோவர் பார்க்-இல் நாசாவ் கவுண்டி சர்வதேச மைதானம் கட்டமைக்கப்பட்டது. இந்த மைதானத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போட்டி உள்பட மொத்தம் 8 போட்டிகள் நடைபெற்றன.

    நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்த மைதானத்தின் பிட்ச் சரியாக இல்லை என கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் மற்றும் பலர் குற்றம்சாட்டி வந்தனர். இந்த மைதானத்தின் பிட்ச்கள் வெளியே தயாரிக்கப்பட்டு, அவை மைதானத்திற்குள் பொருத்தப்பட்டன. கிட்டத்தட்ட தற்காலிகமாகவே இந்த மைதானம் உருவாக்கப்பட்டது.


     

    இந்த நிலையில், நேற்றிரவு நடைபெற்று முடிந்த இந்தியா - அமெரிக்கா அணிகள் இடையிலான கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானம் முழுமையாக இடிக்கப்படுகிறது. இதற்காக மைதானத்தை சுற்றிலும் புல்டோசர்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

    மைதானம் மற்றும் பிட்ச்-ஐ உள்ளூர் பயன்பாட்டிற்காக விட்டுவைத்துவிட்டு, மைதானம் முழுமையாக இடிக்கப்பட இருப்பதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முன்னதாக இந்த சர்வதேச கிரிக்கெட் மைதானம் 75 நாட்களில் ரூ. 250 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது குறிப்பிடத்தகக்கது. 

    • இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் 1 விக்கெட் வீழ்த்தினர்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 25-வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இந்தியா சார்பில் அபாரமாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களை வீசி வெறும் 9 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இவர் தவிர ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் 1 விக்கெட் வீழ்த்தினர்.

    நேற்றைய போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஷ்தீப் சிங் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஒரு இந்திய பந்துவீச்சாளரின் சிறந்த பந்துவீச்சாக அமைந்தது. முன்னதாக 2014 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் 3.2 ஓவர்கள் பந்துவீசி 11 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

    அந்த வகையில், டி20 உலகக் கோப்பை போட்டியில் 10-க்கும் குறைந்த ரன்களை விட்டுக்கொடுத்து இந்தியாவின் சிறந்த பந்துவீச்சாளர் என்ற சாதனையை அர்ஷ்தீப் சிங் மேற்கொண்டார். இதுதவிர டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை அர்ஷ்தீப் சிங் படைத்தார்.

    நேற்றைய போட்டியில் முதல் பந்தை வீசிய அர்ஷ்தீப் சிங் அமெரிக்க வீரர் ஷயான் ஜஹாங்கீர் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.

    முதலில் பேட் செய்த அமெரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்களை சேர்த்தது. அமெரிக்கா சார்பில் நிதானமாக ஆடிய ஸ்டீவன் டெய்லர் 24 ரன்களிலும், நிதிஷ் குமார் 27 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

    இதைத் தொடர்ந்து இந்திய அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் சூர்யகுமார் யாதவ் 50 ரன்களையும், ஷிவம் துபே 31 ரன்களையும் குவித்தனர்.

    • டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய அமெரிக்கா 110 ரன்களை எடுத்தது.

    நியூயார்க்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 25-வது லீக் போட்டி நியூயார்க்கில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, அமெரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, அமெரிக்கா அணி முதலில் களமிறங்கியது. முதல் ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். முதல் பந்திலும், கடைசி பந்திலும் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஹர்திக் பாண்ட்யா ஒரு விக்கெட்டும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். முதல் 10 ஓவரில் அமெரிக்கா 42 ரன்களை எடுத்தது.

    12-வது ஓவரில் 11 ரன்னும், 13-வது ஓவரில் 12 ரன்னும் எடுத்தது. நிதிஷ் குமார் 27 ரன்னிலும், ஸ்டீவன் டெய்லர் 24 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இறுதியில், அமெரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 110 ரன்களை எடுத்தது.

    இந்தியா சார்பில் 4 ஓவர் வீசிய அர்ஷ்தீப் சிங் 9 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 111 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.

    • கிரிக்கெட் போட்டி 19-வது நூற்றாண்டில் டெஸ்ட் வடிவில் சர்வதேச போட்டியாக மாறியது.
    • 16-வது நூற்றாண்டில் இங்கிலாந்தால் கண்டுபிடிக்கப்பட்ட விளையாட்டு போட்டியாக கருதப்படுகிறது.

