என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஐபிஎல் 2024"
- 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
- ஆட்ட நாயகன் விருதை கேப்டன் பாப் டூ பிளசிஸ் வென்றார்.
பெங்களூரு:
ஐ.பி.எல். தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய பெங்களூரு அணி 218 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய சென்னை அணி 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. ஆட்ட நாயகன் விருதை கேப்டன் பாப் டூ பிளசிஸ் வென்றார்.
இந்நிலையில், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு விஜய் மல்லையா தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, மல்லையான எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், முதல் நான்கு இடங்களுக்குள் தகுதிபெற்று ஐபிஎல் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய ஆர்.சி.பி. அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். ஏமாற்றமளிக்கும் தொடக்கத்திற்குப் பிறகு சிறந்த உறுதியும் திறமையும் வெற்றிகரமான வேகத்தை உருவாக்கியுள்ளன. கோப்பையை நோக்கி முன்னேறிச் செல்லுங்கள் என பதிவிட்டுள்ளார்.
- முதலில் ஆடிய பெங்களூரு 218 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய சென்னை 191 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பெங்களூரு:
ஐ.பி.எல். தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய பெங்களூரு அணி 218 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய சென்னை அணி 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
ஆட்டத்தின் கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை யாஷ் தயாள் வீசினார். அதில் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து தோனியின் விக்கெட்டை கைப்பற்றி இருந்தார். கடைசி ஓவரில் அவரது செயல்பாடு சிறப்பாக இருந்தது.
இந்தப் போட்டியில் ஆர்.சி.பி. அணியின் கேப்டன் டூ பிளசிஸ் ஆட்ட நாயகன் விருதை வென்றார். அப்போது அவர் கூறியதாவது:
லீக் சுற்றை வெற்றியுடன் நிறைவு செய்ததில் மகிழ்ச்சி. முதலாவதாக பேட் செய்ய நான் ஆடிய ஆடுகளங்களில் மிகவும் கடினமானதாக இந்த ஆடுகளம் இருந்தது. கடந்த 6 போட்டிகளாக எங்கள் அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினர். ஸ்ட்ரைக் ரேட்டும் சிறப்பாக இருந்தது.
இலக்கு சற்று நெருக்கமாக இருந்தபோது தோனி களத்தில் இருந்தார். பலமுறை வெற்றிகரமாக அதை அவர் செய்துள்ளார் என எண்ணினேன். ஈரமான பந்தில் எங்களது பந்துவீச்சை மாற்ற முயற்சித்தோம். ஆட்ட நாயகன் விருதை யாஷ் தயாளுக்கு வழங்க விரும்புகிறேன். அவர் பந்துவீசிய விதம் நம்ப முடியாததாக இருந்தது. அதற்கு அவர் தகுதியானவர்.
கடைசி ஓவர் வீசுவதற்கு முன் பந்தில் அதிகம் பேஸ் வேண்டாம் என அவரிடம் சொன்னேன். அவரது திறனை நம்புமாறு சொன்னேன். முதல் பந்தில் யார்க்கர் முயற்சித்தார். அடுத்தடுத்த பந்துகளில் வேகத்தை மட்டுப்படுத்தினார். அது பலன் தந்தது.
எங்களுக்கு பார்வையாளர்கள் கொடுத்து வரும் ஆதரவுக்கு நன்றி. எங்களது முதல் இலக்கு நாக்-அவுட் சுற்றுக்குள் நுழைவது. இதை இந்த நேரத்தில் அனுபவிப்பது அவசியம் என தெரிவித்தார்.
- சென்னையைப் பின்னுக்கு தள்ளிய பெங்களூரு அணி 9-வது முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றது.
- நடப்பு தொடரில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சென்னை அணியை வீழ்த்து 7-வது வெற்றியை பெற்று 14 புள்ளிகளை எட்டியது. புள்ளிகளில் சம அளவில் இருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் சென்னையை பின்னுக்கு தள்ளிய பெங்களூரு அணி 9-வது முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். அதன் விவரம் வருமாறு:
சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு வீரர் விராட்கோலி 47 ரன்கள் எடுத்தார். ஐ.பி.எல். தொடரில் இந்த மைதானத்தில் 89 ஆட்டங்களில் ஆடி இருக்கும் அவர் 3,005 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் ஐ.பி.எல். போட்டியில் ஒரே மைதானத்தில் 3,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
மேலும், விராட் கோலி 33 ரன்னை தொட்டபோது ஒட்டுமொத்த டி20 போட்டியில் இந்திய மண்ணில் 9,000 ரன் மைல்கல்லை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்திய மண்ணில் விராட் கோலி மொத்தம் 268 டி20 போட்டிகளில் ஆடி 9,014 ரன்கள் எடுத்துள்ளார்.
