என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தக்காளி"
- கடந்த 10 நாட்களில் தக்காளி விலை மளமளவென உயர்ந்துவிட்டது.
- தக்காளியை மொத்தமாக பதுக்கும் வியாபாரிகளை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
சென்னை:
தக்காளி விலை எப்போதும் இல்லாத அள வுக்கு விலை உயர்ந்து உள்ளது. தமிழ்நாட்டில் தக்காளி விலை கிலோ ரூ.200 வரை உயர்ந்துவிட்டது. இந்த விலை இன்னும் உயரும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த மாதம் தக்காளி விலை 100 ரூபாயாக உயர்ந்த போது கூட்டுறவுத்துறையின் மூலம் செயல்பட்டு வரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளியை விற்பனை செய்ய அரசு ஏற்பாடு செய்தது.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி, தூத்துக்குடி, திருவண்ணாமலை, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருப்பூர், சேலம், ஈரோடு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் கூட்டுறவு கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது தவிர சில ரேஷன் கடைகளிலும் தக்காளி விற்கப்பட்டது. ஆனாலும் பொதுமக்கள் பல பேருக்கு தக்காளி குறைந்த விலையில் கிடைக்கவில்லை.
இந்நிலையில் தக்காளி தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. கடந்த 10 நாட்களில் தக்காளி விலை மளமளவென உயர்ந்துவிட்டது. இப்போது ஒருகிலோ தக்காளி ரூ.180 முதல் ரூ.200 வரை விற்கப்படுகிறது.
இந்த விலையை கட்டுப்படுத்த அரசு இப்போது முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக உயர்மட்ட அளவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னை தலைமைச்செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தக்காளி விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக அரசுத்துறை உயர்அதிகாரிகளை அழைத்து ஆலோசித்தார். இந்த கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதில் தக்காளியை மொத்தமாக பதுக்கும் வியாபாரிகளை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
கூட்டுறவுத்துறை மூலம் தக்காளியை மொத்தமாக வாங்கி கொள்முதல் விலைக்கே கூட்டுறவு கடைகளில் விற்பனை செய்யவும் விரிவான ஏற்பாடுகளை செய்ய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
- சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் தக்காளி விலை ரூ.200- தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- தக்காளி விலை அதிகமாக உள்ளதால் சில்லரை விற்பனை கடைகளில் 100 கிராம், 200 கிராம் என்ற அளவில் தக்காளி விற்பது நிறுத்தப்பட்டது.
போரூர்:
சமையல் அறையில் முக்கிய பங்கு வகிப்பது தக்காளி ஆகும். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வரை குறைந்து இருந்த தக்காளியின் விலை இந்த மாத தொடக்கம் முதல் உச்சம் தொட ஆரம்பித்தது.
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தக்காளியின் விலை ரூ.150-யை தாண்டியே விற்று வருகிறது.
சென்னையின் முக்கிய சந்தையான கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக 60 லாரிகளுக்கும் மேல் தினசரி தக்காளி விற்பனைக்கு வருவது வழக்கம். ஆனால் தற்போது 30 முதல் 35 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்து கொண்டு இருக்கிறது.
இதனால் அதன் விலை தாறுமாறாக உயரத் தொடங்கியது. மொத்த மார்க்கெட்டில் கிலோ ரூ.130-க்கும் சில்லரை விற்பனை கடைகளில் ரூ.160 வரையும் விற்பனை ஆனது.
கடந்த வாரத்தில் தக்காளி வரத்து சற்று அதிகரிக்க தொடங்கியதால் அதன் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பின்னரும் தக்காளி வரத்து மேலும் குறைய தொடங்கியதால் விலை மேலும் எகிறத் தொடங்கி உள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று காலை 35 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்தது. மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் தக்காளி கிலோ ரூ.180-க்கும், வெளியிடங்களில் ரூ.200-க்கும் விற்பனை ஆகிறது.
சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் தக்காளி விலை ரூ.200- தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். சமையலுக்கு சிக்கனமாக தக்காளியை பயன்படுத்தும் நிலைக்கு அனைவரும் தள்ளப்பட்டு உள்ளனர்.
தக்காளி விலை அதிகமாக உள்ளதால் சில்லரை விற்பனை கடைகளில் 100 கிராம், 200 கிராம் என்ற அளவில் தக்காளி விற்பது நிறுத்தப்பட்டது. சில மளிகை கடைகளில் தக்காளி விற்பனையையே நிறுத்திவிட்டனர்.
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருவது வழக்கம். இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து கர்நாடகா, ஆந்திராவில் பலத்த மழை பெய்ததால் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் தக்காளி வரத்து பாதியாக குறைந்தது.
இதேபோல் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களிலும் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள வியாபாரிகளில் பெரும்பாலானோர் கர்நாடகா, ஆந்திராவில் இருந்து தக்காளி கொள்முதல் செய்து வருகின்றனர். இதனால் தக்காளிக்கு கடும் கிராக்கி ஏற்பட்டதால் இந்த விலை உயர்வு என்று தெரிகிறது.
இதுகுறித்து தக்காளி வியாபாரி ஜாபர் அலி சேட் கூறும்போது:-
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இந்த மாதம் தொடக்கம் முதலே தக்காளியின் வரத்து பாதியாக குறைந்து விலை அதிகரித்தது. வரலாறு காணாத வகையில் தக்காளியின் விலை அதிகரித்து இருப்பதால் வியாபாரம் எதிர்பார்த்த அளவுக்கு நடக்கவில்லை. நஷ்டம் ஏற்படும் என்பதால் குறைந்த அளவிலேயே சில்லரை வியாபாரிகள் வாங்கி செல்கிறார்கள். விற்பனை மந்தமாகவே நடைபெற்று வருகிறது.
மார்க்கெட்டுக்கு நேற்று 31 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்த நிலையில் இன்று அதன் வரத்து சற்று அதிகரித்து 35 லாரிகளில் தக்காளி வந்தது.
மார்க்கெட்டில் உள்ள விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.180-க்கு விற்கப்படுகிறது. இதனால் வெளி மாவட்டங்களில் தக்காளி விலை ரூ.200 மற்றும் அதனை கடந்தும் விற்பனை ஆகிறது. வரும் நாட்களில் தக்காளி விலை உடனடியாக குறைய வாய்ப்பு இல்லை.
தக்காளியின் விலை அதிகபட்சமாக ரூ.250 வரை செல்ல வாய்ப்பு இருக்கிறது. தற்போது கர்நாடக, ஆந்திராவில் அதிக அளவில் மழை இல்லாததால் அடுத்த வாரம் முதல் தக்காளி வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தக்காளி வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறையும். இல்லை எனில் இதே நிலைதான் நீடிக்கும். இன்னும் ஓரிரு வாரங்களில் ஆந்திர மாநிலம் ஆன்தபூர், கல்யாணதுர்கா, தாவணிக்கரை உள்ளிட்ட இடங்களில் இருந்து தமிழகத்துக்கு தக்காளி வரத்தொடங்கிவிடும். இதன் பின்னர் தக்காளி விலை குறைய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தக்காளி விலை உயர்வு குறித்து பொதுமக்கள் கூறும்போது,
எந்த சமையலும் தக்காளி இல்லாமல் செய்யமுடியாது. தக்காளி இந்த அளவுக்கு விலை உயரும் என்று எதிர்பார்க்கவில்லை. சில கடைகளில் கிலோ ரூ.200-ஐ கடந்தும் விற்பனை ஆகிறது. இதனால் தக்காளி இல்லாமல் சமையல் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கடந்த 8 நாட்களில் ரூ.80 அதிகரித்து உள்ளது. கடந்த வாரத்தில் ரூ.100 ஆக குறைந்து இந்த தக்காளி இன்று ரூ.180-க்கு விற்பனை ஆவது குறிப்பிடத்தக்கது. தினமும் 1200 டன் தக்காளி வரவேண்டிய இடத்தில் 400 டன் மட்டுமே வருவதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதேபோல் தமிழகத்தின் நெல்லை, புதுக்கோட்டை கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் தக்காளியின் விலை தாறுமாறாக அதிகரித்து உள்ளது. நெல்லையில் தக்காளி கிலோ ரூ.200-க்கும், மற்ற நகரங்களில் ரூ.180-க்கும் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி விலையை தொடர்ந்து பீன்ஸ் விலையும் தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது. கோயம்பேடு சந்தையில் இன்று ஒரு கிலோ பீன்ஸ் ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது.
