search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லஞ்சம்"

    • ஒரு நகைக்கடைக்காரரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது.
    • இன்ஸ்பெக்டர் கருணாகரன் நேற்று ஆயுதப்படைக்கு அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கீழவாசல் வெள்ளப் பிள்ளையார் கோவில் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சயனைடு கலந்த மதுபானம் குடித்த இரண்டு பேர் உயிரிழந்தனர்.

    இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

    இந்த சம்பவம் குறித்து

    தஞ்சாவூர் கிழக்கு போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஆக பணியாற்றி வந்த கருணாகரன் என்பவர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    இது தொடர்பாக நகைக்கடை உரிமையாளர்கள் உள்ளிட்டவர்களிடம் கருணாகரன் விசாரணை நடத்தினார்.

    அப்போது தஞ்சாவூரை சேர்ந்த ஒரு நகைக்கடைக்காரரிடம் ரூ.50,000 லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது.

    இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் விசாரணை நடத்தினார்.

    இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கருணாகரன் நேற்று ஆயுதப்படைக்கு அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

    இதனால் தற்போது கிழக்கு போலீஸ் நிலைய பொறுப்பு இன்ஸ்பெக்டராக மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரா கூடுதலாக கவனித்து வருகிறார்.

    கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த கருணாகரன் அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை மாற்றி அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை
    • தாம்பூலத்தையும், சில்லரை காசையும் வாங்க மறுத்து அதிகாரிகள் வாக்குவாதம் செய்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த தேவநேரி, அண்ணாநகர் குடியிருப்பு பகுதியில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இது பழுதடைந்து உள்ளதால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது.

    இதையடுத்து பழு தடைந்த டிரான்ஸ்பார்மரை மாற்றி அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சம்பந்தப் பட்ட மின்வாரிய அதிகாரியிடம் தெரிவித்தனர்.

    ஆனால் டிரான்பார்மரை மாற்றி அமைக்க அதிகாரி ஒருவர் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து மாமல்லபுரம் நகர பாட்டாளி மக்கள் கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் ரூ.14 ஆயிரத்தை சில்லரை காசுகளாக சேகரித்து மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து ஒத்தவாடை தெருவில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்றனர். அவர்கள் சில்லரை காசுகளுடன் மற்றொரு தட்டில் பூ, பழம் உள்ளிட்ட தாம்பூலத்துடன் மேளதாளத்துடன் வந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    மின்வாரிய அலுவலகத்தின் நுழைவு வாயில் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரியின் மேஜை என இரண்டு இடங்களில் கொண்டு வந்த சில்லரை காசு மற்றும் தாம்பூலத்தட்டை வைத்தனர். இதனை பார்த்து அலுவலகத்தில் இருந்த மின்வாரிய ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தாம்பூலத்தையும், சில்லரை காசையும் வாங்க மறுத்து வாக்குவாதம் செய்தனர்.

    பின்னர் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க வினர் டிரான்ஸ்பர் மாற்ற முதல் தவணையாக ரூ.14 ஆயிரம் கொடுத்து உள்ளோம், இனியாவது வந்து டிரான்ஸ்பார்மரை மாற்றுங்கள் எனக்கூறி விட்டு அங்கிருந்த மேஜையில் சில்லரை காசை வைத்து சென்றுவிட்டனர். இதனால் அந்த பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் மின்வாரிய அதிகாரிகள் விழித்தனர்.

    பழுதடைந்த டிரான்ஸ்பர்மரை மாற்ற அதிகாரிகள் லஞ்சம் கேட்டனரா? என்று உயர் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    சின்னசேலம் அருகே பட்டா மாற்றம் செய்ய விவசாயியிடம் ரூ.24 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் நில அளவையர் கைது செய்யப்பட்டார். இவருடன் கிராம நிர்வாக உதவியாளரும் சிக்கினார்.
    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நைனார்பாளையம் வடக்கு காட்டுக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் ஜெயராமன் (வயது 36). விவசாயி. இவரது சகோதரர்கள் ஏழுமலை, நல்லதம்பி. இவர்கள் 3 பேரும் தங்களது பெயரில் உள்ள நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்ய முடிவு செய்தனர். இதற்காக சார்பதிவாளர் அலுவலகத்தில் இணையவழி மூலம் விண்ணப்பித்து, அதற்கான ரசீதையும் பெற்றனர். இதனை தொடர்ந்து அந்த ரசீதை நைனார்பாளையம் கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுத்து, பட்டா மாற்றம் செய்வதற்காக வழிமுறைகள் குறித்து கேட்டனர். அதற்கு அவர், பட்டா மாற்றம் செய்ய நில அளவையர் நேரில் வந்து அளக்க வேண்டும் என்று கூறினார்.

