search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "special article"

    • இருவருக்கும் உடல் மட்டுமல்லாது மூளையும் வேறுபடுகிறது.
    • ஆணுக்கும் பெண்ணுக்கும் மூளையின் செயல்திறனில் வேறுபாடுகள் உள்ளன.

    மனிதர்களின் மரபணுவில் 99.9 சதவீதம் அனை வருக்கும் பொதுவானது, அப்படியென்றால் 0.1 சதவீதம் மட்டுமே ஒருவரின் தனித்துவத்தை உறுதிசெய்கிறது. அந்த வகையில் ஆண்களும் - பெண்களும் உடலளவில் மட்டுமே வேறுபட்டவர்கள் என்று பலரும் நினைத்து வருகின்றனர்.

    ஆனால், இருவருக்கும் உடல் மட்டுமல்லாது மூளையும் வேறுபடுகிறது. ஆண்களின் மூளையும், பெண்களின் மூளையும் வெவ்வேறு கோணங்களில் செயலாற்றுகின்றன என்பதே மருத்துவ உலகத்தின் கூற்று.

    ஒரு பெண், ஆண் போல் வேலை செய்வது கடினம், அதேபோல் ஓர் ஆணால், பெண்ணைப்போல் செயல்படுவதும் கடினம். இயற்கையின் படைப்பில் பெண் என்பவள் அனைவரையும் அரவணைத்துச் செல்லக்கூடியவள்.

    ஆண் என்பவன் அளவாகப் பேசிக் காரியத்தைச் செய்து முடிப்பவன். இதற்குக் காரணம் ஆண் மூளையும், பெண் மூளையும் அமைப்பிலும், செயல்திறனிலும் வேறுபடுவதே ஆகும். என்ன அந்த வேறுபாடு, என்பதை இப்பகுதியில் பார்ப்போமா?

    யார் அறிவானவர்?

    பெண்ணின் மூளையைவிட ஆணின் மூளை 10 சதவீதம் (பெண் மூளை 1350கிராம், ஆண் மூளை 1450கிராம்) பெரியதாக உள்ளது. அதாவது ஆண் மூளை, பெண் மூளையைவிட 100-150 கிராம் எடை அதிகம் உள்ளது. அதற்காக ஆண், பெண்ணை விட அறிவானவன் என்று நீங்கள் யாரும் தப்பு கணக்குப் போட்டு விட வேண்டாம்.

    அறிவுத்திறன் என்பது மூளையில் உள்ள மேடுபள்ளங்களைப் பொறுத்துத்தான் உள்ளது. நாம் நம் மூளையின் 100 சதவீதத்தில் 5முதல் 10 சதவீதம் மட்டுமே பயன்படுத்து கிறோம். ஒவ்வொருவரும் தன் மூளையில் எவ்வளவு விழுக் காடுகள் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கண்டறிய ஆராய்ச்சிகள் நடந்து கொண்டுதான் உள்ளன.

    சிலர் பிறவியிலேயே புத்திக்கூர்மை உள்ளவர்களாக இருப்பார்கள். எனவே இருபாலரில் எவர் வேண்டுமானாலும் அறிவாளியாக இருக்கலாம்.

    பெண் ஏன் அதிகம் பேசுகிறாள்?

    பெண்களால் ஒரு நாளைக்கு 4000 முதல் 6000 சொற்களை எளிதில் பேச முடியும். ஆனால், ஆண்களால் ஒரு நாளைக்கு 2000 முதல் 4000 சொற்களே பேச முடியும். பேச்சுத் திறனுக்கான இடப்பக்க மூளையில் உள்ள பகுதி பெண்ணுக்கு நன்கு வளர்ச்சி அடைந்துள்ளதே இதற்குக் காரணம்.

    ஆனால் ஓர் ஆண் அளவாகத்தான் பேசுவான், எல்லாப் பெண்களும் கண்டிப்பாக அதிகமாகத்தான் பேசுவார்கள் என்று 100 சதவீதம் கூறுவது கடினம்தான். விதிவிலக்கு என்பது இதற்கும் பொருந்தும்.

    ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்பவர்கள் ஆண்களா? பெண்களா?

    நம் மூளையின் வலப்பக்க அரைக்கோளம் இடப்பக்க உடலையும், இடப்பக்க அரைக் கோளம் வலப்பக்க உடலையும் இயக்குகின்றன.

    இந்த இரண்டு அரைக் கோளங்களையும் இணைப்பது கார்பஸ் கலோசம் எனப்படும் கமிசுரல் பைபர். இந்த பைபர் ஆண்களைவிடப் பெண்களுக்கு 30 சதவீதம் அதிகமாக இருக்கும். இதனால் தான் ஒரு பெண் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யக் கூடிய திறனைப் பெற்றிருக்கிறாள்.

    ஓர் ஆணால் ஒரே நேரத்தில் ஒரு வேலையைத்தான் முழுக்கவனத்துடன் திறம்படச் செய்ய முடியும். எடுத்துக்காட்டுக்கு ஆண்கள், குறிப்பிட்ட ஒரு பணியை மையமாகக் கொண்ட வேலைகளில் (பொற்கொல்லர்) சிறந்து விளங்குகிறார்கள்.

    ஒரு வேலையை இருபாலரும் செய்கையில் இருவருக்கும் மூளையில் எட்டு பகுதிகள் வேலைசெய்யும். எந்த எட்டுப் பகுதிகள் என்பது இருவருக்கும் மாறுபடுகிறது.


    பெண்கள் சிக்கல்களை ஏன் பெரிதுபடுத்துகிறார்கள்?

    பெண்களின் மூளையில் உள்ள பிரீப்ரான்டல், ஆர்பிடோ பிரான்டல், சுப்பீரியர் டெம்போரல், லேட்டரல் பிரைட்டல் கார்டெக்ஸ் மற்றும் இன்சுலா போன்ற பகுதிகள் ஆண்களைவிடப் பெண்களுக்கு, சற்றுப் பெரிய அளவில் உள்ளது.

    மேலும் மூளையில் உள்ள ஒரு நரம்பணு மற்றொரு நரம்பணுவுடன் இணைந்திருக்கும் விகிதம் பெண்களுக்கு 30 சதவீதம் அதிகம், எனவே தான் பெண்கள் ஒரு செயலைப் பல கோணங்களில் ஆராய்ந்து பார்த்துச் சிந்திக்கக் கூடியவர்கள், அதனால் சில நேரங்களில் சிக்கல்களைப் பெரிதாக்கிவிடுகிறார்கள்.

    சிக்கல்கள் என்று வரும்போது, பெண்கள் அவை எப்படி, எங்கிருந்து வந்தன? என்று சிந்திப்பார்களே தவிர அதற்கு என்ன தீர்வு? என்று சிந்திக்க மாட்டார்கள். ஆனால் ஆண்கள் அதற்கான தீர்வை எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள். ஆண்களுக்குச் சட்டென முடி வெடுக்கும் திறன் பெண்களை விட அதிகம்.

    வாகனம் ஓட்டு வதில் வல்லவர்கள் ஆண்களே ஏன்?

    ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு ஆண்களால் எளிதில் சென்று வரமுடியும். இதற்கான இடம் மூளையில் பரைட்டல் (Parietal) பகுதியில் உள்ளது, இந்தப் பகுதி இடங்களையும், பாதை களையும் நினைவில் வைத்துக் கொள்வ தற்கான பகுதியாகும்.

    ஆண்களுக்குப் பெண்களைவிட இந்தப்பகுதி நன்கு வளர்ந்துள்ளதுதான் இதற்குக் காரணம். அதனால் பெண்கள் வெளியிடங்களுக்குச் சென்று வருவது என்பது ஆண்களைப் போல் எளிதான செயல் அல்ல.

    ஆடைகளைத் தேர்ந்தெடுப்பதில் பெண்கள் ஏன் அதிகநேரம் எடுத்துக் கொள்கிறார்கள்?

    கண்களில் கூம்புகள் எனப்படும் ஓர் அணு ரெட்டினா வில் உள்ளது. இது ஆண்களை விட 30 சதவீதம் அதிகமாகப் பெண்களுக்கு உள்ளதால், ஆண்களை விடப் பெண்களால் வண்ணங்களை எளிதில் பிரித்தறிய முடியும்.

    எனவே தான் நிறங்களில் உள்ள சிறிய மாறுதல் களைக் கண்டு பிடிப்பதில் மிகவும் சிறந்தவர்களாகப் பெண்கள் இருக்கிறார்கள். அதனால் தான் ஆடைகளைத் தேர்ந்தெடுப்பதில் பெண்கள் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார்கள்.


    வாழ்க்கைத் துணையை ஆண்கள் எப்படித் தேர்ந்தெடுக்கிறார்கள்?

    ஆண்களின் மூளை அமைப்பு, கண்களின் காட்சி களுக்கு முதன்மை அளிக்கிறது. எனவேதான் ஆண்கள் அழகான பெண்களையே வாழ்க்கைத் துணையாக ஏற்க ஆசைப்படுகிறார்கள். ஆனால் பெண்களுக்கோ காட்சிகளினால் கிடைக்கும் மகிழ்ச்சியைவிட, மனம் விட்டுப் பேசுவதாலும், நன்கு பேசும் ஆண்களினாலும் அதிக மகிழ்ச்சி கிடைக்கிறது.

    அதனாலேயே ஓயாது பேசிக்கொண்டு இருக்கும் ஆண்களைப் பெண்களுக்கு அதிகம் பிடிக்கிறது. இதற்கு ஆண்கள் அழகாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.


    பெண்கள் உணர்வுகளுக்கு முதன்மை கொடுப்பது ஏன்?

    பெண்களின் மூளையில் அதிக கிரேமேட்டர் இருப்பதற் கான சான்றுகள் உள்ளன. கிரேமேட்டரில் உள்ள நரம்பணுக்கள் உடல் இயக்கத்திற் கானவை, மேலும் இது தசைக் கட்டுப்பாடு, ஐம்புலன்கள் மற்றும் உணர்ச்சி களுடன் தொடர்புடைய மூளையின் பகுதியாகவும் இருக்கிறது.

    மேலும் மூளைக்குள் உள்ள தொடர்புகளை ஆய்வு செய்யும்போது, பெண்கள் வலுவான இணைப்புகளைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது, இது சிறந்த உள்ளுணர்வு, சிந்தனை, பகுப்பாய்வு மற்றும் முடிவுகளை எடுப்பதற்கு வழிவகுக்கிறது.

    எனவே தான் பெண்கள் எந்த வேலை செய்தாலும் உணர்வு நிறைவுடன் செய்ய முயல்வார்கள். பிறந்தநாள், திருமண நாள் ஆகியவற்றை நன்கு நினைவில் வைத்திருப்பார்கள். அவற்றைக் கொண்டாட வேண்டும் என்ற ஆர்வம் அதிகம் இருக்கும்.

    இப்படி இருபாலருக்கும் மூளை வேறுபடும் காரணத்தால், இருவரும் தங்களை முழுமையாகப் புரிந்துகொள்ள இயலாமல் தடுமாறுகின்றனர். ஆணுக்கும் பெண்ணுக்கும் மூளையின் செயல்திறனில் பல முதன்மையான வேறுபாடுகள் உள்ளன என்பதைப் புரிந்து கொண்டால் குடும்பத்தில் ஏற்படும் பல சிக்கல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கலாம் என்றே நினைக்கிறேன். 

    • நட்சத்திரங்கள், திதிகளுக்கு சில தனிச்சிறப்பு உள்ளது.
    • குறிப்பிட்ட திதிகளுக்கு மனித வாழ்வை வளமாக்கும் அதீத சக்தி உள்ளது.

    உலகில் உள்ள அனைத்து ஜீவன்களும் கர்ம வினைகளை தீர்க்கவே ஜனனம் எடுக்கிறது . கர்ம வினையைக் குறைப்பதற்கு பல்வேறு விதமான வழிகளை நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள் வருடத்தின் சில குறிப்பிட்ட மாதம் மற்றும் நாட்கள், நட்சத்திரங்கள், திதிகளுக்கு சில தனிச்சிறப்பு உள்ளது.

    குறிப்பாக சில குறிப்பிட்ட திதிகளுக்கு மனித வாழ்வை வளமாக்கும் அதீத சக்தி உள்ளது. பஞ்சாங்கத்தின் முதல் அங்கமான திதி சில குறிப்பிட்ட வழிபாட்டிற்கு மிக உகந்ததாகும்.

    பஞ்சபூதங்களில் நீர் தத்துவத்தை குறிப்பது திதி. திதி என்பது வானில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே உள்ள தூரமாகும். ஒருவரின் உணர்ச்சிகள், ஆசைகள் மற்றும் உறவுமுறை பேணுவதில் அவருக்கு உண்டான தகுதியை சுட்டிக்காட்டும். திதி சந்திரனின் நாளாகும்.

    பஞ்சாங்கத்தில், குறிப்பிட்ட நாளில் எந்த திதி என்று கொடுக்கப்பட்டிருக்கும் அந்த திதி எத்தனை நாழிகை, விநாடி வரை அந்நாளில் வியாபித்திருக்கும் என்றும் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த திதிகளுக்கு ஏற்ற காரியங்களில் ஈடுபடுவது சிறப்பு.

    ஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்கு உகந்தது மட்டுமல்லாமல் இந்த மாதத்தின் திதிகள், நட்சத்திரங்கள், கிழமைகள் மனித குலத்திற்கு புண்ணிய பலன்களை வாரி வழங்கும் வல்லமை படைத்தவைகள். குறிப்பாக ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடி வெள்ளிக்கிழமை, ஆடி செவ்வாய் கிழமை, வரலட்சுமி நோன்பு, நாக சதுர்த்தி, கருட பஞ்சமி, போன்றவைகள் வழிபாட்டின் மூலம் பிறவிப் பிணியை தீர்க்க சிறந்த நாட்களாகும்.

    பஞ்ச என்பது ஒரு வடமொழி சொல்லாகும். பஞ்ச என்றால் ஐந்து என்று அர்த்தம். அமாவாசை மற்றும் பவுர்ணமி நாளிலிருந்து ஐந்தாவது நாள் பஞ்சமி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் பஞ்சமியை சுக்கில பட்ச பஞ்சமி என்றும், பவுர்ணமிக்கு அடுத்து வரும் பஞ்சமி தினம் கிருஷ்ண பட்ச பஞ்சமி என்றும் அழைக்கப்படுகிறது.

    பஞ்சமி திதி என்பது ஒரு மகத்தான திதியாகும். நாம் இந்த கட்டுரையில் நாக சதுர்த்தி, கருட பஞ்சமி பற்றிய சில முக்கிய தகவல்களைப் பார்க்களாம்.

    நாக தோஷம்

    நவகிரகங்களின் இயக்கமே மனிதன் உள்பட அனைத்து ஜீவராசிகளின் வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது. இதில் உருவம் உள்ள ஏழு கிரகங்களைக் காட்டிலும் உருவமற்ற இரண்டு நிழல் கிரகங்களாகிய ராகுவும், கேதுவுமே மனித வாழ்வை தீர்மானிக்கின்றன.

    ஆண்டியை அரசனாக்கும் வல்லமை ராகுவுக்கும், அரசனை ஞானியாக்கும் ஆற்றல் கேதுவுக்கும் உண்டு. ராகு தான் அமர்ந்த பாவகத்தின் செயலை பிரம்மாண்டப்படுத்தும். கேது சுருக்கும். ராகு,கேதுவினால் தான் ஒருவர் மிகப் பெரிய யோகம் அல்லது அவயோகத்தை சந்திக்கின்றார்கள்.

    ஜாதகத்தில் ராகு-கேது செயல்படும் விதம்

    மனிதர்களுடைய வாழ்வில் மாற்றங்களை வழி நடத்தக் கூடிய கர்ம வினை அதிகாரிகளாக ராகு,கேதுக்களை கூறலாம்.

    ஏற்கனவே கடந்து வந்த ஜென்மத்தில் நடந்த நல்ல /கெட்ட சம்பவங்களையும் தற்பொழுது வாழ்ந்து கொண்டு இருக்கிற ஜென்மத்தில் நடக்கும் அனைத்து நல்ல/கெட்ட செயல்களுடன் இணைத்து புதிய பதிவுகளை பதிவு செய்யும் வினைப் பதிவாளராகவும், அதற்கேற்றபடி வினைகளைத் தூண்டும் வினை ஊக்கியாகவும் செயல்படுகின்றனர்.

    மனிதர்களின் மரபியல் தன்மையான பாவ புண்ணியங்களை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் இவர்கள் ஒவ்வொரு பிறப்பிலும் வேறு வேறு உடலில் இருக்கும் ஆன்மாவிற்கு அதன் அலைவரிசைக் கேற்ப வினைகளின் நன்மை தீமைகளை அனுப்பி அவ்வுடலை அனுபவிக்க செய்பவர்கள்.

    பூமிக்கு வரும் மற்ற கிரகங்களின் கதிர் வீச்சுகளையும் தடுக்கும் ஆற்றலை பெற்ற இவர்கள் ஒரு ஜாதகரின் மரபு வழி செய்திகளை செல்களின் மூலம் கொண்டு வருவதும் செயலாக்கம் செய்யும் வலிமை படைத்தவர்கள்.

    அதனால் தான் ஜோதிடத்தில் தந்தை வழி பாட்டன் பாட்டிக்கு ராகுவையும் தாய்வழிப் பாட்டன் பாட்டி கேதுவையும் காரகமாக கூறப்படுகிறது.

    ராகு தந்தை வழி முன்னோர்கள் செய்த பாவங்களையும், கேது தாய் வழி முன்னோர்கள் செய்த பாவங்களையும் காட்டுகிறது.

    அதாவது கேது சந்திரனின் பிம்பம் என்பதால், தாய் வழி பாவத்தை குறிக்கிறார். ராகு சூரியனை பாதிப்பதால், தந்தை வழி முன்னோர்களின் பாவங்கள் என்பதை அறியலாம். அதனால் தான் மீள முடியாத வினைப்பதிவில் இருந்து விடுபட சர்ப்ப வழிபாட்டையும், கருட வழிபாட்டை ஜோதிட முன்னோடிகள் வலியுறுத்தி வந்தனர்.

    சர்ப்ப தோஷத்தால் ஏற்படும் இன்னல்களை நீக்கும் வலிமை கருட பகவானுக்கு மட்டுமே உண்டு. ஆடி மாத புகழ்பெற்ற விசேஷங்களில் கருட பஞ்சமியும், நாகபஞ்சமியும் ஒன்றாகும்.

    ஆடி மாதம், வளர்பிறை சதுர்த்தியில் நாகசதுர்த்தியும், வளர்பிறை பஞ்சமியில் கருட பஞ்சமியும் கொண்டாடப்படுகிறது. பல ஜென்மங்களாக தொடரும். கடுமையான தோஷத்திலிருந்து விடுபடுவதற்கு உகந்த வழிபாடு நாக சதுர்த்தி பூஜை மற்றும் கருடபஞ்சமி பூஜையாகும்.

    நாக தோஷம் யாருக்கெல்லாம் இருக்கிறதோ, அவர்களின் பார்வையில் அடிக்கடி நாகம் தென்படும். அதீத திருமணத்தடை, கணவன். மனைவி பிரிவினை, புத்திர பாக்கியமின்மை, பிள்ளைகளால் மன உளைச்சல், தீராத நோய், பரம்பரை வியாதி, குடும்பத்தினர் ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்வது போன்ற பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவார்கள்.

    நாகசதுர்த்தி கருடபஞ்சமி வழிபாடு கணவன், மனைவி ஒற்றுமை, குடும்ப முன்னேற்றம், குழந்தைகள் நலனுக்காகவும் பெண்கள் கடைபிடிக்க வேண்டும்.

    நாக சதுர்த்தி 8.8.2024- வியாழக்கிழமை (ஆடி.23)

    அமாவாசைக்கு 4-ம் நாளான சதுர்த்தியன்று நாக சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நாக தேவதைகளை வழிபட வேண்டும்.

    இந்துக்களின் வழிபாட்டு முறைகளின் படி நாகங்கள் தெய்வங்களாக வழிபடக் கூடியவையாகும். நாகங்களை துன்புறுத்துவதும், கொல்வதும் மிகப் பெரிய பாவமாகும்.

    ஆனால் நாமோ, நம்முடைய முன்னோர்களால் தெரியாமல் யாருக்காவது துன்பம் ஏற்படுத்தி இருந்தால் அது ஜாதகத்தில் நாக தோஷம், சாபமாக ஏற்பட்டிருக்கும். கடுமையான நாக தோஷம் உள்ளவர்கள் அரசமரமும் வேப்பமரமும் உள்ள இடத்தில் நாகங்களை சிலையாகச் செதுக்கி பிரதிஷ்டை அபிஷேகம் செய்து பூஜிக்கவேண்டும். மற்றவர்கள் அரசமரத்தடியில் உள்ள சர்ப்ப சிலைக்கு நாக சிலைகளுக்கு பால், தண்ணீர் அபிஷேகம் செய்ய வேண்டும்.

