search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணிப்பூர் வன்முறை"

    • மே மாதம் நடைபெற்ற இந்தக் கொடூரச் சம்பவம் 2½ மாதங்களுக்குப் பிறகு வெளி உலகிற்கு வந்துள்ளது.
    • மணிப்பூர் மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2 மாத காலமாக கலவரம் நடைபெற்று வருகின்ற சூழ்நிலையில், ஒரு கும்பல் இரு பழங்குடியினப் பெண்களை நிர்வாணமாக்கி அழைத்துச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதைப் பார்க்கும்போது நெஞ்சு பதைபதைக்கிறது. இரு பெண்களும் மர்மக் கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தக் கொடூரமான, மிருகத்தனமான, மனித நேயமற்ற செயலுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மே மாதம் நடைபெற்ற இந்தக் கொடூரச் சம்பவம் 2½ மாதங்களுக்குப் பிறகு வெளி உலகிற்கு வந்துள்ள நிலையில், குற்றவாளிகள் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது மிகுந்த வேதனைக்குரிய ஒன்று. குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து அவர்கள் மீது சட்டப்படி உடனடியாக நடவடிக்கை எடுத்து தண்டனைப் பெற்றுத் தரவும், மணிப்பூர் மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • மணிப்பூரில் நடந்த சம்பவம் மிகவும் வெட்க கேடானது.
    • மணிப்பூரில் இந்தியா என்ற எண்ணம் தாக்கப்படும் போது இந்தியா அமைதியாக இருக்காது.

    மணிப்பூரில் 2 பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ சமூகவலை தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் எதிர் கட்சி தலைவர்கள் இந்த சம்பவம் தொடர்பாக மணிப்பூர் மாநில அரசு, மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    இது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில், பிரதமரின் மவுனம் மற்றும் செயலற்ற தன்மை மணிப்பூரை அராஜகத்திற்கு இட்டு சென்றுள்ளது. மணிப்பூரில் இந்தியா என்ற எண்ணம் தாக்கப்படும் போது இந்தியா அமைதியாக இருக்காது.

    நாங்கள் மணிப்பூர் மக்களுடன் நிற்கிறோம். சமாதானம் ஒன்றே முன்னோக்கி செல்லும் வழி என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதே போல பிரியங்கா காந்தியும் தனது டுவிட்டர் பதிவில், மணிப்பூரில் நடக்கும் வன்முறை சம்பவங்களில் மத்திய அரசும், பிரதமரும் ஏன் கண்மூடி தனமாக அமர்ந்திருக்கிறார்கள்? இது போன்ற படங்களும், வன்முறை சம்பவங்களும் அவர்களை தொந்தரவு செய்யவில்லையா? என குறிப்பிட்டுள்ளார்.

    டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பதிவில், மணிப்பூரில் நடந்த சம்பவம் மிகவும் வெட்க கேடானது. கண்டனத் துக்குரியது. இதுபோன்ற கொடூரமான செயலை இந்திய சமூகத்தில் பொறுத்து கொள்ள முடியாது என்று பதிவிட்டுள்ளார்.

    இதே போல திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. 

    • பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்ததோடு, குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என உறுதி
    • மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து தங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்- உச்சநீதிமன்றம்

    சென்ற மே மாதம் மணிப்பூரில் இரு இனத்தவருக்கிடையே மோதல் உருவானது. பிறகு, இதுபெருங்கலவரமாக மாறியது. இதனால் பலர் வீடுகளை விட்டு வெளியேறி அண்டை மாநிலங்களில் புகலிடம் தேடும் நிலைமை உருவானது. வீடுகள், கட்டிடங்கள், பள்ளிகள் தாக்கப்பட்டன, வழிபாட்டு தலங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

    அதிகாரபூர்வமாக இதுவரை 142 பேர் பலியானதாகவும், 300 பேர் காயமடைந்துள்ளதாகவும், மற்றும் சுமார் 54 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் இம்மாநில கலவரம் தொடர்பாக மே மாதம் நடைபெற்றதாக சொல்லப்படும் ஒரு சம்பவம் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. அதில் ஒரு அதிர்ச்சி தரும் காட்சி இருந்தது.

