என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோரிக்கைகள்"

    • ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பஞ்சாலை ஓய்வூதியர்கள் உண்ணாவிர போராட்டம் நடத்தினர்.
    • உயர் பென்ஷன் அனைவருக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக பஞ்சாலை ஓய்வூதியர்களின் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஷாஜகான் தலைமை தாங்கினார். சிவசாமி முன்னிலை வகித்தார்.சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் சிவாஜி பேசினார். மின் ஊழியர் ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட செயலாளர் ராமச்சந்திர பாபு வாழ்த்தி பேசினார். ஓய்வு பெற்றோர் நல சங்க பஞ்சாலை மாவட்ட செயலாளர்.வெங்கடசுப்பிரமணியன் போராட்டத்தை முடித்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.

    இதில், குறைந்தபட்ச பென்ஷன் ரூ. 9 ஆயிரம் பஞ்சபடியுடன் வழங்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட வந்த ெரயில்வே கட்டண சலுகைகளை மீண்டும் அமல்படுத்த வேண்டும். உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி உயர் உயர் பென்ஷன் அனைவருக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    • நீர்தேக்கத்தொட்டி சுத்தம் செய்யாமல் இருப்பதால் தண்ணீர் மாசடைந்து வருகிறது.
    • சாலை களில் கழிவுநீர் வழிந்தோடி வருகிறது.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற சாதார ணக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன் தலைமை வகித்தார். ஆணையர் ஹேமலதா, துணை தலைவர் சுப்பராயன், பணிதள மேற்பார்வையாளர் விஜயேந்திரன், நகரமைப்பு ஆய்வாளர் மரகதம் முன்னிலை வகித்தனர்.

    இளநிலை எழுத்தர் ராஜகணேஷ் மன்ற தீர்மானங்களை வாசித்தார்.

    கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு,

    பாலமுருகன்(சுயே) மழைநீர் செல்ல வடிகால் வசதி இல்லாதபோது, தேர்வடக்கு வீதியில் புதிய மழைநீர் வடிகால் அவசிய மின்றி கட்டப்படுகிறது. ஈசானியத்தெருவில் கழிவுநீர் முழுவதும் வந்து தேங்கிநிற்கிறது.

    இதனால் கொசுதொல்லை அதிகமாக உள்ளது.கொசுமருந்து அடிப்பதில்லை என்றார்.

    நித்தியாதேவி(சுயே) : எனது வார்டில் அனைத்து சாலைகளும் பழுதாகியுள்ளது.சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    நாகரத்தினம்(அதிமுக): எனது வார்டில் பழுதான சாலைகளை சீரமைக்க வேண்டும்.

    தேவதாஸ்(திமுக): எனது வார்டில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி பலமாதங்களாக சுத்தம் செய்யாமல் இருப்பதால் தண்ணீர் மாசடைந்து வருகிறது.இதனை சரிசெய்யவேண்டும்.

    சூரியபிரபா : எனது வார்டில் உள்ள இரண்டு நகர்களில் சாலை அமைக்கும் பணி துவங்கி பல மாதம் ஆகியும் முழுமை பெறவில்லை. குடிநீர் பைப் லைன் உடைந்து குடிநீர் வீனாகி வருகிறது இதனை சரிசெய்யவேண்டும்.

    ராமு(திமுக) மீன்மார்கெட் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றவேண்டும். கொள்ளிடமுக்கூட்டில் எரியாமல் உள்ள மின்விளக்கு களை சரிசெய்யவேண்டும் என்றார்.

    முபாரக்அலி(திமுக) பழையபேருந்துநிலையம் அருகேயுள்ள குறுகிய பாலத்தால் அடிக்கடி விபத்துக்கள் நடந்துவருகிறது.இதற்கு பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டவேண்டும்.

    ராஜசேகர் :(தேமுதிக)எனது வார்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலை யோரம்தேங்கி நிற்கிறது இதனை சீரமைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை கோரியும் நடவடிக்கை எடுக்கப்ப டவில்லை விரைவில் சீரமைக்க விட்டால் கழிவு நீரில் இறங்கி போராட்டம் நடத்துவேன் என்றார்.

