search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98643"

    • நாகப்பட்டினம் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருந்தது.
    • 3000 பைபர் படகுகளில் மீன்பிடிக்க சென்றனர்.

    நாகப்பட்டினம்:

    வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லக்கூடாது என கடந்த 30-ம்தேதி மீன்வளத்துறை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இதனால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பேட்டை நாகூர், பட்டினச்சேரி நம்பியார்நகர், செருதூர் காமேஷ்வரம். விழுந்த மாவடி ஆறுகாட்டுதுறை, கோடியக்கரை உள்ளிட்ட 25 மீனவ கிராமங்களில் உள்ள 700 விசை படகுகள் 3000 பைபர் படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    மேலும் நாகப்பட்டினம் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருந்தது.

    காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்ததை தொடர்ந்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கப்பட்டு கடல் சீற்றம் குறைந்த நிலையில் 5 நாட்களுக்குப் பிறகு மீன் பிடிக்க மீன்வளத் துறையினர் அனுமதித்துள்னர்.

    மேலும் மீன்வளத்துறை மூலம் படகுகளுக்கு வழங்கப்படும் டோக்கன்கள் வழங்கப்பட்டு இன்று அதிகாலை நாகப்பட்டினம் மீன்பிடித் துறை முகத்திலிருந்து 700 விசைப்படகுகள் 3000 பைபர் படகுகள் மீன்பிடிக்க சென்றனர்.

    நீண்ட நாட்களுக்குப் பிறகு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் அதிக அளவில் மீன் கிடைக்கும் என மகிழ்ச்சியில் சென்றுள்ளனர்.

    • கடல் சீற்றம் காரணமாக நாகையில் உள்ள 25 மீனவ கிராமம் மீனவர்கள் 3 வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
    • மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லக்கூடாது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    நாகப்பட்டினம்:

    வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்மண்டலம், கடல் சீற்றம் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 25 மீனவ கிராமம் மீனவர்கள் 3 வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் படகுகளை பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.

    வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லக்கூடாது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    அதனைத் தொடர்ந்து கடல் சீற்றம் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 25மீனவ கிராம மீனவர்கள் 3வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் உள்ளனர் குறிப்பாக. நாகப்பட்டினம் மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங் குப்பம், கல்லார், புஷ்பவனம் வெள்ளபள்ளம் ஆறுகாட்டுதுறை கோடியக்கரை மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தங்களுக்கு சொந்தமான விசைப்படகுகள் பைபர் படகுகள், நாட்டுப்படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்து ள்ளனர்.

    700 க்கும் மேற்பட்ட விசைப்பட குகள் 3 ஆயிரத்தி ற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வில்லை.

    • சூறாவளி காற்று வீச கூடும் என்ப தால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வே ண்டாம் ,
    • மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் ,

    புதுச்சேரி:

    காரைக்கால் மீன்வளத் துறை அதிகாரி சூறாவளி காற்று வீச கூடும் என்ப தால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வே ண்டாம் என அறிவித்து ள்ளார். தென்மேற்கு வங்கக்க டலில் நிலவும் காற்ற ழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சூறாவளி க்காற்று வீசக்கூடும் என்றும், இதனால் தொடர் கனமழைக்கு வாய்ப்புள்ள தாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்ரை அறிவித்துள்ளது.

    எனவே மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பி வரவேண்டும். என காரைக்கால் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரி அறிவித்துள்ளார்.

    • தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    • ராமேசுவரம் பகுதியை சேர்ந்த 1,000 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டு உள்ளன.

    ராமேசுவரம்:

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் கடலோர மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இந்த எச்சரிக்கை காரணமாக ராமேசுவரம், பாம்பன் பகுதியில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் நேற்றும், இன்றும் மீன்பிடிக்க செல்லவில்லை. மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுரையின்பேரில் ராமேசுவரம் பகுதியை சேர்ந்த 1,000 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டு உள்ளன.

