search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wayanad Landslide"

    • 64.5 மில்லி மீட்டர் முதல் 115.5 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • வடகேரள கடற்கரை பகுதியில் மணிக்கு 35 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியதில் இருந்தே, பலத்த மழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கும் மாவட்டங்களின் விவரத்தை இந்திய வானிலை ஆய்வு மையம் தினமும் அறிவித்தபடி இருக்கிறது.

    தற்போது கனமழையால் வயநாட்டில் பெரும் உயிர்ப்பலி மற்றும் சேதம் ஏற்பட்ட நிலையில், கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் விவரத்தை தெரிவித்து வருகிறது.

    அதன்படி வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அங்கு 64.5 மில்லி மீட்டர் முதல் 115.5 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வடகேரள கடற்கரை பகுதியில் மணிக்கு 35 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

    • காபி மரங்களால் மூடப்பட்ட அந்த குன்றில் யானைகளும் தஞ்சமடைந்திருந்தன.
    • யானையின் கண்களைப் பார்க்கையில் எங்களின் இக்கட்டான சூழ்நிலையை அது புரிந்து கொண்டது போல் தோன்றியது.

    திருவனந்தபுரம்:

    முண்டகையில் உள்ள ஹாரிசன்ஸ் தேயிலை தோட்டத்தில 18 ஆண்டுகளாக தேயிலை பறிக்கும் தொழிலாளி சுஜாதா அனிநஞ்சிரா.

    இவர் தனது மகள் சுஜிதா, மருமகன் குட்டன், பேரக்குழந்தைகள் சூரஜ் (18), மிருதுளா (12) ஆகியோருடன் வசித்து வந்தார். நிலச்சரிவின் போது இவரது குடும்பம் யானையின் கருணையால் உயிர் தப்பியது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    நிலச்சரிவில் இருந்து தப்பிய தனது அனுபவத்தை பற்றி சுஜாதா கூறியதாவது:-

    கடந்த திங்கள்கிழமை இரவே பெய்யத் தொடங்கிய மழை நள்ளிரவைத் தாண்டி செவ்வாய்க்கிழமை 4 மணிக்கு கனமழையாக மாறியது. இதையடுத்து, வீட்டை தண்ணீர் சூழ ஆரம்பித்தது. அங்கிருந்து அருகில் உள்ள குன்றுக்கு தப்பினோம். காபி மரங்களால் மூடப்பட்ட அந்த குன்றில் யானைகளும் தஞ்சமடைந்திருந்தன.


    எங்களுக்கு சில அங்குல தூரத்தில்தான் யானை கூட்டம் நின்றிருந்தது. அதன் கால்களுக்கு இடையில்தான் இரவு பொழுது முழுவதையும் பயத்துடன் கழித்தோம். அந்த யானையின் கண்களைப் பார்க்கையில் எங்களின் இக்கட்டான சூழ்நிலையை அது புரிந்து கொண்டது போல் தோன்றியது. அதனால், அந்த யானை கூட்டம் ஆக்ரோஷமாகி எங்களை தாக்க முற்படவில்லை.

    காலையில் மீட்புக் குழுவினர் எங்களை வந்து மீட்கும் வரை யானைகளும் எங்களின் பாதுகாப்புக்கு அரணாக அங்கேயே நின்றிருந்தன.

    சூரியன் உதிக்கையில் யானையின் கண்கள் துளிர விட்டு ஆசிர்வதிப்பதை என்னால் பார்க்க முடிந்தது. இது, எனது வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நிலச்சரிவு ஏற்பட்ட பிறகு 30-ம் தேதி காலை 6 மணிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை வந்தது.
    • மஞ்சள் நிற எச்சரிக்கையின் அடிப்படையில் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் வழக்கமாக அரசு மேற்கொள்வதில்லை.

    கேரளா மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு 300-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஆனால் அதிகனமழை, நிலச்சரிவு பற்றிய துல்லிய வானிலை எச்சரிக்கையை அளித்திருந்தால், மக்களை அங்கிருந்து இடமாற்றம் செய்திருக்கலாமே என்ற குரல்கள் கேட்கின்றன.

    இதுகுறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, 'கேரள அரசுக்கு கடந்த 23-ம் தேதி, முதல் வானிலை எச்சரிக்கை, மத்திய அரசால் அளிக்கப்பட்டது. அதே எச்சரிக்கை அடுத்தடுத்து 3 நாட்களுக்கு அளிக்கப்பட்டன. அங்கு 20 சென்டி மீட்டர்க்கு மேல் கனமழை பெய்யக்கூடும் என்று கேரளா அரசுக்கு 26-ம் தேதி எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு, நிலச்சரிவும் ஏற்படலாம், அதனால் பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டது' என்று தெரிவித்தார்.

    மத்திய மந்திரி அமித்ஷா கூறியதை மறுத்த கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன், 'இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐ.எம்.டி.), இந்திய புவியியல் ஆய்வகம் (ஜி.எஸ்.ஐ.) மற்றும் மத்திய நீர் ஆணையம் ஆகிய 3 முகமைகளுமே, வயநாட்டில் 30-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவிற்கு முன்பு, ரெட் அலர்ட் என்ற சிகப்பு நிற எச்சரிக்கையை (மிகஅதிக அளவிலான மழை பாதிப்பு பற்றிய எச்சரிக்கை) அளிக்கவில்லை.

    நிலச்சரிவு ஏற்பட்ட பிறகு 30-ம் தேதி காலை 6 மணிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை வந்தது. மேலும், 30 மற்றும் 31-ம் தேதிகளுக்கு ஜி.எஸ்.ஐ. கொடுத்தது பச்சை நிற எச்சரிக்கையைத்தான் (மிகக்குறைவான மழை பாதிப்பு பற்றிய எச்சரிக்கை). அதில், சிறிய அளவில் நிலச்சரிவோ அல்லது பாறை வெடிப்போ ஏற்படலாம் என்றுதான் கூறப்பட்டு இருந்தது. மத்திய மந்திரி அமித்ஷா கூறும் கருத்து, உண்மைக்கு முரணாக உள்ளது'' என்று கூறினார்.

    உண்மையில் இந்திய வானிலை ஆய்வு மையம் கொடுத்த செய்திக் குறிப்பு விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் உள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

    அதன்படி இந்திய வானியை ஆய்வு மைய ஜூலை 18-ம் தேதி செய்திக்குறிப்பில், 19-ம் தேதி கேரளாவின் வடபகுதியில் வெள்ளம் ஏற்படக் கூடும் என்று கூறப்பட்டுள்ளது. ஜூலை 23-ம் தேதி செய்திக்குறிப்பில், கேரளா மற்றும் மாகேயில் 25-ம் தேதி சில இடங்களில் மிக கனமழை பெய்யக் கூடும்; சில இடங்களில் 27-ம் தேதிவரை கனமழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.

    அந்த வகையில், ஜூலை 25-ம் தேதிக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் (அதிக மழைக்கான எச்சரிக்கை), 23, 24, 26, 27-ம் தேதிகளுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் (சற்று கூடுதல் மழை பாதிப்பு எச்சரிக்கை) அளிக்கப்பட்டது. மஞ்சள் நிற எச்சரிக்கையின் அடிப்படையில் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் வழக்கமாக அரசு மேற்கொள்வதில்லை.

    ஜூலை 25-ம் தேதி செய்திக்குறிப்பில், கேரளா மற்றும் மாகேயில் இடி, மின்னலுடன் லேசான மழை முதல் மிதமான மழை அடுத்த 5 நாட்களுக்கு பெய்யக்கூடும், சில இடங்களில் கனமழை பெய்யலாம் என்று கூறப்பட்டு இருந்தது. ஜூலை 29-ம் தேதி செய்திக்குறிப்பில், அதிக மழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் 30-ம் தேதியன்று அதிகாலையில் நிலச்சரிவு பேரிடர் நேரிட்டது. அதன் பிறகுதான் 30-ம் தேதி பிற்பகல் 1.10 மணிக்கு ரெட் அலர்ட் என்ற சிகப்பு நிற எச்சரிக்கை அளிக்கப்பட்டது. 