    ஜெயந்திபாபு(சுயே.) எனது வார்டில் கழிவுநீர் கால்வாயில் தண்ணீர் தேங்கி பலமாதங்க ளாக நிற்பதால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுதொல்லை அதிகரித்துள்ளது.சாலை களில் கழிவுநீர் வழிந்தோடி வருகிறது.

    உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    சாமிநாதன்(திமுக) : பழையபேருந்துநிலைய கட்டண கழிப்பறை கழிவுநீர் இரட்டை காளியம்மன் தெருவில் உள்ள கால்வாயில் விடப்படுகிறது.

    இதனால் அதிகளவு கொசுஉற்பத்தியாகி மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    இவ்வாறு கூட்டம் நடை பெற்றது.

    • காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும்.
    • 317 சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க நாகப்பட்டினம் மாவட்ட மையம் சார்பில் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் மடியேந்தி போராட்டம் மாவட்ட தலைவர் சித்ரா தலைமையில் நடைபெற்றது.

    ஆர்பாட்டத்தில் தமிழக முதல்வர் காலை சிற்றூண்டி உணவு திட்டத்தை தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் ஆகிய நாங்கள் வரவேற்கிறோம்.

    அதே சமயத்தில் அதனை சத்துணவு ஊழியர் ஆகிய எங்களிடமே வழங்க வேண்டும், தேர்தல் கால வாக்குறுதியான காலம் முறை ஊதி யத்தை வழங்க வேண்டும், காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பலவேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    மாவட்ட செயலாளர் ராஜு கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்க பொதுச்செய லாளர் ராணி, மாவட்ட பொருளாளர் அந்துவ ன்சேரல், சிஐடியு மாவட்ட செயலாளர் தங்கமணி, நாகை வட்ட கிளையின் தலைவர் ரவிச்சந்திரன், சாலை பணியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கணேசன் மற்றும் 317 சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அன்பழகன் நிறைவுரை யாற்றினார்.

    முடிவில் மாவட்ட பொருளாளர் பாலாம்பாள் நன்றி கூறினார். 

    • வாட்ஸ் அப் மூலம் புகைப்படத்துடன் அனுப்ப வேண்டும்.
    • பரிசீலனை செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் 114 கிராம ஊராட்சிகளும், ஒரு பேரூராட்சியும் உள்ளது. இந்தத் தொகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களுடைய அன்றாட தேவைகள் மற்றும் அடிப்படை கோரிக்கை நேரில் சந்தித்து மனுக்களாகவும், தகவல்களாகவும் தெரிவிக்க நேரம் மற்றும் பொருட்செலவை குறைக்கும் வகையில் பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே தங்களுடைய கோரிக்கையான மின்சாரம், குடிநீர், தெரு மின் விளக்கு, கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை 6381666396 தொலைபேசி எண்ணில் வாட்ஸ் அப் மூலம் புகைப்படத்துடன் அனுப்பினால் பரிசீலனை செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • மாற்றுத்திறனாளிகளின் குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை அரசு வழங்க வேண்டும்.
    • ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில், மாற்றுத்தி றனாளிகளின் குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை அரசு வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சை தாசில்தார் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் மோகன், மாவட்டத் துணைச் செயலா ளர்கள் ராஜன், சாமியப்பன், ராதிகா ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

    இதில் மாற்றுத்திறனா ளிகள் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ஷேர் ஆட்டோ டிரைவர்கள் தங்கள் வருமானத்தை இழந்து, வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்படுகின்றனர்.
    • ஆட்டோ டிரைவர்கள் வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்களும் அவதியடைந்தனர்.

    கடலூர்:

    கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு 50 ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சாதாரண ஆட்டோக்களை (அபே ஆட்டோ) இயக்குபவர்களும், ஷேர் ஆட்டோக்கள் செல்லும் வழித்தடங்களிலே தங்கள் ஆட்டோக்களில் பயணிகளை ஏற்றி செல்கி ன்றனர். இதனால் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் தங்கள் வருமானத்தை இழந்து, வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்ப டவில்லை.

