என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "treatment"

    • மாடுகளுக்கு ஏற்படும் இலம்பி தோல் நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி.
    • நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை.

    மன்னார்குடி:

    மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கம், பேங்க் ஆப் பரோடா, மன்னார்குடி கோட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில் மன்னார்குடி அருகே உள்ள காரிக்கோட்டையில் வருகிற 29-ந் தேதி கால்நடை மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

    இந்த நிலையில் கால்நடை மருத்துவ முகாம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் மன்னார்குடி கால்நடை மருத்துவமனையில் நடைபெற்றது.

    இதில் திருவாரூர் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இயக்குனர் (பொ) டாக்டர் ராமலிங்கம், ரோட்டரி மாவட்ட கால்நடை மருத்துவ முகாம் தலைவர் டாக்டர் வி. பாலகிருஷ்ணன், பேங்க் ஆப் பரோடா மேலாளர் சிவின்டு சட்டர்ஜி , பேங்க் ஆப் பரோடா விவசாய அதிகாரி மோனிகா, பேங்க் ஆப் பரோடா ராஜ்குமார், மிட்டவுன் ரோட்டரி சங்கம் தலைவர் டி.ரெங்கையன், செயலாளர் வி. கோபாலகிருஷ்ணன், உள்ளிக்கோட்டை கால்நடை மருத்துவர் கார்த்திக், ஓய்வு பெற்ற கூடுதல் இயக்குனர் டாக்டர் டி.தமிழ்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.

    இந்த கால்நடை மருத்துவ முகாமில் மாடுகளுக்கு ஏற்படும் இலம்பி தோல் நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? மாடு, ஆடுகளைத் தாக்கும் அம்மை நோய் பரவாமல் தடுப்பது எப்படி? கோழிகளுக்கு நோய் வராமல் தடுப்பது எப்படி ? என்பது உள்ளிட்ட பல்வேறு நோய் தாக்குதல்களில் இருந்து கால்நடைகளை பாதுகாப்பது குறித்து விளக்கம் அளிக்கப்ப டுகிறது.

    மேலும் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    தடுப்பூசி செலுத்த ப்படுகிறது. இந்த முகாமில் சிறந்த கால்நடைகன்றுகளை பராமரிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்ப டுகின்றன.

    • முகாமில் 485 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.
    • 116 பேருக்கு கண் அறுவை சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி கோகனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கமும், ஏவிஆர் தனலட்சுமி ஜுவல்லரி மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையும் இணைந்து நடத்திய மாபெரும் இலவசகண் சிகிச்சை முகாம் நடைபெ ற்றது.

    முகாமிற்குசங்கத் தலைவர் எஸ்பாண்டிய ராஜன் தலைமைவகித்தார்.

    மண்டல ஒருங்கிணைப்பாளர் வ.பாலசுப்பி ரமணியன், மாவட்டத் தலைவர்கள் எம்.நீலகண்டன், கே.இளங்கோ, சங்கச் செயலாளர் எம்.எஸ்.ஆறுமுகம், பொருளாளர் சங்கர்ஜவான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் தனலட்சுமி ஜுவல்லரி நிறுவனர் சுதர்சனவள்ளி பாலாஜி குத்து விளக்கு ஏற்றினார்.

    முகாமை கண்பார்வை மாவட்ட தலைவர் வி.விஜயகுமார் தொடங்கி வைத்தார்.

    மண்டலத் தலைவர்சிவகுமார், வட்டாரத் தலைவர் குருநாதன், கண் சிகிச்சை முகாமின் ஒருங்கிணை ப்பாளர் செல்வகுமார், ஏவிஆர் தனலட்சுமி பாலாஜி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

    இந்நிக ழ்ச்சியில் கண் மருத்துவர்கள், செவிலியர்கள், சாசனச் செயலாளர் வ.ஜெய்சங்கர், சாசன பொருளாளர் மைதீன்பிச்சை, செய்தி தொடர்பாளர் கதிரவன், சபரி முத்துகுமார்உள்ளிட்ட உறுப்பினர்கள், பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

    முகாமில் 485 பேருக்கு கண் பரிசோதனை செய்ய ப்பட்டது. அதில் 116 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    • தலையில் படுகாயமடைந்த மாதேஷ் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
    • திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

    கும்பகோணம்:

    திருப்பனந்தாள் அருகே உள்ள மானம்பாடி அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் மணிகண்டன். விவசாய தொழிலாளி.

    இவருடைய மகன் மாதேஷ் (வயது3).

