search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டாசு"

    • ஆலன்ரே மெக்குரு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • சம்பவத்தை பார்த்து பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணம் சம்மர் வில்லில் ஒரு கேளிக்கை நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த விருந்தில் ஆலன்ரே மெக்குரு என்பவர் சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டார். திடீரென அவர் பட்டாசை கொளுத்தி தலையில் அணிந்து இருந்த தொப்பிக்கு மேல் வைத்தார். இதை பார்த்த பார்வையாளர்கள் அவர் ஏதோ விளையாட்டாக செய்கிறார் என நினைத்தனர்.

    அவரது மனைவி பைக்மெக்ரோ இதை தடுக்க முயன்றார். அதற்குள் பட்டாசு வெடித்து சிதறியது. இதில் ஆலன்ரே மெக்குரு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நொடி பொழுதில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்து பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    அவரது உடலை பார்த்து மனைவி கதறி அழுதார். அவர் கூறும் போது, " தலையில் பட்டாசை கொளுத்தும் போது நான் வேண்டாம் என்று தடுத்தேன். ஆனால் அவர் குடிபோதையில் இருந்தார். கேட்கவில்லை. அதற்குள் பட்டாசுகள் வெடித்து விட்டன. அவர் நல்ல மனிதர். கடினமாக உழைக்கக் கூடியவர்" என்று கண்ணீர் மல்க கூறினார்.

    • மும்பை விமான நிலையத்தில் மேள தாளங்களுடன் கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன.
    • இந்தியா கேட்டின் முன் திரண்ட ரசிகர்கள் உற்சாகத்தில் ஒருவருக்கொருவர் வெற்றிகளிப்பை பரிமாறிக்கொண்டனர்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. நீண்ட இடைவெளிக்குப் பின் இந்தியா பெற்றுள்ள இந்த வெற்றியை நாடே கொண்டாடி வருகிறது.

    நள்ளிரவில் பிரதான நகரங்களில் தெருக்களை ஆக்கிரமித்த ரசிகர்கள் இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் இந்தியாவின் வெற்றியை கொண்டாடித் தீர்த்து வருகின்றனர். மும்பை விமான நிலையத்தில் மேள தாளங்களுடன் கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. நிலையத்தில் உள்ளவர்களுக்கு இனிப்புகள் பரிமாறப்பட்டன.

    இந்தியா கேட்டின் முன் திரண்ட ரசிகர்கள் உற்சாகத்தில் ஒருவருக்கொருவர் வெற்றிகளிப்பை பரிமாறிக்கொண்டனர். குறிப்பாக மத்திய பிரதேச மாநில பாஜக அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியா தெருவில் இறங்கி தேசியக்கொடியை அசைத்து ரசிகர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். மேலும் உத்தரப் பிரதேசம் கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலத் தலைநகரங்களிலும் கொண்டாட்டங்கள் கலைக்கட்டியுள்ளன. 

    • கோவில் வளாகத்தில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர்.
    • பட்டாசு வெடிப்பதை வேடிக்கை பார்த்த சிறுவர்கள் தீக்காயமடைந்தனர்.

    மயிலம்:

    மயிலம் அருகே செண்டூர் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு கர்ண மோட்சம் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது, அதற்காக கோவில் வளாகத்தில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர்.

    இதில் அங்கிருந்த அவுட்டு மற்றும் சரவெடிகள் மீது எதிர்பாரத விதமாக தீப்பொறி விழுந்தது. இதனால் அங்கு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு வெடிப்பதை வேடிக்கை பார்த்த சிறுவர்கள் தீக்காயமடைந்தனர்.

    அங்கிருந்தவர்கள் தீக்காயமடைந்த சக்திவேல் மகன்கள் கவியழகன் (வயது 7), தமிழழகன் (5) சுப்பிரமணியன் மகன் கவுஷிக் (7), காளி மகன் அன்பு (10), சிவமூர்த்தி மகன் உதயா (7), எடையப்பட்டு நாடக ஆசிரியர் சீனுவாசன் (47) ஆகியோரை மீட்டு திண்டிவனம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இதில் சிறுவன் உதயாவை மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    • நேற்று (ஜூன் 9) இரவு 7.15 மணிளவில் பிரதமராக மோடி 3-வது முறையாகப் பதவியேற்றுள்ளார்.
    • மோடி மீண்டும் பிரதமரான குஷியில் நாடு முழுவதும் பாஜகவினர் வெற்றிகொண்டாட்டத்தில் ஆரவாரித்து வருகின்றனர்.

    மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றிய நிலையில் கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் பாஜக ஆட்சியை தக்கவைத்துள்ளது. என்.டி.ஏ புதிய எம்.பி.க்கள் கூட்டத்தில் அக்கூட்டணியின் பாராளுமன்ற தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இதனை தொடர்ந்து நேற்று (ஜூன் 9) இரவு 7.15 மணியளவில் பிரதமராக மோடி 3-வது முறையாகப் பதவியேற்றுள்ளார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மோடிக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 72 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். ராஜ்நாத் சிங், ஜே.பி நட்டா, அமித் ஷா, நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி உள்ளிட்டோர் மீண்டும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.

     

    இந்நிலையில் மோடி மீண்டும் பிரதமரான குஷியில் நாடு முழுவதும் பாஜகவினர் வெற்றிகொண்டாட்டத்தில் ஆரவாரித்து வருகின்றனர். அந்த வகையில் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் பாஜக கட்சி அலுவலகத்தில் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது அலுவலகத்தின் மேல் தலத்தில் தீப்பற்றி மற்ற பகுதிகளுக்கும் மளமளவெனப் பரவியது. சம்பவ இடத்துக்கு உடனே விரைந்த தீயணைப்புத் துறை போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தது.   

    • சென்னையில் ஒரு தியேட்டரில் ரசிகர்கள் இருக்கையில் இருந்து எழுந்து நடனமாடத் தொடங்கினர்.
    • ரசிகர்கள் மத்தாப்பு மற்றும் சரவெடி பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியில் துள்ளல் ஆட்டம் போட்டனர்.

    ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 2001-ல் வெளிவந்த படம் 'தீனா'.இப்படத்தில் அஜித்குமார், லைலா, சுரேஷ் கோபி ஆகியோர் இணைந்து நடித்தனர். யுவன்சங்கர் ராஜா இசையமைத்தார். இந்த படத்திற்கு பின் அஜித்திற்கு 'தல' என்ற பட்டம் பிரபலமானது.

    இந்நிலையில் 23 ஆண்டுகளுக்கு பின் 'தீனா' படம் டிஜிட்டல் முறையில் இன்று (மே 1 ) அஜித்குமார் பிறந்த நாளில் 'ரீ ரிலீஸ்' செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.




    இந்நிலையில் அஜித் பிறந்தநாள் விழாவை இன்று அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மேலும் அஜித் நடித்த தீனா "ரீ ரிலீஸ்" செய்யப்பட்டதை யொட்டி அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர் மேலும் 'தீனா' படத்தை பார்ப்பதற்காக இன்று காலையில் அஜித் ரசிகர்கள் தியேட்டர்களில் குவிந்தனர்.

    இந்நிலையில் சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் இன்று 'தீனா' படம் ஓடிக்கொண்டு இருந்தது. அப்போது 'வத்திக்குச்சி பத்திக்காதுடா '.. பாடல் ஒலித்தது. உடனே ரசிகர்கள் இருக்கையில் இருந்து எழுந்து நடனமாடத் தொடங்கினர்.



    அப்போது ரசிகர்கள் மத்தாப்பு மற்றும் சரவெடி பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியில் துள்ளல் ஆட்டம் போட்டனர். இதனால் தியேட்டரில் பட்டாசு தீப்பொறி புகை மூட்டம் சூழ்ந்தது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ தற்போது இணைய தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.




    மேலும் தியேட்டரின் உள்ளே படம் ஓடிக்கொண்டு இருந்த போது அஜித் ரசிகர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடிய சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • எதிர்பாராதவிதமாக தீப்பொறிகள் பட்டாசு பெட்டி மீது விழுந்து அவை வெடிக்க தொடங்குகின்றன.
    • வீடியோ வைரலான நிலையில் வாலிபரின் செயலை விமர்சித்து பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    திருமண ஊர்வலங்களின் போது பட்டாசுகளை வெடித்து பிரமாண்ட வரவேற்பு அளிப்பது நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

    சில நேரங்களில் பட்டாசுகள் வெடிக்கும் போது விபரீதத்தை ஏற்படுத்தி விடுகின்றன. அது போன்ற ஒரு சம்பவம் குறித்த வீடியோ எக்ஸ் தளத்தில் பரவி வருகிறது.