    பால் ஊற்றி விட்டு தண்ணீர் ஊற்றி சிலையை சுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகு நாகர் சிலை மஞ்சளை தலை முதல் வால்முடிய தடவி, சந்தனம், குங்குமத்தினால் அலங்கரித்து, பூமாலைகளை அணிவித்து பஞ்சினால் செய்த கோடிதந்தியம், வஸ்திரம் அணிவித்து, மஞ்சள், சந்தனம், குங்குமம் புஷ்பங்களினால் அலங்கரித்து, பூ அட்ஷதையுடன் சர்க்கரை பொங்கல், துள்ளு மாவு தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, படைக்க வேண்டும். கற்பூர ஆரத்தி காட்டி பூஜை செய்தால் அனைத்து விதமான தடைகளும் விலகும்.

    இந்த நாளில் பாம்பு இனங்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் நிலத்தை தோண்டுவது, கூர்மையான பொருட்களை பயன்படுத்துவது ஆகியவற்றை செய்யக் கூடாது. இந்த நாளில் மகா மிருத்யுஞ்ஜய மந்திரத்தை ஜெபிப்பதால் சர்ப்ப தோஷம் விலகும், ருத்ராபிஷேகம் செய்வதால் சிவனின் அருள் கிடைக்கும்.

    நாகராஜ துதியை நாக பஞ்சமி மட்டுமின்றி அனைத்து நாட்களும் காலை, மாலை இருவேளையும் மூன்று முறை சொல்லி வந்தால் நாக தோஷங்கள் விலகும்.

    குடும்பத்தில் நிம்மதி பெருகும். அத்துடன் கணவன்-மனைவி ஒற்றுமை மற்றும் குழந்தைகளின் நலன் மேம்படும். தொழில் வளர்ச்சி, நல்ல வேலை வாய்ப்பு சிறப்பாக இருக்கும். கடன் தொல்லை குறையும். ஆயுள், ஆரோக்கியம் மேம்படும். விபத்து கண்டம் நீங்கும். நாக தோஷத்தால் தடைபட்ட திருமணம், குழந்தை பாக்கியம் கைகூடும்.

    9.8.2024-ஆடி 24-வெள்ளிக்கிழமை கருடபஞ்சமி

    அமாவாசைக்கு ஐந்தாம் நாளான பஞ்சமி திதியான அன்று கருட பஞ்சமியும் நாக பஞ்சமியும் அனுஷ்டிக்கப்படுகிறது.

    மற்றவர்களுக்கு தீங்கிழைப்பவர்கள், தாங்கள் செய்த தீமையின் பலனை தாங்கள் இறந்த பின்பு அனுபவிப்பார்கள். எந்த தவறுக்கு என்ன தண்டனை என்பதை கருடனுக்கு இறைவன் போதித்ததே 'கருட புராணம்' ஆகும்.

    கருடன், மகா பலம் உடையவர். அனைத்து திசைகளிலும் வேகமாகவும், உயரமாகவும் பறக்கும் ஆற்றலைக் கொண்டவர். சர்ப்பங்களைக்கூட விழுங்கும் ஆற்றலைப் பெற்றவர். மகாவிஷ்ணுவின் தலங்களில் 'பெரிய திருவடி' என்று போற்றப்படுபவரே கருடாழ்வார்.

    மகா விஷ்ணு பள்ளிகொள்ளும் ஆதிசேஷனையும், அவருடைய வாகனமாகிய கருடாழ்வாரையும் வழிபட சிறந்த நாள் நாக, கருட பஞ்சமி. கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் செய்வது இன்பமான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.

    ஆண் வாரிசு இல்லாதவர்கள் இந்த நாளில் விரதமிருந்து வழிபட்டால் கருடனைப் போல பலசாலியான, புத்திசாலியான, ஆண் வாரிசு கிடைக்கப் பெறுவர். பெண்கள் கருட பஞ்சமியன்று கவுரி அம்மனை நாகவடிவில் அலங்கரித்து, நோன்பு இருந்து பூஜை செய்வது மிகவும் நல்லது.

    அதிகாலை நேரத்தில், கருடனை தரிசித்தால் நினைத்த காரியம் நடக்கும். அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று கருடனை வழிபட்டு வர நாக தோஷம் விலகும்.

    கருட பஞ்சமியன்று விரதமிருந்து கருட வழிபாடு செய்ய தீர்க்க முடியாத கோர்ட்டு , கேஸ் பிரச்சனை, சட்ட நெருக்கடி, கடன் தொல்லை, உயிர்கொல்லி நோயான கேன்சரால், பாதிக்கப்பட்டவர்கள், விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கீழ்காணும் சுலோகத்தை 108 முறை சொல்லி கருடரை வழிபட தோஷங்களில் இருந்து விடுபடலாம்.

    சுபபலன் இரட்டிப்பாகும். விபத்து, நோய் நீக்கும், மருத்துவராகவும், பட்சிகளின் ராஜாவாகவும் திகழும் கருட பகவானுக்கு கருட ஜெயந்தி, கருட பஞ்சமி அன்று கருட ஹோமம் சொல்வது நலம்.

    ஸ்ரீ ஆதிசேஷன் காயத்ரி

    ஓம் சகஸ்ர ஷீர்ஷாய வித்மகே

    விஷ்ணு தல்பாய தீமகி

    தந்நோ ஆதிசேஷ பிரசோதயாத்.

    கருட காயத்ரி

    தத்புருஷாய வித்மகே

    சுவர்ண பட்சாய தீமஹி

    தந்நோ கருட பிரசோதயாத்.

    கருட தண்டகம்:

    எம்பெருமானுக்கு வாகனமாக இருக்கும் பட்சி ராஜனாகிய கருடனைப் பற்றி வேதாந்த தேசிகர் அருளியது இந்த ஸ்தோத்திரம்.

    இந்த கருட தண்டகத்தை பாராயணம் செய்து வந்தால், ஒலிக்க செய்து கேட்டால் எதிரிகள் தொல்லை விலகும். நோய் நொடிகள் அண்டாது. விஷ ஜந்துக்களால் எந்த விதமான துன்பமும் ஏற்படாது. ஆகாயத்தில் கருடனைப் பார்ப்பதும் அவருடைய குரலைக் கேட்பதும் நல்ல சகுனம்.

    எம்பெருமான் பள்ளி கொள்ளும் ஆதி சேஷனையும், அவரைத் தாங்கிச் செல்லும் வாகனமாகிய கருடாழ்வாரை வேண்ட சகல சவுபாக்கியம் கிடைக்கும். பெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கை.

    இந்த நாளில் குரு ஹோரையில் வானத்தை பார்த்து, கருடனை நினைத்து வழிபட வேண்டும். வீட்டில் உள்ள குல தெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத் திற்கு இளநீர் வெட்டி வைத்து, அதோடு வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை கலந்து நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும். பிறகு வீட்டில் உள்ளவர்களுக்கு அதை பிரசாதமாக வழங்கலாம். இது நாகதேவரின் நாளாகும்.

    இந்த நாளில் வாகனம் வாங்குதல், புதிய தொழில் தொடங்குதல், விஷத்தை முரித்தல், மருத்துவம் செய்தல், அறுவை சிகிச்சை செய்தல், மற்றும் எல்லாவித சுபகாரியங்களையும் செய்யலாம். சீமந்தம் செய்வதற்கு சிறந்த திதி பஞ்சமி திதியாகும்.

    இந்த நாளில் மருந்துகள் சாப்பிட நோய்கள் விரைவில் மறையும். பல தலைமுறை சாபத்தால் அவதிப்படுபவர்கள் நாக சதுர்த்தி, கருட பஞ்சமி வழிபாட்டை கடைபிடித்து பயன் பெற நல்வாழ்த்துகள்.

    • முழு ஈடுபாட்டுடன் செய்யும் போது ஏமாற்றம் என்ற வலி இருக்காது.
    • மற்றவரை நடத்தும் விதத்தில் இருந்தே ஒருவரை நாம் கணித்து விட முடியும்.

    இதை எல்லாம் செய்கிறீர்களா?

    * நீங்கள் ஒருவரிடம் ஏதோ ஒரு கேள்வி கேட்கிறீர்கள். அவர் பாதி பதில் கூறி மீதியினை கூற முற்படும் போது அவசரப்படாதீர்கள். வேகமாய் குறுக்கிடாதீர்கள். அவர் முழுமையாய் சொல்லட்டும் அல்லது முயற்சியாவது செய்யட்டும். அதற்குள் படபடவென பேசி அவரது தன்னம்பிக்கையினை குலைத்து விடாதீர்கள். அப்படி செய்தால் அது அவரது வாழ்வினை கொலை செய்வதற்குச் சமமாகும்.

    * ஒருவருக்கு அவரது பெயர் மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கும். ஆகவே பெயர் சொல்லி கூப்பிடக் கூடிய உறவுகளை, நட்புகளை அவர்களது பெயரை சொல்லி கூப்பிடுங்களேன்.

    * எதிர்பார்ப்பு இல்லாமல் படிப்போ, வேலையோ, உதவியோ எதுவாயினும் முழு ஈடுபாட்டுடன் செய்யும் போது ஏமாற்றம் என்ற வலி இருக்காது.

    * ஒருவர் மற்றவரை நடத்தும் விதத்தில் இருந்தே அவரை நாம் கணித்து விட முடியும்.

    * பலருக்கு பிடித்த ஒரே பேச்சு அவர்களைப் பற்றி அவர்களே சுய தம்பட்டம் அடித்து கொடியேற்றி பறக்க விடுவதுதான். அனைவரும் இந்த பழக்கத்தினை விட்டு விடுவோமாக.

    * முடிந்தவரை பிறரை எந்த உதவியும் கேட்காது இருப்பது நமக்கு கடவுள் கொடுத்த அதிர்ஷ் டம் தான். ஆனால் அதனையும் மீறி ஒருவரிடம் ஒரு உதவி கேட்க நேரிடும் போது எனக்கு பண உதவி தேவை என்று சொல்வ தினை விட 'வணக்கம்' என கை கூப்பி கூறுவதே சிறந்தது. என்றாலும் எனக்கு இந்த உதவி தேவை. ஏனென்றால்....

    * என் பிள்ளைக்கு பணம் கட்ட வேண்டும்

    * என் தாய்க்கு உடல் நலம் சரியில்லை என்று சுருக்கமான முறையில் காரணத்தினையும் கூறுங்கள்.

    * சத்தமாக, வேகமாக, படபடவென்று பேசுவது எதற்காகவோ நீங்கள் அச்சப்படுவது போல் இருக்கும்.

    * நிதானமாய், அமைதியாய் பேசுவது உங்கள் தன்னம்பிக்கையினை காட்டும்.

    * கேள்வியை முடிப்பதற்குள் அடித்து, பிடித்து, குறுக்கிட்டு பதில் சொல்வது அநாகரீகம் மட்டுமல்ல. உங்கள் மனமும், சொல்லும் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்பதனைக் காட்டும்.

    * வாயைத் திறந்து, தட்டி, உருண்டு சிரிப்பது என அடிக்கடி அல்லது எப்போதும் இப்படி செய்தால் கொஞ்சம் கூட மனக் கட்டுப்பாடு இல்லை என்பதனை வெளிப்படுத்தும். உங்கள் கண்கள் சிரித்தாலே போதும். அழகாய், மென்மையாய் காட்டும்.

    * அதற்காக பிரச்சினைகள் வரும்போது அமைதியாய், மென்மையாய் இருக்க முடியாது. உண்மையான உங்கள் பேச்சினை சொல்லத்தான் வேண்டும். அதற்காக கத்த, கூச்சலிட வேண்டாம். நீங்கள் கண்ணாடி அல்ல நொறுங்குவதற்கு. இரும்பு, வளைக்க முடியாத இரும்பு. இந்த மனநிலை அன்றாடம் தியானம் செய்பவருக்கும், உடற்பயிற்சி செய்பவருக்கும் இருக்கும்.

    இவை அனைத்தும் ஒருவரைப் பற்றி முழுமையாய் நீங்கள் அறிந்து கொள்வதற்கும், நீங்கள் வாய் திறந்து பேசாமலே உங்கள் கருத்தினை மற்றவர்கள் புரிந்து கொள்வதற்கும் உதவும்.

    பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டியது

    பல இளம் வயதினர் தங்கள் இளம் வயதினில் ஏற்பட்ட பாதிப்புகளால் பலவாறு பாதிக்கப்படுகின்றனர் என்று ஆய்வுகள் கூறுகின்றன. பயம், முரட்டுத்தனமான நடவடிக்கை என பல விதங்களில் பாதிக்கப்படுகின்றனர்.

    * சிறு சிறு விஷயங்களுக்கெல்லாம் பீதி அடைகின்றனர். எப்போதும் பட படப்புடன் இருக்கின்றனர். இவர்களால் சரியான முடிவுகளை எடுக்க முடிவதில்லை.

    * துணிவு இருக்காது. எதற்கும் பயந்து உள்வாங்கி விடுவார்கள்.

    * பொது நிகழ்வுகளில் பங்கேற்க கூட மாட் டார்கள்.

    * தூங்கி எழுந்தது முதல் தூங்கப் போகும் வரை டென்ஷனாக மட்டுமே இருப்பார்கள்.

    * தனக்குத் தானே பாதிப்புகளை ஏற்ப டுத்திக் கொள்வார்கள். ஆக பெற்றோர்களே, பிள்ளைக்கு சொத்து கொடுப்பது பெரிய முக்கியம் அல்ல. அவர்கள் மீது உரிய கவனத்தினை கொடுத்து மன நலத்தோடு வளர்ப்பதே சிறந்த செயல்.

    நம்மை பாதிக்கும் சில நபர்கள்

    * சில பேரை கவனித்து இருக்கின்றீர்களா? சாதாரண விஷயங்களுக்கு கூட ரொம்ப கஷ்டம் போல் டிராமா போடுவார்கள். அவர்கள் வந்தாலே அவர்களது புலம்பல் நம்மை சக்தியற்று ஆக்கிவிடும். கண்டிப்பாக இத்தகு மனிதர்களை தவிர்த்துவிட வேண்டும்.

    * சில நபர்கள் எந்த இடத்திற்கு வந்தா லும் சரி அந்த இடத்தில் ஆக்கப்பூர்வமாக நடக்கும் வேலைகளில் ஏதோ குற்றம், குறை கூறி அந்த வேலையினை செய்பவர்களை குலை நடுங்க செய்து விடுவார்கள். மூளை, சிந்தனை, செயல் என அனைத் திலும் நெகடிவ் மட்டுமே இருக்கும். நன்றாக இருக்கும் ஒருவர் வாழ்வினை சீரழிக்க இவர்கள் மட்டுமே போதும். இவர்களை கண்டால் ஓடி விடுங்கள்.

    * சில நொடி கூட வாய் மூடாது பேசியே அடுத்தவரின் மண்டையினை குடைந்து விடுவார்கள். இவர்கள் போன பிறகு அடுத்தவர் சக்தி இன்றி சுருண்டு விடுவார். இது நமக்குத் தேவையா?

    * சிலர் ஊர் வம்பின் மொத்த உருவமாய் இருப்பார்கள். அவர்களை பார்த்தால் காதில் பஞ்சினை வைத்து அடைத்து ஒரு ஓட்டம் பிடியுங்கள்.

    * நச்சுத்தன்மை மனதில் கொண்டவர்கள் நண்பர்களாக இருந்தாலும் வேண்டாம்.

    ஆக இதில் இரண்டு விஷயங்களை நாம் கற்றுக் கொள்கிறோம். ஒன்று இத்தகையோரை நாம் தவிர்க்க வேண்டும். மற்றொன்று இப்படியெல்லாம் நாமும் இருக்கக் கூடாது என்பதுதான்.


    படித்தேன்-பகிர்ந்து கொள்கிறேன்

    நம் வாழ்க்கையில் இவர்களையெல்லாம் தவிர்த்து விட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இது வேறு கண்ணோட்டத்தின் வெளிப்பாடு.

    உப்பு மூட்டை மனிதர்கள்

    இந்த நபர்கள் தான் பழகும் மனிதர்களின் ஆற்றலை குறைத்து விடுவார்கள். நம் நேரத்தினை வீணடிப்பவர்கள். தனக்கு மட்டுமே பிறர் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பவர்கள். மற்றவர் வளங்களை சுரண்டுபவர்கள்.

    ஆதிக்க மனிதர்கள்

    இவர்களுக்கு அதிக பெருமை வேண்டும். பிறரை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புவார்கள். அப்படியே செய்பவர்களும் கூட.

    * கொசு மனிதர்கள்: இவர்கள் எதிர்மறை எண்ணங்கள், செ யல்கள் கொண்டவர்கள். ஆனால் பிறரிடமிருந்து நன்மைகளை பெற்றுக் கொண்டு அவர்களுக்கு எதிர்மறையினையே செய்வார்கள். இவர்களி டம் எந்த நல்ல விஷயங்க ளும் கிடையாது. ஆனால் பிறரிடம் உள்ள நன்மைகளை எடுத்துக் கொள்வார்கள்.

    முதலை மனிதர்கள்

    இவர்கள் பாசாங்குக்காரர்கள். அடுத்த வரது ரகசியங்களை அறிந்துகொள்ள அதிக ஆர்வம் கொண்டவர்கள். ஒருவருக்கு பிரச்சினை நேரும் பொழுது அவர்கள் ரகசியங்களை அவர்களுக்கு எதிராக பயன் படுத்துவார்கள். கொடியவர்கள், பொய்யர்கள், முதுகில் குத்துபவர்கள்.

    பச்சோந்தி மனிதர்கள்

    இந்த மனிதர்கள் பொறாமை கொண்டவர்கள். உங்களை கண்காணித்து உங்கள் வெற்றிகளை பாராட்டாமல், ஆதரிக்காமல் இருப்பார்கள். தோல்விகளை பெரிதுப்படுத்துவார்கள். உங்களை குற்ற உணர்வில் கூட தள்ளி விடுவார்கள்.

    கனவுக் கொலையாளிகள்

    இத்தகு மனிதர்கள் பிறரின் தோல்விகளை விரும்பும். ரசிக்கும் விகார மனம் கொண்டவர்கள். பிறருக்கு எதிலும் தீர்வுகளை பிறருக்கு விரும்பாதவர்கள். சிக்கலை உண்டாக்குபவர்கள்.

    குப்பை மனிதர்கள்

    கெட்ட செய்திகளை மட்டுமே பிறருக்குத் தர விரும்புபவர்கள். அடுத்தவர் ஊக்கத்தினை கெடுப்பவர்கள். பிறரின் இதயத்தினை நொறுக்கி சந் தோஷப்படுபவர்கள்.

    எனவே இத்தகையோரை ஒதுக்கி நேர்மறை சிந்தனை உள்ளவர்களோடு பழகுவதே நம் ஒளி சக்தியினை கூட்டும்.

    • வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவிற்கும் ஒரு விலை இருக்கிறது.
    • ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு விலைமதிப்பு இருக்கிறது.

    வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் நிம்மதியை நாடிநிற்கும் வாசக அன்பர்களே! வணக்கம்!.

    "வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவிற்கும் ஒரு விலை இருக்கிறது! ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு விலைமதிப்பு இருக்கிறது!

    இவற்றைச் சரியாகக் கண்டறிந்து விலைபேசத் தெரிந்தவர்களே இன்றைய வாணிப உலகில் வெற்றிபெற்ற மனிதர்களாக உலா வந்து கொண்டிருக்கிறார்கள்!" என்று ஒரு நண்பர் கூறியதைக் கேட்டு அதிர்ந்துபோய் விட்டேன்.

    பணத்தை முதன்மையாகக் கருதத் தொடங்கிவிட்ட உலகில், எதைக்கொடுத்தும் எதையும் விலைபேசி வாங்கிவிடலாம் என்று கருதத் தொடங்கிவிட்டனர் மக்கள்.

    எந்த பொருளுக்கு என்ன விலை சொன்னாலும் வாங்கிவிடக்கூடிய அளவுக்கு வசதியும் வாய்ப்பும் நிறைந்த பெருமக்கள் உலகில் பெருகியே காணப்படுகின்றனர். ஆனால் நாம் எதிர்பார்க்கின்ற மனத்தின் நிறைவையும் பலனையும் அந்தப் பொருள் தந்துவிடுகிறதா? என்று பார்த்தால் பதில் 'இல்லவே இல்லை!' என்றுதான் கூற வேண்டியிருக்கிறது.

    'டன்' கணக்கில் குளிரூட்டப்பட்ட நட்சத்திர அந்தஸ்துள்ள உணவுஅரங்கில், விதம் விதமான உணவு வகைகளை, உலகின் தலைசிறந்த சமையல் கலைஞர்களைக் கொண்டு சமைத்து அடுக்கி, லட்சக்கணக்கில் பணம் செலவழித்துக் குடும்பத்தினர் நண்பர்கள் சூழ விருந்து சாப்பிட்டு வெளியேறினாலும் சிலருக்கு நிம்மதி என்பது கிடைப்பதே இல்லை.