- ஏராளமான வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தக் காளி உள்ளிட்ட காய்கறி களை விற்பனை செய்தனர்.
- 1 லட்சத்து 49 ஆயிரத்து 500 ரூபாய் வருவாய் கிடைத்தது.
திருப்பூர்:
திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள வடக்கு உழவர் சந்தையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுமக்கள் அதிகளவில் காய்கறிகள் வாங்க வந்தனர். சந்தையில் தக்காளி விலை கிலோ 115 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டது. இங்கு ஏராளமான வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தக் காளி உள்ளிட்ட காய்கறி களை விற்பனை செய்தனர். சேவூர், பெரியகுரும்பபாளையத்தைச் சேர்ந்த விவசாயி திருமூர்த்தி, தோட்டத்தில் விளைந்த, 1,300 கிலோ தக்காளியை விற்பனைக்காக எடுத்து வந்தார். இதை விற்றதன் மூலம் மொத்தம், 1 லட்சத்து 49 ஆயிரத்து 500 ரூபாய் வருவாய் கிடைத்தது. இதுகுறித்து விவசாயி திருமூர்த்தி கூறியதாவது:-
கடந்த சித்திரையில், 1 ஏக்கரில், 5,500 நாற்று தக்காளி நடவு செய்தேன். மூன்று மாதம் மிக கவனத்துடன் பாடுபட்டு, விளைந்த தக்காளியை விற்பனைக்கு கொண்டு சென்றேன். வழக்கமாக தோட்டத்தில் இருந்து வியாபாரிகள் வாங்கி செல்வார்கள். ஆனால் இந்த முறை நானே சந்தைக்கு தக்காளி கொண்டு வந்து விற்பனை செய்தேன். தக்காளி கிலோ, 115 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது, இங்கு வந்த பின் தான் தெரிந்தது.
கடந்த, 20 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறேன். ஆனால் இதுவரை இப்படி ஒரு தொகை கிடைத்ததில்லை. மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
- விலை அதிகரிப்பால் ஓசூர் பகுதியில் உள்ள தோட்டங்களில் தக்காளி திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
- ராமரெட்டி என்ற விவசாயி சுமார் 2 ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்துள்ளார்.
ஓசூர்:
கடந்த ஒரு மாதகாலமாக தக்காளி கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விற்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் தக்காளி விலை அதிகரித்து வருகிறது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் தக்காளி பயிரிட்டுள்ள சில விவசாயிகளுக்கு கடந்த ஒரு மாத காலமாக அதிக வருமானம் கிடைத்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் விலை அதிகரிப்பால் ஓசூர் பகுதியில் உள்ள தோட்டங்களில் தக்காளி திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் ஓசூர் பகுதியில் விவசாயிகள் இரவு பகலாக தொடர்ந்து தோட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
மேலும் விவசாயிகள் தக்காளி தோட்டத்திற்கு முள்வேலி அமைத்து பாதுகாத்து வருகின்றனர். அந்த வகையில் ஓசூர் அருகே தாசிரிப்பள்ளி பகுதியை சேர்ந்த ராமரெட்டி என்ற விவசாயி சுமார் 2 ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்துள்ளார்.
தற்போது தக்காளி திருட்டு நடைபெறுவதால் அவர் தக்காளி விற்பனை செய்து கிடைத்த லாபத்தில் ரூ.1½ லட்சத்தில் தோட்டத்தை சுற்றிலும் கருங்கல் தூண் நட்டு, இரும்பு வேலி அமைத்து தக்காளி தோட்டத்தை பாதுகாத்து வருகிறார்.
