search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாவளி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காற்று மாசு உள்ளிட்ட காரணங்களாக பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கி அரசு அறிவித்தது.
    • அரசு விதிமுறைகளை மீறி பட்டாசு விற்பனையில் ஈடுபட்டதாக 7 வழக்குகள் பதிவு.

    தமிழகத்தில் நேற்று பட்டாசுகள் வெடித்து தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    காற்று மாசு உள்ளிட்ட காரணங்களுக்காக பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கி அரசு சார்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 581 வழக்குகள் பதிவாகியுள்ளது.

    அதிகளவு சத்தத்தை எழுப்பக்கூடிய பட்டாசுகள் வெடித்ததாக மொத்தம் 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அரசு விதிமுறைகளை மீறி பட்டாசு விற்பனையில் ஈடுபட்டதாக 7 வழக்குகள் பதிவாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

    • அரசு அனுமதித்த நேரத்தைக் கடந்து நள்ளிரவு வரை பொது மக்கள் பட்டாசு வெடித்தனர்.
    • காற்றில் பிஎம் 2.5, பிஎம் 10, என்ஒ2, எஸ்02 உள்ளிட்ட வகை மாசு அளவு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    தமிழகத்தில் நேற்று தீபாவளி பண்டிகை பட்டாசுகள் வெடித்து கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    தீபாவளிக்கு வெடிக்கப்பட்ட பட்டாசுகள் எதிரொலியாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது.

    குறிப்பாக சென்னையில் காற்று மாசு அளவு வழக்கத்தைவிட மோசமாக உள்ளது. சென்னையில் நேற்று காற்று மாசு 170ஆக இருந்த நிலையில், விடிய வடிய வாணவேடிக்கை நடந்ததால் காற்றின் தரம் மேலும் மோசமடைந்து தரக்குறியீடு 200ஐ கடந்துள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    மேலும், அதிகபட்சமாக மணலியில் காற்று தரக்குறியீடு 316 ஆகவும், வேளச்சேரியில் 301ஆகவும், அரும்பாக்கத்தில் 260ஆகவும், ஆலந்தூரில் 256ஆகவும், ராயபுரத்தில் 227ஆகவும் பதிவாகியுள்ளது.

    பட்டாசு வெடிக்க அரசு தரப்பில் நேரம் ஒதுக்கப்பட்டபோதும், அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து நள்ளிரவு வரை பொது மக்கள் பட்டாசு வெடித்தனர்.

    காற்றில் பிஎம் 2.5, பிஎம் 10, என்ஒ2, எஸ்02 உள்ளிட்ட வகை மாசு அளவு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    காற்று மாசு அதிகரிப்பு எதிரொலியால் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • மயிலாப்பூரில் உள்ள சாய்பாபா கோயிலில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • கோயிலில் வைக்கப்பட்ட ஓலைகளில் தீப்பொறி விழுந்து விபத்து ஏற்பட்டு இருக்கலாம்.

    சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள சாய்பாபா கோயிலில் தீ விபத்து ஏற்பட்டது. கோயிலில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை அடுத்து, கோயிலை சுற்றி ஓலைகள் கட்டப்பட்டு இருந்தது. ஓலையில் தீப்பொறி பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தீ விபத்து ஏற்பட்டு இருப்பதை அடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கோயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதை அடுத்து அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. 

    • தீபாவளி பண்டிகையை ஒட்டி பட்டாசு வெடிக்கப்படுகிறது.
    • மணலியில் காற்று மாசு அளவு 224 ஆக பதிவு.

    சென்னையில் இன்று (நவம்பர் 12) மாலை 4 மணி நிலவரப்படி காற்று மாசு 178 குறியீடாக பதிவாகி இருக்கிறது. நவம்பர் 10-ம் தேதி காற்று மாசு அளவு 83-ஆக இருந்த நிலையில், நேற்றைய காற்று மாசு அளவு 115 ஆகவும், இன்று 178 ஆகவும் அதிகரித்து உள்ளது.

