search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்களவை தேர்தல்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அசையும் சொத்துக்களின் மதிப்பு 9.24 கோடி ரூபாய் ஆகும்.
    • அசையா சொத்துக்களின் மதிப்பு 11.15 கோடி ரூபாய் ஆகும்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் வாகன பேரணி மேற்கொண்டு பின்னர் மனு தாக்கல் செய்தார்.

    மனு தாக்கல் செய்தபோது சொத்து மதிப்பு தொடர்பான பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

    பிரமாண பத்திரத்தில் அவர் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து மதிப்பு குறித்த தகவல் பின் வருமாறு:-

    1. அசையும் சொத்துக்களின் மதிப்பு 9.24 கோடி ரூபாய் ஆகும்.

    2. அசையா சொத்துக்களின் மதிப்பு 11.15 கோடி ரூபாய் ஆகும்.

    3. சொந்த வாகனம் கிடையாது.

    4. அடுக்குமாடி குடியிருப்பு கிடையாது.

    5. கையில் 55 ஆயிரம் ரூபாய் உள்ளது.

    6. வங்கியில் 26.25 லட்சம் ரூபாய் டெபாசிஸ்ட் செய்யப்பட்டுள்ளது.

    7. 4.33 கோடி ரூபாய் மதிப்பில் பத்திரங்கள் மற்றும் பங்குகள் உள்ளன.

    8. 3.81 கோடி ரூபாய் மதிப்பில் மியூட்சுவல் நிதி உள்ளது.

    9. 15.21 லட்சம் ரூபாய் மதிப்பில் கோல்டு பத்திரம் உள்ளது.

    10. 4.20 லட்சம் ரூபாய் அளவில் நகைகள் உள்ளன.

    11. 9 கோடி ரூபாய் மதிப்பில் குருகிராமில் சொந்த அலுவலகம் உள்ளது.

    12. தனது சகோதரியுடன் இணைந்து விவசாய நிலம் உள்ளது.

    இவ்வாறு ராகுல் காந்தி அதில் தெரிவித்துள்ளார்.

    ராகுல் காந்தியை எதிர்த்து சிபிஐ தலைவர் ஆனி ராஜா களம் இறங்கியுள்ளார். பா.ஜனதா அம்மாநில தலைவர் கே, சுரேந்திரனை களம் இறக்கியுள்ளது. வயநாடு தொகுதிக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 26-ந்தேி நடக்கிறது. 

    • வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்ய வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக புகார்.
    • காலை முதல் இரவு வரை சோதனை நடத்தப்பட்டதில் பணம் பறிமுதல்.

    நாமக்கல் மாவட்டம் காந்திநகரை சேர்ந்த சந்திரகேரன் என்பவர் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்ய வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து நாமக்கல், ஈரோடு, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று காலை திடீரென அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

    இந்த சோதனை இரவு வரை நீடித்தது. சோதனை முடிவில் 4.8 கோடி ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அதிகாரிகள் நாமக்கள் எஸ்பிஐ வங்கியில் ஒப்படைத்துள்ளனர்.

    பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து சந்திரசேகரனிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
    • தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரையில் அமித்ஷா பிரசாரம் மேற்கொள்ள இருந்தார்.

    தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகிற 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு 2 வாரங்களே உள்ளதால் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

    4 முனை போட்டி இருந்த போதிலும், பிரதான கட்சிகளின் கூட்டணியே அதிக அளவில் பேசப்படுகிறது. அந்தந்த கட்சியை சேர்ந்த தலைவர்கள் மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

    வடநாட்டு தலைவர்களும் தமிழ்நாட்டில் முகாமிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார்.

    அதன்படி, நாளை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் 3.45 மணிக்கு மதுரை வரும் அமித்ஷா அங்கிருந்த ஹெலிகாப்டரில் தேனி செல்ல இருந்தார்..

    தொடர்ந்து, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரையில் அமித்ஷா பிரசாரம் மேற்கொள்ள இருந்தார்.

    இந்நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் திடீரென தனது தமிழக பயணத்தை அமித்ஷா ரத்து செய்துள்ளார்.