    அதே நேரத்தில், நேற்று வடித்து ஊற வைத்த பழைய சோற்றை, வெறும் உப்பு மட்டும் போட்டு, அரிந்து சாப்பிட்டுவிட்டு, எஞ்சியுள்ள நீராகாரக் கஞ்சியைக் குடிக்கும்போது ஏற்படும் நிம்மதிக்கும் திருப்திக்கும் அளவே இல்லை! என்றும்கூட ஆகிப் போகலாம்.

    நிம்மதி, திருப்தி, மகிழ்ச்சி, மன நிறைவு, முழுமை என்பவை எல்லாம் பணம் கொடுத்து வாங்கும் பொருள்களிலோ அல்லது செய்யும் செலவுகளிலோ அமைந்து விடுவதில்லை. மாறாக முற்றிலும் அவை மனம் சார்ந்து அமைந்து விடுபவை.

    மன நிறைவோடு நாம் ஒருவருக்கு ஒரு ரூபாய் வழங்கினாலும் அது ஒரு கோடிரூபாய்க்குச் சமமானதாகும். அதே வேளையில் வேண்டா வெறுப்பாக ஒருகோடிரூபாய் தந்தாலும் அது ஒருரூபாய்க்கு நிகரான தானதர்ம பலனைக்கூட வழங்காது.

    உறங்கப் போகிறோம்!; விலை உயர்ந்த கட்டில் மெத்தைகள் போட்டு, அடுக்கிவைத்துக் குளிரூட்டப்பட்ட மாடி அறைகளில் உறங்கப் போகிறோம். எத்தனை பேருக்கு நிம்மதியான உறக்கம் வந்து விடப்போகிறது?.

    கிராமத்து வீடுகளில் சாணம்கரைத்து மெழுகிய தரைகளில், அம்மாவின் பழைய சேலையொன்றை விரித்துத் தூங்கும்போது உண்டாகிற நிம்மதியான உறக்கத்தில், பத்தில் ஒருபங்கை யாவது நாம் அனுபவித்திருப்போமா?. இங்கே நிம்மதி என்பது ஆத்தாவின் பழைய சேலையில் வாசம் கொண்டிருக்கிறதா? இல்லை கட்டில் மெத்தை வாசனை திரவியங்களில் குடிகொண்டிருக்கிறதா?.

    மனிதன் வாழ்க்கையை வாழ்வாங்கு வாழ்வதற்கு உடம்பு வழங்கப்பட்டிருக்கிறது. அந்த உடம்பிற்குள் நிறுத்தப்பட்டிருக்கிற உயிர்தான் உண்மையில் அந்த மனிதன்; உடம்பை வளர்த்து உயிர் வளர்ப்பது! அல்லது உயிரை வளர்த்து உடம்பை வளர்ப்பது! என எது எப்படி ஆயினும் மனித வாழ்க்கைக்கு உடம்பு பிரதானமானது.

    அந்த மனிதன் அறிவின் துணைகொண்டு, வாழ்வியலை நெறிவழிநின்று வாழ்வதற்காகக், கண், காது, மூக்கு, வாய், உடம்பு ஆகிய ஐந்து புலன்கள் வழங்கப்பட்டுள்ளன.

    கண்களைக் கொண்டு இந்த உலக நடப்பியலைக் கண்டு தெளிவது; காட்சி இன்பங்களைக் கண்டு அனுபவிப்பது. செவியின் துணைகொண்டு ஓசைமயமாகத் திகழும் உலகியல் இசையில் திளைத்து மகிழ்வது; தேவையற்ற இரைச்சல்களை உருவாக்காமலும், அவற்றிலிருந்து விலகியும் வாழக்கற்றுக்கொள்வது.

    வாய் மற்றும் நாக்கின் துணைகொண்டு, நல்ல பயன்விளைவிக்கும் இனிமையான சொற்களை உருவாக்கிப் பேசுவது; தேவையற்ற சொற்களைச் சிந்திக்காமலும் பேசாமலும் காத்துக்கொள்வது; உடம்பு வளர்க்கும் உபாயமாகும்.

    மருந்தணைய உணவை மட்டுமே உண்பது; உபத்திரவம் தரும் தீய உணவுகளை உண்ணாமல் தவிர்த்து விடுவது; நாக்கின் சுவை நரம்புகளின் உதவியோடு சுவையான உணவுகளை அடையாளம் கண்டு உருவாக்கி உடல்நலத்திற்கு ஆதாரமாக்கி உதவுவது.

    மூக்கின் துணைகொண்டு தெய்வீக நறுமண வாசத்தில் திளைத்திருப்பது; மூச்சுச் சுவாசத்தை நேரிய முறையில் சுவாசித்து உள்ளிழுக்கவும், உள் நிறுத்தவும், வெளியேற்றவும் கற்றிருப்பது.

    உடலின் உற்றறியும் உணர்ச்சியினால், சிற்றின்ப மோக வலைக்கு உட்படாது, மாந்த இனம் வளர்ப்பது; பக்திப்பயிர் செழிக்கச் செய்வது; மாந்தநேயம் செழிக்கச் செய்வது.

    இவ்வாறாக மனித வாழ்வை நேர்நிறைப்படுத்த ஒவ்வொரு மனிதனுக்கும் ஐந்து புலன்கள் மதிப்புக்கூட்டப்பட்ட நிலையில் வழங்கப்பட்டுள்ளன; இவற்றுள் ஒருசிலருக்குப் புலன்களில் குறைபாடுகள் இருந்தாலும் மாற்றுத் திறன்கள்மூலம் அவர்கள் திறம்படச் செயல்பட முடியும்.

    மனிதருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த ஐந்து புலன்களும் வரங்களாகவே வழங்கப்பட்டுள்ளன என்றாலும் நம்மில் பெரும்பாலானோர் அவற்றைச் சாபங்களாகவே நிலைமாற்றித் தடுமாறிக் கொண்டிருக்கிறோம்.

    கண்கள் பார்த்துப் பார்த்து ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கின்றன எதிலும் நிம்மதியும் திருப்தியும் அடையாமல்!. செவிகள் எவ்விசையிலும் லயிக்காமல், பேரிரைச்சல் பேருலகில் மனம் பேதலித்துப்போய்க் கிடக்கின்றன.

    வாயும் நாவும் பேசிச் சலித்த சொற்களோடும், உண்டு நிறைத்துப்போன குப்பைகளோடும் அல்லாடிக் கிடக்கின்றன. மூக்கிற்கு மூடி இல்லையென்றாலும், சதா சர்வகாலமும் எதையாவது கொண்டு அடைத்திருக்கிற மூக்காகவே திகழ்ந்து கொண்டிருக்கின்றன இந்த நாற்றமெடுத்த சூழல் உலகில்!. . உணர்வின் பிண்டமாகத் திகழும் உடம்பைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை.

    இந்நிலையில் நிம்மதியும் திருப்தியும் நிறைந்த மனத்தை உருவாக்குவது எப்போது? மனம் என்பது என்ன? இந்த ஐந்து பொறிபுலன்கள் வழி நடப்பது மனம் ஆகும். இவற்றைத் தலைமையேற்றுச் செலுத்த வேண்டிய கடமையும் மனத்திற்கு உண்டு. அதனால்தான் மனவொடுக்கம், மனக் கட்டுப்பாடு வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. ஆனால் நிலைமை அப்படியா இருக்கிறது?.

    ஐந்து பொறிபுலன்கள்வழி அலைக்கழிக்கப் படும் மனம் ஆசைவயப்படுகிறது. அதைச் செய்தால் என்ன? இதைச் செய்தால் என்ன? என்று அலைபாயத் தொடங்கினால் மனத்தில் நிம்மதியும் திருப்தியும் எவ்வாறு வந்து சேரும்?.

    எதையாவது விற்று எதையாவது வாங்குவோம்! என்பது போல என்ன விலைகொடுத்து, எந்த வழியில் முயன்று நாம் நிம்மதியை வாங்குவோம்? என்று இரவும் பகலும் நாள்தோறும் மனம் அல்லாடிக்கொண்டிருக்கிறது.

    ஓர் ஓய்வுபெற்ற மேலாண்மைத் துறைப் பேராசிரியர்; இந்தியாவின் புகழ்மிக்க மேலாண்மைத்துறைக் கல்வி நிறுவனத்தில் தன்னிடத்தில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஒருநாள் அவரது வீட்டில் ஏற்பாடு செய்திருந்தார்.

    உலகின் புகழ்மிக்க பல நிறுவனங்களில் மேலாண்மைத் துறை மேலாளர்களாகப் பணிபுரியும் பலர் அந்தச் சந்திப்பு நிகழ்ச்சிக்காக வந்திருந்து தமது பேராசிரியர்க்குச் சிறப்புச் செய்தனர்.

    வந்திருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட நிபுணர்கள் தங்களது வெற்றி வரலாற்றைக் கதைகளாகப் பெருமிதத்துடன் பேசிப் பரிமாறிக் கொண்டனர். ஆனால் அவர்கள் அனைவரது பேச்சிலும் சொல்லி வைத்ததுபோல ஒரு மனக்குறையும் முன்வைக்கப்பட்டது. அதாவது எவ்வளவுதான் செய்நேர்த்தியுடன் எந்தச் செயலைச் செய்தாலும் அது அவர்களுக்கு ஒரு மன அழுத்தத்தை அளித்திடத் தவறவில்லை! என்பதே ஆகும்.

    முன்னாள் மாணவர்களின் பேச்சைக் கவனத்துடன் கேட்டுக்கொண்டே, அனைவரும் பருகுவதற்காக ஒரு பாத்திரம் நிறையத் தேநீரைப் பேராசிரியர் தயாரித்து விட்டார். அதுமட்டுமல்லாது, தேநீர் பருகுவதற்குக் கோப்பைகள் வேண்டுமே?

    வீட்டின் சமையலறையில் இருந்த கண்ணாடி, பீங்கான் கோப்பைகள், வெள்ளி, எவர்சில்வர் டம்ளர்கள், மற்றும் பற்றாக்குறைக்கு பிளாஸ்டிக் மற்றும் பேப்பர் கப்புகளையும் கொண்டுவந்து தேநீர்ப் பாத்திரத்தின் அருகே வைத்தார். அனைத்து முன்னாள் மாணவர்களையும் அழைத்து வேண்டுமென்பவர்கள் வேண்டுமென்கிற அளவுக்கு வேண்டுமென்கிற கோப்பைகளில் நிரப்பிக் குடித்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கவும் செய்தார்.

    எல்லா முன்னாள் மாணவர்களும் மகிழ்ச்சியுடன் முன்வந்து பேராசிரியர் தயாரித்திருந்த சுவையான தேநீரை அவரவர்க்கு விருப்பமான கப்புகளில் நிரப்பிப் பருகத் தொடங்கினர்.

    எல்லாரும் சொல்லி வைத்ததுபோல முதலில் விலையுயர்ந்த வெள்ளி டம்ளர்கள், பிறகு, பீங்கான் கோப்பைகள், அடுத்துக் கண்ணாடிக் கோப்பைகள் என விலையுயர்ந்த பொருள்களின் அடிப்படையிலேயே குவளைகளைத் தேர்ந்தெடுத்து ஊற்றிப் பருகினர். இவை எதுவுமே கிட்டாதவர்களே கடைசியில் பிளாஸ்டிக் மற்றும் பேப்பர் கப்புகளில் தேநீரை இட்டுநிரப்பிக் குடிக்கத் தொடங்கினர்.

    இப்போது கையில் தானுமொரு பேப்பர் கப்பில் தேநீரை நிரப்பிக்கொண்டு வந்து, தனது முன்னாள் மாணவர்களைப் பார்த்துப் பேசத் தொடங்கினார் பேராசிரியர்." நான் கவனித்தேன்; எல்லோரும் முதலில் விலையுயர்ந்த கோப்பைகளையே தேந்தெடுக்கத் தொடங்கினீர்கள்!. நான் தயாரித்த தேநீர் ஒன்றுதான்; சுவையும் ஒரே தரம் தான்.

    ஆனால் கோப்பைகளில் என்ன மாறுதல் வந்து விடப்போகிறது? வெள்ளி டம்ளர்களில் சுவை கூடவும், பேப்பர் கப்புகளில் சுவை குறையவுமா நடந்துவிடப்போகிறது?. அடுத்தவர் கோப்பைகளைப் பார்த்தே வாழத் தொடங்கினால் நம்முடைய மன அழுத்தம்தான் பெருகுமேயொழிய நிச்சயம் அது குறையவே குறையாது!.

    வாழ்க்கையும் அப்படித்தான். விலை உயர்ந்தவையோ விலை குறைந்தவையோ அவை நிச்சயம் பொருள்களின் தரத்தை மாற்றியமைத்துவிடப் போவதில்லை; அதைப்போல பொருள்களின் நிம்மதியை அவற்றின் விலைகள் தீர்மானித்துவிடப் போவதில்லை!"

    பேராசிரியரின் பேச்சைக்கேட்ட அனைவரு க்கும் மன அழுத்தம் சென்ற இடம் தெரியவில்லை. மன அழுத்தமற்ற மனம் என்பது மனத்தின் உள் அமைதி ஆகும். அதுவே நிம்மதி! அதுவே மன நிறைவுதரும் மகிழ்ச்சியும் ஆகும்.

    நிம்மதி என்பது எப்போதும் வெளியிலிருந்து வருவதன்று. உள்முக அமைதியிலிருந்து ஊற்றாகப் பெருக்கெடுப்பது. உள்முக அமைதி வாய்த்தவர்க்கு எந்த வித இக்கட்டான சூழ்நிலையும் இலகுவான மனத்தையே நல்கிடும்.

    எது வாய்த்தாலும் அது இன்பமாயினும் துன்பமாயினும் அதில் நன்மையே வாய்த்திடும் என்னும் நன்முறை எண்ணத்தை மனம் ஏற்கனவே முன்முகத் தயாரிப்பாகச் செய்து வைத்துக்கொள்ளும்.

    எல்லாவற்றிலும் நிறைவையே காண்பேன்! என்று எண்ணித் துணியும்போது, செய்கிற எல்லாச் செயல்களும் இலகுவானதாகவும் செய்வதற்குக் கடினமற்றவையாகவும் மாறிப்போவதை உணரலாம். இதனால் மகிழ்ச்சி என்பது எவ்வளவு கடின காரியத்தை எதிர்கொள்ளத் தொடங்கும்போதும் வந்து ஒட்டிக்கொள்ளும்.

    மகிழ்ச்சி வந்து தட்டிக்கொடுக்கும் போதெல்லாம் செயலாற்றுவதற்குத் தேவையான துணிச்சலும் தாமாக வந்து நமது பலமாகப் பற்றிக் கொள்ளும்.

    எளிமை, இனிமை, மகிழ்ச்சி, துணிச்சல், உள்முக அமைதி இவை வந்து விட்டால் மனத்தில் நிம்மதியைத் தவிர வேறு என்ன வந்துவிடப்போகிறது?

    தொடர்புக்கு 9443190098

    • தேர் இல்லாத பெரும் ஆலயங்கள் இல்லை.
    • ஜாதி பேதங்களை மறந்து ஒன்றுபட்டு வாழ உதவுகிறது.

    நம் ஆன்மிக வரலாற்று வீதிகளில் பலப் பல நூற்றாண்டுகளாகப் பல அழகிய தேர்கள் ஆனந்தமாக ஓடிக் கொண்டிருக்கின்றன. நம் நாட்டில் தேர் இல்லாத பெரும் ஆலயங்கள் இல்லை.

    மூலவராக இருக்கும் கடவுள் தேரில் ஏறி உற்சவராக வீதியெங்கும் உல்லாசமாக வலம் வருகிறார். ஆலயத்திற்கு வந்து இறைவனை தரிசனம் செய்ய இயலாதவர்களும் தேரிலேறி வீதியுலா வரும் தெய்வத்தை வீட்டு வாயிலில் நின்றவாறே தரிசித்துப் பரவசம் அடைகிறார்கள்.

    தமிழகத்தின் பற்பல ஆலயங்களில் தேர் இருந்தாலும் திருவாரூர் ஆலயத் தேர் தன் எழிலால் பிரசித்தி பெற்றது. `திருவாரூர்த் தேரழகு' என்ற பழமொழியே தமிழில் உலவுகிறது.

    தேர்த் திருவிழா ஜாதி பேதங்களை மறந்து மக்கள் ஒன்றுபட்டு வாழவும் உதவுகிறது. எல்லா ஜாதியினரும் வேறுபாடு பாராமல் இணைந்துதான் தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள். அதனால் `ஊர்கூடித் தேரிழுத்தல்' என்ற சொற்றொடரே தோன்றிவிட்டது.

    சில புகழ்பெற்ற ஆலயங்களில் மரத் தேர் மட்டுமல்லாது, வடிவில் சிறியதும் அழகியதுமான தங்கத் தேரும் இருக்கிறது. பண்டிகைக் காலங்களில் ஆலயத்தின் உட் பிரகாரங்களில் தங்க ரதத்தில் சுவாமி உலா வருவதைக் காண்பதென்பது ஒரு கண்கொள்ளாக் காட்சி.

    மதுரை, திருவரங்கம் போன்ற திருத்தலங்களில் தேர் ஓடுவதற்கென்றே தனி வீதிகள் இருக்கின்றன. கீழரத வீதி, மேலரத வீதி என்றெல்லாம் அவை பெயர்பெற்று விளங்குகின்றன. தேர் ஓடாத காலங்களில் மாபெரும் தேரை நிறுத்துவதற்கென்றே உருவாக்கப்பட்ட இடங்கள் தேரடி எனப்படுகின்றன.

    அந்தக் கால மன்னர்கள் போரில் ஈடுபடுத்த நான்கு வகைப் படைகளை வைத்திருந்தார்கள். தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்பவையே அவை.

    ராமாயண காலத்திலிருந்தே நம் ஆன்மிகத் தேர் ஓடத் தொடங்கிவிட்டது. தசரதன் எட்டுத் திக்கில் மட்டுமல்லாமல் பாதாளம், ஆகாயம் ஆகிய இரு திக்குகளிலும் கூடத் தேரோட்ட வல்லவனாம்.

    அதனால்தான் அவன் பத்து திசைகளில் தேரோட்டக் கூடியவன் என்று பொருள்படும் வகையில் `தச ரதன்` எனப் பெயர் பெற்றான்.

    சம்பராசுர யுத்தத்தின்போது தேரோட்டியாய் அவனோடு யுத்தகளம் சென்றாள் வீராங்கனையான கைகேயி. போரின் நெருக்கடியான நேரத்தில் தேரின் அச்சாணி கழன்றுவிட்டது. அப்போது தன் விரலையே அச்சாணியாக்கித் தேரை ஓட்டி தசரதனை வெற்றி பெறச் செய்தாள் அவள்.

    அந்தப் பேருதவியால் மகிழ்ந்த தசரதன் அவளுக்கு இரண்டு வரங்கள் தர முன்வந்தான்.

    வேண்டும்போது அந்த வரங்களைப் பெற்றுக் கொள்வதாகக் கூறிய கைகேயி, பின்னர் அந்த வரங்களைப் பயன்படுத்தித்தான் ராமனைக் காட்டுக்கு அனுப்பினாள் என்கிறது ராமாயணம்.

    தேரோட்டி சுமந்திரர் ராமனையும் சீதையையும் லட்சுமணனையும் தேரில் அழைத்துச் சென்றுதான் கானகத்தில் கொண்டுவிட்டார்.

    சித்திரசாலையில் ஓவியங்களாக இடம்பெற்றிருந்த மனிதர்களைத் தவிர, மற்ற அத்தனை மக்களும் அந்தத் தேரின் பின்னால் கண்ணீர் விட்டு அரற்றியவாறே பின்தொடர்ந்து ஓடிய காட்சியைக் கம்ப ராமாயணம் உருக்கமாகச் சித்திரிக்கிறது.

    ராம ராவண யுத்தத்தின்போது ராமன் ராவணனுக்குச் சமமான உயரத்தில் இருந்து போரிட வேண்டும் என்பதற்காக இந்திரன் தன் தேரோட்டியான மாதலியையும் தனது தேரையும் ராமனுக்காக அனுப்பி வைத்தான் என்ற செய்தியும் ராமாயணத்தில் உண்டு.

    உத்தரகாண்டத்தில் துணி வெளுப்பவன் சொன்ன அபவாதத்தால் வருந்திய ராமன், சீதையைக் கானகத்திற்கு அனுப்பி வைத்தான். தன் அண்ணியை அண்ணன் கட்டளைப்படி கானகத்திற்குத் தேரில் கொண்டுவிட்டான் லட்சுமணன். அப்போது சீதாதேவி அடுத்தடுத்து அடையும் துயரங்களை எண்ணி அந்தத் தேர் கண்ணீர் விட்டதாம்.