    இதனால் பாதிக்கப்பட்ட ஷேர் ஆட்டோ டிரை வர்கள் இன்று தங்கள் ஆட்டோ க்களை இயக்காமல், பஸ் நிலையம் அருகில் சாலையோரம் ஆட்டோ க்களை நிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தங்கள் கோரிக்கைகள் சம்பந்தமாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் மனு அளித்தனர். ஷேர் ஆட்டோ டிரைவர்கள் வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்களும் அவதியடைந்தனர். இந்த சம்பவத்தால் கடலூர் பஸ் நிலையப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • மக்கள் நீண்ட கால பல கோரிக்கைகள் வைத்து வருகின்றனர்.
    • நந்தன் கால்வாய் திட்டம் முழுமை பெறாமல் முடங்கி கிடக்கிறது.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வருகிற ஜூலை 10-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் 14-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக அறிவித்ததால், தி.மு.க., பா.ம.க.விடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இவ்விரு கட்சிகளும் அ.தி.மு.க.வினரின் ஓட்டுகளை பெற பல்வேறு வியூகங்களை அமைத்து செயல்படுத்தி வருகின்றனர்.

    விக்கிரவாண்டி தொகுதி மக்கள் நீண்ட கால பல கோரிக்கைகள் வைத்து வருகின்றனர். அவை பின்வருமாறு:-

    விக்கிரவாண்டி தொகுதியில் நந்தன் கால்வாய் திட்டம் முழுமை பெறாமல் முடங்கி கிடக்கிறது. இந்தத் திட்டம் முழுமை பெற்றால் இந்த தொகுதியில் சுமார் 40 ஏரிகள் நிரம்பும் வாய்ப்பு உள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும்.

    இந்த தொகுதியில் உள்ள படித்த இளைஞர்கள் வேலைகளை தேடி வெளி மாவட்டங்களுக்கும் மாநிலங்களுக்கும் செல்கின்ற நிலை உள்ளது. இந்த பகுதியில் சிப்காட் தொழிற்சாலை அமைக்கப்படும் என பல்வேறு அரசியல் கட்சிகள் வாக்குறுதி கொடுத்தும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இங்கு விவசாயம் சார்ந்த தொழிற்சாலை உருவாக்கப்பட வேண்டும்.

    விக்கிரவாண்டி தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டு புதிய கட்டிட வசதியோடு இயங்கி வருகிறது. இந்த தாலுகாவை இணைக்கும் வகையில் காணை ஒன்றிய பகுதிகளில் இருந்து இந்த தொகுதியின் கடைக்கோடி பகுதி அன்னியூர், நல்லாபாளையம், கண்டாச்சிபுரம், கடையம், லட்சுமிபுரம், முண்டியம்பாக்கம் வழியாக விக்கிரவாண்டி தாலுகாவை அடையும் வகையில் பஸ் வசதி மற்றும் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நோயாளிகள் வருவதற்கு லட்சுமிபுரம், முண்டியம்பாக்கம் அல்லது நரசிங்கனூர், புதுப்பாளையம், விக்கிரவாண்டி, வழியாக வருவதற்கு பஸ் வசதிசெய்து தர வேண்டும்.

    முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அகற்றப்படும் மருத்துவ கழிவுகள் மலை போல் குவிந்து பல்வேறு நோய்கள் பரப்பும் விதமாக உள்ளது. இந்த மருத்துவக் கழிவுகளை உடனுக்குடன் அகற்ற உடனடியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    செஞ்சி பகுதியில் இருந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒரத்தூர் முண்டியம்பாக்கம் வழியாக வரும் பொழுது முண்டியம்பாக்கம் ரெயில்வே கேட் அடிக்கடி மூடுவதால் ஆபத்தான நிலையில் வரும் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர் ஆகவே இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும்.