    மேலும், மத்திய அமைச்சர் அமித்ஷாவின் தமிழக தேர்தல் பிரசாரம் எப்போது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    • அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    • வட சென்னைக்கு கே,எஸ்,சீனிவாசன் நியமனம்.

    அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவது:-

    பாராளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் 19.4.2024 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக, தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் பட்டியல் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பாராளுமன்றத் தொகுதிகளுக்கு கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

    அதன்படி, ராமநாதபுரம் தொகுதிக்கு மலேசியா.எஸ் பாண்டியன், எம்.எஸ். நிறைகுளத்தான், எஸ்.எம். சாமிநாதன் உள்ளிட்டோர் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    அதேபோல், சிதம்பரம் தொகுதிக்கு என்.சதன் பிரபாகர், கு. ராஜமாணிக்கம் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    வட சென்னைக்கு கே,எஸ்,சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.




     


    • நகரின் புறநகரில் உள்ள ராவல்போராவில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் அறிவித்தார்.
    • தொகுதியில் சிறந்த வேட்பாளரை நிறுத்துவது கட்சியின் பொறுப்பாகும்.

    தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், ஸ்ரீநகரின் தற்போதைய எம்.பி.யுமான பரூக் அப்துல்லா (86) தனது உடல் நலப் பிரச்சனை காரணமாக வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டார் என அக்கட்சி இன்று தெரிவித்துள்ளது.

    இந்த அறிவிப்பை அவரது மகனும், தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவருமான உமர் அப்துல்லா, நகரின் புறநகரில் உள்ள ராவல்போராவில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் அறிவித்தார்.

    இதுகுறித்து உமர் அப்துல்லா கூறுகையில், " ஃபரூக் அப்துல்லா தனது உடல்நிலை காரணமாக இந்த முறை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று கட்சியின் பொதுச் செயலாளர் அலி முகமது சாகர் மற்றும் பிற கட்சி உறுப்பினர்களிடம் அனுமதி பெற்றுள்ளார்.

    தற்போது அந்த தொகுதியில் சிறந்த வேட்பாளரை நிறுத்துவது கட்சியின் பொறுப்பாகும். டெல்லியில் மக்களின் குரலாக திகழும் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் வெற்றிபெற வாக்காளர்கள் உதவுவார்கள் என்று நம்புகிறேன்" என்றார்.

    • காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கிடையே கடும் போட்டி.
    • வயநாடு தொகுதியில் போட்டியிட ராகுல் காந்தி இன்று கேரளாவில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற 29-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இருந்தபோதிலும் கேரளாவில் அனைவரின் பார்வையும் திரும்பியுள்ள தொகுதி வயநாடு. ஏனென்றால் தற்போது அந்த தொகுதியில் எம்.பி.யாக இருக்கும் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுகிறார்.

    அவருடன் அந்த தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா, பாரதிய ஜனதா கட்சியின் கேரள மாநில தலைவர் சுரேந்திரன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆனி ராஜா பிரசாரத்தை தொடங்கிவிட்டார்.

    இந்நிலையில், வயநாடு தொகுதியில் போட்டியிட ராகுல் காந்தி இன்று கேரளாவில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    இவரை தொடர்ந்து, கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஆனி ராஜா வேட்புமனு தாக்கல் செய்தார்.

    தற்போதைய வயநாடு எம்பி ராகுல்காந்திக்கு எதிராக களம் காண்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பா.ஜனதா சுமார் 10 தொகுதிகளில் பிஆர்எஸ் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது.
    • பிஆர்எஸ் அறிவித்த வேட்பாளரை, காங்கிரஸ் கட்சி அதே தொகுதியில் வேட்பாளராக அறிவித்துள்ளது.

    கடந்த ஆண்டு தெலுங்கானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் கே. சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து அந்தக் கட்சியிலிருந்து முக்கியமான தலைவர்கள் வெளியேறி காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவில் இணைந்தனர்.