    இவர்கள் கடந்த 21-ந் தேதி திருப்பனந்தாளில் இருந்து மானம்பாடி நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர்.திருவாய்ப்பா டியில்சென்றபோது அங்கு வந்த மாடு இருவரையும் முட்டியது.

    இதில் தலையில் படுகாயம் அடைந்த மாதேஷ் கும்பகோணம் அரசு ஆஸ்பத் திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    பின்னர் மாதேஷ் மேல் சிகிச் சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று குழந்தை மாதேஷ் பரிதாபமாக இறந்தான்.

    இதுகுறித்து திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நரம்பியல், சர்க்கரை நோய் ஆகியவற்றிற்கு பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை.
    • ஆங்கில மாதம் கடைசி சனிக்கிழமைகளில் கட்டணமில்லா தொடர் மருத்துவ முகாம் நடைபெறும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சி மற்றும் 30-வது வார்டு கவுன்சிலர் யு.என். கேசவன் ஆகியோர் இணைந்து நடத்தும் கட்டணமில்லா தொடர் மருத்துவ முகாம் இன்று தஞ்சை மானம்புசாவடி கிருஷ்ணன் கோவில் முதல் தெரு ஸ்ரீஸ்வாம் நர்சரி பள்ளியில் தொடங்கியது.

    இந்த நிகழ்ச்சிக்கு 30-வது வார்டு கவுன்சிலர் யு.என். கேசவன் தலைமை தாங்கினார். முகாமை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி மங்கள தீபம் ஏற்றினார்.

    சௌராஷ்ட்ர கல்வி நிதி உதவி சங்கம் துணைத் தலைவர் ராமச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினார். முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் சுப்பராமன், உமாபதி, ஆதிநாராயணன், ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த முகாமில் ரத்த அழுத்தம் பரிசோதனை, சர்க்கரை பரிசோதனை, எடை, உயரம், இ.சி.ஜி‌. கால் பாதம், நரம்பியல், சர்க்கரை நோய் ஆகியவற்றிற்கு பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. மேலும் மருந்துகள் வழங்கப்பட்டது.

    இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    பிரதி ஆங்கில மாதம் கடைசி சனிக்கிழமைகளில் கட்டணமில்லா தொடர் மருத்துவ முகாம் நடைபெறும் என்று கவுன்சிலர் யு.என். கேசவன் தெரிவித்தார்.

    இதில் 30-வது வார்டு பகுதி சபா குழு உமாபதி, ராமமூர்த்தி ,ஜெகநாதன், ரங்கராஜன், தஞ்சாவூர் ஏன்சியன்ட் சிட்டி லயன்ஸ் சங்கம் தலைவர் பாலகிருஷ்ணன், செயலர் சுந்தர், பொருளர் தமிழவதி, துணைத் தலைவர் துரை பத்மநாபன், சங்க நிர்வாகி ராமச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் கோவிந்தராஜு நன்றி கூறினார்.

    • 109 வெளிநோயாளிகளுக்கு கண்சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • 109 வெளிநோயாளிகளுக்கு கண்சிகிச்சை அளிக்கப்பட்டது.

    திருவையாறு:

    திருவையாறு சீனிவாசராவ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது.

    திருவையாறு ரோட்டரி சங்கமும் கோவை சங்கரா கண் மருத்துவ மனையும் இணைந்து நடத்திய இலவச கண்சிகிச்சை முகாமில் 109 வெளி நோயாளர்களுக்கு கண்சிகிச்சை அளிக்கப்பட்டது.

    33 கண் நோயாளர்களுக்கு கண்புரை கண்டுபிடிக்கப்பட்டு, இலவச. கண் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டு கோவை சங்கராண் மருத்துவ மனைக்கு சிறப்பு பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இம்முகாமில் திருவையாறு ரோட்டரி சங்கத் தலைவர் கணேசன், செயலாளர் செந்தில்குமார் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சேவையாற்றினர்.

    • சுபஸ்ரீ என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்தது.
    • தங்கராசு நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பொய்யுண்டார் கோட்டை கிராமத்தை சேர்ந்த தனுக்கோடி மகள் சுகாமதி(வயது 43).

    இவரது குடும்பத்தினருக்கும், அதே ஊரை சேர்ந்த வினோத் மனைவி சுபஸ்ரீ(23) என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்தது.

    இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறின்போது சுகாமதியையும், அதே ஊரை சேர்ந்த அவரது சித்தப்பா தங்கராசு(70) என்பவரையும் சுபஸ்ரீ உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் சிலர் தாக்கி உள்ளனர்.