நடப்பு தொடரில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். அவர் 37 சிக்சர்கள் அடித்துள்ளார்.
- 20 ஓவர் முடிவில் சிஎஸ்கே அணி 191 ரன்கள் மட்டுமே எடுத்தது.
- இதனால் நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றில் இருந்து சிஎஸ்கே அணி வெளியேறியது.
ஐபிஎல் தொடரின் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டு பிளேசிஸ் 54 ரன்கள் குவித்தார். சென்னை தரப்பில் ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட்டுகளும், துஷார் தேஷ்பாண்டே, சாட்னர் தலா 1 விக்கெட் வீழ்த்தினார்.
இதனையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் - ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர். ருதுராஜ் கோல்டன் டக் முறையில் வெளியேறினார். அடுத்து வந்த மிட்செல் 4 ரன்னில் அவுட் ஆனார். இதனையடுத்து ரச்சின் மற்றும் ரகானே ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
அதிரடியாக விளையாடிய ரகானே 33 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த துபே 7 ரன்னிலும் ரச்சின் 61 ரன்னிலும் மிட்செல் 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து டோனி மற்றும் ஜடேஜா ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 12 பந்தில் 35 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் 6 பந்துக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. தொடர்ந்து அதிரடியை வெளிப்படுத்திய நிலையில் கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்சரை பறக்க விட்ட டோனி 2-வது பந்தில் அவுட் ஆனார்.
இறுதியில் சிஎஸ்கே அணி வெற்றி இலக்கை எட்ட முடியாமல் தோல்வியை தழுவியது. 20 ஓவர் முடிவில் சிஎஸ்கே அணி 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஆர்சிபி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறியது.
- நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மூன்றாவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
- ஐபிஎல் தொடரில் ரூ.20.50 கோடிக்கு பேட் கம்மின்சை ஹைதராபத் அணி ஏலம் எடுத்தது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் ஹைதராபாத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளி மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் பள்ளி சிறுவன் பந்துவீச பேட் கம்மின்ஸ் பேட்டிங் செய்கிறார். பின்னர் பள்ளி குழந்தைகளுடன் இணைந்து அவர் புகைப்படம் எடுத்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மூன்றாவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தடுமாறி வந்த நிலையில் புதிதாக கேப்டன் பொறுப்பை ஏற்ற பேட் கம்மின்ஸ் ஹைதராபாத் அணியை பிளே ஆப் சுற்றுக்குள் கொண்டு போயுள்ளார்.
ஐபிஎல் தொடரில் ரூ.20.50 கோடிக்கு பேட் கம்மின்சை ஹைதராபத் அணி ஏலம் எடுத்தது. ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன 2 ஆவது வீரர் என்ற பெருமையை அப்போது அவர் பெற்றார். ஆனால் இவ்வளவு தொகை கொடுத்து அவரை எடுக்க வேண்டுமா என்ற விமர்சனமும் அப்போது எழுந்தது. ஆனால் அந்த விமர்சனத்தை தவிடுபொடியாக்கி ஹைதராபாத் அணியை பிளே ஆப் சுற்றுக்கு அவர் கொண்டு சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
- அவர்கள் வெளியேறியது ராஜஸ்தான், ஆர்சிபி, பஞ்சாப் அணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் 2024 சீசனின் லீக் சுற்று ஆட்டங்கள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஐபிஎல் தொடரில் இங்கிலாந்து அணி வீரர்கள் பலர் இடம் பிடித்திருந்தனர்.
ஜூன் 1-ந்தேதி டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்குகிறது. அதற்கு முன் பாகிஸ்தான் அணியுடன் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதற்காக இங்கிலாந்து அணி வீரர்களை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் திரும்ப அழைத்துள்ளது.