    மக்களவைத் தேர்தலை கணக்கில் கொண்டு தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என அவர்கள் வெளியேறி பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

    இந்த நிலையில் சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியில் இருந்து வெளியேறிய பெரும்பாலான தலைவர்களுக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் வாய்ப்பு அளித்துள்ளன.

    மொத்தம் 17 தொகுதிகளில் 10 தொகுதிகளில் பிஆர்எஸ் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு பாரதிய ஜனதா கட்சி போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளது. அதில் பி.ஆர்.எஸ். கட்சியின் முன்னாள் தலைவர் எட்டாலா ராஜேந்தரும் அடங்குவார்.

    2021-ம் ஆண்டு பா.ஜனதா கட்சியில் இவர் இணைந்தார். இதனால் பிஆர்எஸ் இவரை கட்சியில் இருந்து நீக்கியது. இந்த நிலையில் மல்காஜ்கிரி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    அதைத் தவிர பி.ஆர்.எஸ். கட்சியில் இருந்து வெளியேறி கட்சியில் இணைந்த சில மணி நேரத்தில் பலர் பா. ஜனதா கட்சியின் வேட்பாளர் பட்டியலில் இடம் கிடைத்துள்ளனர்.

    ஜகீராபாத் பி.ஆர்.எஸ். எம்.பி. கட்சியிலிருந்து விலகி பா.ஜனதா கட்சியில் இணைந்தார். இணைந்த சில மணி நேரத்தில் பாரதிய ஜனதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    பி.ஆர்.எஸ். எம்.பி. ராமுலு மகன் பாரத் நகர்குர்னூல் தொகுதியில் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ராமுலு தனது மகனுடன் கட்சியிலிருந்து விலகி பா.ஜனதாகட்சியில் இணைந்த சில மணி நேரத்திலேயே அக்கட்சியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே வகையில்தான் அரூரி ரமேஷ் வாரங்கல் தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

    இதே அடிப்படையில்தான் காங்கிரஸ் கட்சி பிஆர்எஸ் தலைவர்களை வரவேற்று உள்ளது. செவால்லா எம்.பி. ரஞ்சித் ரெட்டி பிஆர்எஸ் சார்பில் வெற்றி பெற்றிருந்தார். தற்போது காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

    பிஆர்எஸ் கட்சி சார்பில் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற தனம் நாகேந்தர் எம்எல்ஏ தற்போது செகந்திராபாத் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார்.

    முன்னாள் பிஆர்எஸ் மந்திரி பட்னம் மகேந்தர் ரெட்டியின் மனைவி சுனிதா மகேந்தர் ரெட்டி விகார்பத் மாவட்ட பஞ்சாயத்து தலைவராக உள்ளார். தற்போது காங்கிரஸ் கட்சி சார்பில் மல்காஜ்கிரி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்

    பிஆர்எஸ் கட்சி வாரங்கல் தொகுதியில் கடியம் காவியாவிற்கு வாய்ப்பு வழங்கியது. ஆனால் அவர் அங்கிருந்து காங்கிரஸ் கட்சிக்கு சென்று அதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார். இவரது தந்தை கடியம் ஸ்ரீஹரி பிஆர்எஸ் சார்பில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது

    சந்திரசேக ராவின் கட்சி முதலில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி என்ற பெயரில் தெலுங்கானா மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்தியது. இரண்டு முறை முதல்வராக இருந்தார்.

    தேசிய அளவிலான தலைவர் என்ற பார்வை ஏற்படுத்த விரும்பிய அவர், தனது கட்சியின் பெயரை பாரத் ராஷ்டிரிய சமிதி என மாற்றினார். இந்த முயற்சி அவருக்கு கை கொடுக்கவில்லை. சட்டமன்றத் தேர்தலில் அவரை படுதோல்வி ஆக்க செய்தது.

    மேலும் ஊழல் குற்றச்சாட்டு அவரது மகள் கே கவிதா டெல்லி மாநில மதுபான கொள்கை வழக்கில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு ஆகியவை பின்னடைவை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பீகாரில் கடந்த முறை பா.ஜனதா 40-ல் 39 இடங்களில் வெற்றி பெற்றது.
    • இந்த முறை 40 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் முனைப்பில் கூட்டணியுடன் களம் இறங்கியுள்ளது.

