search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்எஸ்எஸ்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவராக மோகன் பகவத் இருக்கிறார்.
    • இசட் பிளஸ் பாதுகாப்பில் இருந்து மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு இணைப்பு (ஏ.எஸ்.எல்) பாதுகாப்பு அவருக்கு வழங்கப்படுகிறது.

    நாக்பூர்:

    ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவராக மோகன் பகவத் இருக்கிறார். அவரது பாதுகாப்பு நிலையை மத்திய உள்துறை அமைச்சகம் உயர்த்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோருக்கு வழங்கப்படும் பாதுகாப்புக்கு இணையாக மோகன் பகவத்துக்கு தற்போது பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    இசட் பிளஸ் பாதுகாப்பில் இருந்து மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு இணைப்பு (ஏ.எஸ்.எல்) பாதுகாப்பு அவருக்கு வழங்கப்படுகிறது.

    மோகன் பகவத்தின் பாதுகாப்பை மறு ஆய்வு செய்ததன் அடிப்படையில் இந்த பாதுகாப்பு நடவடிக்கை இறுதி செய்யப்பட்டது.

    • மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட பின்பு ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு முதன்முறையாக தடை விதிக்கப்பட்டது.
    • சில வருடங்களுக்கு பிறகு நன்னடத்தை பேரில் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.

    1948 ஆம் ஆண்டு தேசப்பிதா மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதன் எதிரொலியாக முதல் முறையாக தீவிர வலதுசாரி இந்துத்துவ அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு சர்தார் வல்லபாய் படேல் தடை விதித்தார்.

    சில காலங்களுக்கு பிறகு நன்னடத்தை பேரில் அந்த தடை நீக்கப்பட்டது. பின்னர், 1966 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஆர்எஸ்எஸ் அமைப்பில் அரசு ஊழியர்கள் சேரவும், அதன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தடை விதித்தார்.

    அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர்வதற்கும் அதன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கும் 58 ஆண்டு காலமாக இருந்து வந்த தடையை மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு அண்மையில் நீக்கியது.

    இந்நிலையில், ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளில் பங்கேற்க, 1972ம் ஆண்டில் விதிக்கப்பட்ட தடையை, 52 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜஸ்தான் மாநில பாஜக அரசு நீக்கியுள்ளது.

    ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட பல மாநில அரசுகள், அரசு ஊழியர்களை ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைக்கும் கட்டுப்பாடுகளை ஏற்கனவே நீக்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    • 1948 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதன் எதிரொலியாக ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு படேல் தடை விதித்தார்
    • பிரதமர் வாஜ் பாய் தலைமையிலான பாஜக அரசு ஆர்எஸ்எஸ் மீதான இந்த தடையை நீக்கவில்லை

    அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர்வதற்கும், அதன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கும் 58 ஆண்டு காலமாக இருந்து வந்த தடையை மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு தற்போது நீக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. 1948 ஆம் ஆண்டு தேசப்பிதா மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதன் எதிரொலியாக முதல் முறையாக தீவிர வலதுசாரி இந்துத்துவ அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு சர்தார் வல்லபாய் படேல் தடை விதித்தார்.

     

     

    சில காலங்களுக்கு பிறகு நன்னடத்தை பேரில் அந்த தடை நீக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 1966 வாக்கில் பசுக்கொலைகளுக்கு போராடுகிறோம் என்று வெகுஜன ஆதரவை ஆர்எஸ்எஸ் அமைப்பு திரட்டி போராட்டம் நடந்தத் துவங்கியது. இதன் உச்சமாக பாராளுமன்றத்தில் பசுக்கொலைகளுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடந்தது.