இதனால் பிளேஆஃப் சுற்றுகளில் இங்கிலாந்து வீரர்கள் யாரும் இடம் பெறமாட்டார்கள். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பட்லர் சிறப்பாக விளையாடி வந்தார். இரண்டு சதங்கள் விளாசியுள்ளார். ஆர்சிபி அணியில் வில் ஜேக்ஸ் விளையாடி வந்தார். பஞ்சாப் அணியில் சாம் கர்ரன் இடம் பிடித்திருந்தார்.
தற்போது முக்கியமான கட்டத்தில் இங்கிலாந்து வீரர்கள் வெளியேறுவதால் அணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய கிரிக்கெட் விமர்சகருமான இர்பான் பதான் "விளையாட முடிவு செய்துவிட்டால் தொடர் முழுவதும் விளையாட வேண்டும். இல்லையெனில் ஐபிஎல் போட்டியில் விளையாட வரக்கூடாது" இவ்வாறு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
- இரண்டு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே இடம் பெறுவார்கள் என அறிவிப்பு.
- 13 போட்டிகளில் விளையாடி ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் செயல்பட்டு வந்தார். ஒன்றிரண்டு போட்டிகளுக்குப் பிறகு அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் துணைக் கேப்டனாக இருந்த ஜித்தேஷ் சர்மா கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த சாம் கர்ரனை கேப்டனாக பஞ்சாப் அணி நியமித்தது. துணைக் கேப்டனாக ஒருவரை அறிமுகம் செய்துவிட்டு, அவரை கேப்டனாக நியமிக்காமல் மற்றொரு வீரரான சாம் கர்ரனை நியமித்ததற்கு கிரிக்கெட் விமர்சகர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
சாம் கர்ரன் தலைமையில் பஞ்சாப் அணி கடுமையாக போராடியது. ஆனால் வெற்றியை முழுமையாக பெறவில்லை. கொல்கத்தா அணிக்கெதிராக 262 இலக்கை எட்டி வரலாற்று சாதனைப் படைத்தது. ஆர்சிபி அணிக்கெதிராக கடந்த 9-ந்தேதி தோல்வியடைந்து பிளேஆஃப் சுற்று வாய்ப்பை இழந்தது. இதனால் 12 போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.
கடந்த புதன்கிழமை நடைபெற்ற ராஜஸ்தான் ராயல் அணிக்கெதிரான போட்டியில் வெற்றி பெற்றது. நாளை கடைசி ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியின்போது பஞ்சாப் அணி கேப்டனாக ஜித்தேஷ் சர்மா செயல்படுவார் என பஞ்சாப் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், ரோசோவ் மற்றும் நாதன் எல்லிஸ் ஆகிய இரண்டு வெளிநாட்டு வீரர்கள்தான் இடம் பெறுவார்கள் எனத் தெரிவித்துள்ளது. சாம் கர்ரன் இங்கிலாந்து அணிக்காக விளையாட சொந்த நாடு திரும்பியதாக தெரிகிறது.
- ரோகித் சர்மா 14 போட்டிகளில் விளையாடி 417 ரன்கள் அடித்துள்ளார்.
- பும்ரா 13 போட்டிகளில் 20 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த வருட ஐபிஎல் சீசன் சிறப்பாக அமையவில்லை. 14 போட்டிகளில் நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
முதல் மூன்று போட்டிகளில் தோல்வியடைந்த மும்பை இந்தியன்ஸ், அதற்கு பின் தொடரந்து இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது. என்றபோதிலும் அதன் உத்வேகத்தை தொடர்ந்து எடுத்துச்செல்ல முடியவில்லை. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன் பதவிதான். அவருக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டதால் அணியில் இரு பிரிவு உண்டானதாக கூறப்பட்டது.
மேலும் ஹர்திக் பாண்ட்யா இந்த சீசனில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்படவில்லை. ஒட்டுமொத்தமாக கடைசி இடத்தை பிடித்து ஏமாற்றம் அடைந்துள்ளது.
ரோகித் சர்மா 14 போட்டிகளில் விளையாடி 417 ரன்கள் சேர்த்து அதிக ரன்கள் அடித்த மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்கள் வரிசையில் முதல் இடம் பிடித்துள்ளார். இவரது ஸ்கோரில் ஒரு சதம், ஒரு அரைசதம் அடங்கும்.