    இதனை தொடர்ந்து சின்னசேலம் தாலுகா அலுவலகத்தில் நைனார்பாளையம் குறுவட்ட நில அளவையராக பணிபுரியும் சேலம் மாவட்டம் ஆறகலூரை சேர்ந்த சூர்யா(29) என்பவரை ஜெயராமன் அணுகினார். அதற்கு நில அளவையர் சூர்யா, பட்டா பெயர் மாற்றம் செய்ய தலா ரூ.8 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.24 ஆயிரம் தர வேண்டும். இதற்காக 24-ந் தேதி(அதாவது நேற்று) நிலத்தை அளக்க நேரில் வருவதாகவும், அன்றைய தினமே பணத்தை கொடுத்ததும் நிலத்தை அளந்து தருவதாகவும் கூறினார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெயராமன், விழுப்புரத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயன பொடி தடவிய ரூ.24 ஆயிரத்துடன் ஜெயராமன் நேற்று தனது நிலத்தில் காத்திருந்தார். அங்கு வந்த நில அளவையர் சூர்யா, நைனார்பாளையம் கிராம நிர்வாக உதவியாளரான பெரம்பலூர் மாவட்டம் சிறு நிலா பகுதியை சேர்ந்த சுசீலா(35) ஆகியோரிடம் ஜெயராமன் பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த விழுப்புரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன், இன்ஸ்பெக்டர் திருவேங்கடம், ஏட்டுகள் பாலமுருகன், விஜயதாஸ், நரசிம்மராவ் ஆகியோர் பாய்ந்து சென்று நில அளவையர் சூர்யா, கிராம உதவியாளர் சுசீலா ஆகியோரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
    தொழில் செய்வதற்கு லஞ்சம் மலிந்த நாடுகளில் இந்தியா 82-வது இடத்தை பிடித்து இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.
    புதுடெல்லி:

    லஞ்ச-ஊழலுக்கு எதிரான ‘டிரேஸ்’ என்ற அமைப்பு, உலக அளவில் தொழில் செய்வதற்கு லஞ்சம் மலிந்த நாடுகளின் பட்டியலை ஆண்டுதோறும் வரிசைப்படுத்தி வெளியிட்டு வருகிறது.

    அரசுடனான வணிக தொடர்புகள், லஞ்சத்திற்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் அமலாக்கம், அரசு மற்றும் சிவில் சேவையில் வெளிப்படைத்தன்மை மற்றும் ஊடகங்களின் பங்கை உள்ளடக்கிய சிவில் சமூக மேற்பார்வைக்கான திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

    அந்தவகையில் நடப்பு ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. 194 நாடுகளை கொண்ட இந்த பட்டியலில் இந்தியா 44 புள்ளிகளுடன் 82-வது இடத்தை பிடித்து உள்ளது.

    வனாட்டு தீவுகள், பெரு, மாசிடோனியா, மாண்டிநீக்ரோ போன்ற நாடுகளும் இந்தியாவைப்போலவே 44 புள்ளிகள் பெற்றுள்ளன.

    இந்த பட்டியலில் இந்தியா கடந்த ஆண்டு 45 புள்ளிகளுடன் 77-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த பட்டியலில் பாகிஸ்தான், சீனா, நேபாளம், வங்காளதேசம் போன்ற அண்டை நாடுகளைவிட இந்தியா சிறப்பான நிலையில் உள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

    இந்த ஆண்டுக்கான பட்டியலில் வடகொரியா, துர்க்மெனிஸ்தான், வெனிசூலா மற்றும் எரித்ரியா போன்ற நாடுகள் அதிக லஞ்ச ஆபத்து நிறைந்த நாடுகளாகவும், டென்மார்க், நார்வே, பின்லாந்து, சுவீடன், நியூசிலாந்து போன்ற நாடுகள் லஞ்ச ஆபத்து குறைந்த நாடுகளாகவும் அறியப்படுகின்றன.

