search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீடியோ வைரல்"

    • காட்சிகள் நெஞ்சை பதைபதைக்கும் வகையில் இருந்தது.
    • பள்ளி மாணவியை கண்மூடித்தனமாக தாக்கியதும் தெரியவந்தது.

    மும்பை:

    பள்ளி மாணவி சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய சிறுமிகள், அவர்களது பெற்றோருக்கு போலீசார் சார்பில் கவுன்சிலிங் வழங்கப்பட்டுள்ளது.

    மும்பையில் பள்ளி செல்லும் ஒரு மாணவியை சில சிறுமிகள் சேர்ந்து கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ காட்சிகள் கடந்த சில நாட்களாக சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    சிறுமிகள் கும்பலாக சேர்ந்து இரக்கமின்றி பள்ளி மாணவியை முடியை பிடித்து இழுத்து அடித்து, கீழே தள்ளி உதைக்கும் காட்சிகள் நெஞ்சை பதைபதைக்கும் வகையில் இருந்தது.

    சிறுமிகள், பள்ளி மாணவியை தாக்கிய சம்பவம் 2 வாரத்துக்கு முன் வெர்சோவா யாரி ரோடு பகுதியில் நடந்தது என்பது தெரியவந்தது.

    சமூகவலைதளத்தில் பரவிய வீடியோ தொடர்பாக வெர்சோவா போலீசார் தாமாக முன்வந்து விசாரணை நடத்தினர்.


    விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்ட சிறுமிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவி யாரி ரோடு பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், சிறிய பிரச்சனை தொடர்பாக தங்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அவர்கள் பள்ளி மாணவியை கண்மூடித்தனமாக தாக்கியதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் சம்பவத்தில் தொடர்புடைய பள்ளி மாணவி, சிறுமிகள் மற்றும் அவர்களின் பெற்றோரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், போலீஸ் அதிகாரிகள் மூலம் கவுன்சிலிங் வழங்கினர்.

    பள்ளி மாணவியை சிறுமிகள் சேர்ந்து தாக்கிய சம்பவத்தை அடுத்து வெர்சோவா பகுதியில் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

    • சுட்டிக் குழந்தைகளின் ஒவ்வொரு செயலும் மிகவும் ரசிக்க செய்யும்.
    • தாய்லாந்தில் நடைபெற்ற தவழும் குழந்தைகளுக்கான போட்டி.

    சுட்டிக் குழந்தைகளின் ஒவ்வொரு செயலும் பார்ப்பவர்களை மிகவும் ரசிக்க செய்யும். அந்த வகையில் தாய்லாந்தில் நடைபெற்ற தவழும் குழந்தைகளுக்கான போட்டி குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பயனர்களை ரசிக்க செய்துள்ளது.

    இந்த போட்டிகளை பொறுத்தவரை குழந்தைகள் ஒருபுறம் இருந்து மறுபுறம் இருக்கும் வெள்ளை கோடான இலக்கை வந்தடைய வேண்டும்.

    தவழும் குழந்தைகள் மட்டுமே பங்கேற்கும் இந்த போட்டியில் குழந்தைகள் இலக்கை அடைய செய்வதற்கு பெற்றோர்கள் பெரும் பாடுபடுவார்கள்.

    அதே போல போட்டியின் போது மழலை குழந்தைகளின் சேட்டைகளும் பார்வையாளர்களை பெரிதும் கவரும். தற்போது வைரலாகி வரும் வீடியோவில், தவழும் குழந்தைகள் இலக்கை அடைவதற்காக பெற்றோர்கள் ஊக்குவிக்கும் காட்சி உள்ளது.

    அதில் ஒரு குழந்தை போட்டி நடைபெறும் இடத்திலேயே படுத்து தூங்குவது போன்றும், அந்த குழந்தையை விழிக்கச் செய்வதற்காக அவரது பெற்றோர் பாடுபடுவதும் போன்ற காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • சிறுமியின் குடும்பம் வறுமையால் வாடியது.
    • உறவினர்கள் யாரும் அவர்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், நிர்மல் மாவட்டம், பெல் தரோடாவை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவரது தந்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவு ஏற்பட்டு இறந்து விட்டார்.

    இவரது தாயார் கூலி வேலை செய்து மகளைக் காப்பாற்றி வந்தார். தந்தை இறந்து விட்டதால் சிறுமியின் குடும்பம் வறுமையால் வாடியது. உறவினர்கள் யாரும் அவர்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை.

    இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சிறுமியின் தாய் நேற்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அறிந்த சிறுமி நிலைகுலைந்து காணப்பட்டார்.

    தனக்கு இருந்த ஒரே ஆதரவும் தற்போது இல்லாததால் மன வேதனை அடைந்தார். தாயின் இறுதி சடங்குகளை செய்ய பணம் இல்லாததால் தாயின் பிணத்தருகே அழுதபடி உட்கார்ந்து இருந்தார்.

    பின்னர் தாயின் இறுதி சடங்கு செய்வதற்காக உதவி செய்யுமாறு கிராம மக்களிடம் கேட்டார்.

    தரையில் துண்டை விரித்து விட்டு சோகமாக உட்கார்ந்து இருந்தார். இது கண்போரை கண்கலங்க செய்தது. சிறுமியின் பரிதாப நிலைமையைக் கண்ட அப்பகுதி மக்கள் கண்கலங்கியபடி சிறிது சிறிதாக பண உதவி செய்தனர்.

    இதனை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர்.

    இதனைக் கண்ட தெலுங்கானா பாரத ராஷ்டிரிய முன்னாள் அமைச்சர் கே.டி. ராமராவ் விரைவில் சிறுமிக்கு நிதி உதவி அளிப்பதாகவும் தற்போது அப்பகுதி கட்சி நிர்வாகியை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்து இறுதி சடங்கு செய்ய அனைத்து உதவியும் செய்ய உத்தரவிட்டார்.

    இதனையடுத்து சிறுமியின் தாயின் இறுதிச் சடங்குக்காண அனைத்து ஏற்பாடுகளும் நடந்தது.

    பெற்றோரை இழந்து தவிக்கும் சிறுமிக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என பலரும் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுதது வருகின்றனர்.

    • போதை காளான் விற்பனை அதிகரித்து வருகிறது.
    • சிறப்புக்குழு அமைத்து கடும் நடவடிக்கை.

    கொடைக்கானல்:

    சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இதில் வாலிபர்கள், கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை காளான் மற்றும் கஞ்சா அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி இவர்களை பிடித்து நடவடிக்கை எடுத்த போதும் தொடர்ந்து கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனை அதிகரித்து வருகிறது.

    கொடைக்கானல் நகர் பகுதி மட்டுமின்றி மேல்மலை கிராமங்களான பூண்டி, மன்னவனூர், கூக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் கஞ்சா, போதை காளான் விற்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    மலை கிராமங்களில் தங்கும் விடுதிகளில் போதைப்பொருள் பயன்படுத்தப் பட்டதாக எழுந்த புகாரையடுத்து அதிகாரிகள் சோதனை நடத்தி தங்கும் விடுதிக்கு சீல் வைத்தனர்.

    இந்த நிலையில் மேல்மலை கிராம பகுதியில் ஒரு வாலிபர் போதை காளானை பறித்து அதில் தேன் ஊற்றி ருசிப்பது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அதில் சிலர் போதை காளானை எவ்வாறு பயன்படுத்துவது, எந்த பகுதியில் அதிகமாக கிடைக்கும் எனவும் சிலர் கருத்து பதிவிட்டுள்ளனர்.

    போதை காளான், கஞ்சா விற்பனையில் கும்பல் தீவிரமாக இயங்கி வருகிறது. கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இந்த பழக்கத்திற்கு அடிமையாகி தங்கள் வாழ்வை தொலைத்து வருகின்றனர்.

    எனவே கொடைக்கானல் மலைப்பகுதியில் சிறப்புக்குழு அமைத்து கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனை செய்யும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சில மாதங்களுக்கு முன்பு இந்த நிறுவனம் 250 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது.
    • அன்அகாடமி ஊழியர்களுக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு இல்லை என்று தலைமை நிர்வாக அதிகாரி கௌரவ் முஞ்சால் தெரிவித்து இருக்கிறார்.

    கடந்த 2015ஆம் ஆண்டில் ஹெமேஸ் சிங் மற்றும் கௌரவ் மஞ்சக் மற்றும் ரோமன் சைனி ஆகியோர் இணைந்து அன்அகாடமி என்ற எஜுடெக் நிறுவனத்தை தொடங்கினர். பெங்களூருவை அடிப்படையாகக் கொண்ட இந்த நிறுவனத்தில் சுமார் 91 ஆயிரம் ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர். 99 மில்லியன் பேர் பதிவு செய்து பாடங்களை கற்று வருகின்றனர்.