    • நிலச்சரிவில் சிக்கி இதுவரை 340க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
    • இதுபோன்ற சூப்பர் ஹீரோக்களால் கேரளாவின் புகழ் பிரகாசமாக ஜொலிக்கிறது

    கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி கொட்டித்தீர்ந்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. நள்ளிரவு வேளையில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டதில் பலநூறு குடும்பங்களை சேர்ந்தவர்கள் மண்ணில் புதைந்து போயினர்.

    இந்த கோர நிலச்சரிவில் சிக்கி இதுவரை 340க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், வயநாடு நிலச்சரிவில் அட்டமாலா வனப்பகுதியில் சிக்கித்தவித்த பழங்குடியின குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் உட்பட 6 பேரை 8 மணி நேரம் போராடி கேரள வனத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

    இந்த சம்பவத்தின் புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயன் பாராட்டியுள்ளார்.

    அவரது பதிவில், "இத்தகைய இருண்ட காலத்திலும் இதுபோன்ற சூப்பர் ஹீரோக்களால் கேரளாவின் புகழ் பிரகாசமாக ஜொலிக்கிறது என்பதை இவர்களின் வீரம் நமக்கு நினைவூட்டுகிறது" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

    • நிலச்சரிவில் சிக்கி இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
    • நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களில் 4வது நாளாக மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    நிலச்சரிவில் புதைந்தவர்களை தேடுவதற்கு தெர்மல் ஸ்கேனர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பலர் மண்ணில் புதைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

    நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களில் 4வது நாளாக மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், நிவாரணப் பணிகளுக்காகக் கேரளா சென்றுள்ள ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் ஆய்வு மேற்கொண்டார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    வயநாடு நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்காகக் கேரளாவுக்குச் சென்றுள்ள நமது இரண்டு IAS அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் முழு முனைப்புடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அவர்களது பணிகள் குறித்துக் கேட்டறிந்ததோடு, தவிக்கும் கேரள மக்களின் தேவைகள் என்னென்ன என்பதை அறிந்து உதவத் தமிழ்நாடு தயாராக இருக்கிறது என்பதை அங்குள்ளவர்களிடம் கூறும்படி அறிவுறுத்தியுள்ளேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 20 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்து நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு என எச்சரிக்கை கொடுத்தோம்- அமித் ஷா
    • மாநிலங்களவையில் அமித் ஷா சொன்னது தவறு என்பது நிரூபணமாகியுள்ளது- ஜெய்ராம் ரமேஷ்

    கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 29-ந்தேதி நள்ளிரவு கனமழை மற்றும் மேக வெடிப்பு காரணமாக மழை கொட்டித்தீர்த்தது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.

    இதனால் சில கிராமங்கள் மண்ணில் புதைந்தன. தற்போது வரை பலி எண்ணிக்கை 340-ஐ தாண்டியுள்ளது. இதற்கிடையே வயநாடு நிலச்சரிவு தொடர்பாக நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசும்போது, கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் கேரள அரசு எச்சரிக்கையை செயல்படுத்தவில்லைத் தெரிவித்திருந்தார்.

    இதை கேரள மாநில முதல்வர் பினராயி விஜய் மறுத்திருந்தார். 30-ந்தேதி காலையில்தான் எச்சரிக்கை விடுக்கப்பட்டது எனத் தெரிவித்திருந்தார்.

