search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Woman doctor murder"

    • சஞ்சய் ராய் நிரபராதி என்பதை நிறுவும் வகையில் அவனது வக்கீல் கவிதா சர்க்கார் சில விவரங்களைத் ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார்.
    • சம்பவம் நடந்த ஆகஸ்ட் 9 அன்று இரவு செமினார் ஹாலுக்குள் நுழையும்போது மயக்க நிலையிலிருந்த பெண் மீது முழுவதுமாக ரத்தம் படிந்திருந்தது .

    கொல்கத்தா பெண் டாக்டர் பாலியல் பலாத்கார கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராயிடம் சிபிஐ பல கட்டங்களாக விசாரணை நடத்தி வருகிறது. சிசிடிவி காட்சிகளில் அடிப்படையிலும், சஞ்சய் ராயின் ப்ளூ டூத் ஹெட் செட் ஆனது சம்பவம் நடத்த மருத்துவமனையின் செமினார் ஹாலில் கண்டெடுக்கப்பட்டதன் அடிப்படையிலும் சஞ்சய் ராய்தான் குற்றவாளி என்பதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன. இந்நிலையில் சஞ்சய் ராய் நிரபராதி என்பதை நிறுவும் வகையில் அவனது வக்கீல் கவிதா சர்க்கார் சில விவரங்களைத் ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார்.

    அவர் கூறியதாவது, சஞ்சய் ராயிடம் உண்மை கண்டறியும் சோதனையான பாலிகிராப் டெஸ்ட் நடத்தப்பட்டது. அந்த சோதனையில் சஞ்சய் ராயிடம் 10 கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் பெண்ணை கொலை செய்த பிறகு என்ன செய்தாய் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு , நீங்கள் கேட்கும் கேள்வியை தவறு, நான் கொலை செய்யவே இல்லை என்று சஞ்சய் ராய் தெரிவித்தார். மேலும் உண்மை கண்டறியும் சோதனையில், தான் செமினார் ஹாலுக்குள் செல்லும்போதே அந்த பெண் சுயநினைவின்றி கிடந்ததாகக் கூறியதும் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

    அந்த பாலிகிராப் டெஸ்ட் அறிக்கைப்படி, சம்பவம் நடந்த ஆகஸ்ட் 9 அன்று இரவு செமினார் ஹாலுக்குள் நுழையும்போது மயக்க நிலையிலிருந்த பெண் மீது முழுவதுமாக ரத்தம் படிந்திருந்தது .எனவே பயத்தில் நான் அந்த அறையை விட்டு வெளியே ஓடி வந்தேன் என்று சஞ்சய் ராய் தெரிவித்தார் என்று கவிதா சர்க்கார் கூறியுள்ளார்.

    ஏன் முதலிலேயே தான் நிரபராதி என்று கல்கத்தா போலீஸ் கைது செய்தபோது சஞ்சய் ராய் சொல்லவில்லை என்று கேள்விக்கு பதிலளித்த கவிதா சர்க்கார், அப்போது சஞ்சய் ராய் பயத்திலிருந்ததாகவும், தான் சொல்வதை யாரும் நம்ப மாட்டார்கள் என்று நினைத்ததாகவும் தெரிவித்துள்ளார். சஞ்சய் ராய் எளிதாக செமினார் ஹாலுக்குள் நுழைய முடிந்தது என்றால் அவருக்கு முன்பாகவே அந்த இடத்திலிருந்த பாதுகாப்பு குறைபாட்டை யாரோ பயன்படுத்தியுள்ளனர் என்று அர்த்தம். எனவே உண்மையான குற்றவாளி வேறு எங்கோ ஒளிந்துள்ளான் என்று கவிதா சர்க்கார் தெரிவித்துள்ளார். 

    • கொல்கத்தா பெண் டாக்டர் கொலை வழக்கில் சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • சிபிஐ இந்த கொலை தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

    கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பயற்சி டாக்டர் பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செயப்பட்டார். இந்த சம்பவத்தில் உண்மைகள் மறைக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு மேற்கு வங்க அரசு உதவுவதாக மாணவர்கள் குற்றம்சாட்டியதுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே ஒப்பந்த ஊழியரான சஞ்சய் ராய் என்பவர்தான் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசார் கைது செய்துள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. சஞ்சய் ராய் இடம் சிபிஐ விசாரணை நடத்தியது. தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    சிறையில் வழக்கமாக ரொட்டி (roti-sabzi) வழங்கப்படும். ஆனால் தனக்கு ரொட்டி வேண்டாம். முட்டை நூடுல்ஸ் (egg chowmein) வேண்டும் என அடம்பிடித்ததாக நியூஸ் 18 செய்தி வெளியிட்டுள்ளது. பெயர் தெரிவிக்க விரும்பாத ஒருவர் இந்த தகவலை தெரிவித்ததாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சிறை அதிகாரிகள் கண்டிக்கவே, வேறு வழியில்லாமல் ரொட்டி சாப்பிட்ட ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக சிறையில் அனைத்து கைதிகளுக்கும் ரொட்டிதான் வழங்கப்படும். அந்த வகையில் அவருக்கும் வழங்கப்பட்டது. அவருடைய வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

    தூங்குவதற்கு கூடுதல் நேரம் கேட்டதாகவும், முணுமுணுத்துக் கொண்டே இருந்ததாகவும், சில நாட்களில் சகஜ நிலைக்கு வந்ததாகவும் நியூஸ் 18 வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பெண் டாக்டர் கொலை வழக்கு குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும் என மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இது தொடர்பாக இரண்டு முறை பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    • why the West Bengal government hasn't done anything for implementing the stringent rules and regulations BJP
    • பெண்கள் பாதுகாப்பிற்கான கடுமையான விதிகள் இருக்கும்போது அதை ஏன் அமல்படுத்தவில்லை- பாஜக

    மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் மேற்கு வங்கத்தில் ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகக் கொலைசெய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

    இது தொடர்பாக சிபிஐ விசாரணையில் நடத்தி வருகிறது. அதேவேளையில் பெண்களை இது போன்ற குற்றங்களிலிருந்து பாதுகாப்பாகவும், மீண்டும் இத்தகைய குற்றங்கள் நடைபெறாத வண்ணம் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கவும் மத்திய அரசு சட்டம் கொண்டுவர வேண்டும் என மம்தா பானர்ஜி வலியுறுத்தி வருகிறார்.

    மேலும் இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் முதல் கடிதத்திற்கு இன்னும் பதில் வரவில்லை எனக்கூறி 2-வது முறையாக நேற்று கடிதம் எழுதினார்.

    இந்த நிலையில் கடிதம் எழுதுவதை நிறுத்துங்கள். கேள்விக்கு பதில் அளியுங்கள் என மேற்கு வங்காள மாநில பாஜக துணைத் தலைவர் அமித் மால்வியா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அமித் மால்வியா தனது எக்ஸ் பக்கத்தில் "பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள கடுமையான விதிகளை அமல்படுத்த மேற்கு வங்காள அரசு ஏதும் செய்யாதது குறித்து மம்தா பானர்ஜி விளக்கம் அளிக்க வேண்டும். கடிதம் எழுதுவரை நிறுத்துங்கள். கேள்விக்கு பதில் அளியுங்கள். நீங்கள் தான் பொறுப்பு" எனத் தெரிவித்துள்ளார்.

    மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு 2-வது முறையாக எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    இது போன்ற முக்கியமான பிரச்னைக்கு உங்களிடமிருந்து பதில் வரவில்லை. இருப்பினும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சரிடமிருந்து ஆகஸ்ட் 25-ம் தேதி பதில் கிடைத்தது. ஆனால், எனது கடிதத்தில் எழுப்பப்பட்ட பிரச்சனையின் தீவிரத்தன்மை அதில் கவனிக்கப்படவில்லை.

    மேலும், அந்த பதிலில் கவனிக்கப்படாத அதேசமயம் எங்கள் மாநிலம் ஏற்கனவே எடுத்த சில முயற்சிகளை நான் இங்கு குறிப்பிடுகிறேன்.

    விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் (FTSCs) தொடர்பாக, 10 பிரத்யேக போக்சோ (POCSO) நீதிமன்றங்கள் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. இது தவிர, மாநிலம் முழுவதும் 88 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் மற்றும் 62 போக்சோ நீதிமன்றங்கள் முழு மாநில நிதியுதவியில் இயங்கி வருகின்றன. வழக்குகளைக் கண்காணித்தல் மற்றும் முடித்துவைப்பது ஆகியவை முற்றிலும் நீதிமன்றங்களின் வசம் இருக்கிறது.

     மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, ஓய்வுபெற்ற நீதித்துறை அதிகாரிகளை மட்டுமே விரைவு சிறப்பு நீதிமன்றங்களில் முதன்மை அதிகாரிகளாக நியமிக்க முடியும். ஆனால், வழக்குகளின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, நிரந்தர நீதித்துறை அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்பதை உயர் நீதிமன்றம் கவனித்திருக்கிறது. இதற்கு மத்திய அரசு அளவில் ஆய்வு மற்றும் அதன் பிறகான பொருத்தமான நடவடிக்கை தேவை. இதற்கு தங்களின் தலையீடு அவசியம். இவை தவிர, ஹெல்ப்லைன் எண் 112, 1098 ஆகியவை மாநிலத்தில் திருப்திகரமாகச் செயல்படுகின்றன.

    கூடுதலாக, அவசரகால சூழ்நிலைகளில் ஹெல்ப்லைன் எண் 100 பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. எனவே, விசாரணை அதிகாரிகளால் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழக்குகளைத் தீர்ப்பதற்கான கட்டாய ஏற்பாடுகளுடன், பாலியல் வன்கொடுமை, கொலை போன்ற கொடூரமான குற்றங்களுக்கு முன்மாதிரியான கடுமையான தண்டனை மற்றும் கடுமையான மத்திய சட்டத்தைப் பரிசீலிக்குமாறு தங்களை மீண்டும் வலியுறுத்துகிறேன். இந்த விஷயம், தங்களின் கவனத்தை ஈர்க்கும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    • பெண் டாக்டர் கொலை குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும். குற்றவாளியை தூக்கிலிட நாங்கள் விரும்புகிறோம்.
    • ஆனால் பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை அளிக்கும் சட்டத்தை மத்திய அரசு உருவாக்காதது ஏன்?

    மேற்கு வங்காளத்தில் பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் இன்னும் ஓயவில்லை. இந்த சம்பவத்துக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து மாநிலம் முழுவதும் பா.ஜனதா நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தியது.

    அதேநேரம் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும் வகையில் சட்டம் கொண்டு வருமாறு மத்திய அரசை, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வலியுறுத்தி வருகிறார். ஆனால் சட்டம் கொண்டு வராமல், பா.ஜனதாவினர் முழு அடைப்பு நடத்தியதற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் மாணவர் அணியின் 27-வது நிறுவன தினத்தையொட்டி நேற்று நடந்த நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி பங்கேற்று பேசினார்.

    அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-

    மேற்குவங்க மாநிலம் எரிந்தால் அதன்பின் அசாம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களும் எரியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    எங்கள் அரசுக்கு எதிராக பிரதமர் மோடியும், பா.ஜனதாவும் கடந்த 2014-ம் ஆண்டு முதலே சதியில் ஈடுபட்டு வருகின்றனர். மாநில அரசை சீர்குலைக்க எடுக்கப்படும் எந்த முயற்சியையும் தடுத்து நிறுத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

    பெண் டாக்டர் கொலைக்கு எதிராக போராடும் டாக்டர்களுக்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையையும் நாங்கள் எடுக்கவில்லை.

    இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ.யிடம் இருக்கிறது. எனவே நோயாளிகளின் துயரை கருத்தில் கொண்டு, டாக்டர்கள் படிப்படியாக பணிக்கு திரும்ப வேண்டும்.

    பெண் டாக்டர் கொலை குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும். குற்றவாளியை தூக்கிலிட நாங்கள் விரும்புகிறோம். ஆனால் பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை அளிக்கும் சட்டத்தை மத்திய அரசு உருவாக்காதது ஏன்?

    என்னிடம் அதிகாரம் இருந்தால், ஒரு வாரத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவேன்.

    அடுத்த வாரம் சட்டசபை தொடரை நடத்தி, கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு 10 நாட்களுக்குள் மரண தண்டனை வழங்கும் மசோதாவை நிறைவேற்றுவோம். பின்னர் அதை கவர்னருக்கு அனுப்பி வைப்போம். அதற்கு அவர் ஒப்புதல் அளிக்காவிட்டால், கவர்னர் மாளிகைக்கு வெளியே தர்ணா போராட்டம் நடத்துவோம்.

    நாங்கள் இந்த முழு அடைப்பை ஆதரிக்கவில்லை. நாங்கள் இந்த தினத்தை அந்த டாக்டருக்கு அர்ப்பணிக்கிறோம். நாங்கள் நீதி கேட்கிறோம், பா.ஜனதா முழு அடைப்பை நடத்துகிறது. பிணத்தின் மீது அரசியல் செய்கிறது.