    கார்த்திக் மீனா என்ற பயனர் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், ஒரு வாலிபர் திருமண ஊர்வலத்தில் நடனம் ஆடியபடி செல்கிறார். அப்போது திடீரென அந்த நபர் பட்டாசு பெட்டிகளை தலையில் தூக்கி வைத்து நடனம் ஆடுகிறார். அப்போது எதிர்பாராதவிதமாக தீப்பொறிகள் பட்டாசு பெட்டி மீது விழுந்து அவை வெடிக்க தொடங்குகின்றன.

    மேலும் அந்த நபரின் உடை மீது தீ பரவுவது போன்றும், அதில் இருந்து தப்பிக்க அந்த நபர் முயற்சி செய்வது போன்றும் காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ வைரலான நிலையில் வாலிபரின் செயலை விமர்சித்து பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக எஸ்.ஜி.எம்.ரமேஷ் என்பவர் போட்டியிடுகிறார்
    • பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம்.ரமேஷ் புதிய நம்பியார் நகர் மீனவ கிராமத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்காக சென்றார்

    நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக எஸ்.ஜி.எம்.ரமேஷ் என்பவர் போட்டியிடுகிறார். அவர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில் இன்று அவர், புதிய நம்பியார் நகர் மீனவ கிராமத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்காக சென்றார். அப்போது பா.ஜ.க.வினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    எஸ்.ஜி.எம். ரமேஷை வரவேற்க வைத்த பட்டாசுகள் வெடித்ததில் 2 குடிசை வீடுகள் தீக்கிரையானது. இதில், வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது.

    இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த தீ விபத்து குறித்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்த வருவாய் அலுவலர், வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின.

    நாகை மாவட்ட பாஜக தலைவர் கார்த்திகேயன் எரிந்த வீடுகளை பார்வையிட வந்த நிலையில், அவரை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.

    • வாக்காளர்கள் பூர்த்தி செய்த பின்னர் படிவங்களை உதவி தேர்தல் அலுவலர்கள் மூலம் சேகரிக்கப்பட்டது.
    • முதற்கட்டமாக இன்றும், நாளை மறுநாளும் (8-ந் தேதியும்) தபால் வாக்குகள் பெறும் பணி நடக்கிறது.

    நெல்லை:

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தலுக்கான அனைத்து பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்குச் சாவடிக்கு நேரில் வந்து வாக்கு அளிக்க இயலாத 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 40 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏதுவாக சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று, அவர்கள் விருப்பப்பட்டால் தபால் வாக்கு அளிக்கலாம் என்ற விபரத்தை தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இதையடுத்து கடந்த மாதம் 20-ந் தேதி முதல் 5 நாட்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களும் தங்களது எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மூத்த குடிமக்களிடம் நேரில் சென்று அவர்களது விருப்பத்தை கேட்டனர். மேலும் வீட்டிலிருந்தே வாக்களிக்க விரும்புபவர்களுக்கு 12 டி விண்ணப்ப படிவத்தை வழங்கினர். அதனை வாக்காளர்கள் பூர்த்தி செய்த பின்னர் படிவங்களை உதவி தேர்தல் அலுவலர்கள் மூலம் சேகரிக்கப்பட்டது.

    நெல்லை பாராளுமன்ற தொகுதியை பொருத்தவரை 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 2,521 மூத்த குடிமக்கள், 1146 மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்குப்பதிவு செய்ய விருப்பம் தெரிவித்திருந்தனர்.

    அந்த வாக்காளர்கள் வீட்டில் இருந்தபடி வாக்களிக்கும் விதமாக அவர்களிடம் தபால் வாக்குகளை பெறும் பணி நெல்லை மாவட்டத்தில் இன்று முதல் தொடங்கியது. தபால் வாக்குச்சீட்டு வழங்குவதற்கு மண்டல அலுவலர்கள் தலைமையிலான வாக்குச்சாவடி குழு அமைக்கப்பட்டு தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்த மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களிடம் வாக்குகளை பெற்றனர். பின்னர் அதனை அந்த பெட்டியில் போட்டு சீல் வைத்தனர். இந்த பணிகள் அனைத்தும் நுண் பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. முதற்கட்டமாக இன்றும், நாளை மறுநாளும் (8-ந் தேதியும்) தபால் வாக்குகள் பெறும் பணி நடக்கிறது.