    மகாபாரதத்தில் தேர் மிக உயர்ந்த பெருமையைப் பெற்றுவிட்டது. உலகப் புகழ்பெற்ற நீதிநூலான கீதையை பகவான் கிருஷ்ணர் அர்ச்சுனனுக்கு உபதேசம் செய்தது தேரோட்டியாகத் தேர்ப் பீடத்தில் அமர்ந்துதான்.

    கர்ணன் என்ற மாவீரனின் வளர்ப்புத் தாயான ராதை, ஒரு தேரோட்டியின் மனைவிதான்.

    ராஜமாதா குந்தி தேவி திருமணத்திற்கு முன்பாகத் தனக்கு துர்வாசர் உபதேசம் செய்த மந்திரத்தின் சக்தியைச் சோதிக்க விரும்பினாள். அந்த மந்திர சக்திக்கு உட்பட்டு சூரியன் அவள்முன் தோன்றி அவளுக்கு கர்ணனைக் குழந்தையாகக் கொடுத்துவிட்டு மறைந்தான்.

    கன்னிப் பெண்ணின் கையில் குழந்தை என்றால் உலகம் நகைக்குமே? அபவாதத்திற்கு அஞ்சிய குந்தி, குழந்தையை ஒரு கூடையில் வைத்து, தன்னந்தனியே கண்ணீரோடு நதிநீரில் அனுப்பி வைத்தாள்.

    பிள்ளையில்லாத தனக்கு ஒரு பரிசுபோல் நதிநீர் மூலம் கிட்டிய குழந்தையைப் பாசத்தோடு வளர்த்தான் ஒரு தேரோட்டி. அவன் மனைவிதான் கர்ணனின் வளர்ப்புத் தாயான ராதை. வளர்த்த பாசத்தின் காரணமாக, போரில் இறந்த கர்ணனோடு தானும் இறந்தாள் ராதை என்கிறது மகாபாரதம்.

    தேரோட்டி மகனான கர்ணனது வாழ்வின் இறுதிக் காலத்தில் தேர்கள் அவனுக்கு உதவாமல் அவன் வாழ்வை முடிக்க உதவியதுதான் கொடுமை.

    கர்ணன் அர்ச்சுனன் மீது நாகாஸ்திரத்தைப் பிரயோகித்தபோது, கிருஷ்ணர் கால் கட்டை விரலால் அர்ச்சுனன் தேரை அழுத்தினார். தேர் சற்றே கீழிறங்க அர்ச்சுனன் தப்பித்தான்.

    போர் முடியும் தறுவாயில் கர்ணனின் தேரோட்டியான சல்லியன் தேரை ஓட்ட மறுத்து விலகிச் சென்றான். மண்ணில் அழுந்திய தேர்ச் சக்கரத்தை எடுக்க கர்ணன் முனைந்தபோது, கிருஷ்ணர் உத்தரவுப்படி அர்ச்சுனன் அம்பு போட கர்ணன் மரணத்தைத் தழுவுகிறான்.

    எதிரியின் தேர், தன் தேர் என இரண்டு தேர்களுமே சந்தர்ப்ப வசத்தால் கர்ணன் மரணத்திற்குத் துணைபோனதை மகாபாரதம் சொல்கிறது.

    கிருஷ்ணர் அர்ச்சுனனுக்குத் தேரோட்டியாக இருந்து `பார்த்த சாரதி` எனப் பெயர் பெற்றார் என்றால், அத்தகைய கிருஷ்ணனுக்கும் ஒரு சந்தர்ப்பத்தில் தேரோட்டியாக இயங்கினாள் அவர் மனைவி சத்தியபாமா என்கிறது பாகவதம். நரகாசுரனைக் கிருஷ்ணர் வதம் செய்தபோது அவருக்குத் தேரோட்டும் பணி செய்தவள் சத்தியபாமாதான்.

    சங்க கால மன்னன் பாரியின் வரலாற்றில் அவன் வள்ளல் தன்மையைப் புலப்படுத்தும் வகையில் ஒரு தேர் வருகிறது. படர்வதற்குக் கொழுகொம்பில்லாமல் கானகத்தில் தத்தளித்த முல்லைக் கொடியின் தவிப்பைக் கண்டு, அதன் அருகே அது படர வசதியாகத் தன் தேரை நிறுத்திவிட்டு மன்னன் பாரி நடந்தே அரண்மனை திரும்பினானாம்.

    `முல்லைக்குத் தேரீந்த பாரி` என அவன் வள்ளல்தன்மையைப் போற்றிப் புகழ்கின்றன பழந்தமிழ் இலக்கியங்கள்.

    சூரிய பகவான் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் உலா வருவதாகத் தெரிவிக்கின்றன புராணங்கள்.

    சூரியக் கிரணங்களிலிருந்து ஏழு நிறங்கள் பிரதிபலிப்பதாகத் தெரிவிக்கிறது இன்றைய அறிவியல்.

    சூரியனின் தேர் ஒற்றைச் சக்கரத் தேர். அந்தத் தேர் ஒருபோதும் பின்னோக்கிச் செல்லாது.

    சூரியனால்தானே நாள் கணக்கிடப் படுகிறது? அது காலத்தின் அடையாளம். காலம் முன்னோக்கிச் செல்லுமே அல்லாது ஒருபோதும் பின்னோக்கிச் செல்வதில்லையே?

    மனுநீதிச் சோழன் கதையில் அந்த மன்னனின் மகன் வீதிவிடங்கன் தேரிலேறி உலாச் செல்கிறான். அப்போது ராஜகுமாரன் செலுத்திய தேரின் அடியில் ஒரு பசுங்கன்று அகப்பட்டு இறந்து போகிறது.

    அந்தக் கன்றை ஈன்ற தாய்ப்பசு அரண்மனை சென்று ஆராய்ச்சி மணியை அடித்து அரசனிடம் நீதி கேட்கிறது.

    அரசன் தன் மகன்மீது தான் தேரைச் செலுத்தி, தன் மகனைத் தானே கொன்று, அந்தப் பசு அடைந்த துயரத்திற்கு நீதி வழங்குகிறான் என்கிறது மனுநீதிச் சோழன் கதை.

    பின்னர் சிவபெருமான் அருளால் தேர்ச்சக்கரத்தில் அடிபட்டு இறந்த பசுவின் கன்றும் அரச குமாரனும் மீண்டும் உயிர்பெற்று எழுந்ததையும் அந்த வரலாறு விவரிக்கிறது. வள்ளலார் மனுமுறை கண்ட வாசகம் என்ற தலைப்பில் இந்த வரலாற்றை ஓர் உரைநடைக் காப்பியமாக எழுதியிருக்கிறார்.

    புத்தர் வரலாற்றிலும் தேருக்கு ஓர் இடம் உண்டு. சன்னா என்ற தேரோட்டி மூலம் முதல் முறையாக வெளியுலகத்தில் தேரில் வீதியுலா போகிறான் ராஜகுமாரன் சித்தார்த்தன். பிணி மூப்பு சாக்காடு ஆகிய மூன்றையும் மனிதர்கள் தவிர்க்க இயலாது என்பதை நேரில் கண்டு புரிந்து கொள்கிறான்.

    சித்தார்த்தன் மனத்தில் ஞானத் தேடல் பிறக்கிறது. அன்றிரவே மனைவி யசோதரையையும் மகன் ராகுலனையும் பிரிந்து மறுபடியும் நள்ளிரவில் தன் தேரிலேறி தேரோட்டி சன்னா தேரை ஓட்ட கானகம் வருகிறான்.

    சன்னாவைத் திரும்ப அனுப்பி விட்டு கானகத்தின் உள்நடந்த சித்தார்த்தன் போதி மரத்தடியில் ஞானம் பெற்றுப் பின் புத்தராக மலர்கிறான் என்பதை விவரிக்கிறது புத்தர் திருச்சரிதம்.

    புத்தர் என்ற மெய்ஞ்ஞானியை உருவாக்கியதில் போதி மரத்திற்கு மட்டுமல்லாமல் அவரைக் கானகம் வரை கொண்டுவிட்ட தேருக்கும் பங்கிருக்கிறது!

    திருவள்ளுவர் காலத்திலேயே தேர் புகழ்பெற்ற வாகனமாக இருந்து வந்திருப்பதைத் திருக்குறள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. `கடலோடா கால்வல் நெடுந்தேர்' என்றும் `உருள்பெருந் தேர்க்கு அச்சாணி அன்னார்' என்றும் இரண்டு குறட்பாக்களில் தேர் உவமைப் பொருளாகப் பேசப்படுகிறது.

    சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திருவள்ளுவரே அழகிய கல் தேரில்தான் காட்சி தருகிறார்.

    நம் இல்லத்து மகளிர் அவரவர் இல்ல வாயிலை அலங்கரிக்கும் வகையில் தீட்டும் கோலங்களில் புள்ளி வைத்து இழையிழுத்துப் போடும் தேர்க்கோலம் புகழ்பெற்றது.

    நம் தெய்வங்களின் புகழை வீதியெல்லாம் ஓடி ஓடிப் பிரசாரம் செய்து பக்தியை வளர்க்கும் தேர்கள் நம் பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியவை என்பதில் சந்தேகமில்லை.

    தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

    • பொருட்கள் பெறுபவருக்கு பலன் அளிப்பதாக இருக்க வேண்டும்.
    • கொடுப்பதனை மகிழ்வோடு ஏற்க வேண்டும்.

    வீட்டில் கல்யாணம், கிரக பிரவேசம், பிறந்த நாள் இப்படி விழாக்கள் நடைபெறும் போது உற்றார், உறவினர், நட்பு வட்டாரம் அனைவராலும் பரிசுப் பொருட்கள் குவியும். இதில் ஒரே மாதிரிப் பொருட்கள் பல இருக்கும். இப்போது மக்கள் சற்று சிந்தித்து அவர்கள் தேவை என்ன என்பதனை முன்கூட்டியே அறிந்து வாங்கிக் கொடுக்கின்றனர்.

    கொடுக்கும் பொருட்கள் பெறுபவருக்கு பலன் அளிப்பதாக இருக்க வேண்டும் என்ற அக்கறை அனைவருக்கும் உள்ளது. பலர் பணமாக கொடுப்பர். தேவைக்கேற்ப பெறுபவரே வாங்கிக் கொள்ளட்டும் என்று நினைப்பர். ஆனால் பரிசினை பெறுபவர்கள் கொடுப்பவரின் அளவிற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கொடுப்பதனை மகிழ்வோடு ஏற்க வேண்டும்.

    ஆயினும் எல்லா நாடுகளிலும் மக்களுக்கு சில சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள் இருக்கின்றன.

    * கூர்மையான பொருட்கள் கத்தி, கத்திரிக்கோல் இவற்றினை யாரேனும் பரிசாக தந்தால் உதாரணமாக சமையலறை கத்தி, கத்திரி கோல், வரவேற்பறையில் அலங்கார மாக சுவற்றில் மாட்டும் போர்வாள், ஈட்டி இவற்றினை கண்டிப்பாய் பரிசாகப் பெறக்கூடாது. இது வாங்குபவர், பெறுபவர் இரு வருக்கும் இடையே பிரிவினை, மனஸ்தாபத்தினை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை பரவலாக இருகின்றது. மாறாக இதனை உரிய பணம் கொடுத்து ஏற்றுக் கொள்ளலாம்.

    * பல கலாச்சார பிரிவுகளில் ஷூ, செருப்பு இவற்றினை பரிசாக அளிப்பது என்பது 'நீ என்னிடம் இருந்து சென்று விடு' என்று மறைமுகமான பொருளினை அளிக்கின்றது என்று நம்புகின்றனர். எனவே அநேகர் இத்தகு ஷூ, செருப்பு போன்றவற்றினை பரிசளிப்பதும் இல்லை, பெறுவதும் இல்லை.

    * கடிகாரங்கள்- கையில் கட்டுவது, சுவற்றில் மாட்டுவது, மேஜையில் வைப்பது போன்ற கடிகாரங்களையும் சிலர் பரிசு அளிப்பதில்லை. இதனை நல்ல சகுனமாக கருதுவ தில்லை.

    * முன்பெல்லாம் அழகிய எம்ப்ராய்டரி செய்த கைக்குட்டைகளை பெண்ணை விரும்பும் ஆணா ஆணை விரும்பும் பெண்ணோ பரிசுப் பொருட்களாக கொடுப்பர். ஆனால் தற்போது பல வருடங்களாக இது இல்லை. காரணம் கை குட்டை கண்ணீைர துடைக் கும் பொருள் என்று கூறப்பட்டதால் நம்பாத வர் கூட நமக்கேன் வம்பு என்று அதன் பக்கமே செல்ல மாட்டார்கள்.

    * முத்துக்கள் பரிசளிக்கும் போது நம் ஊரில் கூட அதிக கவனம் கொடுப்பார்கள். ஏனெனில் முத்துக்கள் சிலருக்கு அதிர்ஷ்டமாக அமையும். சிலருக்கு அதிர்ஷ்டம் இல்லாது அமையும் என்பது அவர்களது நம்பிக்கை.

    இதனால் தான் நம் ஊரில் மங்களகரமாக வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், சந்தனம், பூ என அனைவரும் விரும்பும் மங்களப் பொருட்களை சேர்த்தே அளிக்கின்ற னரோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

    மேற்கூறப்பட்டவைகள் சிலருக்கு நம்பிக்கை இருக்கலாம். சிலர் மூட நம்பிக்கை எனலாம். இவை அவரவர் மனநிலையினைப் பொறுத்தது. இருந்தாலும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக மட்டுமே பகிரப்பட்டுள்ளது.

    சிலருக்கு ஒரு பழக்கம். சதா சர்வ காலமும் ஏதா ஒரு நிகழ்வு, செய்தி, இப்படி ஏதோ ஒன்றினைப் பற்றி விடாது நினைத்துக் கொண்டிருப்பார்கள். இதனால் அவர்களால் எந்த ஒரு செயலினையும் முழுமை யாக செய்ய முடிவதில்லை. இவர்கள் சில விஷ யங்களை பழக்கத்தில் கொண்டு வர வேண்டும்.

    * நம் எண்ண ஓட்டங் களை நாமே ஆராய வேண்டும். அவை உப யோகமானதா? முன்னேற்றத்திற்கானதா? அல்லது பயத்தின் காரணமாக ஏற்படுகின்றதா? என்று ஆராய வேண்டும். இது ஒருவரின் முன்னேற்றத் திற்கு பெரும் உதவியாக இருக்கும்.

    * எந்த ஒரு வேலையை செய்தாலும் அதிலேயே முழு கவனம் இருக்க வேண்டும். அந்த நொடி யில் இருந்து ஒவ்வொரு நொடியிலும் முழு கவனம் செலுத்த வேண்டும்.

    * ஒரு பிரச்சினை தொடர்ந்து இருக் கின்றதா? அதற்காக தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம்- ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் ஒதுக்கி அதற்காக செயல் படுங்கள், சிந்தியுங்கள். மற்ற நேரத்தில் அன்றாட பணிகளை முறையாய் செய்யுங்கள்.

    * தேவையில்லாத செய்திகளை, ஊர் வம்புகளை தலையில் போட்டுக் கொள்ளக் கூடாது. இவற்றையெல்லாம் முயற்சி செய்யலாமே.

    விஷ்ணுசகஸ்ர நாமம்- பொதுவில் இந்து மத நிகழ்ச்சிகளில் விஷ்ணு சகஸ்ர நாமமும், லலிதா சகஸ்ர நாமமும் ஒலி நாடா மூலமாவது ஒலித்துக் கொண்டே இருக்கும். அம்மன் கோவில்களில் கூட விஷ்ணு சகஸ்ர நாமம் ஒலிக்கச் செய்வார்கள். அம்பிகைக்கு விஷ்ணு சகஸ்ர நாமம் கேட்பதில் அத்தனை விருப்பம் என்பர்.

    விஷ்ணு சகஸ்ர நாமத்தின் சிறப்புகள் என்ன என்பதனைப் பார்ப்போம்.

    * மூன்று மிக உயர்ந்த ஆச்சார்யர்கள் இதற்கு பாஷ்யம், விளக்க உரை எழுதியுள்ளனர் அவர்கள் ஆதி சங்கரர், ஸ்ரீ ராமானுஜ சார்யா, ஸ்ரீ மத்வாச்சார்யா ஆகியோர் ஆவர்.

    * வைஷ்ணவர்கள் இல்லாத வர்களும் தங்கள் வீடுகளில் விஷ்ணு சகஸ்ர நாமம் ஒலிக்கச் செய்வதோ, பாராயணம் செய்வதோ நடைமுறையில் உள்ளது.

    * பிரிந்த ஆத்மா நற்கதியாகவும் இதனை பாராயணம் செய்கின்றனர்.

    * நோய்கள் தீர, பிரச்சினைகள் தீர, நல்ல வாழ்வு அமைய சங்கல்பம் செய்து சிலர் பாராயணம் செய்வர்.

    * இதன் உச்சரிப்பால் நரம்பு மண்டலம் பலப்படுவதாகக் கூறுகின்றனர்.

    * தூக்கமின்மை, தூக்கத்தில் கெட்ட கனவு போன்றவை நீங்குகின்றது.

    * மாலை 5 மணி முதல் 7 மணி வரை உள்ள நேரமே இதனைக் கேட்க உசிதமான நேரம் என்று கூறப்படுகின்றது.

    இப்படி பல நன்மைகள் கூறப்படுகின்றன. இது போல் மற்ற மதங்களிலும் அவரவர் வழிமுறைக் கேற்ற மத பிரார்த்தனைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மன வலிமைக்கு நம் மனம் ஈடுபடும் ஒன்றினை இறுகப் பிடித்துக் கொள்ளலாமே. மீண்டும் குறிப்பிடுகிறோம். இது ஒருவரின் தனி உரிமை, நம்பிக்கை சம்பந்தப்பட்டது மட்டுமே. எந்த நிர்பந்தமும் இல்லை.

    சிவன் கோவிலை தரிசிப்பதன் பலன்கள்

    * திருத்த லங்காடு-பணி யாட்களின் சாப தோஷம் நீங்க

    * திருவள்ளியூர்- சோமாஸ்கந்தரை குலதெய்வமாகப் கொண்டவர்கள் வழிபட வேண்டிய தலம்

    * திருநன்ன லம்-ஞானம் பெற

    * திருமண தீச்சுரம்- கணவரும் தேவையின்றி சந்தேகப்படும் மனைவிமார்க ளும் வழிபட வேண்டிய தலம்

    * திருமருகல்- கணவன் மனைவி மகிழ்ச்சியாய் வாழ

    * திருச்சிக்கல்- பண்டு தாரர்களின் மனசு நீங்க

    * திருச்சேரி-மகிழ்ச்சியான மண வாழ்க்கைக்கு

    * திருக்குவளை- நவக்கிரக தோஷம் நீங்க

    * திருவைமூர்- பல தோஷங்கள் இருப்பவர்கள் வழிபட வேண்டிய தலம்

    * திருநெலிக்கா- கல்வியில் சிறந்து விளங்க

    * திருகடிக்குளம்- பிரச்சினைதீர

    * திருஆலங்குடி- புத்ர தோஷம் நீங்க

    * கொட்டாரம்- மன நிம்மதி பெற

    * திட்டை- சந்திரன் தோஷம் நீங்க

    * பசுபதி கோவில்- ராகு தோஷம் நீங்க

    * கோட்டையூர்- பாபங்கள் நீங்க

    * ஒமப்புலியூர்-சனி தோஷம் நீங்க

    * தர்மபுரம்- சிவ பக்தர்களை அவ மதித்த தோஷம் நீங்க

    * மயிலாடுதுறை- பாவங்கள் நீங்க

    * உத்திர தோச மங்கை- கெட்ட விதி மாற

    * ராமேஸ்வரம்- பித்ரு தோஷம் நீங்க

    * காளையார் கோவில் -இப்பிறப் பின் பயன் பெற மீத முள்ள 8 கோவில்கள் அடுத்த தொடரில் இடம் பெறும்.

    இவை அவரவர் நம்பிக்கையைப் பொறுத்தது. நீங்கள் அறிந்து கொள்ளவே பகிரப்பட்டுள்ளது.

    • நம்பிக்கை என்பது ஒரு மனநிகழ்வு.
    • பகட்டான வாழ்க்கை வாழ்வதிலேயே ஆர்வமும் காட்டுகிறார்கள்

    நம்பிக்கையில் நம்பிக்கை வைத்திருக்கும் நம்பிக்கைக்குரிய வாசகர்களே! வணக்கம்!.

    'வெறுங்கை என்பது மூடத்தனம்! விரல்கள் பத்தும் மூலதனம்!' என்கிற கவிஞர் தாரா பாரதியின் கவிதை முத்திரை வரி, நம்பிக்கையின் வலிமையை எடுத்துரைக்கும் உறுதிமிக்க வரியாகும். `இழப்பதற்கு இனி ஏதுமில்லை!; கையிருப்பு என்பதும் ஒன்றுமில்லை!' என்று சோர்ந்து போய் உட்கார்ந்து இருப்பவர்களைச் சொடுக்கி, எழுந்து உழைக்கத் தூண்டும் வார்த்தைகள்தாம் இவை.