    இந்தியாவின் புகழ்பெற்ற கல்வி எஜுடெக் நிறுவனமான அன்அகாடமியில் தலைமை பதவிகளில் இருப்பவர்கள் தொடர்ந்து விலகி வருகின்றனர். இந்த நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆகியோர் பதவியில் இருந்து சில தினங்களுக்கு முன் விலகினர். இதனிடையே, சில மாதங்களுக்கு முன்பு இந்த நிறுவனம் 250 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது.


    இந்நிலையில், அன்அகாடமி ஊழியர்களுக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு இல்லை என்று தலைமை நிர்வாக அதிகாரி கௌரவ் முஞ்சால் தெரிவித்து இருக்கிறார். இதுதொடர்பாக அவர் பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலான நிலையில் கௌரவ் முஞ்சால் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார்.

    ஊழியர்களுக்கு ஆற்றிய உரையின் போது, முஞ்சால் ரூ.33 ஆயிரம் மதிப்பிலான டி-ஷர்ட் அணிந்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. வீடியோவை பார்த்த பயனர் ஒருவர், "இந்த CEO-க்கள் தங்கள் சொந்த வாழ்க்கைத் தரத்தை குறைக்க மாட்டார்கள். மாறாக தங்கள் வணிகங்களை நடத்தும் ஊழியர்களுக்கான சம்பள உயர்வை நிறுத்துவார்கள்" என்று கருத்து தெரிவித்துள்ளார்.

    • சாலையோரம் புழுதி பறக்க கார்கள் வட்டமடித்தன.
    • சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

    பொன்னேரி:

    மீஞ்சூர்-வண்டலூர் இடையே 62 கி.மீட்டர் தூரத்திற்கு 400 அடி வெளிவட்ட சாலை உள்ளது. இந்த சாலையில் விடுமுறை நாட்களில் வாகனப் போக்குவரத்து குறைவாக இருக்கும்.

    இதை பயன்படுத்தி மோட்டார் சைக்கிள், ஆட்டோ ரேஸ், அதிவேகத்தில் மோட்டார் சைக்கிளில் வீலிங் சாகசங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தும் வாகன ரேஸ் தொடர்ந்து நீடித்து வருகிறது.

    இந்த நிலையில் மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் கும்மனூர் அருகே கார் பந்தயம் நடந்த வீடியோ காட்சி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் கட்சி கொடிகளுடன் 5-க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் சாலையில் சீறிப்பாய்கின்றன.

     காரின் மேல் பகுதியை திறந்து காருக்குள் நின்றபடி வாலிபர்கள் தங்களது செல் போன்களில் கார் பந்தயத்தை வீடியோவாக பதிவு செய்தனர். மேலும் சாலையோரம் புழுதி பறக்க கார்கள் வட்டமடித்தன.

    இந்த வீடியோகாட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இது தொடர்பாக செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வாகனங்களின் பதிவு எண்ணை கொண்டு 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலையில் ஆட்டோ ரேஸ் சென்றபோது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற 2 வாலிபர்கள் விபத்தில் சிக்கி பலியானது குறிப்பிடத்தக்கது.

    • வைரலான வீடியோ 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், ஆயிரக்கணக்கான லைக்குகளையும் குவித்தது.
    • வீடியோவை பார்த்த பலரும் தனுமிதாவின் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பினர்.

    சமூக வலைதளங்களில் பிரபலம் ஆவதற்காக இளைஞர்களும், இளம்பெண்களும் செய்யும் சில செயல்கள் கடும் விமர்சனங்களை சந்திக்கிறது. அந்த வகையில் மும்பையை சேர்ந்த தனுமிதா என்ற பெண் தெருக்களில் 'டவல்' மட்டும் கட்டிக்கொண்டு நடந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    பின்னணியில் தௌபா... தௌபா பாடல் ஒலிக்க தனுமிதா டவல் அணிந்தவாறு நடந்து செல்கிறார். பொது இடத்தில் இவ்வாறு நடந்து சென்ற அவரை பஸ் நிறுத்தத்தில் நின்ற பயணிகள், பாதசாரிகள் என பலரும் பார்த்து திகைத்தனர். பின்னர் அவர் திடீரென தனது டவலை எடுத்து வீசினார். அப்போது அவர் ஆடை அணிந்திருந்தது தெரிய வந்தது.