    இதனைத்தொடர்ந்து அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஆர்எஸ்எஸ் அமைப்பில் அரசு ஊழியர்கள் சேரவும், அதன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தடை விதித்தார். இடையில் ஆர்எஸ்எஸ் அமைப்பினோடு நெருங்கிய தொடர்புடைய பாஜக ஆட்சி அமைந்த போதும் பிரதமர் வாஜ் பாய் ஆர்எஸ்எஸ் மீதான இந்த தடையை நீக்காத நிலையில் தற்போது 3 வது முறையாக பிரதமர் ஆகியுள்ள மோடி தலைமையிலான பாஜக அரசு இந்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.

    நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்குப் பின் மோடி மீது ஆர்எஸ்எஸ் தலைவர்கள் அதிருப்தியில்  இருப்பது  சமீப காலமாக பொது வெளியில் அவர்களின் பேச்சில் இருந்து தெரிகிறது. இந்த விரிசலை சரி செய்யவே ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு இந்த உபகாரத்தை மோடி செய்து கொடுத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதற்கிடையில் தடையை நீக்கியதற்க்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கதசிகள் கண்டம் தெரிவித்து வருகின்றன.

    இந்த தடை நீக்கம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள மதுரை எம்.பி சு.வெங்கடேசன், மத்திய அரசு ஊழியர்கள் RSS இயக்கத்தில் சேர அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இப்பொழுது அனுமதி கொடுத்து உத்தரவிடப்பட்டுள்ளது. சாவர்கரின் பிறந்தநாளில் புதிய பாராளுமன்றத்தை திறந்து, அரசு ஊழியர்களை RSS க்கு அனுப்பிவைக்கும் வேலையை துவக்கியிருக்கிற மோடி அரசுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

    • கன்னியாகுமரியில் தங்கும் அவர் 25-ந் தேதி காலை 10 மணிக்கு கார் மூலம் திருவனந்தபுரம் சென்று விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
    • மோகன்பகவத் வருகையையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி:

    ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அகில பாரத தலைவர் மோகன் பகவத் இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி வருகிறார். அங்கு விவேகானந்த கேந்திராவுக்கு செல்லும் அவருக்கு விவேகானந்த கேந்திர நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் கேந்திர நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். இரவு அங்கு தங்குகிறார்.

    நாளை (செவ்வாய்க்கிழமை) காலையில் விவேகானந்த கேந்திர பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் அங்குள்ள வளாகத்தில் ரூ.1 கோடியில் கட்டப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீரர்களின் தியாக பெருஞ்சுவரை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு மோகன் பகவத் இரவு விவேகானந்த கேந்திராவில் தங்குகிறார். 24-ந் தேதி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் அவர் கடலின் நடுவில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும் பார்வையிடுகிறார். அன்று இரவு கன்னியாகுமரியில் தங்கும் அவர் 25-ந் தேதி காலை 10 மணிக்கு கார் மூலம் திருவனந்தபுரம் சென்று விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

    மோகன்பகவத் வருகையையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இன்று காலை முதல் கன்னியாகுமரி விவேகானந்தபுரம் பகுதி முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    • மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் திக்விஜய் சிங்.
    • கட்சியை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துவது எப்படி என்பது குறித்து பேசினார்.

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலத்தின் ஜபல்பூரில் முன்னாள் முதல் மந்திரியும், மூத்த தலைவருமான திக்விஜய் சிங் கட்சி தொண்டர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    செய்தியை திறம்பட தெரிவிப்பது மற்றும் அமைப்பை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துவது எப்படி என்பதை ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்திடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்.

    ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தீவிர எதிர்ப்பாளர்களாக இருந்தாலும் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் மன விளையாட்டுகளை விளையாடுகிறார்கள். அவர்கள் ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள். ஒருபோதும் ஆர்ப்பாட்டம் செய்ய மாட்டார்கள். ஒருபோதும் அடிக்க மாட்டார்கள். ஒருபோதும் சிறைக்குச் செல்ல மாட்டார்கள், மாறாக எங்களை சிறைக்கு அனுப்புவார்கள்.