    இந்தியாவின் நட்சத்திர பந்து வீச்சாளராக திகழ்பவர் ஜேஸ்பிரிட் பும்ரா. யார்க்கர், ஸ்விங், பவுன்ஸ் என பந்து வீச்சில் கிங்-ஆக திகழ்கிறார். டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 3 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இதனால் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

    இந்த நிலையில் பாலிவுட் நடிகரான ரித்தஷ் தேஷ்முக் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு போட்டோ அனைவரது புருவத்தையும் உயர்த்தியுள்ளது.

    அந்த படம் 10-ம் நூற்றாண்டை சேர்ந்த சிற்பம் ஆகும் இந்த சிற்பத்தை பார்க்கும்போது பும்ரா பந்து வீசும் சைகை பிரதிபலிப்பது போல் உள்ளது.

    கிரிக்கெட் போட்டி 16-வது நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 19-வது மற்றும் 20-வது நுற்றாண்டில் உலககளில் பல்வேறு நாடுகளில் விளையாடப்பட்டது. 19-வது நூற்றாண்டில் முதன்முறையாக டெஸ்ட் முறையில் கிரிக்கெட்டில் விளையாடப்பட்டது.

    ஆனால் 10-ம் நூற்றாண்டு படத்தை பதிவிட்டுள்ளதாக குறித்து ரசிகர்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

    • தொடக்க சுற்றின் பெரும்பாலான போட்டிகள் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது.
    • தற்காலிக பிட்ச் அமைக்கப்படுள்ள நிலையில், வீரர்களுக்கான வசதி மிகவும் குறைவு என ஐசிசி மீது புகார்.

    ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்தியா முதல் மூன்று போட்டிகளை நியூயார்க்கில் விளையாடுகிறது. இரண்டு போட்டிகளில் விளையாடிய நிலையில், இன்று 3-வது போட்டியில் அமெரிக்காவை எதிர்த்து விளையாடி வருகிறது.

    அமெரிக்காவில் கிரிக்கெட் போட்டியை பிரபலப்படுத்தும் வகையில் அமெரிக்காவில் தொடக்க சுற்று போட்டிகள் நடத்தப்படுகிறது. தற்காலிக பிட்ச் உள்ளிட்ட மைதான வேலைகளை செய்த போதிலும் வீரர்கள் தங்கும் அறைகள், உடற்பயிற்சி செய்வதற்கான வசதிகள், மைதானத்திற்கு வெகு தொலைவில் ஓட்டம் போன்ற விமர்சனங்கள் பல்வேறு அணிகளால் முன்வைக்கப்படுகிறது.

    இந்த நிலையில் இந்திய அணிக்கு லாங் தீவில் ஓட்டல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஓட்டலில் தரமான உடற்பயிற்சி கூடம் (ஜிம்) இல்லை எனத் தெரிகிறது. இதனால் இந்திய அணி வீரர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.

    மேலும், நியூயார்க்கில் உள்ள கான்டியாக் பார்க்கில் அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானத்தில் போதுமான வசதி இல்லாமலும் இந்திய வீரர்கள் அவதிப்படுகிறார்கள்.

    வீரர்கள் சிறந்த முறையில் உடற்பயிற்சி மேற்கொள்ள உள்ளூர் ஜிம்மில் இந்திய வீரர்களை உறுப்பினர்களாக்கி பயிற்சி மேற்கொள்ள பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளார்.

    ஆனால் வசதி குறைபாடு என இந்திய கிரிக்கெட் வாரியத்தால் இதுவரை புகார் ஏதும் செய்யப்படவில்லை. இலங்கை அணி தங்களுக்கான பாதகமான வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டதாக இந்நாட்டு மந்திரி புகார் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
    • இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை 6 ரன்னில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

    நியூயார்க்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தியது. 2-வது போட்டியில் பாகிஸ்தானை 6 ரன்னில் வென்றது.

    இந்நிலையில், இந்தியா, அமெரிக்கா அணிகள் இன்று நியூயார்க்கில் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, அமெரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

    • முதலில் பேட் செய்த கனடா 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 106 ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • அடுத்து ஆடிய பாகிஸ்தான் 17.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 107 ரன் எடுத்து வென்றது.