    இன்ஸ்டாகிராமில் வைரலான இந்த வீடியோ 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், ஆயிரக்கணக்கான லைக்குகளையும் குவித்தது. வீடியோவை பார்த்த பலரும் தனுமிதாவின் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பினர். பல பயனர்கள், அவரின் செயலை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.

    • நாளை தொடங்கும் ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் அந்த ரசிகர்களின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

    3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. கடந்த செவ்வாய் கிழமை அன்று நடைபெற்ற கடைசி டி20 போட்டியை சூப்பர் ஓவரில் இந்திய அணி வென்றது. இந்த வெற்றி இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றதும் கிடைத்த முதல் வெற்றியாகும்.

    இதனை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், ஒருநாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நாளை தொடங்கும் ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில், பயிற்சியில் ஈடுபட்டு இருந்த விராட் கோலியை இலங்கை ரசிகர்கள் கேலி செய்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது. பயிற்சில் ஈடுபட்ட கோலியை பார்த்து ரசிகர்கள்'சோக்லி சோக்லி' என்று அழைத்ததும், அதற்கு அவர் கோபமடைந்த சம்பவம் அரங்கேறியது.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், விராட் கோலி, ரோகித் சர்மா, கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்டோர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, ரசிகர் ஒருவர் கோலியை 'சோக்லி சோக்லி' என்று அழைப்பதும் இதனால் வருத்தமடையும் கோலி, அந்த ரசிகரை பார்த்து 'இங்கே இல்லை' என்று கூறுகிறார்.

    இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் அந்த ரசிகர்களின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    • சாகசத்தை வெற்றிகரமாக முடித்ததற்காக சந்தோஷத்தில் ஆர்ப்பரிக்கிறார்.
    • இரண்டே நாளில் இந்த வீடியோவை சுமார் 4 கோடி பேருக்கு மேல் ரசித்துள்ளனர்.

    'ஐ ஷோ ஸ்பீடு' என்ற பெயரில் பிரபலமான யூ-டியூபர் ஸ்ட்ரீமர் . 19 வயது இளைஞரான இவர் பல்வேறு சாகசங்களை வீடியோவாக பதிவு செய்து யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். இவரை பல லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள்.

    இவர் சமீபத்தில் வேகமாக ஓடி வரும் காரை, தாவிக்குதித்து தாண்டியபடி வீடியோ பதிவு செய்தார். இவருக்காக, இவரது தந்தை தங்களுக்கு சொந்தமான சொகுசு காரை வேகமாக ஓட்டி வருகிறார். ஓடி வரும் காருக்கு முன்னே தைரியமாக நிற்கும் ஸ்ட்ரீமர் சரியான நேரத்தில் காரை தாவிக்குதித்து, உயரம் தாண்டும் வீரர் போல அந்தப் பக்கம் சாய்ந்துவிடாமல் கம்பீரமாக நிற்கிறார்.

    பின்னர் சாகசத்தை வெற்றிகரமாக முடித்ததற்காக சந்தோஷத்தில் ஆர்ப்பரிக்கிறார். தந்தையுடன் ஹைபை செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். அந்த வீடியோவை பின்னர் வலைத்தளத்தில் பதிவேற்றினார். "இந்த சாகசத்தை செய்த உலகின் முதல் நபர் நானாகத்தான் இருப்பேன். லைக் பண்ணுங்க, சேர் பண்ணுங்க" என்று பேசுகிறார். இரண்டே நாளில் இந்த வீடியோவை சுமார் 4 கோடி பேருக்கு மேல் ரசித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • டிரைவர் எதற்காக தாக்கப்பட்டார்? கையை கட்டி யார் தாக்கினார்கள்? என தெரியவில்லை.

    மதுரை:

    மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து நாள்தோறும் பல்வேறு மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரையில் உள்ள ஆம்னி பஸ் நிறுவனத்தில் பணிபுரியும் டிரைவரை ஜன்னலில் கையை கட்டி விட்டு அவரை மர்மநபர்கள் சரமாரியாக தாக்குகின்றனர்.

    இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டிரைவர் எதற்காக தாக்கப்பட்டார்? கையை கட்டி யார் தாக்கினார்கள்? என தெரியவில்லை.

    இணையத்தில் பரவி வரும் வீடியோ தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    இந்த நிலையில் இந்த வீடியோ தொடர்பாக மாட்டுத்தாவணி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    • பெண்ணின் உணர்ச்சிகரமான வீடியோ இணையத்தில் வைரலானது.
    • பெண்ணிடம் ஒரு பரிசு பையை கொடுத்து திறக்க சொல்கிறார்.