    இதனால் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்றும், இன்றும் மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த புயல் எச்சரிக்கை காரணமாக ஒரு நாளைக்கு ரூ.1 கோடி முதல் ரூ.1.50 கோடி வரை மீன் வர்த்தகம் பாதிக்கப்படும் என்று மீனவர்கள் தெரிவித்தனர். இதுபற்றி ராமேசுவரம் மீனவர்கள் கூறுகையில், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதால் வருகிற 3-ந் தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    மேலும் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளனர் என்று தெரிவித்தனர்.

    • ஆழ்கடலில் படகில் வெள்ளம் புகுந்ததையும், மீனவர்கள் மற்றொரு பைபர் வள்ளத்தில் ஏறி தவிப்பதாகவும் உறவினர்களுக்கு தகவல்
    • வாணியக்குடி மற்றும் குளச்சல் மீனவர்கள் 4 வள்ளம், ஒரு விசைப்படகில் முட்டம் கடல் பகுதியில் மீட்டனர்

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே வாணியக்குடியை சேர்ந்த வர் லூக்காஸ் (வயது 44). இவர் கேரளாவில் சொந்தமாக விசைப்படகு வைத்து மீன் பிடித்தொழில் செய்து வருகிறார். கடந்த 23-ந் தேதி இவர் வழக்கம்போல் கொல்லம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றார். படகை லூக்காஸ் ஓட்டினார்.

    அவருடன் தூத்துக் குடியை சேர்ந்த 2 பேர், கொல்லம் மற்றும் ராஜபாளையத்தை சேர்ந்த தலா ஒருவர், ஆந்திராவை சேர்ந்த 5 பேர் மற்றும் ஒடிசாவை சேர்ந்த 3 பேருமாக 13 மீன் பிடித்தொழிலாளர்கள் சென்றனர். இவர்களது விசைப்படகு நேற்று முன்தினம் இரவு குமரி மாவட்டம் முட்டம் கடல் பகுதி 28 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தது.

    அப்போது எதிர்ப்பாரா மல் திடீரென கடலில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் படகு உடைந்து உள்ளே கடல் நீர் புகுந்தது. செய்வதறியாது தவித்த மீனவர்கள் படகில் புகுந்த நீரை இறைத்து வெளியேற்றினர். அப்போதும் நீர் படகுக்குள் புகுந்தது. இதனால் மீனவர் லூக்காஸ் படகை அருகில் கரை சேர்க்க இயக்கினார். ஆனால் பலத்த காற்று வீசியதால் படகு எதிர் திசையில் அடித்து சென்றது. படகை கட்டுப்படுத்த முடியாமல் மீனவர்கள் தவித்தனர்.பின்னர் 8 நாட்டிக்கல் தூரம் அடித்து சென்றபின் படகு கட்டுக்குள் வந்தது. அப்போது அந்த பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த பைபர் படகை லூக்காஸ் உதவிக்கு அழைத்தார். உதவிக்கு வந்த பைபர் படகில் மீனவர்கள் ஏறி பாதுகாப்பாக அமர்ந்தனர்.

    நேற்று காலை லூக்காஸ் மற்றொரு பைபர் வள்ளத்தில் ஏறி தேங்காய்பட்டணம் துறைமுகம் வந்தார். ஆழ்கடலில் படகில் வெள்ளம் புகுந்ததையும், மீனவர்கள் மற்றொரு பைபர் வள்ளத்தில் ஏறி தவிப்பதாகவும் உறவினர்களுக்கு தகவல் கூறினார். உடனே வாணியக்குடி மற்றும் குளச்சல் மீனவர்கள் 4 வள்ளம், ஒரு விசைப்படகில் முட்டம் கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லூக்காஸ் படகு நோக்கி விரைந்து சென்றனர். பல மணிநேரம் சென்ற மேற்படி வள்ளங்கள், விசைப்படகு லூக்காஸ் படகை அடைந்தது. பின்னர் அவர்கள் பைபர் படகில் இருந்த 12 மீனவர்கள், உடைந்த லூக்காஸ் விசைப்படகையும் மீட்டு கரை நோக்கி விரைந்தனர். நேற்றிரவு 10.30 மணியளவில் மீனவர்கள் அனைவரும் முட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் பத்திரமாக கரை சேர்ந்தனர். இதையடுத்து மீனவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    • கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இங்கு கடல் சீற்றத்தால் மீனவர்கள் மிகவும் அச்சமடைந்தனர்.
    • இன்னும் 2,3 ஆண்டுகளில் மடவாமேடு கிராமமே கடலுக்குள் சென்று விடும் அபாயம்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கடலோர மீனவ கிராமமான மடவாமேடு கிராமம் உள்ளது.

    இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். முழுக்க முழுக்க மீன்பிடி தொழிலை நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.

    இங்குள்ள மீனவர்கள் பைபர் படகுகள் மற்றும் நாட்டுப் படகுகள் மூலம் கடலுக்குள் சென்று மீன் பிடித்து இங்கு பிடிக்கப்பட்டு வரும் மீன்கள் வெளியூர்களிலிருந்து வரும் வியாபாரிகள் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் மூலம் விற்பனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    இங்கிருந்து பல வகையான மீன்கள் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதேபோல் இங்கு உலர வைக்கப்படும் பல வகையான மீன்களின் கருவாடுகளும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கும் எடுத்துச் சென்று விற்பனை செய்யப்படுகின்றன.

    உள்ளூர் பகுதிக ளிலும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் எடுத்துச் சென்று விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் இங்கு உணவுக்கு பயன்படுத்தப்பட முடியாத சிறு, சிறு வகையிலான நூற்றுக்கணக்கான வகை மீன்கள் காயவைத்து உலர வைக்கப்பட்டு கோழி தீவனத்துக்காக நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினந்தோறும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    இப்படி மீன் மற்றும் கருவாடு வியாபாரங்களில் சிறந்த விளங்கி வரும் இந்த கிராம மக்கள் தினந்தோறும் கடல் அலைகளின் சத்தத்தால் அச்சமடைந்து வருகின்றனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இங்கு கடல் சீற்றத்தால் அலைகள் எழும்பி கடல் நீர் கிராமத்துக்குள் புகுந்ததால் மீனவர்கள் மிகவும் அச்சம் அடைந்தனர்.

    அடிக்கடி கடல் சீற்றம் ஏற்படும்போதெல்லாம் மடவாமேடு கடல் பகுதி மண் அரிப்பால் கடலுக்குள் கரைந்து சென்று கொண்டே இருக்கிறது. கடந்த 5 வருட காலத்தில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் மடவாமேடு கிராமப்பகுதி கடலுக்குள் சென்று விட்டது. இதனால் இந்த கிராமத்திலிருந்து கடல் அலை தொட்டுச் செல்லும் தூரம் வெறும் 50 மீட்டர் தூரமே உள்ளது.

    தொடர்ந்து கடல் அலைகள் ஆர்ப்பரித்து வரும்போதெல்லாம் மடவாமேடு கிராமத்தின் மண்ணை அரித்து செல்கின்றது. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் மடவாமேடு கிராமமே கடலுக்குள் சென்று விடும் அபாய நிலையில் உள்ளது.

    எனவே மடவா மேடு கிராமத்தில் மேலும் மண்ணரிப்பு ஏற்படாத வகையில் அலைகள் வந்து மோதும் இடத்தில் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு பாறாங்கற்களை போட்டு தடுப்புச் சுவர் அமைத்தும் வேகமான மண் அரிப்பை தடுக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலரும் ஒன்றிய குழு உறுப்பினருமான அங்குதன் தெரிவித்துள்ளார்.

    • லைபீரியா நாட்டை சேர்ந்த போஸ்டன் என்ற எண்ணெய் கப்பல் எதிர்பாராமல் இவர்களது விசைப்படகு மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
    • படகிலிருந்த மீனவர்கள் தூக்கி வீசப்பட்டு படகுக்குள்ளேயே விழுந்தனர்.

    குளச்சல்:

    குளச்சல் மரமடிய தெருவை சேர்ந்தவர் குருசப்பன். இவரது மகன் ரெஸ்லின் டானி (வயது 38). இவர், அதே பகுதியை சேர்ந்த 4 பேருடன் பங்குதாரராக சேர்ந்து விசைப் படகு வைத்து மீன்பிடித் தொழில் செய்து வருகிறார்.

