search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94689"

    • தஞ்சையில் நேற்று மாலை திடீரென குளிர்ந்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது.
    • பட்டுக்கோட்டையில் அதிகபட்சமாக இங்கு தான் 48 மி.மீ. மழை பதிவானது.

    தஞ்சாவூா்:

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் காணப்பட்டது. சுட்டெரித்த வெயிலால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

    இரவிலும் வெப்பத்தின் தாக்கம் நீடித்ததால் தூங்க முடியாமல் சிரமப்பட்டனர்.இந்த நிலையில் தஞ்சையில் நேற்று மாலை திடீரென குளிர்ந்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது.

    இடி மின்னலுடன் கனமழை கொட்டியது. இதேபோல் பட்டுக்கோட்டையில் கனமழை பொழிந்தது.

    மாவட்டத்திலே அதிகபட்சமாக இங்கு தான் 48 மி.மீ. மழை பதிவானது.

    இதேபோல் வல்லம், குருங்குளம், ஒரத்தநாடு, அதிராம்பட்டினம் , மதுக்கூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் 349.70 மி.மீ. மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இன்று காலை 9 மணி வரை முடிவடைந்த மழையின் அளவு மி.மீ.யில் வருமாறு:-

    பட்டுக்கோட்டை-48,

    அதிராம்பட்டினம்-43.50,

    மதுக்கூர்-42,

    தஞ்சாவூர்-35,

    திருக்காட்டுப்பள்ளி-27.60,

    வெட்டிக்காடு -23.80,

    குருங்குளம் -23.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விமானங்களை அறிவிக்கப்பட்ட நேரத்தில் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது.
    • அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லி மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று காலையில் இடி மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன. வாகன போக்குவரத்து வழக்கத்தைவிட மெதுவாகவே இருந்தது. விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மோசமான வானிலை காரணமாக, விமானங்களை அறிவிக்கப்பட்ட நேரத்தில் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது.

    பயணிகள் முன்பதிவு செய்துள்ள விமானங்களுக்கான பயண நேரம் குறித்து அந்தந்த விமான நிறுவனங்களிடம் கேட்டு அறிந்துகொள்ளும்படி விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

    டெல்லியில் அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே 30ம் தேதிவரை வெப்ப அலை இருக்காது என கணித்துள்ளது.

    • அக்னி நட்சத்திர வெயில் நாளையுடன் விடைபெறுகிறது.
    • கடந்த வாரத்தில் அதிகபட்சமாக சென்னையில் 109 டிகிரி வெயில் பதிவானது.

    சென்னை :

    கோடை வெயில் ஒரு பக்கம் வாட்டி வதைத்தாலும், வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல கீழடுக்கு மற்றும் மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் அவ்வப்போது கோடை மழையும் தன் பங்குக்கு பெய்து வருகிறது. இதன் காரணமாக கோடைகாலத்தில் பெய்யவேண்டிய இயல்பான மழை அளவைவிட 65 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியிருக்கிறது.

    இதன் தொடர்ச்சியாக தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாட்டில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    அதன்படி, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

    தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை (ஞாயிற்றுக்கிழமை), நாளை மறுதினம் (திங்கட்கிழமை) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் சூளகிரி 7 செ.மீ., சின்னார் அணை 6 செ.மீ., வறட்டுப்பள்ளம் 4 செ.மீ., தேன்கனிக்கோட்டை, வி.களத்தூர், குன்றத்தூர் தலா 3 செ.மீ., செம்பரம்பாக்கம், குமாரபாளையம், அம்மாபேட்டை, துவாக்குடி, கோத்தகிரி, விரகனூர், கவுந்தம்பாடி, திருவாலங்காடு, தாமரைப்பாக்கம், ஆவடி, கெட்டி, திருவள்ளூர், ஏற்காடு, மேற்கு தாம்பரம் தலா 2 செ.மீ. உள்பட சில இடங்களில் மழை பெய்துள்ளது.

    நாளையுடன் விடைபெறும் அக்னி நட்சத்திரம்

    தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டு மே மாதம் 4-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்தரி வெயிலின் தாக்கம் இருக்கும். அந்த வகையில் நடப்பாண்டில் கத்தரி வெயில் கடந்த 4-ந் தேதி தொடங்கினாலும், கோடை மழை இருந்ததால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் வெயிலின் தாக்கம் குறைவாகவே இருந்தது.