    சமீபத்தில் விக்கிரவாண்டி பேரூராட்சி காணை ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமங்கள் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் விதத்தில் கடல் குடிநீர் ஆகும் திட்டம் மரக்காணம் பகுதியில் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை இருப்பினும் மேற்கண்ட பகுதிகள் பயன்பெறு வகையில் கூட்டு குடிநீர் திட்டம் முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும் .

    தமிழகத்தின் தென்மாவட்டம் கன்னியாகுமரி முதல் தலைநகரான சென்னைக்கு விழுப்புரம் விக்கிரவாண்டி வழியாகத்தான் செல்ல வேண்டும். விக்கிரவாண்டியில் சென்னை செல்லும் அரசு பஸ்களும், சென்னையில் இருந்து திருச்சி வரைக்கும் செல்லும் அரசு பஸ்களும் புறவழிச் சாலையில் நின்று செல்வதில்லை.

    பயணிகள் விக்கிரவாண்டியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் இறக்கிவிடப்படுகின்றனர். நிரந்தரமாக விக்கிரவாண்டி புறநகர் பஸ்கள் கட்டாயம் நின்று செல்லும் வசதி செய்து தர வேண்டும் மற்றும் விக்கிரவாண்டியில் உள்ளஅரசு பஸ் பணிமனை விரிவாக்கப்பட்ட அரசு பணிமனையாக அமைக்க வேண்டும்.

    விவசாயம் மற்றும் விவசாய நிலத்தடி நீர் மற்றும் உயரம் வகையில் பம்பை ஆறு மற்றும் வராக நதி ஆறுகளில் தடுப்பணைகள் கட்ட வேண்டும்

    விக்கிரவாண்டி தாலுகா அன்னியூர் குறு வட்டத்தைச் சேர்ந்த நல பாளையம், கடையம், புது கருவாச்சி , பழைய கருவாச்சி,டி.என்.பாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் விக்கிரவாண்டி தாலுகாவுக்கு வரவேண்டும் என்றால் கண்டாச்சிபுரம் வந்து கண்டாச்சி புரத்திலிருந்து விழுப்புரம் வந்து, பின்னர் விக்கிரவாண்டி வரவேண்டிய நிலை உள்ளது. சுமார் 40 கிலோ மீட்டர் 3 பஸ் மாறி வர வேண்டிய நிலை உள்ளது.

    தற்போது கண்டாச்சிபுரம் தாலுக்கா அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருவதால், இந்த தாலுக்காவை சேர்ந்த கிராமங்களை கண்டாச்சிபுரம் தாலுகாவில் இணைத்தால் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் தாலுக்கா சம்பந்தப்பட்ட பணிகள் மேற்கொள்வதற்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் இப்பகுதி மக்கள் காணை ஒன்றியத்திற்கு செல்வதற்கு நேரடி பஸ் வசதியும் செய்து தர வேண்டும்.

    இது மட்டுமல்லாமல் தாலுக்கா கருவூலம், மாவட்ட நூலகம், உட்கோட்ட காவல்துறை, அரசு கலைக்கல்லூரி, தீயணைப்பு நிலையத்திற்கு தனி இட வசதி. அரசுதொழிற்கல்லூரி, கிராமங்களை இணைக்கும் கிராம சாலைகள் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இத்தொகுதி மக்களின் கனவு கோரிக்கைகளாகவே இருக்கிறது.

    • ஊழியர் சங்கம் சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
    • போக்குவரத்து ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு காஞ்சிபுரம் மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

    சி.ஐ.டி.யூ காஞ்சிபுரம் மண்டல துணைத் தலைவர் மாயக்கண்ணன் தலைமை தாங்கினார். திருவள்ளூர் முன்னாள் நகர மன்ற தலைவர் சுந்தர்ராஜன், சி.ஐ.டி.யூ மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஊதிய பேச்சு வார்த்தையை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பண பலன், போக்குவரத்து படி, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வுக்கான வேண்டும்.