    வெறுங்கையோடுதான் வந்தோம்!; வெறுங்கையோடுதான் போகப் போகிறோம்! என்றாலும் அவற்றைப் பயன்படுத்தி நாள்தோறும் பொருளீட்டுவதற்கும், புகழீட்டுவதற்கும் கைகளின் விரல்களை மூலதனமாகப் பயன்படுத்துங்கள்! என்கிறார் கவிஞர் தாராபாரதி.

    விரல்கள் என்றால் உழைப்பு; ஈட்டுவதற்கும், ஈட்டிய பொருளை ஈந்து இசைபட வாழ்வதற்கும் அவை பயன்படுத்தப்பட வேண்டும்.

    நம்பிக்கை என்றால் நம்புவது!; உறுதியாக நம்புவது!; தமிழில் `நம்பு' என்றால் விரும்புவது என்று பொருள்; ஒரு செயல் அல்லது பொருளை அடைந்து வெற்றி காண வேண்டுமென்றால் அந்தச் செயலின்மீதும், அந்தப் பொருளின்மீதும் குறையாத ஆர்வமும் மாறாத விருப்பமும் உடையவர்களாக நாம் திகழ வேண்டும்.

    நமது விருப்பமும் ஆர்வமும் நேர்மறையான அதிர்வுகளை உருவாக்கும்போது, நம்பிக்கையாக மாறி, வெற்றியை எட்டிப்பிடிக்கும் வரை போராட வைக்கின்றன.

    கடவுள் நம்பிக்கை தொடங்கி அன்றாட வாழ்வியல் நம்பிக்கை வரை ஆழ்ந்த விருப்பத்தோடும் உறுதியான மனோதிடத்துடனும் கையாளாதப்படாதவரை அவை உரிய பலன்களைத் தருவதில்லை.

    மழை வேண்டி நடந்த பிரார்த்தனைக் கூட்டத்திற்கு ஒரேயொரு குழந்தையைத் தவிர வேறு யாருமே கையில் குடைகொண்டுவரவில்லை என்று ஒரு பழைய கதை உண்டு.

    கையில் குடையோடு வந்த குழந்தையை பார்த்து மற்றவர்கள் ஏளனமாய்ச் சிரித்ததோடு, கடவுள் என்ன அவ்வளவு விரைவாக நமது வேண்டுதலுக்குச் செவிசாய்த்து விடுவார் என்கிற நம்பிக்கையா? எனக் கேட்கவும் செய்தனர்.

    ஆனால் பிரார்த்தனை முடிந்து ஆலயத்தை விட்டு அனைவரும் வெளியேறும்போது மழை கொட்டோ கொட்டென்று கொட்டி அந்த குழந்தை தவிர்த்து மற்ற அனைவரையும் நனைத்துவிட்டது;

    முழுநம்பிக்கையோடு எதைச் செய்தாலும் நிச்சயம் பலனுண்டு என்பதற்கு, அந்தச் சிறு குழந்தையின் நம்பிக்கை மற்ற எல்லோருக்கும் பெய்த மழையாகி விட்ட கருணை சிறப்பானது.

    நம்பிக்கை என்பது ஒரு மனநிகழ்வு; அதற்கு எதிரான சொல் அவநம்பிக்கை. சிலருடைய வாழ்க்கைச் செயல்பாடுகள் எப்போதும் அவநம்பிக்கையிலேயே தொடங்கும். அவர்களிடம் `மணி என்ன ஆகிறது?' என்று கேட்டால், ' இப்போது மணிகேட்டு என்ன செய்துவிடப் போகிறாய்? என்ன கலெக்டர் உத்தியோகமா பார்க்கப் போகிறாய்?' என்று எரிந்து விழுவார்கள்.

    எந்த வேலையில் ஈடுபட வேண்டுமென்றாலும், உடனே ஈடுபடாமல் அப்புறம் பார்த்துக் கொள்வோமே! என்று தள்ளிப் போடுவார்கள்; உடனே ஈடுபட்டாலும் `என்னத்தைச் செய்து! என்னத்தை ஆகப்போகிறது?' என்று நொந்துகொண்டே செயல்படுவார்கள். இப்படி அவநம்பிக்கையோடு ஈடுபடுபவர்களுக்கு சாதாரணமாக நடக்கிற காரியம்கூட நடக்காமல் போய்விடும்.

    எவ்வளவு கடினமான செயலாக இருந்தாலும், இனிமேல் நடக்கவே நடக்காது என்று முடிவுகட்டப்பட்ட செயலாக இருந்தாலும், நம்பிக்கை வைத்து மெய்வருத்தத்தோடு ஒரு செயலைச் செய்தால், அதற்கேற்ற கூலியாக வெற்றியின் பலன் கிட்டும் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

    சிலருக்கு வாழ்க்கையில் யாருமே துணைக்கு இல்லாதது போன்றதொரு நிலைமை ஏற்படும். குடும்பத்தில் பெற்றவர், உற்றவர், பிள்ளைகள், கணவன், மனைவி என்று உள்ள உறவுகள் அத்தனையும் உதவிக்கு வராமல் கைவிட்டு விட்டார்கள் என்று வருந்தாதீர்.

    சமூகத்தில் நண்பர்கள், மனிதர்கள், வள்ளல்கள், படிப்பிற்கேற்ற பணிவாய்ப்பு என எவருமே துணையாக வரவில்லை எனக் கவலைப்படாதீர். பணிபுரியும் அலுவலகத்தில், மேலதிகாரிகள், கீழதிகாரிகள், சக அலுவலர்கள் என யாருடைய ஒத்துழைப்பும் இல்லாமல் போய்விட்டாலும் நொந்துபோகாதீர்.

    யார் இல்லாமல் போனால் என்ன? நம்பிக்கை என்ற ஒன்று மட்டும் இருந்தால் போதும்; அதைப்பற்றிக்கொண்டு இழந்த பொருள்கள், பிரிந்த சொந்தங்கள், கைநழுவிப்போன ஆட்சி அதிகாரம் பதவி சொத்து சுகம் அத்தனையையும் எளிதில் மீட்டுக்கொண்டு வந்து விடலாம்.

    ஓர் அருமையான உருவகக் கதை. ஓர் அழகான அறை. அந்த அறையின் இருளைப்போக்கி ஒளிமயமாக ஒளிரவைக்க நான்கு மெழுகுவர்த்திகள் ஏற்றிவைக்கப் பட்டுள்ளன. `அமைதி', `அன்பு', `வாய்மை', `நம்பிக்கை' என்பவை அங்கு எரிந்துகொண்டிந்த மெழுகுவர்த்திகளின் பெயர்கள்.

    `அமைதி' என்கிற மெழுகுவர்த்தி பேசத் தொடங்கியது," வன்முறை எண்ணம் பெருகிய மனிதர்கள் வாழுகிற உலகமாக இந்த உலகம் மாறிவிட்டது. எங்குபார்த்தாலும் வஞ்சக எண்ணம் கொண்டு ஒருவரையொருவர் பழிவாங்கத் துடித்துக்கொண்டிருக்கும் மனிதர்கள்; அதனால் உலக நாடுகளிடையே சண்டைகள்; போர்கள்.

    தனித்திருக்கும் மனித மனங்களிடையேயும் குடும்ப மனிதர்களிடையேயும் அமைதியில்லா நிலைகள் சண்டை சச்சரவுகள். எனவே 'அமைதி' யாகிய நான் ஒளிர்ந்து பிரயோசனமில்லை; நான் அணைந்து போகிறேன்" என்று அணைந்துபோனது.

    அடுத்து, 'அன்பு' என்ற மெழுகுவர்த்தி பேசியது." என்னுடைய இன்றியமையாமையை எல்லோரும் பேசுகிறார்கள்! ஆனால் யாரும் யாரோடும் அன்புடையவர்களாக நடந்து கொள்வதில்லை. உலகமெங்கும் மனிதர்களிடம் கோபமும் பொறாமையும் வன்முறையும் தலைவிரித்தாடுகிறது.

    அடுத்த உயிர்களிடம் அன்பும் கருணையும் காட்டும் மனிதநேயம் எவரிடமும் தென்படவில்லை. எனவே நானும் விடைபெற்றுக்கொள்கிறேன் என்று 'அன்பு' அணைந்து போனது.

    அமைதியும் அன்பும் அணைந்த அடுத்த வினாடியே, 'வாய்மை' பேசத் தொடங்கியது. பொய்யும் சூதும் போலியும் புனைவுகளும் பெருகிவிட்ட உலகில் வாய்மைக்கு ஏது இடம்?. உண்மை பேசினாலோ, உண்மையாக நடந்துகொண்டாலோ உரிய மரியாதையை யாரும் கொடுப்பதில்லை. வீண்பகட்டுக்கே மக்கள் அதிக மதிப்பளிக்கிறார்கள்!.

    பகட்டான வாழ்க்கை வாழ்வதிலேயே ஆர்வமும் காட்டுகிறார்கள்!. இப்படிப்பட்ட உலகில் உண்மைக்கு ஏது மரியாதை? நானும் மாய்ந்து போகிறேன்! என்று அணைந்துபோனது 'உண்மை'.

    மூன்று விளக்குகளும் அணைந்து போனதால் இருள் பெருகிப்போன அறைக்குள் ஒரு சிறுமி நுழைந்தாள். " ஐயோ! நான் என்ன செய்வேன்! அமைதி! அன்பு! உண்மை! ஆகிய மூன்று மெழுகுவர்த்திகளும் அணைந்து போயினவே! ஒளிவிட்டுப் பிரகாசித்த அறையில் தற்போது இருள் சூழ்ந்து காணப்படுகிறதே! " என்று கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தாள்.

    அப்போது எஞ்சியிருந்த 'நம்பிக்கை' என்னும் மெழுகுவர்த்தி பேசத் தொடங்கியது," சிறுமியே! கலங்காதே! மூன்று விளக்குகளும் அணைந்துபோனால் என்ன? அவற்றை மீண்டும் ஒளியேற்றி வைக்க 'நம்பிக்கை' எனும் விளக்கு நான் இருக்கிறேன்.

    வாழ்க்கையில் எதை இழந்தாலும் பரவாயில்லை; நம்பிக்கையை மட்டும் இழக்காமல் இருந்தால் அதுபோதும்; இழந்த மற்ற எல்லாவற்றையும் மீட்டுக் கொண்டுவந்து விடலாம்!".

    சிறுமி 'நம்பிக்கை' என்னும் விளக்கின் உதவியோடு, அமைதி, அன்பு, உண்மை ஆகிய மெழுகுவர்த்திகள் மூன்றையும் ஏற்றிவைத்து அறை முழுவதையும் மீண்டும் ஒளிமயமாக்கினாள். ஆம் அன்பர்களே நம்பிக்கையே துணையாய்க் கொண்டோர்க்கு இந்த உலகில் வெல்வதற்கு அரிதான செயல் என்று எதுவுமில்லை.

    துன்பப்பட்டே ஆக வேண்டும் என்பதுபோன்ற செயலில் ஈடுபடும்போதும் நம்பிக்கை மகிழ்ச்சி அதிர்வலைகளை ஏற்படுத்தித், துன்பத்தை இன்பமாக்கிடும் கிரியா ஊக்கியாகச் செயல்படுகிறது.

    உழைக்கும் உடம்பு சோர்வடையும் போதெல்லாம் நம்பிக்கைமனம் ஊக்கபானமாக உற்சாகம் தருகிறது. காற்றுப் புகமுடியாத அறைக்குள்ளும் ஒரு பெரிய யானையைப் புகுத்திவிடும் ஜாலத்தை நம்பிக்கை நிகழ்த்திக்காட்டும். எல்லா வெற்றிகளிலும் உழைப்புக் கால்பகுதியாக இருந்தாலும் பரவாயில்லை; மீதமுள்ள முக்கால் பங்கு நம்பிக்கையால் நிரப்பி வையுங்கள்; முடிவு அபார வெற்றியாகவே இருக்கும்.

    ஒரு பெரிய மலையை ஏறிச் சிகரம் தொடுவதற்கும், பலமைல் தொலைவுப் பாதையை நடந்து கடப்பதற்கும் முதலில் நாம் எடுத்து வைக்கவேண்டியது நமது ஒரு சிறு அடிமட்டுமே!. அந்த அடியும் நம்பிக்கை கலந்த அடியாக இருந்தால் சொல்லவே வேண்டாம். எல்லை தொடுதல் அப்போதே நிகழ்ந்துவிட்டதாய் முடிவுகட்டி விடலாம்.

    தேர்வுக்குப் படிக்கும் மாணவர்கள் சிலர் என்ன படித்தாலும் எப்படிப் படித்தாலும் மனத்தில் தங்க மாட்டேன்கிறது என்று வருத்தப்படுவார்கள். நம்பிக்கையோடு படித்தால் எந்தக் கடினப் பாடத்தையும் நொடியில் மனத்தில் தங்கும்வண்ணம் செய்துவிடலாம்; நம்பிக்கையோடு என்பது விருப்பத்தோடு படிப்பது; வேண்டா வெறுப்போடு படித்தால் நமது பெயர்கூடச் சமயத்தில் மறந்துபோகும்.

    சில மாணவர்கள், நன்றாகப் படித்திருப்பார்கள்; ஆனால் தேர்வுக்கூடத்திற்குள் சென்று அமர்ந்து, கேள்வித்தாளை வாங்கியவுடன் படித்த எல்லாமே மறந்துவிட்டது என்பார்கள். விருப்பப்பட்டு நம்பிக்கையோடு படித்த எதுவும் தேர்வுக்கூடத்தில் மறந்து போகாது.

    தேர்வுபயம் பற்றிக்கொள்ளும்போது இப்படித் தற்காலிகமான மறதிபோன்ற தீங்கு நிகழ்வதுண்டு. ஆயினும் கேள்வித்தாளை வாங்கும்போதே எளிமையான கேள்விகளே வரும்! அப்படி மாறி வந்தாலும் அவற்றிற்கு எளிமையாக விடையளித்துவிட என்னால் முடியும் என்கிற நம்பிக்கையோடு அமர்ந்தால், தேர்வுபயம் அகன்று போகும்.

    வாழ்க்கையில் வாய்ப்பு என்பது நமது வீட்டு வாசல் வழியாக வரும் என்று சிலர் வாசலைநோக்கி மட்டுமே காத்திருப்பர்; ஆனால் பலருக்கு ஜன்னல்கள் வழியாகவும் எட்டிப் பார்க்கலாம்; புழக்கடை வழியாகவும் புகுந்து பார்க்கலாம். கதிரவன் உதிப்பது கிழக்குத் திசையில்தான் என்றாலும் உலகில் ஒளி எல்லாத் திசைகளிலும் பரவிக்கிடப்பதுபோல நம்பிக்கையோடு பார்த்தால் எங்கும் ஒளிமயம்தான்.

    நம்பிக்கை பூரணமாக இருப்பவர்களுக்கு மனமும் உடம்பும் ஆரோக்கியமாக இருக்கும்; ஏனெனில் அவர்கள் எந்த இழப்பிற்கும், எந்தத் தோல்விக்கும், எந்தத் துன்பத்திற்கும் சோர்ந்துபோவதில்லை. எந்தச் செயலிலும் துளியளவு நம்பிக்கை இருந்தாலும் அதனைக் கடலளவு பெருக்கும் மகிழ்ச்சி உபாயம் அவர்களுக்குத் தெரிந்திருக்கும்.

    நம்பிக்கையாளர்களுக்கு, வெற்றி தோல்விகள் வெறும் எண்ணிக்கைகளே தவிர சாதனைக் கணக்குகள் அல்ல.

    நம்பிக்கையோடு கல்லைத் தின்றாலும் சீரணித்து விடும் திறமை பெற்றவர்கள் நம்பிக்கையாளர்கள். மருந்து மாத்திரைகளைத் தாண்டி நம்பிக்கையால் குணமடைந்து வந்தவர்களும் உண்டு. எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவரும் மாயவித்தையை நம்பிக்கை மட்டுமே தரக்கூடியது.

    தளர்ந்து போகாத முயற்சி, தோல்விகளைப் புறந்தள்ளிவிடும் அசாத்தியத் துணிச்சல், வலிகளைத் தாங்கிக்கொள்ளும் வலிமை, குறைந்து போகாத மகிழ்ச்சி இவையே நம்பிக்கை நமக்குத் தரும் அமிர்த ஊற்றுகள்.

    தொடர்புக்கு 9443190098

    • ஸ்ரீமத்வர் வைணவ மரபைச் சார்ந்தவர்.
    • ஜீவான்மாவும் பரமான்மாவும் வேறு வேறு என்பது மத்வரின் சித்தாந்தம்.

    ஸ்ரீமத்வர் வைணவ மரபைச் சார்ந்தவர். அவரது தத்துவம் துவைதம் எனப்படுகிறது. ஜீவான்மாவும் பரமான்மாவும் வேறு வேறு என்பது மத்வரின் சித்தாந்தம்.

    வாயுவின் அவதாரமே மத்வர் என அவரது அடியவர்கள் நம்புகிறார்கள்.

    தமது இளம் வயதிலிருந்தே மத்வர் பல்வேறு அற்புதங்கள் நிகழ்த்தியதாக அவர் சரிதம் சொல்கிறது.

    மத்வரின் இயற்பெயர் வாசுதேவன் என்பது. வாசுதேவனின் தந்தை ஒருவரிடம் சிறிது கடன் வாங்கியிருந்தார். கடனை உரிய நேரத்தில் திருப்பிக் கொடுக்க இயலவில்லை. ஒருநாள் கடன் கொடுத்தவர் வீட்டு வாசலில் வந்து கத்தத் தொடங்கினார்.

    ஐந்தே வயதான வாசுதேவன் அவரையே உற்றுப் பார்த்தான். பின் அவரைத் தங்கள் இல்லத் தோட்டத்திற்குக் கூப்பிட்டான். புளிய மரத்தடியில் அவரை நிற்கச் சொன்னான். கொஞ்சம் புளியங்கொட்டைகளைச் சேகரித்தான்.

    `நீட்டுங்கள் கையை!` என புளியங் கொட்டைகளை ஒவ்வொன்றாக அவர் உள்ளங்கையில் போடலானான்.

    என்ன ஆச்சரியம்! ஒவ்வொரு புளியங்கொட்டையும் ஒவ்வொரு தங்கக் காசாக அவர் கரத்தில் விழுந்தது. (அவர் எவ்வளவு கடன் கொடுத்தாரோ அத்தனை நாணயங்கள் விழுந்த பிறகு மீதமுள்ளவை வெறும் புளியங்கொட்டைகளாகத் தான் விழுந்தன!)

    அந்த நாணயங்களைக் கண்ணில் ஒற்றிக் கொண்டு பையில் போட்டுக் கொண்ட அவர் வாசுதேவக் குழந்தையின் காலில் விழுந்து வணங்கினார்! வாசுதேவனை ஒரு மகான் என அவர் இனம் கண்டு கொண்டார்.

    சிறுவனாக இருந்தபோதே தன் ஆசிரியர்கள் சொன்ன பாடங்களில் திருத்தம் சொல்லிவந்தான் வாசுதேவன். சலித்துக் கொண்டார் அவன் தந்தை.

    `தந்தையே, இவர்கள் வேதத்திற்குச் செய்யும் வியாக்கியானங்கள் எனக்கு உடன்பாடாக இல்லை. நான் புதிய வியாக்கியானங்கள் செய்து ஒரு புதிய தத்துவத்தை நிறுவுவேன்!` என்றான்.

    `சரிதான். நீ புதிய தத்துவத்தை நிறுவப் போகிறாயா? அப்படி ஒன்று நிகழ்ந்தால் நம் வீட்டு மர உலக்கை கூடத் துளிர்க்கும்!` என்று சிரித்தவாறே சொன்னார் தந்தை.

    வாசுதேவன் விறுவிறுவென்று வீட்டுக்குள் போனான். மர உலக்கையை வெளியே கொண்டுவந்து மண்ணில் நட்டு வைத்தான். உலக்கையின் கீழே தண்ணீர் வார்க்கத் தொடங்கினான்.

    தந்தை பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்த மர உலக்கை பச்சைப் பசேல் எனத் துளிர்கள் விட்டு வளரத் தொடங்கியது. பட்டுப்போன வேதாந்தம் மத்வரின் புத்தம் புதிய விளக்கங்களோடு மீண்டும் துளிர்விடப் போகிறது என்பதைப் புரிந்துகொண்ட தந்தை மகனைக் கட்டி அணைத்துக் கொண்டார்.

    வாலிபனானதும் வாசுதேவனுக்குப் பெற்றோர் திருமணம் செய்துவைக்க விரும்பினார்கள். வாசுதேவன் ஒப்புக்கொள்ளவில்லை.

