search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீ விபத்து பலி"

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • உயிர் தப்பிய பாண்டீஸ்வரன் என்பவர் தான் சமையல் வேலை செய்து கொண்டிருந்துள்ளார்.

    சூலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கடமலைக்குன்று என்ற இடத்தைச் சேர்ந்தவர் அழகர்ராஜா (வயது 30). இவர் கோவையில் பெட்ரோல் டேங்கர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் பணிக்கு செல்வதற்கு வசதியாக சூலூர் அருகே உள்ள முத்துக்கவுண்டன்புதூரில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்தார். இவருடன் அவரது ஊரைச் சேர்ந்த 4 லாரி டிரைவர்களும், தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் 2 பேரும் தங்கியிருந்தனர்.

    நேற்று நள்ளிரவில் இவர்கள் தங்கியிருந்த வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. வீட்டில் இருந்த 7 பேரும் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என சத்தம் போட்டு அலறினார்கள்.

    சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். தீ வீடு முழுவதும் எரிந்ததால் மற்றவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை. இதுபற்றி சூலூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் அழகர்ராஜா, அவருடன் தங்கியிருந்த டிரைவர் முத்துக்குமார், சின்னக்கருப்பு ஆகிய 3 பேரும் உடல் கருகி பலியானார்கள்.

    பாண்டீஸ்வரன், தினேஷ்குமார், மனோஜ், வீரமணி ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் தினேஷ்குமார், மனோஜ், வீரமணி ஆகிய 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் அனைவரும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். பாண்டீஸ்வரனுக்கு மட்டும் குறைவான காயங்கள் இருந்துள்ளது. அவர் தான் மற்ற 3 பேரையும் மீட்டு வெளியே அழைத்து வந்துள்ளார்.

    இந்த கோர விபத்து தொடர்பாக சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கருமத்தம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன், சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன் மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    வீட்டில் தங்கியிருந்தவர்கள் டிரைவர்கள் என்பதால் லாரியின் தேவைக்காக சுமார் 10 லிட்டர் பெட்ரோல் வைத்திருந்தார்களாம். அந்த பெட்ரோலை மற்றொரு கேனுக்கு மாற்றியுள்ளனர். அப்போது கியாஸ் சிலிண்டரில் சமையல் வேலையும் நடந்துள்ளது. இதில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டு வீட்டில் தீப்பற்றியதாக கூறப்படுகிறது. இதனாலேயே 3 பேர் இறந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    உயிர் தப்பிய பாண்டீஸ்வரன் என்பவர் தான் சமையல் வேலை செய்து கொண்டிருந்துள்ளார். அவரிடம் மாஜிஸ்திரேட்டு நடந்த விவரங்களை வாக்குமூலமாக பெற்றுள்ளார். அந்த வாக்குமூலத்தின் பெயரிலேயே தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடிக்கவில்லை. சிலிண்டர் வெடித்து இருந்தால் அந்த வீடு மட்டுமல்லாமல் பக்கத்து வீடுகளும் சேதம் அடைந்து உயிர்ச்சேதம் அதிகரித்து இருக்கும். தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு சிலிண்டர் வெடிப்பதற்குள் அதனை குளிர்வித்து வெளியே கொண்டு வந்தனர்.

    தீ விபத்தில் பலியான அழகர்ராஜா, ராவத்தூர் பிரிவு அருகே நேற்று காலை லாரி ஓட்டிச் சென்றார். அப்போது மொபட்டில் வந்த தனியார் பள்ளி ஆசிரியை மீது லாரி மோதியது. இந்த விபத்தில் ஆசிரியை பலியானார்.

    இந்த வழக்கு தொடர்பாக போலீசார் அழகர்ராஜாவை கைது செய்துள்ளனர். இரவில் அவர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். அதன்பிறகு வீட்டுக்கு திரும்பிய நிலையில் தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் காலையில் நடந்த சாலை விபத்துக்கும், தீ விபத்துக்கும் எதேனும் தொடர்பு உண்டா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • தீ விபத்துக்கான காரணம் தெரியவரவில்லை.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே உள்ள அங்காடிக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் பினிஷ்குரியன் (வயது 45). இயற்கை மசாலா பொருட்கள் வியாபாரி.

    இவர் வீட்டின் 2-வது மாடியில் மனைவி அனுமோல் (40), மகள் ஜோனா (8), மகன் ஜெஸ்வின் (5) ஆகியோருடன் வசித்து வந்தார். வீட்டின் அருகிலேயே அவரது வர்த்தக நிறுவனம், குடோன், மசாலா பொருட்களை உலர்த்தும் பகுதி செயல்பட்டு வந்தது.

    நேற்று இரவு பினிஷ்குரியன் குடும்பத்தினருடன் ஒரு அறையில் படுத்து தூங்கினார். இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு அவரது இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அங்கமாலி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் இறங்கினர். ஆனால் அதற்குள் பினிஷ்குரியன், அவரது மனைவி அனுமோல் மற்றும் 2 குழந்தைகள் தீயில் உடல் கருகி பலியானார்கள். தீ விபத்துக்கான காரணம் தெரியவரவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பலர் தீ மற்றும் புகை மூட்டதில் சிக்கி கொண்டனர்.
    • மின்சார மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கட்டிடத்தில் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

    சீனாவின் கிழக்கில் நான்ஜிங் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அதிகாலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

    வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். ஆனால் பலர் தீ மற்றும் புகை மூட்டத்தில் சிக்கி கொண்டனர்.

    இந்த தீ விபத்தில் 15 பேர் பலியானார்கள். 44 பேர் காயமடைந்தனர். தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.

    முதற்கட்ட விசாரணையில் மின்சார மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கட்டிடத்தில் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது என தெரிய வந்தது.

