search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94677"

    • எதற்காக தி.மு.க. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு இடம் விட்டு கொடுத்தது என்றால் தமிழக முழுவதும் தி.மு.க.விற்கு எதிராக எதிர்ப்பலை உருவாகியுள்ளது.
    • ஆளும் கட்சியினர் இடைத்தேர்தலில் தோற்றால் பெரிய அவமானம் என்பதால் காங்கிரசுக்கு ஒதுக்கி பலி ஆடு ஆக்கியுள்ளது.

    ஈரோடு:

    ஈரோட்டில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து நடிகை விந்தியா 2-வது நாளாக பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது அவர் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-

    பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தி.மு.க. ஆட்சிக்கு வந்து மக்களை ஏமாற்றி வருகின்றனர். தி.மு.க.வினர் பிரசாரத்தை உற்று பார்த்தால் அவர்கள் எப்போதுமே உண்மை பேச மாட்டார்கள் என்பது நன்றாக தெரியும்.

    ஒட்டுமொத்த தி.மு.க. அமைச்சர்களும் ஈரோட்டில் உள்ளனர். இவர்களை தேர்தல் சமயத்தில் மட்டும் தான் பார்க்க முடியும். மற்ற நேரங்களில் அலுவலகத்தில் சென்றால் கூட அவர்களை பார்க்க முடியாது.

    இளங்கோவன் எம்.எல்.ஏ.வானால் அவர் பொதுமக்களை திரும்பி கூட பார்க்க மாட்டார். அவர் அமைதிப்படை அமாவாசை மாதிரி பதவிக்காக மாறி மாறி பேசுவார். அவரது தாத்தா பெரியார் காங்கிரசை எதிர்த்தார். அவரது அப்பா சம்பத் தி.மு.க.வை எதிர்த்தார்.

    ஆனால் இன்று அவரோ தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளார். இளங்கோவன் இதற்கு முன்னாடி கருணாநிதி, ஸ்டாலினை திட்டி தீர்த்து உள்ளார். அது பற்றி ஒரு புத்தகமே போடலாம்.

    இளங்கோவனை நம்பாதீர்கள். இதுதான் எனக்கு கடைசி தேர்தல். எனக்கு ஒரு முறை வாய்ப்பு தாருங்கள் என்று கூறி தேர்தலில் நின்று வருகிறார்.

    எதற்காக தி.மு.க. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு இடம் விட்டு கொடுத்தது என்றால் தமிழக முழுவதும் தி.மு.க.விற்கு எதிராக எதிர்ப்பலை உருவாகியுள்ளது. ஆளும் கட்சியினர் இடைத்தேர்தலில் தோற்றால் பெரிய அவமானம் என்பதால் காங்கிரசுக்கு ஒதுக்கி பலி ஆடு ஆக்கியுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து மேல்முறையீட்டு செய்வோம். எங்களுக்கு இது மிகப்பெரிய பாதிப்பு கிடையாது.
    • முழு தீர்ப்பை படித்துப் பார்த்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெரிவிப்போம்.

    தஞ்சாவூர்:

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என என்று சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு கூறியது.

    இது தொடர்பாக இன்று தஞ்சையில் ஓ. பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் கூறியது போல சுப்ரீம் கோர்ட் கூறி இருக்கிறது. பொதுக்குழு கூட்டியது செல்லும். ஆனால் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து கோர்ட் எந்த கருத்தும் கூறவில்லை. மேலும் சிவில் கோர்ட்டில் உள்ள வழக்கு எங்களது கருத்துக்கு கட்டுப்படுத்தாது என கூறியிருக்கிறார்கள். இதன் மூலம் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பு எங்களுக்கு சாதகமானது தான்.

    நாங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து மேல்முறையீட்டு செய்வோம். எங்களுக்கு இது மிகப்பெரிய பாதிப்பு கிடையாது. முழு தீர்ப்பை படித்துப் பார்த்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெரிவிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிலர் தர்ம யுத்தம் நடத்தினர். ஆனால் உண்மையாக தர்மயுத்தம் நடத்தி எடப்பாடி வெற்றி பெற்றுள்ளார்.
    • எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்ன செய்ய நினைத்தார்களோ அதை எடப்பாடி செய்து காட்டுவார்.

    ஈரோடு:

    அ.தி.மு.க. சார்பில் ஜூலை 11-ந்தேதி நடந்த பொதுக்குழு செல்லும். இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்று இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை அடுத்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடுகின்றனர்.