- தக்காளி விவசாயியான சந்திரமவுலிக்கு சொந்தமாக 22 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.
- விளைச்சல் விரைவாகவும், கணிசமாகவும் கிடைக்கும் வகையில் நுண்ணீர் பாசனம், மூடாக்கு போன்ற நவீன உத்திகளைப் பயன்படுத்தினார்.
சித்தூர்:
எளிய காய்கறியான தக்காளிதான் இன்று இல்லத்தரசிகளுக்கு 'கிலி'யை ஏற்படுத்துகிறது. அரைச்சதம், சதம், ஒன்றரைச் சதம் என்று 'இரட்டைச் சதத்தை' நோக்கி 'நாட் அவுட்'டாக முன்னேறிக்கொண்டிருக்கும் தக்காளி விலை, நடுக்கத்தை உண்டாக்கியுள்ளது. ஆனால் இந்த 'கிடுகிடு' விலை உயர்வு, சில விவசாயிகளுக்கு அதிர்ஷ்டத்தையும் அழைத்து வந்திருக்கிறது. அவர்களை குறுகிய காலத்தில் கோடீஸ்வரர்களாக்கி இருக்கிறது.
அவர்களில் ஒருவர்தான், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரமவுலி.
தக்காளி விவசாயியான இவருக்கு சொந்தமாக 22 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதில், ஒரு அரிய வகை தக்காளியை கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் பயிரிட்டார். விளைச்சல் விரைவாகவும், கணிசமாகவும் கிடைக்கும் வகையில் நுண்ணீர் பாசனம், மூடாக்கு போன்ற நவீன உத்திகளைப் பயன்படுத்தினார். இவருடன், இவரது மனைவியும் சேர்ந்து உழைத்ததற்கு, நிலத்தின் மேல் பலன். ஜூன் மாத இறுதியில் சந்திரமவுலியின் நிலத்தில் செடிகளில் குண்டு குண்டாக தக்காளிகள் காய்த்துக் குலுங்கின.
அவற்றைப் பறித்து, அருகில் உள்ள கர்நாடக மாநிலம் கோலார் சந்தைக்கு கொண்டு சென்று விற்றார். 15 கிலோ தக்காளி அடங்கிய ஒரு பெட்டியை ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை விற்பனை செய்தார். இப்படி இவர் 45 நாட்களில் விற்ற தக்காளி பெட்டிகளின் எண்ணிக்கை 40 ஆயிரம்!
இதன் மூலம், ரூ.4 கோடி சம்பாதித்திருக்கிறார் சந்திரமவுலி. தற்போது மகிழ்ச்சியான மனிதராக மாறியிருக்கிறார்.
குரலில் குதூகலம் தென்பட அவர் கூறும்போது, 'தக்காளி விற்று நான் ரூ.4 கோடி ஈட்டினேன். அதில் உற்பத்தி, பறிப்பதற்கான கூலி, கமிஷன், போக்குவரத்து செலவு எல்லாம் போக எனக்கு லாபமாக ரூ.3 கோடி மிஞ்சியிருக்கிறது' என்றார்.
தகுந்த விலை கிடைக்காமல் விளைபொருட்களை வீதியில் கொட்டுவது, கடன் தொல்லை தாளாமல் தற்கொலையை நாடுவது என்று விவசாயிகளைப் பற்றிய வேதனைச் செய்திகளைத்தான் அதிகம் அறிந்திருக்கிறோம். ஆனால் தக்காளி விலை உயர்வால் ஒரு சில விவசாயிகளாவது கோடீஸ்வரர்கள் ஆகியிருப்பது, குடும்பஸ்தர்களின் குமுறல்களுக்கு மத்தியிலும் சிறிது ஆறுதலையே தருகிறது.
- தமிழகம் முழுவதும் தற்போது தக்காளி பழத்தின் விலை பெருமளவு அதிகரித்து உள்ளது.