    நியூயார்க்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 22-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், கனடா அணிகள் மோதின.

    முதலில் பேட் செய்த கனடா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆரோன் ஜான்சன் 52 ரன்கள் எடுத்தார்.

    பாகிஸ்தான் சார்பில் முகமது அமீர், ஹரிஸ் ராப் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 17.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 107 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    முகமது ரிஸ்வான் 53 ரன்கள் எடுத்தார். பாபர் அசாம் 33 ரன் எடுத்தார்.

    இந்நிலையில், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் அரைசதம் அடிக்க 52 பந்துகளை எடுத்துக்கொண்டார். இதன்மூலம் அவர் மோசமான சாதனையை படைத்துள்ளார்.

    டி20 உலகக் கோப்பை வரலாற்றில் மெதுவான அரைசதம் (பந்துகள் அடிப்படையில்) அடித்த வீரர் என்ற மோசமான சாதனையை ரிஸ்வான் (52 பந்துகள்) படைத்தார். இதற்கு முன் இந்தப் பட்டியலில் டேவிட் மில்லர் (50 பந்துகள் - நெதர்லாந்துக்கு எதிராக, 2024) முதல் இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின.
    • நமீபியா மற்றும் ஓமன் அணிகள் தொடரில் இருந்து வெளியேறிவிட்டன.

    நியூயார்க்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறுகிறது. இதில் 4 பிரிவுகளின் கீழ் மொத்தம் 20 அணிகள் மோதுகின்றன.

    லீக் சுற்றில் வெற்றி பெறும் அணிகள் அடுத்து நடைபெறும் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும். சூப்பர் 8 சுற்றில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதிக்கும், அதில் வெற்றி பெறும் இரு அணிகள் இறுதிப்போட்டிக்கும் முன்னேறும். இதுவரை 24 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளனர்.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றுக்கு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் தகுதி பெற்றுள்ளன.

     தென் ஆப்பிரிக்கா அணி இலங்கை வெறும் 77 ரன்களிலும், நெதர்லாந்தை 106 ரன்களிலும் சுருட்டியது. வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில் 4 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

    இதன்மூலம் டி பிரிவில் தென் ஆப்பிரிக்கா அணி 3 வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    இதேபோல், ஆஸ்திரேலியா அணி ஓமனை 39 ரன்கள் வித்தியாசத்திலும், இங்கிலாந்தை 36 ரன்கள் வித்தியாசத்திலும், நமீபியாவை 9 விக்கெட்கள் வித்தியாசத்திலும் வென்றது.

    இதன்மூலம் பி பிரிவில் ஆஸ்திரேலியா அணி 3 வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    பி பிரிவில் இடம்பெற்ற நமீபியா மற்றும் ஓமன் அணிகள் தொடரில் இருந்து வெளியேறிவிட்டன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கேப்டன் கெர்ஹார்டு எராஸ்மஸ் பொறுப்பாக ஆடி 36 ரன்களை சேர்த்தார்.
    • சிறப்பாக பந்துவீசிய ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் 24 ஆவது லீக் போட்டியில் நமீபியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி பேட்டிங் செய்த நமீபியா அணி 72 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நமீபியா வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அந்த அணியின் கேப்டன் கெர்ஹார்டு எர்சாமஸ் மட்டும் பொறுப்பாக ஆடி 36 ரன்களை சேர்த்தார்.

    ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகளையும், ஹேசில்வுட், மார்கஸ் ஸ்டொயினிஸ் தலா 2 விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ் மற்றும் நாதன் எல்லிஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    73 எனும் எளிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணிக்கு டேவிட் வார்னர் 8 பந்துகளில் 20 ரன்களையும், டிராவிஸ் ஹெட் 17 பந்துகளில் 34 ரன்களையும் அடித்தனர். கேப்டன் மிட்செல் மார்ஷ் 18 ரன்களை அடித்தார்.

    இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 5.4 ஓவர்களில் 1 விக்கெட் மட்டும் இழந்து 74 ரன்களை குவித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நமீபியா சார்பில் டேவிட் வெய்ஸ் 1 விக்கெட் வீழ்த்தினார்.

    ×