    வாரிசு வேலை, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒப்பந்த முறையை கைவிட வேண்டும் என்பது உட்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

    இதில் கோயம்பேடு, திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை பணிமனையில் பணியாற்றும் போக்குவரத்து ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • முற்றுகையிட்டு இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சியில் தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் 4 மண்டலங்களிலும் தூய்மை தொழிலாளர்களாக பணி செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் 4 மண்டலத்தை சேர்ந்த டிரைவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் 400-க்கும் மேற்பட்டோர் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை ஒப்பந்த நிறுவனம் வழங்க வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தூய்மை பாரத டிரைவர் மற்றும் தூய்மை பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணி டிரைவர்கள், தூய்மை பணியாளர்களை தமிழ்நாடு பணி 1981-ன் படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

    தமிழக அரசாணை படி தூய்மை பணியாளர்களுக்கு சம்பள பில்லுடன் நாள் ஒன்றுக்கு 725-ம் ஓட்டுனருக்கு 763-/ம் வழங்க வேண்டும். பி.எப், இ.சி.ஐ. தொழிலாளர்களிடம் பணம் பிடித்தம் செய்வதை முறைப்படுத்த வேண்டும்.

    ஊதியம் குறித்த நாளில் ஒவ்வொரு மாதமும் 1-ந் தேதிக்குள் வழங்க வேண்டும், உள்ளிட்ட19 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,

    இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, `கடந்த மாதம் 26-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த நிலையில், கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்.

    ஆனால் கடந்த 5-ந் தேதி அனைத்து மண்டலத்தில் பணிபுரியும் டிரைவர் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சம்பளத்தில் 50 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது நிறைய பணியாளர்களுக்கு, குறைவாக சம்பளம் அவர்களது கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

    எனவே இந்த செயலை கண்டித்து கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர். திடீரென சாலை மறியலில் ஈடுபட தொடங்கினர். இதனால் தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையில் பாதுகாப்பு பணிக்காக 50-க்கும் மேற்ப்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்

    தகவல் அறிந்த தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், 5 கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனவும், 50 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டதை திரும்ப பணியாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். இதனை ஏற்று அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில், தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாக பிரச்சினை காரணமாக போராட்டம் நடைபெற்றது. பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இ .எஸ்.ஐ. , பி.எப். பிடித்தம் கணக்கு காட்டவில்லை என்றனர். அது வழங்கப்படும்.

    பணியில் காயம் ஏற்பட்டால் மருத்துவ சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்ய வழி வகை செய்யப்படும் என்று கூறிய நிலையில் தொழிலாளர்கள் அதனை ஏற்று கலைந்து சென்றனர் என்றார். அப்போது மேயருடன் துறை சார்ந்த அதிகாரிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

    பொது மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கிளை செயலாளர் கணேசன் தலைமையில் சாலைமறியல் நடைபெற்றது.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் களத்தூர் ஊராட்சியில் பொது மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கிளை செயலாளர் கணேசன் தலைமையில் சாலைமறியல் நடைபெற்றது.

    இதில் மாவட்ட செய ற்குழு விஎஸ்.கலிய பெருமாள், என்.ராதா, எஸ்.இளங்கோவன், காமராஜ், ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அரசு அதிகாரிகள் கோரி க்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்ததன் அடிப்படையில்எழுத்து ப்பூர்வமாக எழுதி வாங்க ப்பட்டு போராட்டம் தற்காலி கமாக ஒத்திவை க்கப்பட்டது.

    • உசிலம்பட்டியில் சி.ஐ.டி.யு. செஞ்சட்டை பேரணி நடந்தது.
    • பயணிகளின் கூட்ட நெரிசலை போக்குவதற்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி தேவர் சிலை அருகே சி.ஐ.டி.யு. அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர் சங்கம் சார்பில் 50-வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு செஞ்சட்டை பேரணி நடந்தது. மாநில தலைவர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு செல்லக்கண்ணு, மத்திய சங்கத் துணைத் தலைவர் சிவகுமார் முன்னிலை வைத்தனர். ராஜேந்திரன் கொடியேற்றினார். மாவட்டத் தலைவர் அழகர்சாமி, பொதுச் செயலாளர் கனகசுந்தர், கிளை தலைவர் பாண்டி, செயலாளர் பெருமாள், துணைச் செயலாளர் பகத்சிங், பொருளாளர் ஆசைக்கொடி மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள பழைய பஸ்களை அகற்றி புதிய பஸ்கள் வாங்க வேண்டும், பயணிகளின் கூட்ட நெரிசலை போக்குவதற்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.

    • சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள 10 முக்கியமான கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை 15 நாட்களில் மாவட்ட கலெக்டரிடம் வழங்க வேண்டும்
    • சாலையின் நடுவே பதிக்கப்பட்டு உள்ள ராட்சத சிமெண்டு குழாய்கள் நீரின் அழுத்தம் தாங்காமல் உடைந்து சாலையில் அதிக மான இடங்களில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது.

    கன்னியாகுமரி :

    தி.மு.க. அரசு பொறுப் பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி 'உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்' திட்டத்தை விரிவுபடுத்துவது தொடர்பாக, சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள 10 முக்கியமான கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை 15 நாட்களில் மாவட்ட கலெக்டரிடம் வழங்க வேண்டும் என்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அவர் கடிதம் எழுதினார்.

    இதனையடுத்து கிள்ளியூர் தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள 10 முக்கியமான கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்திடம் வழங்கினார். மனுவில் கூறப்பட்டுள்ள முக்கியமான கோரிக்கைகள் விவரம் வருமாறு:-

    குமரி மாவட்டத்தில் சுனாமி கூட்டுக் குடிநீர் திட்டம், குழித்துறை தாமிரபரணி ஆற்றை நீர் ஆதாரமாக கொண்டு கடந்த 2006 -ம் ஆண்டு அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்காக கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி வழியாக, ஐரேனிபுரம் முதல் சடையன்குழி, கிள்ளி யூர், பாலூர், கருங்கல், மத்திகோடு, திக்கணங்கோடு, திங்கள்நகர் வரை சாலையின் நடுவே பதிக்கப்பட்டு உள்ள ராட்சத சிமெண்டு குழாய்கள் நீரின் அழுத்தம் தாங்காமல் உடைந்து சாலையில் அதிகமான இடங்களில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக விபத்துகள் ஏற்பட்டு பல உயிரிழப்புகளும் ஏற்பட்டு உள்ளன. எனவே, விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க சாலையின் நடுவே பாதிக்கப்பட்டு உள்ள ராட்சத சிமெண்டு குழாய்களுக்கு பதிலாக டி.ஐ. பைப்புகளை சாலையின் ஓரமாக பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    2019 -ம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட கிள்ளியூர் தாலுகாவிற்குட்பட்ட அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். ஒரு தாலுகாவிற்கு ஒரு நீதிமன்றம் இருக்கவேண்டும் என்ற அரசு விதிமுறைப்படி கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வருவாய் கிராமங்களையும், காவல் நிலையங்களையும் உட்படுத்தி மாவட்ட உரிமை யியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைத்து தர வேண்டும்.

    ஆறுதேசம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பழுதடைந்துள்ள பழைய கட்டிடமான ஆய்வக பிரிவு கட்டிடம், புற நோயாளிகள் கட்டிடம் மற்றும் குடும்ப நலப்பிரிவு கட்டிடம் ஆகிய கட்டிடங்களை அகற்றி அந்த இடத்தில் 30 -படுக்கை வசதிகள் கொண்ட கட்டிடம் அமைக்க வேண்டும்.

    பெரும்பாலான மக்கள் பயன்படுத்துகின்ற கருங்கல் பேருந்து நிலையத்தை ஆய்வு மேற்கொண்டு விரி வாக்கம் செய்து நவீன மயமாக்கப்பட்ட பேருந்து நிலையமாக மறு சீரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குப்பட்ட மீனவ மக்கள் பயன்பெறும் வகை யில் மீன்வளக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை மனுவில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

    ×