- தக்காளி பழங்களும் செடியில் இருந்து உதிர்ந்து கீழே விழுந்து அழுகி நாசமாகி வருகின்றன.
கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள விவசாயிகள் தென்னைக்கு அடுத்தபடியாக காய்கறி சாகுபடியில் அதிகமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக வடக்கிபாளையம், புரவிபாளையம், ஜமீன்காளியாபுரம், பெரும்பதி, கோவிந்தனூர், மாப்பிள்ளைகவுண்டன்புதூர், சூலக்கல், நெகமம், கோமங்கலம், தேவனூார்புதூர் ஆகிய பகுதிகளில் தக்காளி செடிகள் பெருமளவில் பயிரிடப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் தற்போது தக்காளி பழத்தின் விலை பெருமளவு அதிகரித்து உள்ளது. எனவே பொள்ளாச்சி தாலுகா விவசாயிகள் தக்காளி சாகுபடியில் கூடுதலாக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் கோடை மழை தொடங்கியதை முன்னிட்டு விவசாயிகள் கடந்த மே மாதம் முதல் தக்காளியை பயிரிட்டு வருகின்றனர். அவை தற்போது விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.
இந்நிலையில் தமிழகத்தில் பலத்த காற்றுடன் கூடிய தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதன்காரணமாக அங்கு பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
பொள்ளாச்சி பகுதியில் பருவமழை பெய்து வருவதால் அங்கு உள்ள தோட்டங்களில் தக்காளி செடிகள் மழைக்கு தாக்குபிடிக்க முடியாமல் கீழே சாய்ந்து வருகின்றன. தக்காளி பழங்களும் செடியில் இருந்து உதிர்ந்து கீழே விழுந்து அழுகி நாசமாகி வருகின்றன.
எனவே பொள்ளாச்சி தோட்டங்களில் விளையும் தக்காளி பயிர்களை பாது காப்பது என்று விவசாயிகள் முடிவு செய்தனர். அதன்படி அங்கு உள்ள தோட்ட ங்களில் செடிகளு க்கு இடையே நீண்ட கம்பிகள் கட்டப்பட்டு வருகின்றன.
இதன்மூலம் அங்கு வளரும் செடிகள் மழையில் சரிந்து விழுவதை தடுக்க முடியும். தக்காளி பழங்கள் உதிர்ந்து கீழே விழுந்து அழுகி வீணாவதையும் தடுக்க இயலும்.
பொள்ளாச்சி தாலுகாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள தக்காளி தோட்டங்களில் செடிக ளுக்கு கம்பி கட்டும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் தற்போது நாட்டு தக்காளி சாகுபடி தொடங்கி நடந்து வருகிறது. இதனால் அங்கு செடிகள் முளைத்து காய் காய்க்க தொடங்கி உள்ளன. அவை பழங்களாக கனிவதற்கு சிறிது காலம் பிடிக்கும்.
எனவே பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு நாட்டு தக்காளிவரத்து மிகவும் குறைவாக இருந்து வருகிறது. இதனால் அங்கு உள்ள காய்கறி சந்தைகளில் தற்போது தக்காளி விலை கிலோவுக்கு ரூ.100 ஆக அதிகரித்து உள்ளது. அங்கு 14 கிலோ அடங்கிய பெட்டி, ரூ.1400-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பொள்ளாச்சியில் தக்காளி சாகுபடி பெரியளவில் தொடங்கவில்லை. எனவே மார்க்கெட்டுக்கு வரத்து மிகவும் குறைவாக உள்ளது. இதனால் காய்கறி சந்தைகளில் நாட்டு தக்காளியின் விலை அதிகரித்து வருகிறது.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி அறுவடை பணிகள் தொடங்கினால் மார்க்கெட்டுக்கு வரத்து கூடுதலாக இருக்கும். அப்போது தக்காளியின் விலை குறைய வாய்ப்பு உள்ளது என்று காய்கறி சந்தை வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
- இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.140 முதல் 150 வரை விற்பனை செய்யப்படுகிறது.