    துறவியாகும் எண்ணத்தில் உடுப்பிக்கு அருகில் இருந்த பண்டார்கரே மடத்திற்குச் சென்று அதன் பீடாதிபதியான அச்சுதப்ரேஷரிடம் சிஷ்யனாகச் சேர்ந்தான்.

    பெற்றோர் வந்து அவனை வீடு திரும்புமாறு வருந்தி வருந்தி அழைத்தார்கள். வாசுதேவனோ துறவியாவதற்குத் தன் பெற்றோரிடம் அனுமதி கேட்டான்.

    அதெல்லாம் வேண்டாம், வீட்டிற்கு வா என திடீரென்று அவன் காலில் விழுந்து வணங்கிக் கெஞ்சினார் அவன் தந்தை.

    `நான் துறவியாக உங்களிடம் அனுமதிதான் கேட்டேன். அதற்குள் நீங்கள் என்னைத் துறவியாகவே ஆக்கிவிட்டீர்களே? மகன் துறவியானால் தானே தந்தை மகன் காலில் விழுந்து வணங்குவார்?` என்று வாதம் செய்தான் வாசுதேவன் .

    தந்தை திகைத்தார். ஆனாலும் `நான் உன் பிரிவைத் தாங்கினாலும், உன் தாய் ஒரே மகனின் பிரிவை எப்படித் தாங்குவாள்?` எனக் கேட்டார். வாசுதேவன் அதற்கும் ஒரு வழி பிறக்கும் என்றான்.

    சிறிது காலத்தில் அந்த வழி பிறந்தது. வாசுதேவனுக்கு ஒரு தம்பி பிறந்தான். தன்மேல் செலுத்திய பாசத்தைத் தன் தம்பிமேல் செலுத்துமாறு கூறி, தாயைச் சமாதானப் படுத்திவிட்டு வீட்டை விட்டு வெளியேறினான் வாசுதேவன்.

    வாசுதேவன் துறவியான பின்னர் பூர்ணபோதர் எனப் புதிய பெயர் பெற்றார். அவரே பின்னாளில் மத்வாச்சார்யார் என அழைக்கப் பட்டார். அவர் துறவியானபோது அவர் வயது பதினாறுதான்.

    உடுப்பியில் கிருஷ்ணர் கோயிலை நிர்மாணித்தார் மத்வர். துவைத தத்துவத்தைப் பரப்புவதற்காக எட்டு மடங்களை நிறுவினார்.

    மொத்தம் முப்பத்தியேழு நூல்களை எழுதினார் மத்வர். அவை அனைத்தும் தொகுக்கப்பட்டு சர்வமூலம் என்ற பெயரில் வழங்கப்படுகின்றன. கீதை உரை, உபநிடத உரை, ரிக்வேத உரை, பாகவதம், மகாபாரதம் தொடர்பான நூல்கள் ஆகியவையும் அந்தத் தொகுப்பில் உண்டு.

    மத்வர் சமூக அளவிலும் பல சீர்திருத்தங்களைச் செய்தார். வேள்விகளில் உயிர்ப்பலி கூடாது என்றார். புலால் உணவைச் சாப்பிடாதீர்கள் என அறிவுறுத்தினார். மது அருந்துவது பாவம் என்று குறிப்பிட்டார்.

    ராஜாராம் மோகன்ராய் தோன்றுவதற்கு வெகுகாலம் முன்பாகவே, உடன்கட்டை ஏறும் வழக்கத்திற்கு வேதத்தில் எந்த ஆதாரமும் இல்லை என்று சொல்லி அந்தக் கொடூரமான வழக்கத்தைக் கண்டித்தார்.

    சங்கீதம் செடிகொடிகளை வளரச் செய்யும் என்று இப்போது சொல்லப்படுகிறது. மத்வர் தன் காலத்திலேயே உள்ளங்கையில் ஒரு விதையை வைத்துக் கொண்டு தன் மதுரமான குரலால் பாட்டுப் பாடி அதை முளைவிட்டு வளரச் செய்தார்.

    பல இடங்களுக்குப் பயணம் செய்து மக்களுக்கு நல்லொழுக்கத்தையும் உயரிய ஆன்மிகத்தையும் போதித்தார். அவரது முகத்தில் தென்பட்ட தெய்வீகப் பொலிவால் ஆட்கொள்ளப் பட்டு, அவர் உரையைக் கேட்டு அதன்வழி நடக்கத் தயாரார்கள் பொதுமக்கள்.

    கீதை சொல்லும் நான்கு வர்ணங்கள் குறித்து மத்வர் தரும் விளக்கம் போற்றத் தக்கது. ஆன்மாவின் உள்ளுணர்வு தொடர்பான விஷயமே ஜாதி என்கிறார் மத்வர்.

    ஜாதி பிறப்பால் வருவதல்ல என்றும் அது அவரவரின் இயல்பால் அமைவதே என்றும் தெளிவாக அறிவிக்கிறார். ஆன்ம நாட்டம் கொண்ட யாரும் இறைவனை அடையலாம் என்பது மத்வ சித்தாந்தம்.

    ஸ்ரீமத்வாச்சாரியார் சீடர்களுக்குக் கல்விபோதித்துக் கொண்டிருந்தார். ஏராளமான கிரந்தங்களை எழுதியவர். அவற்றைப் புரிந்துகொள்வதே கடினம். அப்படியிருக்க யார் அவற்றுக்கு உரையெழுதப் போகிறார்கள்?

    `சுவாமி! உங்களின் கிரந்தங்களுக்கு உரையெழுதப் போகிறவர் யார்?`- ஒரு சீடர் கேட்டார்.

    மத்வாச்சாரியார், `இதோ நாள்தோறும் நான் பாடம் சொல்லும்போது அசைபோட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கிறதே இந்தக் காளை மாடு, அதுதான் உரையெழுதும்!` என்றார்!

    சாஸ்திர ஓலைச் சுவடிகளின் சாக்கைச் சுமந்து செல்லும் காளை மாடா உரையெழுதும்? முதுகில் சாஸ்திரங்களைச் சுமந்த மாடு, ஆச்சார்யாரின் போதனைகளை மூளையிலும் சுமக்கிறதா?

    மாடு உரை எழுதுமானால் அது தங்களுக்கு அவமானமில்லையா? மாட்டிற்கு உள்ள அறிவு கூட சீடர்களுக்கு இல்லையே என்றுதானே மக்கள் நினைப்பார்கள்?

    சீடர்களில் ஒருவர் கடும் சீற்றமடைந்தார்.

    `அப்படியானால் இந்தக் காளை மாட்டை நாகப்பாம்பு கடித்து சாகக் கடவது!` என்று சபித்தார். சீடரின் தவச் சக்தி காரணமாக அடுத்த கணம் எங்கிருந்தோ விரைந்து வந்தது ஒரு பாம்பு. காளை மாட்டை ஒரு கொத்துக் கொத்தியது.

    ஸ்ரீமத்வர் உரக்கச் சொன்னார்:

    `என் சீடனின் சாபம் இந்த எருதைப் பாம்பு கடித்து சாகக் கடவது என்பதுதான். அந்த வாக்கியத்தில் சாக வேண்டியது எருதா பாம்பா என்று தெளிவாக இல்லை! என் கிரந்தங்களுக்கு எருது உரை எழுதுவதற்கு முன், என் சீடனின் சாபத்திற்கு இப்போதே நான் உரை எழுதுகிறேன்! இந்த எருதைப் பாம்பு கடித்ததும் பாம்பு சாகக் கடவது!

    மத்வர் இப்படிச் சொன்ன மறுகணம் பாம்பு இறந்துபோயிற்று.

    ஸ்ரீமத்வர் கமண்டலத்தில் இருந்த நீரை எருதின்மேல் தெளித்தார்.

    `எருதின் இதயத்திற்கு அருகில் காதை வைத்துக் கேளுங்கள்!` என்றார். சீடர்கள் எருதின் உடலுக்குள்ளிருந்து ஒலித்த மந்திர சப்தங்களைக் கேட்டு வியந்தார்கள்.

    மத்வர் சொன்னபடியே மறுஜன்மத்தில் எருது ஜயதீர்த்தராகப் பிறப்பெடுத்து மத்வரின் கிரந்தங்களுக்கு உரை எழுதியது என்பது சீடர்களின் நம்பிக்கை.

    பத்மநாப தீர்த்தர், நரஹரி தீர்த்தர், திருவிக்கிரம பண்டிதாச்சார்யார் போன்றவர்கள் மத்வாச்சாரியாரின் நேரடிச் சீடர்கள். பின்வந்த மத்வ சம்பிரதாயத்தைச் சேர்ந்த மகான் ஜெயதீர்த்தர், மத்வரின் எல்லா நூல்களுக்கும் உரை எழுதியிருக்கிறார். ஸ்ரீராகவேந்திரரும் மத்வ மரபில் வந்தவர்தான்.

    மத்வாச்சாரியாரின் மறைவு வித்தியாசமானது. உண்மையிலேயே அவர் காலமாகவில்லை. மறைந்துவிட்டார்.

    தம் எழுபத்தொன்பதாம் வயதில் சீடர்களுக்கு உபநிடதப் பாடம் நடத்தி முடித்தார். அவரைச் சீடர்கள் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். எங்கிருந்தோ அவர் மேல் ஏராளமான மலர்கள் தூவப்பட்டன.

    மலர்க்குவியல் அவரை முற்றிலுமாக மறைத்துவிட்டது. பின்னர் மலர்களை நீக்கிப் பார்த்தபோது அவரைக் காணவில்லை.

    தம் பணி முடிந்துவிட்டதெனச் சொல்லிக் கொண்டிருந்த அவர், மண்ணுலகம் விட்டு விண்ணுலகம் சென்று விட்டார் என அன்பர்கள் புரிந்துகொண்டார்கள்.

    தம் வாழ்வில் சிறு வயதிலிருந்தே ஏராளமான அற்புதங்களை நிகழ்த்திய மத்வரின் மறைவும் கூட ஓர் அற்புத நிகழ்வாக அமைந்துவிட்டது.

    மத்வாச்சாரியாரின் அருள்சக்தி இன்றும் உலகில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவரது அன்பர்கள் அவர் அருளால் இம்மை மறுமைப் பயன்களை அடைந்து வருகிறார்கள். அவர் போதித்த துவைத நெறி இன்னும் ஆன்மிக உலகில் செல்வாக்கோடு திகழ்கிறது.

    தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

    • அமைதியையும் நாடுபவர்களுக்கு ஏற்ற இடம்.
    • உடுப்பி கிருஷ்ண விக்கிரகம் தங்க வைர நகைகளுடன் ஜொலிப்பதைக் காணலாம்.

    கர்நாடக மாநிலத்தில் இயற்கையின் எழிலை பருகு வதற்கு மாத்திரம் அல்லாமல் இறை பக்தியையும் அமைதியையும் நாடுபவர்களுக்கு ஏற்றதொரு இடமாக உடுப்பி மாவட்டம் அமைந்துள்ளது.

    அரபிக் கடலோரம் உள்ள மங்களூர் நகரின் அமைப்பு.. வாழ்க்கை முறை... அங்கு வசிக்கக்கூடிய மக்களின் நவ நாகரீக போக்கிற்கு முற்றிலும் மாறுபட்டு புண்ணிய தலமாக மட்டும் விளங்குகிறது உடுப்பி. இங்கு எப்போதும் இந்தியாவின் பல்வேறு பகுதி மக்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் பரவசத்துடன் கோயிலைச் சுற்றி வலம் வருவதை பார்க்கலாம்.

    பழமையான சாயல் மாறாது இன்னும் ஆன்மீக அடையாளங்கள் அப்படியே வைத்திருக்கிறது உடுப்பி என்று நினைக்கும் போது பக்தர்களுக்கு பகவான் கிருஷ்ணரும்.. சாப்பாட்டு பிரியர்களுக்கு உடுப்பி ஓட்டலும்... நினைவிற்கு வருவதை தடுக்க இயலாது தானே.

    13ஆம் நூற்றாண்டில் துறவி மத்வாச்சாரியார், உடுப்பி கடற்பகுதிக்கு வந்த கப்பலில் நெற்றியிலிடும் கோபி சந்தன உருண்டையில் கிருஷ்ணரின் விக்ரகம் பத்திரப்படுத்தி வருவதை அறிந்து அதை எடுத்து வந்து உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண மடத்தை நிறுவினார்.

    அழகிய சிறுவன் போல் காணப்படும் உடுப்பி கிருஷ்ண விக்கிரகம் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் தங்க... வைர... நகைகளுடன் ஜொலிப்பதைக் காணக் காண பக்தர்களுக்கு பேரானந்தம் அளிக்கும் காட்சியாகும்.

    காலை 4.30 மணியிலிருந்து இரவு 9:30 வரை கோவில் திறந்திருக்கும். ஆனால் பகவான் கிருஷ்ணன் இருக்கும் கருவறை மட்டும் எப்போதும் மூடி இருக்கும்.அந்த கதவிலுள்ள சன்னல் போன்ற நவ துவாரங்கள் வழியாக தான் நாம் கிருஷ்ணரை தரிசிக்க முடியும்.

    இதற்கான சுவாரசியமான வரலாறு உண்டு. தீவிர கிருஷ்ண பக்தரான கனகதாசர் அந்நாளில் சாதி அடிப்படையில் உள்ளே அனுமதிக்க மறுக்கப்பட்டபோது மனம் உருகி கிருஷ்ணரை வெளியே இருக்கும் துவாரம் வழியே தரிசித்து பாட, அவர் பக்திக்கு மயங்கிய கிருஷ்ணர் அவர் இருந்த திசை நோக்கி திரும்பி தரிசனம் அளித்ததாக கூறப்படுகிறது.

    எனவே கருவறை வாயிலில் உள்ள நவ துவாரங்கள் வழியாக உற்று நோக்கினாலும் கருணைக் கடலாக விளங்கும் கருப்பு நிற கண்ணனின் காந்த அழகு உள்ளத்தை கொள்ளை கொள்ளும். இப்படி நவ துவாரங்கள் வழியாக தரிசிப்பதால் நவகிரக தோஷமும் நிவர்த்தி பெறுகிறது என்றும் கூறுகிறார்கள்.

    கோவிலைச் சுற்றி எட்டு உடுப்பி மடங்கள் உள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை "உடுப்பி பரியாயம்" என்ற பெயரில் சிறப்பாக கொண்டாடப்பட்டு கோவில் நிர்வாகப் பொறுப்பு 8 மடங்களுக்கும் வரிசையாக அடுத்தடுத்து மாற்றி மாற்றி வழங்கப்படுகிறது.

    இக்கோவிலில் மதியம் மற்றும் இரவு அன்னபிரசாதம் வழங்கப்படுகிறது. பொதுவாக கர்நாடகத்தில் உள்ள குறிப்பாக மங்களூர், உடுப்பி, கொல்லூர், சிருங்கேரி, தர்மஸ்தலா சுப்பிரமணியா போன்ற பல இடங்களிலும் அன்னப்பிரசாதம் நாள்தோறும் வழங்கப்படுவது மிகவும் சிறப்பு.

    இக்கோவில் அருகிலேயே "அனந்தேஸ்வரர் மற்றும் சந்திர மவுளீஸ்வரர்" சிவன் கோவில்கள் உள்ளன. வட்டவடிவமான கட்டட அமைப்பில் அமைந்துள்ள இக்கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை.

    உடுப்பி மாநகரத்திற்கு அடுத்துள்ள மணிப்பால் நகரம் கல்விக்கான மிகப் பெரிய சிறப்பு வாய்ந்த நகரமாக திகழ்கிறது. இங்கு மருத்துவ படிப்பு படிப்பதற்கான கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் மருத்துவத்திற்கான பல துறைகள் சார்ந்த நிறுவனங்கள் பல உள்ளன.

    இங்கு இரவு பகல் எந்த நேரமும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு... படிக்கக்கூடிய பெண்களும் ஆண்களும் சாலைகளில் வலம் வருவதை பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருக்கும். சில கிலோமீட்டர் தொலைவே இருந்தாலும் உடுப்பியிலிருந்து மணிப்பால் நகர சாலைகள்... கட்டடங்கள்...நகர கட்டமைப்பு அனைத்தும் வித்தியாசமாகவே காணப்படும்.

    அரபிக் கடற்கரை தழுவும் உடுப்பி மாவட்டத்தில் "காப்பு பீச்" கலங்கரை விளக்கம் இருக்கும் பகுதி அனைவரையும் ஈர்க்கக்கூடிய வகையில் சிறந்த பொழுதுபோக்கு கடற்கரையாக உள்ளது.

    அதைப் போன்று உடுப்பி அருகில் உள்ள மல்பே பீச்சும் மீனவர்களின் வாழ்க்கை முறையை சொல்லக்கூடிய இயற்கை துறைமுகமாக மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. மாலை நேரங்களில் அந்தி மறைவதை எவ்வித தடங்களும் இல்லாமல் பார்க்க ஏற்ற இடமாக இந்த கடற்கரை இருக்கிறது.

    இங்கிருந்து கடலுக்குள் அரை மணி நேரம் மின்சாரப்படகில் பயணம் செய்தால் "செயின்ட் மேரிஸ் தீவை" அடையலாம். இந்தியாவிற்கு முதன்முதலில் வருகைப் புரிந்த வாஸ்கோடகாமா இங்கே தரை இறங்கினார் என்று சொல்லப்படுகிறது.

    இங்கு இருக்கக்கூடிய பாறைகள் சற்றே வித்தியாசமாக இருப்பதை காணலாம். மிகச் சிறிய தீவாக இருந்தாலும் அங்கு மின்சார படகில் சென்று எட்டுத் திசைச் சுற்றியும் கடல் சூழ மணல்மேட்டில் அமர்ந்து பல விளையாட்டுகளும் போட்டிகளும் வைத்து மக்கள் கொண்டாடி மகிழும் இடமாக இந்த இடம் அமைந்திருக்கிறது.

    இங்கு செல்லும் போது தேவையான உணவு வகைகள் மற்றும் தண்ணீர் உள்ளிட்ட அனைத்தையும் கொண்டு செல்ல வேண்டும்.

    மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கடற்கரை மணலில் ஆடி ஓடி விளையாடினாலும்... சுற்று முற்றும் பார்க்கும் போது அமைதியான கடல்... சில நேரங்களில் ஆர்பரிக்கும் போது மனதிற்குள் ஒரு அச்சமும் எட்டிப் பார்க்கும் என்பதை மறுக்க இயலாது. இருந்தாலும் அன்றைய நாள் நம் மனதிற்குள் மகிழ்வை கூட்டுவதாகவே அமையும்.

    • சில அரிய கோவில்கள் பொக்கிஷங்கள் போல் உள்ளன.
    • ஒடிசா மாநிலத்தில் பூரி மாவட்டத்தில் கடற்கரை அருகே அமைந்துள்ளது.

    நான்கு நாள் விடுமுறை கிடைத்து விட்டால் போதும். எங்கே சுற்றுலா செல்லலாம். எங்கே சென்று சாப்பிடலாம் என்றே பெரும்பாலானோர் நினைக்கின்றார்கள். சில அரிய கோவில்கள் பொக்கிஷங்கள் போல் உள்ளன. அவைகளையும் குழந்தைகளோடு சென்று தரிசிக்கலாம். அவ்வகையில் பூரி ஜெகந்நாதர் கோவில் பற்றி இக்கட்டுரையில் அறிந்து கொள்வோமே.

    இந்த கோவில் ஒடிசா மாநிலத்தில் பூரி மாவட்டத்தில் கடற்கரை அருகே அமைந்துள்ளது. இது வைணவ கோவில் ஆகும். இக்கோவிலில் விஷ்ணு பகவான் ஜெகந்நாதராக அருள்பாலிக்கிறார். உடன் சகோதரர் பலராமர், சகோதரி சுபத்திரை உள்ளனர்.

    முகம், கைகள் மட்டுமே காணும் வகையில் மூலவர்கள் உள்ளனர். மூலவர்களின் திருமேனி மரத்தால் உருவாக்கப்பட்டவை. பொதுவில் 12 வருடங்களுக்கு ஒருமுறை திருமேனிகள் புதிய மரத்தால் உருவாக்கப்படுகின்றன.

    இக்கோவில் 12-ம் நூற்றாண்டு (1161) கீழை கங்கர் குல அரசன் ஆனந்தவர்மனால் கட்டப்பட்டு உள்ளது.

    ஒவ்வொரு கோவிலுக்கும் தல வரலாறு ஒன்று உண்டு. அவ்வகையில் இந்த கோவிலின் வரலாற்றினையும் அறிந்து கொள்வோம்.

    ஸ்ரீ கிருஷ்ணரின் மாதத்தினை ஜரா என்ற வேடன் பறவை என நினைத்து அம்பு எய்தினான். ஸ்ரீ கிருஷ்ணர் இப்பூவுலகை விட்டு மறைந்தார். அவரது உடல் மரக் கட்டையைப் போல் ஆனது.