    அந்த வீடியோவில் ஆண்கள் நிறைந்த கும்பல் ஒன்றில் இருபெண்கள் ஆடையின்றி அழைத்து செல்லப்படுகிறார்கள். பிறகு அவர்கள் மானபங்கபடுத்தப்படுகிறார்கள்.

    நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் இந்த வீடியோ காட்சிகள் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் நரசிம்மா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோரை உள்ளடக்கிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் தங்களது வேதனையை தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து நீதிபதிகள் தெரிவித்திருப்பதாவது:-

    இது எங்களை மிகவும் மனதளவில் பாதித்திருக்கிறது. இந்த சம்பவம் எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. மாநில மற்றும் மத்திய அரசாங்கங்கள் உடனடியாக தலையிட்டு அவர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுத்து, அதனை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    நாங்கள் அரசாங்கங்களுக்கு அவகாசம் அளித்து காத்திருக்கிறோம். ஆனால் எதுவும் நடைபெறவில்லையென்றால் நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்.

    இவ்வாறு அந்த பெஞ்ச் கூறியிருக்கிறது.

    • குற்றவாளி யாரையும் தப்பிக்க விடமாட்டோம் என்பதை நாட்டு மக்களுக்கு உறுதி அளிக்கிறேன்
    • சட்டம் அதன் முழு வலிமையுடன் செயல்பட்டு நடவடிக்கை எடுக்கும்

    மணிப்பூரில் இரண்டு பழங்குடியின் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக ஒரு கும்பலால் இழுத்து செல்லப்படும் வீடியோ நேற்று வெளியானது. இந்த வீடியோ கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று தொடங்கும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் இது பிரதிபலிக்கும் எனத் தெரிகிறது.

    இந்த நிலையில் பிரதமர் மோடி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறுகையில் ''குற்றவாளி யாரையும் தப்பிக்க விடமாட்டோம் என்பதை நாட்டு மக்களுக்கு உறுதி அளிக்கிறேன். சட்டம் அதன் முழு வலிமையுடன் செயல்பட்டு நடவடிக்கை எடுக்கும். மணிப்பூர் மகளுக்கு நடந்த கொடூரம் மன்னிக்க முடியாதது.

    என இதயம் கோபம் மற்றும் வலியால் நிறைந்திருக்கிறது. மணிப்பூர் சம்பவம் எந்தவொரு நாகரீக சமுதாயத்திற்கும் வெட்கக்கேடானது. மாநில சட்டம்-ஒழுங்கு, குறிப்பாக பெண்கள் பாதுகாப்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி அந்தந்த மாநில முதல்வர்களை வலியுறுத்துகிறேன்'' என்றார்.

    • ஆகஸ்ட் மாதம் 11-ந்தேதி வரை மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும்.
    • 17 அமர்வுகள் இடம்பெறும் நிலையில், 32 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு.

    இந்திய பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் மாதம் 11-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் 32 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    மணிப்பூர் வன்முறை, விலைவாசி உயர்வு உள்ளிட்டவை குறித்து எதிக்கட்சிகள் கேள்விகள் எழுப்பி நெருக்கடி அளித்து வருவதால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    • இரண்டு பெண்கள் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்படும் விடியோ வெளியானது
    • இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டுள்ள போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்

    மணிப்பூரில் வன்முறை இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், திடீரென இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி சாலையில் ஊர்வலமாக இழுத்துச் செல்லும் நெஞ்சை பதற வைக்கும் வீடியோ வெளியானது. இந்த சம்பவம் கடந்த மே மாதம் 14-ந்தேதி நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

    மே 3-ந்தேதி இம்பாலில் மிகப்பெரிய பேரணி நடைபெற்றது. இந்த பேரணியின்போது மோதல் உண்டாகி, பின்னர் வன்முறையாக வெடித்தது. வன்முறையின் தொடர்ச்சியாக இந்த பதற வைக்கும் சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது.

    இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை எழுப்பியுள்ளது. ஏற்கனவே, பிரதமர் மோடி மணிப்பூர் கலவரம் குறித்து மவுனம் சாதித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். தற்போது இந்த விவகாரமும் சேர்ந்துள்ளது.

    இச்சம்பத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் இதுதொடர்பான வீடியோவை பகிர வேண்டாம் என் டுவிட்டர் மற்றும் சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதால் இந்திய சட்டத்தை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

    • இத்தனை பேர் மத்தியில் பெண்களை அவமானப்படுத்தியதும், அதை பலர் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதும் வேதனை அளிக்கிறது.
    • நாட்டில் எங்கு என்ன பிரச்சினை நடந்தாலும் பெண்களை குறி வைத்து தாக்குகிறார்கள்.