- வழக்கத்தை விட குறைவான அளவிலே தக்காளி லோடுகள் வருகின்றன.
தஞ்சாவூர்:
நாடு முழுவதும் தக்காளியின் விலை தொடர்ந்து உச்சத்தில் காணப்படுகிறது. ஒரு மாதத்திற்கும் மேலாகவே ஏறுமுகத்தில் தக்காளியின் விலை உள்ளது. இடையில் சற்று விலை குறைந்தது. இதனால் தக்காளி விலை படிப்படியாக குறையும் என எண்ணி பொதுமக்கள் தக்காளிகளை அதிக அளவில் வாங்கி சென்றனர்.
இருந்தாலும் அந்த விலை நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. மீண்டும் தற்போது தக்காளி விலை கணிசமாக உயர்ந்து வருகிறது.
தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.140 முதல் 150 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் ரூ.100-க்கு தக்காளி விற்கப்பட்டது. ஆனால் தற்போது கிலோவுக்கு ரூ.40 வரை உயர்ந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் வழக்கத்தை விட குறைந்த அளவிலேயே தக்காளிகளை வாங்கி செல்கின்றன. சமையலில் தக்காளிக்கு பதில் வேறு குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும் காய்கறிகளை பயன்படுத்தும் நிலையில் உள்ளனர்.
தொடர்ந்து தாறுமாறாக உயர்ந்து வரும் தக்காளியின் விலை உயர்வு இல்லத்தரசிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இந்த விலை உயர்வு குறித்து வியாபாரிகள் கூறும்போது :-
வெளியூரில் இருந்து தஞ்சைக்கு வழக்கத்தை விட குறைவான அளவிலே தக்காளி லோடுகள் வருகின்றன. விளைச்சல் பாதிப்பால் வரத்து பெருமளவில் குறைந்துள்ளது. தொடர்ந்து வரத்து இதேபோல் குறைந்தால் தக்காளி விலை இதைவிட அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் விளைச்சல் அதிகரித்து வரத்தும் அதிகரித்தால் மட்டுமே தக்காளியின் விலை குறையும் என்றனர்.
- சுற்றுச்சூழல் காக்கப்படுவதோடு உடல்நலத்தையும் நன்றாக வைத்துக்கொள்ள முடியும்.
- பொதுமக்களை தடுத்து நிறுத்தி அவர்களிடம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க அறிவுறுத்தினார்.
தஞ்சாவூர்:
உடல் ஆரோக்கியத்தி ற்காகவும், சுற்றுச்சூழலை காக்கவும் சைக்கிளை பயன்படுத்த வேண்டும் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிளில் சென்றவர்களுக்கு ஜோதி அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் தலா ஒரு கிலோ தக்காளி விலையில்லாமல் வழங்கப்பட்டது.
தஞ்சை மேரீஸ் கார்னர் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தஞ்சை நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமை யிலான போக்குவரத்து காவலர்கள் அந்த வழியாக சைக்கிளில் வந்த பொதுமக்களை தடுத்து நிறுத்தி அவர்களிடம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், அத்தியாவசிய செலவை கட்டுப்படுத்தவும் இது போன்று அன்றாடம் சைக்கிளை தொடர்ந்து உபயோகிக்க வேண்டும் என அறிவுறுத்தி அவர்களுக்கு தலா 1 கிலோ தக்காளி விலையில்லாமல் வழங்கினர்.மேலும் அவர் கூறுகையில், சைக்கிளை பயன்படுத்தாமல் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்துவதால் இன்று சர்க்கரை நோய், உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. சைக்கிளை பயன்படுத்தினால் சுற்றுச்சூழல் காக்கப்படு வதோடு உடல்நலத்தையும் நன்றாக வைத்துக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.
வரலாறு காணாத அளவுக்கு தக்காளியின் விலை உயர்ந்து வரும் வேளையில் இது போன்ற நூதன விழிப்புணர்வு நிகழ்வுகள் மூலம் பொதுமக்களிடம் விலையில்லாமல் தக்காளி வழங்கப்படுவது தஞ்சை மக்களிடம் பாராட்டை பெற்றுள்ளது .
இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் தலைமையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி,
மேற்பார்வையாளர் கல்யாண சுந்தரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
- ராகுல் காந்தி, ஒரு புறம் அதிகாரத்தை பாதுகாக்க சக்தி வாய்ந்தவர்கள் உள்ளனர்.
- மறுபுறம் சாதாரண இந்தியர்களுக்கு காய்கறிகள் போன்ற அடிப்படை விஷயங்கள் கூட கைக்கு எட்டவில்லை.
நாட்டின் பல மாநிலங்களிலும் தக்காளி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. சில இடங்களில் 1 கிலோ தக்காளி ரூ.200-க்கும் அதிகமாக விற்பனை ஆகிறது. இந்நிலையில் டெல்லியில் உள்ள ஆசாத்பூர் மொத்த விற்பனை சந்தையில் காய்கறி விலை அதிகமாக இருப்பதை அறிந்த வியாபாரி ஒருவர் கண்ணீர் விட்டு அழும் வீடியோ பரவி வருகிறது.
இந்த வீடியோவை ராகுல் காந்தி தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அந்த வீடியோவில், ஜஹாங்கீர்பூர் பகுதியை சேர்ந்த ராமேஸ்வர் என்ற வியாபாரி தனது மகனுடன் சந்தைக்கு காய்கறி வாங்க வந்ததாகவும், அப்போது தக்காளி விலையை கேட்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறுகிறார். மேலும் இவ்வளவு விலைக்கு தக்காளி வாங்கி நாங்கள் எப்படி விற்க முடியும் என்பது கூட எங்களுக்கு தெரிய வில்லை என அந்த வியாபாரி கண்ணீர் வடிக்கும் காட்சிகள் உள்ளது. வீடியோவை பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, ஒரு புறம் அதிகாரத்தை பாதுகாக்க சக்தி வாய்ந்தவர்கள் உள்ளனர். அவர்களின் அறிவுரைப்படி நாட்டின் கொள்கைகள் உருவாக்கப்படுகின்றன. மறுபுறம் சாதாரண இந்தியர்களுக்கு காய்கறிகள் போன்ற அடிப்படை விஷயங்கள் கூட கைக்கு எட்டவில்லை. பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையே விரிவடைந்து வரும் இந்த இடைவெளியை நிரப்பி கண்ணீரை துடைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
- தக்காளி விலை தொடர்ந்து உச்சம் அடைந்துள்ளது.
- ஒரு கிலோ தக்காளி ரூ.160 வரை விற்பனை செய்யப்படுகிறது.
மதுரை
தமிழகத்தில் தக்காளியின் விலை தொடர்ந்து நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த வாரத்தில் கிலோ ரூ.150 வரை விற்கப் பட்ட தக்காளி விலை குறையும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.ஆனால் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், தெலுங்கானா ஆகிய மாநிலங்க ளில் பரவலாக பலத்த மழை பெய்து வருவதால் தக்காளி விலை பெரிய அளவில் குறையவில்லை.
மேலும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள வடமாநில வியாபாரிகள், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்க ளில் அதிகளவில் குவிந்து தக்காளியை கொள்முதல் செய்து வருவதால் தக்காளிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் மதுரை மாட்டுத்தாவணி, பரவை மார்கெட்டுகளுக்கு வரும் தக்காளியின் வரத்து அதிகரிக்கவில்லை.
இதனால் விலை பெரிய அளவில் குறையவில்லை. மார்க்கெட்டுகளுக்கு தினசரி வரும் தக்காளியின் வரத்து பாதிக்கும் கீழ் குறைந்து விட்டது.
இதையடுத்து மொத்த விற்பனை கடைகளில் தக்காளி விலை உச்சத்திலேயே தொடர்ந்து இருந்து வருகிறது. இதனால் மதுரை மார்க்கெட்டுகளில் தக்காளி விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. இன்று மதுரை மார்க்கெட்டுகளில் தக்காளி கிலோ ரூ.140 வரை விற்பனை செய்யப்பட்டது.