    அமெரிக்காவை பொறுத்தவரை கடந்த ஐந்து ஆண்டுகளில், உலகளாவிய போக்குகளுடன் ஒப்பிடும் போது, அங்கு வணிக லஞ்சம் ஆபத்து சூழல் கணிசமாக மோசமடைந்திருப்பதாக கூறியுள்ள டிரேஸ் அமைப்பு, அனைத்து வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளிலும் வணிகம் செய்வதற்கான லஞ்ச அபாயம் அதிகரித்திருப்பதகவும் குறிப்பிட்டு உள்ளது.

    வாரிசு சான்று வழங்க லஞ்சம் வாங்கி கைதான வருவாய் ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் சிவில் சப்ளை கார்ப்பரேசனில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.

    கடந்த 2011-ம் ஆண்டு சுப்பிரமணி இறந்து விட்டார். இதையடுத்து அவரது மனைவி ராஜேஸ்வரி சிவில் கார்ப்பரேசனில் நிதி உதவி கேட்டு விண்ணப்பித்தார். அவர்கள் வாரிசு சான்றிதழ் கேட்டனர்.

    இதையடுத்து ராஜேஸ்வரி கடந்த 2013-ம்ஆண்டு நவம்பர் மாதம் ஈரோடு கிழக்கு வருவாய் ஆய்வாளராக பணியாற்றிய மனோகரன் என்பவரிடம் வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார். அவர் ரூ.1000 லஞ்சமாக கேட்டார்.

    இதையடுத்து லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜேஸ்வரி இதுகுறித்து ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் ரசாயன பவுடர் தடவிய பணத்தை ராஜேஸ்வரியிடம் கொடுத்து அனுப்பினர்.

    அவர் லஞ்ச பணத்தை வருவாய் ஆய்வாளர் மனோகரனிடம் கொடுத்தார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் மனோகரனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரை சஸ்பெண்டு செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.

    இதுதொடர்பான வழக்கு ஈரோடு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் வருவாய் ஆய்வாளர் மனோகரனுக்கு லஞ்சம் கேட்டதற்கு 1 ஆண்டும், லஞ்சம் வாங்கியதற்கு 2 ஆண்டும் என மொத்தம் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. மேலும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

    இதையடுத்து மனோகரன் அபராதத்தை செலுத்தினார். மேலும் 3 ஆண்டுகள் மட்டுமே சிறை தண்டனை விதித்ததால் அவர் ஜாமீனில் சென்றார்.

    3 ஆண்டு சிறை தண்டனை பெற்ற வருவாய் ஆய்வாளர் மனோகரன் தற்போது நீலகிரி மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார். எனவே இந்த தீர்ப்பு குறித்து நீலகிரி கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் மனோகரன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பார்.
    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே, பயிர் காப்பீடு சான்று வழங்க வி.ஏ.ஓ. ரூ.100 லஞ்சம் கேட்டது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி உள்ளது.
    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மார்த்தாண்டபட்டி ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இங்குள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு அடங்கல் சான்று பெறுவதற்காக கிராம நிர்வாக அலுவலகத்திற்கு தினமும் வந்து செல்கின்றனர்.

    ஆனால் சான்று வழங்காமல் அங்கு பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர், விவசாயிகளை அலைக்கழிப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

    மேலும் ஒரு அடங்கல் சான்று வழங்க விவசாயிகளிடம் இருந்து லஞ்சமாக ரூ.100 வசூலிப்பதாகவும் அவர்கள் தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில் விவசாயி ஒருவர் பயிர் காப்பீடு அடங்கல் சான்று பெறுவதற்கு சென்றதும் அதற்கு வி.ஏ.ஓ. ரூ.100 லஞ்சம் கேட்டது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி உள்ளது.