    • பயிற்சி தளத்துக்கு அடுத்துள்ள சுரங்கத்தில் திடீரென தீப்பிடித்தது.
    • ராணுவ முகாம் மற்றும் அங்கிருந்த வாகனங்கள் போன்றவை கொழுந்துவிட்டு எரிந்தன.

    கேப்டவுன்:

    தென் ஆப்பிரிக்காவின் வடக்கு கேப் மாகாணத்தில் ராணுவ பயிற்சி தளம் செயல்படுகிறது. இங்கு ராணுவ வீரர்கள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த பயிற்சி தளத்துக்கு அடுத்துள்ள சுரங்கத்தில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென ராணுவ பயிற்சி தளத்துக்கும் பரவியது.

    இதில் ராணுவ முகாம் மற்றும் அங்கிருந்த வாகனங்கள் போன்றவை கொழுந்துவிட்டு எரிந்தன. தீயணைப்பு வீரர்களின் முயற்சியால் இந்த தீ அணைக்கப்பட்டது. எனினும் 6 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். 3 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு அந்த நாட்டின் ராணுவ உயர் அதிகாரிகள் இரங்கல் தெரிவித்தனர்.

    • தீ மளமளவென கட்டிடம் முழுவதும் பரவியது.
    • தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    உத்தரபிரதேச மாநிலம் ஜான்வி மாவட்டம் சிப்ரிபஜார் பகுதியில் 3 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை செய்யும் ஷோரூம் மற்றும் பல்வேறு கடைகள் இயங்கி வருகிறது.

    நேற்று இரவு இங்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென கட்டிடம் முழுவதும் பரவியது. இது பற்றி அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.சுமார் 10 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கட்டிடத்தில் சிக்கி கொண்ட இன்சூரன்சு நிறுவனத்தை சேர்ந்த உதவி பெண் மேலாளர் உள்பட 4 பேர் தீயில் கருகி உயிர் இழந்தனர். 3 மாடி கட்டிடமும் தீயில் கடுமையான சேதம் அடைந்தது. தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    • மின்சார சுவிட்ச் பாக்ஸ் அனைத்தும் எரிந்து வீடு முழுவதும் புகைமூட்டம் ஏற்பட்டது.
    • புகைமூட்டத்தில் சிக்கிய பாலையா சம்பவ இடத்திலேயே இறந்து இருப்பது தெரிந்தது. அவரது உடலை மீட்டனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த பன்னூர் தோமையர் தெருவை சேர்ந்தவர் பாலையா (வயது80). தனியாக வசித்து வந்தார். இவரது வீட்டில் மின் கசிவால் தீப்பிடித்தது. இதின் மின்சார சுவிட்ச் பாக்ஸ் அனைத்தும் எரிந்து வீடு முழுவதும் புகைமூட்டம் ஏற்பட்டது. இதில் சிக்கிய பாலையாவால் வீட்டில் இருந்து வெளியே வரமுடியவில்லை. அவர் மூச்சுத் திணறி மயக்கம் அடைந்து விழுந்தார்.

    இதற்கிடையே பாலையாவின் வீட்டில் இருந்து புகை வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் பேரம்பாக்கம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது புகைமூட்டத்தில் சிக்கிய பாலையா சம்பவ இடத்திலேயே இறந்து இருப்பது தெரிந்தது. அவரது உடலை மீட்டனர்.

    மப்பேடு போலீசார் பாலையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் புகை மூட்டத்தில் சிக்கி முதியவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தீ விபத்து ஏற்பட்டு பெண் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • பேரணாம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த ஊசூராம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகையன் (வயது 60). இவர் அதே பகுதியில் உள்ள வீட்டில் குடிசைத் தொழிலாக தீப்பெட்டிகள் செய்து வருகிறார்.

    இன்று காலை 8 மணி அளவில் முருகையன் மற்றும் அவரது தங்கை சுகுணா (56) ஆகியோர் மருந்துகள் பொருத்திய தீக்குச்சிகளை, சாக்கு பைகளில் கொட்டினர். அப்போது தீக்குச்சிகள் ஒன்றோடு ஒன்று உரசி திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த முருகையன் மற்றும் சுகுணா ஆகியோர் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். கண்ணிமைக்கும் நேரத்தில் வீடு முழுவதும் தீ பரவியதால், 2 பேர் மீது தீப்பற்றி எரிந்தது.

    இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். விபத்தில் சிக்கிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த குடியாத்தம் தீயணைப்புத் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுகுணா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தீ விபத்து ஏற்பட்டு பெண் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கச்சா எண்ணெய் குழாயில் இருந்து சிலர் சட்டவிரோதமாக கச்சா எண்ணெய் திருட முயற்சித்துள்ளனர்.
    • எதிர்பாராத விதமாக கச்சா எண்ணெய் குழாயில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.

    அபுஜா:

    நைஜீரியா நாட்டில் கச்சா எண்ணெய் திருட்டு சம்பவங்கள் பெருமளவில் நடைபெற்று வருகிறது. கச்சா எண்ணெய் விநியோகிக்கும் குழாய்களில் இருந்து சட்ட விரோதமாக கச்சா எண்ணெய் திருடி அதை வெளிச்சந்தையில் விற்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

    இந்நிலையில் அந்நாட்டின் நைஜர் டெல்டா மாகாணம் மைஹா நகரில் செல்லும் கச்சா எண்ணெய் குழாயில் இருந்து சிலர் சட்டவிரோதமாக கச்சா எண்ணெய் திருட முயற்சித்துள்ளனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக கச்சா எண்ணெய் குழாயில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் கச்சா எண்ணெய் குழாயில் பயங்கரமாக தீப்பற்றி எரிந்தது. இந்த சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×