    கடந்த 12-ந்தேதி வழக்கம் போல் இவரது படகு குளச்சல் மீன்பிடித்துறை முகத்திலிருந்து புறப்பட்டு ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றது. படகில் ரீகன் (36), ஜார்ஜ் (43), மர்வின் (37), ராமன் துறையை சேர்ந்த சோனி (53), ஜாண்சன் (50), சின்னமுட்டத்தை சேர்ந்த தியோ (33), அழிக்கால் எட்வின்ராஜ் (27), சிபு (27) மற்றும் ஒடிசாவை சேர்ந்த கேதர் ஜெனோ (28), அமீர் (43), உ.பி.யை சேர்ந்த கமலேஷ் (26), லோகேஸ் (23), பின்று (21), ஆகிய மீன்பிடித்தொழிலாளர்களும் சென்றனர்.

    இவர்களது படகு கன்னியாகுமரி கடல் பகுதியிலிருந்து 69 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அந்த வழியாக சென்ற லைபீரியா நாட்டை சேர்ந்த போஸ்டன் என்ற எண்ணெய் கப்பல் எதிர்பாராமல் இவர்களது விசைப்படகு மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

    இதில் படகிலிருந்த மீனவர்கள் தூக்கி வீசப்பட்டு படகுக்குள்ளேயே விழுந்தனர். அவர்கள் என்ன நடந்தது? என்பதை அறிவதற்குள் படகு சாய்வாக சரிய தொடங்கியது. கப்பல் மோதியதில் படகில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு விரிசல் விழுந்தது. படகின் உள்அறைகளிலும் பெரும் உடைப்பு ஏற்பட்டது.

    தொடர்ந்து படகை இயக்கினால் படகுக்குள் தண்ணீர் புகுந்து விடும் என்பதால் அருகில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மற்றொரு படகிற்கு தகவல் தெரிவித்து உதவிக்கு அழைத்தனர். இருப்பினும் படகு நிலை தடுமாறி தொடர்ந்து சரிய தொடங்கியதால் 14 மீனவர்களும் பீதியடைந்தனர். அவர்கள் கூச்சலிட தொடங்கினர். பின்னர் சிறிது நேரத்தில் உதவிக்கு அழைத்த படகு விரைந்து வந்து 14 மீனவர்களையும் மீட்டது. விசைப்படகையும் மீட்டு நேற்று காலை குளச்சல் மீன்பிடித்துறைமுகம் கொண்டு வந்தனர். கப்பல் மோதிய வேகத்தில் மீனவர்களுக்கு உள்காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் சேதமடைந்த விசைப்படகின் மதிப்பு ரூ.1.25 கோடி என கூறப்படுகிறது.

    இது குறித்து ரெஸ்லின் டானி குளச்சல் மரைன் போலீசில் புகார் செய்தார். மரைன் போலீசார் சேதமடைந்த படகை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ் மேற்கூறிய போஸ்டன் கப்பல் மீது வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் நவீன் விசாரணை நடத்தி வருகிறார். குமரி கடலில் விசைப்படகு மீது வெளிநாட்டு கப்பல் மோதிவிட்டு சென்ற சம்பவம் மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடலில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்ட இந்த படகு மீது கப்பல் மோதியதும் நங்கூரத்தின் கயிறு கப்பலின் பிரப்பலரில் சிக்கியது. இதனால் படகை சிறிது தூரம் கப்பல் இழுத்து சென்றது. இதை கவனித்த மீனவர் மெர்வின் நங்கூரத்தின் கயிறை அறுத்து விட்டு படகை விடுவித்தார்.

    பின்னர் வி.எச்.எப்.-16 ஒயர்லெஸில் காப்பாற்றுமாறு மீனவர்கள் கப்பலுக்கு தகவல் தெரிவித்தும், கப்பல் ஊழியர்கள் அதை பொருட்படுத்தாமல் சென்றுவிட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர். 