    கோடை மழை சற்று குறைந்ததும் அக்னி நட்சத்திர வெயில் தன்னுடைய உக்கிரத்தை வெளிகாட்டியது. கடந்த வாரத்தில் அதிகபட்சமாக சென்னையில் 109 டிகிரி வெயில் பதிவானது. இதுதான் இந்த கத்தரி வெயில் காலத்தில் உச்சபட்ச வெயில் பதிவாக இருந்து வருகிறது. அதன் பின்னர் ஒவ்வொரு நாளும் குறைந்தது 10 இடங்களுக்கு மிகாமல் வெயில் 100 டிகிரியை கடந்து சுட்டெரிக்கிறது.

    இந்த நிலையில் அக்னி நட்சத்திர வெயில் நாளையுடன் (ஞாயிற்றுக்கிழமை) விடைபெற இருக்கிறது. இதனால் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் தமிழ்நாட்டில் சில இடங்களில் வெயில் உக்கிரத்துடன் இருக்கும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கனமழையால் பெங்களூரு சம்பகி சாலையில் மழைநீர் கரைபுரண்டு ஓடியது.
    • நகராட்சி நிர்வாகத்தை கடுமையாக சாடிய கடை உரிமையாளர், பருவமழை நிலைமை குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

    கர்நாடக மாநிலம், பெங்களூருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை வெளுத்து வாங்கியது. இதில், பெங்களூருவில் உள்ள சாலைகளில் மழை நீர் சூழ்ந்தது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    கனமழையால் பெங்களூரு சம்பகி சாலையில் மழைநீர் கரைபுரண்டு ஓடியது. இதில், அங்கிருந்த நகைக்கடை ஒன்றில் புகுந்த மழைநீர் அங்கிருந்த தங்க நகைகள், மரச்சாமான்கள் உள்ளிட்ட பொருட்களை அடித்து சென்றன. இதனால், நகைக்கடை உரிமையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

    மேலும், கடையில் இருந்த சுமார் 2.50 கோடி மதிப்புள்ள தங்க நகைகளும், மரச்சாமான்களும் அடித்து செல்லப்பட்டதாக கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், நகராட்சி நிர்வாகத்தை கடுமையாக சாடிய கடை உரிமையாளர், பருவமழை நிலைமை குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

    • வரட்டுபள்ளம், அம்மாபேட்டை, கவுந்தப்பாடி, பவானி போன்ற இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
    • மேல்மட்ட பாலம் அமைத்தாலும் மீண்டும் தண்ணீரால் அரிப்பு ஏற்பட்டு பாலம் இடிந்து விடும் என மலைவாழ் மக்கள் குற்றம் சாட்டினர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வருகிறது. அக்னி நட்சத்திரம் வெயில் தொடங்கும் முன்பே மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. அக்னி நட்சத்திரம் வெயில் தொடங்கிய பிறகு வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்து வருகிறது. அனல் காற்று, புழுக்கத்தால் மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்றும் காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. மாலை 5 மணிக்கு பிறகு ஒரு சில இடங்களில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து லேசாக மழை பெய்ய தொடங்கியது. ஈரோடு மாநகர் பகுதியில் சிறிது நேரம் சாரல் மழை பெய்தது.

    இதேப்போல் வரட்டுபள்ளம், அம்மாபேட்டை, கவுந்தப்பாடி, பவானி போன்ற இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. குறிப்பாக வரட்டுபள்ளம் அணைப்பகுதியில் மாவட்டத்தில் அதிகபட்சமாக 38.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    இதேப்போல் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி உள்ளது. இங்கு 33 குக்கிராமங்கள் உள்ளன. மேற்கு மலை, கிழக்கு மலை என 2 பகுதிகளாக உள்ள இந்த பர்கூர் மலையில் கிழக்கு மலை பகுதியான ஈரெட்டி பகுதியில் நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

    இதனால் ஈரெட்டி பகுதியில் உள்ள தரைப்பாலத்தை மழை தண்ணீர் மூழ்கடித்து சென்றது. இதனால் சாலையின் இரு புறங்களிலும் வாகனங்களும், பொதுமக்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    பின்பு தண்ணீர் வரத்து மெல்ல மெல்ல குறைந்த பிறகு இரு புறங்களிலும் வாகனங்கள் செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் 4 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் தவித்தனர்.