இதனால் வெளி மார்கெட்டில் உள்ள காய்கறி, மளிகை மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.160 வரை விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி விலை உச்சத்திலேயே தொடர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர். சமையலுக்கு கிலோ கணக்கில் வாங்கிய தக்காளியை தற்போது ¼ கிலோ, ½ கிலோ என்ற கணக்கிலேயே வாங்கு கின்றனர். மேலும் சமையலுக்கு தக்காளியை சிக்கன மாக பயன்படுத்தி வருகிறார்கள்.
- வசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்
- ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்
வெள்ளகோவில்:
வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதை மொத்த வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்.
இன்று வார சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.120, கத்தரிக்காய் ரூ.60, பீர்க்கங்காய் ரூ.60. பெரிய வெங்காயம் ரூ.30 சின்ன வெங்காயம் ரூ. 100. உருளைக்கிழங்கு ரூ.40, பீட்ரூட் ரூ.60, புடலை காய் ரூ.60, முட்டை கோஸ் ரூ.20, பீன்ஸ் ரூ.80, கேரட் ரூ.60, பாவற்காய் ரூ.80,வெண்டைக்காய் ரூ.60, இஞ்சி ரூ.250, அவரைக்காய் ரூ.80, நேரோ காய் ரூ. 60, கோவக்காய் ரூ.40, முள்ளங்கி ரூ. 40, பச்சை மிளகாய் ரூ.100,சுரைக்காய் ரூ.15க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இத்தகவலை வாரச்சந்தை காய்கறி வியாபாரி குமார் தெரிவித்தார்.
- காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்கத்து மாவட்டங்க ளில் இருந்தும் அதிகளவில் காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- நாமக்கல்லில் அதிகபட்ச மாக ரு. 140 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.
நாமக்கல்:
நாமக்கல் நகரில் உள்ள காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்கத்து மாவட்டங்க ளில் இருந்தும் அதிகளவில் காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தக்காளி விலை
இந்த நிலையில் தமி ழகத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தக்காளி விலை உயர்ந்து காணப்படுகிறது. நாமக்கல்லில் அதிகபட்ச மாக ரு. 140 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும் காய்கறிகளின் விலையும் உயர்ந்து காணப்படுகிறது.
இதனால் ஏழை, மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் தக்காளி வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் பெரும்பாலான வீடுகளில் தக்காளி வாங்குவதை நிறுத்தி விட்டனர். விலை குறைவாக விற்கப்பட்ட போது கிலோ கணக்கில் தக்காளியை வாங்கி சென்ற பொதுமக்கள் தற்போது விலை உயர்வின் காரணமாக கிராம் கணக்கில் தக்காளியை வாங்கி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
தங்கத்தை போல் தக்காளி விலையும் தினமும் அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்தது. ஆனாலும் முதல் ரக தக்காளி 100 ருபாய்க்கு கீழ் குறையாமல் இருந்து வருகிறது.
ரூ.200-க்கு விற்பனை
நாமக்கல்லில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்ப தால் இதுவரை இல்லாத அளவுக்கு தக்காளி விலை உயர்ந்து காணப்பட்டது. ஒரு கிலோ தக்காளி ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது. நாமக்கல் பார்க் ரோடு பகுதியில் உள்ள காய்கறி மார்க்கெட்டுகளில் தக்காளி ரூ.200-க்கு விற்கப்பட்ட தால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் நாமக்கல் உழவர் சந்தைகளில் தக்காளி கிலோ ரூ.160-க்கு விற்கப்பட்டது. அதுவும் சிறிது நேரத்திலேயே விற்று தீர்ந்து விட்டது.
சேலம்
இதேபோல் சேலத்தில் இன்று 1 கிலோ தக்காளி ரூ.140 முதல் ரூ.160 வரை விற்பனை செய்யப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்