    ஈரோட்டில் அ.தி.மு.க. தேர்தல் பணிமனையில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, கருப்பணன், கே.வி.ராமலிங்கம், நத்தம் விஸ்வநாதன் அக்ரிகிருஷ்ணமூர்த்தி, கோகுல் இந்திரா, கே.பி.முனுசாமி உட்பட பலர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    பின்னர் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

    உச்சநீதிமன்றம் இன்று வரலாற்று சிறப்பு மிக்க முக்கிய தீர்ப்பை வழங்கி உள்ளது. அ.தி.மு.க. மாபெரும் இயக்கம் எம்.ஜி.ஆர். ஆல் தோற்றுவிக்கப்பட்டு ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட இயக்கம். 31 ஆண்டு காலம் தமிழகத்தில் ஆட்சி செய்துள்ளோம். அப்படிப்பட்ட இயக்கத்தை போராடி எடப்பாடி பழனிசாமி இன்று மீட்டு உள்ளார். இயக்கத்தை அழிக்க நினைப்பவர்கள் மத்தியில் சட்டப் போராட்டம் நடத்தி எடப்பாடி பழனிசாமி மீட்டு உள்ளார். ஒன்றரை கோடி தொண்டர்கள் சார்பாக அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

    சிலர் தர்ம யுத்தம் நடத்தினர். ஆனால் உண்மையாக தர்மயுத்தம் நடத்தி எடப்பாடி வெற்றி பெற்றுள்ளார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்ன செய்ய நினைத்தார்களோ அதை எடப்பாடி செய்து காட்டுவார். இந்த தீர்ப்பு நிச்சயமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எதிரொலிக்கும் நமது வேட்பாளர் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஓ.பி.எஸ். மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்ளப்படுவாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் முனுசாமி, நீதிமன்ற தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்திருப்பது என்றால் ஓ.பி.எஸ். நீக்கப்பட்டது செல்லும் என்று தானே அர்த்தம். விரைவில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டப்பட்டு முறைப்படி எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றார்.

    • கட்சி தொடங்கிய குறுகிய காலத்திலேயே திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தலை அ.தி.மு.க சந்தித்து ஒருலட்சத்து 62 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வெற்றிபெற்றது.
    • பிரதமர் இந்திராகாந்தி, அப்போதயை முதல்-அமைச்சர் கருணாநிதி, காமராஜர் ஆகியோர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டும் எங்கள் வெற்றியை தடுக்க முடியவில்லை.

    உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது,

    இந்த தீர்ப்பு தொண்டர்களுக்கு கிடைத்த வெற்றியாகும். கடவுள் எங்கள் பக்கம் உள்ளார். மறைந்த முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆன்மா எங்களை வழிநடத்திச்செல்கிறது. தர்மத்தின் பக்கம் தீர்ப்பு கிடைத்துள்ளது. இனி அ.தி.மு.கவுக்கு தொடர் வெற்றிகள்தான் கிடைக்கும். ஓ.பன்னீர்செல்வம் பொய்யாக ஒரு அணியை உருவாக்கி பொம்மை போல் செயல்பட்டு வந்தார். இன்று காலை 10.30 மணியுடன் அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதை கோர்ட்டு உறுதி செய்துள்ளது. அவருடன் கடைசியாக இருந்த 106 பேர்களும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்றுக்கொண்டனர். இதனால் ஓ.பன்னீர்செல்வம் இனி எந்த வழக்கும் தொடர முடியாது. ஈரோடு இடைத்தேர்தலிலும் எங்களுக்கு அமோக வெற்றிகிடைக்கும். குறைந்தபட்சம் 50ஆயிரம் முதல் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தென்னரசு வெற்றிபெறுவார்.

    1972-ம்ஆண்டு கட்சியை தொடங்கிய எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து நான் இந்த இயக்கத்தில் உள்ளேன். கட்சி தொடங்கிய குறுகிய காலத்திலேயே திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தலை அ.தி.மு.க சந்தித்து ஒருலட்சத்து 62 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வெற்றிபெற்றது. பிரதமர் இந்திராகாந்தி, அப்போதயை முதல்-அமைச்சர் கருணாநிதி, காமராஜர் ஆகியோர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டும் எங்கள் வெற்றியை தடுக்க முடியவில்லை. அதேபோன்ற வெற்றி ஈரோடு இடைத்தேர்தலிலும் எதிரொலிக்கும் என்றார்.