    ஆர்.எஸ்.எஸ் பொதுவாக 3 விஷயங்களில் கவனம் செலுத்துகிறது. துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல், விவாதங்கள் நடத்துதல் மற்றும் இறுதியாக இயக்கத்திற்கு ஏற்படும் செலவுகள்.

    நீங்கள் அவர்களை எதிர்த்துப் போராட விரும்பினால் அவர்களின் சொந்த விளையாட்டில் அவர்களை வெல்லுங்கள், நிச்சயமாக, உடல் ரீதியாக அல்ல, ஆனால் அறிவுபூர்வமாக என தெரிவித்தார்.

    • வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தும் திட்டங்களும் அரங்கேறின.
    • இதுபோன்ற ஒரு சூழலில் வாஜ் பாய் பிரதமராக இருந்திருந்தாலும் அந்த முடிவையே எடுத்திருப்பார்.

    முன்னால் இந்திய பிரதமர் இந்திரா காந்தியால் கடந்த 1975-ம் ஆண்டு ஜூன் 25-ந்தேதி எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட நாளானது அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிக்கப்படும் என மத்திய அரசு நேற்று தெரிவித்துள்ளது.

    தேர்தல் பிரகாரங்களில், பாராளுமன்றத்திலும் 50 வருடங்களுக்கு முன் அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சியை சுட்டிக்காட்டி காங்கிரஸை தொடர்ந்து பாஜக விமர்சித்து வரும் நிலையில் அதன் உச்சமாக இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது. இந்நிலையில்  மகாராதிராவில் இந்தியா கூட்டணியில் உள்ள உத்தவ் தாக்கரே சிவ சேனா அணியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எமெர்ஜென்சி குறித்து தெரிவித்துள்ள கருத்து அரசியல் களத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

    'அந்த சமயத்தில் நாட்டில் சிலர் அமைதியின்மையை ஏற்படுத்த முயன்றனர். இந்திரா காந்தி அரசை எதிர்த்து டெல்லி ராம்லீலா மைத்தனத்தில் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த அரசியல்வாதிகள், நமது வீரர்களிடமும் ராணுவத்திடமும் அரசின் உத்தரவுகளுக்கு கீழ்ப்படிய வேண்டாம் என்று அவர்கள் நேரடியாகவே வலியுறுத்த தொடங்கினர்.

    இதுபோன்ற ஒரு சூழலில் வாஜ் பாய் பிரதமராக இருந்திருந்தாலும் எமெர்ஜென்சியை அறிவிக்கும் முடிவையே எடுத்திருப்பார்.வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தும் திட்டங்களும் அரங்கேறின.எனவே எம்ர்ஜென்சி தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. சிவ சேனாவின் பால் சாஹேப் தாக்கரே எமர்ஜென்சிக்கு ஆதரவு தெரிவித்தார்.

    ஆர்எஸ்எஸ் அமைப்பும் வெளிப்படையாகவே எமெர்ஜென்சிக்கு ஆதரவு தெரிவித்தது. அமித் ஷாவுக்கு எமர்ஜென்சி குறித்து முழுமையாக தெரியவில்லை என்றே சொல்ல வேண்டும். எமெர்ஜென்சிக்கு பிறகு ஆட்சிக்கு வந்த வாஜ் பாய் அதை அரசியலமைப்பு படுகொலையாக பார்க்கவில்லை. தற்போதுள்ள மோடி தலைமையிலான 10 ஆண்டு கால ஆட்சியே எமெர்ஜென்சி போல உள்ளது' என்று சஞ்சய் ராவத் தெரிவித்தார். 