    தற்போது தரைப்பாலத்தில் மேல்மட்ட பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதில் பாலத்திற்கு கீழே தூண்கள் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    ஓடையில் தண்ணீர் அதிகமாக வரும் பகுதியில் தூண்கள் அமைக்காமல் தண்ணீர் குறைவாக வரும் பகுதியில் தூண்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் இந்த மேல்மட்ட பாலம் அமைத்தாலும் மீண்டும் தண்ணீரால் அரிப்பு ஏற்பட்டு பாலம் இடிந்து விடும் என மலைவாழ் மக்கள் குற்றம் சாட்டினர்.

    எனவே இதனை அதிகாரிகள் பார்வையிட்டு வெள்ளநீர் அதிக அளவில் வரக்கூடிய இடத்தில் தூண்கள் அமைக்க வேண்டும். அதன் பிறகு மேல்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    வரட்டுபள்ளம்-38.6, அம்மாபேட்டை-22.6, கவுந்தப்பாடி-20, பவானி-2.

    • திடீர் மழையின் காரணமாக மின்கம்பங்கள், மரங்கள் முறிந்து விழுந்தன.
    • மழையையும் பொருட்படுத்தாமல் மின் ஊழியர்கள் விரைந்து சென்று மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் நேற்று பகலில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மதியம் திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதேபோல் தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது.

    நெல்லை

    நெல்லை மாநகர பகுதியில் நேற்று மதியம் சுமார் அரைமணி நேரம் மட்டுமே பெய்த திடீர் மழையின் காரணமாக மின்கம்பங்கள், மரங்கள் உள்ளிட்டவை ஏராளமான இடங்களில் முறிந்து விழுந்தன. இதனால் ஒரு சில இடங்களில் கடுமை யான சேதங்கள் ஏற்பட்டது.

    குறிப்பாக புதிய பஸ் நிலையத்தின் முன்புறம் உள்ள பூங்காவில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தது. திருவனந்தபுரம் சாலையில் இருந்து பஸ் நிலையத்திற்குள் திரும்பும் சாலையிலும் மரங்கள் முறிந்து விழுந்தது.

    மாநகர பகுதியில் மட்டும் சுமார் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் பெரும்பாலான இடங்களில் மின்தடை ஏற்பட்டது. எனினும் கொட்டும் மழையையும் பொருட்ப டுத்தாமல் மின் ஊழியர்கள் விரைந்து சென்று மரக்கிளை களை வெட்டி அப்புறப்படுத்தினர். ஒருசில இடங்களில் மாலையில் இருந்து இரவு வரையிலும் மின்சாரம் தடைபட்டது. பெரும்பாலான இடங்களில் அடிக்கடி மின்சாரம் போவதும், வருவதுமாக இருந்தது. பலத்த காற்று காரணமாக உயரமான கட்டி டங்கள் சிலவற்றில் மேற்கூரை கள் காற்றில் பறந்தன.

    வ.உ.சி. மைதானத்தில் கேலரி மேற்கூரை சேதம்

    பாளையில் ரூ.14 கோடியில் கட்டப்பட்டு திறக்கப்பட்ட வ.உ.சி. மைதானத்தில் மேற்கூரைகள் பலத்த காற்றின் காரணமாக பின்புறமாக முறிந்து விழுந்தது. அந்த நேரத்தில் யாரும் உடற்பயிற்சி, நடைபயிற்சி மேற்கொள்ள அங்கு வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி நேரில் பார்வையிட்டு உடனடியாக அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாகவும், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் விரிவான விசாரணை மேற்கொள்ளப்ப டும் எனவும் தெரிவித்தார்.

    தொடர்ந்து மேற்கொண்டு விபத்துகள் ஏற்படாமல் இருக்கும் வகையில் மேற்கூரை சரிந்து விழுந்த மைதா னத்திற்குள் பொதுமக்கள், நடைபயிற்சி மேற்கொ ள்வோர், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட யாரும் செல்ல வேண்டாம் என்று கமிஷனர் தற்காலிக தடை உத்தரவை பிறப்பித்தார்.