    அந்த நிலையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கூறியதை மறுத்து காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

    ஜெய்ராம் ரமேஷ் வழங்கிய நோட்டீஸில் "மத்திய அரசின் முன்னெச்சரிக்கை குறித்த மத்திய உள்துறை மந்திரியின் அறிக்கைகள் பொய் என நிரூபிக்கப்பட்டதன் மூலம் ராஜ்யசபாவை தவறாக வழி நடத்தியது தெளிவாகிறது. ஒரு அமைச்சர் அல்லது உறுப்பினர் சபையை தவறாக வழி நடத்துவது சிறப்புரிமையை மீறுவதாகவும், அவையை அவமதிப்பதாகவும் அமைகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

    கடந்த புதன்கிழமை அமித் ஷா மாநிலங்களவையில் "நிலச்சரிவு ஏற்படுவதற்கு ஏழு நாட்களுக்கு முன்பாக ஜூலை 23-ந்தேதி மத்திய அரசு முன்னெச்சரிக்கை கொடுத்தது. ஜூலை 24 மற்றும் 25-ந்தேதி மீண்டும் எச்சரித்தோம். ஜூலை 26-ந்தேதி 20 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. மேலும் நிலச்சரிவுக்கு வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டது" என அமித் ஷா தெரிவித்தார்.

    • தொடர் கனமழை போன்ற காரணங்களால் மீட்பு பணிகள் இன்னமும் முடிவுக்கு வராத சூழல் நிலவுகிறது.
    • மேலும் பலர் மண்ணில் புதைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு.

    கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி கொட்டித்தீர்ந்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. நள்ளரிவு வேளையில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது அடுத்தத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டதில் பலநூறு குடும்பங்களை சேர்ந்தவர்கள் மண்ணில் புதைந்து போயினர்.

    வீடுகள் இடிந்து விழுந்தும், மரங்கள் வேறோடு சாய்ந்தும், தொடர் கனமழை போன்ற காரணங்களால் மீட்பு பணிகள் இன்னமும் முடிவுக்கு வராத சூழல் நிலவுகிறது. இன்று நான்காம் நாளை எட்டிய மீட்பு பணிகளில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 340-ஐ கடந்துள்ளது.

    மேலும், நிலச்சரிவில் புதைந்தவர்களை தேடுவதற்கு தெர்மல் ஸ்கேனர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தெர்மல் ஸ்கேனர் கொண்டு தேடும் போது சேறு, சகதிகளில் யாரேனும் சிக்கி இருந்தால் அதனை ஸ்கேனர் காட்டிக் கொடுக்கும்.

    மேலும் பலர் மண்ணில் புதைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

    • சமூகம் அனுபவிக்கும் சீரழிவுகளும் இழப்புகளும் நெஞ்சைப் பிசைகின்றன.
    • நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் நாம் ஒன்றுபட்டு நிற்போம்.

    நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள வயநாட்டிற்கு நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதி கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

    மேலும், இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், " பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நாம் ஒன்றுபட்டு நிற்போம்" என்று நயன்தாரா கூறினார்.

    வயநாட்டில் ஏற்பட்ட சோகமான நிலச்சரிவு சம்பவத்தை அடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் சமூகங்கங்களுடன் எங்கள் இதயம் இருக்கிறது.

    சமூகம் அனுபவிக்கும் சீரழிவுகளும் இழப்புகளும் நெஞ்சைப் பிசைகின்றன. மிகவும் தேவைப்படும் இந்த நேரத்தில், ஒருவருக்கொருவர் ஆதரவளிக்க ஒன்றிணைவதன் முக்கியத்துவத்தை நாங்கள் நினைவுபடுத்துகிறோம்.

    ஒற்றுமையின் அடையாளமாக, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான உடனடி உதவிகளை வழங்கவும், மறுசீரமைப்புச் செயல்பாட்டில் உதவி செய்யவும் முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.20,00,000 (ரூபா இருபது லட்சம் மட்டும்) வழங்குகிறோம்.

    நமது அரசாங்கம், தன்னார்வத் தொண்டர்கள், மீட்புக் குழுக்கள் மற்றும் பல அமைப்புகளின் ஒருங்கிணைந்த உதவியைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

    மீண்டும் கட்டியெழுப்பவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் நாம் ஒன்றுபட்டு நிற்போம்!