    • ஒருமுறை மாறுவேடம் அணிந்து ஜெயிலில் உள்ள ஆர்எஸ்எஸ் பிரமுகர் ஒருவருக்கு செய்தியைக் கொண்டு சேர்க்கும் ரகசிய மிஷனிலும் ஈடுபட்டுள்ளார்
    • ஆர்.எஸ்.எஸ் வட்டாரங்களில் மாறுவேடங்களின் மன்னன் [ MASTER OF DISGUISE] என்று பெயர் வாங்கினார் மோடி

    இந்தியாவில் 1975 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த காங்கிரசைச் சேர்ந்த அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி அவசர நிலையை அறிவித்தார். இந்த அவசர நிலையானது 25 ஜூன் 1975 முதல் 21 மார்ச் 1977 வரை சுமார் 21 மாதங்கள் நீடித்தது. அவசர நிலையின்போது மக்களின் அடிப்படை உரிமைகள் செயலிழந்தது. எதிர்கட்சிகளை சேர்ந்தவர்கள் பலர் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கைது நடவைடிக்கையில் இருந்து தப்பிக்க பலர் தலைமறைவாக திரிந்தனர். அந்த சமயத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்த தற்போதைய இந்திய பிரதமர் நரேந்திர மோடி போலீசிடம் இருந்து தப்பிக்க பல்வேறு மாறுவேடங்களில் உலவியுள்ளார். குஜராத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கிடையில் செய்திப் பாலமாக செயல்பட்ட நரேந்திர மோடி, ஒருமுறை மாறுவேடம் அணிந்து ஜெயிலில் உள்ள ஆர்எஸ்எஸ் பிரமுகர் ஒருவருக்கு செய்தியைக் கொண்டு சேர்க்கும் ரகசிய மிஷனிலும் ஈடுபட்டதாக தெரிகிறது.

     

     

    டர்பன் அணிந்து சீக்கியராகவும், தனது இயல்புக்கு மாறான தாடி மீசையுடன் பெரிய மூக்குக்கண்ணாடி அணிந்து வேறொரு வேடத்திலும், காவி உடை தரித்து சாமியார் வேடத்திலும் குஜராத் முழுவதும் எமெர்ஜெசிக்கு எதிரான ஆர்எஸ்எஸ் பிரச்சாரங்களையும் செய்திகளும் கொண்டுசேர்த்துள்ளார். குஜராத்தின் வதோதரா, அகமதாபாத், ராஜ்கோட் உள்ளிட்ட நகரங்களுக்கு 'பதுக் பாய்' என்ற புனைபெயருடன் மோடி பயணம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    அக்காலத்திய ஆர்.எஸ்.எஸ் வட்டாரங்களில் மாறுவேடங்களின் மன்னன் [ MASTER OF DISGUISE] என்று பெயர் வாங்கும் அளவுக்கு மோடியின் மாறுவேடங்கள் கச்சித்தமாக யாருக்கும் துளியும் சந்தேகம் வராத அளவுக்கு இருக்கும் என்று அவரது அபிமானிகள் இப்போதும்கூட சிலாகிக்கின்றனர்.

     

     

    நேற்று ஜூன் 25 ஆம் தேதி எமெர்ஜென்சி கொண்டுவரப்பட்டு 50 வது ஆண்டுகள் ஆன நிலையில் மோடி அச்சமயத்தில் புனைந்திருந்த மாறுவேடங்களின் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகத் தொடங்கியுள்ளன. 

    இதற்கிடையில் எமெர்ஜென்சி காலம் குறித்து நேற்று மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில், அவசர நிலையை எதிர்த்த அனைத்து மாமனிதர்களுக்கும், பெண்களுக்கும் மரியாதை செலுத்தும் நாள் இன்றாகும். அவசர நிலையில் இருட்டு நாட்கள் என்பது ஒவ்வொரு இந்தியருக்கும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை காங்கிரஸ் எப்படி எதிர்த்தது என்பதை நினைவூட்டுகிறது துன்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.
    • அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் உடனான கூட்டணி குறித்து ஆர்எஸ்எஸ் விமர்சனம்.