    இதில் மயக்கம் அடைந்து கீழே விழுந்த தங்கராசுவை அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த தங்கராசு நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    துகுறித்து தங்கராசுவின் அண்ணன் மகள் சுகாமதி கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார், சுபஸ்ரீ உள்ளிட்ட அவரது குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பஸ் நிலையத்தில் கடும் குளிரிலும், மழையிலும் ஒரு வயதான மூதாட்டி தவித்து வந்தார்.
    • மூதாட்டிக்கு உரிய மனநல சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் காட்டூர் பஸ் நிலையத்தில் கடும் குளிரிலும், மழையிலும் ஒரு வயதான மூதாட்டி ஒருவர் தவித்து வந்தார்.

    இது பற்றி காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் விமலா பிரபாகர் அளித்த தகவலின் படி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா அறிவுறுத்தலின் பேரில் நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் சவுந்தர்ராஜன் அறிவுரையின் பேரில் மாவட்ட குழந்தைகள் குற்ற பாதுகாப்பு காவல் ஆய்வாளர் கண்ணகி, தலைமை காவலர் சத்யா, ஓ. எஸ். சி. நிர்வாகி சுமிதா, மெர்லின், சமூகப் பணியாளர்கள் கீர்த்தி, ஆகாஷ், வினோத் ஆகியோர்கள் உதவியுடன் மூதாட்டி மீட்டு நம்பிக்கை மனநல காப்பகத்தில் சேர்த்தனர்.அங்கு அவருக்கு உரிய மனநல சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதற்கு உதவி செய்த பாரதி தொண்டு நிறுவன இயக்குனர் நாகராஜன், காவல்துறைக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாக நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் சௌந்தர்ராஜன் கூறினார்.

    அப்போது உடன் காப்பக செவிலியர் சுதா, ஒருங்கிணைப்பாளர் சரவணன், உதவியாளர் சங்கர் ஆகியோர் இருந்தனர்.

    • மேற்கூறை யிலிருந்து சிமெண்ட் காரைகள் திடீரென்று பெயர்ந்து ஆதிலட்சுமி மீது விழுந்தது.
    • ஆதிலட்சுமியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த அழகிய நத்தம் காலனியை சேர்ந்த வர் ஆதிலட்சுமி (வயது 70). இவர் தொகுப்பு வீட்டில் வசித்து வருகிறார். நேற்று நள்ளிரவு தொகு ப்பு வீட்டில் மேற்கூறை யிலிருந்து சிமெண்ட் காரைகள் திடீரென்று பெயர்ந்து ஆதிலட்சுமி மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் கதறி துடித்து அழுதார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உடனடியாக தலையில் காயமடைந்த ஆதிலட்சுமியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆதிலட்சுமிக்கு டாக்டர்கள் உடனடி யாக சிகிச்சை அளித்த னர்.

    ஆதிலட்சுமி வசித்து வந்த தொகுப்பு வீட்டில் ஏற்கனவே ஆங்கா ங்கே சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து வந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை காரணமாக கட்டிடம் மழை நீரில் ஊறி மீண்டும் சிமெண்ட் காரைகள் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தூக்கணா ம்பாக்கம் போலீசார் விசார ணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை அளிக்கப்படுவதாக தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் தெரிவித்தன.
    • கிராமப்புற பகுதிகளை சேர்ந்த மக்கள் உயர்ரக சிகிச்சை பெறுகின்றனர்.

    ராஜபாளையம்

    அரசு மகப்பேறு மருத்து வமனையில் தர மதிப்பீடு செய்வதற்காக தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினர் இரு நாட்கள் ஆய்வில் ஈடுபட்டனர்.

    மத்திய அரசு சார்பில் நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் மகப்பேறு சிகிச்சை யின் தரத்தை மேம்படுத்துவதற்காக 2017-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட லக்சயா திட்டத்தின்படி தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆய்வு செய்து நேஷனல் ஹெல்த் அத்தாரிட்டி சார்பில் தேசிய தர சான்றிதழ் வழங்கப்படு கிறது.

    இந்த ஆய்வு குறித்து தேசிய தர மதிப்பீட்டு குழு வினர்களான டாக்டர்கள் பரீத் உத்தின், ஜேயெஸ் பட்டேல் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவ மனை மகப்பேறு மற்றும் குழந்தைகள் சிறப்பு சிகிச்சை மையமாக மருத்துவமனை செயல்படுகிறது. அங்கு உயர்தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் மூலம் சுற்றுவட்டார கிரா மப்புற பகுதிகளை சேர்ந்த மக்கள் உயர்ரக சிகிச்சை பெறுகின்றனர்.

