search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Woman doctor murder"

    • பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • இந்தியாவில் ஒவ்வொரு மணிநேரமும் 4 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகின்றனர்.

    கொல்கத்தாவில் 31 வயது பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்த புள்ளிவிவரங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்தியாவில் தினமும் 86 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. சொல்லப்போனால் ஒவ்வொரு மணிநேரமும் 4 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகின்றனர். அவ்வகையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடாக இந்தியா மாறி வருவதாக புள்ளிவ்விரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், இந்திய டி20 கிரிக்கெட் அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி வைத்துள்ளார்.

    அதில், உங்கள் வீட்டு பெண்களை பாதுகாத்து கொள்ளுங்கள் என்று சொல்வதை விடுத்து, உங்கள் வீட்டு ஆண் பிள்ளைகளுக்கு பெண்களை மதிக்க சொல்லிக் கொடுங்கள். அப்பா, அண்ணன், கணவன், நண்பன் என அனைவருக்கும் பெண்களை மதிக்க சொல்லிக் கொடுங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • மருத்துவர்கள் நாடு முழுக்க போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருபத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் துன்புறுத்தல் செய்து, கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த கொலை வழக்கு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த சம்பவத்தை கண்டித்து அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்கள், பயிற்சி டாக்டர்கள், டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

     


    மருத்துவர்கள் போராட்டம் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நடைபெறும் போராட்டங்கள் குறித்து அறிக்கை சமர்பிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி மாநில அரசுகள் இது தொடர்பாக நடைபெறும் போராட்டங்கள் குறித்து ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் அனைத்து மாநில காவல்துறை தலைவர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது.

    • பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஜனநாயகம் தோல்வியடைந்ததைவிட மேற்குவங்கத்தில் மிகவும் மோசமாக இருக்கிறது.
    • பிரச்சனையை தீர்ப்பதில் அரசு நிர்வாகம் தோல்வியடைந்தது.

    மேற்குவங்க மாநிலத்தின் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனை கல்லூரி மற்றும் மருத்துவமனை பயிற்சி டாக்டர் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி டாக்டர்கள் போராட்டம் நடத்தினர். மாணவர்கள் திடீரென வன்முறையில் இறங்கி மருத்துவமனையை அடித்து நொறுக்கினர்.

    இந்த நிலையில் மேற்குவங்க மாநில முதல்வராக இருக்கும் மம்தா பானர்ஜி தனது பதவியை ராஜினமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி பாஜக மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது மம்தா பானர்ஜி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இது தொடர்பான வாசகம் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தி சென்றனர். மேலும் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அத்துடன் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஜனநாயகம் தோல்வியடைந்ததைவிட மேற்குவங்கத்தில் மிகவும் மோசமாக இருக்கிறது. இந்த பிரச்சனையை தீர்ப்பதில் அரசு நிர்வாகம் தோல்வியடைந்தது என குற்றம்சாட்டினர்.

    பாஜக-வினர் கொல்கத்தாவின் ஷியாம்பஜார் ஐந்து முனை சாலையில் பேரணி நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் போலீசார் அதை முறியடித்தனர். பேரணிக்காக அமைக்கப்பட்டிருந்த மேடை அகற்றப்பட்டது. இந்த செயல் பொதுமக்களின் எதிர்ப்பை முடக்கும் முயற்சி என பாஜக தெரிவித்தது. பல இடங்களில் பாஜக-வினர் கைது செய்யப்பட்டனர்.

    எம்எல்ஏ அக்னிமித்ரா பால், ருத்ரானில் கோஷ் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இந்த போராட்ட பேரணியில் கலந்த கொள்ள அங்கு திரண்டனர்.

    "இந்த எதேச்சதிகார அரசு போக வேண்டும். அம்மாநில மக்கள் மம்தா பானர்ஜி அரசை அகற்றுவார்கள்" என அக்னிமித்ரா பால் தெரிவித்தார். பாஜக மாநில தலைவரான சுகந்தா மஜும்தார் அந்த இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் தீப பேரணியும் நடத்த உள்ளனர்.