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கடந்த 3 நாட்களாக மனித சக்தி மூலம்தான் மீட்பு பணிகள் நடந்தன.
    • தேடும் பணியை பொதுமக்கள் உதவியுடன் கேரள மாநில அரசு விரிவுப்படுத்தி உள்ளது.

    சென்னை:

    கேரள மாநிலத்தின் வடக்கு பகுதியில் தமிழக எல்லையில் அமைந்துள்ள மலைப்பாங்கான வயநாடு மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது.

    அந்த மாவட்டத்தில் உள்ள சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கும் தேயிலை தோட்டங்கள் நிறைந்த முண்டகை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய 3 கிராமங்களில் அதிகாலை 2 மணிக்கு தொடங்கி 4 மணி வரை அடுத்தடுத்து மலை அடுக்குகள் கடுமையான சத்தத்துடன் சரிந்து விழுந்தன.

    முண்டகை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய 3 ஊர்களும் தலா 7 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் உள்ளன. இந்த 7 கிலோ மீட்டர் சுற்றளவும் முழுமையாக சேதம் அடைந்தன. நிலச்சரிவில் ஆயிரக்கணக்கானோர் சிக்கிக் கொண்டனர். 600-க்கும் மேற்பட்டவர்கள் வீடுகளுடன் மண்ணுக்குள் புதைந்தனர்.

    நூற்றுக்கணக்கானவர்களை அந்த பகுதியில் ஓடும் ஆற்று வெள்ளம் அடித்து சென்றது. மலைப் பகுதியில் இருந்துடன் கணக்கில் எடையுடன் கூடிய பிரமாண்டமான பாறைகள் மண்ணுடன் கலந்து வெள்ளம் போல் வந்து குடியிருப்பு பகுதிகளை அடித்து சூறையாடி விட்டது. இதனால் முண்டகை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய 3 ஊர்களும் மண்ணில் புதைந்தும், பாறைகளால் மோதியும் அழிந்து உருத்தெரியாமல் போய் விட்டன.

    கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை நடந்த இந்த இயற்கை கோர தாண்டவத்தில் சிக்கியவர்களை மீட்க ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்பு படை, கடலோர காவல் படை, காவல் துறை, தீயணைப்புத் துறை வீரர்கள் ஒருங்கிணைந்து தேடுதல் பணிகளில் ஈடுபட்டனர். வயநாடு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வந்த மழை காரணமாக கடும் போராட்டத்துக்கு மத்தியில் ராணுவத்தினர் ஒருங்கிணைந்து மீட்பு பணிகளை மேற் கொண்டனர்.

    கடந்த 3 நாட்களாக நடந்து வரும் மீட்பு பணியில் இதுவரை 318 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 240 பேரை காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3 கிராமங்களில் வசித்து வந்த மக்களின் குடும்ப அட்டை விவரங்களின் அடிப்படையில் 240 பேர் இன்னமும் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.


    நிலச்சரிவு கோர தாண்டவம் காரணமாக முண்டகை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய 3 ஊர்களும் துண்டிக்கப்பட்டு தனித்தனி தீவுகள் போல மாறி விட்டன. அதோடு இந்த 3 ஊர்களிலும் மண்ணின் ஈரப்பதம் மிக அதிகளவில் இருந்ததால் மீட்பு படையினர் கடும் சவால்களை சந்திக்க நேரிட்டது.

    சூரல்மலை-முண்டகை இடையே பாலம் அமைத்தால்தான் 2 கிராமங்களிலும் மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் வீடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து ராணுவத்தினர் இந்த இரு ஊர்களுக்கும் இடையே தற்காலிகமாக 190 அடி நீளம் உள்ள "பெய்லி" எனப்படும் இரும்பு பாலத்தை அமைத்துள்ளனர்.