    தீபாவளி பண்டிகையை ஒட்டி மக்கள் பட்டாசு வெடித்து வருவதால், காற்று மாசு அதிகரித்து இருக்கும் என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய தகவல்கள் தெரிவித்து உள்ளன. சென்னையின் பல்வேறு பகுதிகளில் காற்று மாசு அளவு பதிவு செய்யப்பட்டதில், மணலியில் அதிகபட்சமாக காற்று மாசின் அளவு 224 ஆக பதிவாகி இருக்கிறது.

    இதே போன்று பெருங்குடியில் காற்று மாசு அளவு 221 ஆகவும், ஆலந்தூரில் 188 ஆகவும், வேளச்சேரியில் 179, அரும்பாக்கத்தில் 172 ஆகவும் பதிவாகி உள்ளது. சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் காற்று மாசு அளவு 170-க்கும் அதிகமாகவே பதிவாகி இருக்கிறது.

    • புகைப்படங்களை அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
    • ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் இடம் கோயிலுக்கு நிகரான ஒன்று.

    பிரதமர் நரேந்திர மோடி இன்று இமாச்சல பிரதேச மாநிலம் சென்று எல்லையில் உள்ள பாதுகாப்பு படை வீரர்களுடன் சேர்ந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை பதுகாப்பு படை வீரர்களுடன் கொண்டாடுவதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டிருக்கிறார்.

    அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் பிரதமர் நரேந்திர மோடி ராணுவ உடை அணிந்திருக்கிறார்.

    இதைத் தொடர்ந்து ராணுவ வீரர்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, "நீங்கள் இருக்கும் இடத்தில் தான் எனக்கு பண்டிகையே. நான் பிரதமர் மற்றும் முதலமைச்சர் போன்ற பதவிகளில் இல்லாத சமயத்திலும், தீபாவளியன்று ராணுவ வீரரர்களை சந்தித்து இருக்கிறேன்."

    "ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் இடம் கோயிலுக்கு நிகரான ஒன்று. நாட்டில் நடைபெறும் ஒவ்வொரு பூஜைகளிலும், நமது எல்லையை பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்கான பிரார்த்தனை நடைபெறுகிறது. ஒவ்வொரு வீடுகளிலும் ஒரு விளக்கு, அவர்களுக்காக ஏற்றப்படுகிறது," என்று தெரிவித்தார்.

    • கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • பட்டாசுகள் வெடித்ததாக 118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுக்க பட்டாசுகள் வெடிக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தீபாவளி தினத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

    இதுதவிர தடை செய்யப்பட்ட, ஒலி மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி சென்னையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக இதுவரை 118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    நேற்றிரவு முதல் தற்போது வரை அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசுகள் வெடித்ததாக 118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடிப்பவர்களை கண்காணிக்க சென்னை காவல் துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு இருக்கிறது.

    • தீபாவளி பண்டிகையை நாடு முழுவதும் மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
    • ஆஸ்திரேலிய அணி தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    நாடு முழுவதும் மக்கள் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். புத்தாடை உடுத்தியும், பட்டாசு வெடித்தும் தீபாவளி அனைவராலும் கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர், தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக , வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தீபாவளி வாழ்த்துகள் எனக்கூறிய அவர், தனது குழந்தைகளும் தீபாவளி வாழ்த்து கூறுவதை பதிவிட்டுள்ளார்.

    • நாட்டை காக்கும் ராணுவ வீரர்கள் எல்லையில் தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தனர்.
    • சி.ஆர்.பி.எப். வீரர்கள் தீபம் ஏற்றி பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

    ஸ்ரீநகர்:

    நாடு முழுவதும் மக்கள் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். புத்தாடை உடுத்தியும், பட்டாசு வெடித்தும் தீபாவளி அனைவராலும் கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில், நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களும் ஜம்மு காஷ்மீர் எல்லையில் தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 76-வது பட்டாலியனைச் சேர்ந்த வீரர்கள், பணிக்கு இடையே பட்டாசுகள் வெடித்து தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினர். அனைவரும் ஒரு குடும்பம் போன்று தீபாவளியைக் கொண்டாடுவதாக ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.

    சி.ஆர்.பி.எப். வீரர்கள் தீபம் ஏற்றி பட்டாசு வெடித்தும், இனிப்புகளைப் பகிர்ந்துகொண்டும் ஒருவருக்கொருவர் தீபாவளி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.

    • நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியி, தீபாவளியின் புனிதமான தருணத்தில், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வாழும் அனைத்து மக்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இருளின் மீது ஒளியின் வெற்றியையும், தீமையின் மீது நன்மையையும், அநீதியின் மீது நீதியையும் வென்றதைக் குறிக்கும் வகையில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா கருணை, நேர்மறை மற்றும் செழிப்பு ஆகியவற்றின் சின்னமாகும். தீபாவளி பண்டிகை நம் மனசாட்சியை ஒளிரச் செய்து, மனிதகுலத்தின் நலனுக்காக உழைக்கத் தூண்டுகிறது. ஒரு தீபம் பலவற்றை ஒளிரச் செய்யும். அதேபோல ஏழை, எளியோரின் வாழ்வில் மகிழ்ச்சியையும் வளத்தையும் கொண்டு வரலாம்.

    தீபத் திருவிழாவை நாம் அனைவரும் பாதுகாப்பாக கொண்டாடி, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பங்களிப்பதன் மூலம் தேசத்தை கட்டியெழுப்ப உறுதிமொழி எடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். இந்தப் பண்டிகை அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்தைக் கொண்டு வரட்டும் என பதிவிட்டுள்ளார்.

    • நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
    • சுப்ரீம் கோர்ட் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் அனுமதி வழங்கியுள்ளது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்து மதத்தினரின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளி கருதப்படுகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    தீபாவளி நாளில் காலை 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.

    இந்நிலையில், சிறுவர் முதல் பெரியவர் வரை புத்தாடை அணிந்து, கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர். அதன்பின், இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும், வாழ்த்துக்களைப் பரிமாறியும் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர்.

    புதுமணத் தம்பதிகள் பெரியவர்களிடம் ஆசி பெற்று, தலைதீபாவளியை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.

    • அயோத்தியில் 22.23 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு புதிய உலக சாதனை படைக்கப்பட்டது.
    • தீபத் திருவிழாவில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    லக்னோ:

    உத்தர பிரதேச முதல் மந்திரியாக யோகி ஆதித்யநாத் கடந்த 2017-ல் பதவியேற்றதும் தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் 'தீபோத்சவ்' எனப்படும் தீபத் திருவிழாவை அறிவித்தார். அந்த ஆண்டு, அயோத்தி நகரின் சரயு நதிக்கரையில் 51,000 அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன.

    தொடர்ந்து 2019-ம் ஆண்டு 4.10 லட்சம் விளக்குகள், 2020-ம் ஆண்டு 9 லட்சத்துக்கும் அதிகமான விளக்குகள் ஏற்றப்பட்டன.

    கடந்த 2022-ம் ஆண்டு அயோத்தியில் 15 லட்சத்திற்கும் அதிகமான அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது.

    இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய நாளான நேற்று அயோத்தியில் 22.23 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு புதிய உலக சாதனை படைக்கப்பட்டது. இந்த தீபத் திருவிழாவில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு அகல் விளக்குகளை ஏற்றி வைத்தனர்.

    இதற்கான கின்னஸ் சாதனை சான்றிதழ் முதல் மந்திரி யோகி ஆதித்ய்நாத்திடம் வழங்கப்பட்டது.

    • தீபாவளியை கொண்டாட பிற மாவட்டங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் செல்லக்கூடிய மக்கள் நேற்று முதலே ரெயில், பேருந்துகளில் புறப்பட தொடங்கியுள்ளனர்.
    • ஆளுநர் ஆர்.என் ரவி தமிழில் வாழ்த்துச் செய்தி கூறும் அந்த வீடியோ ராஜ் பவனின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுள்ளனர்.

    குறிப்பாக தமிழகத்தில் தலைநகர் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் செல்லக்கூடிய மக்கள் நேற்று முதலே ரெயில், பேருந்துகளில் புறப்பட தொடங்கியுள்ளனர்.

    இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி தமிழில் பேசி வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.

    ஆளுநர் ஆர்.என் ரவி தமிழில் வாழ்த்துச் செய்தி கூறும் அந்த வீடியோ ராஜ் பவனின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    ×