    பீகார் மாநிலத்தில் முசாபர்புர் மக்களவை தொகுதி எம்.பி.யாக அஜய் குமார் நிஷாத் இருந்து வருகிறார். பா.ஜனதாவை சேர்ந்த இவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க அக்கட்சி மறுத்துவிட்டது. தொகுதியில் எதிர்ப்பு இருப்பதாக காரணம் தெரிவித்த பா.ஜனதா, ராஜ் புஷன் நிஷாத்திற்கு வாய்ப்பு வழங்கியுள்ளது.

    இதனால் அதிருப்தி அடைந்த அஜய் குமார் நிஷாத் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங் மற்றும் பீகார் மாநில பொறுப்பாளர் மோகன் பிரகாஷ் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

    பீகாரில் காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்துவதும், ஒருவரின் அராஜகத்தை முடிவுக்கு கொண்டு வருவதும்தான் முக்கிய வேலை எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும் "தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு கூட இறுதி ஆசை என்ன என்பதை தெரிவிக்க வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. ஆனால் தனக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதற்கு முன் அதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. இது பண அதிகார தேர்தலாக இருக்காது. மக்கள் வலிமையின் தேர்தலாக இருக்கும்" என்றார். 2019 மக்களவை தேர்தலில் பா.ஜனதா பீகாரில் 40 தொகுதிகளில் 39-ல் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது மக்களின் குறைகளை பெட்டி வைத்து வாங்கி சென்றவர்.
    • 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கொண்டு வந்தது அதிமுகதான்.

    ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த பாண்டியநல்லூரில் அரோக்கணம் அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயனை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.

    அதிமுக ஆட்சியில் ராணிப்பேட்டையில் நிறைவேற்றப்பட்ட பணிகளை பட்டியலிட்டு வாக்கு சேகரிக்கப்பட்டது.

    அப்போது அவர் பேசியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் தோல்வி பயத்தில் உள்ளனர். அவர்கள் இருவரும் கண்ட கனவு மாறிவிட்டது.

    மக்களை ஏமாற்றியே திமுக ஆட்சிக்கு வந்தது. தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை.

    வாரிசு அரசியலுக்கு இந்த தேர்தலில் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள். உருட்டல், மிரட்டலுக்கு எல்லாம் அதிமுக அஞ்சாது. அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுவது வாடிக்கையாகிவிட்டது.

    எங்கள் ஆட்சியில் திமுக மீது வழக்கு போவில்லை. மக்கள் பணியாற்றினோம். திமுக எந்த திட்டங்களையும் கொண்ட வரவில்லை. திட்டங்களை கொண்டு வந்தால் தானே, நாங்கள் குறை கூற முடியும்.

    விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. மக்களை பற்றி சிந்திக்காத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கிடைக்கும் நேரத்தில் மக்களக்கு பணியாற்ற வேண்டும்.

    எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது மக்களின் குறைகளை பெட்டி வைத்து வாங்கி சென்றவர். பெட்டி தொலைந்துவிட்டதா அல்லது சாவி இல்லையா ?

    எதிர்க்கட்சியாக இருந்து எப்படி மத்திய அரசை எதிர்க்க முடியும். ஆட்சியில் இருந்தால் மக்களுக்கு எதிரான திட்டங்களை கண்டித்து குரல் கொடுப்போம். காவிரி நதிநீர் விவகாரத்தில் 22 நாட்கள் அவையை அதிமுக முடக்கியது.

    7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கொண்டு வந்தது அதிமுகதான். நீட் விவகாரத்தில் பாராளுமன்றத்தில் அழுத்தம் கொடுத்திருந்தால் தீர்வு கிடைத்திருக்கும். ஆனால், நீட் விவகாரத்தில் திமுக அரசியல் செய்கிறது.