    அந்த பாலத்தின் கட்டுமானப் பணிகள் நேற்று மாலை நிறைவு பெற்றது. அதன் வழியாக ராணுவ கன ரக வாகனங்களும், ஆம்புலன்சுகளும் நிலச்சரிவு மிக கடுமையாக ஏற்பட்ட பகுதிகளுக்கு சென்று சேர்ந்தன.

    நேற்று மாலை மிக அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதிக்கு ராணுவத்தினர் சென்று சேர்ந்துவிட்டாலும் இரவு தொடங்கி விட்டதால் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டன. இன்று (வெள்ளிக்கிழமை) 4-வது நாளாக காலை முதல் மீட்பு பணிகள் நடந்து வருகிறது. ராணுவ வாகனங்கள் பாதிப்புகுள்ளான இடம் அருகே வரை செல்லவசதி செய்யப்பட்டு இருப்பதால் அதிநவீன கருவிகள், எந்திரங்களை எடுத்து சென்று உள்ளனர்.

    குறிப்பாக டிரோன் உதவியுடன் ராடார் மூலம் தேடும் பணி தொடங்கி உள்ளது. அதுபோல நவீன எந்திரங்களை ஆங்காங்கே கொண்டு சென்று பூமிக்குள் லேசர் மூலம் யாராவது புதைந்து கிடைக்கிறார்களா? என்பதை கண்டறியும் பணியும் தொடங்கி உள்ளது.

    நொறுங்கி கிடக்கும் வீடுகள், மண் மூடி கிடக்கும் பகுதிகளில் லேசர் மூலம் மக்கள் யாராவது சிக்கி இருக்கிறார்களா? என்று தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அது போல மிகவும் சிக்கலான பகுதிகளுக்கு தீயணைப்பு படையினரும், ராணுவத்தின் சிறப்பு படையினரும் ஒருங்கிணைந்து சென்று தேட தொடங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் இன்று காலை வயநாடு மாவட்டத்தில் கடுமையான சாரல் மழை பெய்தது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை இலாகா ரெட் அலார்ட் வெளியிட்டுள்ளது. இதனால் 4-வது நாளாக இன்று மீட்பு குழுவினர் கடும் சாவல்களை சந்திக்க நேரிட்டது.

    கடந்த 3 நாட்களாக மனித சக்தி மூலம்தான் மீட்பு பணிகள் நடந்தன. இன்று நவீன எந்திரங்களை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். நிலச்சரிவில் முழுமையாக மண்ணுக்குள் புதைந்த வார்டுகளில் ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் மணலை அகற்றும் பணி நடந்து வருகிறது. இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது.

    இதற்கிடையே மண்ணில் புதைந்தவர்களில் சிலர் உயிருக்கு போராடிய நிலையில் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. அப்படி யாராவது போராடிக் கொண்டு இருக்கிறார்களா? என்பதை அறிவதற்காக முப்படையில் உள்ள மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. அதுபோல அண்டை மாநிலங்களில் உள்ள காவல் துறையில் இருக்கும் மோப்ப நாய்களும் வயநாடு மாவட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.


    தமிழகத்தில் இருந்தும் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தங்களுடன் 6 மோப்ப நாய்களை கொண்டு சென்று உள்ளனர். இந்த மோப்ப நாய்களின் உதவியுடன் உயிருக்கு போராடுபவர்களையும், உயிரிழந்தவர்களையும் தேடும் பணி நடந்து வருகிறது.

    தேடும் பணியை முறைப்படி செய்து முடிப்பதற்காக பாதிக்கப்பட்ட பகுதிகளை 6 மண்டலமாக பிரித்து ராணுவ வீரர்கள் தேடும் பணியை நடத்தி வருகிறார்கள். மண்ணில் புதைந்தவர்களை மீட்பதற்கு முன்னுரிமை கொடுத்து தேடும் பணி நடந்து வருகிறது.