    மேலும் அந்த வீடியோவில் ரூ.100 லஞ்சம் வாங்குவதை கிராம நிர்வாக அலுவலர் ஒப்புக்கொள்ளும் காட்சியும் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. எனவே வி.ஏ.ஓ. மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் லஞ்சம் வாங்கியதாக கைதான வருவாய் ஆய்வாளர் ராசிபுரம் கிளைசிறையில் அடைக்கப்பட்டார்.
    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சூவிழிராஜா. விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலம் எலச்சிபாளையத்தில் உள்ளது. இந்த நிலத்தை அளவீடு செய்வதற்காக அவர் எலச்சிபாளையம் வருவாய் ஆய்வாளர் பரமேஸ்வரனிடம் (வயது 48) மனு கொடுத்தார். ஒரு மாத காலமாக நிலத்தை அளவீடு செய்து கொடுக்காமல் பரமேஸ்வரன் காலம் தாழ்த்தி வந்தார்.

    இதுகுறித்து சூவிழிராஜா வருவாய் ஆய்வாளர் பரமேஸ்வரனிடம் கேட்டார். அதற்கு அவர் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால் தான் உடனடியாக நிலத்தை அளவீடு செய்து கொடுக்க முடியும் என்று கூறினார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சூவிழிராஜா, இதுகுறித்து நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

    இதையடுத்து போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூ.5 ஆயிரத்தை சூவிழிராஜாவிடம் வழங்கினர். அவர் போலீசார் கூறியப்படி நேற்று முன்தினம் நள்ளிரவு திருச்செங்கோடு தாலுகா அலுவலகத்துக்கு சென்றார். பின்னர் ரூ.5 ஆயிரத்தை வருவாய் ஆய்வாளர் பரமேஸ்வரனிடம் வழங்கினார். அதனை அவர் பெற்றுக் கொண்டார்.

    அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் பரமேஸ்வரனை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பரமேஸ்வரனை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ராசிபுரம் கிளைசிறையில் அடைக்கப்பட்டார்.
    கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவரின் உடலை ஒப்படைக்க ரூ.11 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சுகாதார ஆய்வாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    சென்னை:

    சென்னை நன்மங்கலத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில், ‘எனது தந்தை இன்பசேகரன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்து போனார். அவரது உடலை முறைப்படி எங்களிடம் ஒப்படைக்க மேடவாக்கம் சுகாதாரத்துறை ஆய்வாளர் தசரதன் ரூ.11 ஆயிரம் பணம் வாங்கினார். 

    ஆனால் கொரோனாவால் உயிரிழந்தோரின் உடலை ஒப்படைக்க பணம் வாங்கக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. அதை மீறி பணம் வாங்கிய அதிகாரி தசரதன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’, என்று கூறப்பட்டிருந்தது.

    இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தசரதன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் ஊழியர் ரூ.200 லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    வாணியம்பாடி:

    வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் சிகிச்சை அளிக்க லஞ்சம் பெறுகின்றனர் என தொடர்ந்து புகார் எழுந்து வந்தது.

    இந்த நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அசின்தாஜ் என்பவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு குளுக்கோஸ் ஏற்ற டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். ஆனாலும் அங்கு பணிபுரியும் நர்சு ஒருவர் இதற்காக 200 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அந்த லஞ்ச பணத்தை உதவியாளர் ஒருவர் பெறும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    இது குறித்து நோயாளியின் உறவினர் வாணியம்பாடி மருத்துவ அலுவலரிடம் புகார் அளித்துள்ளார்.

    ஏழ்மை காரணமாக அரசு ஆஸ்பத்திரிக்கு வருகிறோம். இங்கும் சிகிச்சை அளிக்க லஞ்சம் கேட்கின்றனர். பணம் வாங்கியவர் மீது புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என புகார் தாரர்கள் வேதனையுடன் கூறினர்.

    விமான நிலையங்களை கையாள்வதற்கு டெண்டர் விட்டதில் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் உயர் அதிகாரி கைது செய்யப்பட்டார்.
    புதுடெல்லி:

    இந்திய விமான நிலையங்களின் ஆணையத்தில் செயல் இயக்குனராக (நிதி) இருந்து வந்தவர், ரவிசந்திரன். இவர் ‘டி’ பிரிவு விமான நிலையங்களை கையாள்வதற்கு டெண்டர் விட்டதில், சென்னையை சேர்ந்த ஒரு நிறுவன அதிபரிடம் ரூ.4 லட்சம் லஞ்சம் கேட்டார். ஆனால் அவர் லஞ்சம் கொடுக்க விரும்பாமல், சி.பி.ஐ.யிடம் புகார் செய்தார். அவரை கையும், களவுமாக பிடிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டனர்.