    அச்சமயம் பூரியை இந்திரத்துய்மன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அந்த அரசனின் கனவில் ஸ்ரீ கிருஷ்ணர், கடலில் மிதந்து வரும் ஒரு பொருளைக் கொண்டு கிருஷ்ணரின் சிலையினை செதுக்குமாறு கூறினார். அரசன் கடலில் சென்று தேடுமாறு ஆட்களை பணிக்க அவர்களும் மிதந்து வந்த பெரிய மரக் கட்டையினை மன்னரிடம் சேர்த்தனர்.

    அரசனும் அந்த மரக்கட்டைக்கு பூஜைகள் நடத்தி தச்சர்களை அழைத்து பெருமாள் சிலையினை செய்யுமாறு கூறினார். தச்சர்கள் உளியினை மரக் கட்டையின் மீது வைத்தவுடன் உளி உடைந்தது.

    அச்சமயம் பெருமாளே அங்கு தச்சனை போல் வேடம் பூண்டு வந்தார். முதியவர் போல் தோற்றம் அளித்தார். 21 நாட்களில் அவர் இந்த சிலை வடிக்கும் வேலையினை முடித்துத் தருவதாகக் கூறினார். ஆனால் அவர் அந்த அறையினுள் அமர்ந்துதான் வேலை செய்வதாகவும் அது வரை சாத்தியிருக்கும்.

    அந்த கதவை யாரும் திறக்க கூடாது என்றும் கட்டளை போட்டார். மன்னரும் அதற்கு சம்மதித்தார். 15 நாட்கள் வரை உள்ளிருந்து சத்தம் வரவே அரசனும் சரி வேலை நடக்கின்றது என்று அந்த அறை பக்கம் கூட போகவில்லை. அதன் அடுத்த மூன்று நாட்கள் எந்த சத்தமுமே கேட்கவில்லை. கவலையில் மன்னரும் கதவை திறந்து விட்டார். தச்சருக்கு கோபம் வந்து விட்டது.

    இந்த கோவிலில் மன்னா நீ ஸ்தாபிக்கும் சிலைகள் அரை குறையாகவே இருக்கும். இருப்பினும் அப்படியே பிரதிஷ்டை செய்து விடு. அப்படியானால்தான் இந்த கோவிலுக்கு வருபவர்கள் வாழ்வில் பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என்பதை உணருவார்கள் என்று அருள் புரிந்தார்.

    அதன்படி பகவான் ஜெகந்நாதர் பெருமாளின் சகோதரர் பலராமன், சகோதரி சுமத்ரை ஆகியோரின் முழுமையாக நிறைவு பெறாத சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அதனால் முகம், கைகளை மட்டுமே நம்மால் தரிசிக்க முடியும்.

    இந்த அரசனின் காலத்திற்குப் பிறகு 1135-ல் அரசர் அனந்த வர்மனால் சீரமைப்பு பணி ஆரம்பிக்கப்பட்டு 1200-ல் அவரது பேரன் அனங்காபி மாதேவ் என்பவரால் முடிக்கப்பட்டது. இந்த கோவில் பஞ்சரத விதிப்படி அமைந்துள்ளது. ஆலயத்தின் மேற்கில் எட்டு உலோக கலவையால் செய்யப்பட்ட நீல சக்கரம் உள்ளது.

    இங்குள்ள கொடி மரத்தினை 'பதித பாவனா' என்பர். இதன் பொருள் ஏழைகளுக்கு அருள் புரிபவர் என்பதாகும். இந்த கொடி மரமும், நீல சக்கரமுமே மிகுந்த சக்தி வாய்ந்ததாகக் கூறுவர்.

    நம்மால் விஞ்ஞான ஆய்வால் புரிந்து கொள்ள முடியாத பல ஆபூர்வ விஷயங்கள் இக்கோவிலில் உள்ளன.

    இந்த கோவில் தமிழ் மன்னரால் கட்டப்பட்டு உள்ளது. தமிழ் மன்னர்கள் உலகின் பல இடங்களில் கோவில்கள் கட்டியுள்ளனர். ஆனால் ஒடிசாவில் சென்று கட்டிய காரணம் இன்னமும் கேள்விக்குறியாக உள்ளது.

    இந்த கோவில் போன்ற அமைப்பு வேறு எங்கும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆயினும் மற்ற இந்துக் கோவில்களுக்கு சற்று மாறாகவே இந்த கோவில் அமைந்துள்ளது எனலாம்.

    12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த கோவிலில் மூலவர் சிலைகள் புதுப்பிக்கப் படுவது ஏன் என்று தெரியவில்லை.

    பூரி ஜெகந்நாதர் கோவிலின் கோபுர நிழல் சூரியன் எப்படி இருந்த ேபாதிலும் தரையில் படுவதில்லை. தஞ்சை பெரிய கோவிலிலும் இவ்வாறே உள்ளது. இந்த கோவில் கடற்கரை அருகே உள்ளது. ஆனால் கோவில் உள்ளே முதல் படியில் கால் வைத்த பிறகு அலை ஓசை சிறிது கூட கேட்காது.

    கோபுரத்தில் எந்த ஒரு பறவையையும் பார்க்க முடியாது. கோபுரத்தின் மேலும் எந்த ஒரு பறவையும் பறக்காது.

    பொதுவாக கொடி காற்று வீசும் திசையி–லேயே பறக்கும். ஆனால் இக்கோ விலில் கொடி காற்று வீச்சின் எதிர் திசையில் தான் பறக்கும்.

    தேர் திருவிழா

    பூரி ஜெகந்நாதர் கோவிலின் தேர் திருவிழா உலக பிரசித்தி பெற்றது. ஆஷாட மாதம் (ஜூன், ஜூலை) பொதுவில் ஜூலை மாதத்தில் வருடம் தோறும் தேர் திருவிழா நடைபெறும். இந்த திருவிழா பொதுவில் 9 நாட்கள் நடைபெறும்.

    ஒவ்வொரு வருடமும் 45 அடி உயரமும் 35 அடி அகலமும் கொண்ட புதிய மரத்தால் ஆன தேர் உருவாக்கப்படுகின்றது. தேர் திருவிழாவினை முன்னிட்டு 16 சக்கரங்கள் கொண்ட சிகப்பு, மஞ்சள் நிறத் தேரில் ஸ்ரீ கிருஷ்ண பகவானும் (உற்சவ மூர்த்தி பூரி ஜெகந்நாதர் பகவான்)

    14 சக்கரங்கள் கொண்ட சிகப்பு, பச்சை நிறத் தேரில் பலராமரும் 12 சக்கரங்கள் கொண்ட சிகப்பு, கறுப்புத் தேரில் சுமத்ரா தேவியும் வலம் வருவர்.

    இந்த தேரோடும் வீதிக்கு பாரம்பரிய வழிமுறை என்று ஒன்று உண்டு. பூரி மன்னர் தங்கத் துடப்பத்தால் ரத்ன வீதியினை பெருக்கி சுத்தம் செய்வார். பன்னீர், சந்தனங்கள் தெளிக்கப்படும்.

    முதலில் பலராமர், அதன்பின் சுபத்திரை அதன் பின் பூரி ஜெகந்நாதர் என்ற முறைப்படி வலம் வருவர்.

    குண்டிச்சா கோவில் நோக்கி செல்லும் ரத யாத்திரையின் வழியில் மவுசிமா கோவிலில் ஜெகந்நாதர் ஓய்வு எடுப்பார். பின்னர் மீண்டும் ரத யாத்திரை தொடர்ந்து இறுதியாக பூரி ஜெகந்நாதர்கோவிலை வந்தடையும்.

    45 அடுக்கு உயரத்தில் பறக்கும் கோவில் கொடியினை அன்றாடம் மாற்றுவார்கள். இது தவறக் கூடாது. தவறினால் 18 வருடங்கள் நடை சாத்தப்படும் என்கிறார்கள்.

    அதே போல் கோவில் உச்சியில் உள்ள சுதர்சன சக்கரம் ஒருவர் எந்த பக்கம் இருந்து பார்த்தாலும் அவரை பார்ப்பது போலவே இருக்கும்.

    கோவில் பிரசாதம் சமைக்கும் இடத்தில் 7 பெரிய மண் சட்டிகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி சமைக்கின்றனர். இதில் மேலே இருக்கும் முதல் மண் சட்டியில் அன்னம் முதலில் தயராகி விடுகின்றது என்பது ஆச்சர்யமே. பூரி ஜகந்நாதரை கலியுகத் தெய்வம் என்கின்றனர்.

    கிருஷ்ண பகவானின் இருதயம் மூலவரின் மர சிலைக்குள்ளே இன்னமும் துடிப்போடு இருக்கின்றது என்பது ஐதீகம். 12 வருடங் களுக்கு ஒரு முறை சிலை மாற்றப்படும் போது விளக்குகள் அணைக்கப்பட்டு இந்த பிரம்ம ரகசியம் புது சிலைக்கு மாற்றப்படு கின்றது என்கின்றனர். வாழ்வில் ஒருமுறை யாவது இந்த கோவிலை சென்று தரிசிக்கலாமே.

    • இயந்திர அறிவுரைகளில் மனிதம் கரைந்திருப்பதில்லை.
    • குடும்பத்தின் மூத்தவர்களிடம் சென்று ஆலோசனைகள் பெறுவது ஆறுதலைத் தரும்.

    அறிவுரை வழங்குவதிலும் பெறுவதிலும் ஆர்வம் காட்டும் அன்பு நேயர்களே! வணக்கம்!.

    வாழ்க்கையில் ஒரு செயல் குறித்தோ, அல்லது ஒரு பொருள் குறித்தோ தெளிவான ஒரு சிந்தனை தோன்றாமல் குழப்பமாகவோ, பிரச்சினை போலவோ தோன்றினால் அது குறித்த ஐயத்தை உரிய அனுபவசாலிகளிடமும் அறிவாளர்களிடமும் கேட்டு விளக்கம் பெற்றுக்கொள்வது நல்லது. இவ்வாறு அடுத்தவரிடம் கேட்டுப் பெற்றுக்கொள்வதை, அறிவுரை அல்லது ஆலோசனை என்று கூறலாம்.

    இப்படிச் சென்றால் இங்கே செல்லலாம்; இதை செய்தால் இது நடக்கும்; இதற்கு இதுவே பதில் என்பதுபோல அமைவதெல்லாம் அறிவிப்புகள் அல்லது வழிகாட்டிப் பலகைகள் போல அமையுமேயொழிய அவை ஆலோசனைகள் போலவோ அல்லது அறிவுரைகளாகவோ அமையாது.

    அறிவுரைகள் அல்லது ஆலோசனைகள் என்பவை ஒன்றிற்கும் மேற்பட்ட வினாக்களுக்கு விடையளிப்பனவாகவோ, தெரியா விடைகளுக்கும் பதிலளிப்பனவாகவோ, குழப்பங்களை தெளிவிப்பனவாகவோ இருக்க வேண்டும்.

    இன்றைய உலகில் அறிவுரைகள் வழங்குவ தற்கும் ஆலோசனைகள் சொல்வதற்கும் நிறையப்பேர்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் கேட்பதற்குத்தான் மக்கள் சுருங்கிக் கொண்டிருக்கிறார்கள். மனிதர்கள் கூறுவதை விட இணையம் கூறும் ஆலோசனைகளும் காட்டும் வழிகளும் துல்லியமாக இருப்பதாக இன்றைய இளைய தலைமுறை நம்பத் தொடங்கிவிட்டது.

    மனிதர்கள் கூறுவதில் தற்சார்பு கலந்திருக்கும் எனவும், இயந்திரங்கள் கூறுவதில் வேண்டுதல் வேண்டாமை கலந்திருக்காது எனவும் கூறுகிறோம். ஆனால் மனிதர்கள் கூறும் அறிவுரையிலும் ஆலோசனையிலும் அவர்களின் இதய உணர்வு கலந்திருப்பதுபோல, இதயமில்லாத இயந்திர அறிவுரைகளில் மனிதம் கரைந்திருப்பதில்லை.

    அறிவுரைகளும் ஆலோசனை

    களும் பலதரப்பட்டவை ஆகும். அலுவலகம் சார்ந்தவை; இல்லறம் சார்ந்தவை, சமூகம் சார்ந்தவை, ஆன்மீகம் சார்ந்தவை, மருத்துவம் சார்ந்தவை, கல்விநிலை சார்ந் தவை, வியாபாரம் சார்ந்தவை, தொழில் சார்ந்தவை, பயணம் சார்ந்தவை, விளையாட்டு சார்ந்தவை, பொழுதுபோக்கு சார்ந்தவை என்று பலநிலைகளில் அவை கிளைபரப்பி நிற்கின்றன.

    அறிவுரை கூறுபவர், மற்றவர்களுக்கு அறிவுரைகள் கூறுவதற்கு முன், அதற்கான முழுத்தகுதியும் அறிவும் அனுபவமும் தமக்கு இருக்கின்றதா என்பதை உணர்ந்து உறுதிப்படுத்திக் கொண்டு கூற முற்பட வேண்டும்.

    அப்படிக் கூறினால், அவற்றின்மூலம் கேட்பவர் முழுப்பலனையும் பெற்று முழு ஆளுமையுடையவர்களாக மாற வாய்ப்பு ஏற்படும். அதேபோல ஒருவரிடம் ஆலோசனையோ அறிவுரையோ கேட்கும்போது,'உடையார்முன் இல்லார் போலப்' பணிவுடனும், முழுக்கவனத்துடனும், உரிய மரியாதையுடனும் கேட்க வேண்டும்.

    அப்போதுதான் நமக்கான ஆலோசனை கூறுபவர்கள் ஆழ்ந்த ஈடுபாட்டுடனும் ஆர்வத்துடனும் அறிவுரை வழங்குவார்கள். கேட்பவர் சொல்பவர் மனோபாவங்களைப் பொறுத்து அறிவுரைகளின் ஆழ்ந்த பொருள்தன்மை அமையும். வழங்குபவரும் கேட்பவரும் ஏனோதானோ என நடந்துகொண்டால் அறிவுரைகளும் ஏனோ தானோவென்று அமைந்துபோகும்.

    அறிவுரை யாருக்கு வேண்டுமானாலும் தேவைப்படலாம். கற்றவர் கல்லாதவர், ஏழை பணக்காரர், வேலை பார்ப்பவர் பார்க்காதவர், சிறியவர் பெரியவர், ஆண்கள் பெண்கள் என எல்லா நிலைகளில் உள்ளவருக்கும் ஆலோசனைகளும் அறிவுரைகளும் தேவைப்படவே செய்யும். அதே போல அறிவுரையும் ஆலோசனையும் கூறும் தகுதி எல்லா நிலைகளில் உள்ளவருக்கும் உண்டு.

    அறிவுரை கேட்பவரெல்லாம் தாழ்ந்தவர்கள் போலவும் சொல்பவர்கள் எல்லாம் உயர்ந்தவர்கள் போலவும் எண்ணிவிடக்கூடாது. ஆனாலும் எந்தத் துறையில் நமக்கு அறிவுரை தேவைப்படுகிறதோ, அந்த துறையைப் பொறுத்து வல்லுநரிடம் மட்டுமே நாம் ஆலோசனை கேட்கச் செல்லவேண்டும்.

    பட்டப்படிப்பு முடித்த ஒருவர், தெருப்பெருக்கும் சாஸ்திரத்தைப்பற்றி ஓர் ஆலோசனை பெற விரும்பினால், அவரைவிடக் குறைவாகப் படித்த தெருப்பெருக்கும் தொழிலாளியிடம்தான் செல்லவேண்டும்; விஷயத்தைப் பெற்றுமுடிக்கும் வரை பணிவாகத் தான் இருக்க வேண்டும்; இன்னும் சொல்லப்போனால் அந்த சாஸ்திரம் கற்கும்வரை, அந்தத் தொழிலாளியாகவே மாறிவிடவும் வேண்டும்.

    தேநீர் தயாரிக்கும் தொழிலாளியிடம் தேநீர் கடை முதலாளி "தேநீர் சரியில்லை; சுவையாகப் போடக் கற்றுக்கொள்!" என்கிறார். அந்தத் தேநீர் தயாரிப்பாளர் பத்தாண்டுகளாக அந்தத் தொழிலில் இருப்பவர்; விட்டால் அவர் பத்துப்பேருக்கு அந்த தொழிலைக் கற்றுத்தரும் நுட்பம் மிக்கவர்.

    அவரிடம் 'நீ போடும் தேநீர் சரியில்லை' என்று பொத்தாம் பொதுவாக முதலாளி என்கிற தோரணையில் கூறினால் எப்படி?. தேநீர்த் தொழிலாளி முதலாளியிடம், "ஐயா! சரியாகத் தேநீர்த் தயாரிப்பது எப்படி?" என்று ஆலோசனை கேட்டால் அவர் எப்படிக் கூறுவார்?. முதலாளிகள் எல்லாம் தொழில் தெரிந்தவர்கள் என்று கூறிவிட முடியாதே!.

    எனவே தகுதி உடையவரிடம் மட்டுமே ஆலோசனை கேட்கப்பட வேண்டும். நிறையப்படித்த மருத்துவரிடம் பொருளாதார ஆலோசனை கேட்க முடியுமா?. வரலாற்றுப் பேரறிஞரிடம் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் அறிவுரையைக் கேட்டுப்பெற முடியுமா?.

    அவ்வவற்றிற்கான வல்லுநர்கள் மாத்திரமே அவ்வவற்றிற்கான அறிவுரைகளுக்கும் ஆலோசனைகளுக்கும் உரிமையுடையவர்கள் என்பதைக் கேட்பவர்களும் வழங்குபவர்களும் உணரவேண்டும். தகுதியில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் பாராமல் அறிவுரை கூறும் விஷயத்தில் திறமை வாய்ந்தவரா? என்பதைப் பொறுத்து அணுகி அறிவுரை பெறுவது சரியானது.

    குடும்பத்தில் கணவன்-மனைவிக்குள் அடிக்கடி பிரச்சனைகள், சண்டை சச்சரவுகள் எழலாம்; தன்முனைப்பின் உச்சத்தில் கணவன் மனைவி இருவரும் ஏறிக்கொள்ளாமல் பணிந்து வந்து, இல்லற அனுபவத்தில் பழுத்துத் திகழும் குடும்பத்தின் மூத்தவர்களிடம் சென்று ஆலோசனைகள் பெறுவது ஆறுதலைத் தரும்.

    சிலர் குடும்பநல ஆலோசகர்களாகப் படிப்பறிவின் அடிப்படையில் சில அறிவுரைகள் கூறலாம்; ஆயினும் பட்டறிவின் அடிப்படையில் பெறப்பட்டவைபோலப் பொருத்தமாக அவை உதவுவதில்லை. சிலர் இல்லறப் பிரச்சனைகளுக் கான தீர்வுகளை, இல்லறத்தைத் துறந்து வந்த சாமியார்களிடம் போய்க் கேட்கிறார்கள்; இல்லறம் பிடிக்காமல் வந்தவர்கள் எப்படி இல்லறப் பிரச்சினைகளுக்கான ஆலோசனைகள் கூற முடியும்?.

    ஆன்மீகத்துறையில் ஈடுபடுவதற்கு இப்போதெல்லாம் எந்த அடிப்படைத் தகுதியும் இல்லை. யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் சாமியார்கள் ஆகலாம். முறையான மரபுவழி வராத இவ்வகைப் புதுப்புதுச் சாமியார்களைச் சுற்றித்தான் நவீன பக்தர்கள்கூட்டம் அலை மோதிக் காத்துக் கிடக்கிறது; அவர்களும் அறிவுரைகளை அள்ளிவழங்கும் தாராள சீலர்களாக உருமாறி அருள்மாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

    அந்தக் காலத்தில் கிராமங்களில் தவறுசெய்யும் மனிதர்களுக்கு விதவிதமான தண்டனைகளை கிராமத்தாரே வழங்குவது வழக்கம். மானபங்கப் படுத்துவது என்றால் தவறிழைத்தவனின் மூக்கை அரிந்து விடுவது உச்சபட்சத் தண்டனை ஆகும். அதன்பிறகு அவன் அந்த ஊரில் தலைகாட்டி நடக்க முடியாது. ராமாயணத்தில்கூட சூர்ப்பணகையின் மூக்கை லட்சுமணன் அரிந்துவிடுவது அவளை மானபங்கப்படுத்தி அனுப்ப வழங்கிய தண்டனை ஆகும்.

    அப்படி ஒரு ஊரில் மானபங்கப் படுத்தப்பட்ட மனிதன் ஒருவன், ஊருக்குள் மூக்கில்லாத முகத்துடன் வாழ வெட்கப்பட்டு, தொலை தூரத்திலிருந்த ஒரு காட்டிற்குள் சென்று வாழத் தொடங்கினான். முகம் அடையாளம் தெரியாமல் இருக்க தாடிமீசைகள் வளர்த்துக் கொண்டாலும், அறுபட்ட மூக்கு அவன் மானபங்கப்படுத்தப்பட்டதை விளக்கிக்கொண்டே இருந்தது. யாராவது மனித நடமாட்டம் தென்பட்டால் உடனே கைத்துண்டால் முகத்தை முழுமையாக மூடிக்கொண்டு தவம் செய்வதுபோல பாவலா செய்யத் தொடங்கினான்.