திலக் வர்மா 13 போட்டிகளில் விளையாடி 416 ரன்கள் அடித்துள்ளார். இவரது ஸ்கோரில் 3 அரைசதம் அடங்கும். சூர்யகுமார் யாதவ் 11 போட்டிகளில் விளையாடி 345 ரன்கள் அடித்துள்ளார். இஷான் கிஷன் 320 ரன்களும், டிம் டேவிட் 241 ரன்களும் சேர்த்தனர்.
பந்து வீச்சில் பும்ரா 13 போட்டிகளில் விளையாடி 20 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இந்த சீசனில் இதுவரை பஞ்சாப் அணி வீரர் ஹர்ஷல் பட்டேல் 13 போட்டிகளில் 22 விக்கெட்டுகள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார்.
சாவ்லா மற்றும் கோயேட்சே தலா 13 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்ட்யா 11 விக்கெட்டுகளும், நுவான் துஷாரா 8 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் கடந்த முறை பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருந்தது. 2022-ல் கடைசி இடத்தை பிடித்தது. 2021-ல் ஐந்தாவது இடத்தையும், 2020-ல் முதல் இடத்தையும், 2019-ல் முதல் இடத்தையும், 2018-ல் ஐந்தாவது இடத்தையும், 2017-ல் முதல் இடத்தையும், 2015-ல் 2-வது இடத்தையும், 2014-ல் ஐந்தாவது இடத்தையும், 2013-ல் 2-வது இடத்தையும், 2012-ல் 3-வது இடத்தையும், 2011-ல் 3-வது இடத்தையும், 2010-ல் முதல் இடத்தையும், 2009-ல் 7-வது இடத்தையும், 2008-ல் ஐந்தாவது இடத்தையும் பிடித்திருந்தது.
- ஹர்திக் பாண்ட்யா தலைமையில் கீழ் ரோகித் சர்மா விளையாட விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.
- அடுத்த சீசனில் வெறு அணிக்கு செல்ல வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் ரோகித் சர்மா. மும்பை இந்தியன்ஸ் அணியின் அசைக்க முடியாத வீரராகவும், கேப்டனாகவும் திகழ்ந்தார். இவரது தலைமையில் மும்பை இந்தியன்ஸ் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
இதனால் ரோகித் சர்மா விரும்பும் வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக திகழ்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் கேப்டனாக்கியது.
இது ரோகித் சர்மாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் இந்த தொடருக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட மாட்டார் என யூகிக்கப்படுகிறது.
இந்த நிலையில்தான் பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்த நிலையில், நேற்று வான்கடே மைதானத்தில் தனது கடைசி லீக் ஆட்டத்தில் லக்னோ அணியை மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொண்டது.
முதலில் விளையாடிய லக்னோ 214 ரன்கள் குவித்தது, பின்னர் 215 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியால் 196 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தது.
This could be Rohit Sharma's last walk back in a Mumbai jersey. There are strong indications that he won't play under Hardik Pandya.
This could be Rohit Sharma's last walk back in a Mumbai jersey. There are strong indications that he won't play under Hardik Pandya.#RohitSharma #MIvsLSG pic.twitter.com/L0l3TYQMpM
— Manoj Tiwari (@ManojTiwariIND) May 18, 2024
இந்த போட்டியில் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி 38 பந்தில் 10 பவுண்டரி, 3 சிக்சருடன் 68 ரன்கள் விளாசினார். அவர் ஆட்டமிழந்து ஆடுகளத்தை விட்டு வெளியேறும்போது வான்கடே மைதானத்தில் அமர்ந்து போட்டியை ரசித்து கொண்டிருந்த ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து கைத்தட்டினர்.
இதை பார்க்கும்போது அவருக்கு பிரியாவிடை கொடுப்பதுபோல் இருந்தது. இதனால் நேற்று விளையாடிய போட்டிதான் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோகித் சர்மா விளையாடிய கடைசி போட்டி என பார்க்கப்படுகிறது.
நேற்றைய போட்டி முடிவடைந்த பின் ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் அணி உரிமையாளர் நீடா அம்பானியுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சிஎஸ்கே, ஆர்சிபி இடையிலான ஆட்டம் மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
- இதில் வென்றாலோ, மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலோ சிஎஸ்கே அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
பெங்களூரு:
பிளே ஆப் சுற்றுக்கான 4வது அணியாக நுழையப் போவது யார் என்பதில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் இடையே நீயா, நானா என போட்டி ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.
இந்தப் போட்டியில் வென்றாலோ அல்லது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலோ சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.