    சென்னை:

    தேசிய பெண்கள் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்பு கூறியதாவது:-

    மணிப்பூரில் வன்முறை போர்வையில் பெண்களை நிர்வாணப்படுத்தி வன்கொடுமை செய்த காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    இத்தனை பேர் மத்தியில் பெண்களை அவமானப்படுத்தியதும், அதை பலர் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதும் வேதனை அளிக்கிறது. ஒருவருக்கு கூட அந்த பெண்ணை காப்பாற்ற தோன்றவில்லை.

    இந்த மாதிரி கொடுமைகளை அரசியல் ரீதியாக அணுகுவதைவிட மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும். ஒரு நல்ல குடிமகனாக இந்த மாதிரி அவலங்கள் நடக்காமல் தடுக்க வழிகாண வேண்டும்.

    இந்த கொடுமையை செய்தவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். நாட்டில் எங்கு என்ன பிரச்சினை நடந்தாலும் பெண்களை குறி வைத்து தாக்குகிறார்கள்.

    பிரச்சினைகளுக்கும் பெண்களை அவமானப்படுத்துவதற்கும் என்ன சம்பந்தம்? நாட்டில் எந்த மூலையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்தாலும் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். கருத்து வேறுபாடுகளை களைந்துவிட்டு பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் எல்லோரும் ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மணிப்பூர் பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை
    • இன்று வெளியான வீடியோ இதன் நோக்கத்தை இன்னும் அதிகரித்துள்ளது

    இந்திய பாராளுமன்றம் பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது. மணிப்பூர் வன்முறை, விலைவாசி உயர்வு உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப ஆயத்தம் ஆகியுள்ளது.

    இந்த நிலையில் நின்று மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக இழுத்து செல்லப்படும் காட்சி இதயத்தை நொறுங்கச் செய்துள்ளது. இது கடும் கண்டனத்திற்குள்ளாகி வரும் நிலையில், பாராளுமன்றத்தில் புயலை கிளப்பும் என்பதில் சந்தேகம் இல்லை.

    இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க பல்வேறு கட்சிகள் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம.பி. எலராமன் கரீம், காங்கிரஸ் எம்பி. இம்ரான் பிரதாப்கார்கி, உத்தவ் தாக்கரேயின் சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்டோர் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

    • மணிப்பூரில் வன்முறை வெடித்த மே3-ந்தேதிக்கு அடுத்த நாள் இது நடைபெற்றுள்ளது
    • அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்

    மணிப்பூர் மாநிலத்தில வன்முறை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதற்கிடையே இரண்டு பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழங்குடியின அமைப்பு அந்த பெண்களை வயல்வெளியில் வைத்து கற்பழித்ததாக குற்றம்சாட்டியுள்ளது.

    இந்த நிகழ்வு கடந்த மே மாதம் 4-ந்தேதி கங்போக்பி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. தலைநகர் இம்பாலில் இருந்து 35 கி.மீட்டர் தூரத்தில் இந்த மாவட்டம் உள்ளது.

    மே 3-ந்தேதி நடைபெற்ற பேரணியின்போது வன்முறை வெடித்தது. அதில் இருந்து மணிப்பூர் எரிந்து வருகிறது. 3-ந்தேதி வன்முறை வெடித்த நிலையில் அடுத்த நாள் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளதால், அதுதொடர்பான தாக்குதலாக இருக்கும் என கருதப்படுகிறது.

    இந்த நிலையில் ராகுல் காந்தி, பிரியங்கா, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை அடையாளம் கண்டுவிட்டோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தும்படி போலீசாருக்கு முதலமைச்சர் பிரேன் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார். மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை அமைச்சர் ஸ்மிரிதி ராணி தன்னிடம் பேசியதாகவும், விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் உறுதி அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

    ஸ்மிரிதி ராணி தனது டுவிட்டர் பக்கத்தில் ''குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த எந்தவொரு முயற்சியும் கைவிடப்படாது'' எனத் தெரிவித்துள்ளார்.