    • எடப்பாடி பழனிசாமியின் படத்துக்கு ஒருசில தொண்டர்கள் பாலாபிஷேகம் செய்தனர்.
    • அ.தி.மு.க. தலைமை கழகம் ஒரே மகிழ்ச்சி ஆரவாரத்துடன் காணப்பட்டது.

    ஜூலை 11-ந்தேதி நட ந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. அதே போல் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதும் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. இதையடுத்து அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி வசமாகி உள்ளது.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அ.தி.மு.க. தொண்டர்களுக்கிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது. தீர்ப்பை கேட்டதும் அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். அவர்கள் சென்னை ராயப்பேட்டை யில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் குவிந்தனர். அவர்கள் உற்சாக கோஷம் எழுப்பி கொண்டாடினர். பட்டாசு வெடித்தும் மகிச்சியை வெளிப்படுத்தினார்கள்.

    மேலும் ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கியும் மகிழ்ந்தனர். எடப்பாடி பழனிசாமியின் படத்தையும் கையில் ஏந்தியபடி உற்சாகமாக கோஷமிட்டனர்.

    இதற்கிடையே எடப்பாடி பழனிசாமியின் படத்துக்கு ஒருசில தொண்டர்கள் பாலாபிஷேகம் செய்தனர். அ.தி.மு.க. தலைமை கழகம் ஒரே மகிழ்ச்சி ஆரவாரத்துடன் காணப்பட்டது.

    அதே போல் தமிழகம் முழுவதும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வரவேற்று அ.தி.மு.க.வினர் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • ஓ.பன்னீர்செல்வம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
    • வேட்பாளர் தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது.

    புதுடெல்லி :

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

    இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த தனி நீதிபதி பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பு அளித்தார்.

    இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு ஐகோர்ட்டில் அமர்வில் முறையிட்டது. இதனை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, அ.தி.மு.க. சட்ட விதிகளுக்கு உட்பட்டே பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது என்று கூறி பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உத்தரவிட்டனர்.

    இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த மனுவை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஜனவரி மாதம் விசாரித்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஜனவரி 11-ந் தேதி ஒத்திவைத்தது.

    இதற்கிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தங்கள் தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க உத்தரவிட்டது.

    இதன்பின்னர் பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலின்பேரில் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி அணிக்கு தற்காலிகமாக ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனையடுத்து வேட்பாளர் தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது.

    இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு இன்று கூறுகிறது.

    தீர்ப்பை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி கூறுகிறார். ஏற்கனவே இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி அணிக்கு தற்காலிகமாக கிடைத்து விட்டது. இதனால் அந்த அணி உற்சாகத்தில் உள்ளது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. இந்த தீர்ப்பை இரு தரப்பினரும் ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர்.

    • புதுச்சேரி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. நடராஜன் வில்லியனூர் கிழக்கு மாடவீதியில் வசித்து வந்தார்.
    • சமீப காலமாக நடராஜன் அரசியலில் ஆர்வம் காட்டாமல் சொந்த வேலைகளை கவனித்து வந்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. நடராஜன் (வயது 72). இவர் வில்லியனூர் கிழக்கு மாடவீதியில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக அவர் குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று மதியம் அவர் வீட்டில் தனி அறையில் மின் விசிறி கொக்கியில் வேட்டியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்த அ.தி.மு.க. நிர்வாகிகளும், அப்பகுதி பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர். உடலைப்பார்த்து அவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

    வில்லியனூர் போலீசார் நடராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், கடந்த சில நாட்களாக நடராஜன் குடும்ப பிரச்சினையால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும், சரிவர யாருடனும் பேசாமல் இருந்து வந்துள்ளதாகவும், அதன் காரணமாக தற்கொலை முடிவை மேற்கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

    நடராஜன் 1991, 1996-ம் ஆண்டு நடந்த தேர்தல்களில் அ.தி.மு.க. சார்பில் உழவர்கரை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாக இருந்தார். மேலும் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டுவரை வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து தலைராகவும் பதவி வகித்தார். புதுவை மாநில அ.தி.மு.க. மாநில செயலாளராகவும் பதவி வகித்து உள்ளார்.

    சமீப காலமாக அவர் தீவிர அரசியலில் ஆர்வம் காட்டாமல் சொந்த வேலைகளை கவனித்து வந்தார். அவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும், சரவணன், முருகமணி ஆகிய 2 மகன்களும், மகேஸ்வரி, கலைவாணி, ஜானகி ஆகிய 3 மகள்களும் உள்ளனர்.

    • அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து நட்சத்திர பேச்சாளர்களும், சினிமா பிரபலங்களும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
    • நடிகை விந்தியா இன்று மாலை பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டு பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே இருப்பதால் வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சியின் தலைவர்கள் முற்றுகையிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து இளைஞர் அணி மாநில செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று முதல் நாள் பிரசாரத்தை மேற்கொண்டார். கிட்டத்தட்ட 9-க்கும் மேற்பட்ட இடங்களில் பேசினார்.

    அதனைத்தொடர்ந்து இன்று மாலை 2-வது நாளாக தனது பிரசாரத்தை தொடங்குகிறார். மாலை 5 மணிக்கு எஸ்.கே.சி.ரோடு அர்ஜுனா சுவிட்ஸ் கடை அருகே பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். அதனைத் தொடர்ந்து ஆலமரத்து மெயின் ரோடு சமாதானபுரத்தில், அண்ணா டெக்ஸ்மேடு பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். பின்னர் கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன் கோவில் அருகே பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.

    இதேபோல் தே.மு.தி.மு.க. சார்பில் போட்டிடும் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கடந்த 2 நாட்களாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பொதுமக்கள் மத்தியிலும் பேசினார். இந்நிலையில் 3-வது நாளான இன்று மாலையும் பிரேமலதா விஜயகாந்த் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். குமலன் குட்டை மாரியம்மன் கோவில் அருகே பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். அதைத் தொடர்ந்து சம்பத் நகர் பகுதியில் பேசுகிறார். தொடர்ந்து சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

    இதேபோல் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஏற்கனவே தனது முதல் கட்ட பிரசாரத்தை மேற்கொண்டார். இந்நிலையில் இன்று மாலை தனது 2-வது கட்ட பிரசாரத்தை ஜி.கே.வாசன் மேற்கொள்கிறார். வெட்டுக்காட்டு வலசு, நாராயண வலசு, டவர் லைன் காலனி, சம்பத் நகர், பெரிய வலசு நால்ரோடு, இடையன்காட்டு வலசு, என்.எம்.எஸ்.காம்பவுண்ட், பெரியார் நகர் போன்ற பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    இதனைத்தொடர்ந்து அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து நட்சத்திர பேச்சாளர்களும், சினிமா பிரபலங்களும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

    அந்த வகையில் இன்று மாலை நடிகை விந்தியா பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டு பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். இதனைத் தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாள் என தொடர்ந்து 3 நாட்கள் நடிகை விந்தியா அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் மேற்கொள்கிறார். இறுதி கட்ட பிரசாரம் நெருங்கி வருவதால் தேர்தல் களம் அனல் பறக்கிறது.

    • வெளியில் உள்ள பணத்தை தி.மு.க. நிர்வாகிகளால் அரசாங்க வருவாயில் வங்கிக் கணக்கில் வரவு வைக்கின்ற வேலையும் செய்வதாக நாங்கள் அறிகிறோம்.
    • அரசாங்கப் பணத்தை எடுத்து ஒரு கட்சி தன்னுடைய தேர்தல் லாபத்திற்காக பயன்படுத்துவது என்பது அரசியல் அமைப்பிற்கு எதிரான ஒன்று.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடப்பதாக அ.தி.மு.க. தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

    இது தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் டி.ஜெயக்குமார் தலைமைச் செயலகத்துக்கு சென்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் பரபரப்பு புகார் கடிதம் ஒன்றை கொடுத்தார்.

    நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் தி.மு.க. அரசு பல்வேறு வகையான குறுக்கு வழிகளைக் கண்டுபிடித்து அதன் மூலம் தேர்தல் ஆதாயம் அடைந்து, குறுக்கு வழியில் வெற்றிகளை ஈட்டலாம் என எண்ணி நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய் புதுப்புது தேர்தல் தில்லுமுல்லுகளை அரங்கேற்றி வருகிறது.

    அதில் ஒரு பகுதியாக ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகளில் தினமும் விற்பனையாகும் பணம் அந்த துறையின் அமைச்சர் சொல்லும் நபரிடம் சேர்க்கப்படுகிறது. அதை அவர்கள் தேர்தல் பணிக்காக பயன்படுத்துவதாக நாங்கள் அறிகிறோம்.

    மேலும், வெளியில் உள்ள பணத்தை தி.மு.க. நிர்வாகிகளால் அரசாங்க வருவாயில் வங்கிக் கணக்கில் வரவு வைக்கின்ற வேலையும் செய்வதாக நாங்கள் அறிகிறோம்.