    ஏழைகளுக்கு உணவு, உடை கொடுத்து பலரும் உதவி செய்வார்கள். ஆனால் அமெரிக்காவை சேர்ந்த சமூகவலைதள பிரபலம் ஒருவர் வீடற்ற ஒரு பெண்ணுக்கு குடியிருப்பு வழங்கி உள்ளார்.

    இதுதொடர்பாக அந்த பெண்ணின் உணர்ச்சிகரமான வீடியோ இணையத்தில் வைரலானது. இன்ஸ்டாகிராமில் இசாஹியா கிராஸா என்ற பயனர் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், அவர் தனது வாகனத்தில் ஒரு பெண்ணை வாழ்த்தும் காட்சிகள் உள்ளது.

    அப்போது அந்த பெண்ணிடம் ஒரு பரிசு பையை கொடுத்து திறக்க சொல்கிறார். அந்த பையில் வீட்டு சாவி இருக்கிறது. அப்போது, நான் உங்களுக்கு ஒரு குடியிருப்பை தருகிறேன் என கூறுகிறார். இதைகேட்டதும் அந்த பெண்ணின் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது.

    தொடர்ந்து வீடியோவில், அந்த பெண்ணை கிராஸா புதிய வீட்டிற்கு அழைத்து செல்கிறார். அந்த வீட்டில் படுக்கை வசதி, டி.வி. உள்ளிட்ட கூடுதல் வசதிகள் இருக்கிறது.

    வீடியோவுடன் கிராஸாவின் பதிவில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு இல்லாமல் தெருக்களில் வாழ்ந்து வந்த பெண்ணுக்கு வீட்டை கொடுத்து ஆச்சரியப்படுத்துகிறேன். அந்த பெண் ஒரு அற்புதமானவர். இந்த அழகான தருணத்தை என்னால் மறக்க முடியாது.

    சமூக வலைதளங்களில் 200 மில்லியன் பார்வைகளை பெற்றதன் விளைவாக இந்த சிறிய மாற்றத்தை ஏற்படுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு 1.10 கோடிக்கும் மேல் பார்வைகளையும், 9 லட்சம் விருப்பங்களையும் குவித்துள்ளது. பயனர்கள் பலரும் கிராஸாவை வாழ்த்தியும், பாராட்டியும் பதிவிட்டு வருகின்றனர்.

    • விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குழந்தையின் தாய் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
    • வீடியோ இன்ஸ்டாகிராமில் சுமார் 3 கோடி பார்வைகளை பெற்றுள்ளது.

    பொதுவாக குழந்தைகள் பிறக்கும் போது பல் இருக்காது. குழந்தை வளரும் போது பற்களும் வளர ஆரம்பிக்கும். சராசரியாக ஒரு நபருக்கு ஞானப்பல் உள்பட 32 பற்கள் வெளிவர 21 வருடங்கள் ஆகும். பற்களின் வளர்ச்சியில் பல்வேறு காரணங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    இந்நிலையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு குழந்தை பிறக்கும் போதே முழுமையாக 32 பற்களுடன் பிறந்துள்ளது. இந்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு பெண், தனது பெண் குழந்தையின் 32 பற்கள் கொண்ட வீடியோவை பகிர்ந்துள்ளார்.

    அதில், அந்த குழந்தைக்கு நேர்த்தியான பற்கள் இருக்கிறது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குழந்தையின் தாய் அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ நிகாதிவா அன்னோ என்ற பயனரின் இன்ஸ்டா கணக்கில் பகிரப்பட்டுள்ளது.

    அரிய நோய் பாதிப்பு காரணமாக பிறக்கும் போதே 32 பற்கள் இருந்ததாகவும், இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவே வீடியோவை பகிர்ந்ததாகவும் குழந்தையின் தாய் தெரிவித்துள்ளார். பிறக்கும் போதே இவ்வாறு பற்களுடன் பிறக்கும் குழந்தைகளின் பிரச்சினையை நேட்டல் டீத் என்று சொல்வார்கள். நீண்ட காலமாக இந்த நேட்டல் பற்கள் பிரச்சனையுடன் பிறந்த குழந்தைகளுக்கு 4 முன் பற்கள், தாடையில் 4 முதல் 6 பற்கள் மற்றும் பலவற்றின் எடுத்துக்காட்டுகள் உள்ளன.

    இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் சுமார் 3 கோடி பார்வைகளை பெற்றுள்ளது.

    ×