    இதற்கிடையே முண்டகை, சூரல்மலை, மேப்பாடி பகுதிகளில் வசித்தவர்களில் 466 பேர் உயிரிழந்து இருக்கலாம் என்று கேரள மாநில அரசு கருதுகிறது. இவர்களில் 316 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீத முள்ள 150 பேர் உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது.

    சூரல்மலை, முண்டகை ஆகிய 2 பஞ்சாயத்துகளில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அங்கு சுமார் 5 ஆயிரம் பேர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மற்றொரு பஞ்சாயத்தான மேப்பாடி பஞ்சாயத்தில் சுமார் 200 வீடுகள் மண்ணுக்குள் புதைந்து கிடக்கின்றன. நேற்று மாலை வரை மனிதசக்தி மூலம் மட்டும் மணலை அகற்றும் பணி நடந்தது.

    இன்று காலை இந்த கிராம பஞ்சாயத்தில் மண்ணுக்குள் புதைந்துள்ள 200 வீடுகளையும் அகற்றுவதற்கு நவீன எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. எனவே இந்த வீடுகளுக்குள் மேலும் பலர் சிக்கி உயிரிழந்து இருக்கலாம் என்ற பரபரப்பு நிலவுகிறது.

    மீட்கப்படும் உடல்கள் உடனுக்குடன் பரிசோதனை செய்யப்படுகின்றன. அடையாளம் காணப்பட்டு விட்டால் அவற்றை உறவினர்களிடம் ஒப்படைக்கிறார்கள்.

    நூற்றுக்கும் மேற்பட்ட உடல்கள் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை. பல உடல்கள் சிதைந்துள்ளன. இதனால் உறவுகளை இழந்துள்ள இந்த 3 கிராம மக்களின் சொந்தங்கள் கடும் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    உடல்களை அடையாளம் காண மருத்துவமனைகளில் மக்கள் குவிந்த வண்ணம் இருப்பதால் அங்குள்ள காட்சிகள் கண்ணீரை வர வழைப்பதாக இருக்கிறது. அதுபோல 82 முகாம்களில் உள்ள சுமார் 9 ஆயிரம் பேரும் உடமைகள், உறவுகளை இழந்து தொடர்ந்து பரிதவிக்கும் பரிதாபத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    எனவே மீட்பு பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ராணுவம், போலீஸ், தீயணைப்பு படை வீரர்களின் ஒருங்கிணைந்த மீட்பு படையினருடன் தற்போது வயநாடு பகுதிகளை சேர்ந்த சுமார் 3 ஆயிரம் பொதுமக்களும் நிலச்சரிவு பகுதிகளுக்கு சென்று தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பொதுவாக நிலச்சரிவு ஏற்பட்டால் ஓரிரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குதான் பாதிப்பு இருக்கும்.

    தற்போது 7 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பாதிப்பு இருப்பதாலும் நூற்றுக்கணக்கானவர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பக்கத்து மாவட்டம் வரை உடல்கள் சென்று விட்டதாலும் தேடும் பணியை பொதுமக்கள் உதவியுடன் கேரள மாநில அரசு விரிவுப்படுத்தி உள்ளது.

    மீட்பு பணிகள் எப்போது நிறைவு பெறும் என்று சொல்ல இயலாத அளவுக்கு பேரிடர் அளவு உள்ளது. ராணுவத்தை சேர்ந்த மீட்பு குழுவினர் நவீன எந்திரங்களை பயன்படுத்த தொடங்கி இருப்பதால் மீட்பு பணிகள் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • மீட்பு பணிகள் நான்காம் நாளை எட்டியது.
    • தேசிய பேரிடராக அறிவிக்க கோரிக்கை விடுக்கப்படுகிறது.

    கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி கொட்டித்தீர்ந்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. நள்ளரிவு வேளையில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த போது அடுத்தத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டதில் பலநூறு குடும்ங்களை சேர்ந்தவர்கள் மண்ணில் புதைந்து போயினர்.