    மணிப்பூரில் நடந்த சம்பவங்களுக்காக பதவி விலகாத பிரதமர் மோடிக்கு எதிராகத்தான் முதலில் முழு அடைப்பு போராட்டம் நடத்த வேண்டும்.

    இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

    • பெண் டாக்டர் கொலை விவகாரத்தை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
    • மாணவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர், கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர்.

    கொல்கத்தா:

    பெண் டாக்டர் கொலை விவகாரம் தொடர்பாக சில மாணவ அமைப்புகள் நீதி கேட்டு தடையை மீறி இன்று போராட்டத்தில் ஈடுபட்டன.

    கொல்கத்தாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் புறப்பட்டு வந்தனர். தலைமைச் செயலகம் நோக்கிய பேரணியில் பங்கேற்ற அவர்களிடம் போலீசார் கடுமையாக நடந்துகொண்டனர்.

    ஹவுரா பாலம் மற்றும் சந்திரகாச்சி ரெயில் நிலையம் அருகில் போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதையடுத்து போலீசார் அவர்கள்மீது தடியடி நடத்தியதால் அப்பகுதி போர்க்களமாக காட்சி அளித்தது.

    இதற்கிடையே, கொல்கத்தாவில் போலீசார் நடந்து கொண்ட விதம் பற்றிய புகைப்படங்கள், ஜனநாயக கொள்கைகளை மதிக்கும் ஒவ்வொரு நபருக்கும் ஆத்திரம் ஏற்படுத்தி உள்ளது என பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், மாநில அரசின் இந்த செயலைக் கண்டித்து நாளை மாநிலம் முழுவதும் 12 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என பா.ஜ.க. அறிவித்துள்ளது.

    • பெண் டாக்டர் கொலை விவகாரத்தை சிபிஐ விசாரித்து வருகிறது.
    • இன்று பேரணி நடத்திய மாணவர்கள்மீது போலீசார் தடியடி நடத்தினர்.

    கொல்கத்தா:

    மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் கடந்த 9-ம் தேதி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைதுசெய்தனர். இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இச்சம்பவத்தால் நாடுமுழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின், சுப்ரீம் கோர்ட்டின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பினர்.

    இதற்கிடையே, பெண் டாக்டர் கொலைக்கு நீதி வேண்டியும், உண்மையான குற்றவாளிகளை கைதுசெய்யக் கோரியும், முதல் மந்திரி மம்தா பானர்ஜி பதவி விலக கோரியும் இன்று அம்மாநில தலைமைச் செயலகத்துக்கு பேரணியாகச் சென்று முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக மாணவர் அமைப்பான பாஸ்கிம் பங்கா சத்ர சமாஜ் (மேற்குவங்க மாணவர் சமூகம்) அறிவித்தது. இது பதிவு செய்யப்படாத அமைப்பு ஆகும். அதேபோல், மாநில அரசு ஊழியர்களின் அமைப்பான சங்க்ராமி ஜெவுதா மஞ்சாவும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது.

    இந்நிலையில், தலைநகர் கொல்கத்தாவில் இரு பகுதிகளில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவுக்கு பேரணியாகப் புறப்பட்டு தலைமைச் செயலகத்தை மாணவர்கள் முற்றுகையிட திட்டமிட்டனர். இந்தப் போராட்டத்துக்கு போலீசார் அனுமதிக்கவில்லை. ஆனாலும் இன்று காலை மாணவர்கள் அதிகளவில் திரண்டனர். நேரம் செல்ல செல்ல மாணவர்களின் கூட்டம் அதிகரித்தது. அவர்கள் தங்களது கைகளில் பதாகைளை வைத்திருந்தனர்.

    'பெண் டாக்டர்கள் கொலைக்கு நீதி வேண்டும். முதல்வர் மம்தா பானர்ஜி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பேரணியாக செல்ல மாணவர்கள் குவிந்ததால் கொல்கத்தாவில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் திரண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    மாணவர்கள் போராட்டம் காரணமாக கொல்கத்தாவில் பாதுகாப்பு பல மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. தலைமைச் செயலகம் பகுதியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சுமார் 6,000 போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தலைமைச் செயலகத்தை சுற்றி உள்ள சாலைகளில் மட்டும் 2,100 போலீசார் குவிக்கப்பட்டனர்.