    இதனால் இன்று காலை அங்கு வழக்கம்போல் நடைபயிற்சி மேற்கொள்ள வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மாவட்டத்தில் பாளையில் அதிகபட்சமாக 8 மில்லி மீட்டரும், மூலக்கரைப்பட்டியில் 2 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    • அவசர பராமரிப்பு பணிகள் தவிர வேறு பணிகளுக்கு மின்தடங்கள் ஏற்படுத்த கூடாது
    • நெல்லை மாவட்டத்தில் இடி- மின்னல் மழை, சூறைக்காற்று அதிகமாக இருக்கிறது.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நெல்லை நகர்ப்புற கோட்டத்தின் மக்கள் குறை தீர்க்கும் முகாம் கே.டி.சி. நகரில் உள்ள செயற் பொறி யாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

    உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு

    கூட்டத்திற்கு நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி கலந்து கொண்டு பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க செயற்பொறியாளர் நெல்லை நகர்ப்புற கோட்டம் முத்துக்குட்டி மற்றும் ஏனைய அதிகாரி களுக்கும் உத்தரவிட்டார்.

    நிகழ்ச்சியில் நெல்லை நகர்ப்புற கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர். குறைதீர்க்கும் கூட்டம் முடிந்தவுடன் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி பேசியதாவது:-

    மின்துறை அமைச்சர் உத்தரவின் பேரில் வருகிற 31-ந்தேதி கோடை காலம் முடியும் வரை தங்கு தடையின்றி மின் வினியோகம் செய்வதற்கு ஏதுவாக அவசர பராமரிப்பு பணிகள் தவிர வேறு பணிகளுக்கு மின்தடங்கள் ஏற்படுத்த கூடாது

    நெல்லை நகர்ப்புற கோட்டத்தில் இயற்கை இடர்பாடுகள் காரணமாக ஏற்பட்ட மின்தடங்களை இரவு-பகல் பாராது உடனடியாக சரி செய்த அனைத்து மின் பொறி யாளர்கள், அலுவலர்கள், மற்றும் பணியாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அனைவரும் மிகுந்த கவனத்துடனும் பாதுகாப்பு நெறிமுறை களுடனும் பணிபுரிய வேண்டும்.

    கோடைகாலத்தில் ஏற்படும் இயற்கை இடர்பாடுகள் காரணமாக நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடும் இடி- மின்னல் மழை பொழிவு சூறைக்காற்று அதிகமாக இருக்கிறது.

    இதனால் அனைத்து மின் பொறியாளர்களும் தொடர் கண்காணிப்பில் பணி புரிந்து மின் தடங்கள் ஏற்பட்டால் உடனடியாக மின் வினியோகம் வழங்குவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    வருகின்ற காலங்களில் இயற்கை இடர்பாடுகள் காரணமாக மின் பாதையில் மின்தடங்கள் ஏற்படுத்தும் மரக்கிளைகளை அப்புறப் படுத்தவும், பீங்கான் வட்டு பதிலாக இயற்கை இடர் பாடுகளின் போது முடிந்த வரை மின் தடங்கள் ஏற்படுத்தாமல் இருக்கும் பாலிமர் வட்டு மற்றும் பாலிமர் முள் சுருள் பொருத்துவதற்கு தேவை யான மதிப்பீடு தயார் செய்து பணிகளை உடனடி யாக தொடங்க வேண்டும்.

    மேலும் மின் நுகர் வோர்கள் கேட்கின்ற வினாக்களுக்கு உரிய பதிலை கனிவுடன் தெரி விக்க அறிவுரை வழங்கி னார். பொதுமக்கள் மின்சாரம் சம்பந்தமாக ஏதேனும் உதவி தேவைப் பட்டால் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் தொலைபேசி எண் 94987 94987 அனைத்து மின் நுகர்வோர்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

    மேலும் பொதுமக்களும் தங்களுக்கு தேவையான மின்சார சம்பந்தமான அனைத்து தேவைகளையும் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் 94987 94987 தொடர்பு கொண்டு பூர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.