    • பெண் மருத்துவர் கடந்த வாரம் படுகொலை செய்யப்பட்டார்.
    • பெண் மருத்துவர் படுகொலையை எதிர்த்து போராட்டம் தீவிரம்.

    கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர், கடந்த 9 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அரை நிர்வாண கோலத்தில் உயிரிழந்த நிலையில் அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டது.

    இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணையை துவங்கினர். எனினும், உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையை காவல் துறை 90 சதவீதம் வரை முடித்துவிட்டது என்றும் சிபிஐ இந்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி வலியுறுத்தி இருந்தார்.

    மேலும் வருகிற ஞாயிற்றுக் கிழமை இந்த வழக்கின் குற்றவாளியை தூக்கிலிட வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இந்நிலையில், நவீன மருத்துவத்திற்கான டாக்டர்கள் நாடு தழுவிய மருத்துவ சேவைகளை வாபஸ் பெறுவதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர்.

     


    இதன்படி, ஆகஸ்டு 17 ஆம் தேதி காலை 6 மணி தொடங்கி, ஆகஸ்டு 18 ஆம் தேதி காலை 6 மணி வரை மருத்துவ சேவைகள் வாபஸ் பெறப்படும் என அறிவித்து உள்ளனர். இதற்கான அறிவிப்பை இந்திய மருத்துவ கூட்டமைப்பு வெளியிட்டு உள்ளது. இந்த 24 மணிநேரத்தில், வழக்கம்போல் நடைபெறும் வெளிநோயாளிகள் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சைகள் ஆகியன நடைபெறாது. எனினும், பிற அத்தியாவசிய சேவைகள் மேற்கொள்ளப்படும்.

    மருத்துவர்களின் நியாயமான காரணங்களுக்கு நாட்டின் இரக்கம் எங்களுக்கு தேவை. மருத்துவர்கள் போராட்டத்திற்கு வங்காள திரையுலகம் மற்றும் தொலைக்காட்சி துறையை சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்து அவர்களுடன் போரட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

    • நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • ஆஸ்பத்திரி பகுதியில் பதட்டம் நிலவியது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 8-ந்தேதி இரவு பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டார்.

    பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஆஸ்பத்திரியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் சஞ்சய் ராய் போலீசாரிடம் சிக்கினார்.

    இந்த கொலையை கண்டித்து நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி முதல்வர் சந்தீப்கோஷ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இதற்கிடையே பயிற்சி பெண் டாக்டர் கொலையை கண்டித்து நேற்று நள்ளிரவில் போராட்டம் நீடித்தது. அப்போது திடீரென இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. ஆஸ்பத்திரியில் உள்ள அவசர சிகிச்சை வார்டுக்குள் புகுந்த சிலர் அங்கிருந்த பொருட்கள் உட்பட வார்டு முழுவதையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.

    ஆஸ்பத்திரியின் வளாகத்திற்குள்ளும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வன்முறையை கட்டுப்படுத்த தடியடி நடத்தினர். மேலும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்க முயன்றனர்.

    அப்போது கும்பல் கற்களை வீசி தாக்கியதில் சில போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் ஆஸ்பத்திரிக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளுக்கு கும்பல் தீ வைத்து எரித்தது. 2 போலீஸ் வாகனங்களையும் கும்பல் அடித்து நொறுக்கியது.

    இதனால் ஆஸ்பத்திரி பகுதியில் பதட்டம் நிலவியது. சம்பவ இடத்திற்கு கலவர தடுப்பு போலீசார் குவிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், அடையாளம் தெரியாத கும்பல் திடீரென மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்தனர். அவர்களை தடுத்து நிறுத்த முயன்றோம். ஆனால் முடியாமல் போனதால் கும்பல் ஆஸ்பத்திரிக்குள் புகுந்து சூறையாடியது என்றனர்.

    இதுகுறித்து பா.ஜ.க. மாநில தலைவர் சுவேந்து அதிகாரி கூறுகையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் தான் மருத்துவமனைக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு காவல் துறையினர் பாதுகாப்பான பாதை வழங்கி உள்ளனர் என குற்றம் சாட்டினர்.

    இந்நிலையில் இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. அபிஷேக் பானர்ஜி கூறுகையில், வன்முறைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு போலீஸ் கமிஷனரை வலியுறுத்தி உள்ளோம் என்றார். 

    • பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்கிறது.
    • உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க மம்தா பானர்ஜி கெடு விதித்துள்ளார்.

    மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தக் குற்றத்தில் தொடர்புடைய சஞ்சய்ராய் என்பவரை கொல்கத்தா போலீசார் கைது செய்துள்ளனர்.

    விசாரணையில், இவர் போலீஸ் என்று சொல்லி மிரட்டி பயிற்சி பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. பெண் பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்ட பிறகு அவருடன் சஞ்சய்ராய் உல்லாசமாக இருந்துள்ளான். வாக்குமூலத்திலும் இதை அவன் தெரிவித்துள்ளான்.

    உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்கக் கோரி கொல்கத்தா மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நோயாளிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். மேற்குவங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று போலீசாருக்கு கெடு விதித்துள்ளார். உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்து வருகிறது.


     

    இந்த நிலையில், பெண் மருத்துவர் படுகொலை சம்பவத்திற்கு பிரபல நடிகை பரினீதி சோப்ரா காட்டமான கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், "உங்களுக்கு படிப்பதற்கு அத்தனை கடினமாக இருந்தால், அவளுக்கு எப்படி இருந்திருக்கும் என்று எண்ணி பாருங்கள்? அருவருப்பாகவும், பயங்கரமாகவும் உள்ளது. அவனை அவனது அந்தரங்க உறுப்பில் தொங்கவிட்டு கொன்றுவிடுங்கள்," என குறிப்பிட்டுள்ளார்.

    • வங்கதேசத்தை (பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டம்) இங்கே செய்ய முடிவும் என அவர்கள் நினைக்கிறார்கள்.
    • ஆனால் எனக்கு அதிகாரத்தின் மீது பேராசை கிடையாது என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்.

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துக் கல்லூரி பயிற்சி டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பா.ஜ.க. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இலிவான அரசியலில் ஈடுபடுவதாக மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியதாவது:-

    பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துடன் நிற்பதற்குப் பதிலாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பாஜக மலிவான அரசியலில் ஈடுபடுகின்றன. வங்கதேசத்தை (பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டம்) இங்கே செய்ய முடிவும் என அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் எனக்கு அதிகாரத்தின் மீது பேராசை கிடையாது என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்.

    நாங்கள் என்ன செய்யவில்லை? நாங்கள் என்ன நடவடிக்கை எடுக்கவில்லை?. சம்பவம் குறித்து அறிந்ததும் காவல் ஆணையரிடம் பேசினேன். பெண்ணின் பெற்றோரிடம் பேசினேன். குற்றவாளி தூக்கிலிடப்படுவார் என பெண்ணின் பெற்றோரிடம் தெரிவித்தேன். அதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

    இரவு முழுவதும் வழக்கை கண்காணித்து வருகிறேன். தகனம் செய்யும் வரை போலீசாருடன் தொடர்பில் இருந்தேன். போலீசார் 12 மணி நேரத்தில் கொலையாளியை கைது செய்தனர்.

    டிஎன்ஏ சோதனை, சிசிடிவி காட்சிகள், மாதிரி சோதனை என முழுமையான விசாரணை அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு 12 மணி நேரத்திற்குள் கொலையாளி கைது செய்யப்பட்டார்.

    எந்தவொரு விசாரணைக்கும், நீங்கள் அவகாசம் கொடுக்க வேண்டும். ஞாயிறு வரை கெடு விதித்திருந்தேன். முறையான விசாரணை இல்லாமல் யார் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது. மூத்த மற்றும் இளைய மருத்துவர்களை நான் மதிக்கிறேன். முறையான விசாரணை இல்லாமல் மக்களை கைது செய்ய முடியாது.

    உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை நாங்கள் முழுமையாகப் பின்பற்றுவோம், சிபிஐக்கு நாங்கள் ஒத்துழைப்போம்.

    34 பேர் ஏற்கனவே காவல்துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். மேலும் பலர் பட்டியலில் இருந்தனர். ஆனால் உயர் நீதிமன்றம் தலையிட்டு வழக்கை சிபிஐக்கு மாற்றியது.