    அதன் அடிப்படையில் ரசாயன பவுடர் தடவிய ரூ.2 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை அந்த நிறுவனத்தின் அதிபர், நேற்று ரவிசந்திரனிடம் வழங்கினார். அப்போது அங்கே பதுங்கி இருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் பாய்ந்து சென்று ரவிசந்திரனை கைது செய்தனர். அவரிடம் இருந்து லஞ்சப்பணத்தை கைப்பற்றினர். மேலும், சென்னை மற்றும் டெல்லியில் அவருக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனையும் நடத்தப்பட்டது. அதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் கூறுகின்றன.
    விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட் தீர்ப்பு அளித்தது.
    விழுப்புரம், 

    விழுப்புரம் அருகே உள்ள குத்தாம்பூண்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (வயது 55), விவசாயி. இவருடைய அக்காள் அஞ்சலத்தின் மகள் தென்றல் என்பவர், அரசு திட்டத்தின் கீழ் திருமண உதவித்தொகை பெறுவதற்காக விண்ணப்பித்திருந்தார்.

    இதற்காக வருமான சான்றிதழை பெறுவதற்காக கடந்த 7.1.2011 அன்று குத்தாம்பூண்டி கிராம நிர்வாக அலுவலராக இருந்த சீத்தாராமன் (57) என்பவரை ராஜீவ்காந்தி அணுகினார். அதற்கு ரூ.1,500-ஐ லஞ்சமாக தர வேண்டும் என்று சீத்தாராமன் கூறினார். தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று ராஜீவ்காந்தி கூறவே அப்படியானால் ரூ.500-ஐ குறைத்துக்கொண்டு ரூ.1,000 மட்டும் தருமாறு கறாராக கூறினார்.

    இதையடுத்து அந்த லஞ்ச பணத்தை சீத்தாராமனிடம் ராஜீவ்காந்தி கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சீத்தாராமனை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அதன் பிறகு அவர் துறை ரீதியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

    இதுசம்பந்தமான வழக்கு விழுப்புரம் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதனிடையே சீத்தாராமன் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பிரியா, குற்றம் சாட்டப்பட்ட சீத்தாராமனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து சீத்தாராமன் சிறையில் அடைக்கப்பட்டார்.
    அரியலூர் அருகே மாற்றுத்திறனாளியிடம் லஞ்சம் வாங்கிய பெண் வி.ஏ.ஓ.வை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஓலையூர் குடிகாடு பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் . இவரது மகன் அருள் பாண்டியன் (வயது 25). பட்டதாரியான இவர் 2 கால்களும் செயலிழந்தவர்.

    ராமலிங்கம் 2 ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். தந்தை பெயரில் உள்ள வீடு, நிலம் போன்றவற்றின் பட்டா, சிட்டா ஆகியவற்றை தனது பெயருக்கு மாற்ற அருள் பாண்டியன் அப்பகுதி கிராம நிர்வாக அதிகாரி சுமதியிடம் விண்ணப்பித்தார்.

    இந்த நிலையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அருள்பாண்டியனை, வி.ஏ.ஓ. சுமதி சில நாட்கள் அலைக்கழித்து வந்துள்ளார். இது பற்றி கேட்டபோது ரூ.5 ஆயிரம் கொடுத்தால் தான் பட்டா, சிட்டா மாற்றி தருவேன் என்று கூறியுள்ளார். இதற்கு அருள்பாண்டியன் அவ்வளவு பணம் என்னால் தரமுடியாது என்று கூறிய போது, ரூ.1000 தர வேண்டும் என்று சுமதி கேட்டுள்ளார்.

    ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அருள் பாண்டியன், இது பற்றி அரியலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து சுமதியை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அருள் பாண்டியனிடம் ரசாயனம் தடவிய ரூ.1000 பணத்தை கொடுத்து அனுப்பினர்.

    அவர் வி.ஏ.ஓ. அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த சுமதியிடம் பணத்தை கொடுத்தார். அதனை பெற்ற போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சுமதியை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    பின்னர் அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சுமதி அங்குள்ள கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார். #tamilnews
    ×