    ''மணிப்பூரில் இருந்து வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை படங்கள் நெஞ்சை பதற வைக்கின்றன. பெண்களுக்கு எதிரான இந்த கொடூரமான வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் அளவு குறைவு. சமூகத்தில் வன்முறையின் உச்சக்கட்டத்தை பெண்களும் குழந்தைகளும் சுமக்க வேண்டியுள்ளது'' என தனது ஆதங்கத்தை பிரியங்கா காந்தி வெளிப்படுத்தியுள்ளார்.

    • மத்திய பா.ஜனதா அரசின் ஆட்சியில் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது.
    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாடு நடைபெற இருக்கிறது.

    நெல்லை:

    மூத்த கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் நல்லசிவத்தின் நூற்றாண்டு நினைவு நிகழ்வுகள் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது.

    அதன்படி நெல்லை, ரெட்டியார்பட்டியில் அமைந்துள்ள மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் அருகே அவரது நூற்றாண்டு விழாவையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

    இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், அரசியல் தலைமை குழு உறுப்பினருமான ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது:-

    நாளை மற்றும் நாளை மறுதினம் பெங்களூருவில் மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது. பா.ஜனதாவை வரும் பாராளுமன்ற தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்பதை மையமாக வைத்து கூட்டம் நடத்தப்படுகிறது.

    இதுவரை மணிப்பூரில் நடந்த கலவரத்தில் 150-க்கும் மேற்பட்ட நபர்கள் கொல்லப்பட்ட சூழலிலும் 36 லட்சம் மக்கள் தொகை கொண்ட மணிப்பூரில் இருந்து பல்லாயிரம் நபர்கள் வெளியிடத்திற்கு குடிபெயர்ந்த சூழலிலும் அங்கு நடக்கும் கலவரத்தை பாரத பிரதமர் கட்டுப்படுத்த முயற்சிக்கவில்லை.

    மணிப்பூரில் நடக்கும் மோதலுக்கு பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ்.-ன் அணுகுமுறை சரியில்லாதது தான் காரணம். இந்திய நாட்டில் பழங்குடியின மக்களுக்கென மாநில வாரியாக தனித்தனி சட்டங்கள் உள்ளது.

    யாரிடமும் எந்த கருத்தும் கேட்கப்படாமல் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பா.ஜனதா கட்சி ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களை நியமனம் செய்து அங்குள்ள ஆட்சியை சீர்குலைக்கும் செயலை பா.ஜனதா செய்து வருகிறது. தமிழக ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

    விலைவாசி உயர்வு, விலையை கட்டுப்படுத்துவது போன்றவைகள் மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. உணவு உற்பத்தி தட்டுப்பாடு ஏற்பட்டால் அதனை தடுக்க மத்திய அரசு உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும்.

    ஆனால் தமிழகத்தில் மாநில அரசு தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த ரேஷன் கடைகளில் குறைந்த விலைகளில் தக்காளி விற்பனை செய்து வருவது வரவேற்கத்தக்கது.

    மத்திய பா.ஜனதா அரசின் ஆட்சியில் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாடு நடைபெற இருக்கிறது. வருகிற 23-ந்தேதி மதுரையில் நடைபெறும் மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கலந்து கொள்கிறார்.

    2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைந்த நோக்கம்.

    மாநிலத்திற்கு மாநிலம் அரசியல் கட்சிகளிடம் வேறுபாடுகள் இருந்தாலும் அகில இந்திய அளவில் பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்பதை ஒரே நோக்கமாகக் கொண்டு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளது.

    எத்தனை ஊழல் வழக்குகள் இருந்தாலும் பா.ஜ.க.வில் யாரேனும் சேர்ந்தால் அவர்கள் புனிதராகி விடுகிறார்கள். இப்படிப்பட்ட கேவலமான நடவடிக்கையை பா.ஜ.க. செய்து வருகிறது. மக்கள் அவர்களை கண்டிப்பாக நிராகரிப்பார்கள். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து என்ன செய்கிறார் என்று பார்ப்போம்.

    இவர் அவர் கூறினார்.