    இதனையொட்டி மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் இன்று காலை 7 மணிக்கு தொகுதி முழுவதும் உள்ள ஒவ்வொரு தாலுகா அலுவலகத்தில் இருந்தும் தனி வாகனத்தில் தேர்தல் ஊழியர்கள் அடங்கிய குழு புறப்பட்டு சென்றது. அவர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குகளை பெற்று தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இந்த பணியானது நெல்லை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மானூர், சேரன்மகாதேவி, அம்பை, நெல்லை, பாளை, நாங்குநேரி, வள்ளியூர், திசையன்விளை, ராதாபுரம், ஆலங்குளம், கடையம் உள்ளிட்ட தாலுகா அலுவலகங்களில் இருந்து இன்று தொடங்கியது.

    இந்த பணியில் மண்டல அலுவலர் தலைமையில் மண்டல உதவியாளர், சப்-இன்ஸ்பெக்டர் தரத்திலான காவல்துறையினர், உதவியாளர், நுண்பார்வையாளர், வீடியோகிராபர் ஆகிய 6 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    மேற்கண்ட 2 நாட்களிலும் தபால் வாக்கு செலுத்த முடியாதவர்களுக்கு வாய்ப்பாக வருகிற 10-ந் தேதி மீண்டும் இதே போல் ஊழியர்கள் மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு சென்று வாக்கை பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இந்த பணிகள் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டது. முன்னதாக அனைத்து தாலுகா அலுவலகங்களில் இருந்தும் தபால் வாக்குகளை பெறுவதற்காக எடுத்து செல்லும் பெட்டி அரசியல் கட்சியினரின் முன்னிலையில் திறந்து காண்பிக்கப்பட்டது.

    • விருதுநகர் மாவட்டம் முத்துசாமிபுரத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
    • பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சமும், காயம் அடைந்தோருக்கு தலா ஒரு லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விருதுநகர் மாவட்டம் முத்துசாமிபுரத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே ராமுதேவன்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதற்கிடையே, பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6 ஆண்கள், 4 பெண்கள் அடங்குவர்.

    பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சமும், காயம் அடைந்தோருக்கு தலா ஒரு லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒரு பிக்கப் வேன் சேதமடைந்துள்ளது.
    • திடீர் தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஜார்கண்ட் மாநிலத்தின் கிழக்கு சிங்பர்ம் மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல்வேறு இருசக்கர வாகனங்கள், பிக்கப் வேன், 15-க்கும் அதிக பட்டாசு கடைகள் தீயில் கருகியதாக காவல் துறை தெரிவித்து இருக்கிறது.

    தீ விபத்தை ஒட்டி தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. தீ விபத்தில் 14 பட்டாசு கடைகள், 13 இருசக்கர வாகனங்கள், ஒரு பிக்கப் வேன் சேதமடைந்துள்ளது. தீ விபத்து காரணமாக ரூ. 15 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

    வார சந்தை நாள் மற்றும் திங்கள் கிழமை அன்று துசு பண்டிகை வர இருப்பதை அடுத்து பொது மக்கள் அதிகம் கூடிய நிலையில், திடீர் தீ விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தீ விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என காவல் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். 

    • மூலப்பொருட்கள் கலவை செய்யும் அறையில் இருந்து திடீரென அதிக அளவில் புகை வெளிவந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய, பெரிய பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையையொட்டியும், அடுத்த தீபாவளி பண்டிகைக்காகவும் பட்டாசு தயாரிப்பு தொழில் தற்போது முதலே மும்முர மாக நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில் சிவகாசியை அடுத்த எம்.மேட்டுப்பட்டியில் சுந்தரமூர்த்தி என்பவருக்கு சொந்தமான ஆர்.ஜி.எஸ். பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு 10 அறைகளில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடந்து வந்தது. இதில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். காலை 9 மணிக்கு பணிகள் தொடங்கும் நிலையில் இங்கு வேலைபார்க்கும் தொழிலாளர்கள் ஒவ்வொருவராக தொழிற்சாலைக்கு வந்து கொண்டிருந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை மூலப்பொருட்கள் கலவை செய்யும் அறையில் இருந்து திடீரென அதிக அளவில் புகை வெளிவந்தது. இதைப்பார்த்த தொழிற் சாலைக்கு வந்தவர்கள் உள்பட அனைவரும் அவச ரம், அவசரமாக வெளியேறி னர். அடுத்த ஒருசில விநாடிகளில் அங்கு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறை முழுவதும் இடிந்து தரைமட்டமானது.