    மக்களவை தேர்தலில் பாஜக-வுக்கு நினைத்த மாதிரி வெற்றி கிடைக்கவில்லை. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 48 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 9 இடங்களிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 7 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்த கூட்டணிக்கு மொத்தம் 17 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

    இந்த நிலையில்தான் ஆர்எஸ்எஸ் தனது வாரந்திர பத்திரிகையில் (Organiser) மகாராஷ்டிரா மாநில தோல்வி குறித்து கட்டுரை எழுதியிருந்தது. அதில் பாஜக-அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி குறித்து விமர்சித்திருந்தது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் அஜித் பவார் கட்சியுடன் கூட்டணி வைத்தது தேவையில்லாத அரசியல். தேசிய ஜனநாயக கூட்டணியில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை இணைத்தது பாஜகவின் பிராண்ட் மதிப்பை குறைத்துள்ளது. பாஜக எந்தவித மாறுபாடு இன்றி மற்றொரு அரசியல் கட்சியாகியுள்ளது என விமர்சித்திருந்தது.

    இதனால் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ்- பாஜக கட்சி தலைவர்கள் இடையே வார்த்தை போர் மூண்டுள்ளது.

    ஆர்எஸ்எஸ் கருத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான சாகன் புஜ்வால் கூறுகையில் "அதில் மேலும் எழுதப்பட்ட சில கருத்துகள் உண்மையாக இருக்கலாம். சிலர் ஏற்கனவே பாஜகவை காங்கிரஸ் தலைவர்களை இணைத்ததால் விமர்சனம் செய்தனர். அசோக் சவான் உள்ளிட்டோர் இணைந்தது குறித்து விமர்சனம் செய்தனர். ஏக்நாத் ஷிண்டே முன்னாள் காங்கிரஸ் தலைவர் மிலிந்த் தியோராவை இணைத்துக்கொண்டு ஆர்எஸ்எஸ் உறுப்பினராக்கியது குறித்துகூட விமர்சனம் எழுந்தது.

    உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக-வுக்கு பெரும்பாலான இடங்கள் குறைந்ததே, அதைப்பற்றி யார் பேசுவார்கள்?. மற்ற மாநிலங்களில் கூட கடந்த முறையை விட குறைவான இடங்கள்தான் கிடைத்தது. இதைப் பற்றி யார் பேசுவார்கள்?" என்றார்.

    தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான பிரபுல் பட்டேல் "ஆர்எஸ்எஸ் கட்டுரை பாஜக-வின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தாது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவர் சூரஜ் சவான், பாஜக சிறப்பாக செயல்பட்டபோது, கிரெடிட் ஆர்எஸ்எஸ்-க்கு கொடுக்கப்படுகிறது. ஆனால், தோல்வியடைந்தால் அஜித் பவாரை குறை கூறுவதா? என ததக்க பதிலடி கொடுத்துள்ளார்" என்றார்.

    ஆர்எஸ்எஸ் கருத்து ஆதரிக்கும் பாஜக எம்எல்சி பிரவின் தரேகார் "எங்களுக்கு எல்லாம் ஆர்எஸ்எஸ் தந்தை போன்றது. ஆர்எஸ்எஸ் குறித்து கருத்துகளை கூற வேண்டியதில்லை. ஆர்எஸ்எஸ் மீது சூரஜ் சவான் அதுபோன்று கடுமையான கருத்துகளை தெரிவித்திருக்கக் கூடாது. பாஜக தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கருத்து கூறவில்லை. தேசியஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இது குறித்து விவாதம் செய்தால் சிறந்ததாக இருக்கும்" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிகாரம் மற்றும் அவர்களின் ஆணவம் காரணமாக 241-ல் ராமரால் நிறுத்தப்பட்டது.
    • இது பெரும்பான்மை பெற தவறிய பா.ஜ.க.வை விமர்சிப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

    புதுடெல்லி:

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கனோட்டாவில் நடந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் ஒருவரான இந்திரேஷ்குமார் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ராமர் மீது பக்தி செய்தவர்கள் படிப்படியாக திமிர் பிடித்தனர். அந்தக் கட்சி மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. அதிகாரம் மற்றும் அவர்களின் ஆணவம் காரணமாக 241-ல் ராமரால் நிறுத்தப்பட்டது என கூறியுள்ளார்.