    ஆய்வு முடிவில் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிறந்த மதிப்பு வழங்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. தொடர்ந்து மக்களுக்கு தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த ஆய்வு நடத்தப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நள்ளிரவு 12 மணி அளவில் அவசரமாக அறுவை சிகிச்சை.
    • மருத்துவர்களின் அலட்சியத்தால் தான் குழந்தை இறந்ததது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த பன்னால் கீழக்காடு பகுதியை சேர்ந்தவர் வீரசேகரன். இவரது மனைவி திருமுகப்பிரியா.

    இவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன் தலை பிரசவத்திற்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    குழந்தைக்கு தொப்புள் கொடி சுத்தி இருப்பதால் மேல் சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு திருமுகப்பிரியாவுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு பணிக்குடம் உடைந்துள்ளது. நள்ளிரவு 12 மணி அளவில் திருமுகப்பிரியாவிற்கு அவசரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். இதில் குழந்தை உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவ ர்களின் அலட்சியத்தால் தான் குழந்தை இறந்ததாக கூறி நாகை அரசு மருத்துவகல்லூரி மருத்து வமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் வெளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    இது குறித்து குழந்தையின் தந்தை வீரசேகரன் வெளிப்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் விசாரித்து வருகிறார்கள். பிரசவத்தின் போது குழந்தை இறந்த சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஒரு டப்பாவில் அடைத்து கால்நடை மருத்துவமனைக்கு எடுத்து சென்றார்.
    • மருத்துவ உதவியாளர் பாம்பின் வாலில் அடிபட்ட காயத்துக்கு மருந்து வைத்து சிகிச்சை அளித்தார்.

    சீர்காழி:

    சீர்காழி இரணிய நகர் பகுதியில் பொது குடிநீர் குழாய் அருகே இன்று சுமார் 6 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு படம் எடுத்த படி சீறிக் கொண்டிருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் பாம்பு பிடி நபர் சீர்காழியை சேர்ந்த பாண்டியனுக்கு தகவல் அளித்தனர்.

    அதன்படி அங்கு சென்ற பாண்டியன் நல்ல பாம்பினை லாவகமாக பிடித்தார்.

    அப்போது பாம்பின் வால் பகுதியில் முள் குத்தி காயம் ஏற்பட்டிருந்ததை கண்ட பாண்டியன் அதற்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்தார்.

    பிடிபட்ட பாம்பினை ஒரு டப்பாவில் அடைத்து சீர்காழி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்.

    அங்கு பணியில் இருந்த மருத்துவ உதவியாளர் தகவல் தெரிவித்தார்.

    மருத்துவ உதவியாளர் பாம்பின் வாலில் அடிபட்ட காயத்துக்கு மருந்து வைத்து சிகிச்சை அளித்தார்.

    சிகிச்சை அளிக்கப்பட்ட பாம்பினை பாண்டியன் ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டார்.`

    • பயிற்சி பெற்ற மருத்துவரால் 3 நிமிடங்களில் செய்யப்படுகிறது.
    • அளவான குடும்பத்தை அமைத்திட அரசு உதவுவதோடு ஊக்கத்தொகை மற்றும் இதர சலுகைகளையும் வழங்குகிறது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவின்படி, மாவட்ட சுகாதார துறை துணை இயக்குநர் விஜயகுமார் அறிவுரைப்படி, தலைஞாயிறு வட்டார மருத்துவ அலுவலர் தேவிஸ்ரீ வழிகாட்டுதலில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நாகை செல்வன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழுவினர் ஆண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு நலக்கல்வியை ஒவ்வொரு கிராமங்களாக சென்று வழங்கி வருகின்றனர்.

    அந்த வகையில், வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு வட்டாரத்தில் குடும்பக்கட்டுப்பாடு செய்துகொள்ள இயலாத உடல்நிலை அல்லது விருப்பப்படாத சூழலில் கணவனே தாமாக முன்வந்து குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக விழிப்புணர்வு பணிகள் நடைபெற்றது.

    இது குறித்து வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நாகை செல்வன் கூறும்போது:-

    ஆண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு மிகவும் எளிய சிகிச்சை முறை மற்றும் பயிற்சி பெற்ற மருத்துவரால் 3 நிமிடங்களில் செய்யப்படுகிறது.

    இதனால், வாழ்வில் எவ்வித தடையுமில்லை, பக்கவிளைவுகள் ஏதுமில்லை, எப்போதும் போல் கடின உழைப்பை மேற்கொள்ளலாம், சிக்கனமான சிகிச்சை என்பதால் மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை.

    மேலும், அளவான குடும்பத்தை அமைத்திட அரசு உதவுவதோடு ஊக்கத்தொகை மற்றும் இதர சலுகைகளையும் வழங்குகிறது என்றார். 

    ×