    தொழிலாளர்கள் பணிகளை தொடங்கு முன்பாக விபத்து ஏற்பட்டதால் பெரும் அசம்பாவிதமும், உயிர்ச்சேதமும் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற சிவகாசி தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீ அருகில் உள்ள அறைகளுக்கு பரவாமல் கட்டுப்படுத்தினர்.

    முதற்கட்ட விசாரணையில் கடந்த சனிக்கிழமை பட்டாசு உற்பத்தி பணியின்போது எஞ்சிய மூலப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்த நிலையில் அதில் ஏற்பட்ட வேதியியல் மாற்றம் காரணமாக மூலப் பொருட்கள் வெடித்து சிதறியது தெரியவந்துள்ளது. மேலும் இந்த பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சிவகாசியில் தீபாவளி விடுமுறைக்கு பிறகு மீண்டும் பட்டாசு ஆலைகள் இயங்க தொடங்கின.
    • தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் பணிக்கு வந்தனர்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி, வெம்பக்கோட்டை, தாயில்பட்டி, செவல்பட்டி, ஏழாயிரம் பண்ணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிக ளில் 1,070 பட்டாசு ஆலை கள் உள்ளன. இத்தொழிலில் நேரடியாக 5 லட்சம் தொழி லாளர்களும், உப தொழில் கள் மூலம் மறைமுகமாக 3 லட்சம் தொழிலாளர்களும் பயன் அடைந்து வருகின்ற னர்.

    ரூ.6 ஆயிரம் கோடி

    ஒரு நாள் தீபாவளி கொண்டாட்டமே என்றா லும், ஒரு வருடம் அதற்காக உழைத்துக் கொண்டே இருக் கும் ஓய்வறியா மனிதர் களை கொண்ட ஊர் சிவ காசியாகும். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் ரூ.6 ஆயிரம் கோடி விற் பனை இலக்கை சிவகாசி பட்டாசு தொழில் சந்தைபடுத்தியுள்ளது.

    கடைசி நேர பட்டாசு வெடி விபத்துகள், அதிகாரி களின் ஆய்வுகள் பட்டாசு விற்பனையை பாதித்த போதிலும் அதையும் தாண்டி பட்டாசு விற்பனை நன்றாக இருந்ததாக விற்ப னையாளர்கள் தெரிவித்த னர். தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் பட்டாசு ஆலைகளில் கடந்த 11-ந்தேதி உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட்டன. கடந்த சில நாட்களாக பட்டாசு ஆலைக ளில் மராமத்து பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்ட னர்.

    ஆயத்த பணிகள்

    பட்டாசு அறைகளுக்கு வெள்ளை அடிப்பது, செடி கொடிகளை அகற்றுவது, ஆலையை சுத்தப்படுத்துவது போன்ற பணிகள் முழுவீச் சில் நடைபெற்று வந்தன. இந்நிலையில் நேற்று முன் தினம் சுபமுகூர்த்த தினம் என்பதால் ஏராளமான பட்டாசு ஆலைகளில் பூஜை கள் போட்டு உற்பத்தி பணி களை தொடங்கியது.

    இதில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள், தொழி லாளர்கள் கலந்து கொண்ட னர். அடுத்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு விற்பனை நன்றாக இருக்க வேண்டும், விபத்தில்லாமல் பட்டாசு ஆலைகளில் உற் பத்தி நடைபெற வேண்டும் என தொழிலாளர்கள் வேண்டிக்கொண்டனர்.

    கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பண்டிகைகளுக்கான வட மாநிலங்களில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந் தும் பெறப்பட்ட ஆர்டர் களை கொண்டு பட்டாசு உற்பத்தி பணிகளை பட்டாசு ஆலை உரிமையாளர்கள் செய்திருந்தனர். பட்டாசு ஆலைகள் மீ்ண்டும் திறக்கப் பட்டதால் பட்டாசு ஆலை யில் பணிபுரியும் தொழிலா ளர்கள் மகிழ்ச்சியுடன் பணிக்கு வந்தனர்.

    ×