    அவரது இந்தப் பேச்சு பாராளுமன்ற தேர்தலில் 240 இடங்களைப் பிடித்தாலும் பெரும்பான்மை பெற தவறிய பா.ஜ.க.வை விமர்சிப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

    இதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசுகையில், தேர்தல் பிரசாரத்தில் கண்ணியமான தன்மை, பணிவு என்பது ஒரு சேவகர் அல்லது பொது ஊழியரின் சிறந்த பண்பு. ஆனால் அதை சிலர் செய்யவில்லை. ஒரு சேவகர் தன்னை பற்றி நினைக்கக் கூடாது. மக்களை பற்றி நினைக்கவேண்டும் என கூறியிருந்தது, அவர் மறைமுகமாக பிரதமர் மோடியை விமர்சிப்பதாக பேசப்பட்டது.

    இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரான பவன் கெரா இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆர்.எஸ்.எஸ்சை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. பிரதமர் மோடி அவர்களை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, நாம் ஏன்? பேசவேண்டிய நேரம் வரும்போது பேசியிருந்தால் எல்லோரும் அவரை சீரியசாக எடுத்திருப்பார்கள். அப்போது ஆர்.எஸ்.எஸ்சும் அமைதி காத்தது. அவர்களும் அதிகாரத்தை அனுபவித்தனர் என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒரு சேவகர் தன்னை பற்றி நினைக்கக்கூடாது.
    • இந்திரேஷ்குமார் இந்தியா கூட்டணியையும் விமர்சித்துள்ளார்.

    ஜெய்ப்பூர்:

    சமீப காலமாக பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். இடையே உரசல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ஆர்.எஸ்.எஸ்., பாஜகவுக்காக வேலை பார்க்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் பேசுகையில், தேர்தல் பிரசாரத்தில் கண்னியமான தன்மை, பணிவு என்பது ஒரு சேவகர் அல்லது பொது ஊழியரின் சிறந்த பண்பு. ஆனால் அதை சிலர் செய்யவில்லை. ஒரு சேவகர் தன்னை பற்றி நினைக்கக்கூடாது. மக்களை பற்றி நினைக்க வேண்டும் என கூறியிருந்தார். இது அவர் மறைமுகமாக பிரதமர் மோடியை விமர்சிப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது.


    இந்நிலையில் ஜெய்ப்பூரின் கனோட்டாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் ஒருவரான இந்திரேஷ்குமார் பேசியதாவது, ராமர் மீது பக்தி செய்தவர்கள், ஆனால் படிப்படியாக திமிர் பிடித்தனர். அந்த கட்சி மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. ஆனால் கொடுக்க வேண்டிய வாக்கு மற்றும் அதிகாரம் அவர்களின் ஆணவம் காரணமாக 241-ல் ராமரால் நிறுத்தப்பட்டது என பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு பாராளுமன்ற தேர்தலில் 240 இடங்களை பிடித்தாலும், பெரும்பான்மை பெற தவறிய பா.ஜ.க. வை விமர்சிப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

    அதே நேரத்தில் இந்திரேஷ்குமார் இந்தியா கூட்டணியையும் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசுகயைில், ராமர் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் 234-ல் நிறுத்தப்பட்டனர். ராமரை வழிபடுபவர்கள் பணிவாக இருக்க வேண்டும். ராமரை எதிர்ப்பவர்களை இறைவன்தான் சமாளித்தார். ராமர் பாரபட்சம் காட்டுவ தில்லை, தண்டிப்பதில்லை என்றார்.

    • மணிப்பூர் கலவரத்தில் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக நடத்திச்செல்லப்பட்ட வீடியோ வெளியானது.
    • மணிப்பூர் கலவரத்தில் இதுவரை 200க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

    நாக்பூரில் உள்ள டாக்டர் ஹெட்கேவார் ஸ்மிருதி பவன் வளாகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பக்வத் கலந்து கொண்டார்.