    சில சாலைகள் மூடப்பட்டன. ஹவுரா மேம்பாலமும் மூடப்பட்டது. அங்கும் போலீசார் குவிக்கப்பட்டனர். மேம்பாலத்துக்குள் போராட்டக்காரர்கள் நுழைவதைத் தடுக்க அங்கு இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு அவை ஒன்றுடன் ஒன்று இணைத்து வெல்டிங் செய்யப்பட்டுள்ளது.

    சாலைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. ஓட்டல்களில் தங்கி உள்ளவர்களின் விவரங்களை போலீசார் சேகரித்துள்ளனர்.

    பேரணியை டிரோன்கள் மூலம் கண்காணித்து வருகிறார்கள். தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளது. தலைமைச் செயலகத்துக்கு செல்லும் பாதைகளில் 19 இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு இருக்கிறது. அதில் எண்ணையை போலீசார் தடவி உள்ளனர்.

    நிலைமையைக் கண்காணிக்க 26 கலெக்டர்களை அரசு நியமித்துள்ளது. மேலும், கொலை சம்பவம் நடந்த ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முதல் மந்திரி மம்தா பானர்ஜி வீட்டுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இதனால் கொல்கத்தாவில் இன்று காலை முதலே பதற்றம் நிலவி வருகிறது. போராட்டம் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட வாய்ப்பு உள்ளதால், பல கல்வி நிறுவனங்கள் இன்று விடுமுறை அறிவித்தன. சில நிறுவனங்கள் ஆன்லைன் வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன.

    மதியம் சுமார் 12.30 மணியளவில் தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணி தொடங்கியது. அப்போது சிலர் தடுப்புகளை உடைத்து முன்னேற முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாரின்மீது கற்கள் வீசப்பட்டன.

    ஹவுரா மேம்பாலத்துக்குள் போராட்டக்காரர்கள் நுழைய முயற்சித்தனர். அங்கிருந்த தடுப்புகளை உடைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. தடுப்புகள்மீது ஏறி போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி தடியடி நடத்தினர். கலைந்து செல்லாததால் போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர், கண்ணீர் புகைகுண்டுகளும் வீசப்பட்டன. இதனால் போலீசார், போராட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து கொல்கத்தாவில் வன்முறை வெடித்துள்ளதால் பெரும் பரபரப்பு நிலவியது.

    • தலைமைச் செயலகம் அமைந்துள்ள இடத்தை நோக்கி பேரணிக்கு அழைப்பு.
    • பயிற்சி பெண் டாக்டர் கொலைக்கு எதிராக இந்த பேரணி நடத்தப்பட இருப்பதாக அறிவிப்பு.

    கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை பயிற்சி பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த கொடூர கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

    இதற்கிடையே மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசுக்கு எதிராக கடும் விமர்சனம் எழுந்து வருகிறது. மம்தா பானர்ஜி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    இந்த நிலையில் மேற்கு வங்காளத்தில் உள்ள ரிஜிஸ்டர் செய்யாத மாணவர்கள் அமைப்பு நபன்னோ நோக்கி இன்று பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.

    நபன்னோ மேற்கு வங்காள மாநில தலைமைச் செயலகம் அமைந்துள்ள இடம். முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பல முக்கிய மந்திரிகள் அலுவலகம் இங்கு உள்ளது.

    இந்த நிலையில் பேரணி வன்முறையாக வெடித்துவிடக் கூடாது என்பதால் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    நல்ல எண்ணம் கொண்ட குடிமக்களின் கோபத்தைத் தவறாகப் பயன்படுத்தி மேற்கு வங்கத்தில் பிரச்சனையையும் அராஜகத்தையும் உருவாக்குவதற்கான சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த பேரணிக்கு அழைப்பு விடுத்த ஒருவர், நட்சத்திர ஓட்டலில் அரசியல் கட்சி தலைவர் ஒருவரை சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

    சட்டம் ஒழுங்கை பாதுகாக்க 6 ஆயிரம் போலீசார் குவிக்கப்படுவார்கள். தடுப்பு அமைக்கும் 19 இடங்களை கண்டறிந்துள்ளோம். 26 டிசிபி தலைமையில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    நபன்னோ பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் பாஜக மீது திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

    • கொடூரமான சம்பவம் தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தினேன்.
    • நாங்கள் அனைவரும் உங்களோடு இருக்கிறோம். உங்களுக்கு நீதி கிடைக்கும்.

    கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது மேற்கு வங்காள அரசுக்கு எதிராக பல்வேறு கேள்விகளை எழுப்பியது. வழக்குப்பதிவு செய்ய காலதாமதம் ஏன்? தந்தையிடம் உடனடியாக தகவல் தெரிவிக்கவில்லை எனக் கேட்டது. மேலும், மாற்றத்திற்காக நாடு இன்னுமொரு கற்பழிப்பிற்காக காத்திருக்க முடியாது என காட்டமாக தெரிவித்தது.

    இந்த நிலையில் மேற்கு வங்காள மாநில ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் உயிரிழந்த பெண் டாக்டரின் பெற்றோரிடம் போன் மூலம் பேசியுள்ளார். வீடியோ காலில் பேசியதை கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ளது.

    ஆளுநர் கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் பெற்றோரிடம் "நாங்கள் அனைவரும் உங்களோடு இருக்கிறோம். உங்களுக்கு நீதி கிடைக்கும். இன்று (நேற்று) நான் டெல்லியில் இருக்கிறேன். இந்த விசயம் தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தினேன். உங்களுக்கு வசதியான நேரம் உங்கள் வீட்டிற்கு வருகிறேன்" என அதில் தெரிவித்துள்ளார்.

    "தேசம், ஒட்டுமொத்த தேசமும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மிகுந்த நிம்மதியுடன் கேட்கிறது. ஒவ்வொரு புனிதருக்கும் ஒரு கடந்த காலம் உண்டு. அதேபோல் ஒவ்வொரு பாவிகளுக்கும் ஒரு எதிர்காலம் உண்டு. இதை நினைவில் கொள்ளுங்கள். யாராவது கேட்கிறார்களா? மம்தா பானர்ஜி தயது செய்து கையை உயர்த்துவாரா?" எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    ஆளுநர் வீடியோ காலில் பேசியதை வெளியிட்டதை திரிணாமுல் காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அந்த கட்சியின் எம்.பி. தெரீக் ஓ'பிரைன் "இன்றைய உங்கள் வீடியோ நீங்கள் வகிக்கும் மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவியை அவமதிக்கிறது.

    பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையுடன் நீங்கள் தொடர்பு கொண்ட தொலைபேசி அழைப்பு உங்களால் பதிவு செய்யப்பட்டு பின்னர் பகிரங்கப்படுத்தப்பட்டது. இது நெறிமுறையற்றது. தயவு செய்து உங்களது உயர் பதவியை சுய விளம்பரத்திற்காக ஒரு பயங்கரமான சோகத்தை பயன்படுத்த வேண்டாம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • பெண் டாக்டர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
    • இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது.

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

    உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கேட்டு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து, இன்று உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

    வழக்கை தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் மீது மேற்கு வங்காள அரசு தனது பலத்தைக் காட்ட வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் கண்டித்தது.

    இந்த நிலையில், பெண் மருத்துவர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு டெல்லி உயர்நீதிமன்ற பார் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பார் கவுன்சில் சார்பில் நடத்தப்பட்ட அவசர கூட்டத்தில், அதன் செயற்குழு, இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுத்தது.

    மேலும், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கவும், பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் நடவடிக்கைகளை செயல்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகளை வலியுறுத்தியது. நீதியை உறுதி செய்வதற்காக பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு போனோ சார்பான சட்ட உதவிகளை வழங்கவும் முடிவு செய்தது.

    ஒற்றுமை மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் கவுரவிக்கும் வகையில், ஆகஸ்ட் 21, 2024 ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்ற பார் கவுன்சில் உறுப்பினர்கள் வெள்ளை நிற ரிப்பன் பேண்டுகளை அணிய வேண்டும் என்று முடிவு செய்துள்ளது.

    • முன்னாள் தலைவர் சந்தீப் கோஷ் மீது ஜூன் மாதம் புகார்.
    • பொலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மேற்கு வங்க மாநிலம் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வராக இருந்தவர் சந்தீப் கோஷ். பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் சந்தீப் கோஷ் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

    சிபிஐ இவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியது. சுமார் 53 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில் இந்த மருத்துவமனையில் நிதி முறைகேடு நடைபெறுவதாக கடந்த ஜூன் மாதம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. போலீசார் நிதி முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் போலீசார் சந்தீப் கோஷ் மீது ஊழல் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 2021-ல் இருந்து முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த ஐ.ஜி. பிரணாப் குமார் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைக்கப்பட்டது. இந்த குழு சந்தீப் கோஷ் முதல்வராக இருந்த காலத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தும்.