    வீடுகள் இடிந்து விழுந்தும், மரங்கள் வேறோடு சாய்ந்தும், தொடர் கனமழை போன்ற காரணங்களால் மீட்பு பணிகள் இன்னமும் முடிவுக்கு வராத சூழல் நிலவுகிறது. இன்று நான்காம் நாளை எட்டிய மீட்பு பணிகளில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 316-ஐ கடந்துள்ளது.

     


    மேலும், நிலச்சரிவில் புதைந்தவர்களை தேடுவதற்கு தெர்மல் ஸ்கேனர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தெர்மல் ஸ்கேனர் கொண்டு தேடும் போது சேறு, சகதிகளில் யாரேனும் சிக்கி இருந்தால் அதனை ஸ்கேனர் காட்டிக் கொடுக்கும்.

    நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் உடல் பாகங்கள் சிதைந்து இருப்பது, மண்ணோடு மண்ணாக பலர் புதைந்து உயிரை பறிக் கொடுத்தது, உறக்கத்தில் பலர் உயிரைவிட்டது என வயநாடு முழுக்க மரண ஓலம் ஓங்கி ஒலிக்கிறது. இந்த நிலையில், இந்த இயற்கை அசம்பாவிதத்தை தேசிய பேரிடராக அறிவிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    • இந்த குக்கிராமத்தில் 118 குடும்பத்தினர் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
    • நிலச்சரிவுடன் ஆர்ப்பரித்து வந்த காட்டாற்று வெள்ளம் அந்த குக்கிராமத்தை மண்ணோடு மண்ணாக மூடியது.

    வயநாடு:

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் முண்டகை, சூரல்மலை மற்றும் மேப்பாடி ஆகிய கிராமங்களில் கடந்த 30-ம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். இன்னும் பலர் காணாமல் போயினர். அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையில் அந்த கிராமங்கள் தவிர அதை சுற்றி இருந்த ஒரு சில குக்கிராமங்களும் நிலச்சரிவில் சிக்கி இருந்த இடம் தெரியாத அளவிற்கு சிதைந்து போயுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

    அதில் ஒன்றுதான், பூஞ்சிரித்தோடு குக்கிராமம். இது முண்டகை கிராமத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் மலைபாங்கான இடத்தில் அமைந்து இருந்தது. இந்த குக்கிராமத்தில் 118 குடும்பத்தினர் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரே நாள் இரவில் அந்த குக்கிராமம் காணாமல் போனது. நிலச்சரிவுடன் ஆர்ப்பரித்து வந்த காட்டாற்று வெள்ளம் அந்த குக்கிராமத்தை மண்ணோடு மண்ணாக மூடியது.

    அங்கு வசித்து வந்த மக்களின் நிலை என்ன? என்பது தெரியவில்லை. தமிழ் சினிமாவில் அஜித்குமார் நடித்த சிட்டிசன் திரைப்படத்தில் அத்திப்பட்டி என்ற கிராமம் காணாமல் போனது போல காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். அந்த அத்திப்பட்டியை நினைவூட்டுவது போல பூஞ்சிரித்தோடு கிராமமும் அழிந்து போயிருக்கலாம் என்று அக்கம்பக்கத்து ஊரை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

    • வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கும் வகையில் பல்வேறு தரப்பினரும் உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள்.
    • நடிகை ஜோதிகா, நடிகர் கார்த்தி மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் ரூ. 50 லட்சம் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளார்கள்.

    சென்னை:

    கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்து உள்ளனர். வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கும் வகையில் பல்வேறு தரப்பினரும் உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள்.

    இந்தநிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் ரூ.25 லட்சம் நிதியை, கேரள முதல்-மந்திரி பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கி இருக்கிறார்.

    முன்னதாக, பெருந்துயரில் பங்கேற்கும் வகையில் கேரளா நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக, நடிகை ஜோதிகா, நடிகர் கார்த்தி மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் ரூ. 50 லட்சம் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளார்கள். நடிகர் விக்ரம் ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார்.

    தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா, கேரள முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம் வழங்கி உள்ளார்.

    ×