    நாங்கள் கட்டிய பாலத்தை ரிப்பன் வெட்டி திறப்பவர் முதல்வர் ஸ்டாலின். எங்கு பார்த்தாலும் போதைப் பொருள். தமிழகம் போதைப் பொருட்கள் விற்கும் மாநிலமாக மாறிவிட்டது. சட்டம் ஒழுங்கு முழுவதும் சீர்குலைந்துவிட்டது.

    தமிழகத்தில் கொலை, கொள்ளை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்தியாவிலேயே அதிக கடன் பெற்ற மாநிலம் தமிழ்நாடு. விலைவாசி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, ஆனால் நீங்கள் நலமா ? என்கிறார் முதல்வர்.

    விவசாயிகளை பற்றி கவலைப்படாதவர்கள் திமுகவினர். அதிமுக ஆட்சியில் இருமுறை விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • அமிர்தசரஸ் தொகுதியில் அமெரிக்காவுக்கான முன்னாள் இந்திய தூதரான தரன்ஜித் சிங் சந்துவிற்கு சீட் வழங்கியுள்ளது.
    • ஃபரித்காட் தொகுதியில் ஹன்ஸ் ராஜை நிறுத்தியுள்ளது.

    பா.ஜனதா 11 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் தொகுதியில் அமெரிக்காவுக்கான முன்னாள் இந்திய தூதரான தரன்ஜித் சிங் சந்துவிற்கு சீட் வழங்கியுள்ளது. அதே மாநிலத்தின் ஃபரித்காட் தொகுதியில் ஹன்ஸ் ராஜ்-யை நிறுத்தியுள்ளது. ஹன்ஸ் ராஜ் கடந்த 2019-ல் டெல்லி வடகிழக்கு தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். ஃபரித்காட் எஸ்சி தொகுதியால் தற்போது அங்கே நிறுத்தப்பட்டுள்ளார்.

    லூதியானாவில் ரவ்னீனத் சிங் பிட்டு, பாட்டியாலாவில் பிரினீத் கவுர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் கட்டாக்கில் பி. மக்டாப்பிற்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. பிஜு ஜனதா தளத்தில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்த உடன் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    ரவ்னீனத் சிங் பிட்டு பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பியாந்த் சிங்கின் பேரன் ஆவார். பிரினீத் கவுர் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங்கின் மனைவி ஆவார். ஜலந்தரில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்த ரிங்குவிற்கு வாய்ப்பு வழங்கியுள்ளது.

    பா.ஜனதா மக்களவை தேர்தலில் பல புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கி வருகிறது. ஏற்கனவே இருந்து பல எம்.பி.க்கள் கழற்றி விடப்பட்டுள்ளனர்.

    அதேவேளையில் நடிகைகள், வேறு கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு வழங்கியுள்ளதாக விமர்சனமும் எழும்பியுள்ளது.

    இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் போட்டியிட கங்கனா ரனாவத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் மேற்கு வங்காளத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், மக்களவையில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இதுவரை பா.ஜனதா 411 தொகுதிகளுக்கு வேட்பாளர் பெயரை அறிவித்துள்ளது.

    • திராவிட மாடலின் குரல் தெற்கில் மட்டும் ஒலிக்கவில்லை. வடக்கிலும் ஒலிக்கிறது. வடக்கிற்கும் சேர்த்தே ஒலிக்கிறது.
    • ஒரு மாநில அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு நான்தான் எடுத்துக்காட்டு.

    தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் சேலம், கள்ளக்குறிச்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். இருவரையும் ஆதரித்து பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    அப்போது மு.க. ஸ்டாலின் கூறியதாவது:-

    * திராவிட மாடலின் குரல் தெற்கில் மட்டும் ஒலிக்கவில்லை. வடக்கிலும் ஒலிக்கிறது. வடக்கிற்கும் சேர்த்தே ஒலிக்கிறது.

    * ஒரு மாநில அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு நான்தான் எடுத்துக்காட்டு.

    * ஒரு மத்திய அரசு எப்படி செயல்படக் கூடாது என்பதற்கு பா.ஜனதா அரசுதான் எடுத்துக்காட்டு.