    இது அப்பட்டமான தேர்தல் விதிமீறல் மட்டுமல்லாமல் அரசாங்கப் பணத்தை எடுத்து ஒரு கட்சி தன்னுடைய தேர்தல் லாபத்திற்காக பயன்படுத்துவது என்பது அரசியல் அமைப்பிற்கு எதிரான ஒன்று.

    ஏற்கனவே தி.மு.க.வினர், தொகுதி முழுவதும் 111 இடங்களில் கொட்டகை அமைத்து மக்களை அடைத்து வைத்து எதிர்க்கட்சிகளின் பிரசாரத்திற்கு அவர்களை செல்லவிடாமல் தினந்தோறும் ரூ.1000 வழங்கி, 3 வேளையும் உணவு கொடுத்து ஒரு புதுவித ஈரோடு தேர்தல் பார்முலாவை கையில் எடுத்திருக்கக்கூடிய இந்த வேளையில், தற்போது டாஸ்மாக் விற்பனை பணத்தை அதே தொகுதிக்கு செலவழித்து, அரசாங்கப் பணத்திலும் எப்படி தேர்தல் பணி செய்யலாம் என்கின்ற ஒரு பார்முலாவை இந்த தேர்தலில் புகுத்தி இருக்கிறார்கள்.

    எனவே, உடனடியாக தலைமைத் தேர்தல் அதிகாரி அவர்கள் இந்த நவீன முறைகேட்டில் ஈடுபடும் தி.மு.க. நிர்வாகிகள் மீது கவனம் செலுத்தி, முறையாக டாஸ்மாக் விற்பனை பணம் அன்றைய தினமே அரசு கணக்கில் வரவு வைக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும், தொகுதிக்கு உட்பட்ட டாஸ்மாக் கடைகளில் இருந்து வரும் விற்பனை பணத்தை வசூல் செய்து அதை உரிய வங்கிகளில் அரசாங்கக் கணக்கில் வரவு வைப்பதற்கு, இந்தத் தேர்தல் முடியும்வரை ஒரு தனி அதிகாரியை நியமித்து மேற்பார்வை இடவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இது குறித்து அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் டி.ஜெயக்குமார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் ஈரோடு தேர்தல் முறைகேடு குறித்து இன்று மீண்டும் புகார் அளித்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தி.மு.க. விதிமீறல்களில் ஈடுபட்டு வருகிறது. வாக்காளர்களுக்கு பணத்தை தண்ணீர் போல் வாரி இறைக்கிறார்கள். மேலும் வாக்காளர்களை இன்ப சுற்றுலாவுக்கு அழைத்து செல்கிறார்கள். ஜனநாயக முறைப்படி அங்கு தேர்தல் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. ஜனநாயகம் செத்துவிட்டது.

    அமைச்சர் செந்தில் பாலாஜி அறைபோட்டு விஞ்ஞான ரீதியாக யோசித்து தேர்தல் விதிகளை மீறி வருகிறார். ஈரோடு தொகுதியில் உள்ள 40 டாஸ்மாக் கடைகளில் வசூலாகும் வருவாயை தேர்தல் பணிக்கு பயன்படுத்தி வருகிறார். தி.மு.க.வினர் தொடர்ந்து தேர்தல் விதி முறைகளை மீறி வருகிறார்கள். அதனை தடுத்து நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தலைவர்கள் ஒரே நாளில் பிரசாரம் மேற்கொள்வதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.
    • பிரசாரம் வரும் 25-ந் தேதி மாலையுடன் நிறைவு பெறுவதால் தலைவர்கள் உச்சகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ளதால் பிரசாரம் அனல் பறக்கிறது.

    தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 24,25-ந் தேதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை முதல் 2 நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளார். கனிமொழி எம்.பி. ஏற்கனவே பிரசாரம் செய்துள்ளார்.

    இதைத் தவிர தி.மு.க அமைச்சர்கள் எம்.எல்.ஏக்.கள், தேர்தல் பணி குழுவினர் வீதி,வீதியாக சென்று தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். இதே போல் காங்கிரஸ் தலைவர் அழகிரி, ப.சிதம்பரம், திருநாவுக்கரசர் ஆகியோர் ஆதரவு திரட்டினர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தனர்.