      பெரியகுளம்:

      தேனிமாவட்டம் பெரிய குளம் மற்றும் லட்சுமிபுரம் பகுதியில் மாலை பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.

      இதன் காரணமாக லட்சுமிபுரம் முதல் தேனி மாவட்ட நீதிமன்றம் வரை சாலை ஓரங்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட நூற்றாண்டுகள் பழமையான மரங்களும், மின்கம்பங்களும் முறிந்து விழுந்தன. மேலும் சில இடங்களில் மின் கம்பங்கள், மரங்கள் சாலை ஓரங்களில் உள்ள கடைகள் வீடுகள் பைக் மற்றும் கார்கள் மீது விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

      நூற்றாண்டுகள் பழமையான ராட்ஷச மரங்கள் சாலையின் குறுக்கே வாகனங்கள் செல்ல முடியாதபடி விழுந்ததால் தேனி-பெரியகுளம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

      இதனைத் தொடர்ந்து அனைத்து வாகனங்களும் பைபாஸ் சாலை வழியாக திருப்பி விடப்பட்டது. மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் லட்சுமிபுரம் பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. நெடுஞ்சாலை துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் சாலைப் பகுதியில் உள்ள மரங்களை, அறுவை மெஷின்கள் மூலம் வெட்டி அகற்றியும், ஜே.சி.பி எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர்.

      தொடர் மழை காரணமாக லட்சுமிபுரம் பகுதியில் கடைகள், வீடுகள் சேதம் அடைந்தன. மேலும் மின் தடை காரணமாக பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.

      • திடீரென கருமேகங்கள் திரண்டு பலத்த மழை கொட்டியது. இடியுடன் சுமார் அரை மணிநேரம் வெளுத்து வாங்கியது.
      • வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

      காஞ்சிபுரம்:

      தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. சென்னையில் 109 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொது மக்களும் வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டு வருகின்றனர்.

      இதேபோல் காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் உள்ளது. கடந்த சில நாட்களாக 100 டிகிரி வரை வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

      இந்நிலையில் காஞ்சிபுரத்தில் இன்று காலை 7 மணியளவில் திடீரென கருமேகங்கள் திரண்டு பலத்த மழை கொட்டியது. இடியுடன் சுமார் அரை மணிநேரம் வெளுத்து வாங்கியது.

      இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

      இதேபோல் காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள ஓரிக்கை, செவிலிமேடு, ஒலிமுகமது பேட்டை, தாமல், ஏனாத்தூர், வையாவூர், அய்யம்பேட்டை, வாலாஜாபாத், குருவிமலை, களக்காட்டூர் பரந்தூர், சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

      காலையிலேயே இடியுடன் கூடிய மழை பெய்ததால் வாகன ஓட்டிகளும் பொது மக்களும் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பி நிம்மதி அடைந்தனர். தொடர்ந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

      வண்டலூர், ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் சில இடங்களில் லேசான மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலையில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

      • மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
      • காற்று அதிகமாக அடித்ததால் படகு சவாரியும் நேற்று மாலை சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

      கொடைக்கானல்:

      மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டதால் கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர்.

      கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று பகல் பொழுதில் வெயில் அடித்தாலும் மாலையில் திடீரென சூறாவளிக்காற்று, இடி மின்னல்களுடன் சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது.

      கொடைக்கானல் அப்சர்வேட்டரி, செண்பகனூர், நாயுடுபுரம், பெருமாள்மலை, வில்பட்டி, வட்டகானல், பிரகாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.

      சுற்றுலா பயணிகள் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குணா குகை, பைன்பாரஸ்ட், தூண்பாறை, மோயர்பாய்ண்ட் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். காற்று அதிகமாக அடித்ததால் படகு சவாரியும் நேற்று மாலை சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

      எனினும் சாரல் மழையில் நனைந்தபடியே உற்சாகமாக சுற்றுலா இடங்களை கண்டு ரசித்தனர். பிரையண்ட் பூங்கா, செட்டியார்பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டக்கானல் நீர்வீழ்ச்சி, பாம்பார்புரம் அருவி உள்ளிட்ட இடங்களில் உற்சாகமாக புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