    * சேலத்திற்கு வந்த பிரதமர் மோடி, பா.ஜனதாவுக்கு கிடைத்திருக்கும் ஆதரவால் திமுக-வின் தூக்கம் தொலைந்துவிட்டதாக பேசிவிட்டு சென்றார்.

    * உண்மையிலேயே தூக்கத்தை தொலைத்தவர்கள், இவர்கள்தான் (10 ஆண்டு ஆட்சிக்காலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மூலம் பாதிக்கப்பட்ட சாமானிய மக்கள். சிலிண்டர் விலை உயர்வு மூலம் தாய்மார்கள், ஏழைகள். வேலையில்லா திண்டாட்டம் மூலம் இளைஞர்கள். ஜிஎஸ்டி மூலம் சிறுகுறு தொழில் நடத்துபவர்கள். 3 சட்டங்கள் மூலம் உழவர்கள். சிஏஏ மூலம் சிறுபான்மையினர் மக்கள்.)

    * இப்படி 10 ஆண்டு கால ஆட்சியில் ஒட்டுமொத்த நாடே தூக்கத்தை தொலைத்துவிட்டு தவிக்கிறது.

    * தற்போது உச்சநீதிமன்ற உத்தரவால் வெளிவந்துள்ள தேர்தல் பத்திரம் ஊழலால் பிரதமர் மோடி தூக்கத்தை தொலைச்சிட்டார்.

    * இன்னொரு முக்கிய காரணம் மத்திய உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட். தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு வரை தென்மாநிலங்களில் பா.ஜனதாவால் வெற்றி பெற முடியாத நிலை இருந்தது. தேர்தல் பத்திரம் ஊழல் வந்த பிறகு வட மாநிலங்களிலும் வெற்றி பெற முடியாது என உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளது. இதனால்தான் தூக்கத்தை தொலைத்துவிட்டு பதட்டப்படுகிறார்.

    பதட்டத்தில் ஹேமந்த் சோரன், டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறையால் கைது செய்கிறார். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுக்கு வருமான வரித்துறையை ஏவிவிட்டு நோட்டீஸ் விடுகிறார்.

    எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்த்து பேசினால் சிபிஐ ரெய்டு விடுகிறார். கூட்டணி கட்சிகளை போன்று அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறையை பயன்படுத்துகிறார் என்றால் உச்சக்கட்ட தோல்வி பயத்தில் இருக்கிறார் என்று அர்த்தம். ஆட்சி வரவேண்டும் என்ற வெறியில் இந்திய ஜனநாயகத்தை சீரழித்துக் கொண்டு இருக்கிறார்.

    இவ்வாறு முக ஸ்டாலின் குறிப்பிட்டார்.

    • தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணமில்லை என்பதால் மறுத்து விட்டேன் என நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்
    • நாட்டின் நிதியமைச்சரிடமே போட்டியிடுவதற்கான பணம் இல்லையா? என்று கேள்வி எழுந்தது

    மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் உள்ளார். இவருக்கு தமிழ்நாடு அல்லது ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள ஏதாவது ஒரு இடத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்ததாகவும், தன்னிடம் தேவையான பணம் இல்லை என்பதால் மறுத்து விட்டதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    நாட்டின் நிதியமைச்சரிடமே போட்டியிடுவதற்கான பணம் இல்லையா? என்று கேள்வி எழுந்தது.

    இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன் "என்னுடைய சம்பளம், என்னுடைய சம்பாத்தியம், என்னுடைய சேமிப்பு எல்லாம் என்னுடையது. இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதி எனக்கு சொந்தம் கிடையாது" என்றார்.

    இந்நிலையில், இது தொடர்பாக, பாஜக மூத்த நிர்வாகி சுப்பிரமணிய சாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்தலில் போட்டியிட மோடியிடம் பணம் கேட்டிருக்கலாம். மேலும் அவர் 2004-05 மற்றும் 2022-23க்கான வருமான வரி அறிக்கையை வெளியிட்டிருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் தேர்தலில் போட்டியிடாததற்கான உண்மையான காரணத்தை நிர்மலா சீதாராமன் கூறியிருக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். 

    ×