    இதேபோல் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 3 நாட்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். 2-வது கட்டமாக எடப்பாடி பழனிசாமி வரும் 24, 25 ஆகிய 2 நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளார். இதே போல் 30-க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வெளிமாவட்ட நிர்வாகிகள் ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

    நாம் தமிழர் கட்சி சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே 3 நாட்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். 2-வது கட்டமாக வரும் 21-ந்தேதி முதல் மீண்டும் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    தே.மு.தி.க. சார்பில் மாநில துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜய பிரபாகரன் ஆகியோர் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து இன்றும் நாளையும் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    இன்று மாலை 5 மணிக்கு இடையன்காட்டு வலசு பகுதியில் அண்ணாமலை தனது பிரசாரத்தை தொடங்குகிறார். மாலை 6 மணிக்கு தெப்பக்குளம் பகுதியிலும், இரவு 7 மணிக்கு மகாஜன உயர்நிலைப் பள்ளியிலும், இரவு 8 மணிக்கு சூரம்பட்டி நால்ரோடு பகுதியிலும் பிரசாரம் செய்கிறார். இதனைத் தொடர்ந்து நாளை மாலை 5 மணிக்கு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலில் தனது 2-வது நாள் பிரசாரத்தை தொடங்குகிறார். பின்னர் ஓங்காளியம்மன் கோவில், காந்தி சிலை, மற்றும் வி.வி.சி.ஆர். நகரில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    இதே போல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து இன்று மாலை 5 மணி அளவில் கருங்கல்பாளையம் காந்தி சிலையில் பிரசாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து சூரம்பட்டி நால்ரோடு, சம்பத் நகர், வீரப்பன்சத்திரம், அக்ரஹாரம் போன்ற பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    இதேபோல் தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து இன்று மாலை வீரப்பன்சத்திரம், திருநகர் காலனி, கருங்கல்பாளையம், கே.ஏ.எஸ். நகர், கிருஷ்ணா தியேட்டர், வி.வி.சி.ஆர் நகர் போன்ற பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    தலைவர்கள் ஒரே நாளில் பிரசாரம் மேற்கொள்வதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. பிரசாரம் வரும் 25-ந் தேதி மாலையுடன் நிறைவு பெறுவதால் தலைவர்கள் உச்சகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஈரோடு தேர்தல் களம் அனல் பறக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அடுத்த வாரம் 24, 25-ந்தேதிகளில் எடப்பாடி பழனிசாமி தனது 2-வது கட்ட பிரசாரத்தை மேற்கொள்கிறார்.
    • தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ளதால் தேர்தல் பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி 2 கட்டமாக 5 நாட்கள் பிரசாரம் செய்யப் போவதாக அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து கடந்த 15-ந்தேதி தனது முதல் கட்ட பிரசாரத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கினார். தொடர்ந்து 3 நாட்கள் பரப்புரை செய்த அவர் நேற்று தனது முதல் கட்ட பிரசாரத்தை நிறைவு செய்தார்.

    அடுத்த வாரம் 24, 25-ந்தேதிகளில் எடப்பாடி பழனிசாமி தனது 2-வது கட்ட பிரசாரத்தை மேற்கொள்கிறார். முதல் கட்ட பிரசாரத்தை நிறைவு செய்த நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் ஆலோசனை நடத்தினார். இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

    இதில் தேர்தல் பிரசாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ளதால் தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு துப்பாக்கி சூடு சம்பவங்கள் சாதாரணமாக நடைபெற்று வருவகிறது.
    • தி.மு.க. அத்துமீறல்கள், அநியாயங்கள் செய்தாலும் அதையும் தாண்டி அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி.

    சென்னை:

    சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சிங்காரவேலர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

    தி.மு.க. அரசில், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தீக்குளிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு இருக்கிறது. தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டது.

    எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்யும் கனிமொழிக்கு பழைய வரலாறு தெரியாது. அ.தி.மு.க. ஆட்சியை கலைத்த இந்திரா காந்தியுடன் கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி செய்தவர் கருணாநிதி.

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆம்லேட், டீ போடும் தி.மு.க. அமைச்சர்கள் பாத்திரத்தை மட்டும்தான் கழுவவில்லை. அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இலங்கை பயந்து இருந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு துப்பாக்கி சூடு சம்பவங்கள் சாதாரணமாக நடைபெற்று வருவகிறது.

    ஈரோடு கிழக்கு தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு காங்கிரஸ் மீது தி.மு.க. பழியை போடும். தி.மு.க. அத்து மீறல்கள், அநியாயங்கள் செய்தாலும் அதையும் தாண்டி அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×