    அப்போது பேசிய அவர், "அமைதிக்காக மணிப்பூர் மக்கள் ஓராண்டுக்கும் மேல் காத்திருக்கின்றனர். இவ்விவகாரத்தில் முன்னுரிமை எடுத்து அரசு செயல்பட வேண்டும். மணிப்பூரில் 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைதி நிலவியது. அங்கு துப்பாக்கி கலாச்சாரம் முடிந்துவிட்டதாக உணர்ந்தேன். ஆனால் அங்கு மீண்டும் வன்முறை உருவாகியுள்ளது. மணிப்பூரில் நிலவும் சூழ்நிலையை முன்னுரிமையுடன் பரிசீலிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்தேய் இனக் குழுக்களுக்கிடையே கடந்த ஆண்டு மே மாதம் முதல் கடுமையான மோதல் ஏற்பட்டு கலவரம் நிகழ்ந்து வருகிறது.

    மெய்தேய்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்குவதால் அவர்கள் தங்களின் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வர் என்று குக்கி இனத்தவர் அஞ்சினர். மோதல் ஏற்பட இது முக்கிய காரணமாக அமைந்தது. இந்த கலவரத்தின்போது பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக நடத்திச்செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    இதுவரை இந்த கலவரத்தில் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மணிப்பூரில் கலவரம் இன்னும் ஓயாத நிலையில் ஏராளமான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.

    • ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோர் மீது பாஜக இன்றுவரை குற்றம் சாட்டி வருகிறது
    • காங்கிரஸ் மற்றும் அதன் சித்தாந்தம் இந்தியாவின் சுதந்திரத்துக்கு வித்திட்டது

    மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பு வடமாநிலங்களில் பலமான தாக்கத்தை ஏற்படுதியுள்ளது. பாஜக தலைவர்கள் காங்கிரஸ் மீது தொடங்கத்திலிருந்தே கடுமையான விமர்சனங்களை முனைவைத்து வருகின்றனர்.

    தற்போதைய காங்கிரஸ் தலைவர்கள் மட்டும் இல்லாமல் சுதந்திரத்துக்குக்குப் பின்னால் இந்தியாவின் பிரதமர்களாக இருந்த ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோர் மீதும் இன்றுவரை குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் ஆர்எஸ்எஸ்ஸின் தற்போதைய தலைவர் மோகன் பகவத், காங்கிரஸ் கட்சியையும் அதன் தலைவர்கள் இந்திய சுதந்திரத்துக்காக பாடுபடத்தையும் புகழ்ந்து பேசும் பழைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் மீண்டும் வைரலாகத் தொடங்கியுள்ளது.

    கடந்த 2018 ஆம் ஆண்டு மோகன் பகவத் பேசிய நிகழ்ச்சி ஒன்றில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் அவர், காங்கிரஸ் மற்றும் அதன் சித்தாந்தம் இந்தியாவின் சுதந்திரத்துக்கு சுதந்திரத்துக்கு பாதை அமைத்தது என்றும் நாட்டுக்காக தங்களை அர்பணித்துக்கொண்ட ஏராளமான தலைவர்களை காங்கிரஸ் உருவாக்கி அளித்து, இன்றளவும் நமக்கெல்லாம் இன்ஸ்பிரேஷனாக உள்ளது.

     

    ஒவ்வொரு இந்தியனையும் காங்கிரஸ் இயக்கம் சுதந்திரத்துக்காகப் போராடத் தூண்டியது என்று பேசியுள்ளார். கடந்த மே 22 ஆம் தேதி பேஸ்புக் பயனர் ஒருவர் இந்த வீடியோவைப் பகிர்ந்ததில் இருந்து வீடியோ சமூக வலைத்தளங்களில் உலா வரத் தொடங்கியுள்ளது. மோகன் பகவத் பேசிய வீடியோவின் ஒரு பகுதி மட்டுமே இது என்பது குறிப்பிடத்தக்கது

    ×