      பிரையண்ட் பூங்காவில் மலர்களின் பெயர்களை கண்டறிய கியூ ஆர் கோடு அந்தந்த மலர்களின் பெயர் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் தங்களது செல்போன்களில் ஸ்கேன் செய்வதன் மூலம் அந்த பூக்களின் குடும்ப வகைகள் உள்ளிட்ட முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். பூங்கா நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு சுற்றுலா பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

      கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நகர் பகுதியில் போக்குவரத்து போலீசார் அதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சீசன் காலங்களில் போக்குவரத்து நெரிசல் தீராத தலைவலியாக உள்ளது. எனவே இதற்கு நிரந்தர நீர்வு காண வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

      • பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா வந்த சுமார் 500 பேர் சுங்தாங் பகுதியில் சிக்கி கொண்டனர்.
      • இந்திய ராணுவ வீரர்கள் அங்கு விரைந்து சென்று 54 குழந்தைகள் உள்பட அனைவரையும் பத்திரமாகமீட்டனர்.

      லாச்சுங்:

      சிக்கிம் மாநிலத்தில் உள்ள லாச்சுங் மற்றும் லாச்சென் பள்ளத்தாக்கு பகுதி சிறந்த சுற்றுலா தளமாக திகழ்ந்து வருகிறது. தற்போது கோடை விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர்.

      இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் ரோடுகள் சேதமாகி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா வந்த சுமார் 500 பேர் சுங்தாங் பகுதியில் சிக்கி கொண்டனர். இது பற்றி தகவல் அறிந்த இந்திய ராணுவ வீரர்கள் அங்கு விரைந்து சென்று 54 குழந்தைகள் உள்பட அனைவரையும் பத்திரமாகமீட்டனர்.

      பின்னர் மீட்கப்பட்ட 500 பேரையும் தாங்கள் தங்கி இருந்த 3 ராணுவ முகாம்களுக்கு அழைத்துசென்று தங்க வைத்தனர். அவர்களுக்கு சூடான உணவு, காபி மற்றும் குளிரை தாங்கும் உடைகளை வழங்கப்பட்டது.

      • அதிவேக காற்றும் மழையும் பெய்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
      • திருப்பூர் ரெயில் நிலையம்அருகே வைக்கப்பட்டிருந்த டிராபிக் சிக்னல் கம்பம், ஓங்கியடித்த காற்றுக்கு, உடைந்துவிழுந்தது.

      திருப்பூர்:

      திருப்பூரில் காலை நேரங்களில் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. இருசக்கர வாகன ஓட்டிகள், வியர்க்க விறுவிறுக்க பயணிக்கின்றனர். இந்நிலையில், திருப்பூர் நகர பகுதியில், கடந்த இரண்டு நாட்களாக மாலையில் மழை பெய்து வருகிறது.

      நேற்றுமுன்தினம் மாலை திடீரென சூறைக்காற்று வீசியது. சுழன்றடித்த காற்று, ரோட்டோரம் கிடத்த குப்பை,பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் பாட்டில்கள், சருகுகள், மண்ணை வாரி, இறைத்தது. இதனால் சாலை தெளிவாக தெரியாமல் வாகன ஓட்டிகள் தடுமாறினர்.இருசக்கர வாகன ஓட்டிகள், மேற்கொண்டு பயணிக்க முடியாமல், அருகிலிருந்த கடைகளில் தஞ்சமடைந்தனர். தொடர்ந்து அரைமணி நேரம் பலத்தமழை பெய்தது. நேற்றும் மாலை பலத்த காற்று வீசியது. காற்றுக்கு முறிந்து விழுந்து விடுவதுபோல், மரக்கிளைகள் அசைந்தாடின.சில நிமிடங்களிலேயே, மழை பெய்யத்துவங்கியது. அதிவேக காற்றும் மழையும் பெய்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

      திருப்பூர் ரெயில் நிலையம்அருகே வைக்கப்பட்டிருந்த டிராபிக் சிக்னல் கம்பம், ஓங்கியடித்த காற்றுக்கு, உடைந்துவிழுந்தது. அதனை சீரமைக்கும் பணியில், பணியாளர்கள் ஈடுபட்டனர். மழை பெய்தும் திருப்பூர் மாநகரில் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை. இதனால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். 

      ×