ஆனால், பெங்களூரு அணி சென்னை அணியை விட குறைவான ரன்ரேட் வைத்துள்ளது. எனவே இன்று நடக்கும் போட்டியில் ஆர்.சி.பி. அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றாலோ அல்லது 18.1 ஓவரில் இலக்கை எட்டி வெற்றியைப் பெற்றாலோ 4-வது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
உதாரணமாக, பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து 200 ரன் எடுத்தால் குறைந்தபட்சம் 18 ரன் வித்தியாசத்திலும், 2-வது பேட்டிங் செய்தால் 200 ரன் இலக்கை 11 பந்துகள் மீதம் வைத்தும் வெற்றிபெற வேண்டும்.
இதற்கிடையே, பெங்களூருவில் நடைபெறவுள்ள ஆர்சிபி, சிஎஸ்கே இடையிலான ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட 80 சதவீத வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆட்டத்தின் ஓவர்களும் குறைக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
அதன்படி, 5 ஓவர்கள் வரை கொண்ட ஆட்டத்தில் ஆர்சிபி அணி முதலில் களமிறங்கினால் 5 ஓவர்களில் 75 ரன்களை அடித்து, சிஎஸ்கேவை 57 ரன்களில் சுருட்ட வேண்டும்.
ஒருவேளை சேசிங் என்றால் சிஎஸ்கே 5 ஓவரில் 75 ரன்களை அடித்தால், ஆர்சிபி அணி 3.1 ஓவரில் இலக்கை சேஸ் செய்யவேண்டும். இது நடந்தால் மட்டுமே ஆர்சிபியால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும்.
- மும்பை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தவால் குல்கர்னியுடன் ரோகித் சர்மா பேசிக்கொண்டிருந்தார்.
- அப்போது அவர் கேமராமேனை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டது சமூக வலைதளத்தில் வைரலாகியது.
மும்பை:
மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா, மும்பை அணியின் முன்னாள் வீரரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பயிற்சியாளர்களில் ஒருவருமான அபிஷேக் நாயருடன் பேசிய வீடியோவை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி தனது சமூக வலைதள பக்கத்தில் கடந்த வாரம் வெளியிட்டது.
அந்த வீடியோவில், ரோகித் சர்மாவும், அபிஷேக் நாயரும் பேசுவது தெளிவாக கேட்கவில்லை. சில ரசிகர்கள் நாய்ஸ் கேன்சலேஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரோகித் சர்மா பேசுவதை மட்டும் தனியாக பிரித்து எடுத்தனர். அதில் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணி பற்றி பேசி இருப்பது தெரியவந்தது. இதன்மூலம் ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் மீது கடும் அதிருப்தியில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்த சர்ச்சை வீடியோவை வெளியிட்ட சில நிமிடங்களில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி நீக்கிவிட்டது.
இந்நிலையில், மும்பையில் நேற்று நடந்த ஐ.பி.எல். போட்டியில் மும்பை முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தவால் குல்கர்னியுடன் ரோகித் சர்மா பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் கேமராமேனை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டார். ஏற்கனவே ஒரு ஆடியோ வெளியாகி சர்ச்சையை உண்டு பண்ணியுள்ளது. எனவே ஆடியோவை ஆப் செய்யுங்கள் என தெரிவித்தார். இதுதொடர்பான காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- லக்னோ தரப்பில் ரவி பிஸ்னோய் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய 67-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பூரன் 29 பந்தில் 75 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மும்பை அணி தரப்பில் சாவ்லா மற்றும் துஷாரா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அதனை தொடர்ந்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா-டெவால்ட் ப்ரீவிஸ் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்தது. மந்தமாக விளையாடிய டெவால்ட் ப்ரீவிஸ் 20 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் டக் அவுட் ஆனார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா அரை சதம் அடித்து அசத்தினார்.
அவர் 68 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த பாண்ட்யா 16 ரன்னிலும் வதேரா 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து இஷான் கிஷன் மற்றும் நமன் வெற்றிக்காக போராடினர். அதிரடியாக விளையாடிய நமன் அரை சதம் விளாசினார்.
இறுதியில் மும்பை அணியால் 20 ஓவர் முடிவில் 196 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் லக்னோ அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லக்னோ தரப்பில் ரவி பிஸ்னோய் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்