    • மணிப்பூர் வன்முறையில் 135-க்கும் மேற்பட்டோர் பலி.
    • கலவரம் குறித்து இதுவரை பிரதமர் மோடி கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

    இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இரு பிரிவினருக்கிடையே கடந்த மே மாதம் தொடங்கிய மோதல், கலவரமாக மாறியது. இதில் 135-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஆயிரக்கணக்கான கடைகள், வீடுகள் மற்றும் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

    இவ்விவகாரம் குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றம், தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. மேலும், இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான உரிமை குறித்து விவாதம் நடத்தப்பட்டது.

    அதற்கு இந்தியா கடுமையான கண்டனம் தெரிவித்தது. இந்தியாவின் உள்விவகாரங்களில் இதுபோன்ற அந்நிய நாட்டின் தலையீடுகளை ஏற்க முடியாது என்று வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்தார்.

    இந்நிலையில், பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அந்நாட்டு தேசிய தினம் அணிவகுப்பில் பங்கேற்றிருந்தார். மேலும், பிரான்ஸ் நாட்டில் இருந்து 26 ரபேல் போர் விமானம் வாங்க ஒப்பந்தமும் கையெழுத்தானது.

    இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் விமர்சனம் செய்துள்ளார்.

    ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதில் கூறியிருப்பதாவது:-

    மணிப்பூர் எரிகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றம் இந்தியாவின் உள்விவகாரம் பற்றி விவாதிக்கிறது. ஆனால் நமது பிரதமர் இதுகுறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் மவுனம் காக்கிறார். ரபேல் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்து பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்புக்கான டிக்கெட்டைப் பெற்றுவிட்டார்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    இதுவரையில் மணிப்பூர் நிலைமை குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியாவில் சிறுபான்மையினர் உரிமை குறித்து விவாதம்
    • மணிப்பூரில் அமைதி நிலவ அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

    இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ந்தேதி தொடங்கிய வன்முறை இன்றுவரை முடிவுக்கு வரவில்லை. ஆங்காங்கே வன்முறை வெடித்த வண்ணம் உள்ளது. இரு பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறி இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பிரதமர் மோடி இதுவரை மணிப்பூர் வன்முறை குறித்து பேசவில்லை. இதனால் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகிறது.

    பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றுள்ள நிலையில் ஐரோப்பிய நாடாளுமன்றம் மணிப்பூர் வன்முறை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் 'காலனித்துவ மனநிலையின் பிரதிபலிப்பு' என இந்தியா சார்பில் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

    ஐரோப்பிய நாடாளுமன்றம் இந்தியாவில் மனித உரிமை சூழ்நிலை குறித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. குறிப்பாக அதில் மணிப்பூர் வன்முறையை குறிப்பிட்டுள்ளது. பிரான்ஸ் ஸ்ட்ராஸ்போர்க்கில் இருக்கும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் ''இன மற்றும் மத வன்முறையை நிறுத்துவதற்கும், அனைத்து மத சிறுபான்மையினரையும் பாதுகாப்பதற்கும் இந்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி பதில் அளித்து கூறியதாவது:-

    ஐரோப்பிய பாராளுமன்றத்தில் மணிப்பூர் வன்முறை குறித்து விவாதித்ததையும், தீர்மானம் நிறைவேற்றியதையும் பார்த்தோம். இதுபோன்ற இந்திய உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. மேலும், இது காலனித்துவ மனநிலையின் பிரதிபலிப்பாகும்.

    நீதித்துறை உள்பட அனைத்து அதிகாரிகளும் மணிப்பூரில் அமைதி நிலவ நடடிவக்கை மேற்கொண்டு வருகிறார்கள். ஐரோப்பிய நாடாளுமன்றம் தனது நேரத்தை அதன் உள் பிரச்சினைகளில் அதிக ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படும்.

    இவ்வாறு தெரிவித்தார்.

    மணிப்பூரில் குகி மற்றும் மெய்தி சமூகத்தினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டு அது வன்முறையாக வெடித்துள்ளது. மெய்தி சமூகத்தினர் 53 சதவீதம் பேர் உள்ளனர். இவர்கள் இம்பால் பள்ளத்தாக்கில் வசித்து வருகிறார்கள். நாகாஸ் மற்றும குகி சமூகத்தினர் 40 சதவீதம் பேர் மலை மாவட்டங்களில் வசித்து வருகிறார்கள்.

    மெய்தி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்கும்படி வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு குகி இனத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பதால் மணிப்பூர் மாநிலம் அமைதியின்றி காணப்படுகிறது.

    ×