    நாளடைவில், மக்கள் அவனுக்கு முகமூடி பாபா என்று பெயர்சூட்டி, அடிக்கடி வந்து அவனிடம் அருள்வாக்குக் கேட்கத் தொடங்கினர். அவன் சொன்னதெல்லாம் நடப்பதாக நம்பிய மனிதர்கள் பெருகத் தொடங்கினர்.

    அவர்களில் பக்தி முத்திய மனிதனொருவன் அந்த மூக்கறுபட்ட சாமியாரிடம், "சாமி! நானும் உங்களைப்போல முகமூடி பாபாவாக ஆசைப்படுகிறேன்; எனக்கு அறிவுரை வழங்கி தீட்சை வழங்குங்கள்!" என்று கேட்டான். " நாளை வா! வழங்குகிறேன்!; வரும்போது நல்ல கூர்மையான புதிய கத்தி ஒன்றைக் கொண்டு வா!" என்று ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார்.

    ஆகா! நாமும் இன்றுமுதல் அந்தக் காட்டில் புதிய முகமூடி பாபாவாக அருள்வலம் வரலாம் என்கிற மகிழ்ச்சிப் பெருக்குடனும், பக்திப் பெருக்குடனும் கையில் புதிய கத்தியுடனும் வந்து சேர்ந்தான் அந்தச் சீடன். கத்தியைக் கையில் வாங்கிய அந்த முகமூடி போலிச் சாமியார், தனது முகத்துணியை விலக்கிவிட்டு, சீடனின் மூக்கைப் பிடித்துப், படக்கென்று அறுத்தெறிந்து விட்டார்.

    வலியால் துடித்த சீடனைப் பார்த்து, "இந்த அறுபட்ட மூக்கால்தான் யாம் இந்த வனத்திற்கு வந்தோம், தவமும் புரிந்தோம்; இதோ அதே தீட்சையை யாமும் உமக்களித்தோம்; நீயும் உன் முகத்தில் சிறு துண்டைப்போட்டு மூடிக்கொண்டு குட்டி முகமூடி பாபாவாக உலா வந்து ஊரை ஏமாற்றக் கடவது!; இதுவே யாமுனக்கு வழங்கும் அறிவுரை!" என்று கூறிவிட்டு அடர்ந்த வனத்திற்குள் ஓடி மறைந்துவிட்டார்.

    போலிச் சாமியாரைப் பார்த்தது தவறு! அவரை நம்பி அவரைப்போல ஆக வேண்டு மென்று தீட்சையும் அறிவுரையும் கேட்டது தவறு! இப்போது தண்டனையாக மூக்கறுபட்டதுதான் மிச்சம்! என்று தன்மீது குற்றம் சுமத்திக்கொண்டே நடக்கத் தொடங்கினான் சீடன்.

    அறிவுரையும் ஆலோசனையும் கேட்பதற்கு முன்பாக, அவற்றை வழங்குவதற்கு உரிய தகுதி அந்த நபரிடம் முழுமையாக இருக்கிறதா? என்பதைப் புரிந்துகொண்டே செல்லவேண்டும். தகுதியற்ற மனிதர்களிடம் ஆலோசனை கேட்கச் சென்றால் அவர்கள் கெட்டது போலவே நாமும் கெடுவதற்கும் ஆலோசனை கூறிவிடுவர்.

    கல்வியிற் பெரிய பட்டங்கள் பெற்றவர்கள் எல்லாம் கல்வியாளர்கள் இல்லை; பெரும் மருத்துவப்பட்டங்கள் வைத்திருப்பவர்கள் எல்லாம் சிறந்த மருத்துவர்கள் இல்லை; வியாபாரம் செய்பவர்கள் எல்லாம் சிறந்த வியாபாரிகள் அல்லர். இவர்களிடம் இருக்கின்ற அனுபவங்களும், அவைதந்த படிப்பினைகளுமே அவர்களை அந்தந்தத் துறைகளில் சிறந்தவர்கள் ஆக்கியிருக்கின்றன. அப்படி அனுபவத்தில் கரைகண்டவர்களே அறிவுரைகள் வழங்குவதற்கான முழுத்தகுதி உடையவர்கள்.

    சிலர் வயதில் கல்வியில் மூத்தவர்களாக இருக்கலாம்; அந்தக்கால அறிவியல் தொழில்நுட்ப நடைமுறைகளில் கைதேர்ந்தவர்களாக இருக்கலாம்; ஆனால் இந்தக் கால டிஜிட்டல் யுகத்தோடு தாம் இணக்கமாக இருக்க வேண்டுமென்றால் இளைய தலைமுறையின் அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் ஏற்றுக்கொள்ளவும் பெற்றுக்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும்.

    அறிவுரைகளும் ஆலோசனைகளும் அறிவுச்செல்வங்கள்; நமது வாழ்வியல் நடைமுறைகளைச் சிக்கல்கள் ஏதுமின்றி நடத்திச் செல்லப் பெருமளவில் உதவுபவை. நமக்குத் தகுதிகள் இருந்தால் அடுத்தவர்க்கு வழங்குவதில் தயக்கம் காட்டக் கூடாது; அதே வேளையில், நாம் அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் பெற வேண்டுமென்றால் அதற்குரிய தகுதியான நபர்களிடமிருந்து மட்டுமே பெற வேண்டும்.

    தொடர்புக்கு 9443190098.

    • இருவரும் இணைந்து கொடுத்தப் பாடல்களின் வகைகள் அதிகம்!
    • இருவருக்கும் இடையே உள்ள புரிந்துணர்வு அளவிட முடியாதது.

    "கவியரசர் கண்ணதாசன்- மெல்லிசை மாமன்னருக்கு இடையே இருந்தது, தொழில் புரிதலா? மனப் புரிதலா? அன்பா? நட்பா? - எது என்று புரியாத அளவிற்கு அவர்களுக்கு இடையே இருந்த புரிந்துணர்வு அளவிட முடியாதது!

    கவியரசர் நினைக்கும் சொற்களுக்கு எம்.எஸ்.வியின் தத்தகரம் கிளம்பி வரும்!! எம்.எஸ்.வியின் இசைக்கு தகுந்த சொற்கள் கவியரசரிடமிருந்து பிறந்தோடி வரும்!! அதற்கு உதாரணம் தான் "சிப்பியிருக்குது முத்துமிருக்குது" என்ற பாடல் காட்சி என்றுப் பார்த்தோம்!

    இவர்கள் கூட்டணியில் பிறந்த பாடல்கள் பல்வேறு வடிவமைப்பில் வந்த மாதிரி வேறு எந்த கவிஞரின் கூட்டணியிலும் வந்ததில்லை. எத்தனையோ கவிஞர்கள் எழுதினாலும், இவர்கள் இணைந்து கொடுத்தப் பாடல்களின் வகைகள் அதிகம்!

    கேள்வி பதில் பாடல்கள், அடுக்குத் தொடரில் வரும் பாடல்கள், முழுக்க இயைபு தொடை, ஒரே சொல்லில் முடியும் பாடல்கள்..

    உவமை அணி பாடல்கள், இருட்டுற மொழிதல் பாடல்கள், சிலேடைப் பாடல்கள், கால வளர் நிலைப் பாடல்கள், ஆகுபெயர் பாடல்கள், சிறிய, பெரிய, பல்லவி மற்றும் அனுப்பல்லவி பாடல்கள், ஒரே சொல் பாடல் வரி, இருசொல் பாடல் வரிகள், அறுசீர் அடி, எழு சீர் அடி கொண்ட பாடல்கள் என அத்தனையும் புதுமை! அவற்றையெல்லாம் பாடல்களுடன் குறிப்பிட்டு எழுத வேண்டும் என்றால் அது மட்டுமே ஒரு தனித் தொடராகி விடும். அவ்வப்போது பாக்கலாம்.

    இன்னொரு மாபெரும் கவிஞரை மீட்டெடுத்து தமிழ் திரையுலகத்திற்கு தந்ததும் கவியரசர் தான்!

    ஒரு இளைஞன், அற்புதமாக எழுதக்கூடியவர். எம்.ஜி.ஆருக்கே பாடல் எழுதியவர், இருந்தும் அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

    அவர், நடிகர் வி. கோபாலகிருஷ்ணனின் நண்பர். வாய்ப்புகள் தேடி அலைந்து, நம்பிக்கை குலைந்து ஊருக்கே கிளம்பி போவதா? அல்லது தொடர்ந்து முயற்சி செய்து வெல்வதா என்ற குழப்பத்தின் எல்லைக்கே சென்று விட்டார். அவரது நண்பரான பி. பி. ஸ்ரீனிவாஸ் பின்னணி பாடகர், தான் அன்று ஒலிப்பதிவு முடித்துவிட்டு வந்த ஒரு பாடலைப் பற்றி பேசுகிறார், பாடியும் காட்டுகிறார்.

    "மயக்கமா கலக்கமா? மனதிலே குழப்பமா? என்ற பல்லவி அவரைப் பார்த்து கேட்பது போலவே இருக்கிறது! அடுத்து சரணத்தில், "வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். வாசல் தோறும் வேதனை இருக்கும். வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை, எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி கிடைக்கும்".

    பி.பி.எஸ். தொடர்கிறார். "நாளைப் பொழுதை இறைவனுக்கு அளி, உனக்கும் கீழே உள்ளவர் கோடி" என்று தீர்வையும் பாடல் சொன்னது. அவ்வளவுதான் ஊரில் உறவினர் சொன்ன வேலைக்குப் போகும் எண்ணத்தை தூக்கிப் போட்டார். வெற்றி பெற்ற பிறகுதான் பிறந்த ஊருக்கு போவது என்று முடிவெடுக்கிறார்! அந்த இளைஞன் அவர் யார்?

    1961ல் 'நல்லவன் வாழ்வான்' என்ற படத்தில் "சிரிக்கிறாள் இன்று சிரிக்கிறாள் சிந்தியக் கண்ணீர் மாறியதாலே" என்ற பாடலில் ஆரம்பித்து 15000 பாடல்களுக்கு மேல் எழுதியவர். 1973ல் 'பாரத விலாஸ்' படத்தின் 'இந்திய நாடு என் வீடு' என்ற பாடலுக்கு தேசிய விருது கிடைத்த போது மறுத்தவர். 2007ல் 'பத்மஸ்ரீ' பட்டம் பெற்றவர். 1961 முதல் 2013 வரை 53 ஆண்டுகள் பாடல்கல் எழுதினார்.

    வயதானாலும், காலத்திற்கேற்றார் போல் டிரெண்டியான சொற்களை பாடல்களில் வைத்து எழுதியதாலேயே "வாலிப கவிஞர் வாலி" என்று செல்லமாக அழைக்கப்பட்ட திருச்சிக்கார ரங்கராஜன் தான் அந்த இளைஞன்!!

    கவியரசர் ஒரு புறம், மருதகாசி, மாயவநாதன், ஆலங்குடி சோமு என்கின்ற புகழ்பெற்ற பாடலாசிரியர்கள் நடுவே எழுத வந்த கவிஞர். வாலி பிற்கால இளைய தலைமுறை யுகபாரதி, சினேகன் காலம் வரை புகழுடன் வளைய வந்தார்!!

    'முக்தா பிலிம்ஸ் வி. சீனிவாசன் "இதயத்தில் நீ" என்ற படம் தயாரித்துக் கொண்டிருந்த நேரம். நடிகர். வி. கோபால–கிருஷ்ணன், தன் நண்பனான வாலியை, எம்.எஸ்.வியிடம் அறிமுகம் செய்கிறார். "இவர் என் நண்பர், நல்ல கவிஞர். 'நல்லவன் வாழ்வான்' என்ற படத்தில் பாட்டுக்கள் எழுதியிருக்கிறார். நீங்கள் இவருக்கு வாய்ப்பு தரவேண்டும்."

    அப்படியா, நான் தர்ற மெட்டுக்கு பாடல் எழுதுங்கள் பார்க்கலாம்.-எம்.எஸ்.வி. உடனே, "பூவரையும் பூங்கொடியே" பாடல் எழுதிக் காட்டுகிறார். படித்துப்பார்த்த எம்.எஸ்.வி. கவிஞர் வாலிக்கு பச்சைக்கொடி காட்டி விட்டார். வாலி சிறகடித்து வானில் பறக்கிறார்.

    அதே படத்தில், "ஒடிவது போல் இடையிருக்கும், இருக்கட்டுமே", "உறவு என்றொரு சொல் இருந்தால்", "யார் சிரித்தால் என்ன" என்ற மூன்று பாடல்களையுமே வாலியை எழுத சொல்கிறார். அத்தனையும் பி. சுசீலா, பி.பி.ஸ்ரீனிவாஸ் குரலில் மிக அற்புதமான மெட்டு தந்து 'தெறி ஹிட்' ஆக்கிவிட்டார் எம்எஸ்.வி.

    தமிழ் திரையுலகம், 'இதயத்தில் நீ' என வாலியை ஏற்றுக்கொண்டது. 'கற்பகம்' படத்தில் அப்போது இசையமைத்துக் கொண்டிருந்ததால் அதிலும் வாலியை எழுத வைக்க ஆசைப்பட்டார் எம்.எஸ்.வி. ஆனால் 'கற்பகம்' பட இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் கண்ணதாசனின் மெகா மகா ரசிகர்.

    வாலியை அவர் ஏற்றுக் கொள்வாரோ என்ற சந்தேகம் இருந்தது. மெல்ல கேட்கிறார், "ஒரு புது பாடல் ஆசிரியர் வாலின்னு பேரு. பிரமாதமாக எழுதுகிறார். ஒரு பாட்டு அவரை வைத்து எழுத சொல்லலாமா?"

    "எனக்கு கவியரசர் தான் எழுதணும்."

    "ஒரே ஒரு பாட்டு கொடுத்துப் பாருங்களேன், எனக்காக."

    "சரி"

    வாலி எழுதினார். கதைப்படி அந்த பாடல், அத்தனை பாட்டும் தாலாட்டு!

    "அத்தை மடி மெத்தையடி, ஆடி விளையாடம்மா,

    ஆடும் வரை ஆடிவிட்டு, அல்லி விழி மூடம்மா".

    எடுத்தவுடன் சிக்சர்! கே. எஸ். கோபாலகிருஷ்ணன் கிளீன் போவுல்டு. பிறகு படத்தின் மொத்த நான்கு பாடல்களும் வாலியே எழுத இயக்குனர் சம்மதித்தார்.

    இரவில் தூங்காமல் கண் கொட்டாமல் விழித்திருக்கும் குழந்தையின் விழிகளை - இரவில் பூக்கும் அல்லி மலருக்கு உவமையாக வைத்து என்ன அருமையாக எழுதியிருக்கிறார்! "மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி முல்லை மல்லிகை மெத்தையிட்டு, தேன்குயில் கூட்டம் பண்பாடும், மான் குட்டி கேட்டு கண் மூடும்" என்ற வரிகள் அத்தைகளை பெருமை கொள்ள வைத்தது.

    1964ல் வந்த 'படகோட்டி' படத்தின் எட்டுப் பாடல்களும் வாலியே எழுதினார். அந்த அளவிற்கு வாலி - எம்.எஸ்.வி. கூட்டணி மிகவும் பிடிதுப்போய், எம்.ஜி.ஆரின் மனதில் தனியிடம் பிடித்தார். ஒரு முறை காரில் போகும்போது எம்.ஜி.ஆர், வாலியிடம் சொன்னார், "மீனவர்கள்' பற்றிய பின்னணியில் வரும் இந்த படத்திற்கு ஐந்து எழுத்தில் வருவது போல் ஒரு பேர் சொல்லுங்கள்".

    'படகோட்டி' என்றார் வாலி. அந்த பெயரே படத்துக்கு வைக்கப்பட்டது. "எங்கள் தங்கம்" என்று ஒரு திரைப்படம் 1970-ல் வந்தது. மேகலா பிக்சர்ஸ் தயாரிப்பு. மூலக்கதை கலைஞர் கருணாநிதி என்பதால் சில சமயம் கலைஞர் பட நிறுவனத்துக்கு வருவதுண்டு. அப்போது எம்.எஸ்.வி. தந்த பல்லவிக்கு முதல் வரியை எழுதிவிட்டார் வாலி. அடுத்த வரி சரியாக வரவில்லை. 'வெத்தலைப் பாக்கு போட்டு போட்டு வாயே வீங்கிவிட்டது' என்கிறார் வாலி (வெற்றிலைப் பாக்கு போட்டா தான் பாடல் எழுத வருமாம்).

    அப்போது அங்கே வந்தார் கலைஞர். விவரத்தை கேட்டார், "முதல் வரி என்ன?"

    "நான் அளவோடு ரசிப்பவன்".... அடுத்த வரி, "எதையும் அளவின்றி கொடுப்பவன்" என்று எழுதிக்கோங்க என்று வரி எடுத்து கொடுத்தாராம் கலைஞர். எல்லோரும் உற்சாகமாகி விட்டார்கள். தொடர்ந்து பாடல் எழுதி முடிக்கப்பட்டது.

    கவியரசரை 1978-ல் 'அரசவை கவிஞராக' அறிவித்தார் எம்.ஜி.ஆர். அப்போது வாலி அடித்த பஞ்ச், இதுவரை 'கவி அரசராக' இருந்தவரை நீங்கள் 'அரசு கவியாக' மாற்றிவிட்டீர்களே என்றார். இதை கேட்டு எம்.ஜி.ஆர். சிரித்துவிட்டார்.

    உயர்ந்த மனிதன் என்ற படத்தில் சிவாஜி, மேஜர் சுந்தரராஜன் சிறுவயது முதல் நண்பர்கள். கொடைக்கானல் சுற்றுலா வந்த இடத்தில் தங்களது வாழ்க்கை பயணத்தை அலசுகிறார்கள். இதற்கு ஒரு பாடல் வாலி எழுதியதற்கு, அங்காங்கே வசனம் பேசி, வால்ட்ஸ் ஸ்டைலில் இசையமைக்கிறார். எம்.எஸ்.வி.

    பாடும் இருவரும் நடுத்தர வயதை தாண்டியவர்கள் என்பதால் மலைமீது ஓடி வந்து பாடினால் மூக்சிரைக்கும். அதனால் தத்ரூபமாக மூக்சிரைத்தபடி பாட வேண்டுமென டி.எம். சவுந்தரராஜனிடம் சொல்லிவிட்டார்.

    ஒலிப்பதிவுக்கு முன் கூட்டத்திற்கு வெளியே மூன்று முறை ஓடி சுற்றி வந்து, மைக்கின் முன் நின்று மூக்சிரைக்க பாடினார் டி.எம்.எஸ்! சில பாடல்கள் நமக்கு எப்படி எல்லாம் வந்து சேர்ந்திருக்கின்றன என தெரிய வரும்போது மலைப்பாக இருக்கிறது!

    "பூவா தலையா" என்ற படத்தில் வாலியின் ஒரு பாடல், "மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே" என்ற பாடல்! சேரன், சோழ பாண்டிய நாடு என்பதான தமிழகத்தை தன் காதலியுடன் ஒப்பிட்டு பாடுவதாக வரும் வரிகள். "இவை யாவும் ஒன்றாய் தோன்றும் உன்னை தமிழகம் என்பேனே!" என்ற கற்பனை அதுவரை யாரும் செய்யாதது.

    கவியரசர் "எந்த ஊர் என்றவளே" என்ற பாடலில் ஒவ்வொரு ஊரையும் தொட்டு எழுதியிருந்தார். அது தத்துவப் பாடல்! இது காதலியை வர்ணிக்கும் பாடல்!

    வீணை, புல்லாங்குழல், சிதார், செனாய், டோலக்கு–டன் பாடலின் மெட்டும், டி.எம்.எஸ். குரலும் நம்மை எங்கேயோ கொண்டு செல்லும்! ஒவ்வொரு மாவட்டத்தின் சிறப்புகளையும் தன் காதலிக்கு சொல்லி வர்ணித்து வரும் பாடல்!

    "நீராடும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்" என்ற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் மனோன்மணியம் சுந்தரனார் தமிழ்நாட்டை பெண்ணாக உருவகப்படுத்தியிருப்பார்!!

    "மதுரையில் பறந்த" பாடலில் வாலி, தன் காதலியை தமிழ்நாடாக உருவகப்படுத்துவது போல் எழுதியிருப்பார்!! அடடா என்ன அழகு இது!

    அதனால் தான் கவியரசர் கண்ணதாசனையும், கவிஞர் வாலியையும் தன் இரு கண்கள் என்றும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை தன் நெற்றிக்கண் என்றும் எம்.எஸ்.வி. சொன்னார்!!!

    தொடர்ந்து புதையல் எடுப்போம்...

    இணைய முகவரி:

    banumathykrishnakumar6@gmail.com

    ×