    • மீனவர்கள் அருகில் சென்று பார்த்த போது அது மிளா வகை மான் என்று தெரிய வந்தது.
    • வனத்துறையினர் மிளா மானை மீட்டு விளாத்திகுளம் காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி இனிகோ நகரை சேர்ந்த மீனவர்கள் நேற்று காலை நண்டு வலை வைப்பதற்காக சென்றனர். அதனை தொடர்ந்து இன்று காலையில் அந்த நண்டை எடுப்பதற்காக அதிகாலை 5 மணிக்கு கடலுக்குச் சென்றனர்.

    கடல் தொழில் முடிந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது கடலில் ஏதோ தத்தளித்துக் கொண்டி ருந்ததை பார்த்த சக மீனவர்கள் அருகில் சென்று பார்த்த போது மிளா வகை மான் என்று தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து கரை பகுதிக்கு வந்து மேலும் 2 பேரை அழைத்து சென்று அந்த மானை பத்திரமாக பைபர் படகில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்தனர். அங்கே அது தப்பி ஓட நினைத்ததால் அதை கால் பகுதியை கட்டி வைத்திருந்தனர்.

    பின்பு வனத்துறை அதிகாரியிடம் தகவல் தெரிவித்தன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை அதிகாரிகள் மானை மீட்டு விளாத்திகுளம் பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்றனர். இந்த அரியவகை மானை அப்பகுதி மீனவர்கள் வந்து பார்த்து ரசித்து செல்போனில் படம் பிடித்து சென்றனர்.

    இதுகுறித்து மீனவர் ஜேரோன் (பைபர் போட் உரிமையாளர்) கூறுகையில், நாங்கள் அதிகாலை 5 மணிக்கு கடலில் நண்டு வலையை எடுத்து நண்டுபிடித்து வரும்போது கரையில் இருந்து 1 கிலோமீட்டர் தூரம் இருக்கும் பகுதியில், கடலில் பறவைகள் கூட்டமாக மானை தூரத்தி கொண்டிருப்பதை நாங்கள் பார்த்தோம். உடனே நாங்கள் 4 பேர் சேர்ந்து அதனை மீட்க முயன்றோம். ஆனால் அதன் எடை அதிகமாக இருந்ததால் எங்களால் அதனை மீட்க முடியவில்லை. பின்னர் கரைக்கு வந்து கூடுதலாக 2 பேரை அழைத்து சென்று கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மிளாவின் கொம்பில் கயிற்றை கட்டி கரைக்கு இழுத்து வந்து வனசரகத்திற்கு தகவல் கொடுத்தோம். பின்பு அவர்கள் வந்து ஆட்டோவில் ஏற்றி வனப்பகுதியில் விட்டனர் என்றார்.

    • மந்திரிப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
    • தங்கள் வலையை அறுத்து அந்த கடல் பசுவை மீண்டும் உயிருடன் கடலில் மீனவர்கள் விட்டனர்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மந்திரிப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது மீனவர்கள் வலையில் அவுரியா எனப்படும் அபூர்வ வகை கடல்வாழ் உயிரினமான கடல் பசு சிக்கியது.

    இதையடுத்து, தங்கள் வலையை அறுத்து அந்த கடல் பசுவை மீண்டும் உயிருடன் கடலில் மீனவர்கள் விட்டனர்.

    இதற்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி மனோரா கடற்கரையில் தஞ்சை மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி தலைமையில் நடந்தது. தமிழ்நாடு வனத்துறை சார்பில் மீனவர்கள் 11 பேருக்கு தலா ரூ.5 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ், சேதமடைந்த மீன் வலைக்காக ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது. இதேபோல் பல்வேறு அமைப்புகள் சார்பில் மொத்தம் ரூ.1 லட்சம் மீனவர்களுக்கு வழங்கப்பட்டது.

    இதில் மாவட்ட வன அலுவலர் பேசியதாவது:- அபூர்வ வகை உயிரினங்களான கடல் பசுவை அனைவரும் பாதுகாக்க வேண்டும். கடல்வாழ் உயிரினங்களின் வாழுமிடமான கடற்பா சிகளை உருவாக்குவதில் அவுரியா முக்கிய இடம் வகிக்கிறது.

    கடல் பசு அரிய வகை கடல்வாழ் உயிரினங்களில் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

    இவற்றை பிடிக்க கூடாது.