    குற்றம் சாட்டப்பட்டவரை தூக்கிலிட வேண்டும். வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் சிபிஐ நீதி வழங்கும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் எனக் கோரி ஆகஸ்ட் 16-ந்தேதி பேரணி நடத்த இருப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.

    • பெண் டாக்டர் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவிட்டது.
    • கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.ஐ.யிடம் உடனே ஒப்படைக்க வேண்டும் என்றது.

    புதுடெல்லி:

    மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் தொடர்புடைய சஞ்சய்ராய் என்பவரை கொல்கத்தா போலீசார் கைது செய்தனர்.

    கைதான சஞ்சய்ராயுடன் அந்த மருத்துவமனையில் உள்ள மேலும் சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே, பெண் டாக்டர் கொலை தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் எனக்கூறிய கொல்கத்தா ஐகோர்ட், மாணவி கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.ஐ.யிடம் உடனே ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டது.

    இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி, கொல்கத்தா பெண் டாக்டர் கொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைதளத்தில், கொல்கத்தாவில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    பாதிக்கப்பட்டவருக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக குற்றம் சாட்டப்பட்டவரைக் காப்பாற்றும் முயற்சி, மருத்துவமனை மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின்மீது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

    மருத்துவ கல்லூரி போன்ற இடங்களில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளை எப்படி வெளியில் படிக்க வைப்பார்கள்?

    நிர்பயா வழக்குக்குப் பிறகு கொண்டுவரப்பட்ட கடும் சட்டங்கள்கூட இதுபோன்ற குற்றங்களைத் தடுப்பதில் தோல்வி அடைந்தது ஏன்?

    பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் சம்பவங்கள் குறித்து ஒவ்வொரு கட்சியும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தீவிர விவாதங்களை நடத்தி உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அத்துடன் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

    • பெண் டாக்டர் கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • பெண் டாக்டர் கொலை சம்பவத்தை சிபிஐ விசாரிக்க இருக்கிறது.

    மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தக் குற்றத்தில் தொடர்புடைய சஞ்சய்ராய் என்பவரை கொல்கத்தா போலீசார் கைது செய்துள்ளனர்.

    விசாரணையில், இவர் போலீஸ் என்று சொல்லி மிரட்டி பயிற்சி பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. பெண் பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்ட பிறகு அவருடன் சஞ்சய்ராய் உல்லாசமாக இருந்துள்ளான். வாக்குமூலத்திலும் இதை அவன் தெரிவித்துள்ளான்.

    உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்கக் கோரி கொல்கத்தா மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நோயாளிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். மேற்குவங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று போலீசாருக்கு கெடு விதித்துள்ளார்.

    இந்நிலையில், பெண் டாக்டர் கொலை சம்பவம் அரங்கேறிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குறிப்பிட்ட அறைகளை இடித்து சீரமைக்கும் பணிகள் நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திடீரென மருத்துவக் கல்லூரி வளாகத்தில், அதுவும் குற்றச் சம்பவம் அரங்கேறிய இடத்தில் இத்தகைய பணி மேற்கொள்ளப்படுவது, தடயங்களை அழிப்பதற்கான முயற்சி என பாஜக குற்றம்சாட்டி உள்ளது.


    இது குறித்து பாஜக ஐடி செல் பிரிவு தலைவர் அமித் மால்வியா, "மம்தா பானர்ஜியின் அக்கறையின்மை, கொல்கத்தா காவல்துறையின் மூடிமறைக்கும் முயற்சியால் மேற்கு வங்காளம் கோபத்தால் கொந்தளிக்கிறது."

    "இந்த வேளையில், ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி அதிகாரிகள் மார்பு மருத்துவப் பிரிவில் உள்ள அறைச் சுவர்களை உடைத்துள்ளனர். அங்கு தான் பணியில் இருந்த ஜூனியர் மருத்துவர் கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டார். இதன் மூலம் சிபிஐ விசாரணைக் குழுவை கொலையாளிகளிடம் கொண்டு செல்லக்கூடிய முக்கியமான ஆதாரங்கள் அழிக்கப்பட்டது."