    பெண் மருத்துவர் கொலை தொடர்பாக பெற்றோர்களிடம் தாமதமாக தெரிவித்தது. கொலை நடைபெற்ற இடத்தில் புதுப்பித்தல் வேலை தொடர்பாக அவர் எடுத்த முடிவு ஆகியவை குறித்து சிபிஐ கேள்விகள் கேட்டது.

    சந்தீப் கோஷை சுற்றி சர்ச்சைகள் சுற்றி வரும் நிலையில் முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படாமல் உள்ளது. கொல்கத்தா உயர்நீதிமன்றம், அடுத்த உத்தரவு வரை சந்தீப் கோஷை மற்ற மருத்துவ கல்லூரியில் நியமனம் செய்யக் கூடாது உன உத்தரவிட்டுள்ளது.

    • பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக சந்திக்க விரும்புகிறார்.
    • மம்தா பானர்ஜி சாட்சிகளை வாங்க முயற்சிக்கிறார்.

    கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக இருந்து வந்த பெண் ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

    இந்த விவகாரத்தில் மம்தா அரசு மீது கடும் விமர்சனம் எழுப்பப்பட்டு வருகிறது. அரசியல் இயந்திரம் சரியாக செயல்படவில்லை. அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. குற்றவாளிக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட வேண்டும் என மம்தா வலியுறுத்தி வருகிறார்.

    இந்த நிலையில் கற்பழிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரேட் கார்டு நிர்ணயித்துள்ளார் என மம்மா பானர்ஜி மீது கொலை செய்யப்பட்ட பெண் குடும்பத்தின் வழக்கறிஞர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்காக வாதாடும் வழக்கறிஞர் பிகாஸ் ரஞ்சன் பட்டச்சார்யா கூறியதாவது:-

    மேற்கு வங்காள முதல்வரின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது. கற்பழிப்பு சம்பவம் நடக்கும்போதெல்லாம், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை உடனடியாக சந்திக்க மம்தா பானர்ஜி விரும்புகிறார். அவர்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறது. அதன்பின் எல்லாம் முடிந்தது எனச் சொல்கிறார்கள். கற்பழிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரேட் கார்டு நிர்ணயித்துள்ளார். இது துரதிருஷ்டவசமானது. சாட்சிகளை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.

    இவ்வாறு வழக்கறிஞர் தெரிவித்தார்.

    பாதிக்கப்பட்ட பெண் டாக்டரின் பெற்றோர் நேற்று முன்தினம் (ஞாயிறு) "முதல்வர் மம்தா பானர்ஜி மீது நம்பிக்கை இருந்தது. தற்போது இந்த நம்பிக்கை போய்விட்டது. உடலை பார்த்தால் யாரும் இது கொலை வழக்கு என்றுதான் சொல்வார்கள். ஆனால், மருத்துவத்துறையில இருந்து, எங்களது மகள் தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்ததாக மம்தா பானர்ஜி எங்களிடம் தெரிவித்தார். எங்களது மகள் உடல் அவசர அவசரமாக தகனம் செய்யப்பட்டது. மூன்று உடல்கள் இருந்தன. அதில் எங்களது மகள் உடன் முதலாவதாக தகனம் செய்யப்பட்டது" எனத் தெரிவித்தனர்.

    • கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் விரைவில் நீதி கிடைக்க வேண்டும்.
    • குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை கொடூரமானதாக இருக்கவேண்டும்.

    கொல்கத்தாவில் 31 வயது பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பியுமான ஹர்பஜன் சிங் கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில், "கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் விரைவில் நீதி கிடைக்க வேண்டும். மருத்துவர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழலில் அவர்கள் தங்களின் கடமையை அர்ப்பணிப்புடன் செய்வார்கள் என எப்படி எதிர்பார்க்க முடியும்?

    ஒரு சமூகமாக பெண்களுக்கு பாதுகாப்பான, மதிப்புமிக்க வீடு மற்றும் பணியிடத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது நமது கடமை. குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை கொடூரமானதாக இருக்கவேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்கள் தொடராது. இப்போது இல்லையென்றால் எப்போது? நடவடிக்கைக்கான நேரமிது" என்று ஹர்பஜன் சிங் வலியுறுத்தியுள்ளார். 

    ×