    கடல் பசுக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மீனவர்கள் வலையில் தவறுதலாக சிக்கினால், கடல்பசுவின் காயத்திற்கு முதலுதவி சிகிச்சை அளித்து கடலுக்குள் மீண்டும் விடும் வகையில் மீன்வளத்துறை, வனத்துறை சார்பில் மீனவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றார்.

    தொடர்ந்து, நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார், வனச்சரகர்கள் குமார், ரஞ்சித், வனவர் சிங்காரவேலு, கடலோர காவல்துறை உதவி ஆய்வாளர் நவநீதன், மீன்வளத்துறை ஆய்வாளர் கெங்கேஸ்வரி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஜலீலா பேகம் (சரபேந்திரராஜன்பட்டினம்), முரளி (திருவத்தேவன்) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.மீனவர்களுக்கு சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. மனு

    கன்னியாகுமரி:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வு மான தளவாய்சுந்தரம் கலெக்டர் அரவிந்தை நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மீன்வளத் துறை அலுவலகத்திலிருந்து கடந்த வாரம் வரப் பெற்ற கடிதத்தில் கேசவன் புத்தன் துறை ஊரை சார்ந்த மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையினை அரசிடமிருந்து பெற்று வருகின்ற 25 பேரின் பெயர்களை குறிப்பிட்டு இவர்கள் கடல் தொழில் செய்யாதவர்கள் என்று உண்மைக்கு மாறான தவறான தகவலின் அடிப்ப டையில் மீன்வளத்துறை இந்த கடிதத்தை அனுப்பி யுள்ளதாக அறிய முடிகிறது. இவர்கள் கடல் தொழில் செய்யாதவர்கள் என்பது உண்மைக்கு புறம்பானது, இவர்கள் அனைவரும் கடலை நம்பி வாழ்பவர்கள். கடலுக்கு செல்ல முடியாத நாட்களில் தற்காலிகமாக வேறு சிறு தொழில்களையும் செய்து வருகிறார்கள்.

    கேசவன்புத்தன்துறை ஊரில் கடல் தொழில் செய்து வருகின்ற 13 பேருக்கு அரசால் வழங்கப்படுகின்ற நிவாரணங்கள் அனைத்தும் முறையாக கிடைப்பதில்லை. ஒரு சிலருக்கு குறைந்த நிவாரணம் வழங்கப்படு கிறது. ஆனால் தடைக் கால நிவாரணம் வழங்கப்படவில்லை. மற்றவர்களுக்கு தடைக்கால நிவாரணம் வழங்கப்படுகிறது. ஆனால் குறைந்த கால நிவாரணம் கிடைப்பதில்லை. இதனைக் கருத்தில் கொண்டு மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு ஏழை மீன்பிடி தொழிலாளர்களுக்கு அரசால் வழங்கப்படுகின்ற அனைத்து நிவாரணங்களும் முறையாக கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம், சாமிதோப்பு ஊராட்சி செட்டிவிளை ஊரில் முந்திரி கிணறு முதல் செட்டிவிளை முத்தாரம்மன் கோவில் வரை உள்ள சாலையினை ரூ.39 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாடு செய்யவும், ஈத்தங்காடு மணக்குடி ரோட்டிலிருந்து பூலாங்குளம் இணைப்புச் சாலையினை ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாடு செய்யவும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யவும் தெரிவிக்கப்

    பட்டுள்ளது.

    அகஸ்தீஸ்வரம் வட்டம், ராஜாக்கமங்கலம் ஒன்றியம், தர்மபுரம் ஊராட்சி, தெற்கு கிராமம், வெள்ளாளர் தெரு பிள்ளையார் கோவில் பின்பகுதியில் 40 வருடத்திற்கு மேலாக பொதுமக்கள் குடியிருந்து வருகிறார்கள். ரியல்எஸ்டேட் தொழிலுக்காக இந்த குடியிருப்புகளை அகற்றி பாதை அமைக்க நீதிமன்ற உத்தரவு பெற்றுள்ளதாக தெரிகிறது. யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லாமல், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் அப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் குடியிருப்பதற்கு தகுந்த ஏற்பாடு செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. அளித்த மனுவில் கூறியுள்ளார்.

    மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    அப்போது தோவாளை ஊராட்சி ஒன்றி யக்குழு தலைவர் சாந்தினிபகவதியப்பன், ஆரல்வாய்மொழி பேரூ ராட்சி தலைவர் முத்துக் குமார், நாகர்கோவில் மாமன்ற உறுப்பினர் அக் ஷயாகண்ணன், சாமி தோப்பு ஊராட்சி தலைவர் மதிவாணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள மீனவர்கள் பெரும்பாலானோர் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை
    • குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் துறைமுகங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் 10-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வந்தனர்.

    கன்னியாகுமரி :

    குமரிக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் உருவான குறைந்த காற்ற ழுத்த தாழ்வு காரண மாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடு த்தது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன் வளத் துறை சார்பில் தடையும் விதிக்கப்பட்டது.

    இதையடுத்து ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள மீனவர்கள் பெரும்பாலானோர் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் சின்ன முட்டம், குளச்சல் துறைமுகங்கள் வெறிச்சோடி காணப் பட்டது. வள்ளங்கள், விசைப்படகுகள் கரையோ ரங்களில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டன.

    குளச்சல், முட்டம், தேங்காய் பட்டணம் துறை முகங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் 10-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வந்தனர்.

    இதே போல ஆரோக்கிய புரம், கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத் துறை, கோவளம், கீழ மணக்குடி, மணக்குடி, பள்ளம், ராஜாக்கமங்கலம் துறை போன்ற கடற்கரைகிராமங்களிலும்பெரும்பாலான கட்டுமரம், வள்ளம் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கசெல்லவில்லை.

    கடல் சீற்றம் குறைந்த நிலை யிலும் மீன்வளத்துறை சார்பில் விதிக்கப்பட்ட தடை தொடரும் நிலையில் ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு செல்லும் விசைப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீன்கள் வரத்தின்றி துறை முகங்கள் வெறிச்சோடியே காணப்படுகிறது.

    குளச்சல் மீன்பிடி துறை முகத்தில் ஒருசில கட்டு மரம் மீனவர்கள் மட்டும் கடலுக்கு மீன் பிடிக்க சென்று கரை திரும்பினர். ஆனாலும் போதிய மீன் வரத்து இல்லை.

    குமரி மாவட்டத்தில் வரத்து குறைவு காரண மாக மீன்கள் விலை கிடு கிடு வென உயர்ந்துள்ளது.சாதாரணமாக கிலோ 100-க்கு விலை போகும் சாளை மீன் 230-ரூபாய்க்கும் ரூ.300-க்கு விலை போகும் நண்டு ரூ.500-க்கும், ரூ .150-க்கு விலை போகும் அயலை மீன் ரூ.250க்கும் விற்பனையானது.

    • ராமேசுவரம், மண்டபம், ராமநாதபுரத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
    • இன்று காலை மீன் வளத்துறை அதிகாரிகள் அனுமதி டோக்கன் பெற்று கொண்டு 500-க்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்கு புறப்பட்டனர்.

    ராமேசுவரம்:

    வங்கக்கடலில் கடந்த 19-ந் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டு, 21-ந் தேதி அது புயலாக மாறியது. இதன் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. ராமேசுவரம் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

    இதனால் ராமேசுவரம், மண்டபம், ராமநாதபுரத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. மீனவர்கள் துறைமுகங்களில் தங்களது விசைப்படகுகளை நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர்.

    கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்ததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்தவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது கடலில் காற்றின் வேகம் குறைந்து இயல்பு நிலை திரும்பி உள்ளது. இதன் காரணமாக கடலுக்கு செல்ல மீனவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதன்படி அவர்கள் இன்று காலை மீன் வளத்துறை அதிகாரிகள் அனுமதி டோக்கன் பெற்று கொண்டு 500-க்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்கு புறப்பட்டனர்.

    10 நாட்களுக்கு பின்பு இன்று (28-ந் தேதி) கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றதால் ராமேசுவரம், பாம்பன் துறைமுகம் பரபரப்புடன் காணப்பட்டது.

    ×