    "ரெசிடென்ட் டாக்டர் ஏரியா எனக் குறிக்கப்பட்ட பகுதி மற்றும் மார்பு மருத்துவத் துறையின் உள்ளே கழிப்பறை (பெண்) ஆகியவையும் சீரமைப்பு என்ற பெயரில் உடைக்கப்படுகின்றன. இது, மம்தா பானர்ஜி எல்லாவற்றிலும் ஆதாரங்களை அழித்து, கொடூரமான குற்றத்தில் ஈடுபட்டவர்களை பாதுகாக்கும் குற்றச் சுவடுகளை மறைப்பதில் ஈடுபட்டார் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை," என்று எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    • பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்ட இடத்தில் அவனது செல்போன் மற்றும் புளுடூத் கண்டெடுக்கப்பட்டது.
    • கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டது.

    கொல்கத்தா:

    மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்தக் குற்றத்தில் தொடர்புடைய சஞ்சய்ராய் என்பவரை கொல்கத்தா போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், இவர் போலீஸ் என்று சொல்லி மிரட்டி பயிற்சி பெண் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. பெண் பயிற்சி டாக்டர் கொல்லப்பட்ட பிறகு அவருடன் சஞ்சய்ராய் உல்லாசமாக இருந்துள்ளான். வாக்குமூலத்திலும் இதை அவன் தெரிவித்துள்ளான்.

    அவனிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவன் மிகவும் அமைதியாக காணப்பட்டான். என்னை தூக்கில் போடுங்கள் என்று அவன் மீண்டும் மீண்டும் சொல்லிய படி இருக்கிறான். பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இடத்தில் இருந்து அவனது செல்போன் மற்றும் புளுடூத் கண்டெடுக்கப்பட்டது.

    கைதான சஞ்சய்ராயுடன் அந்த மருத்துவமனையில் உள்ள மேலும் சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே, உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்கக் கோரி கொல்கத்தா டாக்டர்கள் 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நோயாளிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    மேற்குவங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று போலீசாருக்கு கெடு விதித்துள்ளார்.

    இந்நிலையில், பெண் டாக்டர் கொலை தொடர்பான வழக்கு கொல்கத்தா ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அப்போது இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவிட்டது. மாணவி கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.ஐ.யிடம் உடனே ஒப்படைக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    இதுதொடர்பாக, மேற்குவங்காள வழக்கறிஞர்கள் கூறுகையில், பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கொல்கத்தா ஐகோர்ட்டின் தீர்ப்பு திருப்தி அளிப்பதாக உள்ளது எனக்கூறியதுடன், நீதிமன்ற கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடைபெறுவது பாதிக்கபட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் என தெரிவித்தனர்.

    • பயிற்சி டாக்டர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
    • விவகாரத்தில் மேற்கு வங்காள அரசியலில் தொடர்ந்து பரபரப்பான நிலை காணப்படுகிறது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையான ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.

    இந்த குற்றத்தில் தொடர்புடைய சஞ்சய்ராய் என்பவரை கொல்கத்தா போலீசார் கைது செய்துள்ளனர். இவர் கொல்கத்தா போலீசுக்கு உதவும் நண்பர்கள் குழுவில் உறுப்பினராக இருந்தவர். இவருக்கு மேற்கு வங்காள அரசு மாதம் ரூ.12 ஆயிரம் சம்பளம் வழங்கி வந்தது.

    இவருக்கு சமீபத்தில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் உள்ள போலீஸ் நிலையத்தில் போலீசாருக்கு உதவ பணி வழங்கப்பட்டது. இதனால் அவர் அந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சகஜமாக அனைத்து இடங்களுக்கும் சென்று வந்தார். அனைவரிடமும் இவர் தன்னை போலீஸ் என்றே அறிமுகம் செய்திருந்தார்.

    போலீஸ் என்று சொல்லி மிரட்டி இவர் பயிற்சி பெண் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. பெண் பயிற்சி டாக்டர் கடுமையாக போராடியதால் அவரது கழுத்தை நெரித்து சஞ்சய் ராய் கொலை செய்திருப்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

    பெண் பயிற்சி டாக்டர் கொல்லப்பட்ட பிறகு அவருடன் சஞ்சய்ராய் உல்லாசமாக இருந்துள்ளான். வாக்குமூலத்திலும் இதை அவன் தெரிவித்து உள்ளான்.

    அவனிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவன் மிகவும் அமைதியாக காணப்பட்டான். என்னை தூக்கில் போடுங்கள் என்று அவன் மீண்டும் மீண்டும் சொல்லிய படி இருக்கிறான். பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இடத்தில் இருந்து அவனது செல்போன் மற்றும் புளுடூத் கண்டு எடுக்கப்பட்டுள்ளது.

    என்றாலும் பெண் பயிற்சி டாக்டர் தற்கொலை செய்து கொண்டதாக அந்த மருத்துவமனையில் இருந்து 3 டாக்டர்கள் போனில் தகவல் தெரிவித்ததாக தெரிய வந்துள்ளது. அவர்களை விசாரணைக்கு வருமாறு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். கைதான சஞ்சய்ராயுடன் அந்த மருத்துவமனையில் உள்ள மேலும் சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்கக்கோரி கொல்கத்தா டாக்டர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மேற்குவங்காளத்தில் நோயாளிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    இதற்கிடையே மற்ற மாநிலங்களில் நேற்று டாக்டர்கள் போராட்டம் நடத்தினார்கள். இன்றும் 2-வது நாளாக நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டம் நடந்தது.

    மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று பயிற்சி டாக்டரின் குடும்பத்தினரை சந்தித்து பேசினார். வருகிற ஞாயிற்றுக்கிழமைக்குள் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் போலீசாருக்கு கெடு விதித்துள்ளார். ஆனால் குற்றவாளிகளை திரிணாமுல் காங்கிரஸ் பாதுகாப்பதாக பாஜக குற்றம் சுமத்தி உள்ளது.

    இதற்கு பயிற்சி டாக்டர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முதுநிலை பயிற்சி பெண் டாக்டர் கொலையை அரசியலாக்க வேண்டாம் என்று மாணவர் அமைப்புகளும் எச்சரித்துள்ளன. இந்த விவகாரத்தில் மேற்கு வங்காள அரசியலில் தொடர்ந்து பரபரப்பான நிலை காணப்படுகிறது.

    • ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவு எதிரே நடைபெற்ற இந்த போராட்டத்தில் டாக்டர்கள் பங்கேற்றனர்.
    • வெளிப்புற நோயாளிகள் பிரிவும் தடையின்றி இயங்கியது.

    புதுச்சேரி:

    கொல்கத்தாவில் பெண் டாக்டர் பலாத்காரம் படுகொலை செய்யப்பட்டார்.

    பெண் டாக்டர் படுகொலையை கண்டித்து நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுபோல் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனையில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காலை 6 மணி முதல் 8 மணி வரை 2 மணி நேரம் பணியை புறக்கணித்து டாக்டர்கள் போராட்டம் நடைபெற்றது.

    ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவு எதிரே நடைபெற்ற இந்த போராட்டத்தில் 100-க்கணக்கான டாக்டர்கள் பங்கேற்றனர். டாக்டர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும், பெண் படுகொலைக்கு வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும்,

    தவறுக்கு பொறுப்பானவர்கள் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும், அனைத்து மருத்துவ அவசர சிகிச்சை பிரிவுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும், பணி செய்யும் இடத்தில் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.

    2 மணி நேரம் நடந்த போராட்டத்தை தொடர்ந்து டாக்டர்கள் பணிக்கு திரும்பினர்.

    போராட்டத்தால் நோயாளிகள் பாதிக்கப்படாமல் இருக்க மாற்று ஏற்பாடுகளை டாக்டர்கள் செய்திருந்தனர். வெளிப்புற நோயாளிகள் பிரிவும் தடையின்றி இயங்கியது. சீனியர் டாக்டர்கள்பணியில் இருந்தனர்.

    தொடர்ந்து இன்று மாலை கடற்கரை சாலையில் புதுச்சேரியில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரி மாணவர்கள் மற்றும் டாக்டர்கள் பங்கேற்கும் அமைதிப் பேரணி காந்தி சிலை நோக்கி நடைபெற உள்ளது.

    ×